“இந்த கெஸ்ட்ஹவுஸ்ல ரெண்டு ரூம் பேபி டாக்டர்…” என்று சொல்லிவிட்டு மாடியில் இருக்கும் அறைக்கு தூக்கி சென்றான்.
“கீழ லாக் கூட பண்ணலை….”
“நைட் டின்னர் எடுத்துட்டு வருவாங்க. நோ இஷ்யூஸ்…” என்று அவளின் துள்ளல்கள் எதற்கும் அவன் மசியவில்லை.
மாடியில் பெரிதாய் இருந்தது அந்த அறையின் கதவு. இன்னும் சரியாய் அவளை தன் முன் நிறுத்திக்கொண்டு கதவை திறந்தவனின் கைகளில் நின்றவள் பிடிவாதமாய் கண்களை மூடிக்கொண்டாள்.
“பாரு பிரத்யூ…” மெலிதாய், மிக மெலிதாய், காதலாய், கசிந்து வந்தது இரவின் இசையாய்.
“நான் கேட்கவே இல்லை. என்னை கேட்டா இங்க புக் பண்ணுனீங்க? அதுவும் ஒருவார்த்தை கூட சொல்லாம. நான் பார்க்கமாட்டேன்…” என்று சொல்லி கண்ணை இன்னும் இறுக்கமாய் மூடிக்கொள்ள,
“ஓகே, நோ இஷ்யூஸ்…” என்றவன் கதவை உள்ளே வந்து சாற்றிவிட்டு அவளை கைகளுக்குள் ஏந்திக்கொண்டான்.
“முடியவே முடியாது. இறக்கி விடுங்க என்னை. விடுங்கன்னு சொன்னேன்…”
“அதே முடியவே முடியாது தான். முடியவும் வேண்டாம். முடிவே இல்லாம ஒரு மோட்சம்….” என ஆகர்ஷனின் குரல் கரகரத்து வந்தது.
“அவ்வளோ தானா சீனியர்?…” என பிரத்யூக்ஷாவின் குரலும் தவிப்புடன் ஏற்ற இறக்கங்களுடன் திக்கிக்கொண்டு வர ஆகர்ஷனின் பார்வை அவளின் முகத்தில் வண்டாய் வட்டமிட ஆரம்பித்தது.
“இப்ப உன் பேச்சை கேட்டு சரின்னு போனா அன்னைக்கு விட்டுட்டு போனீங்கன்னு சொன்ன மாதிரி, இன்னைக்கு பர்ஸ்ட் நைட்லையும் விட்டு வச்சிட்டீங்கன்னு காலத்துக்கும் சொல்லுவ. மிச்சம் கூட வைக்கிறதா இல்லை…” என்றவன் இறுக்கம் அவளை திண்டாட செய்ய கூசி சிலிர்த்தாள் பிரத்யுக்ஷா.
கைகளில் ஏந்தியிருந்தவனின் இறுக்கம் தளர்ந்து எங்கோ இறக்கிவிடுவதை போல் தோன்ற,
“விட்ராதீங்க சீனியர்…” என்றவள் சத்தம் மெல்ல மெல்ல அடங்கி ஜில்லென்று எதனுள்ளோ இதமாய் அமிழும் சுகம்.
என்னவென்று கண்டுகொள்ளாமல் இருக்கமுடியாது போக பட்டென கண்களை திறந்துவிட்டாள் பிரத்யூக்ஷா.