“ஹ்ம்ம், ஒன்னும் சொல்ல முடியாது தான். இருந்தாலும்…” எனும்பொழுது மனம் தவிக்கத்தான் செய்தது.
யாரோ அவர்கள் நண்பர்களுடனான உரையாடலில் மருத்துவம் பற்றியும், அதுவும் வெளிநாட்டில் படிப்பதை பற்றியும் பேசியிருக்க, ஸ்ரீவத்சன் பேச்சினுள் கருத்து சொல்லியிருக்க விளைவு பிரத்யுக்ஷா ஆஸ்திரேலியாவிற்கு பயணமாகும் சூழ்நிலை.
“நம்ம நல்லநேரம், சுஷ்மா வீட்டு பக்கத்துல அனுவோட குடும்பமும் இருந்தது. அவங்க நல்லா ஹெல்ப் பன்றாங்களே…” ஸ்வேதா கூற,
“ஆனாலும் அவளை லிமிட்டோட வச்சுக்க சொல்லியிருக்காங்க. உன் மாமா அவங்கட்ட இப்ப வரைக்கும் ஒருவார்த்தை பேசியிருப்பாங்களா? ஓகே அவ்வளவு தான் உன் மாமா குணம்…” என்றார் காவேரி மென்னகையுடன்.
குழந்தை உறக்கத்திலேயே வர மருத்துவமனைக்கும் வந்து சேர்ந்தனர் மாமியாரும், மருமகளும்.
இடையில் தேவான்ஷ் ஸ்வேதாவிற்கு அழைத்து குழந்தை பற்றி விசாரித்துவிட்டு வைத்துவிட்டான்.
ஸ்வேதா முகத்தில் சலிப்பு தான் மிஞ்சியது. சிலநேரம் அவனும் என்ன செய்வான் பாவம் என்று தோன்றினாலும் இப்படியான நேரங்களில் எரிச்சலே அதிகரிக்கும்.
——————————————-
“ம்மா, வேர் ஆர் யூ?…” என்ற ஆகர்ஷனின் குரலுடன் கண்களும் அவ்விடத்தில் தீர்க்கமாய் அலைபாய்ந்தது.
“ஹ்ம்ம், பார்த்துட்டேன்…” என சொல்லி அழைப்பை துண்டிக்க,
“அனு ஆர்ஷ் வந்தாச்சாம்…” என்றார் மகளிடம் ஷ்யாமளா.
“அனு அக்கா, ரைட் போலாம்…” என பிரத்யுக்ஷா வேகமாய் அவர்களை நோக்கி வர ஆகர்ஷன் அவர்களின் முன் வந்துகொண்டிருந்தான்.
வருபவனின் பார்வையில் அவர்கள் மூவரும். அவனின் அவர்கள் மட்டுமே தெரிய இதழ்விரியா புன்னகை அவர்களின் கண்களில் அகப்படாமல் கண்ணாம்பூச்சி ஆடியது.
கையில் தாமரை மொட்டுக்கள் அடங்கிய கொத்தும், நடையில் நிதானமும், ஒரு கையின பாக்கெட்டில் நுழைத்துக்கொண்டு அவர்களை நோக்கி சரிந்த பாதையில் அவன் இறங்கிவரும் தோரணையும் அத்தனை அழகாய் இருக்க பிரத்யுக்ஷா விழிகளில் பதிந்ததென்னவோ அவன் கொண்டுவந்திருந்த தாமரை பூங்கொத்து தான்.
“வாவ் ஃப்ளவர்ஸ்…” என்று சந்தோஷ கூச்சலுடன் மற்ற இருவரையும் தாண்டிக்கொண்டு அவனிடம் சென்றாள் பிரத்யுக்ஷா.
“ஹேப்பி பர்த்டே ஃப்ளவர்…” என்று அவளிடம் பூங்கொத்தை நீட்டினான் ஆகர்ஷன்.
“ஸோ ப்யூட்டிஃபுல். தேங்க் யூ சோ மச் சீனியர்…” என்று கண் சிமிட்டி புன்னகைத்தவள்,
“இன்னைக்கு கோவில்ல கூட தேடினேன். கிடைக்கவே இல்லை….” என்று அந்த பூக்களை அள்ளிக்கொஞ்சியபடி அவனை பாராமல் கூறியவள் அந்த மலர்களின் மேலான பார்வையை விலக்கவே இல்லை.
“ஓஹ், காட். மறந்துட்டேன். நான் போட் ரைட் போகனும் சீனியர்…” என்றவள்,
“அனு அக்கா வாங்க போலாம்…” என்று அனுவிடம் திரும்பிய பிரத்யுக்ஷா தன் கையிலிருந்த பூங்கொத்தை மீண்டும் ஆகர்ஷன் கையில் திணித்தாள்.
இரண்டு எட்டு வைத்திருக்கமாட்டாள். மீண்டும் அவனிடம் வந்து அதனை வாங்கிக்கொண்டவள்,
“என்னோடது என்னோடவே இருக்கட்டும்…” என்று சொல்லி மீண்டும் கண்சிமிட்டிவிட்டு அனுவுடன் செல்ல, தோளை குலுக்கிக்கொண்ட ஆகர்ஷனின் ஆழ்ந்த பார்வை அவன் அணிந்திருந்த கூலருக்குள் மறைந்துவிட்டது.
“உட்கார் ஆர்ஷ்…” என்ற ஷ்யாமளா தானும் அங்கிருந்தே இருக்கையில் அமர்ந்தார்.
தூரத்தில் அனுவும், பிரத்யுக்ஷாவும் போட்டில் ஏறுவதற்கு தயாராய் இருந்தனர்.
அவர்களை பார்த்தபடி தானும் தாயுடன் வந்தமர்ந்துகொண்டான். அவனின் பார்வையை உணர்ந்ததோ என்னவோ பிரத்யுக்ஷா வருகிறாயா என்பதை போல அவனை நோக்கி கையசைக்க மறுப்பாய் தலையசைத்தவன்,
“பத்திரம் பிரத்யு…” என்றான் சத்தமாகவே.
அதனை புரிந்ததை போல இரு கைகளின் கட்டை விரலை காண்பித்தவள் கையசைத்துவிட்டு போட்டில் ஏறி அமர்ந்தாள்.
முழங்கால் வரையிலான ஸ்கர்ட், ஷர்ட், கூடவே கழுத்தை சுற்றிக்கொண்டு சின்னதாய் ஸ்டோல் அணிந்திருக்க, நெற்றியில் கோவிலுக்கு சென்று வந்ததன் அறிகுறியாய் சந்தனமும், குங்குமமும் ஈஷி இருந்தது.
“நீயும் வேணா போகலாமே ஆர்ஷ்…” என்றார் ஷ்யாமளா.
“நோ ம்மா….” என்றவன்,
“நீங்க ஏன் போகலை?…” என கேட்டான்.
“தோணலை. அவங்க சின்ன பொண்ணுங்க. போய்ட்டு வரட்டுமே. நான் நெக்ஸ்ட் டைம் உங்கப்பா வரவும் போய்க்கறேன்…” என்றதும் குறும்பாய் புன்னகைத்தவன்,
“அப்பாவோட போகனும்ன்னு நேரடியாவே சொல்லலாம்…” என்றான் ஆகர்ஷன் கண்கள் சிரிக்க.
“டேய் உதை…” என்று அவனின் தோளில் ஒரு அடி போட்டவர்,
“நாங்களும் எந்த கிப்ட்டும் வாங்கி தரலை. நீயாவது வேற எதாச்சும் கிப்ட் வாங்கிட்டு வந்திருக்கலாமே ஆர்ஷ். இங்க எதை காமிச்சாலும் வேண்டாம், என்கிட்ட இருக்கேன்னு நோ சொல்லிட்டா….” என்றார் கவலையுடன் ஷ்யாமளா.
அவர் சொல்லவுமே ஆகர்ஷன் முகத்தில் மிதமான புன்னகை. அவரின் தோளோடு கையிட்டு அமர்ந்தவன்,
“நீங்க என்ன வாங்கி தந்தாலும் அவ நோ தான் சொல்லுவா. ஏனா இதுவரை அனு வாங்கி தந்த எந்த கிப்ட்டையும் அவ வாங்கினதே இல்லை. நாங்க வாங்க சொல்லி போர்ஸ் பண்ணினா அவ நோ சொல்லி பேச்சையே ஸ்டாப் பண்ணுவா….”
“நம்ம தானே ஆர்ஷ்…”
“நம்ம தான்னா பிரத்யுக்கு நாம யாராம்?…” என்றான் இப்போதும் புன்னகை வாடாமல்.
“அவ எந்த கிப்டையும் வாங்கமாட்டா. மேபி அது அவ பழக்கமா இருக்கலாம். இல்லை வீட்டுல சொன்னதால இருக்கலாம். நாம வற்புறுத்த முடியாதே. அவ எதிர்பார்க்கிறது நம்மோட ப்ரெண்ட்ஷிப் அன்ட் இந்த பாண்டிங்…” என்றபொழுதும் அவன் விழிகள் தூரத்தில் பட்டாம்பூச்சியாய் ஆர்ப்பரித்து அந்த ஏரியை சுற்றிவருபவளை கவனித்தது.
“சரி அதைவிடுங்க, இன்னைக்கு எங்க போனீங்க? கேட்க எனக்குமே டைம் இல்லை. பிரத்யு அவ அம்மாட்ட பேசியாச்சா? மேடம் இப்போ கூலா?…” என்றான் ஷ்யாமளாவிடம் கதை கேட்பவனை போன்று.
“ஹ்ம்ம், நான் என்ன கைடா? எங்க போனேன், எங்க போகனும்னு சொல்றதுக்கு?…” என்று கூற,
“ஆனா எக் சேர்த்த கேக் எல்லாம் எடுத்துப்பா. இன்னைக்கு வேணும்னே கலாட்டா பண்ணிருக்கா. அனு கிளம்பறா இல்லையா? அதான்…” என்று அத்தனை அழகாய் அவருக்கு அவன் எடுத்துரைத்தான்.
“ஹ்ம்ம், நான் கூட அவளை சங்கடப்படுத்திட்டோமோன்னு நினைச்சிட்டேன்…” என்றார் ஷ்யாமளா.
“அப்படியே இருந்தாலும் அவ எதையுமே காமிச்சுக்கமாட்டா….” என்றான் ஆகர்ஷன்.
அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் பிரத்யுக்ஷா மீதான அவனின் எண்ணங்கள் வார்த்தைகளில் வடிவம் தராமலேயே ஓவியமாய் கேட்பவர் விழிகளுக்குள் விரிந்தது.
“யாஹ்ஹூ…” என்ற ஆர்ப்பாட்டமான சத்தத்தில் அங்கே திரும்பி பார்த்தனர்.
போட்டில் இரு கைகளிலும் தாமரை பூங்கொத்தை இரண்டாய் பிரித்துவைத்துக்கொண்டு சத்தமிட்டு சந்தோஷித்த பிரத்யுக்ஷா தான் அவனின் கவனத்தை கவர்ந்தாள்.
“டூ மினிட்ஸ்…” என்று தாயிடம் சொல்லி தனது கேமராவில் அவர்களை படம் பிடிக்க ஆரம்பித்தான் ஆகர்ஷன்.
சந்தோஷம் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு முழுதாய் அவளை காண்பித்து விடலாம் என்று நினைக்கையில் அவன் மனதினுள் மழைச்சாரல்.
கொள்ளை புன்னகை, கொள்ளையடிக்கும் பாவனை என அனுவையும் சேர்த்து பிடித்து அவளோடு கொண்டாட்டத்தில் இணைத்துக்கொண்டாள் பிரத்யுக்ஷா.