ரசிகா போன் ஒலிக்க, அவள் அதை எடுத்து, ஹலோ என்றாள் புன்னகையுடன்.
அந்த பக்கம் ஹ..லோ..என இழுத்து ஒருவன் பேச, ஹலோ யாரு? ரசிகா கேட்டாள்.
“ஏன்டி, உன்னோட ஹப்பியை மறந்துட்டு வேற குடும்பத்தோட சந்தோசமா இருக்க போல” என்று பேசியதை கேட்டு பயந்து கண்ணீருடன் போனை கீழே விட்டாள்.
ஆதி அவளை பார்த்துக் கொண்டே அவளிடம் வந்து போனை எடுக்க, நோ..சார் என்று போனை ஆதியிடமிருந்து பிடுங்கி காதில் வைத்தாள்.
என்னை ஏமாத்திட்டு போயிட்டா உன்னை விட்டுருவேன்னு நினைச்சியா? அவன் கேட்க, ஆதி போனை பிடுங்கி ஸ்பீக்கரில் போட்டான்.
ரசிகா கண்ணீருடன் அமர்ந்தாள். என்ன பேச்சையே காணோம். உன்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு சந்தோசமா இருந்துக்கோ. நான் வந்த பின் நீ என்னுடன் வந்து தான ஆகணும். உன்னை அவ்வளவு சாதாரணமா விட்டுருவேன்னா? பணத்திற்கு ஏற்ற வேலைய நீ பார்க்கவில்லை என்று அவன் சொல்ல, பேச வந்த ஆதி வாயை ரசிகா அடைத்து, வேண்டாம் என்று தலையசைத்தாள்.
திரிவேஷ் போனை பிடுங்கி, “நீ மட்டும் என் முன்னாடி வாடா. உன்னோட உடம்புல உயிர் இருக்காது” என கத்தினான்.
அண்ணனா? அகரன் கேட்க, ஆமா அண்ணா, உங்க ப்ரெண்டு எனக்கு பொண்டாட்டின்னா நீங்க எனக்கு அண்ணன். தம்பி தான வேணும். என்னோட பெரிய பசங்கல்ல நீங்க. அப்புறம் அண்ணன் என்று அழைக்காமல் தம்பி என்றா அழைப்பேன்.
அச்சோ, நீ இன்னும் அழுகையை நிறுத்தலையா? அதான் உனக்கு ப்ரெண்ட்ஸ் இருக்காங்க. உன்னோட புது குடும்பம் இருக்கு. இப்ப அழுதும் அவங்க வேடிக்கை பார்க்குறாங்கன்னா உன்னை யாருக்கும் பிடிக்காதோ? அவன் சொல்ல,
யாருடா சொன்னா? ரசியை எங்க எல்லாருக்கும் பிடிக்கும். அவ இனி உன்னுடன் வர மாட்டா மெல்லினா சொல்ல, ஸ்கூல் பொண்ணு அமைதியா படிக்க மட்டும் தான் செய்யணும். இப்படியெல்லாம் பேசக் கூடாதும்மா. இதை உங்க ரசி சொல்லித் தரலையா? இல்லை உன் அண்ணன் ஆதிரேயன் சொல்லித் தரலையா? அவன் கேட்க, ரசிகா ஆதியையும் மற்றவர்களையும் பார்த்தாள்.
ஆதி பாஸ்ஸை எப்படி உனக்கு தெரியும்? அகரன் கேட்க, அகரனா..லவ்லி பாய். “உம்மாடா” என்று அவன் சொல்ல, ச்சீ..என்றாள் மெல்லினா.
ச்சீயா? என்ற அவன், ரசி பணத்தை மட்டும் வாங்கிட்டு இப்படி என்னை உன் குடும்பம் ஏமாத்திட்டீங்களே? இது நியாயமா? அவன் கேட்க, நீ யாராக வேண்டுமானாலும் இரு. பணம் தான் உனக்கு பிரச்சனையா? நான் தாரேன். “ரசிக்கு விவாகரத்து பத்திரத்தில் சைன் செய்து கொடுத்திடு” என்றார் தமிழரசன்.
இல்ல எனக்கு பணம் வேண்டாம். எனக்கு ரசி தான் வேணும். ஒரு நாள் வேலைக்காரியா வேண்டாம். என் வாழ்நாள் வேலைக்காரியா வேணும் என்றான் அவன்.
ஆதிரேயன் கோபமாக, உனக்கு ரசி வேலைக்காரியாக மட்டுமல்ல பொண்டாட்டியாகவும் இருக்க முடியாது. நான் அவளை உன்னிடம் விடவே மாட்டேன் என்று சத்தமிட்டான்.
ஆதி, மறந்துட்டியா? உன்னோட பொண்டாட்டி உன் தம்பியோட இருக்கும் போது உனக்கு எப்படி இருந்தது. அன்று அவன் செய்ததை நீ செய்கிறாயோ? அவன் கேட்க, ஆதி உடைந்து போனான்.
பிரபாகரன் கோபமாக, என் பையன் உன்னோட பொண்டாட்டியை விரும்புவது தப்பு தான். ஆனால் நீ எப்படி அந்த பொண்ணை கஷ்டப்படுத்தினாயோ அது போல் என் மகன் செய்ய மாட்டான். நாங்க இப்ப உன் மேல கம்பிளைண்ட் பைல் பண்ணா உன்னை உள்ள தூக்கி போட்டுருவாங்க என்று அவர் சொல்ல, அவன் பயங்கரமாக சிரித்தான்.
ஹொ..அப்படியா? என் அருமை பொண்டாட்டி எனக்கு எதிரா சைன் பண்ணுவீங்களா? அவன் கேட்க ரசிகா அமைதியாக நின்றாள். எல்லாரும் அவளை பார்க்க, நீ எங்க இருக்க? முகவரிய அனுப்பு என்றாள்.
எதுக்குமா உனக்கு கஷ்டம். நானே உன்னை தேடி வாரேன் என்றான் அவன். ரசிகா அவனிடம் சென்று விடுவாளோ? என்று ஆதி கண்ணீருடன் ரசிகா கையை பிடித்தான்.
ருச்சி, அந்த படுபாவி பக்கம் கூட நீ போகக் கூடாது அகரன் சொல்ல, அகரா அவன் தான் வரானாமே? அவனை பார்த்து “சாவடி அடிக்கணும்” என்று திரிவேஷ் பேச, ஆதி கையை எடுத்து விட்ட ரசிகா, கண்ணீரை துடைத்து விட்டு,
நீ வர வேண்டாம். உன்னோட முகவரி அதே ரெசார்ட் தானே? அவள் கேட்க,
ஆமா டியர் வொய்பி அங்க தான் இருக்கேன்”.
ஓ.கே தயாரா இரு. உன்னை தேடி வரும் விவாகரத்து பத்திரத்தில் நீ சைன் பண்ணி அனுப்பிடு. நீ என்னோட அண்ணா, அண்ணிக்கு எவ்வளவு பணம் கொடுத்தாயோ அதை அப்படியே உன்னிடம் கொடுக்கிறேன். நான் உன்னை பார்க்கவே கூடாது என்று ரசிகா உறுதியுடன் பேசினாள்.
ஏய், நான் உன்னோட புருசன் என்று அவன் சொல்ல, புருசனா? நீயா? உனக்கு தெரியுமா? உன்னிடமிருந்து தப்பித்து சாதாரணமாக இந்த குடும்பத்தில் வந்து நான் சேரலை. எல்லா இடத்திலும் பிரச்சனை தான்.
நான் உன்னை விட்டு வெளியே வர காரணமும் நீ தான். உன்னால் வெளிய வந்த பின் ஒரு கும்பலிடம் மாட்டி அங்கிருந்த போலீஸ் ஒருவர் உதவியால் தான் ஊட்டி ரயிலில் ஏறினேன். இங்கேயும் பிரச்சனை. உதவிக்கு யாருமில்லாமல் செத்து பிழைச்சி இந்த குடும்பத்துக்கு வந்தேன்.
அந்த நேரத்தில் நீங்க போன? எவளோட இருந்த? ரசிகா கேட்க, அச்சோ அப்ப யாருடன் இருந்தேன்னு தெரியலைம்மா. ஆனால் இனி என் அருகே எந்த பொண்ணும் வர மாட்டா. நீ போதும் எனக்கு என்றாள்.
எதுக்கு நான் போதும். என்னை சாவடிக்க பார்க்கிறாயா? ரசிகா கேட்க, இல்லை எனக்கு நீ தேவை. “ஐ நீடு யூ” என்றான் அவன்.
“ஐ கான்ட் நீடு ஃபார் யூ”. “ஐ ஹேட் யூ”. என்னோட விபு, ஆரவ், யோகியை விட்டு ஒருநாள் கூட நான் இருந்ததேயில்லை. உன்னால தான் நாங்க பிரிந்தோம். உன்னை ஏத்துக்க என்ன? உன்னை பார்க்க கூட எனக்கு பிடிக்கலை. உன்னை பார்த்தாலே அருவருப்பா இருக்கு. பிடிக்கலை.. பிடிக்கலை..பிடிக்கலை ரசிகா கத்தினாள்.
சொல்லாத..சொல்லாத..சொல்லாத..இதே தான் அவங்களும் சொன்னாங்க. பிடிக்கலைன்னு மட்டும் சொல்லாத..என்னிடம் பணம் இருக்கு. அழகு இருக்கு .நீ கேட்கும் அனைத்தையும் வாங்கித் தர முடியும் என்றான் அவன்.
இல்ல எனக்கு வேண்டியது உன்னிடம் இல்லை.
என்ன இல்லை. சொல்லு? அவன் பைத்தியம் போல கத்தினான்.
நிம்மதியான வாழ்க்கை, சந்தோசம், ப்ரெண்ட்ஸ். உறவுகள் எதுவுமேயில்லை. உன்னை சுற்றி படுக்கையறை, பணம், போதை மட்டும் தான் இருக்கு. உன்னை எனக்கு என்றுமே பிடிக்காது. இதுக்கு மேல நீ எனக்கு கால் பண்ண மறுநாள் நான் பிணமா தான் இருப்பேன் என்றாள் ரசிகா.
ரசி..ஆதி சத்தமிட, அவன் சுற்றியிருந்த எல்லாத்தையும் உடைத்து விட்டு கத்தினான்.
ரசி, என்ன பேசுற? ஆதி சத்தமிட்டான்.
என்னை என்ன தான் பண்ண சொல்றீங்க? என்று அழுதாள். அகரன் எழ முடியாமல் எழுந்தான். திரிவேஷ் அவனை அமர வைத்து, ரசிகாவிடம் வந்தான்.
மௌனி, அவன் எந்த ரெசார்ட்ல்ல இருக்கான் சொல்லு. நான் இப்பவே போய் எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்திடலாம் என்றான் திரிவேஷ்.
முடிக்க போறீயா? எதை முடிக்கப் போற? உன்னை நம்பி இரு குடும்பம் இருக்கு. முதல்ல அதை பாரு. என்னோட பிரச்சனையை நானே பார்த்துப்பேன் என்று முகத்தை கழுவி விட்டு எல்லார் முன்னும் வந்து, தமிழரசனை பார்த்தாள்.
அப்பா, நீங்க அந்த பைல்ல ஏதும் பண்ணீங்களா? ரசிகா கேட்க, இல்லம்மா அவன் முகவரி வேணும்ல்லம்மா என்றார்.
அதை எடுத்து வாங்களேன் என்று அவரிடம் சொல்ல, ஆதிரேயன் வீட்டில் அவர் தங்கும் அறைக்கு சென்று எடுத்து வந்தார்.
ரசிகா அதை வாங்கி, கண்ணீருடன் அவனது முகவரியை எழுதி உடனே விவாகரத்துக்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா. அவனுக்கும் அனுப்பி வையுங்க.
சரிம்மா என்று அவர் சொல்ல, நான் இங்கே எனக்கான வேலை முடிந்ததும் சென்று விடுவேன். லிது, நிது இருவரும் இப்பொழுதிலிருந்து ஆதி சார் அறையில் தான் தூங்கணும். அப்புறம் மெல்லி, நீ உன்னோட அம்மா அறையில் தான் தூங்கணும். அவங்க நம்மை போல் சாதாரணமாக எழுந்து நடக்கும் வரை என்று தமிழரசனை பார்த்து,
அப்பா, நீங்க உங்க சொந்த வீட்டை என்ன வேணும்ன்னாலும் செஞ்சுக்கோங்க. ஆனால் நாளையிலிருந்து இது தான் உங்க வீடு. பிரபாகரன் சார் போல நீங்களும் இங்கிருக்கும் எல்லாரையும் பார்த்துக்கணும்.
என்னம்மா, இப்பவே போற மாதிரி சொல்ற? பிரபாகரன் கேட்டார்.
சார், அவன் பேசியதை கவனிச்சீங்களா? ஆதி சார் பெயரையும் உங்க குடும்ப விசயத்தையும் சொல்றான். அவன் கண்டிப்பா உங்களுக்கு தெரிஞ்சவனா தான் இருக்கணும்.
எனக்கு தான் அவனை பற்றி எதுவுமே தெரியாதே? என்னால உங்களுக்கு பிரச்சனை வந்திரும். எல்லாரும் உங்களையும் ஆதி சாரையும் தான் தப்பா பேசுவாங்க. நான் இப்பவே கிளம்பலை. எல்லாம் சரியான பின் தான் போவேன். ஆனால் இப்பொழுதைக்கு உங்க எல்லாரிடமும் ஒத்துமை வேணும். அப்ப தான் நான் நிம்மதியா வெளியேற முடியும் என்றாள்.
ஆதிரேயன் கண்ணீருடன் ரசிகாவை பார்த்தான். எல்லாரும் அவனை பார்த்தனர். நான் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிறேன் என்று நிற்காமல் அவளறைக்கு ஓடினாள் ரசிகா.
எல்லாரும் எதுக்கு இங்கேயே நிக்கிறீங்க? போங்க என்று ஆதிரேயன் கத்தினான்.
ஆதி..பிரபாகரன் அழைக்க, அப்பா எதுவும் பேச வேண்டாம் என்றான்.
அப்பா, லிது நிது ஆதியை அழைக்க, அவர்களை பார்த்து மண்டியிட்டான்.
அப்பா, ரசி எங்க போகப் போறா? லிது கேட்டாள்.
“தெரியலம்மா” என்று அவர்களை அணைத்து அழுதான்.
மெல்லினா ரசிகா அறைக்கு சென்று அவளை பார்த்தாள். கட்டிலில் குப்புற படுத்து அழுது கொண்டிருந்தாள்.
ரசி மெல்லினா அழைக்க, எழுந்து வந்து மெல்லினாவை அணைத்து அழுதாள். என்னாலும் உங்களை விட்டு போக மனசே வர மாட்டேங்குது மெல்லி என்று அழுதாள் ரசிகா.
ரசி, நான் உன்னிடம் ஒன்று சொல்லணும். நீ அண்ணா, குழந்தைகளையும் உன்னுடன் கூட்டிட்டு போறீயா? மெல்லினா கேட்க, என்ன பேசுற மெல்லி? ரசிகா கேட்டாள்.
மெல்லினா வேகமாக ரசிகா அறைக்கதவை தாழிட்டாள். ரசி நான் சொல்ல வேண்டியதை சொல்லிடுறேன். அப்புறம் முடிவெடு என்று விசயம் ஒன்றை மெல்லினா சொல்ல, ரசிகா திகைத்து..உண்மையாக தான் சொல்றீயா? என்று கேட்டாள்.
“ஆமா ரசி, ப்ளீஸ் அண்ணாவையும் கூட்டிட்டி போ” என்று மெல்லினா சொல்ல, இல்ல மெல்லி. இது சரியா இருக்காது. நான் ஏதாவது செய்கிறேன்.
செய்கிறாயா? என்ன செய்வ? மெல்லினா கோபமாக கத்தினாள்.
ப்ளீஸ் மெல்லி, நான் என்னால முடிந்த நல்ல நினைவுகளை உங்களுக்கு கொடுத்து போக நினைக்கிறேன். நீ இப்பவே என்னை கிளம்ப வைத்து விடாதே? என்று ரசிகா சொல்ல, “ருச்சி வெளிய வா” என்று அகரன் கீழிருந்து கத்தினான்.
உள்ளே சென்ற எல்லாரும் வெளியே வந்தனர். ரசிகாவும் மெல்லினாவும் வந்தனர். ஆதி மேலே நின்று அவர்களை பார்த்தான்.
எதுக்குடா எல்லாரையும் தொந்தரவு பண்ற? ரசிகா கோபமாக, இதை முதல்ல கேளு என்று அவன் போன் ரெக்கார்டரை ஆன் செய்தான்.
மாமா, நான் பிரணி பேசுறேன். ருச்சியை கல்யாணம் செய்தவன் இங்கே ருச்சி வீட்டுக்கு வந்தான் போல. விபுவுக்கும், ருச்சியோட மாமாவுக்கும் இவர்களை பற்றி தெரிஞ்சு போச்சு. வீட்ல பயங்கர சண்டை. கோபத்துல ருச்சியோட அண்ணி, யோகியை இரத்தம் வரும் வரை அடிச்சிட்டாங்க. விபு அவன் அப்பாவை அடிச்சிட்டான். பிரச்சனை பெருசாகிடுச்சு. எனக்கு ருச்சியிடம் சொல்ல கஷ்டமா இருக்கு. அதான் உன்னிடம் சொல்றேன்.
விபு ருச்சியை தேட ஆரம்பித்து விட்டான். ஆரவும் யோகியும் ரொம்ப அழுதாங்க. யாருமே ஸ்கூலுக்கு வரலை. அதனால் தான் நான் வீட்டுக்கு போனேன். என்னையும் வீட்டுக்கு வரக் கூடாதுன்னு திட்டி அனுப்பிட்டாங்க. என்ன செய்றாங்கன்னு தெரியல. பயமா இருக்கு. “மாமா..அவங்களுக்கு ஏதாவது கெல்ப் பண்ணு ப்ளீஸ்” என்று பிரணிதா அழுதிருந்தாள்.
ரசிகா அகரனிடம் போனை வாங்கி கண்ணீருடன் அமர்ந்து, யோசனையுடன் போனை பார்த்தாள்.
திரிவேஷ் அவள் கையிலிருந்த போனை பிடுங்கி, போதும். நீ யாருக்கும் கால் பண்ண வேண்டாம். அவங்க பசங்கள அவங்களே பார்த்துப்பாங்க என்றான்.
சீதாம்மா ரசிகா அருகே வந்து, ஆமாம்மா இந்த தம்பி சொல்றதும் சரி தான். என்ன இருந்தாலும் அந்த பசங்க அம்மா, அப்பா அவங்க தான். நீ தலையிட்டு பெரிய பிரச்சனையாகிடாமல் என்றார்.
அம்மா, என்னால அப்படி நினைக்க முடியாதே? “எனக்கு இருப்பதே அவங்க தான்” என்று அழுத ரசிகா சிந்தனை எழுந்து பிரணிதாவை அழைத்தாள்.
நீ எதுக்கு அழுற? ரசிகா கேட்க, அம்மாவும் இனி உங்க வீட்டுக்கு போகக்கூடாதுன்னு சொல்லீட்டாங்க. அப்பா உதவலாம்ன்னு சொன்னாரு.
உங்க அண்ணி கேவலமா பேசுவாங்கன்னு அம்மாவும் என்னை போகக்கூடாதுன்னு சொல்லீட்டாங்க. அப்பாவும் யோகி, விபு, ஆரவை நினைத்து வருத்தப்படுறார். அப்புறம் ருச்சி, உன்னோட அக்காவை மாமா அவர் வீட்டுக்கு இழுத்துட்டு போயிட்டார்.
மாமா விபுவையும் பசங்களையும் அழைத்தார். ஆனால் விபு வர மாட்டேன்னு சொல்லீட்டான்.
யோகி, எப்படி இருக்கான்னு உனக்கு தெரியுமா? ரசிகா பிரணிதாவிடம் கேட்டாள்.
இல்ல ருச்சி, எனக்கு தெரியல. உண்மையிலே உன்னோட அண்ணா, அண்ணிகள் தான் அவங்களுக்கு அம்மா, அப்பாவா? இப்படி அடிக்கிறாங்க. ருச்சி நீ விபுவையும் ஆரவ், யோகியையும் அழைச்சிட்டு போயிடேன். இங்கிருந்தா அவங்களுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு.
விபுவை பற்றி உனக்கு தெரியாதா? பொறுமையா பேசலாம் மாட்டான். அவன் அப்பாவை அவன் அடித்ததால் அவன் அம்மாவும், சித்தப்பாவும் அவனை அடிச்சிட்டாங்க. பசங்கள அவன் தான் பார்த்துட்டு இருக்கான். நீ இல்லாமல் ரொம்ப கஷ்டப்படுறாங்க என்றான்.
யோகிக்கு அதிகமா அடி இல்லையே? என்று ரசிகா மனது அவள் சின்ன அண்ணன் பொண்ணு யோகிதா பற்றிய சிந்தனையிலே இருந்தாள்.
கழுத்தில அடிபட்டு இரத்தம் வந்தது. ரொம்ப இருக்காதுன்னு தான் நினைக்கிறேன் பிரணிதா சொல்ல, கழுத்திலா என்று கண்ணீருடன் போனை வைத்து விட்டு எழுந்தாள்.
ரசிகா அவ்விடம் விட்டு நகர, ருச்சி எங்க போற? அகரன் கேட்டான்.
“நான் இப்பவே கிளம்புறேன்” என்றாள் ரசிகா.
எங்க போகப் போற? நீ அங்க போன அவனிடம் மாட்டிப்ப? திரிவேஷ் சொல்ல, அதுக்காக சின்னப்பசங்களை தனியா விட சொல்றீயாடா? ரசிகா கத்தினாள்.
அம்மா, பொறுமையா இருடா. உங்க வீட்டு பக்கம் உதவிக்கு கூடவா ஆள் இல்லை தமிழரசன் கேட்டார்.
ஆமால்ல, ரத்தினம் பாட்டி இருக்காங்க. ஆனால் என்னிடம் அவங்க நம்பர் இல்லையே? ரசிகா சொல்ல, அகரன் அவனது போனை மீண்டும் நீட்டினான்.
அகரா, அவங்க நம்பர் உன்னிடம் இருக்கா? ரசிகா கேட்க, ஆமா அந்த வீட்ல உன்னோட பாதுகாப்பு அந்த சின்னப்பசங்க தான். அதை மீறி பெரியவங்க யாராவது இருந்தா நல்லா இருக்கும்ன்னு படிக்கும் போதே ஸ்பை வைத்தேன். என்னோட சீக்ரட் ஸ்பை பாட்டி தான் என்றான்.
ரசிகா கண்ணீருடன், “ரொம்ப தேங்க்ஸ்டா” என்று அகரனை அணைக்க வந்தாள்.
நீ அங்கிருந்தே “தேங்க்ஸ்” சொல்லு. போதும் என்று மேலே நின்று ரசிகாவை பார்த்துக் கொண்டிருந்த ஆதிரேயனை பார்த்தான் அகரன். எல்லாரும் ஆதிரேயனை பார்த்தனர். சோர்ந்த முகத்துடன் நின்று பார்த்துக் கொண்டிருந்தான். அவனை பார்த்துக் கொண்டே பாட்டிக்கு போன் செய்தாள்.
அம்மாடி, எங்கடி இருக்க? நீ இல்லாமல் பிள்ளைகள் தவிச்சு கிடக்கு. கல்யாணம்ன்னு உன்னை வித்து வச்சிருக்கானுகளே? இந்த விபு பைய உடைஞ்சு போயிட்டான்.
அவனும் உன்னோட அக்கா புருசனும் உனக்காக வீட்டையே ரெண்டாக்கிட்டானுக. விபுவை ரொம்ப அடிச்சிருக்காங்க. வாய்ல இருந்து இரத்தமெல்லாம் வந்தது. வீட்டுக்குள்ள போக மாட்டேன்னு ஆரவ் பையன் ஒரே அழுகை. என்னோட தான் பசங்க இருக்காங்க.
ஏன்டி, பெத்த பிள்ளைய இப்படி மாடு மாதிரி அடிச்சிட்டானுக. கூட பிறந்தவன்னு பார்க்காமல் உன்னை பணத்துக்காக வித்துருக்கானுக. இவங்க எல்லாம் மனுசங்களா? எல்லாம் இந்த சிறுக்கிகளோட வேலைடி என்று அவர் ரசிகா குடும்பத்தை வறுத்தெடுத்தார்.
பாட்டி, இப்ப என்ன செய்றாங்க? ஸ்கூலுக்கு போயிருக்காங்களா?
இல்லடி, யோகிக்காக தான் பூங்காவிற்கு கூட்டிட்டு போயிருக்கான்.
யோகி ரொம்ப அழுதாளா? அடி பலமா பட்டிருக்கா? விபு இப்ப ஓ.கே தான பாட்டி, அவனையும் ரொம்ப அடிச்சாங்களா? என அழுது கொண்டே கேட்டாள் ரசிகா.
இல்லடி, நீ அழாத. நான் பார்த்துக்கிறேன். நீ ஓடிப்போயிட்டன்னு நம்ம தெருக்குள்ள சொல்லும் போதே எல்லாரும் உதார் காட்டுறாங்கன்னு நினைச்சேன்டி. என்ன கேவலமான வேலைய பார்த்துருக்கானுக. நீ நல்லா இருக்கியா? உனக்கு ஒன்றுமில்லையே? பாட்டி கேட்க,
நான் நல்லா இருக்கேன் பாட்டி. இந்த ஒரு வருசம் மட்டும் எப்படியாவது பாத்துக்கோங்க பாட்டி. நான் பணம் அனுப்புறேன். ஆனால் நான் பேசியது பசங்களுக்கு தெரிய வேண்டாம். பசங்கள கண்டிப்பா பள்ளிக்கு போகணும்ன்னு சொல்லுங்க. பார்த்துக்கோங்க பாட்டி என்று அழுதாள் ரசிகா.
ஒரு வருசமா? அப்புறம் என்ன செய்யப் போறடி?
பாட்டி, விபு பள்ளி முடிக்கவும் நான் செல்லப் போகும் ஊருக்கு அவங்களையும் கூப்பிட்டுக்கிறேன் என்றாள்.
இப்ப எங்கடி இருக்க? பாட்டி கேட்க, அதை மட்டும் கேட்காத என்றாள்.
ஏய், பசங்க வாராங்கடி என்று அமைதியாக, பாட்டி இங்க பார்த்தியா விபு அண்ணா பெரிய சாக்லெட் வாங்கி தந்தாங்க என்று யோகி சொல்ல, “உனக்கு கழுத்து வலிக்குதாடி?” பாட்டி கேட்க,
கிழவி, “சும்மா இரு” என்று விபு அதட்டினான். ரசிகா அமைதியாக கேட்பதை பார்த்து, மெல்லினா அவளிடம் வந்து ஒட்டு கேட்டாள். திரிவேஷ் போனை பிடுங்கி ஸ்பீக்கரில் போட்டான்.
அவரும் எங்க இருக்கார்ன்னு தெரியல. என்னிடம் என்ன போனா இருக்குடா? அவர் நம்பர் வைத்திருக்க? விபு கேட்டான்.
அப்புறம் எப்படி நம்ம அத்தைய கண்டுபிடிக்கிறது? ஆரவ் கேட்டான்.
“இதெல்லாம் பெரிய விசயமே இல்லை. இன்னும் ஒரு வாரத்தில் கண்டுபிடிக்கிறேன் பாரு” என்றான் விபிதன்.
எப்படிண்ணா? ஆரவ் கேட்க, அதான் அத்தை அவங்க டைரிய விட்டு போயிருக்காங்கலே! அது போதும் எனக்கு என்றான் விபுதன்.
அண்ணா, அம்மாவுக்கு எதுக்கு நம்மை பிடிக்கல? யோகிதா கேட்க, அம்மாவுக்கு உங்களை பிடிக்காமல் இல்லைடா. ஏதோ கோபத்தில் தான் அடிச்சிட்டாங்க என்று பாட்டி சொன்னார்.
பொய் சொல்லாத பாட்டி. அம்மாவுக்கு எங்கள பிடிக்கல. அதனால தான் இப்படி அடிச்சிட்டா. எனக்கு எப்படி வலிக்குது தெரியுமா? என்று அழுத யோகிதா, எங்க ஸ்கூல்ல எல்லாருக்கும் அவங்க அம்மா ஊட்டி விடுவாங்க. அகல்யாவுக்கு அவளோட அம்மா குளிக்க வைப்பாங்களாம். சாப்பாடு ஊட்டி விடுவாங்களாம், அவளுக்கு இனிப்பு, திண்பண்டம் வாங்கித் தருவாங்கலாம். கதை சொல்லி தூங்க வைப்பாங்களாம்.
எங்க அம்மா இப்படி செய்யவே மாட்டாங்க. ஆனால் ஆர்.கே அத்தை தான் எனக்கு இதெல்லாம் செய்வாள். அப்படின்னா அவள் தான் என்னோட அம்மாவா? அத்தை இல்லையா? என்று யோகி கேட்க, பாட்டியும் கண்ணீருடன் அவரை பார்த்தார்.
ரசிகா கட்டுப்படுத்தி இருந்த அழுகை வெளியே வந்தது.
யோகி, என்ன பேசுற? நமக்கு அம்மா இல்லைன்னு நினைச்சுக்கோ. ஆர்.கே நமக்கு அத்தை மட்டும் தான். அவளுக்கு பிரச்சனை வந்த போதும் நம்மிடம் வரலை. அவ இல்லாமல் நாம கஷ்டப்படுவோன்னு அவளுக்கு தெரியாதா? தெரிஞ்சும் நம்மை பற்றி யோசிக்காமல் தான எங்கோ இருக்கா என்று விபிதன் கோபமாக கூறினான்.
அண்ணா, ஆர்.கேவ திட்டாத. அந்த மாமா அத்தைய கஷ்டப்படுத்தியதால் தான அடிச்சன்னு சொன்ன? அப்புறம் அத்தை நம்மிடம் வந்தா அந்த மாமா கஷ்டப்படுத்துவான்ல்ல என்று ஆரவ் கேட்க, விபுவும் பாட்டியும் அழுதனர். ரசிகாவும் அழுதாள்.
அண்ணா, அப்படின்னா அப்பாவுக்கும் நம்மை பிடிக்காதா? அம்மா, அப்பா இல்லாதவங்க அநாதையாம். அப்படின்னா என்ன? எப்படி இருப்பாங்க? நம்மை போலா இருப்பாங்க? என்று யோகிதா கேட்க,
அண்ணா, விக்கியை ராஜூ இப்படி தான் திட்டுவான். இனி நானும் பள்ளிக்கு போனால் என்னையும் இப்படி தான் திட்டுவானா? யோகிதா கேட்க, விபுதன் அவளை அணைத்து அழுதான். ரசிகாவும் ஆதிரேயன் குடும்பமும் யோகிதாவின் பேச்சில் கலங்கி போனார்கள்.
யாருடி சொன்னா நீங்க அநாதைன்னு? பாட்டி நான் இருக்கேன்டி. உங்க அத்தையும் உங்களை அப்படி அநாதையா விட்டிருக்க மாட்டா. கண்டிப்பா வருவா. அவள் வரும் வரை உங்களுக்கு எல்லாமா நான் இருக்கேன் என்று பாட்டி சொல்ல, மூவரும் பாட்டியை கட்டிக் கொண்டனர்.
ஏலேய் கனி, இங்க வாடா. இனி இது நம்ம பிள்ளைகள். இவங்க பொருட்கள் எல்லாமே நம்ம வீட்டுக்கு வரணும் பாட்டி சொல்ல, கிழவி உனக்கு எதுக்கு சிரமம்?
ஏன்டா, உங்க அத்தை தான் எல்லாமே செய்யணுமா? அவள் வரும் வரை தான. நானும் ஒண்டிக்கட்டையா தனியா தான இருக்கேன். எனக்கு துணைக்கு நீங்க இருக்க மாட்டீங்களாடா பாட்டி கேட்க, கனியண்ணா, நில்லுங்க நானும் வாரேன் என்று விபுதன் எழுந்தான்.
அண்ணா, போகாத. அம்மாவும் அப்பாவும் அடிப்பா யோகிதா விபுதனை கட்டிக் கொண்டு அழுதாள்.
யோகி, நீ அழுத நான் கொடுத்த சாக்லெட்டை வாங்கிடுவேன். அழக்கூடாது. அவங்க நம்ம பொருள்களை எடுக்க வேண்டாம். கனி அண்ணா கூட வாராங்கல்ல. என்னை யாரும் ஏதும் செய்ய மாட்டாங்க. நான் எடுத்துட்டு வந்துடுறேன் என்று அவளை சமாதானப்படுத்தி விட்டு அவன் சென்றான்.
சரி, இப்ப ரசிகாவை பார்த்தால் என்ன செய்வீங்க? பாட்டி கேட்க, நான் அத்தை கட்டி பிடிச்சுப்பேன். விடவே மாட்டேன். அவங்கள விட்டு இங்க வரவே மாட்டோம் என்றான் ஆரவ்.
பாட்டி நாங்க அத்தையோட போகும் போது உன்னையும் கூட்டிட்டு போறோம். நாம ஜாலியா விளையாடலாம் என்றான் ஆரவ்.
விபு இருக்கும் போது சொல்லாத. உங்க அத்தை உங்களுக்கு தான் சொந்தம்ன்னு ரொம்ப உரிமை கொண்டாடுவான். என்னை கூட்டிட்டு போய் தனியா விட்டுட்டு வந்துருவான் பாட்டி சொல்ல, அய்ய பாட்டி, விபு அண்ணா அப்படியெல்லாம் செய்ய மாட்டான் யோகிதா சொன்னாள்,
அடியே, உங்க அத்தை என்னிடம் பேச வந்தால் கூட இருக்கவே விட மாட்டான். ஸ்கூல் நேரம் தவிர அவள் இல்லாமல் இருக்கவே மாட்டான். அவளும் உங்களை பார்க்காமல் பேசாமல் இருந்ததேயில்லை. இப்ப அவளும் கஷ்டப்பட்டுகிட்டு தான் இருப்பா என்று பாட்டி போனை பார்த்தார்.
வெளியே சத்தம் கேட்டு மூவரும் வெளியே வந்தனர்.
விபு கத்திக் கொண்டிருந்தான். டேய், சண்டை போட்டுகிட்டு இருக்கியா? பாட்டி விபுவை அதட்டினார்,
ஏய் கிழவி, இதுக பேசுறத பார்த்தியா? அத்தை நாங்க தேடி போனா இவங்க சொத்து தர மாட்டாங்களாம். பணம் கிடைக்காதாம். ஒரேதா போகணுமாம்? பெத்தவங்க பிள்ளைகிட்ட பேசுற மாதிரியா பேசுறாங்க.
ஆமா, “பணத்துக்காக கூட பிறந்தவளையே வித்தவங்க தான?” விபுதன் சத்தமாக பேச, அவன் அப்பா அவனை அடிக்க வந்தார்.
தெருவினர் எல்லாரும் அவரை தடுத்து, அவன் சொல்றதுல்ல என்ன தப்பு இருக்கு? என்ற தாத்தா ஒருவர், உன்னோட தங்கை தான அந்த பொண்ணு. அந்த பையன் அவளை என்ன செய்தானோ என்னமோ..பிள்ளை அவனை விட்டு போயிருக்கா? அவ நல்லா இருக்காலா? எங்க இருக்கான்னு நீ தேடணும்.
உன் பிள்ளை அவன் அத்தையை தேட வர்றான்? அதுக்கு அவனை அடிக்க வர்ற? இதுக்கு மேல பிள்ளைங்க மேல கையை வச்ச…போலீஸ் அடி நீ தான்டா வாங்கணும். நீ செஞ்ச வேலைக்கு..நாங்க எல்லாரும் சேர்ந்து கம்பிளைண் பண்ணா, நீங்களும் உங்க பொண்டாட்டியும் உள்ளே போய் கலி தான் சாப்பிடணும்.
ஆமா, நான் கம்பிளைண்ட் பண்ணிட்டு தான் என் அத்தையை தேடப் போறேன். ஏதாவது இடஞ்சல் பண்ணீங்க. கண்டிப்பா நீங்க உள்ள தான் போகணும்.
அப்புறம் ஒரு முக்கியமான விசயம். இனி உங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னோட தம்பி, தங்கச்சிய நான் பார்த்துக்கிறேன். யாராவது என் பிள்ளைன்னு வந்தீங்கன்னா நடக்கிறதே வேற..என்று விபுதன் தன் குடும்பத்தினரிடம் பேசினான்.
இல்லப்பா, படிக்க என்ன செய்வ? ஒருவர் விபுவிடம் கேட்டார்.
படிப்பா இத்தனை நாள் இவங்களா படிக்க வச்சாங்க? எங்க அத்தை தான வளர்த்து, படிக்க வச்சாங்க. முதல்ல அவங்கள தேடணும். படிப்பை அப்புறம் தான் பார்க்கணும்.
போயும் போயும் இப்படியொரு தருதலைய அத்தை தலையில கட்டி வச்சிருக்காங்க. அவன் அத்தையை கண்டிபிடிக்கும் முன் எங்க அத்தையை நாங்க கண்டுபிடிக்கணும் என்று தங்களது பொருட்கள் அடங்கிய நான்கு பையை எடுத்துக் கொண்டு பாட்டியிடம் வந்தான்.
கிழவி, ஒரு வாரம் மட்டும் தங்க தூங்க உதவி செய். பணம் கொடுத்துடுறேன் என்றான் விபுதன்.
பணம் உனக்கேதுடா? பாட்டி கேட்க, எனக்கு கை, கால் நல்லா தான் இருக்கு. என்னால சம்பாதிக்க முடியாதா? என்னோட தம்பி, தங்கச்சியை மட்டும் பத்திரமா பார்த்துக்கோ என்றான். பாட்டி போனை அணைத்தார். ரசிகா உடைந்து அழுது கொண்டே மயங்கினாள்.
இவள் வேற என்று ஆதிரேயன் வேகமாக இறங்கி, அவளை தூக்கி அவளறைக்கு சென்றான். திரிவேஷூம் அகரனும் பார்த்துக் கொண்டிருக்க, கீழே வந்த ஆதிரேயன்..பசங்கள இங்க வர வைக்கலாமா? என கேட்டான்.
சார், இதை நாங்க பார்த்துக்கிறோம். மௌனிக்கு தெரிந்தால் கோபப்படுவாள் என்ற திரிவேஷ், எல்லாரும் ஓய்வெடுக்க. நான் கிளம்புகிறேன் என்று சொல்லி விட்டு அகரனை பார்த்தான்.
கீழே கிடந்த அவன் போனை எடுத்த அகரன் திரிவேஷை பார்த்தான். அவன் அம்மா, அப்பாவை பார்க்க சென்றான்.