ரசிகா பள்ளியிலிருந்து குழந்தைகளையும் மெல்லினாவையும் அழைத்து வந்தாள். அகரன் ஆபிஸ் சம்பந்தப்பட்ட ஆட்களின் வரிசையை பார்த்துக் கொண்டிருந்தான்.
புத்தகப்பையை தூக்கிப் போட்டு மெல்லினா அவனருகே வந்து அமர்ந்து, என்ன செய்ற? என்று கேட்டாள். அவன் பதிலளிக்காமல் போனை எடுத்து, யாரிடமோ பேசினான்.
இவர்கள் மாட்டிய காட்டில் ஏதாவது சிசிடிவி இருக்கா? என்று பார்க்க சொன்னான். குட்டீஸூம் அவனிடம் வந்து அமர்ந்தனர்.
நான் கேட்டதுக்கு பதில் சொல்ல மாட்டாயா? என மெல்லினா அகரனது போனை பிடுங்கினாள்.
மெல்லி, போனை கொடு. முக்கியமான விசயம் பேசும் போது இப்படி தான் தொந்தரவு செய்வாயா? என போனை பிடுங்கினான்.
நான் உனக்கு தொந்தரவா இருக்கேனா? என கோபமாக அவனிடம் கேட்டுக் கொண்டே அகரனை முறைத்து நகர்ந்து அமர்ந்தாள்.
சார், அங்க டென்ட் கூட இருந்தது என அவர்கள் கார் இருந்த இடம் முதல் ஆதி ரசிகா தங்கிய டென்ட் வரை இருந்த பாதையை சொல்லி விட்டு, ஃபுட் பிரிண்ட் எல்லாத்தையும் எடுத்து பாருங்க எங்களுடையது தவிர வேற இருந்தால் கண்டிப்பாக என் எண்ணம் சரியாக இருக்கும். சீக்கிரம் பாருங்க சார். இரு மணி நேரத்தில் இருட்டி விடும். ஸ்பாட்டுக்கு போயிட்டீங்கள சார்? எனக் கேட்டான்.
அந்த பக்கம் “ஆம்” என்று சொல்ல,ஏதும் வித்தியாசமாக தெரிந்தாலும் பாருங்க என்று சொல்லி விட்டு அகரன் போனை வைத்தான்.
அகரா, நம்ம மாட்டிய காட்டை பற்றி தான பேசுன? மெல்லினா கேட்க, ஆமா என்று அவன் சொல்ல, ரசிகா எல்லாருக்கும் தேனீர் எடுத்து வந்து கொடுத்தாள்.
எதுக்கு அந்த காட்டை பற்றி விசாரிக்கிற? மெல்லினா கேட்க, ரசிகாவும் அவனை பார்த்தாள்.
ருச்சி, அன்று நான் சமாளிக்க சொன்ன விசயம் உண்மை போல் தெரியுது? என்றான் அகரன்.
அவளுக்கு தான் தெரியாதே?
என்ன? என்று அவள் கேட்க, நம்மை விபத்திற்கு உள்ளாக்கியவர்கள் பாஸை தான் கொல்ல வந்துருப்பாங்கன்னு தோணுது. ஆனால் உன்னை பார்த்து சென்றிருப்பார்கள் என்று எனக்கு தோணுது என்றான்.
ரசி, நீ பிரின்சஸா? அதான் உன்னை பார்த்து அண்ணாவை ஏதும் செய்யாமல் விட்டு போயிட்டானுகளோ? கேலியாக மெல்லினா கேட்க, அகரன் அவளை முறைத்தான்.
என்னை பார்த்து எதுக்குடா அவரை விடணும்?
அன்று இருவரும் ஒன்றாக தூங்குனீங்க? அதை வைத்து கிளப்பி விட நினைக்கலாம் அகரன் சொல்ல, அந்த குளிர், மழையில் எவன் அங்க இருப்பான்? ரசிகா கேட்க, எவனும் இருக்க மாட்டான். பின் சைஸ் கேமிராக்கள் எல்லாம் மார்கெட்டில் நிறைய வந்திருக்கு. அதை பயன்படுத்தி இருக்கலாமே?
அந்த மழையில் போனை செய்து உதவிக்கே அழைக்க முடியவில்லை ரசிகா சொல்ல, பிரபாகரன் சாரும், தமிழ் சாரும் எதை பார்த்து அங்கே வந்தாங்கன்னு நினைக்கிற? ஆதி சார் அனுப்பிய மெசேஜ் நேரம் கழித்து அவர்களை சென்றடைந்து இருக்கு. அதே போல் நடக்காதா? அகரன் கேட்டான்.
ஆமா ரசி, சர்வர் வொர்க் ஆகாத போது கூட நாம் செய்யும் மிஸ்டு கால் கூட நேரம் கழித்து செல்லும். அப்படின்னா கேமிரா மூலம் நீங்க இருவரும் தூங்கியதை கூட அவர்களால் எடுக்க முடியும். அண்ணா இமேஜை டேமேஜ் பண்ண பாக்குறாங்க என்று மெல்லினா சொல்ல, ரசிகாவிற்கு இப்பொழுது தான் அனைத்தும் தெளிவான புரிந்தது.
ரசிகாவும் அகரனும் மெல்லினாவை பார்க்க, அவள் இருவர் தோளிலும் கை போட்டு ஆர்வமாக பேசிக் கொண்டிருந்தாள்.
அகரா, அண்ணாவுக்கு உதவ தான் பேசினியா? அச்சோ அது தெரியாமல் உன்னை திட்டீட்டேனே? என்று அகரனிடம் பேச, அகரன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். சற்று நேரத்தில் அவனை கவனித்த ரசிகா, என்ன பண்றான் இவன்? என்று அவன் தோளில் கை வைத்தான். பின் ரசிகாவை பார்த்து விட்டு அகரன் மெல்லினாவை பார்த்தான். அவள் அப்போதும் நிறுத்தவில்லை.
அகரா, உன்னோட போனை கொடு என்று அவன் போனை கையிலிருந்து வாங்கி, அன்று நாம் எடுத்த புகைப்படத்தில் ஏதாவது வித்தியாசமா இருக்கான்னு பார்க்கலாம் என்று அவள் சொல்ல, அவன் பார்வை அவளிடமிருந்து மீளவில்லை.
மெல்லி, அவன் போனை கொடுத்துட்டு உன்னோட புத்தகப்பையை அறையில் வைத்து விட்டு ஆடை மாற்றி விட்டுவா. ஏதாவது சாப்பிட்டு படிக்கணும் என்று ரசிகா சொல்ல, ரசி..வேண்டாமே? மெல்லினா சொல்ல, போ..என்று ரசிகா அவளை விரட்ட, அகரா நீயாவது சொல்லேன். இப்ப தான ஸ்கூல் முடிந்து வந்தோம் என்று அவனிடம் பாவமாக கேட்டாள்.
அகரன் ரசிகாவை பார்க்க, அகரா என்னிடம் ஏதாவது சொல்லணுமா? ரசிகா கேட்டாள்.
இல்லையே? என்று மெல்லினா கையில் இருந்த அவன் போனை வாங்கி விட்டு அங்கிருந்து அகன்றான்.
“இருடா உன்னை கவனிச்சுக்கிறேன்” என்று மெல்லினா பையை எடுத்துக் கொண்டு அறைக்கு சென்றாள்.
ஆதிரேயன் வீட்டிற்குள் நுழைய ரசிகா அவனை நோக்கி கண்ணீருடன் ஓடி வந்தாள். ஆதி அப்படியே நின்றான். பின் தான் அவள் கையில் போன் வைத்திருப்பதை பார்த்து அவன் நகர, அவனருகே வந்த ரசிகாவிற்கு ஆதி கண்ணில் படவேயில்லை. அவனை இடித்து விட்டு கண்டுகொளாமல் வெளியே ஓடினாள்.
அவளை பார்த்து மெல்லினா, சீதாம்மா, வேலையாட்கள் என அனைவரும் வெளியே சென்றனர். ஆதியும் அவள் பின் சென்றான். வீட்டின் கேட்டருகே திரிவேஷ் நின்று கொண்டிருந்தான்.
இவன் உள்ளே வராமல் எதற்கு வெளியே நிற்கிறான்? என்னவாக இருக்கும்? என்று ஆதி நடக்க, திரிவேஷ் புன்னகையுடன் நகர்ந்தான்.
அத்தை என்று ஆரவும் யோகிதாவும் ரசிகாவிடம் ஓடி வந்தனர். அவள் மண்டியிட அவளை அணைத்து அழுதனர். அவளும் அழுது கொண்டே விபுதனை தேடினாள்.
காரிலிருந்து தங்களுடைய நான்கு பைகளையும் எடுத்து வெளியே வைத்து விட்டு, திரிவேஷ் அருகே வந்து நின்றான் விபுதன்.
பள்ளி படிக்கும் மாணவன் என்று தான் பெயர். கட்டான உடலும் அழகான முக அமைப்பும் டிசர்ட்டுடன் இருந்தான். ஆரவ், யோகிதாவை முத்தமிட்டு ஆறுதலான ரசிகா அவனை பார்த்து, எழுந்து விபு என்றாள்.
பிரபாகரன் கார் அப்பொழுது தான் உள்ளே நுழைந்தது. அவரும் நடப்பதை பார்த்துக் கொண்டே காரிலிருந்து இறங்கி ஆதியிடம் கேட்டார். அவன் தோளை குலுக்கினான்.
விபு என்று ஆசையா அவனிடம் ரசிகா வந்தாள். அவனும் வேகமாக ஓடி வந்தவன் சட்டென நின்று, அவளை முறைத்து பார்த்தான்.
விபு, அப்பா ரொம்ப அடிச்சிட்டானா? என்று ரசிகா அவன் கன்னத்தில் கை வைத்தாள். அவள் கையை தட்டி விட்ட விபுதன், கோபமாக உனக்கு வீடு இருக்குன்னு மறந்துட்டியா? எனக் கேட்டான்.
இல்லடா, அண்ணா..என்று அவள் பேச தொடங்க, உன்னோட அண்ணன் மட்டும் தான் உன் கண்ணுக்கு தெரிவானோ? நாங்களெல்லாம் இல்லையா? நாங்க தேவையில்லைன்னு தான இங்க வந்திருக்க? கோபமாக கேட்டான்.
அப்படி இல்லைடா.
அப்ப எப்படி? என்னிடம் முன்னதாகவே வந்து சொல்லி இருந்தால் நான் பார்த்திருக்க மாட்டேனா? விபுதன் கேட்க, நீ அண்ணா மேல கோபப்படுவன்னு தான் வரலை. பயத்தில் தான் நான் ஒருவர் உதவியுடன் இங்க வந்தேன் என்றாள்.
எவனோ ஒருவன் உதவுவானாம். உன்னோட அண்ணனா? இப்பவும் அந்த ஆளை அண்ணன்னு சொல்ற? கோபமாக கேட்டான்.
விபு, அவன் உன்னுடைய அப்பா.
அப்பாவா? அவனா? அப்பாவா என்ன செய்து கிழிச்சான்? அவன் எக்கேடும் கெட்டு போகட்டும். உனக்கு எங்களது நினைவே வரலைல்ல. யோகியிடம் வந்து, பாரு அவளை எப்படி அடிச்சிருக்காங்கன்னு. நீ இங்க நிம்மதியா இருக்கேல்ல அவன் கேட்க, ரசிகா மனம் உடைந்து போனது.
இல்லடா, நீங்க இல்லாமல் நான் எப்படி நிம்மதியா இருக்க முடியும்? ரசிகா கேட்க, எல்லாரையும் பார்த்த விபுதன், “நீ நல்லா இருக்குற மாதிரி தான இருக்கு” என்றான்.
ஏன்டா, நான் சாகணும்ன்னு சொல்றீயா? ரசிகா கேட்க, விபுதன் கையை ஓங்கினான். ஆதி நகர, அவனை நிறுத்திய அகரன் தமிழரசன் தோளில் கை போட்டு வெளியே வந்தான்.
விபு..அகரன் அழைக்க, அவனை பார்த்த விபுதன், மாம்ஸ் என்று அவனிடம் ஓடி வந்து அவனை அணைக்க, தம்பி அவனை விடுங்க. அவனுக்கு அடிபட்டிருக்கு என்று தமிழரசன் சொன்னார்.
அடி பட்டிருக்கா? மாம்ஸ் என்னாச்சு? என்று கேட்டான் விபுதன்.
“முதல்ல உள்ள வா” என்று அகரன் அழைக்க, ரசிகா கோபமாக அவர்களை கடந்து உள்ளே சென்றாள்.
நீ ஏன்டா, அவ கல்யாணத்தை பற்றி சொல்லவேயில்லை? அகரன் கேட்க, அம்மா அவ போனையும் வாங்கி வச்சிட்டாங்க. அவளை காலேஜூக்கும் விடலை. எங்களை பள்ளிக்கும் விடலை. மாம்ஸ் அவன் சரியான கேடி. அப்படியே நல்லவன் போல் இருந்தான். எங்களிடமும் நல்லா பேசினான். சந்தேகமே வராதது போல் எல்லாரும் சரியாக நடிச்சாங்க.
இவள் போன பின் அவனுடன் தான் இருக்கான்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். எனக்கும் எக்சாம், மேச் என இருந்ததால் எதையும் கவனிக்கலை.
போன வாரம் தான் இவ யாரோடவோ ஓடிப் போயிட்டான்னு பேசுனாங்க. வீட்ல கேட்டதுக்கு தெரியாது. இருவருமே போனை எடுக்கலைன்னு சொன்னாங்க. எங்க போனா? என்ன செய்றான்னு தெரியாம சரியான டென்சன்.
இரு நாட்களுக்கு முன் தான் அவன் வீட்டுக்கு இவளை தேடி வந்தான். அப்புறம் தான் நடந்த எல்லாமே எனக்கு தெரிந்தது. அவனையும் நல்லா கொடுத்து தான் அனுப்பினேன். இனி நம் வழிக்கே வர மாட்டான் என்று அவன் ரசிகாவை எட்டி பார்த்தான்
அவள் உள்ளே செல்வது போல் சென்று மறைந்து நின்று இவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.
சரி, இப்ப இவளிடம் எதுக்கு கத்துற? மறுபடியும் வீட்டுக்கு வந்தால் இவளை அவனிடம் தான ஒப்படைப்பாங்க அதனால் பயத்தில் வந்து விட்டாள்.
சரி சரி. த்ரீயும் நீயும் இங்க இருக்கீங்க? அக்கா எங்க? என்று அவன் பருவதியை கேட்டான்.
அவளை விடுடா. முதல்ல மௌனியை பாரு என்று திரிவேஷ் சொல்ல, அவள் எப்படிடா உங்களை மறப்பா? இங்க எல்லாருக்கும் உங்களை பற்றி தெரியும். உனக்கு அவளை பற்றி தெரியாதா? அகரன் கேட்டுக் கொண்டே உள்ளே பார்த்தான்.
“விபு அவ கோவிச்சிட்டு போயிட்டா” திரிவேஷ் சொல்ல, த்ரீ நோ வொரி. “இப்ப வருவா பாரு” என்று எல்லாரையும் பார்த்தான். நேராக சீதாவிடம் வந்து, “பின் இருந்தா தாங்களேன்” என்று கேட்டான் விபுதன். அவரும் கொடுத்தார்.
அவன் குனிந்து அவன் காலில் லேசாக குத்தினான்.
என்னடா பண்ற? அகரன் பதட்டமாக, மாம்ஸ் அமைதியா இருங்க என்று ஆர்.கே இங்க பாரு. பாம்பு வந்து என்னை கொத்திட்டு போயிருச்சு என்று உரக்க சத்தமிட்டு அழுவது போல் அவன் நடித்தான்.
பாம்பா? என்று மெல்லினா, அண்ணா பாம்பு கொத்திடுச்சாம் என்று சொல்ல, ஆதி அவளை பார்த்து விட்டு விபுதனிடம் வந்தான்.
ஹலோ, என்ன பண்றீங்க? என்னை மறைக்கிறீங்க? அப்புறம் கத்தி கத்தி என் தொண்டை கட்டிக் கொள்ளும். நீங்களா பார்ப்பீங்க? என்று ஆதியுடம் கேட்க, புன்னகையுடன் அவன் நகர்ந்து நின்றான். விபுதன் ஆதியை பார்த்துக் கொண்டே மேலும் சத்தமிட்டான்.
“விபு, பாம்பு கொத்திடுச்சா” என்று ரசிகா ஓடி வந்து அழுது கொண்டே அவன் காலை பார்த்தாள்.
அடச்சே, நானும் பாரு. “பயந்தே போயிட்டேன்” என்று மெல்லினா சொல்ல, ரசிகா அவளை பார்த்து விட்டு விபுதனை பார்த்தாள். அவன் மெதுவாக புன்னகையுடன் நகர்ந்தான்.
டேய், பொய் சொன்னியா? இப்படியா பயமுறுத்து?. உயிரே போச்சு என்று ரசிகா அவள் நெஞ்சில் கை வைத்துக் கொண்டே எழுந்து அவனை விரட்ட, ஓட முடியாமல் நின்றாள்.
ஆர்.கே உனக்கு அவ்வளவு தான் எனர்ஜியா? என்று கேலியாக கேட்டுக் கொண்டே அவளிடம் வந்தான் விபுதன்.
ரசிகா அவனை அணைத்து விட்டு அவனிடம் கன்னத்தை காட்டினாள். விபுதன் அவளுக்கு முத்தமிட எனர்ஜி வந்துருச்சே என்று அவன் காதை திருகினாள்.
விடு, விடு..ரொம்ப வலிக்குது என்று அவன் கத்தினான். ரசிகா அவன் நெற்றியில் முட்ட, அவனும் முட்டினான். இருவரது பாசமழையிலும் அனைவரும் நனைய, இருவரும் நிறுத்துறீங்களா? ருச்சி இங்க கொஞ்சம் பாரேன் என்று இரு பக்கமும் கையை காட்டினான் அகரன். இருவரும் பார்த்தனர்.
ஒரு பக்கம் ஆரவும் யோகிதாவும் முறைத்துக் கொண்டிருந்தனர். மறுபக்கம் லிது, நிது, மெல்லினா கையை கட்டி ரசிகாவை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தனர்.
அவர்களை பார்த்த விபுதன், தன் தம்பி தங்கையிடம் செல்ல, ரசிகா யோசனையுடன் இரு பக்கமும் பார்த்தாள்.
இங்க என்ன பண்ற அத்தை? மாம்ஸ் உன்னோட வீட்டுக்கு போகலாமா? விபுதன் கேட்க, இல்ல விபு..கொஞ்ச நாள் இங்க தான் இருக்கணும் என்றான் அகரன். ரசிகா ஆதியையும் பிரபாகரனையும் பார்த்தாள். “எல்லாரும் உள்ள வாங்க” என்றார் பிரபாகரன்.
இல்ல, “நாங்க வரலை. அத்தை வா போகலாம்” விபுதன் அழைத்தான்.
ரசி, “எங்கும் வர மாட்டாள்” என்று மெல்லினா அவளிடம் வந்து அவள் கையை பிடித்தாள்.
அவள் எங்களோட அத்தை. எங்களுடன் தான் வரணும் என்று மெல்லினாவை முறைத்து வந்து ரசிகா கையை அவனும் பிடித்தான்.
விபு, “நான் சொல்றேன். உள்ள வா” அகரன் அழைத்தான். வாரோம். ஆனால் ரொம்ப நாள் இருக்க மாட்டோம் என்றான்.
ஓ.கே, வா என்று மெல்லி, உள்ள போ என்று ரசிகா பசங்களுடைய பொருட்களை எடுத்தாள். எல்லாரும் உள்ளே சென்றனர்.
மௌனி, “நீ போ. நாங்க எடுத்துட்டு வாரோம்” என்று திரிவேஷ் விபுதனை பார்த்தான். இருவரும் எடுத்துக் கொண்டு உள்ளே வந்தனர்.
விபுதன், ஆரவ், யோகிதா மூவரும் வீட்டை சுற்றி பார்த்தனர். விபு, ரசிகா அழைக்க மூவரும் அவளிடம் வந்தனர். எல்லாரையும் மூவருக்கும் அறிமுகப்படுத்தினாள் ரசிகா.
இல்லம்மா, “உன்னருகே இருக்கும் பக்கத்து அறையில பசங்க தங்கிக்கட்டும்” என்றார் அவர்.
அப்பா, கொஞ்சம் இருங்க என்று இந்த வீட்ல எந்த அறையில் வேண்டுமானாலும் தங்கிக்கோங்க. ஆனால் இந்த அறை மட்டும் என்று கீழே உள்ள அவன் அம்மா அறைக்கு பக்கத்து அறையை பார்த்து, யாரும் அதற்குள் செல்லக் கூடாது என்றான்.
எதுக்கு? அங்க என்ன இருக்கு? விபுதன் கேட்டான்.
உனக்கு அது தேவையா? போகக்கூடாதுன்னா போகக்கூடாது என்று மெல்லினா சொல்ல, விபுதன் அவளை முறைத்தான்.
“அந்த அறை என் பொண்ணோட அறை” என்று கண்கலங்க தமிழரசன் சொல்ல, ஆதிரேயன் அவரை பார்த்து விட்டு கோபமாக எழுந்து சென்றான்.
பாஸ்..என்று அகரன் எழ, “ஒழுங்கா ஓய்வெடு” என்று ஆதிரேயன் சத்தமிட்டு அவனறைக்கு சென்றான். ரசிகா கண்கலங்க அவனை பார்த்தாள். விபுதன் யோசனையுடன் தன் அத்தையை பார்த்துக் கொண்டு போகும் ஆதிரேயனையும் பார்த்தான்.
ரசிகா எழுந்து தமிழரசனிடம் வந்து அமர்ந்தாள்.
அப்பா, “வருத்தப்படாதீங்க. அதான் நான் இருக்கேன்ல்ல?” என்று ரசிகா அவர் கையை பிடிக்க, அவள் கையை தட்டி விட்டு, என் பொண்ணு தப்பு பண்ணிட்டு எங்களை விட்டு ஒரேதா போனா? நீயும் எங்களை விட்டு தான போகப் போற? அப்புறம் எப்படி நான் இருக்கேன்னு சொல்லலாம்? தமிழரசன் கேட்க, ரசிகா கண்ணீருடன் அவரை பார்த்தாள்.
இல்லப்பா, கொஞ்ச நாள்..
போதும்மா,” நீ எதுவும் சொல்ல வேண்டாம்” என்ற தமிழரசன் ஆதிரேயன் அறையை பார்த்தார்.
ரசி, அப்பா இப்பவும் விளையாடுறாங்களா? இல்லை கோபமா இருக்காங்களா? நிது ரசிகாவிடம் வந்து கேட்டாள். ரசிகா பதில் சொல்ல முடியாமல் தவித்து ஆதிரேயன் அறையை பார்த்தாள்.
நிதும்மா, “தாத்தாகிட்ட வா” என்ற பிரபாகரன் அவளை தூக்கி, அப்பா கோபமாகவும் இல்லை, விளையாடும் நிலையிலும் இல்லை. அவன் வருத்தமாக இருக்கான் என்று அவர் ரசிகாவை பார்த்தார்.
மெல்லினாவும் அவள் அப்பாவிடம் வந்து அமர, லிதுவும் அவள் தாத்தாவிடம் வந்தாள்.
தாத்தா, அப்பாவை நாம சிரிக்க வைக்கலாமா? என்ற லிது, ரசி போகலாமா? எனக் கேட்டாள்.
இல்ல லிது, நீயும் தாத்தாவும் போங்க. நான் அண்ணா, அக்காவை அறைக்கு அழைத்து போறேன் என்று எழுந்தாள்.
ரசி, நீயும் அப்பாவும் சண்டை போட்டுக்கிட்டீங்களா? லிது கேட்க, இல்லையே! என்றாள் ரசிகா.
நீ எங்கள விட்டு போகப்போறீயா ரசி? என்று அழுவது போல் கேட்ட நிது, அப்பா அதான் உன் மேல கோபமா இருக்காங்களா? என்று கேட்டாள்.
விபுதன் அகரனை பார்த்தான். த்ரீ ருச்சிக்கு அறைக்கு கொண்டு செல்ல உதவு. நான் விபுவிடம் பேசணும் என்றான் அகரன்.
அகரா, ரசிகா அழைக்க, ருச்சி ஒன்றுமில்லை என்று திரிவேஷை பார்த்தான். அவன் ரசிகாவையும் குழந்தைகளையும் அழைத்து செல்ல, அகரன் விபுவுடன் அவனறைக்கு சென்றான்.
மாம்ஸ், அத்தை என்ன பேசுறாங்க? இங்க என்ன செய்றாங்க? என்று விபுதன் கேட்டான்.
அகரன் அனைத்தையும் சொன்னான். அதனூடே ஆதிரேயன் ரசிகாவை கல்யாணம் செய்து கொள்ள கேட்டதையும் சொன்னான்.
மாம்ஸ், அப்ப நீ?
நானா? ருச்சியிடம் முன்னமே சொல்லாமல் விட்டேன். அதை விடு. அவள் விருப்பமில்லைன்னு சொல்லீட்டா. நானும் விட்டுட்டேன்.
“ருச்சிக்கும் ஆதி பாஸை பிடிச்சிருக்கு” என்றான் அகரன்.
“சும்மா ஏதாவது பேசாத மாம்ஸ்” என்றான் விபுதன்.
இல்லடா, நிஜமாக தான் சொல்றேன். அவள் போல தான அவரும் கஷ்டப்பட்டார். இப்ப ருச்சியால அவரிடம் நிறைய மாற்றம் இருக்குடா. நாலு வருசமா அவர் சிரிப்பை பார்க்க கூட இல்லை. முதல் முறை அவர் சிரிப்பை பார்த்து எனக்கே சந்தோசமா இருந்தது. ஆனால் அது நம்ம ருச்சியால தான்னு தெரியாது.
இப்பொழுதைக்கு ருச்சி எடுத்த முடிவு சரிதான். ஒரு மாதத்தில் கிளம்பி விடுவேன்னு சொல்லி இருக்கா. ஆனால் அவரோட பிரச்சனையை முடித்த பின் எப்படியாவது அவளை இந்த வீட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கணும் என்று விபுவை பார்த்தான்.
மாம்ஸ், இவங்க பணக்காரவங்க. இவங்க எப்படி அத்தையை கல்யாணம் பண்ணிப்பாங்க? அவங்கள எல்லாரும் ஒரு மாதிரி பார்க்க மாட்டாங்க? விபுதன் கேட்க, எப்படி இருந்தாலும் எல்லாரும் எல்லாரையும் குறை சொல்லிகிட்டு தான் இருப்பாங்க. அதை பாஸ் பார்த்துப்பார். எனக்கும் ருச்சி இங்க இருந்தா சந்தோசமாகவும் ,பாதுகாப்பாகவும் இருப்பான்னு நல்லா தெரியுது. ஆனால் அவ ஆதி பாஸை பிடிச்சிருக்குன்னு ஒத்துக்க மாட்டேங்கிறா என்றான்.
சரி, பார்க்கலாம். நான் என் முடிவுக்கு பின் தான் மாம்ஸ் நீ எதுவும் செய்யணும் என்று அவனை பார்த்து, உனக்கு எப்படி அடிபட்டது? என்று அகரனிடம் கேட்க, அவன் மெல்லினாவையும், அவள் நண்பர்களை பற்றியும் கூறினான்.
விசயம் பெருசா தெரியுது? விபுதன் கேட்க, ஆமாடா, இதை விட பாஸ் பெரிய ரிஸ்க் எடுக்க போறார். அதை நினைத்தால் தான் பயமா இருக்கு என்றான் அகரன்.
என்ன செய்ய போறார்?
அது..என்று அகரன் விபுவை பார்த்து, அது இருக்கட்டும். த்ரீயை அனுப்பினேனே? உன்னோட அம்மா, அப்பா ஏதாவது பிரச்சனை செய்தாங்களா? என அகரன் கேட்டுக் கொண்டிருக்க, திறந்திருந்த கதவை தட்டினான் ஆதிரேயன்.
பாஸ், வாங்க என்று அகரன் அழைக்க, நீ உட்காரு..என்ற ஆதி, துரைய மீட் பண்ண அப்பாயிண்மென்ட் வாங்கு என்றான்.
பாஸ், இப்ப உங்க செக்கரட்டரி? அகரன் கேட்க, எனக்கு பெரியதாக யார் மீதும் நம்பிக்கையில்லை. அந்த பொண்ணு மத்த விவரங்களை சொல்வதும், மீட்டிங் அரேஜ் பண்ண தான் சொல்லி இருக்கேன்.
மற்றபடி எந்த டீலருடன் அவளை பேச விட மனம் வரலை. ஏதோ தப்பா தான் தெரியுது. ஒரு வாரம் தான? மத்ததை நான் பார்த்துக்கிறேன். நீ துரையோட ஆள்கிட்ட பேசிட்டு மட்டும் சொல்லு.
அகரா, மித்திரன் தலையிட மாட்டேன்னு சொன்னான். ஆனால் அவன் சும்மா இருப்பான்னு தோணலை. அவன் எதுவும் செய்யும் முன் பிரச்சனைய முடிக்கணும். நமக்கு கண்டிப்பா துரையோட உதவி வேணும் என்றான் ஆதிரேயன்.
யார் அந்த துரை? விபுதன் கேட்க, ஆதி அவனை பார்த்து விட்டு அகரனை பார்த்தான்.
விபு, “நீ அமைதியா இரு” என்ற அகரன், நீங்க சொல்றதும் சரிதான். துரைய பார்க்க போகும் போது எதுக்கும் கன் வச்சுக்கோங்க. கவனமா இருங்க. கோபப்பட்டுறாதீங்க என்று அக்கறையுடன் ஆதிரேயனிடம் அகரன் சொன்னான்.
அகரா, இந்த பிரச்சனைக்கும் சக்திக்கும் சம்பந்தம் இருக்குமோ? ஆதிரேயன் கேட்க, பாஸ் அவனுக்கு உங்க மேல பொறாமை தான். கொலை செய்யும் அளவிற்கோ, போதை பழக்கமோ அவனிடம் இல்லை. அவனுக்கு உங்களை வீழ்த்தணும். அவன் சரியான டம்மி பீஸ் என்றான் அகரன். ஆதிரேயன் புன்னகைத்தான்.
சரி, நீ ஓய்வெடு என்று விபுதனை பார்த்து, நீ அறைக்கு போய் குளிச்சிட்டு சாப்பிட வா. அகரா, நீ இங்கேயே ஓய்வெடு. சாப்பாடை கொடுத்து விடுறேன். சீக்கிரம் பழையபடி ஆரோக்கியமா வா. நீ இல்லாமல் வேலையை ஓட மாட்டேங்குது என்று சொல்லி விட்டு எழுந்து, விபுதனிடம் வா என்று அழைத்தான். அவன் அகரனை பார்க்க, அகரன் கண்ணசைக்க இருவரும் வெளியே வந்தனர்.
ரசிகாவும் பசங்களும் படியில் இருந்து வந்து கொண்டிருந்தனர். ஆதிரேயன் நின்று அவர்களை பார்த்தான். விபுதன் ஆதிரேயனையும் ரசிகாவையும் பார்த்தான். அவளும் அவனை பார்த்துக் கொண்டே வந்தாள்.
மாப்பிள்ள, வாங்க தமிழரசன் அழைக்க, ஆதிரேயன் அவரிடம் வந்து அமர்ந்தான்.
ரசிம்மா, டின்னர் ரெடியா? பிரபாகரன் கேட்க, தயாரா இருக்கு சார். ஒரே ஒரு நிமிசம் என்ற ரசிகா விபுவை அழைத்தாள்.
நான் கிளம்புகிறேன் என்று திரிவேஷ் சென்றான்.
அத்தை என்னாச்சு? விபுதன் கேட்க, வா மேம்மை பார்த்துட்டு வரலாம் என்று சவிதா அறைக்கு அவளாக அழைத்து சென்றாள்
சீதா ஆதியிடம் வந்து, தம்பி கவலைப்படாதீங்க. நம்ம ரசி இப்ப போனாலும் கண்டிப்பாக நம்மை பார்க்காமல் இருக்க மாட்டா. இப்ப கூட பார்த்தீங்கல்ல, அந்த பையனுக்கு நம்ம பெரியம்மாவையும் அறிமுகப்படுத்த யாரையும் கேட்காமல் அவளாக உள்ள போயிருக்கா. அவளை போக விடாமல் நான் பார்த்துக்கிறேன்.
ஆமா அண்ணா, ரசிக்கும் உன்னை பிடிக்கும். சொல்ல மாட்டேங்கிறா. நானும் அவளை இங்கிருந்து போக விட மாட்டேன். ஆமா, ரசி போகக்கூடாது லிது சொல்ல, ஆதி அவளை தூக்கி அணைத்துக் கொண்டான்.
சவிதா அறைக்கு உள்ளே சென்ற ரசிகா, பசங்களை நகர்த்தி விட்டு சவிதாவை தன் இரு கைகளாலும் மெதுவாக நகர்த்தி எழ வைத்து, “ஆதியின் அம்மா” எனவும் “தன் அண்ணன் பசங்க” என்று மூவரையும் அறிமுகப்படுத்தினாள்.
விபுவா? “ரசி எப்ப பாரு உங்களை பற்றி தான் பேசிகிட்டே இருப்பா” என்று சவிதா அவனை தொட்டு பார்த்தார்.
நீங்க ஆதி சார் சித்தி தான? விபுதன் கேட்க, விபு..சத்தமிட்டாள் ரசிகா.
ஆமாப்பா. நான் சித்தி தான். ஆனால் அவன் தான் என்னை அம்மா..அம்மான்னு சுத்திக்கிட்டே இருப்பான். நான் அப்பொழுது அவனை கவனிக்க தவறினேன். ஆனால் அவன் இப்பொழுதும் அதே போல் தான் பேசுகிறான் என்றார் கண்ணீருடன்.
உங்க சின்ன பையன் இங்க வந்தால் ஆதி சாரை ஒதுக்கிடுவீங்களா? விபுதன் கேட்டான்.
உனக்கு யார் இதெல்லாம் சொன்னது? பெரியவங்களிடம் இப்படி தான் கேட்பாயா? என ரசிகா விபுதனிடம் சத்தமிட்டாள். சத்தம் வெளியே கேட்க, அனைவரும் அங்கு வந்தனர்.
“நீ சாப்பிட போ” என்று சவிதாவை தோளோடு பிடித்துக் கொண்டு விபுதனை ரசிகா தள்ளினாள்.
ரசிம்மா, என்ன பண்ற? சின்ன பையன் தான பேசுறான்? சவிதா பதட்டமாக அவர் குடும்பத்தை பார்த்து ரசிகாவை விட்டு விலகினார். அவர் கீழே விழும் முன் ஆதியும் பிரபாகரனும் சேர்த்து அவரை பிடித்தனர்.
ரசி விபுவை சினமுடன் அடிக்க வந்தாள். தமிழ் அவள் கையை பிடித்து, “அமைதியா இரும்மா” என்றாள்.
அத்தை, கையை விடுங்க. அவங்க அடிச்சா அடிக்கட்டும். நான் தவறாக ஏதும் கேட்கவில்லை. அதே போல் என் மனதில் இருந்த கேள்விக்கான பதிலை அத்தை கொடுத்துட்டா என்றான் புன்னகையுடன் விபுதன். ரசிகா புரியாமல் அவனை பார்த்தாள்.
எனக்கு ஒன்றுமில்லை. விடுங்க என்று படுக்கையில் சாய்ந்து படுத்த சவிதா, அம்மாடி பையன் தெளிவா இருக்கான். நீ சொன்னது போல் சார்ப்பான பையன் தான்.
தம்பி, ஆதியை முன் என் பையனா ஏத்துக்கலை. ஆனால் இப்ப ஏத்துக்கிட்டேன். நீ சொன்னது போல் என்னோட சின்ன பையன் வந்தால், அவனுக்கு தேவையான பணத்தை கொடுத்து விட்டால் அவன் சென்று விடுவான். அப்புறம் என் மூத்த மகனுடனும் அவன் குடும்பத்துடனும் நானும் அவரும் சந்தோசமாக இருப்போம் என்றார்.
விபு, உனக்கான கேள்விக்கான பதில் நான் கொடுத்தேனா? எனக்கு புரியலை என்றாள் ரசிகா.
அத்தை, இதுவரை எங்களுக்காக தான மத்தவங்களிடம் சண்டை போட்டிருக்க? ஆனால் இன்று இவங்களுக்காக என்னை போக சொல்லீட்டேல்ல. அப்ப இவங்க உனக்கு ரொம்ப முக்கியமானவங்க தான? யாரு அத்தை இவங்க எல்லாரும்? என்று விபுதன் கண்ணீருடன் கேட்டான்.
இல்லடா, “நீ அவங்களிடம் தப்பா பேசக்கூடாதுன்னு தான் போக சொன்னேன்” என்று அவனை அணைத்து அழுதாள்.
அவ்வளவு தான்னா? எதுக்கு அழுற? என்று விபுதன் கேட்டான். ரசிகா பதில் சொல்லாமல் அழுதாள்.
“எனக்கு தெரியும் அத்தை. மாம்ஸ் சொல்லீட்டாரு” என்றான் விபுதன்.
அகரனா? என்ன சொன்னான்? என்று கண்ணீரை துடைத்துக் கொண்டே கேட்டாள்.
“எல்லாமே சொல்லீட்டாரு” என்று விபுதன் ஆதியை பார்த்தான். அவன் ஆதியை பார்ப்பதை பார்த்து எல்லாரும் புரிந்து கொண்டனர்.
ஓ..அதனால் தான் என்னிடம் இப்படி கேட்டாயா? சவிதா கேட்க, ஆமா என்று ரசிகாவை விலக்கி, நீ நினைக்கிறத பேசலாம்ல்ல? என்று கேட்டான்.
நா..நா..நான் எதுவும் நினைக்கலை விபு. வா சாப்பிட போகலாம் என்று அழைத்தவளது கையை பற்றி நிறுத்தி, நான் சொல்வது இங்கிருக்கும் அனைவருக்கும் புரியும். உனக்கும் புரியுதுல? விபுதன் கேட்க, இல்லை எனக்கு புரியல. எனக்கு புரியவும் செய்யாது என்று பேச்சை நிறுத்த முயன்றாள்.
ஓ..உனக்கு புரியவே செய்யாதுல்ல. ஓ.கே நானும் இவங்க பக்கம் தான் என்று விபுதன் ஆதிரேயன் பக்கம் வந்து அவன் கையை பிடித்தான். எல்லாரும் அவனை ஆச்சர்யமாக பார்த்தனர்.
விபு வந்தால் யாரும் ரசிகா பக்கம் நெருங்க முடியாதுன்னு ஏற்கனவே அகரன் சொன்னதை நினைத்து திகைத்து நின்றனர். ஆதிக்கு நடப்பது கனவா? என்று தோன்றியது.
மெல்லினா அவனிடம் வந்து, “வாட் எ மிராக்கில்?” என்றாள்.
“மிராக்கில்லா?” என்று விபுதன் அவளை பார்த்து சிரித்தான்.
ஏன்டா சிரிக்கிற? மெல்லினா கேட்க, இது என்ன டிரெஸ்? இப்படி தாத்தா மாதிரி போட்டிருக்க? என கேலி செய்தான்.
தாத்தாவா? டேய் அகரா..அண்ணா..பாரு..இந்த அகரன் நேற்று என்னோட ஆடையை பார்த்து குட்டியா நல்லாவே இல்லைன்னு சொன்னான். இப்ப இவன் என்னை தாத்தான்னு சொல்றான்? என்று அவனை பார்க்க,
ஆமா, இவ்வளவு நேரம் இதை நாங்கள் கவனிக்கவில்லையே? என்று தமிழ் அவளை பார்த்து சிரிக்க, மாமா சிரிக்காத. எனக்கு கடுப்பா இருக்கு. அப்புறம் எனக்கு கோபம் வந்துரும் என்றாள்.
பிரபா, உன்னோட பொண்ணு என்னை மாமான்னு சொல்லீட்டா? என்று அவர் குதிக்க, ஆதி பேயறைந்தாற் போல் விபுதனை பார்த்துக் கொண்டிருந்தான்.
விபு..உன்னோட நேம் க்யூட்டா இருக்கு. ஆனால் என்னை அவமானப்படுத்தீட்டியே? இரு முதல்ல அகரனை கவனிச்சிட்டு உன்னை வந்து கவனிக்கிறேன் என்றாள்.
ஆதியை கையை விட்டு மெல்லினா கையை பிடித்து, என்னை என்ன நீ கவனிக்க போற? என்று எல்லார் முன்னும் கேட்டாள். மெல்லினா வாயடைத்து இதயம் படபடவென துடித்தது.
சொல்லு? எப்படி கவனிப்ப? விபுதன் கேட்க, அவன் கையை தட்டி விட்டு வெளியே ஓடிய மெல்லினா அகரன் அறைக்குள் நுழைந்து கதவை பூட்டி மூச்சிறைத்துக் கொண்டு அமர்ந்தாள். விபுதன் புன்னகையுடன், சாப்பிடலாமா? “செம்மையா பசிக்குது” என்றான். ரசிகா கையை கட்டிக் கொண்டு கோபமாக நின்றாள். எல்லாரும் ஆதியை பார்த்து புன்னகைத்து வெளியே சென்றனர்.
மெல்லினா, என்னாச்சு? ஏதும் பிரச்சனையா? அகரன் கேட்க, “அகரா எனக்கு ஏதோ செய்யுது” என்றாள் பதட்டமாக.
வெளிய யாரும் பிரச்சனை பண்றாங்களா? என்று அவன் படுக்கையில் அமர்ந்தான்.
இல்ல.வெளிய இல்ல. உள்ள உள்ள..என்று நெஞ்சை பிடித்தாள் மெல்லினா.
உள்ளேயா? என்று அகரன் கேட்க, இங்க..அகரா என்று நெஞ்சை பிடித்து என்னோட ஹார்ட் படபடன்னு அடிக்குது. அப்புறம்..என பேசாமல் அவனை பார்த்து, விபு என் கையை பிடித்தானா? எனக்கு பயமா போச்சு என்று அவள் விபு செய்ததை சொல்ல, அவன் சாதாரணமாக டீஸ் செய்திருக்கான் என அகரனுக்கு புரிந்தது.
ஆனால் மெல்லி..என்று கண்கலங்க அவளை பார்த்தான். “அகரா, உன்னோட காதலை குழி தோண்டி புதைக்க வேண்டியது தான். உனக்கும் காதலுக்கும் கொஞ்சமும் சரிப்படலை. சீக்கிரம் இங்கிருந்து கிளம்பு” என்று அகரன் மூளை வலியுறுத்த, மெல்லினாவை பார்த்துக் கொண்டாவது இருக்கணும் என்று மனம் ஏங்கியது. அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
எல்லாம் உன்னால தான். இந்த ஆடை பிரச்சனையில் என் மனம் அவனிடம் போய் விட்டது என்று புலம்பினாள். மெல்லினாவிற்கு விபுவை பிடித்ததை அவளே உணர்ந்தாள். அவள் பேசியதை கேட்கும் அகரனுக்கோ மனம் வலித்தது. ஒரு காதலில் இருந்து மீண்டு மற்றதில் மாட்டிக்கொண்டு தவியாய் தவிக்கிறான்.
மெல்லினாவும் விபுவும் ஒரே வயதினர். ஆனால் நான் அவளை விட பெரியவன். வெறும் பெரியவன் இல்லையே. எட்டு வருடமாவது எனக்கும் மெல்லினாவிற்கும் வித்தியாசம் இருக்கும். அதுவும் அவள் பாஸின் தங்கை. ஆனால் நான் கீழ் தங்கியவன் என்று அகரன் மனம் அவனை வாட்டி எடுத்தது.
என்னடா, ஏதாவது ஐடியா கொடு? விபு மனதில் நான் வரணும். “ஏதாவது சொல்லேன் லவ் குரு?” என்று அவள் சொல்ல, அவன் கண்ணீரை உள்ளிழுத்து அமைதியாக காலையில் பேசலாமா? எனக்கு சோர்வா இருக்கு. எனக்கு சாப்பாடு வேண்டாம்ன்னு பாஸிடம் சொல்லு என்று படுத்துக் கொண்டான்.
நல்லா தானடா இருந்த? “ரொம்ப வலிக்குதா” என்று மெல்லினா அவன் வயிற்றில் கை வைத்தாள். “நான் தனியா இருக்கணும் போ” என்றான் அகரன்.
ஓ.கே பை, நாளை வாரேன். “ஐடியாவை யோசித்து வை” என்று அவள் அவர்களுடன் சாப்பிட சென்றாள். அகரன் கண்ணீரில் தலையணை நனைந்து இருந்தது.