“வருவார். வராம எங்க போவார்?…” என்றவளால் அவரிடம் ஆகர்ஷன் கிளம்புவதை பற்றி கூற முடியவில்லை.
“திரும்ப பார்க்க முடியாதா?…” அவள் சொல்லியது கவனத்தில் பதிந்தாலும் அவரால் இதனை கேட்காமல் இருக்க முடியவில்லை.
“ஏன் முடியாது? அதெல்லாம் வருவார். ஏன் த்தை உங்களுக்கு அவரை பார்க்கனுமா?…” கனிவும், கருணையுமாய் அவள் கேட்க,
“ஹ்ம்ம், ஆமா. அன்னைக்கு சரியா பார்க்க முடியலையா. அதான். கிட்ட பார்க்கனுமேன்னு…” என்று வார்த்தைகள் விடுபட்டு சிக்கிக்கொண்டு வந்தது.
“அவ்வளோ தானே? என்கிட்ட போட்டோஸ் இருக்கே. நாங்க சிட்னில எடுத்துக்கிட்டது…” என அவரின் கை பிடித்தவள் தனது கை பேசியில் ஆகர்ஷனின் புகைப்படங்களை காண்பிக்க அனைத்துமே அனன்யா, ஆகர்ஷன், பிரத்யுக்ஷா. சிலவற்றில் ஷ்யாமளாவும் கூட இருந்தார்.
“நிறைய இருக்கு. பாருங்க…” என்று காண்பிக்க ஆசையுடன் அதனை பார்த்தவரின் சுருங்கிய கண்கள் பிரகாசமடைந்தது.
“என் கையில வச்சுக்கட்டுமா?…” என கௌசல்யா கேட்க,
“ஓஹ் எஸ்…” என்று கொடுத்துவிட்டவள்,
“இருங்க டாக்டர் இருக்கற போல்டரை செலெக்ட் பண்ணி தர்றேன். அப்போ தான் அடுத்தடுத்து பார்க்கலாம்….” என்று சொல்லி கௌசல்யாவிடம் தர பிறந்த குழந்தையை உள்ளங்கையில் ஏந்துவதை போல கையில் வாங்கினார் அந்த கைப்பேசியை.
நடுங்கும் விரல் கொண்டு ஒவ்வொரு புகைப்படமாய் நகர்த்தி ஆகர்ஷனின் முகத்தை, அவனின் புன்னகையை, சிரிப்புக்கும் விழிகளை என்று ரசித்து ரசித்து பார்க்க இப்போதும் அவரின் விழிநீர் மறைத்தது அவனின் நிழல் பிம்பத்தினை.
“அப்படியே கிருஷ்ணா…” உதடுகள் சத்தமின்றி உச்சரித்தது மனதினுள் தெய்வத்தின் ஸ்தானத்தில் இருக்கும் கிருஷ்ணகுமாரிடம் தன் பாசத்தின் வேராய் சமர்ப்பித்தது அந்த தாயுள்ளம்.
“த்தை, என்னாச்சு?…” என பிரத்யுக்ஷா கேட்க,
“ஹாங் என்னடா?…” கௌசல்யா நிமிர அவரின் கன்னத்தில் கண்ணீர் வழிந்தது.
“ஏன்? இது காரிடார் இல்லையே? இதை தாண்டி வெளில போகனும். படுத்துக்கோங்க ம்மா. அப்படியே யாரும் பார்த்தா என்ன?…” என்று கேட்க கௌசல்யாவும் மகனின் மடியில் தலைசாய்த்தார்.
அலையடிக்கும் ஆர்ப்பரிப்பு மனதினுள் கரைபுரண்டாலும் ஓரத்தில் சிறு நிம்மதி.
கௌசல்யாவின் தலையை வருடியபடி அமர்ந்திருந்த கௌரவ்வின் முகம் சிறு அமைதியை தேர்ந்தெடுத்தது.
கைப்பேசியை வாங்கிக்கொண்டு தனியே வந்த பிரத்யுக்ஷா அழைப்பை ஏற்றதுமே அனன்யா ஆரம்பித்துவிட்டாள்.
“அம்மாட்ட அவ்வளோ கோவமா பேசிட்டு வந்திருக்க? உனக்கு தெரியாதா பிரத்யு அண்ணா பீலிங்ஸ் எப்படி இருந்திருக்கும்ன்னு? நீ புரியாம பேசாதடா…” என்றாள் அவளிடம்.
“ஆன்ட்டி சொன்னாங்களா?…” என்று கேட்க,
“ஆமா, அம்மா தான் சொன்னாங்க. இப்போ என்னால அங்க வரமுடியலை. இல்லைன்னா நானும் இருந்திருப்பேன். எத்தனைபேர் இருந்தாலும் அண்ணாவோட எமோஷன்ஸ் ரொம்ப ஹார்டா தான் இருக்கும் அந்த சிட்டிவேஷன்ல. புரிஞ்சுக்கோ பிரத்யு….” என்றாள் தன்மையுடன்.
“எனக்கு புரியாம இல்லை அனு அக்கா. உங்க அண்ணா தாராளமா கிளம்பட்டும். ஆனா நான்? என்னை வேண்டாம்ன்னு நினைக்க எப்படி முடிஞ்சது?…” என்றவள்,
“அந்த சூழ்நிலையில யாரா இருந்தாலும் தள்ளி போக தான் பார்ப்பாங்க. ஐ க்னோ. வேடிக்கை பார்க்கற எனக்கே நெஞ்சை அடைக்குது. அவங்களுக்கு எப்படி இருக்கும்? கண்டிப்பா ஒரு ரிலாக்ஸ் மைண்ட்செட் வேணும். மூச்சுவிட அவகாசம் எடுத்துக்கறது போல….”
“போகட்டுமே. நான் முன்னாடியுமே அவங்க இங்கயே இருப்பாங்கன்னு நினைக்கலை. அவங்களுக்கு இங்க இருக்க விருப்பம் இல்லைன்னு எனக்கும் தெரியுமே. இப்போ காரணமும் தெரிஞ்சிருச்சு. எந்தவிதத்துலையும் நான் கட்டாயப்படுத்தி இருக்கமாட்டேன்….”
“சொல்லப்போனா நான் தான் பைத்தியம் மாதிரி உங்க அண்ணனோடவே போகலாம்ன்ற அளவுக்கு யோசிச்சிட்டேன். என்னையும் உங்களுக்கு தெரியும் தானே? அப்படி இருக்கும்போது இவ்வளோ பெரிய விஷயம் தெரியவரும்போது நான் அவங்களுக்கான ஸ்பேஸ் குடுப்பேன் தானே? அதுக்காக என்னை மொத்தமா விட்டு போவாங்களா என்ன?…”
“கல்யாணத்துக்கு முன்னாடியே இது என்ன தாட்? ஏன் கௌசல்யாத்தை என் ஃபேமிலிக்குள்ள இருந்தா இவங்களுக்கு என்னவாம்? இவங்க விலகி போய் அவங்க நிம்மதியா நல்லா இருக்கனும்ன்னு நினைக்கிறாங்க தானே? நினைக்கட்டும். அவங்க என்ன டெய்லியும் பார்த்துட்டு தினமும் பேசிட்டு கண்ணு முன்னாடி ஒரே வீட்டுக்குள்ளவா இருக்க போறாங்க? சைல்டிஷா இல்ல?…”
“முடிஞ்சது போ. கடைசில என் அண்ணா குழந்தையா?…” அனு சிரிக்க,
“ஹப்பா இதுவேற நினைப்பா உங்களுக்கு? காலாகாலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சிருந்தா கைக்கொன்னா குழந்தைங்க இருந்திருப்பாங்க உங்க அண்ணாவுக்கு. அவ்வளோ பாப்பா எல்லாம் இல்லை. எல்லாம் ஆக்ட்டிங் மேடாம்…” என்றாள் கேலியாக.
“அடிங், எவ்வளோ டேமேஜ் பன்ற நீ…” என அனன்யா பேச பிரத்யுக்ஷாவின் மனநிலை சற்றே இலகுவானது.
எத்தனை தூரம் அதனை கனமாய் ஏற்காமல் இருக்கவேண்டும் என்று நினைத்திருந்தாளோ அத்தனைக்கும் எதிர்மறையாக அவளை கோபத்தின் உச்சியில் கொண்டு சென்று நிறுத்தியது சூழ்நிலை.
விளைவு காவேரியிடம் ஆரம்பித்து மொத்த குடும்பத்திற்கு ஆகர்ஷனின் மீதான தன் விருப்பத்தினை பகிரங்கமாக தெரியப்படுத்திய பிரத்யுக்ஷா அதே வேகத்தில் சிட்னி கிளம்பி சென்றுவிட்டாள்.
ஆகர்ஷனுக்காக, அவன் ஒருவனுக்காக அத்தனையும் உடைத்தெறிந்து கிளம்பி சென்றவள் செல்லும்முன் ராம்நாத்தினை, ஸ்ரீவத்சனை என்று ஒருவரையும் விடவில்லை.
பிரத்யுக்ஷாவின் முடிவின் முன் யாரின் சமாதானமும், அதட்டலும், மறுப்பும் நிற்கவில்லை, எல்லாம் தகர்ந்து போனது.
இதோ சிட்னியில் சுஷ்மாவின் வீட்டில் அதே பால்கனியில் பிரத்யுக்ஷா ஆகர்ஷனின் நினைவுகளுடன்.