மாலை நேரத்துக்கு பூங்குயில்கள் கொஞ்சிக் கொண்டிருக்க ஆதிரேயன் வீட்டில் எல்லாரும் அமைதியாக இருந்தனர். ஆபிஸ், ஸ்கூல் என யாரும் எங்கும் போகவில்லை. ஆனால் குழந்தைகளுக்காக ரசிகா தன் வலியை மறைத்து லிது நிதிவுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். மெல்லினா அவளை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அவளருகே அவள் அப்பா பிரபாகரன் வந்து அமர்ந்தார்.
அவரை பார்த்ததும் ரசிகா அவளிடம் பேசியது நினைவிற்கு வந்தது. ஆதியை நினைத்து அப்பாவும் வருத்தமாக தான் இருக்கிறார்கள் என்று அவள் கூறியதை நினைத்துக் கொண்டே, அப்பா..என்று மெல்லினா அழைக்க, அவர் கண்ணீருடன் தன் மகளை அணைத்து, நான் வேண்டுமென்றே ஆதியை இலக்கியாவிற்கு கல்யாணம் செய்யலம்மா. அவனுக்கு சரியா இருப்பா. அவன் சந்தோசமா இருப்பான்னு தான் நான் திருமணம் செய்து வைத்தேன். ஆனால் இப்படி ஆகிடுச்சும்மா? என்று அவர் அழுதார்.
அவர் கண்ணீரை துடைத்து விட்ட மெல்லினா, “அப்பா ரசியை எப்படியாவது அண்ணாவுடன் சேர்த்து வைக்கணும்” என்றாள்.
“அந்த பொண்ணு தான் விருப்பமில்லைன்னு சொல்றாலேம்மா!”
இல்லப்பா. அவளுக்கும் அண்ணாவை பிடிச்சிருக்கு. அவளுக்கு ஏதோ காரணம் இருக்கு. அதான் அவளை தடுக்குதுப்பா. அதை பார்த்து நாம சரி செய்தால் நம்ம குடும்பம் சந்தோசமா இருக்கும் என்றாள். அவரும் ரசிகாவை பார்த்துக் கொண்டே, “என்னன்னு பார்ப்போம்மா” என்றார்.
“தேங்க்ஸ்ப்பா” என்று மெல்லினா அவரை கட்டிக் கொண்டார். ஆதியும் அவர்களிடம் வந்து அமர்ந்தான். சீதாம்மா தேனீர் என்று சத்தமிட்டான்.
ரசிகாவும் பசங்களும் அவனை பார்த்தனர். லிது நிது அவனிடம் ஓடி வர, ரசிகா அவனை பார்த்துக் கொண்டே வந்தாள். அவள் போன் அழைக்க, அன்நோன் நம்பர் என்று இருப்பதை பார்த்து பயத்துடன் எடுத்தாள்.
ரசிகாவா? பெண்ணின் குரல் கேட்க, ஆமா, நீங்க யாரு? இவள் கேட்டாள்.
ரசிகா, எதுவும் சொல்லாமல் எங்க போன? பிரின்சி மேம் உன்னை பார்க்கணும்ன்னு சொன்னாங்க,
மேம் நீங்க?
திவ்யா ஆபிஸ்ல்ல இருப்பேன்ல்ல. பத்து நாள்ல்ல எல்லாத்தையும் மறந்துட்டியா? அவர் கேட்க, அக்கா..இல்ல..நான் எப்படி மறப்பேன்? எப்படி இருக்கீங்க? நம்பர் உங்களுக்கு எப்படி கிடச்சது?
அது இருக்கட்டும். சொல்லாமல் கொல்லாமல் கல்யாணம் ஏதும் பண்ணிக்கிட்டியா? ருத்ரா தான் நீ கல்யாணம் பண்ணிக்கிட்டன்னு சொன்னான்.
ருத்ராவா? அவனுக்கு..என்று நிறுத்தி, அதெல்லாம் இல்லவே இல்லை. உங்களிடம் வசூல் பண்ணவாது கல்யாணம்ன்னா சொல்வேன்ல்ல என்றாள்.
ஹப்பாடா, அப்ப சீக்கிரம் காலேஷூக்கு வா. உன்னோட பசங்க எங்க உசுர வாங்குறானுக? சந்தீப் இருக்கேனே? அய்யோ முடியலம்மா..பார்க்கும் போதெல்லாம் உன்னை பற்றி தான் கேட்கிறான். அவனுக்கு உன்னோட பிளாக் காஃபி வேணுமாம்.
அக்கா, “பிளாக் காஃபிய அவனோட கெர்ல் ப்ரெண்ட போட்டு தர சொல்லுங்க” என்றாள் புன்னகையுடன்.
ஏன்? நீ வர மாட்டாயா? திவ்யா கேட்க, இல்லக்கா என்னால வர முடியாது. நான் வேற ஊருக்கு ஷிஃப்ட் ஆகிட்டேன்.எனக்கு என்னுடைய சான்றிதழ் வேணும். எல்லா பார்மாலிட்டிசையும் முடிக்கணும். ப்ளீஸ் கொஞ்சம் கெல்ப் பண்ணுங்க.
இங்க இல்லையா? வெளியூருக்கு மாறி இருக்கியா? எங்க இருக்க? அவர் கேட்க, இப்ப என்னால் ஏதும் சொல்ல முடியாதுக்கா. ஆனால் எல்லாத்தையும் முடிச்சி வைக்கிறீங்களா?
நீ சைன் பண்ணாம எப்படி எல்லாமே முடிக்க முடியும்?
அக்கா, என்ன பண்றது?
இன்னும் ஒரு மாதத்தில் நம்ம காலேஷ் பழைய மாணவ, மாணவியர் விழா நடக்கும். ஏதாவது ஒரு பர்பார்மன்சை போட்டு விட்டு வாங்கிட்டு போ. முடிக்கலாம் என்றார்.
ஒரு மாதம் ஆகுமா? என்ற ரசிகா சிந்தித்து விட்டு, ஓ.கே அக்கா வாரேன் என்றாள்.
உன்னோட க்யூட் லவ்வர் எப்படி இருக்கான்? அவர் கேட்க, அவனா என்று அகரன் இருக்கும் அறையை பார்த்து, அவன் நல்லா இருக்கான்.
என்னம்மா, அவனுக்கு நோ சொல்லீட்டியாமே? சோ சேடு என்றார்.
வாட்? உங்களுக்கு எப்படி தெரியும்? ரசிகா திகைத்து கேட்க, உன்னோட லவ்வர் பாய் தான் உன்னோட பிராஜெக்ட் பசங்களிடம் அவனோட நம்பரை கொடுத்திருக்கான்.
“அகரா” என்று சிணுங்கிய ரசிகா, அக்கா அவன் வேற ஏதாவது சொன்னானா? ரசிகா கேட்க, இல்லையே புதுசா யாரோயோ பிடிச்சிட்டு இவனை கழற்றி விட்டுட்டியா? என திவ்யா கேட்க, ரசிகா ஆதிரேயனை பார்த்து அமைதியாக நின்றாள்.
என்னடி? அவனுடன் தான் இருக்கிறாயோ?
அய்யோ, அப்படியெல்லாம் இல்லைக்கா. அக்கா அப்புறம் ஒரு கெல்ப். என்னோட கிளாஸ் பசங்க பிராஜெக்ட்டுக்கு கார்த்திக் சாரை உதவ சொல்லுங்களேன். ப்ளீஸ்க்கா..அக்கா..ரசிகா சத்தம் கொடுக்க,
எங்க கிட்ட கெல்ப் கேட்க மாட்டாயோ? கார்த்திக் சார் தான் கெல்ப் பண்ணனுமோ? என்று ஒருவர் கேட்க, ஆர்த்தி மேம், அப்படி இல்லை. நாங்க தொடங்கிய போது அவரும் உதவினார். அதனால் அவருக்கு பிராஜெக்ட் பற்றிய அனைத்தும் தெரியும். அதான்..
கிளாஸ் கூட நாங்க ஒரே கிளாஸ் தான எடுத்தோம். அதனால் பசங்க திங்கிங்கை அவரால் அனலைஸ் பண்ண முடியும். அதான்..
மேம், அவருக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகி இருந்ததே? ரசிகா கேட்க, கேன்சல் ஆகிடுச்சும்மா. இப்ப இருக்கும் பொண்ணுங்களுக்கு பிரபசர் பிடிக்கலையாம். வீட்லயும் லக்சர் எடுப்பாங்களாம். அதான் வேண்டாம்ன்னு சொன்னதா ரொம்ப வருத்தப்பட்டாரு என்றார்.
அப்படியா மேம் என்று அகரன் வெளியே வருவதை பார்த்து, டேய் லூசு பசங்ககிட்ட எதுக்குடா உன்னோட நம்பர் கொடுத்த? நீ என்ன எனக்கு கார்டியனா? ரசிகா கேட்க, அஃப் கோர்ஸ். நான் தான் உன்னோட கார்டியன். நலன் விரும்பி என்றான்.
ஹே, லவ்வர் பாய்யா? ஆர்த்தி மேம் கேட்க, எஸ் மேம் என்றாள்.
யார்கிட்ட பேசுற? என்று அகரன் கேட்க, பசங்ககிட்ட என்னோட நம்பரை கொடுத்துறாதடா என்று ரசிகா சொல்ல, அகரன் புன்னகைத்தான்.
ஏய் குடுத்தியா? யார்கிட்ட கொடுத்த?
சந்தீப் கிட்ட தான் கொடுத்தேன்.
அடப்பாவி, மத்த பசங்கன்னா பிரச்சனையே இல்லை. அவனிடம் எதுக்குடா கொடுத்த” என்று ரசிகா கோபமாக கேட்டாள்.
சும்மா ருச்சி என்றான்.
ஹப்பா, முடியலடா என்று ரசிகா அமர்ந்தாள்.
“லவ்வர் பாய்கிட்ட கொடு” என்று ஆர்த்தி மேம் சொல்ல, ரசிகா போனை அகரனிடம் நீட்டினாள். அவனுக்கு உதவியாக தமிழரசன் வந்திருந்தார்.
யாரு? அகரன் கேட்க, போனை கை காட்டினாள்.
இப்படி காட்டினா? நான் எப்படி பேசுறது? என்று அகரன் கேட்க, போனை ஸ்பீக்கரில் போட்டாள் ரசிகா.
யாரு? அகரன் கேட்க, ஹே லவ்வர் பாய். இட்ஸ் மீடா ஆர்த்தி என்றார்.
அட, ஆர்த்து மேம்..நீங்களா? மேம் நான் இப்ப சிங்கிள் தான். நாம டேட் பண்ணலாமா? என்று கேட்டுக் கொண்டே மெல்லினா அருகே அமர்ந்தான்.
சுயர்ப்பா. ஆனால் என்னோட ஹஸ்பன்டை என்ன பண்றது? அவர் கேட்க, நோ..பிராபிளம் மேம். நான் வாரேன். உங்க ஹஸ்பன்டிடம் பேசலாம் என்றான். எல்லாரும் அவனை ஆவென பார்த்தனர்.
அச்சோ, என்னோட பையன் கோவிச்சுப்பானே லவ்வர் பாய்.
என் பெயரை சொல்லுங்க இருவரும் ஆஃப் ஆகிடுவாங்க அகரன் சொல்ல,
“ஆமா இவரு பெரிய இவரு. பேச்ச பாரு?” மெல்லினா சொல்ல, ரசிகா அவளிடம் வந்து அமர்ந்து, இப்ப பேசுறாங்கல்ல இந்த மேம் லவ்வ நம்ம அகரன் தான் சேர்த்து வைத்தான். அவங்க ஹஸ்பண்டுக்கு அகரனை பிடிக்கும் தெரியுமா? இது போல் நிறைய லவ்வை சேர்த்து வச்சிருக்கான்.
ஓ..அதான் இவனோட லவ் போச்சா என்று மெல்லினா கேட்க, ஓய் பொண்ணே என்ன பேசுற? எங்க அகரனை பத்தி தெரியாம பேசாத. அப்புறம் எங்க காலேஜ்ல்ல நீ கால் வைக்க முடியாது என்றார்.
உங்க காலேஷூக்கு நான் எதுக்கு வரணும்? நான் ஒன்றும் உங்க ஊர் இல்லை என்றாள் மெல்லினா.
“மெல்லி, சும்மா இரும்மா” என்று தமிழரசன் சொல்ல, அவள் அமைதியானாள்.
அகரா, நீ வருத்தப்படாத. ரசிகா உன்னை ஏத்துக்க மாட்டான்னு நாங்க எத்தனை முறை சொன்னோம். சரி விடு..நீ நம்ம ரசிகாவோட சென்னைக்கு வா. நான் என்னோட ஸ்டூடண்ஸ்ஸை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.
மேம், மாமா வேலை உங்களுக்கு செட் ஆகாது. நானே பார்த்துக்கிறேன் என்று இந்தா ருச்சி, நீ பேசு என்றான்.
அவனுக்கு வேற யாரும் செட் ஆகிட்டாங்களோ? ஆர்த்தி மேம் கேட்க, இல்லையே மேம் என்று ரசிகா அகரனை பார்த்தாள். அவன் ஆதியை பார்த்தான்.
சரி மேம், மீட் பண்ணலாம். ஒரு மாதம் தான அப்புறம் நானும் வேறு இடம் தான் பார்க்கணும். திவ்யா அக்காவிடம் கொடுங்களேன் என்று அவரிடம் பேசி விட்டு போனை வைத்தாள் ரசிகா.
ரசி, ஒரு மாதத்திலேவா போகப் போற? கொஞ்சம் எங்களையும் யோசித்து பாறேன் மெல்லினா கெஞ்ச, இவள் கெஞ்சும் ரகமில்லையே? என்று அகரனும் மற்றவர்களும் அவனை பார்த்தனர்.
“நான் போய் தான் ஆகணும்” என்று ரசிகா சொல்லிக் கொண்டே ஆதியை பார்த்தாள்.
போறேன்னு சொல்றவங்ககிட்ட எதுக்கு கெஞ்சிக்கிட்டு இருக்க? என்று அவன் குழந்தைகளை நகர்த்தி விட்டு கோபமாக ஆதிரேயன் அறைக்கு சென்றான். ரசிகா கண்ணீருடன் அவனை பார்த்தாள். அகரன் ரசிகாவை சிந்தனையுடன் பார்த்தான்.
எல்லாரும் ரசிகாவை பார்த்துக் கொண்டே அவரவர் அறைக்கு சென்றனர்.
அகரா..வா, உன்னை அறையில் விட்டு என் வேலையை பார்க்கிறேன் என்று அகரனை ரசிகா அழைக்க, அவன் ஏதும் பேசாமல் எழ, அவன் கையை அவள் தோளில் போட்டு அழைத்து சென்றாள்.
உள்ளே சென்றதும் அகரனை படுக்க வைத்து விட்டு அவள் நகர, எதுக்கு ருச்சி பாஸ்ஸையும் கஷ்டப்படுத்தி நீயும் கஷ்டப்படுற? அகரன் கேட்க, கஷ்டமா? எனக்கா? இல்லையே என்றாள்.
உன்னை சிறுவயதிலிருந்து எனக்கு நல்லா தெரியும்.
ஆமா, “எங்களுக்கு உன்னுடைய ஒவ்வொரு அசைவும் தெரியும்” என்று திரிவேஷூம் உள்ளே வந்தான்.
சரிடா, என்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க? நான் ஒத்துக்கிறேன். நீங்க பேசுங்க. எனக்கு வேலை இருக்கு என்று ரசிகா சொல்ல, ஆதி சாரை உனக்கு பிடிச்சிருக்குல்ல மௌனி?
இல்லடா, எனக்கு எப்படி அவரை பிடிக்கும்?
“நடிக்காத ருச்சி” என்ற அகரன், “உன்னை நீயே தாழ்த்தி பார்க்காத” என்றான்.
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லைடா” என்று ரசிகா சொல்ல, அவளை மீறியும் கண்ணீர் வந்தது. திரிவேஷ் கையை கட்டிக் கொண்டு அவளை பார்த்தான்.
ரசி என்று லிது அழைக்க, கண்ணை துடைத்து விட்டு இருவரையும் பார்த்து, என்னால அவரை கல்யாணம் பண்ணிக்க முடியாது. நடைமுறையை யோசித்து பாருங்கடா. என்னால அவர் என்னன்ன பேச்சு வாங்கணும்? இதெல்லாம் தேவையா?
ஒரு மாதம் தான். பின் அவரை பார்க்காமல் இருந்தால் நான் மறந்து விடுவேன் என்று சொல்லி விட்டு, “யாரிடமும் காட்டிக்காதீங்க” என்று வெளியே சென்று லிதுவை தூக்கி அவளிடம் புன்னகையுடன் பேசிக் கொண்டே சென்றாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சற்று நேரத்தில் திரிவேஷ் கிளம்பி விட்டான்.
இரவு உணவில் அனைவரும் கூடியிருக்க ஆதிரேயன் வரவில்லை. எல்லாருக்கும் உணவை பரிமாறிக் கொண்டு அவ்வப்போது ஆதி அறையையே பார்த்தாள் ரசிகா.
மாப்பிள்ளைக்கு பசிக்கலையாம்மா. அதான் அவர் வரலை.
அப்பா, பாலாவது பருகலாமே? ரசிகா கேட்க, அவரை நானும் பிரபாவும் அழைத்தோம். தொந்தரவு செய்யாதீங்கன்னு கத்திட்டார்ம்மா. நாளை பார்த்துக்கலாம்மா என்று அவர் சொல்ல, அவள் மீண்டும் அவனறையை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை கவனித்துக் கொண்டே எல்லாரும் சாப்பிட்டனர்.
உணவு முடித்து அனைவரும் கிளம்பினர். அவர் சாப்பிடலைன்னா இருக்கட்டும். எனக்கென்ன? என்று புலம்பிக் கொண்டே ரசிகா வேலையை கவனிக்க, எதுக்கும்மா இப்படி புலம்புற? கேட்டுக் கொண்டே சீதா வந்தார்.
அம்மா, பாருங்க. சார் ரொம்ப அடம் பண்றார். சாப்பிட கூட இல்லை என்றாள்.
நீ அறைக்கு கொண்டு போய் உணவை கொடுக்க வேண்டியது தானே?
முடியாதும்மா. அவர் பிடிவாதம் பண்ணா பண்ணிக்கிட்டே இருக்கட்டும்.
சரி, அப்ப புலம்பாம வேலையை பார்க்க வேண்டியது தான? அவர் கேட்க, ம்ம்..என்று வேலையை முடித்து, நான் பசங்களை தூங்க வைக்க போறேன்ம்மா. நீங்களும் ஓய்வெடுங்க என்று அவள் சொல்ல, புன்னகையுடன் சீதா கிளம்பினார்.
எப்பொழுதும் போல் கதை சொல்லி குழந்தைகளையும் மெல்லினாவையும் தூங்க வைத்து விட்டு அறைக்கு சென்றாள்.
என்ன இப்படி கசகசன்னு இருக்கு? என்று ரசிகா குளித்து வந்து அவள் ஆடையை எடுக்க, எல்லாம் துவைக்காமல் வைத்திருந்தாள். புடவையா? இரவிலா? என்று யோசனையுடன் பிங்கும் மஞ்சலும் கலந்த டிசைனர் புடவையை உடுத்தினாள்.
“சாதாரண புடவையாவது இருக்கா பாரு? எல்லாம் என் நேரம்” என்று மீண்டும் புலம்பிக் கொண்டே மாற்றினாள். பின் கண்ணாடி முன் நின்று அவளை பார்த்தவளுக்கு ஆதி நினைவாகவே இருந்தது. “இல்ல, அவர் என்னமும் செய்யட்டும்” என்று படுத்தாள்.
ரசிகா சென்றதும் மெல்லினா மெதுவாக அறையை விட்டு வெளியே வந்தாள். தமிழரசன் வெளியே செல்வதை பார்த்து, “அச்சோ போறாரே?” என்று வேகமாக கீழே இறங்கினாள். ஆனால் அவர் அதற்குள் சென்று விட்டார்.
ரசிகா, ஆதியை சேர்த்து வைக்க, அகரனிடம் இவர் மூலமாக உதவி கேட்க நினைத்தாள். தனியா உள்ளே போனால் அறிவுரை என்ற பெயரில் வறுத்தெடுப்பானே? என்று சிந்தனையுடன் அவனறை கதவை தட்ட, அவனும் தமிழரசனுக்கு தெரியாமல் தனியா நடக்க முயன்று கொண்டிருந்தான் ஆதிக்காக.
கதவு தட்டும் சத்தம் கேட்டு வந்து விட்டாரோ? என்று அவரிடம் நடக்க முடியாதது போல் நடிக்கணும் என்று மனதில் நினைத்துக் கொண்டு கதவை திறந்து, “சார் என்னால முடியல. எதுக்கு திரும்ப வந்தீங்க?” என்று தமிழரசன் என நினைத்து மெல்லினா தோளில் கையை போட்டான். பின் அவளை பார்த்து நீயா? என்று பட்டென கையை எடுத்து பேலன்ஸ் தவறி அவன் கீழே விழ, ஏய் விழுந்துறாத. அடி பலமா படப்போகுது என்று மெல்லினா அவன் பனியனை பிடிக்க இருவரும் விழுந்தனர்.
அகரனுக்கு அடி அதிகமா பட்டுருமே என்ற பயத்தில் விழும் போது அவனை நகர்த்த மெல்லினா தான் தரையில் விழுந்தாள். அவள் மீது அகரன் விழுந்து அவளை பார்த்தான்.
“எழுந்திருடா தடி மாடு” என்றாள்.
அகரன் நகர்ந்து, “நானா தடிமாடு?”
அப்புறம் இந்த கனம் கனத்தால் நான் எப்படி தாங்குவேன்? எரும எரும என்றாள்.
எருமையா? என்ன நீ இப்படி பேசுற?
அப்புறம் எப்படி பேசுறது? முதல்ல வா. வந்த வேலையை பார்க்கலாம் என்றாள்.
ஆமா, இந்த நேரத்தில் என் அறைக்கு எதுக்கு வந்த?
இவன் பெரிய இவன். மூஞ்சிய பாரு என்றாள் மெல்லினா.
நீ வெளிய போ என்று அகரன் சொல்ல, இது எங்க வீடு. என்னை வெளிய போக சொல்ற?
ஆமா, இது என்ன டிரைஸ். போ வெளிய என்றான். சார்ட் ஸ்லீவ்லஸ் கவுன் அணிந்திருந்தாள். வெள்ளையும் பிங்கும் கலந்து இருந்தது.
இந்த ஆடைக்கு என்ன? நான் க்யூட்டா இல்ல? என்று அவள் சுற்றி அழகாக போஸ் கொடுத்து கேட்டாள்.
“க்யூட்டா..ஓவர் க்யூட்டா இருக்கு” என மனதில் எண்ணிய அகரன். நீ போ. என்ன பேசணும்ன்னாலும் காலையில பேசிக்கலாம் என்றான்.
காலையில யாராவது டிஸ்டர்ப் பண்ணுவாங்க. இப்ப தான் சரியா இருக்கும் என்று அவள் தாழ்ப்பாள் போட்டாள்.
ஏய், தாழ்ப்பாள் எதுக்கு போட்ட?
நாம பேசுவதை யாராவது கேட்டு விட்டால்? என்று அவள் சொல்ல, அகரன் எழுந்து மெதுவாக நடக்க, ஏய் தனியா நடக்குற? என்று கேட்டாள். அவன் தாழ்ப்பாளை எடுத்து விட்டான். விசயத்தை சொல்லீட்டு கிளம்பு என்றான்.
அவள் ரசிகா ஆதி பற்றி பேச, வேற யாருக்காக வேண்டுமானாலும் உதவுகிறேன். ஆனால் ருச்சி விசயத்தில் முடியாது என்றான் அகரன்.
ஏன்? ரசியை உன்னால் மறந்துட்டு “மூவ் ஆன்” ஆக முடியாதா? அவள் கேட்க, அதுக்கில்லை. அவள் ஒத்துக்கமாட்டாள்.
ஏன்? மெல்லினா கேட்க, என்னால முடியாதுன்னா விடு. காரணமெல்லாம் சொல்ல முடியாது என்றான் அகரன்.
அவனை நெருங்கி வந்த மெல்லினா, “உனக்கு அவங்கள பார்த்தா பொறாமையா இருக்குல்ல?” என கேட்டாள்.
இல்ல. ருச்சி இப்ப எனக்கு தோழி மட்டும் தான். இதுக்கு மேல் அவள மேல் காதல் வராது. அதே போல் அவள் ஆதி பாஸ்ஸை காதலிக்கவில்லை என்றான்.
மெல்லினா, ரசிகா, பாஸ் விசயத்தில் நாம தலையிடக்கூடாது. அவள் காதலை ஒத்துக்க மாட்டேங்கிறா. இரு பக்கமும் உறுதியா காதலித்தால் தான் நான் உதவுவேன் என்றான்.
ஷப்பா..முடியல. காதலிக்கிறாங்கன்னா சேர்த்து வைக்க வேண்டியது தான? மெல்லினா கேட்க, அது சாதாரணமில்லை. வாழ்க்கை எப்போதும் காதலுடன் மட்டும் நகராது. மோதலும் இருக்கும். அதை கடந்து வரணும்ன்னா நிறைய நினைவுகளும் இருவரின் காதல் பார்வைகளும் வேண்டும். இல்லை வாழ்க்கை மொத்தமும் அழிந்து விடும்.
வாவ், சூப்பரா பேசுறப்பா. “லவ் பி.ஹச்.டி” பண்ணி இருக்கியோ? மெல்லினா கிண்டலாக கேட்க, யாரும் பார்க்கும் முன் போயிடு. நீயும் உன் ஆடையும் என்றான்.
இதுக்கென்னடா?
நல்லா தான் இருக்கு. ஆனால் இதை நீ கட்டிக்கப் போறவன் முன் தான் போட்டுக்காட்டணும். இப்படி எல்லார் முன்னும் திரியக் கூடாது. இதனால் தான் பசங்க எல்லாரும் தவறான எண்ணத்தில் பழகுறாங்க என்றான்.
ஒண்ணுமே புரியல. அண்ணாவையும் ரசியையும் சேர்த்து வைக்க உதவ மாட்டேல்ல? அவள் கேட்க, “முடியாது. இதை நான் ஏத்துக்க மாட்டேன்” அகரன் சொல்லிக் கொண்டிருக்க, இருவரையும் பார்த்துக் கொண்டே தமிழரசன் உள்ளே வந்தார்.
என்னம்மா பண்ற இந்த நேரத்தில்? தமிழரசன் கேட்க, சார் தண்ணீர் இல்லை. எடுக்க போனேன். முடியாமல் சோபாவில் உட்கார்ந்து விட்டேன். அதான் மெல்லினா உதவினா என்றான்.
அங்கிள் அவள் அழைக்க, அவள் கையை பிடித்த அகரன் முறைத்தான். அவள் அமைதியானாள். அகரன் மெல்லினா கையை பிடித்ததை உறுத்து பார்த்தார் தமிழரசன். அவன் அவள் கையை விட்டு, உதவிக்கு நன்றி. நீ கிளம்பு என்று சொல்லி விட்டு படுத்துக் கொண்டான்.
இவர்கள் வேறு ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். அகரன் பொய் சொல்கிறான் என்று தெளிவாக புரிந்து கொண்டார். அகரன் மெல்லினாவை மாட்டி விடக் கூடாதுன்னு நினைக்கிறான் என்று நினைத்தவர் அவனை கவனிக்க ஆரம்பித்தார்.
அவன் படுத்தாலும் தூங்க முடியவில்லை. தமிழரசன் தூங்கி விட்டார் என்று எண்ணிய அகரன் எழுந்து மெதுவாக நடந்து அவனது சட்டையை எடுத்தான். அதில் இருந்த மெல்லினாவின் பிரேஸ்லெட்டை புன்னகையுடன் பார்த்தான். அவருக்கு அதை பார்த்ததும் மெல்லினாவுடையது என தெளிவாக தெரிந்தது. ஓ..இது வேறையா? என்று புன்னகைத்தார் தமிழரசன்.
ரசிகா புரண்டு புரண்டு படுத்தும் தூங்க முடியாமல் கீழே வந்தாள். ஆதி ஏதோ பார்சலுடன் அறைக்கு சென்றான். அதை பார்த்தவள், இவருக்கு எவ்வளவு தைரியம்? நாம் செய்ததை சாப்பிடாமல் வெளியே சாப்பிட வாங்கி இருக்கார் என்று வேகமாக சமையலறைக்கு சென்றாள்.
அவனுக்கென வைத்திருந்த உணவுகளை சூடேற்றினாள். ஓர் தட்டை எடுத்து அதில் அனைத்தையும் எடுத்து ஆதிரேயன் அறைக்கு வந்தாள். அவன் அறைக்கதவு திறந்து இருந்தது.
கதவை தள்ளிக் கொண்டு கோபமாக சென்று சென்று பதட்டமானாள்.
சார், என்ன பண்றீங்க? என்று மது அருந்திக் கொண்டிருந்த ஆதிரேயன் கையிலிருந்த மது பாட்டிலை பிடித்து இழுத்தாள். அவன் நன்றாக குடித்து இருந்தான். போதை தலைக்கேற உலற ஆரம்பித்தான்.
ரசி, என்னை விட்டு போகப் போறாளாம் என்று அவன் புலம்ப, அவன் கன்னத்தை தட்டினாள். யாருடா என்னை அடிக்கிறது?அவன் கேட்க,
“இரிட்டேட்டிங் இடியட்” என்று ஆதியை திட்டிக் கொண்டே சாப்பாட்டை எடுத்து வந்து அவனருகே அமர்ந்தாள். அவன் கையிலிருந்ததை பிடுங்கி வைத்து விட்டு, ஆதிக்கு ரசிகா உணவை ஊட்டினாள்.
ஆதி வாமிட் செய்வதை போல் செய்ய, அவனை இழுத்து வந்து குளியலறையில் விட்டாள். அவன் வாமிட் செய்து சோர்வாக அமர்ந்திருந்தான்.
என்ன பண்றீங்க? என்று அவனை திட்டிக் கொண்டு அனைத்தையும் சுத்தம் செய்து அவனை எழ வைத்து அவனை அழைத்து வந்து படுக்கையில் போட்டாள்.
அவன் அவளையும் பிடித்து இழுத்து அவன் மேல் போட்டு புலம்பத் தொடங்கினான்.
அவளது புடவை, அவனுக்கும் உதவும் போது அவளது துப்பட்டாவை வைத்து கட்டி விட்ட அனைத்து அவனது படுக்கையில் இருந்தது. அவன் மேலிருந்த போர்வையின் கீழே எல்லாத்தையும் விரித்து வைத்திருந்தான். அவன் அதை சொல்ல அவளும் அவன் படுக்கையை விலக்கி பார்த்து கண்ணீர் விட்டாள்.
ரசிக்கு என்னை பிடிக்கலையா? நான் ரசியை மட்டும் தான் காதலிப்பேன். எனக்கு வேற பொண்ணு வேண்டாம் என்று மழலை போல் அவன் பேச, அவள் அழுது கொண்டிருந்தாள். அவன் மேலும் புலம்ப, அவன் வாயில் கை வைத்தாள் ரசிகா.
ரசிக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் ஆதி சார். ஆனால் உங்களை அவளால் கல்யாணம் பண்ண முடியாது. அவளை சிறுவயதிலிருந்தே நிறத்தை வைத்து எல்லாரும் பேசி காயப்படுத்துவாங்க. தொடக்கத்தில் அவள் ரொம்ப அழுவா. போக போக பழகிடுச்சு. ஆனால் இப்ப ஏன் தான் கருப்பாக பிறந்தோம்? என்று அவள் ரொம்ப அழுறா. அதனால் தான் அவளால் ஆதி சாரை கல்யாணம் பண்ணிக்க முடியலை. அவளால் ஆதி சார் மரியாதை போயிடும். அவரையும் எல்லாரும் கேலி பண்ணுவாங்க. அவளால் இதை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாதுன்னு அவள் காதலை ஆதி சாரிடமிருந்து மறைச்சிடா.
இதுவரை தப்பே செய்யாத ரசிகா, இன்று தெரிந்தே தப்பு செய்யப் போறா? அவளுக்கு ஆதிசாரை ரொம்ப பிடிக்கும். அதே போல் ஒருவனிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள ஆதி சாரை பயன்படுத்திக் கொள்ளப் போறா?
அவளோட குழந்தை பத்தோடு பதினொன்றாக இருக்க அவளுக்கு விருப்பமில்லை. காதலில் முளைத்த விதையாக தன் குழந்தையை அவள் பெற்றெடுக்க நினைக்கிறா? என்று ரசிகா சொல்லிக் கொண்டே ஆதிரேயனை நெருங்கி படுத்த ரசிகா, அவனோட கை கோர்த்தாள். பின் இதழ் கோர்த்தாள். ஆதிரேயனும் இசைந்து கொடுக்க, இதழணைப்பு உடலணைப்பானது. இருவரும் ஒருவராகினர். போதையில் ஆதி எழவேயில்லை. நீண்ட நேரத்திற்கு பின் ரசிகாவும் அவனுடனே தூங்கி விட்டாள். இடையில் விழித்த ரசிகா அவளது புடவையை எடுத்து மேலே சுற்றிக் கொண்டு ஆதியை பார்த்தாள். அவனை நெருங்கி அவனது நெற்றியில் முத்தமிட்டு அழுது கொண்டே அவளறைக்கு சென்றாள்.
காலையில் ஆதிரேயன் அறைக்கு தேனீர் எடுத்து வந்தாள் ரசிகா. அவன் படுக்கையில் யோசனையுடன் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
“சார்” என்று ரசிகா அழைக்க, அவளை பார்த்தான். அவன் படுக்கையில் இருந்த அதே நறுமணம் அவளிடம் வந்தது.
ரசி, நீ என்ன சோப் பயன்படுத்துவ? ஆதிரேயன் கேட்டான்.
எதுக்கு கேக்குறீங்க?
சொல்லு? என்றான்.
அவளுக்கு இவன் ஏன் கேட்கிறான்? என்று புரியவில்லை. அமைதியாக இருந்தாள்.
ஆதிரேயன் வெற்று மார்புடன் சார்ட்ஸ் அணிந்து எழுந்தான். அவனை அவனே ஒரு முறை பார்த்து விட்டு ரசிகாவிடம் வந்தான். அவள் அவனை பார்த்து தலைகவிழ்ந்து நின்றாள்.
ரசி என்று அவளை நிமிர்த்து அவளது கழுத்தருகே நெருங்கி முகர்ந்தான்.
சார், என்ன பண்றீங்க? என்று விரைந்து நகர்ந்தாள். தேனீர் அவள் மீது கொட்ட, அவளுக்கு உதவ நினைத்து கையை இடையே விட்டான். சூடான தேனீர் ஆதியின் கையில் கொட்டியது.
என்ன பண்ணீட்டீங்க? என்று ரசிகா கண்ணீருடன் அவன் கையை பிடித்து டேப்பை திறந்து நீரில் அவன் கையை வைத்து ஊதினாள். ஆதி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
வலிக்கலையா சார்? ரசிகா கேட்க, ம்ம்..ரொம்ப வலிக்குது என்று ஆதிரேயன் அவளது கையை இழுத்து அவன் மார்பில் வைத்தான். அவனை பார்த்துக் கொண்டே கண்ணீருடன் அவள் கையை எடுத்தாள். அவள் கண்ணீரை தொட்ட அவன், எதுக்கு இந்த கண்ணீர் ரசி? என கேட்டான்.
“ஒன்றுமில்லை சார்” என்று அவள் நகர, நேற்று என் படுக்கையில் என்ன செய்த? இதே சோப்பின் மணம் என் படுக்கையில் வருதே?
“உங்களை சாப்பிட வைக்க வந்தேன் சார்” என்று அங்கிருந்த உணவு தட்டை பார்த்து, அவ்வறையை பார்த்தாள். அவளுக்கு நேற்று அவனுடன் இருந்த எண்ணம் அவள் கண்ணில் வந்தது. அமைதியாக அவனது படுக்கையை பார்த்தாள்.
நான் உன்னிடம் தான் கேட்கிறேன்? ஆதிரேயன் அவள் கையை பிடித்தான்.
நேற்று உணவு எடுத்து வந்த போது நீங்க மது அருந்திக் கொண்டிருந்தீங்க? அதனால படுக்க வைத்து விட்டு சென்றேன்.
அவ்வளவு தானா? அவன் கேட்க, அவள் திடுக்கிட்டு அவனை பார்த்தாள்.
இல்ல, உணவுத்தட்டு காலியா இருக்கே! அதான் கேட்டேன்.
வெறும் வயித்துல எப்படி தூங்க விடுறதுன்னு..என்று தயங்கினாள்.
ம்ம்..சொல்லு? என்றான் புன்னகையுடன்.
அதனால் ஊட்டி விட்டேன் சார். சாரி சார் என்று கண்கலங்கினாள்.
ஆதிரேயன் அவளை அணைத்தான். அவள் வருத்தம் பயமாக மாறியது. இவரை நான் பயன்படுத்திக் கொண்டது தெரிந்தால் என்னை வெறுத்து விடுவாரே? என்று அவள் அப்படியே நின்றாள்.
என்னுடைய சிறுவயதில் அம்மா ஊட்டி விட்டது. இத்தனை வருடங்களுக்கு பின் நீ எனக்கு ஊட்டி விட்டுருக்க? என்று அவன் சொல்லிக் கொண்டே அவளை பார்த்தான். அவள் சுயம் வந்து அவனை விட்டு விலகினாள்.
உங்களுக்கு ரொம்ப வலிக்குதா? என்று அவன் கையை பார்த்தாள்.
“வலி இருக்கு ரசி” என்றான்.
அவள் கண்ணீருடன் “சாரி சார்” என்றாள்.
எதற்கு அழுற? “இங்க வா இதை எடு” என்று மருந்தை காட்ட அவள் எடுத்து ஆதிக்கு போட்டு விட்டாள்.
நீ என்ன சோப் பயன்படுத்துற? சொல்ல மாட்டாயா? ஆதி கேட்க, சார் உங்களை படுக்க வைக்கும் போது சோப்பின் வாசனை உங்களது படுக்கையில் பட்டிருக்கும். நான் இப்பவே இந்த ஸ்மெல் இல்லாமல் செய்கிறேன் என்றாள் ரசிகா.
ரசி, நான் இது பிடிக்கலைன்னு சொல்லலை. பிடித்ததால் தான் கேட்டேன் என்றான்.
சார், ரொம்ப நேரமாகுது. ஏற்கனவே நானும் இன்று நேரம் கழித்து தான் எழுந்தேன். சமையல் வேலை முடிக்கணும். பசங்களை பள்ளிக்கு தயாராக்கணும். நான் வாரேன் என்று அவள் செல்ல, புன்னகையுடன் அவளை பார்த்துக் கொண்டே நின்றான்.
பின் அவன் தயாராகி கீழே வந்தான். லிது, நிது, மெல்லினா தயாராக இருந்தனர். ரசிகாவின் சமையல் வேலை முடியவில்லை. அவன் வந்த பின்னும் பத்து நிமிடம் கழித்து தான் சாப்பிட எடுத்து வைத்தாள்.
அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். ரசிம்மா, இன்று என்னாச்சும்மா? எப்பொழுதும் தயாரா வச்சிருப்ப? இன்று நேரமாகிடுச்சே.
அப்பா, நேற்று இரவு தூங்க நேரமாக்கிட்டேன். அதான் என்று உணவை எடுத்து வைத்துக் கொண்டே சொன்னாள்.
நீ கவலைப்படாதம்மா. உன்னோட அண்ணன் பிள்ளைகள இங்கே அழைத்து பார்த்துக்கலாமா? பிரபாகரன் கேட்டார்.
வேண்டாம் சார். இந்த வருட படிப்பிற்காக பணம் முழுவதும் மூவருக்கும் கட்டியாச்சு. இந்த வருசத்தை முடிக்கட்டும் என்றாள்.
அந்த பையன் படிக்கலைன்னு சொன்னான் தமிழரசன் கேட்க, பாட்டி அவனிடம் பேசி அனுப்பிடுவாங்கப்பா. பிரச்சனை இல்லை. விபு கொஞ்சம் பிடிவாதமும் கோபக்காரனும் கூட தான். ஆனால் சொல்ற விதத்தில் சொன்னால் அவன் புரிஞ்சுப்பான்.
ஆமா..ஆமா..அத்தையின் பாசக்கார மகன். அவன் வந்தால் நம்மள ருச்சி பக்கம் கூட விட மாட்டான் என்று அகரன் சொல்ல, என்னம்மா அவன் சொல்றது உண்மையா? தமிழரசன் கேட்டார்.
ரசிகா புன்னகையுடன் எல்லாரையும் பார்த்து, உண்மை தான். பழக்கிட்டா புரிந்து கொள்வான். ஆனால் அவன் எப்படி வருவான்? அவன் வருவதற்குள் நான் தான் இங்கிருந்து கிளம்பி விடுவேனே? என்றாள்.
எல்லாரும் சாப்பிடுவதை நிறுத்தி அவளை பார்த்தனர்.
ரசி, “இங்க வா” என்று ஆதிரேயன் அழைக்க யோசனையுடன் ரசிகா அவனருகே சென்றாள்.
போச்சு என்ன சொல்ல போகிறானோ? என்று பதட்டமாக இருவரையும் பார்த்தனர்.
என்ன சார் வேணும்? அவளும் அவனை பார்த்தாள். அவள் இடுப்பில் சொருகி இருந்த புடவையை உருவி, அவளது புடவை முந்தானையை எடுத்து கையையும் வாயையும் துடைத்து விட்டு ஆதிரேயன் எழுந்தான். ரசிகா திகைத்து நின்றாள். எல்லாரும் அவனை ஆவென பார்த்தனர்.
சார், நானா? உங்களுக்கு அசிஸ்டென்ட்டா? வேணாம். நான் வர மாட்டேன் என்றாள் ரசிகா.
அகரா, வரும் வரை தான். சும்மா வா. இன்று சும்மா மட்டும் என்னுடன் இரு. நாளை அகரன் எல்லாத்தையும் உனக்கு சொல்லிடுவான் என்றான் ஆதி.
சரி சொல்லிடுவான்னு அகரன் பார்த்தான்.
நோ..சார், என்னால முடியாது. நான் பசங்களை பார்க்கணும் என்றாள்.
அப்படியா? எத்தனை நாள்ம்மா பார்த்துப்ப? எப்படியும் எங்களை விட்டு போறதுன்னு முடிவு பண்ணிட்டு. அக்கறையா இருக்காங்களாம்? என்று ஆதிரேயன் கோபமானான்.
சார், அதுக்காக உங்க வீட்லயே இருக்க முடியுமா? ரசிகா கேட்டாள்.
ஏன்? இருந்தால் தான் என்ன? ஆதிரேயன் கேட்க, நான் இங்கே இருந்தால் லிது, நிதுவுக்கும் அம்மாவா எந்த பொண்ணு உங்களை கல்யாணம் பண்ணிப்பா? ரசிகா கேட்க,
நீ இல்லையா? நீ என்னை கல்யாணம் பண்ணிக்கலாம்ல்ல? நம்ம லிது, நிதுவை பார்த்துக்கலாமே? இல்லை என் பசங்களுக்கு அம்மாவாக உனக்கு விருப்பமில்லையா? ஆதிரேயன் கேட்டான்.
என்ன பேசுறீங்க? எனக்கு உங்க வீட்ல இருக்க தகுதி இல்லை என்று அவள் செல்ல, அவள் கையை பிடித்த ஆதிரேயன், உன்னோட தகுதிய யார் இங்க கேட்டா? எனக்கு பொண்டாட்டியாகவும், பிள்ளைகளுக்கு அம்மாவும் தகுதி உனக்கு இருக்கு என்றான் ஆதிரேயன்.
இது மட்டும் போதாது சார். இருக்கணும் உங்களோட உங்க வீட்ல வாழ எனக்கு தகுதி இருந்திருக்கணும். ஆனால் இல்லை. என்னை விடுங்களேன் என்று அழுது கொண்டே ரசிகா உள்ளே சென்றாள்.
அப்பா, ரசி எங்களுக்கு அம்மாவா இருப்பாலா? என்று லிது கேட்க, அவ தான் முடியாதுன்னு சொல்றாலேம்மா என்றான் ஆதிரேயன்.
அம்மாவை நாங்க பார்த்ததேயில்லை. ஆனால் ரசி அம்மாவா வந்தா? அம்மா இல்லைன்னு யாரும் எங்களை கிண்டல் செய்ய மாட்டாங்கல்ல? என்று லிது கேட்டாள்.
கண்டிப்பா யாரும் ஏதும் சொல்ல மாட்டாங்க. ஆனால் அவள் ஒத்துக்க மாட்டா என்றான் அகரன்.
அங்கிள், எதுக்கு? அவளுக்கு எங்களை பிடிக்காதா? நிது அழுவது போல் அகரனிடம் வந்து கேட்டாள்.
உங்களை யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா? ருச்சிக்கு நீங்கன்னா ரொம்ப பிடிக்கும். அவள் எப்பொழுதுமே இந்த உலகத்துக்கும் மத்த மனுசங்களுக்கும் பயப்படுவா? அவள் பயத்தை போக்கினால் அவள் உங்களுக்கு அம்மாவாகலாம் என்று ஆதியை பார்த்து,
அவளை நானும் த்ரீயும் கூட மாற்ற முயன்றோம். ஆனால் எங்களால் முடியல. உங்களால முடியதான்னு பாருங்க. ஆனால் இந்த ஒரு மாதத்தில் நடக்காத காரியம். அவள் இங்கிருந்து சென்றாலும் முயன்று பாருங்க பாஸ்.
எந்த அளவிற்கு மற்றவர் பேச்சுக்கு பயப்படுகிறாளோ? அதே அளவு பிடித்தவர்களுக்காக எதையும் செய்வாள். அவளை விடாமல் மட்டும் இருங்க. உங்க வழிக்கு வருவான்னு எனக்கு தோணுது என்று அகரன் நேரடியாக கூறினான்.
அகரா, உனக்கு அவளை? ஆதி அகரனை பார்க்க, சார் அவளிடமிருந்து “மூவ் ஆன்” ஆகிட்டேன். எனக்கு பிரச்சனையில்லை. அவள் மனதளவில் சந்தோசமாக இருந்து நான் பார்த்ததில்லை. ஆனால் இங்கே..இருக்கிற மாதிரி தெரியுது. நானும் உங்கள் பக்கம் தான். உங்களுக்கு உதவ தயாரா இருக்கேன் என்றான்.
“தேங்க்ஸ் அகரா” என்று ஆதி அவனை அணைக்க வர, தமிழரசன் இடையே வந்தார். அவனுக்கு இன்னும் சரியாகலை மாப்பிள்ள என்றார். ஆதி ரசிகா அறையை பார்க்க, மெல்லினா போ..ரசியை அழைத்து வா..பள்ளிக்கு நேரமாகுதுல்ல அகரன் சொல்ல, அவனிடம் வந்த மெல்லினா “ரொம்ப தேங்க்ஸ்டா” என்றாள்.
“முதல்ல போ. நேரமாகுது” என்று அகரன் சொல்ல, தமிழரசன் இடையே வந்து, இருவரும் என்ன ரகசியம் பேசுறீங்க? எனக் கேட்டார்.
ரகசியமா? அகரன் கேட்க, ஆமா..சொல்லுங்க என்றார்.
அங்கிள் நேரமாகுது என்று மெல்லினா ரசிகாவை அழைத்து வர, ஆதி பசங்களிடம் அம்மா என்ற வார்த்தையை ரசியிடம் சில நாட்கள் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லி இருந்தான். ஐவரும் பள்ளிக்கு சென்றனர்.
ஆதிரேயனுக்கு போன் செய்த பிரபாகரன், ஆதி அசிடென்ட்டுக்கு என்ன செய்யப் போற? அவர் கேட்க, அப்பா ஆளா இல்லை. நான் பார்த்துக்கிறேன் என்றான். அவர் போனை வைத்து விட பள்ளியில் சுரேகாவை பார்த்து பேசி விட்டு கிளம்ப, சார் நானா போய்க்கிறேன் என்றாள் ரசிகா.
கார்ல ஏறு. எனக்கு நேரமாகுது என்றான் ஆதி. அவளும் பேசாமல் ஏற, இருவரும் அமைதியாகவே வந்தனர். அவளை பார்த்துக் கொண்டே காரை செலுத்திய ஆதி, சட்டென காரை நிறுத்தி ரசி என்று அழைத்துக் கொண்டே அவள் கை மீது கை வைத்தான்.
சார் என்று அவள் அவனை பார்க்க, ஆதி ரசிகா கன்னத்தில் முத்தமிட்டு மீண்டும் காரை செலுத்தினான். அவளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தாலும் வெளியே அவனிடம் காட்டவா முடியும்? அமைதியாக வந்தாள். வீட்டிற்கு வந்ததும் காரிலிருந்து இறங்கி ஓடினாள். ஆதி புன்னகையுடன் காரை செலுத்தினான். அவளுக்கும் தன்னை பிடித்து உள்ளது என்றும் அவளுக்கு தன்னை திருமணம் செய்ய விருப்பமுள்ளது என மகிழ்ந்தான் ஆதிரேயன்.