“காவேரி அத்தையால பிரத்யூக்ஷாவுக்கு அங்க போய் ஹெல்ப் பண்ண முடியாது. அவ தான் அவங்களையும் பார்த்துக்கனும். அதான் அம்மாவை அனுப்பறேன்…” என அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு தான் வீட்டிற்கே தகவல் கூறினான் கௌரவ்.
ராம்நாத் எத்தனை தலைகீழாக நின்றும் முடியவில்லை. கௌசல்யாவும் கிளம்பி செல்ல, சாருலதாவும் தன் அண்ணனை மீறி மறுக்க முடியவில்லை.
இங்கே விக்ரமிற்கு தான் என்னவோ பொறிதட்டுவதை போலிருந்தது. அதன்பின்னான நிகழ்வுகளை கவனமாய் கவனிக்க நினைத்தான்.
கௌசல்யா மட்டுமே வருவார் என்று நினைக்க கூடவே கௌரவ்வும் ஷ்யாமளாவுமே வந்தனர் அங்கே.
இது ஆகர்ஷனுக்கும் இன்ப அதிர்ச்சி தான். வந்ததுமே ஓடி சென்று கௌரவ்வை அணைத்துக்கொண்டவனின் சந்தோஷ கண்ணீருக்கு இணையாய் இன்னும் எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்பதை போல் பார்த்தான் கௌரவ்.
கௌசல்யா தான் தவித்து போனார் கௌரவ் ஏன் இதை செய்கிறான் என்று புரியாமல்.
“நமக்கு சமயத்துக்கு ஹெல்ப் பண்ணியிருக்காங்க. அதோட சொந்தமும் கூட. காவேரி அத்தைக்காக. போக விருப்பம் இல்லைன்னா வேண்டாம்…” என இலகுவாய் சொல்லியவனிடம் மறுக்கவும் முடியுமா?
தன் வாழ்வில் நடக்கும் ஒவ்வொன்றிலும் கௌசல்யா திக்குமுக்காடிக்கொண்டிருந்தார்.
இதோ சிட்னியில் ஆகர்ஷனுடனான அவரின் பொழுதுகள் அனைத்தும் ரம்யத்தை சுமந்து வந்திருந்தது.
அங்கிருந்த உணவு பொருளில் இருந்து, ஒவ்வொரு இடம் வரை அவன் கௌரவ்வையும், கௌசல்யாவையும் அழைத்துக்கொண்டு திரிந்தான்.
சிறு குழந்தையாய் மாறிவிட்டதை போலிருந்தது பார்த்தவர்களுக்கு. நிறைமாதத்தில் இருந்த பிரத்யூவுமே கணவனின் அதீத சந்தோஷத்தில் திண்டாடி தான் போனாள்.
அவனுள் இருக்கும் ஏக்கங்கள் யாவையும் அவன் தீர்த்துக்கொண்டிருப்பதை காணமுடிந்தது.
உறவுகளின் அருகாமையில் சங்கடங்கள் விலகி நிற்கும் என்பதனை போல இந்த சந்தோஷ உலகின் அருகில் வரமுடியாது ராம்நாத் ஒருபக்கம் பற்றி எரிந்தபடி தான் இருந்தார்.
“டெலிவரி முடிஞ்சு ஊருக்கு வர்ற வரை அம்மா இங்க தான் உங்களோட…” என ஆகர்ஷனிடம் கூறிவிட்டு பத்துநாட்களில் அங்கிருந்து கிளம்பினான் கௌரவ்.
——————————————-
சிலமாதங்களுக்கு பிறகு….
“என் பொண்ணுக்கு இந்த பேர் வைக்க கூடாதுன்னு நீங்க எப்படி சொல்லுவீங்க?…” மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு கோவிலின் அருகில் நின்றபடி வாக்குவாதம்.
அன்று ஆகர்ஷனின் மகளுக்கு பெயர் சூட்டும் வைபவம். உறவுகள் அனைவரும் ஒன்றுகூடி இருந்தனர்.
அங்கே பெயர் வைத்து முடிக்கவுமே ராம்நாத் தனியே அழைத்து வந்துவிட்டார் ஆகர்ஷனை.
அத்தனை கோபம், எப்படி கௌசல்யாவின் பெயரை வைக்கலாம் என்று அவனிடம் சண்டையிட,
“என் அம்மா என்னோடவே இருக்கனும். நிமிஷத்துக்கு ஒருதடவை என் அம்மா பேரை சொல்லி நான் கூப்பிடனும். இதுக்கு உங்ககிட்ட நான் ஏன் கேட்கனும்? ஆமா நீங்க யார் எனக்கு?…” என்றவன்,
“என் பொண்ணுக்கு என்ன பேர் வைக்கணும்ன்னு நான் தான் முடிவு பண்ணுவேன்…” என்றான் ஆகர்ஷன்.
அந்தநேரம் ஆகர்ஷனை தேடி வந்த ஸ்ரீவத்சன் தூரத்திலிருந்தே பார்த்துவிட்டார் என்னவோ பிரச்சனை என்று.
“மாப்பிள்ளை, பிரத்யூ தேடறா…” என்று சொல்ல,
“சரிங்க மாமா…” என்றான் அவனும்.
இருவருமே மாப்பிள்ளை, மாமா என அழைத்துக்கொள்வது அரிதிலும் அரிது. இப்படியான சூழ்நிலைகளில் மட்டுமே ஸ்ரீவத்சன் அழைப்பது.
அவர் அழைத்தால் ஆகர்ஷனும் அழைக்காமல் இருப்பதில்லை. ஆனாலும் சிலநேரங்களில் வேண்டுமென்றே சீண்டவும் செய்வதுண்டு.
இப்போது ராம்நாத் முன்னிலையில் அழைப்பு விடுக்கவும் ஆகர்ஷனும் பதில் சொல்லி கிளம்பிவிட,
“என்ன பிரச்சனை?…” என்றார் ஸ்ரீவத்சன்.
“மாப்பிள்ளை. இந்த பேர் வைக்கிறதுக்கு முன்னாடி ஒருவார்த்தை சொல்லவும் இல்லை. அதுவுமில்லாம எனக்கு இதுல இஷ்டமும் இல்லை….”என விரைப்பாய் கூற,
“என் பேத்திக்கு பேர் வைக்க உங்ககிட்ட பர்மிஷன் கேட்கனுமா? யார்கிட்ட பேசறீங்க? என் மருமகன் சொன்னது தான். உங்களுக்கு இஷ்டம் இருந்தா என்ன? இல்லைன்னா என்ன? இன்னொருதடவை இப்படி அதிகாரம் பன்ற வேலை வச்சுக்கிட்டீங்க….” என எச்சரித்துவிட்டு சென்றார்.
ஏற்கனவே தன்னை இங்கே அழைத்துவந்துவிட்ட கோபத்தில் இருந்தவருக்கு, பெயர் வைத்ததில் இருந்து, ‘கௌசிம்மா’ என்னும் அளவில்லாத அழைப்பில் ராம்நாத் கடுப்பில் இருந்தார்.
இப்போது ஸ்ரீவத்சன் இப்படி பேசி சென்றிருக்க இன்னுமே கோபமான கோபம்.
இதில் கௌரவ் வேறு குழந்தையை தூக்கிக்கொண்டு அவளை பார்த்து கவனிக்க எரிச்சல். இப்போதும் குழந்தை அவனின் கையில் தான் இருந்தாள்.
“நீங்க கௌசிம்மாவா?…” என்று நெக்குருகி கௌரவ் அழைப்பதற்கு பொக்கை வாய் திறக்க பொங்கி சிரித்தது குழந்தை.
அவனின் அருகில் கௌசல்யா அமர்ந்திருக்க சற்று தள்ளி நின்றிருந்தான் ஆகர்ஷன் அவர்களை பார்த்துக்கொண்டே.
“எவ்வளோ நேரம் ரசிப்பீங்க நீங்க? எனக்கு போட்ட செயினை உங்க பொண்ணுக்கு போட்டாச்சு. இப்ப சந்தோஷம் தானே?…” என பிரத்யூக்ஷா நொடித்துக்கொள்ள,
“வளையல் உன்கிட்ட தானே இருக்கு…”
“டெம்ப்ரவரியா. இதையும் உங்க பொண்ணு வளர்ந்ததும் போட்டு விட்டுடுவீங்க…”
“கௌசிம்மா நகை கௌசிம்மா போட்டிருந்தா தான் கிருஷ்ணாப்பாவுக்கு சந்தோஷம்…” என்றான் அவளின் கை விரல்களில் லேசாய் முத்தமிட்டு சிரிப்புடன்.
“ஹலோ இந்த வேலை எல்லாம் வேண்டாம். எப்படியெல்லாம் பேசறீங்க?…” என்றவள் அவனோடு மல்லுக்கட்டும் பொழுதே கௌசல்யா வந்துவிட்டார்.
“குழந்தைக்கு பசிக்கும். நீ பாரு பிரத்யூ…” என கொடுக்க,