அவளின் அதீத மனமகிழ்ச்சியை முகம் எடுத்துரைக்க கண்கள் வெண்ணிலவின் ஒளியாய் சாமரம் வீசியது ஆகர்ஷன் மனதினுள்.
“எப்போ வந்தீங்க?…” என்றாள் பிரத்யுக்ஷா.
“ஏர்போர்ட்ல இருந்து நேரா வர்றேன்…” என்று இரு கைகளை விரித்து தன்னை காண்பிக்கவும் அவளும் கவனித்தாள்.
“ஆமா, அப்போ போய் ரெஸ்ட் எடுங்க….” என பிரத்யுக்ஷா கூற,
“ஓஹ், அவ்வளோ நல்ல பொண்ணா நீ?…” என்றுவிட்டு அவள் முறைக்க கண்டு,
“வாய் ஒன்னு சொல்லுது. ஆனா வாய்ஸ் வேற டோன்ல இருக்கே…” என சிரித்தவன்,
“வந்து அரைமணிநேரம் ஆகிடுச்சு. ப்ரெஷப் பண்ணிட்டு தான் வந்தேன்…” என்று சொல்லிவிட்டு சுற்றிலும் பார்த்தான்.
“எல்லாமே சுஷ்மாக்காவும், அவங்க ஹப்பியும் அரேஞ்ச் பண்ணினது. அதுல அங்கிள், ஆன்ட்டிக்கு கூட கொஞ்சம் வருத்தம்….” என்றாள் அவனின் பார்வையை வைத்து.
இதழ் விரியா புன்னகையுடன் பிரத்யுக்ஷாவை பார்த்துவிட்டு மெல்ல நடந்து அங்கே போடப்பட்டிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தான்.
“வா, சிட்…” என்று தனக்கெதிரில் ஒரு இருக்கையை காண்பிக்க,
“வாட்? இது எங்க வீட்டு பங்க்ஷன் தெரியுமா? அதுவும் அவ்வளோ பேர்ல மோஸ்ட்லி எங்களோட ரிலேட்டிவ்ஸ்…” என்று அனைவரையும் கண்களால் அவனிடம் காண்பிக்க,
“வெல், அப்போ ஒரு இன்ட்ரோ பண்ணிக்கலாமே?…” என்று தோளை குலுக்கினான் ஆகர்ஷன்.
“பண்ணிக்கலாமே. கண்டிப்பா கூப்பிடறேன்…” என யாரையோ அழைப்பதை போலவே அவள் திரும்ப,
“தொலைச்சிட்டேன் உன்னை….” என்று அவன் அதட்டவும் சட்டென்று சிரித்தவள்,
“என்னவோ சொன்னீங்க இன்ட்ரோ பண்ணிக்கலாமேன்னு. ஏன் பேசினா என்னவாம்?…” என்றாள் கேலியாய் அவனை பற்றி அறிந்துகொண்டே.
“உதைபடுவ ராஸ்கல்…” என்றவன்,
“முதல்ல உன் ஃபேமிலி இங்க வரட்டும். அப்பறம் மத்தவங்களோட அறிமுகமாகிக்கறேன்…” என்று அவன் அழுத்தம் தோய்ந்த வார்த்தைகளில் கூற,
“சரியா போச்சு. நல்லா வந்தாங்க என் வீட்டுல. அவங்கட்ட நீங்க அறிமுகமாகி, எப்போ மத்தவங்களை பார்க்க? வாய்ப்பே இல்லை…” என்று வருத்தமாய் ஒரு புன்னகை அவள் முகத்தில்.
‘ஷிட், இப்பவும் மைண்ட் பண்ணவே இல்லை இவ. வழக்கம் போல டேக் டைவர்ஷன்’ என்று தன்னை தானே குட்டிக்கொள்ளும்படியாகிவிட்டது அவனுக்கு.
“அண்ணாவும், அண்ணியும் குட்டிப்பையனோட எவ்வளோ ஆசையா ட்ரிப் ப்ளான் பண்ணியிருந்தாங்க தெரியுமா? நான் அவங்களுக்கு நிறைய கிப்ட்ஸ் பர்ச்சேஸ் பண்ணி வச்சிருந்தேன். ஆனா எல்லாம் போச்சு…” என்று சொல்லும்பொழுதே குரல் கமறிவிட்டது.
“அவன் பிறந்ததுல இருந்து இப்ப வரை நான் தொட்டு தூக்கலை. பக்கத்துல பார்க்கலை. எல்லாம் வீடியோ கால் தான். அது என்ன பண்ணிடும்? என்ன குடுத்திரும்? எதுவும் இல்லை…” என்று அழுகையை விழுங்கிக்கொண்டாள்.
ஒருசிலர் இவர்களை பார்த்துவிட்டு கடப்பதை ஆகர்ஷனும் கவனித்ததோடு பிரத்யுக்ஷாவுமே கவனித்தாள்.
“ஓகே, சியரப் பிரத்யு. உன்னோட ரிலேட்டிவ்ஸ் தான் பார்க்கறாங்க. நீ பேசிட்டிருக்கறதை பார்த்தா என்ன நினைப்பாங்க? உன் முகம் வாடிருச்சு…” என அவளை தேற்ற பார்க்க மீண்டும் பளிச்சென்று பூரணநிலவாய் புன்னகைத்தாள்.
“என்ன நினைப்பாங்க? நீங்க எங்களோட நேபர். உங்கட்ட பேசிட்டிருந்தா உங்களை கவனிக்கிறேன்னு அர்த்தம்…” என பெருமிதமாய் விளக்கம் கூற,
“சுத்தம்…” என்று தலையசைத்து முன்னுச்சி சிகையை லேசாய் கோதியபடி இங்குமங்கும் பார்த்தவன்,
“வேற என்ன சொன்னாங்க உன் வீட்டுல?…” என்று பேச்சை மாற்றினான்.
எங்கே விட்டால் தன்னை நேபர் நபர் என்றே முத்திரை குத்திவிடுவாள் என்று பேச்சை திசை திருப்பவும் சரியாய் வேலை செய்தது.
“என்ன சொல்ல? சுஷ்மாக்கா கல்யாணத்துக்கு அண்ணாவும் அண்ணியும் வருவாங்களாம். அப்போ பார்த்துக்கோன்னு சொல்றாங்க. அது இருக்கு இன்னும் அஞ்சு மாசம்…” என்று பெருமூச்சு விட,
“ஈஸியா சொல்லிட்டீங்க. அப்பவும் எங்கப்பா எதாச்சும் ரீசன் சொல்லிட்டா?…” என்றவளுக்கு அன்று வரவில்லை என்று கூறுகையில் ஸ்வேதாவின் முகம் காண்பித்த வருத்தம் இன்றும் மறக்க இயலாது.
உடைகள் முதற்கொண்டு எல்லாம் எடுத்து வைத்து, எங்கெங்கு செல்லவேண்டும் என்று மூவருமாய் பேசி, இடங்களை குறித்து வைத்து தயார் நிலையில் இருக்கையில் மொத்தமும் கீழே தள்ளி உடைத்துவிட்டார் ஸ்ரீவத்சன்.
“நாங்களும் ரொம்ப ஆடிட்டோம்…” என்று இப்போது பிரத்யுக்ஷா கூற,
“என்ன?…” என்றான் சிரிப்புடன் அவன்.
அவள் சொல்லிய பாவனையும், முகச்சுளிப்பும், ஜீரணிக்கமுடியாத ஏக்கமும் என்று பிரத்யுக்ஷா அன்று இன்னொருவிதமாகவும் அவனுக்கு தெரிந்தாள்.
“ஆமா, அவங்க எல்லாம் வர்றாங்கன்னு பெரிய ப்ளான் போட்டோம். நான், அண்ணா, அண்ணி மட்டும் உடனே ஆஸ்தி டூர் க்ரூப்ன்னு ஒரு வாட்ஸ்ஆப் க்ரூப் இன்ஸ்டண்டா ஆரம்பிச்சோம்….” என்று சொல்ல
“ஆஸ்தி?…” கேள்வியாய் அவன் நிறுத்த,
“ஆஸ்தி மீன்ஸ் ஆஸ்திரேலியா ஷார்ட் பார்ம்….” என்றவள்,
“நான் இங்க இருந்து எனக்கு தெரிஞ்ச பிளேஸ், நாம போனது, அனு அக்கா போனது இப்படி எல்லாம் நான் ஒரு லிஸ்ட், அண்ணி அவங்க கூகுள் பண்ணின லிஸ்ட்னு பெருசா போட்டு வச்சிருந்தோம். மொத்தமும் ப்ளாப்…” என்று அவள் சொல்ல சொல்ல கேட்பவனுக்கும் வருத்தமானது.
“சரி, அதான் இன்னும் அஞ்சு மாசம் இருக்கே?…”
“அஞ்சு மாசம் இருக்கு…” என்று அவன் சாதாரணமாய் சொல்லியதை அவள் பெரிதுபோல ஐந்து மாதத்தை இழுத்து கண் விரித்து சொல்ல,
“டேய், போடா…” என எழுந்துவிட்டான் ஆகர்ஷன்.
“எங்க கிளம்பிட்டீங்க?…” என்றாள் அவளும் அவன் வேகத்தில்.
“கிளம்பறேன் பிரத்யு. வொர்க் இருக்கு. கூடவே கொஞ்சம் டயர்ட்…”
“அதெப்படி? வெல்கம் ட்ரிங் எதுவுமே எடுத்துக்கலை. நானும் பேசிட்டிருக்கேன். இருங்க வர்றேன்…” என ஓடி சென்று பழச்சாறை எடுத்து வந்து அவனுக்கு தர சிரிப்புடன் வாங்கிக்கொண்டான் ஆகர்ஷன்.
“சாப்பிட்டு தான் போகனும். கொஞ்சநேரம் உட்காருங்க. இப்போ பங்க்ஷன் ஆரம்பிச்சிருவாங்க…” என்று அவள் சொல்ல,
“அப்பப்பா, நம்பிட்டேன். என்னை நீங்க ப்ரைஸ் பன்றீங்கன்னு…” என கண் சிமிட்டி புன்னகைத்தவள்,
“நிஜமாவே கிளம்பறீங்களா?…” என்றாள் அவனிடம்.
“ஹ்ம்ம்…” என்று தலையசைத்தவன்,
“அதான் உன் ரிலேட்டிவ்ஸ், எல்லாரும் இவ்வளோ பேர் இருக்காங்களே? போரடிக்காம இருக்கும். ரொம்பநாள் கழிச்சு நீ என்ஜாய் பன்ற பங்க்ஷன்….”
“ஆமா, நான் சொன்னேன் பாருங்க. நீங்க வேற ஏன் சீனியர்…” என்று அந்த கூட்டத்தினை திரும்பி பார்த்தாள்.
“சொந்தம் தான். ஆனா மனசுக்கு சொந்தமா தெரியலை…” மெல்லிய முணுமுணுப்பு அவளிடம்.
அவள் கூறிய வார்த்தைகள் ஆகர்ஷனின் செவிகளை அலங்கரிக்க புன்னகை அவனிடம்.
“பரவாயில்லை, இவ்வளோ யோசிக்கிற நீ. வெறும் ஹாட் சாக்லேட் மட்டும் தான் தெரியும்ன்னு நினைச்சேன். இல்லையா என்ன?…” என்றவன் குரலில் அதீத ஆகர்ஷிப்பின் வெளிப்பாடு.
“என்ன இல்லையா?…” பிரத்யுவிற்கு புரியவில்லை.
“ஹார்ட் பத்தி எல்லாம் பொண்ணு யோசிக்குதே? அதான் கேட்டேன்….” என்றவன் அவளின் பார்வையில்,
“சரி நீ கவனி. நான் சுஷ்மா பேரன்ட்ஸ்கிட்ட சொல்லிட்டு கிளம்பறேன்…” என்று தலையசைத்துவிட்டு நகர இருந்தவன்,
“இன்னும் நீ டின்னர் சாப்பிடலைன்னா போய் முடிச்சுக்கோ. க்விக் பிரத்யு…” என்றும் சொல்லி நகர்ந்துவிட்டான் ஆகர்ஷன்.
அங்கிருந்து அவன் சுஷ்மாவிடம் அவளின் பெற்றோரிடமும் பேசிவிட்டு விடைபெற்று கிளம்பிவிட மீண்டும் பிரத்யுக்ஷா தனியாய் இருப்பதை போல் உணர்ந்தாள்.
என்னவோ போலிருக்க வீடியோ காலில் வீட்டிற்கு அழைத்து பேசியவள் முயன்று அந்த இடத்தில் ஒன்ற பார்த்தாள்.
கீழே அந்த கூட்டத்தினுள் அவளால் இருக்கமுடியவில்லை. சுஷ்மாவிடமே அத்தனை நெருக்கமில்லை.
அவளின் இல்லத்தில் வாடகைக்கு இருப்பதை போல் தான் பிரத்யுக்ஷாவின் இருப்பும்.
மாதமானால் அவர்கள் மறுத்தாலும் ஸ்ரீவத்சன் அதிகத்திற்குமே வாடகை போல் மகளின் குடியிருப்பிற்கான பணத்தை அனுப்பி வைத்துவிடுவார்.
“சொந்தத்துக்குள்ள என்னங்க? ஒரு பொண்ணு தான் எங்களுக்கு. இப்ப உங்க பொண்ணும்…” என்று மரியாதை நிமித்தம் அவர்கள் சொல்லியிருக்க,
“என்னதான் தூரத்து சொந்தம்ன்னாலும் வேற யாரும் தங்கினா வாடகை வாங்குவீங்க தானே? பிரத்யு என் பொண்ணா இருக்கறதால உங்களுக்கு சங்கடமா இருக்கும். ஆனா நான் சரியா இருக்கனுமே. சொந்தம் வேற. இது வேற…” என்று அவர்களிடம் நீங்கள் எனக்கு மிக நெருக்கமில்லை என்பதையும் வலியுறுத்தி இருந்தார்.
“என்ன நினைக்கிறார் அவர்? அதுவும் சொந்தமாம்? நமக்கென்ன சொந்தம்? ராம்நாத் மூலமா சொந்தம்ன்னு தெரிஞ்சது. அந்தநேரத்துல அவங்க வீடு கரெக்ட்டா இருக்குமேன்னு பார்த்தேன். ரொம்ப நெருக்கம் காமிக்க ட்ரை பன்றாங்க….” என்று காவேரியிடம் பேசியவர்,
“என் பொண்ணுக்கு நான் என்ன செய்யனும், செய்ய கூடாதுன்னு நான் டிஸைட் பண்ணுவேன். இவங்க ஓசில தங்க வைக்க எனக்கு எதுவும் இல்லையா? நினைச்சா அங்க ஒரு வீடே வாங்கி குடுப்பேன். பாதுகாப்பும் முக்கியமேன்னு தான் அங்க தங்க சரின்னு சொன்னேன் நான்…” என்று அமைதியாய் பேசி அனைவரையும் ஆட்டிவிட்டார் அவர்.