“ஓகே, கிளம்பறேன். மார்னிங் பார்க்கலாம்…” என்று காரினுள் அமர்ந்துகொள்ள, ‘அவமானம்’ என்பதனை போல ஸ்ரீவத்சன் கொதிப்புடன் பார்த்தார் அவனை.
காரை ரிவர்சில் எடுத்துக்கொண்டு மருத்துவமனை விட்டு வெளியேறியவன் வாகனத்தை பார்த்து மானசீகமாய் தலையில் கைவைத்துவிட்டாள் பிரத்யுக்ஷா.
“பிரத்யு…” என பல்லை கடித்த ஸ்ரீவத்சன்,
“வாட்ஸ் கோயிங் ஆன்?…” என்று கேட்க,
“ஒரு எமர்ஜென்ஸி டாடி. அதான் ஷ்யாமளா ஆன்ட்டியை பார்க்க போனேன். ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகலைன்னு இவர் கொண்டுவந்து விட வந்தார்…”
“ஏன், அங்க இருந்து கேப் கிடைக்கலையா உனக்கு?…” இன்னும் கோபம்.
“ஆமா டாடி. கிடைக்கலை. அதான் டாக்டர் கூட வந்தேன். ஏன்?…” என்று சட்டென பேச்சின் தொனியை மாற்றி அவரிடமே பதிலுக்கு கேள்வி கேட்க ஸ்ரீவத்சன் செய்வதறியாமல் நின்றுவிட்டார்.
“நான் உள்ள போறேன் டாடி. நீங்க ப்ளாட்டுக்கு கிளம்பிட்டீங்க போல….” என கேட்க,
“ஹ்ம்ம், ஆமா…” என்றவர்,
“நீயும் வா….” என்றார்.
தனியே சிக்கினால் நிச்சயம் இந்த பேச்சுக்கள் கிளம்பும். தானிருக்கும் மனநிலையில் எதையாவது பேசி வைத்து மேலும் சிக்கலாவதற்கு பதில் கொஞ்சம் ஆறப்போடவேண்டும் என்று நினைத்தாள்.
“கௌசி அத்தைக்கு கண்டிப்பா ஹெல்ப் வேணும் டாடி. இங்க நான் இருக்கனும். நம்ம சைட் ஒரு டாக்டர் இருக்கறது நல்லது தானே?…”
“ஆமா டாடி. ஆனா நம்ம பேமிலில நான் இருக்கேனே. இல்லைன்னா அது வேற விஷயம். இருக்கும்போது ஹெல்ப் பண்ணாம எப்படி? நான் அத்தையோட இருக்கேன்…” என்றவள் வேகமாய் உள்ளே சென்றுவிட ஸ்ரீவத்சன் அதிர்ந்து நின்றார்.
என்ன நடக்கிறது என்று புரியவில்லை. காரினுள் இருவரும் பேசிக்கொண்டிருந்த நேரம், ஆகர்ஷனின் அலட்சியம், மகளின் படபடப்பு என்று என்னவோ அவருக்கு சரியாய் படவில்லை.
இப்போதைக்கு இங்கே வைத்து எதுவும் பேசவேண்டாம் என்று தான் நினைத்தார் ஸ்ரீவத்சன்.
அதிலும் ராம்நாத் குடும்பம் உடன் இருக்கையில் அவர்களை வைத்துக்கொண்டு பேசுவதும், கேட்பதும் அவரின் மரியாதைக்கு குறைவாகிவிடும் என்று அமைதி காத்தார் ஸ்ரீவத்சன்.
வேகமாய் உள்ளே வந்து கௌசல்யா இருக்கும் தளத்திற்கு சென்று அவரின் அருகில் அமர்ந்ததும் தான் மூச்சே வந்தது பிரத்யுக்ஷாவிற்கு.
“பார்ரா பெரியமனுஷன். எனக்கு இதெல்லாம் சொல்றார்?…” என்று சிரித்தவள்,
“நான் இங்கயே தான் இருப்பேன். எங்கயும் போகமாட்டேன்….” என்றாள்.
“ஹ்ம்ம், அது தெரியும்…” என்றவன் குரலை தழைத்துகொண்டு,
“சரி, அப்பா கண்ணு முழிச்சதும் பேசினதும் எனக்கு கால் பண்ணு பிரத்யு. இன்னும் அவர்கிட்ட பேசவே இல்லை…”
“உன் அப்பாவுக்கு பண்ணியிருக்கறது என்ன அடிபட்ட காயத்துக்கு டிஞ்சர் போடற வேலையா? நீ பார்த்ததும் பேச? ரொம்ப தேடற நீ….” என்று அவனை கேலி பேச கௌசல்யாவும் மகனை பார்த்து புன்னகைத்தார்.
“சரி டாக்டர்கிட்ட கேட்டுடு. எப்போ ரூம்க்கு ஷிப்ட் பண்ணுவாங்கன்னு. மறந்திடாம கேட்டு அதையும் சொல்லு. அண்ணாகிட்ட பேசவே முடியாது. அவன் என்ன சொல்லுவானோ அதை தாண்டி எந்த வார்த்தையும் வராது. கேட்கவும் முடியாது. ப்ளீஸ் பிரத்யு…” என்று சொல்லிவிட்டு,
“ம்மா நீங்களும் தெம்பா இருங்க. அதான் அப்பா சரியாகியாச்சே. இன்னும் உங்க முகத்துல சுரத்தே இல்லை…” என்று கவலையும் அன்புமாய் விக்ரம் கூற கௌசல்யா அவனின் கன்னத்தை வருடி புன்னகைத்தார்.
அனைத்தையும் பார்வையாளனாய் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான் கௌரவ்.
“டைம்க்கு சாப்பிடுங்க. பிரத்யு நீ கவனிச்சுக்கோ. அப்பறம் மறக்காம அம்மாவுக்கு இங்க ஒரு செக்கப் பண்ணிடலாம். எப்போ சொன்னாலும் கேட்கிறதே இல்லை. எனக்கு ஒன்னுமில்லைன்னே தான் சொல்லுவாங்க…” என்றவன் கூற,
முன்பு அவர் சொல்லும் அந்த ஒன்றுமில்லை, எதுவுமில்லை என்னும் வார்த்தைகள் இப்போது கௌரவ்விற்கு ஆயிரம் அர்த்தங்களை காண்பித்தது.
“நீங்க இப்படித்தான்…” என்று சொல்லிக்கொண்டிருக்க,
“விக்ரம்…” என்றான் கௌரவ்.
“தோ கிளம்பிட்டேன் ண்ணா…” என்றவன்,
“ஓகே பை…” என்று பேச்சினை முடித்துக்கொண்டு புறப்பட்டாகிவிட்டது.
அவன் செல்லவும் மீண்டும் கால் மேல் காலிட்டபடி அமர்ந்த கௌரவ்வின் பார்வை ஐஸியூ கதவினை கண்டுவிட்டு, கௌசல்யாவை பார்த்தது.
இன்னும் ராம்நாத் அறைக்கு மாற்றப்படவில்லை. மறுநாள் மாற்றுவதாக இருப்பதாய் கிருஷ்ணகுமார் கூறியிருந்தார் அவனிடம்.
காலையும், மாலையும் மட்டும் அவரை உள்ளே சென்று பார்த்துவிட்டு வர அனுமதித்திருந்தனர்.
இத்தனைபேர் இருக்க தேவையில்லை என்று கௌரவ் கூறினாலும் ஸ்ரீவத்சன் காவேரிக்காக அங்கே இருந்தார். சாருலதா ராம்நாத் அவளிடம் பேசாமல் கிளம்ப போவதில்லை என்றிருந்தாள்.
அனைவருமே ராம்நாத் மீண்டு வரும் வருகைக்காக காத்திருக்க, கௌரவ், கௌசல்யா மட்டும் ஆகர்ஷன் மீண்டும் அங்கே வரவேண்டும் என்று காத்திருந்தனர்.
கௌசல்யாவின் ஒவ்வொரு பார்வையும் அந்த தளத்தின் முன்பகுதியை நோக்கியவண்ணம் தான் இருக்கும்.
ஷ்யாமளா அவரிடம் வேறு எதையுமே சொல்லியிருக்கவில்லை. இன்னும் சொல்லக்கூடிய நிலையில் கௌசல்யா இல்லை என்று அதனை தவிர்த்து வந்தார்.
அதையுமே பிரத்யுக்ஷாவிடம் பகிர்ந்த ஷ்யாமளா இன்னொரு தவிப்பிற்கு கௌசல்யாவை ஆளாக்க வேண்டாம் என்றிருந்தார்.