அகரனது சட்டையை எடுக்க வந்த தமிழரசனிடம் “எடுக்காதீங்க சார்” என்று அகரன் சத்தமிட, ஆதிரேயனும் அவனை பார்க்க வந்தான். அகரனது சத்தத்தில் வெளியே நின்றான்.
தமிழரசன் கேட்காமல் அவனது சட்டை பைக்குள் கையை விட்டு மெல்லினாவது பிரேஸ்லெட்டை எடுத்து, என்ன இது? என்று கேட்டார்.
“தெரியாது சார்” என்றான்.
தெரியாமல் எதுக்கு பதறுற? அவர் கேட்க, அவன் அமைதியாக இருந்தான்.
சொல்லுடா..தமிழரசன் சத்தமிட்டார்.
சாரி சார், நான் செய்வது தவறு தான். ஆனால் இப்ப தான் ருச்சியை விட்டேன். மெல்லினா எப்படி என்னோட மனசுக்குள்ள வந்தான்னு தெரியல. ஆனால் கிளப்ல வச்சி அவளை அவர்கள் கொல்ல வந்த போது பயத்துடன் கண்ணீரும் வந்தது. அப்பொழுதும் எனக்கு ஏதும் தெரியல. ஆனால் இப்ப..சாரி சார் என்று அழுதான்.
சரி, உனக்கே தெரியாமல் உனக்கு மெல்லிய பிடிச்சிருக்கு? இப்ப எதுக்கு அழுற? அவர் கேட்க, சார் நான் உங்களை அணைத்துக் கொள்ளவா? எனக் கேட்டான்.
அவர் யோசனையுடன் அவனருகே வந்து அமர்ந்தார். “இப்ப தான் சார் அம்மா இல்லாத வருத்தமே வருது” என்று அவரை அணைத்து அழுதான்.
நீ அவளை விட பெரியவன்னு அழுறியா? அவர் கேட்க, முதல்ல அதனால தான் இன்று விலகியே இருந்தேன். ஆனால் சார், “அவளுக்கு விபுவை பிடிச்சிருக்கு” என்றான் அகரன்.
என்னடா சொல்ற? அவனை பார்த்தே சில மணி நேரம் தான் ஆகுது. அதுக்குள்ள மெல்லிக்கு அவன் மேல் காதலா? தமிழரசன் கேட்டார்.
காதலுக்கு ஏது சார் நேரம், நாட்கள், கிழமையெல்லாம். அவளுக்கு அவனை பிடிச்சதே கஷ்டமா இருக்குன்னா. அவள் என்னிடமே ஐடியா கேட்கிறாள் என்று அவன் அழுதான்.
அகரனை விலக்கிய தமிழரசன் சிரித்தார்.
என் நிலை உங்களுக்கு சிரிப்பா இருக்கா? அகரன் கேட்டான்.
இல்லடா, நான் அதுக்கு சிரிக்கலை. மெல்லி காதலிக்கிறான்னு சொன்னேல்ல. அதுக்கு தான் சிரிக்கிறேன். அவளுக்கு அவன் மீது ஈர்ப்பாக இருக்கலாம்டா. நம்ம ரசி அவனை பற்றி சொல்லியதால் அவனை பிடித்து இருக்கும். விடு. அவளே புரிஞ்சுப்பா என்றார்.
சார், “இதை யாரிடமும் சொல்லாதீங்க!” அகரன் சொல்ல, எதை சொல்லக் கூடாது? என்று புரியாதது போல் அவர் சிரித்துக் கொண்டே கேட்க, சார் சிரிக்காதீங்க? என்னோட காதலை யாரிடமும் சொல்லிடாதீங்க என்றான்.
சொல்லாமல் எப்படி அவளுக்கு தெரியும்? தமிழரசன் கேட்டார்.
பள்ளி கூட அவள் முடிக்கலை. இது தப்பு. அதை விட நான் அவளை விட பெரியவன். நான் இந்த ஒரு வாரத்தில் எப்படியாவது சமாளிச்சுக்கிறேன். அப்புறம் அவளை மீட் பண்ணாமல் இருந்தால் மறக்க வாய்ப்பிருக்கு என்றான்.
காதலை மறப்பாயா? எப்படி முடியும்? தமிழரசன் கேட்க, சார் நான் ருச்சிய சிறு வயதிலிருந்தே காதலித்தேன். அவள் குடும்பம் போல் தான் என் குடும்பமும். ஆனால் என்னை விட அவள் தான் கஷ்டப்பட்டாள். எனக்கு அக்கா எப்போதும் சப்போர்ட்டா இருப்பாங்க. ஆனால் அவளுக்கு யாருமே இல்லாமலும் கஷ்டத்தை கடந்து வந்தாள். அவளுடைய பொறுமை, நிதானம், அறிவு, சமாளிக்கும் திறமை தான் காதலாக எனக்குள் இருந்தது என்று புரிந்தது.
எனக்கு என்னோட அண்ணா பேசுவதிலே அதிகமாக கோபம் வரும். சில நேரம் வீட்டிற்கு கூட செல்ல மாட்டேன். அதனால் கூட ருச்சியை எனக்கு பிடித்து இருக்கலாம். ஒரு வேலை ருச்சி என்னை வேண்டாம் என்று சொன்னதால் கூட மெல்லினா பக்கம் என் மனம் சாய்ந்து இருக்கலாம். அதனால் நான் என்னோட வொர்க்கை அதிகமாக பார்த்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றான் அவன்.
நீ சொல்வது போல் இருந்தால் எதற்கு இது? தமிழரசன் கேட்க, சார் “அதை முதல்ல குடுங்க” என்று அகரன் கேட்க, நீ தான் மெல்லியை மறக்கணுமே? இது இருந்தால் எப்படி மறப்ப? அவர் கேட்டாள்.
சார், ப்ளீஸ் குடுங்க. நான் கொஞ்ச கொஞ்சமாக மறப்பேன் என்றான் அகரன். தமிழரசன் புன்னகையுடன். சரி தான். இப்ப சாப்பிடுகிறாயா? என்று கேட்டார்.
இல்ல சார், பெயின் கொஞ்சம் அதிகமா இருக்கு. அதனால் நான் ஓய்வெடுக்கிறேன். என்னை சரி செய்து மீண்டும் பாஸூடன் வேலைய பார்க்க போகணும். எனக்கு சாரோட தற்போதைய செக்கரட்டரி பொண்ணு மேல சந்தேகமா இருக்கு என்று அவன் சொல்ல, அகரன் போன் ஒலித்தது.
“சொல்லுங்க சார்” என்று அவன் தமிழரசனை பார்த்துக் கொண்டே போனில் கேட்டான். அவர் அவனையே பார்க்க, ஆதிரேயனும் நின்று கொண்டிருந்தான்.
நல்லா பார்த்துட்டீங்கல்ல. எந்த கேமிராவும் அங்கு இல்லையே? அவன் கேட்க, இல்ல சார். ஆனால் அவங்க ஆதி சாரை தான் கொலை செய்ய வந்திருக்காங்க என்றான் அந்த பக்கம் பேசுபவன்.
ரஞ்சன் சார், யாருன்னு ஏதாவது தடயம் கிடைத்தா? எப்படி ஆதி சாரை கொல்ல தான் வந்திருக்காங்கன்னு சொல்றீங்க? அகரன் கேட்க, ஆதி உள்ளே வந்தான்.
பாஸ் என்று அகரன் எழ, ஆதி ஏதும் சொல்லாமல் அமர்ந்து “பேசு” என்று சைகை செய்தான்.
நீங்க சொன்ன இடத்தை மேலிருந்து யாரோ கவனித்த தடயம் இருக்கு சார். ஒரு துப்பாக்கி கூட கிடைச்சிருக்கு. ஆனால் அதில் எந்த கைரேகையும் இல்லை.
உங்க பாஸை கொல்ல வந்திருக்காங்க. ஆனால் அவங்க செய்யலை. தயக்கமுடனும் பதட்டத்துடனும் கீழே போட்டு போயிருக்காங்க. ஒன்று நீங்க சொன்ன மாதிரி அந்த பொண்ணை தெரிந்தவர்களாக இருக்கலாம். இல்லை சார் தான் என்று தெரியாமல் அவரை பார்த்து விட்டு பதறி துப்பாக்கியை போட்டு சென்றிருக்கலாம். இல்லை அவர்களை யாராவது விரட்டி விட்டிருக்கலாம். அதனால் கூட துப்பாக்கி கீழே விழும் வாய்ப்பு இருக்கு என்றான் அவன்.
ஓ.கே சார், ஏதாவது தெரிந்தால் சொல்லுங்க என்று அகரன் வைத்து விட்டு, ஆதிரேயனை தயக்கமுடன் பார்த்தான். எல்லாத்தையும் கேட்டிருப்பானோ? என்று தமிழரசனும் ஆதியை பார்த்தார்.
அகரா, என்ன விசயம்? ஆதிரேயன் கேட்க, மடமடவென அகரன் ஒப்பித்து விட்டு, பாஸ்..என்று யோசனையுடன் அவனை பார்த்தான்.
என்ன? ஆதிரேயன் கேட்க, பாஸ் நான் என் வீட்டிற்கு செல்லவா? எனக்கு இங்க கம்பர்ட்டா இல்லை என்றான் அகரன்.
ஆதிக்கு அகரன் தன் தங்கை மீது விருப்பம் வைத்திருப்பது பிடிக்கவில்லை. காரணம் அவன் குடும்பம். ரசிகா அவள் குடும்பத்தை விட்டு வந்தாலும் அகரன் குடும்பத்தை மெல்லினா சமாளிக்க மாட்டாள். அதை விட இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம் அனைத்தும் சரியாக படவில்லை. அதே போல் ஆதியால் விபுவையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவன் குடும்பத்தை விட்டு வந்தாலும் ஆதி மனது ஏற்றுக் கொள்ளவில்லை.
இப்பொழுது அகரனிடம் ஆதி, “எதுக்கு கம்பர்ட்டா இல்லை?” எனக் கேட்டான். அகரன் தமிழரசனை பார்த்துக் கொண்டு, பாஸ் சரியா தெரியல. ஆனால் நான் உங்க மாமாவை என்னுடன் அழைச்சிட்டு போகவா? அகரன் கேட்க, இருவருமே அதிர்ந்தனர்.
என்னை உன்னுடனா? தமிழரன் கேட்க, ஏன் சார்? எனக்காக வர மாட்டீங்களா? உங்களுக்கு பொண்ணு இல்லை. எனக்கு யாருமே இல்லை. ஒரு வாரம் மட்டும் உதவியா இருங்க என்றான் அகரன்.
உனக்கு இவர் வந்து வேலை பார்க்கணுமா? ஆதி கேட்க, இல்ல பாஸ் அதுக்கில்லை. இதுவரை என் நண்பர்களிடம் கூட மனதில் இருக்கும் எதையும் சொன்னதில்லை. ஆனால் இவரிடம் பேசினால் மனதுக்கு ஆறுதலாக இருக்கு. அதனால் தான் பாஸ்.
“நான் நடக்க கூட செய்வேன்” என்று அகரன் மெதுவாக எழுந்து நடக்க, இருவரும் அவனை வியந்து பார்த்தனர். அவன் தடுமாற இருவருமே எழுந்து அவனை பிடித்தனர்.
“நான் ஓ.கே பாஸ்” என்று சொன்னாலும் அகரன் கண்ணீர் ஆதியின் கையில் பட்டது. அகரனும் அதை பார்த்து “லேசான பெயின் தான் பாஸ்” என்றான்.
நாம பேசியது பேசியது தான். நீ ஒரு வாரம் இங்கிருந்து சரியான பின் உன்னோட வீட்டுக்கு போ. அதுவரை மாமா உன்னுடனே இருப்பார். என்ன மாமா சொல்றீங்க? ஆதிரேயன் கேட்க, அவரும் கண்ணீருடன் அவனை பார்த்தார்.
வெளியே சத்தம் கேட்டு, தம்பி நீ இரு. நாங்க என்னன்னு பார்த்துட்டு வாரோம் என்று இருவரும் வெளியே வந்தனர்.
ஹாலில் விபுதன், முனியா என்ற வேலையாளின் கையை பின்னே கட்டி வைத்து பிடித்துக் கொண்டிருந்தான். அவர் கத்திக் கொண்டிருந்தார்.
விபு, என்ன பண்ற? ரசிகா சத்தமிட, அத்தை இவன் நம்மை பற்றி யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான். இதை பாருங்கள். எங்களை புகைப்படம் எடுத்து யாருக்கோ அனுப்பி இருக்கான் என்று விபுதன் முனியனின் போனை ஆதிரேயனிடம் கொடுத்தான்.
சக்தியா? அவனுடன் உங்களுக்கென்ன பேச்சு? ஆதி அவரிடம் சத்தமிட்டான்.
“சும்மா தான்ய்யா” என்றார் அவர்.
விபு, என்ன பேசினார்? ஆதி கேட்டான்.
நாங்க புதுசா வந்துருக்கோம். நீங்களும் எங்களை வீட்டிற்குள் விட்டதால் இதை பயன்படுத்திக்கோங்க என்று யாரிடமோ பேசினார் என்றான் விபுதன்.
முனியன் மனதினுள், “நல்ல வேலை வீடியோவை முன்பே அனுப்பி அழித்து விட்டேன்” என்று ஆதியை பார்த்து, சாரிப்பா பணக்கஷ்டம். அந்த சக்தி ரசிகா பொண்ணை பற்றி தான் விசாரித்தான். இப்ப அவங்க அண்ணன் பசங்க வந்து உங்க வீட்ல தங்குவதை சொன்னால் பணம் அதிகமா தருவாங்கன்னு புகைப்படம் எடுத்து அனுப்பினேன் என்று அவர் சொல்ல, முனியா..என்று சத்தமிட்ட பிரபாகரன் கோபமாக “வெளிய போ” என்று கத்தினார்.
இல்லயா, இனி இப்படி செய்ய மாட்டேன் என்று அவர் கெஞ்ச, சார் அவர் இருக்கட்டுமே என்றாள் ரசிகா.
ரசி, “சும்மா இரு. இப்பவே இவர் வெளிய போகணும்” என்று ஆதியும் சத்தமிட்டு அனைவரும் அவரை அனுப்ப, இனி தான் உங்களுக்கு இருக்குய்யா..நல்லா கஷ்டப்படுங்க என்று நினைத்தபடி அவன் செல்ல, விபுதனை அனைவரும் பாராட்டினர். அவன் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அறைக்கு சென்றான். மெல்லினா பல்லை காட்டிக் கொண்டே விபுதனை பார்ப்பதை கண்ட ஆதி, அவளை அறைக்கு செல்ல சொல்லி சத்தமிட்டான். அனைவரும் சென்றனர்.
ஆதிரேயன் மீண்டும் அகரனை சந்தித்து பேசி விட்டு அவனறைக்கு வந்தான். ரசிகா ஆரவ், யோகிதா, விபுவுடன் இருந்தாள். ரசிகாவிற்கு ஆதிரேயனை பிடித்துள்ளது என்று தெளிவாக புரிந்தது விபுதனுக்கு. ஆனாலும் அதை பற்றி அவன் இதுக்கு மேல் பேச வேண்டாம். இவளை விட்டு பிடிக்கலாம் என்று நினைத்து ரசிகாவிடம் இதை பற்றி பேசலை.
ரசிகா பசங்களை படுக்க போட்டு விபு, “இவங்கள பார்த்துக்கோ”. நான் லிது நிதுவை தூங்க வைத்துட்டு வாரேன் என்று ஆரவ் யோகிதாவை பார்த்து, அத்தை சீக்கிரம் உங்களிடம் வந்துருவேன். நீங்க அண்ணாவோட தூங்குங்க என்று லிது நிதுவை பார்க்க வந்தாள்.
லிதுவும் நிதுவும் அவளை பார்க்க, மெல்லி எங்கே? ரசிகா கேட்க, “அத்தை அவளோட அறையில இருக்கா” என்று லிது சொன்னாள்.
ஓ.கே, நாம தூங்கலாமா? என்று லிது, நிதுவுக்கு இடையே படுத்துக் கொண்டு கதை கூறி தூங்க வைத்து விட்டு எழுந்தாள். ஆதியை பார்க்கணும் போல் ரசிகாவிற்கு தோன்ற, என்ன சொல்லி அவரை பார்க்க என்று சிந்தனையுடன் வெளியே வந்தவள் கண்ணில் அகரன் அறை பட்டது. அவன் மெல்லினாவை பார்த்ததை ரசிகாவும் பார்த்தாலே! அவன் இங்கிருந்தால் பிரச்சனையாகுமோ? என்று யோசனையுடன் ஆதிரேயனின் அறைக்கதவை பார்க்க, திறந்து இருந்தது.
ஆதி தன்னுடைய கண்கண்ணாடியை போட்டுக் கொண்டு லேப்பில் ஏதோ வேலையில் இருந்தான்.
“சார்” என்று தயங்கி ரசிகா அழைத்துக் கொண்டே வெளியே நிற்க, அவளை திரும்பி பார்த்து, உள்ள வா. நானே பேச நினைத்தேன் என்று அவன் அவள் பக்கம் திரும்ப, பேசணுமா? எனக்கும் இவர் மீதிருக்கும் காதலை புரிந்திருப்பாரோ? அதை பற்றி தான் கேட்கப் போகிறாரோ? என்று ரசிகா பதட்டமானாள்.
எழுந்த ஆதி அவன் சோபாவிடம் வந்து, உட்காரு ரசி என்று அவளை அமர்ந்தி, அவன் சில பைல்லுடன் ரசிகாவிடம் வந்து அமர்ந்தான்.
ரசி, இது விபு, ஆரவ், யோகியோட டி.சி. அவங்க பள்ளியில் இருந்து அகரன் சொல்லி திரிவேஷ் வாங்கி வந்திருக்கான் என்று அவளிடம் காட்டிய ஆதி, நாளைக்கு பசங்கள பள்ளியில் சேர்த்திடலாமே? அவன் கேட்டுக் கொண்டிருக்க, ஆதி என்று பிரபாகரனும் உள்ளே வந்தார்.
“வாங்கப்பா” என்று ஆதி எழ ரசிகாவும் எழுந்தாள்.
அம்மா, நீயும் இங்கே தான் இருக்கிறாயா?
இப்ப தான் சார் வந்தேன். நான் எதுக்கு வந்தேன்னா..என்ற ரசிகாவை நிறுத்தி, அம்மா உன்னோட காரணம் தேவையில்லை. நீங்க உங்க விசயத்தை அப்புறம் பேசிக்கோங்க. ஆதி, எதுக்கு வரச் சொன்ன? பிரபாகரன் கேட்டார்.
“அப்பா” என்று ஆதிரேயன் ரசிகாவிடம் பசங்களை பள்ளிக்கு சேர்ப்பதை சொன்னது போல் பிரபாகரனிடம் சொன்னார். அவர் ரசிகாவை பார்த்தார்.
சார், இருக்கட்டும். டீ.சியை கொடுங்க. நான் அவங்கள பள்ளியில் சேர்த்துக்கிறேன் என்றாள் ரசிகா.
ஏன்? நாங்க சேர்க்கக்கூடாதா? ஆதிரேயன் கேட்க, சார் என்னால மூவருக்கும் பணம் கட்ட முடியாது. உங்களது பள்ளியில் ஃபீஸ் அதிகமாக இருக்கும். நான் வேற ஏதாவது பள்ளியில் சேர்த்துக்கிறேன் என்றாள்.
ரசி, என்னை கோபப்படுத்தாத. சேர்க்கும் எங்களுக்கு பணம் கட்டத் தெரியாதா? ஆதிரேயன் சினமுடன் கேட்டான்.
ஆதி, எதுக்கு இவ்வளவு கோபம்? இத்தனை வருசமா பிள்ளைங்கல்ல ரசி தான படிக்க வச்சா? அதனால அவளால் முடிந்தவரை அவள் கொடுக்கட்டும். மீதியை நீ கொடு என்று பிரபாகரன் ரசிகாவை பார்த்தார்.
சார், நான் இன்னும் ஒரு மாதம் தான் இங்கிருப்பேன். பின் வேற இடத்திற்கு போனா பசங்களை அங்க மாத்தணும். அதனால் இந்த மாதம் பசங்களை பள்ளியில் சேர்க்க வேண்டாம்ன்னு நினைக்கிறேன் என்றாள்.
“நீ முடிவெடுத்துட்ட!” சரிம்மா. ஆனால் பசங்க படிப்பு பாதிக்கப்படுமே? பிரபாகரன் கேட்க, ரசிகா சிந்தனையுடன் சரி சார். இப்பொழுதைக்கு அவங்க இங்கேயே படிக்கட்டும். ஆனால் நான் பணம் கட்டிக்கிறேன் என்றாள்.
ஆதி கோபமாக அவளை முறைக்க, சரி சார், நீங்களும் பாதி பணம் கட்டுங்க என்றாள் ரசிகா. நாளைக்கு வெள்ளிக்கிழமை. பசங்களை சேர்க்கலாமே?
நாளைக்கேவா? ரசிகா கேட்க, ஆமாம்மா, நாளைக்கு ஆதி பசங்களை சேர்த்து விட்டுருவான் என்று பிரபாகரன் சொல்லி விட்டு இருவரையும் பார்த்தார்.
“சரிங்க சார்” என்று ரசிகா சொல்ல, ஆதிரேயன் அமைதியானான்.
சரி, “நீங்க பேசுங்க” என்று பிரபாகரன் வெளியேறினார். ரசிகாவும் எழுந்து ஆதிரேயனை பார்த்தாள்.
ஆதி எழுந்து அவளிடம் வர, பயத்துடன் ரசிகா அவனை பார்த்தாள். அவன் கதவை அடைத்து தாழ்ப்பாள் போட்டான்.
சார், எதுக்கு தாழ்ப்பாள் போட்டீங்க? என்று கதவருகே அவளும் வந்தாள்.
ஏதோ பேச வந்த? பேச வேண்டாமா? ஆதிரேயன் கேட்க, உங்களை பார்க்க வந்தேன் என்றா சொல்லுவாள்? அகரன்..என்று தயங்கி, அகரன் இங்கே இருப்பது உங்களுக்கு பிரச்சனையில்லையே? அவள் கேட்க, அவளை நெருங்கிய ஆதி, ஏன் அவனை நீ பார்த்துக் கொள்ளப் போகிறாயா? எனக் கேட்டான்.
இல்ல சார், உங்களுக்கு ஏதாவது டிஸ்டர்பன்ஸ்? என்று ரசிகா கேட்க, அவன் எதுக்கு என்னை டிஸ்டர்ப் பண்ணப் போறான்? அவன் ஏதும் செய்யலை. நீ தான் என்னை டிஸ்டர்ப் பண்ற? என்றான் ஆதிரேயன்.
நானா? நான் என்ன செய்தேன் சார்? ரசிகா கேட்க, ம்ம்..நீ தான். நீயே தான் டிஸ்டர்ப் பண்ற?
இல்ல சார், நான் வாரேன் என்று கதவில் கை வைத்தாள் ரசிகா. ஆதி அவளை பின்னிருந்து அணைத்து, ப்ளீஸ் எதுவும் பேசாத. நான் பேசணும் என்றான் ஆதிரேயன். ரசிகா தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி கண்கலங்க அமைதியாக கதவை பார்த்து நின்றாள்.
ரசி, நீ எதுக்கு போறேன்னு சொல்லுற? எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? உன்னோட விபு கூட என்னை ஏற்றுக் கொண்டான். நீ ஏன் ஏத்துக்க மாட்டேங்குற? ரசி, நீ உன்னையே ஏமாத்திக்கிட்டு இருக்க? ஆதி சொல்ல, ரசிகாவிற்கு அழுகை வந்தது.
ரசிகா அழுவது தெரியவே அவளை ஆதி அவனது படுக்கைக்கு அழைத்து வந்து, அவளை அமர வைத்து அவள் மடியில் படுத்துக் கொண்டான்.
“நான் கிளம்புகிறேன் சார்” அவள் சொல்ல, அவள் மடியில் படுத்துக் கொண்டு அவள் கண்ணீரை துடைத்து விட்டு, நாம் நமக்காக வாழணும் ரசி. எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. உன்னை மட்டும் தான் பிடிச்சிருக்கு. நீ என்னை விட்டு போகாத ரசி என்றான் ஆதி கண்ணீருடன்.
நான் போகணும் சார். என்னோட பசங்க இங்க சந்தோசமா இருக்க மாட்டாங்க. அவங்களுக்கு இப்ப நான் தான் இருக்கணும். அவங்க குடும்பத்தை விட்டு என்னை நம்பி வந்திருக்காங்க. என்னால அவங்கள தனியா விட முடியாது சார். அப்புறம் நீங்க கூட லிது, நிதுவுக்கான சரியான அம்மாவை வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க. பசங்க ரொம்ப நாள் அமைதியா இருக்க மாட்டாங்க. கண்டிப்பாக அவங்க அம்மா பத்தி கேட்பாங்க என்று ஆதிரேயனை பார்த்தாள்.
ரசிகா மனம் கனத்து பேச முடியாமல் மௌனமாக கண்ணீருடன் அமர்ந்திருந்தாள். நீ பாரு. நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றான் ஆதி.
என்னால முடியாது சார்.
முடியாதுல்ல. என்னாலும் வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்க முடியாது ரசி. ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிற? எல்லாருமே உனக்கு செல்லமாக பெயர் வச்சிருக்காங்க. நானும் உனக்கு வச்சிருக்கேன் என்று ஆதி ரசிகாவை பார்த்தான்.
ரசிகா கண்ணீரை துடைத்து, அவனை பார்த்தாள். எனக்கு கிஸ் பண்ணு. நான் சொல்கிறேன் என்றான் அவன். அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ரசிகா.
சரி, “நான் பண்றேன்” என்று ரசிகா கன்னத்தில் முத்தமிட்டான் ஆதி. அவள் கை தானாக அவன் தலைக்கு சென்றது.
ரசி, நீ என்னோட “ப்ளாக் மூன்” என்றான் ஆதிரேயன். ரசி முகம் சுருங்கியது.
கோபமா ரசி? அவன் கேட்க, அவள் அவனை நகர்த்தி எழுந்தாள். எழுந்து அமர்ந்த ஆதி, ரசிகாவை இழுத்து அவன் மடியில் அமர்த்தி, என்னோட இருட்டான வாழ்க்கையை பிரகாசமாக்கிய மூன் நீ தான். எப்படி இரவில் வெண்ணிலா அழகாக இருட்டில் பிரகாசித்து ஒளி தருமோ? அதே போல் இருட்டான மனதில் ஒளியாய் தோன்றிய மூன் நீ தான் என்னோட “ப்ளாக் மூன்” என்றான்.
ரசிகா கண்ணீருடன் அவனை பார்த்து, நான் அதிர்ஷ்டம் கெட்டவள் சார். நான் உங்களருகே எப்படி சார் இருப்பது?
நான் எப்படின்னு நினைக்கிற ரசி? நானும் என்று தொடங்கிய ஆதிரேயன் வாயை அவனை பேச விடாமல் ரசிகா கைகளால் தடுத்தாள். அவள் கையை விலக்கிய ஆதி, காதலுடன் அவளை கெஞ்சுவது போல் பார்த்தான்.
சார், நான் என்னோட முடிவிலிருந்து வெளியே வர முடியாது. ஆனால் இந்த ஒரு மாதம் உங்கள் விருப்பப்படி நடந்து கொள்கிறேன் என்று ரசிகா சொல்ல, ஆதி அவளை விலக்கி பார்த்தான்.
ரசி, என்ன சொன்ன? ஆதி கேட்க, ஆமா சார், உங்களுக்கு என்னை பிடிச்சிருக்குன்னு நீங்க தான சொன்னீங்க? அதான் நான் வீட்டில் இருக்கும் வரை நீங்க சொல்லும் அனைத்தையும் செய்கிறேன் என்றாள் ரசிகா.
ரசி, நீ தப்பா புரிஞ்சுகிட்ட ஆதி சொல்ல, இல்லை சார். நான் சரியா தான் சொல்றேன். ம்ம்..டேட்டிங் மாதிரி வச்சுக்கலாம் என்றாள்.
டேட்டிங்கா? ரசி நான் உன்னிடம் சீரியசா இருக்கேன்.
அதனால் தான் சார் டேட்டிங் பண்ணலாம்ன்னு சொன்னேன். இல்லன்னா அப்பொழுதே உங்களது வீட்டிலிருந்து கிளம்பி இருப்பேன். உங்களுக்கு ஓ.கேன்னா நம்மால் சேர்ந்து வாழவில்லை என்றாலும் நமக்கான நினைவுகளை சேர்த்து வைக்கலாம் என்றாள்.
தேங்க்ஸ் ரசி, இதுக்காவது ஒத்துக்கிட்டியே? ஆனால் ரசி நீ வருத்தப்படாத. நான் எல்லை மீற மாட்டேன் என்று ஆதி ரசிகாவை கூர்ந்து கவனித்தான். ரசிகா தவறு செய்ததை போல் உணர்ந்தாள்.
சாரி சார், நமக்குள் ஏற்கனவே எல்லாம் நடந்து விட்டது. உங்களுக்கு தெரியாமலே உங்களை பயன்படுத்திக் கொண்டேன் என மனதில் நினைத்துக் கொண்டு, சாரி என்று ஆதிரேயனிடம் சொல்ல, எதுக்கு ரசி இந்த சாரியெல்லாம்? அவன் கேட்க, அவள் கண்ணீருடன் மனதினுள், உண்மை தெரிந்தால் நீங்கள் என்னை வெறுத்துடுவீங்க சார் என்று அழுதாள்.
எதுக்கு அழுற ரசி? ஆதி அவளை அணைத்துக் கொள்ள, அவளும் அவனை அணைத்துக் கொண்டு அழுதாள்.
“அழுறத நிறுத்து” என்று அவனது கண்ணாடியை கழற்றி விட்டு அவளது மடியில் படுத்துக் கொண்டான். இருவரும் கையை கோர்த்துக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்க்க, ஆதி அவளுக்கு முத்தமிட்டான். சிலமணி நேரம் இருவரும் முத்த மழையில் நனைந்து கொண்டிருந்தனர். பின் ஆதி மீண்டும் ரசிகா மடியில் அவளை அணைத்துக் கொண்டு துயிலானான். அவன் நன்றாக தூங்கிய பின் ரசிகா எழுந்து, ஆதியை படுக்கையில் படுக்க வைத்து விட்டு லிது, நிது அறைக்கு சென்று அவர்களை தூக்கி வந்து ஆதி அருகே படுக்க வைத்தாள். லிது விழித்து விட, “அப்பாவோட தூங்கு” என்று ரசிகா அவளுக்கு தட்டிக் கொடுத்து தூங்க வைத்து விட்டு, மூவர் நெற்றியிலும் இதழ் பதித்து விபு இருக்கும் அறைக்கு சென்றாள்.
விபு, ஆரவ், யோகிதா தூங்கிக் கொண்டிருக்க, அவர்களுடன் ரசிகா படுத்துக் கொள்ள, ஆதிரேயனின் பர்ஃபியூம் வாசனை ரசிகா மீது வருவதை கவனித்து, ஏதோ நடந்து உள்ளது என்று விழித்த விபுதன் யூகித்தாலும் ஏதும் பேசாமல் தூங்கி விட்டான்.
மறுநாள் ஆதி எழுந்த போது பசங்களுடன் இருப்பதை பார்த்து விட்டு, போனை பார்த்தான். அவனுக்கு நேற்றைய நினைவில் ரசிகாவை போனில் அழைத்தான். அவள் போன் விபுதன் அறையில் இருந்தது. விபுதன் போனை எடுக்க, ரசி இல்லையா? ஆதி கேட்டான்.
அத்தை, சமையலறையில் இருப்பாங்க. முக்கியமாக ஏதும் பேசணுமா? விபுதன் கேட்க, இல்ல விபு என்று ஆதி தயங்கினான்.
நான் உங்க அறைக்கு வரவா? விபுதன் கேட்டான்.
ம்ம், சுயர் வா என்று ஆதி சொல்ல, விபுதன் போனை வைத்து விட்டு ஆதி அறைக்கு சென்றான். ஆதி படுக்கையில் பசங்க தூங்குவதை பார்த்து, அத்தை நேற்றிரவு உங்கள் அறைக்கு வந்தாங்களா? என்று எடுத்தவுடன் விபுதன் கேட்கவும், ஆதி பதில் சொல்ல முடியாமல் அவனை பார்த்தான்.
அதான் இருவருமே காதலிக்கிறீங்கன்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சே. அதுக்கில்லை நேரம் கழித்து வந்தாங்களா? அதான் மறுபடியும் விட்டு போயிடுவாங்களோன்னு கேட்டான் என்றான் விபுதன்.
இங்க தான் வந்தா? நான் தூங்கிய பின் பசங்களை அவள் தான் இங்கே படுக்க வைத்து சென்றிருக்கிறாள் என்று விபுதனிடம் டேட்டிங்கை சொல்லலாமா? என யோசிக்க, விபுதன் ஆதிரேயன் அறையை பார்த்து விட்டு, உள்ளிருக்கும் அறையை பார்த்து அதை நோக்கி சென்றான்.
இதுவரை அந்த அறைக்கு நான் யாரையும் விட்டதில்லை ஆதிரேயன் சொல்ல, என்னை போகக்கூடாதுன்னு சொல்றீங்களா? ஏற்கனவே ஒருவனை ஏமாந்தது போதாதா? இப்பவாது அத்தை நிம்மதியா இருக்கணும் என்றான் விபுதன்.
உன்னோட அத்தை தான் ஒத்துக்க மாட்டேங்கிறாளே? ஆதி கேட்க, ஆமா அவள் எதுக்கு தான் ஒத்துப்பா? அவளை விடுங்க என்று ஆதியை பார்த்தான் விபுதன்.
சரி, “போய் பாரு” ஆதி சாவியை விபுதனிடம் போட அதை பிடித்து, கதவை திறந்து உள்ளே சென்றான். அதில் முழுவதும் பொண்ணுங்க பயன்படுத்தும் ஆடை, அணிகலங்கள், மேக் அப் பொருட்கள் இருந்தது. பின் விபு கண்ணில் பட்டது திரையிடப்பட்ட ஓர் பெயிண்ட்டிங் ஸ்டாண்ட்.
ஆதியை திரும்பி பார்த்துக் கொண்டே விபுதன் அதனை விலக்கி பார்த்தான். அதில் ரசிகாவை வரைந்து வைத்திருந்தான் ஆதிரேயன்.
சார், இது? என வாயை பிளந்து கொண்டு விபுதன் கேட்க, ரசி வீட்டிற்கு வரும் முன் என் கற்பனையில் முகமில்லாமல் வரைந்து வைத்திருந்தேன். ரசியை பிடித்தவுடன் மேச் பண்ணேன். அவள் முகத்திற்கு சரியாக பொருந்தியது. எனக்கே இது ஆச்சர்யம் தான் என்றான் ஆதிரேயன்.
உங்களுக்கு என் அத்தையை முன்பே தெரியுமா? விபுதன் கேட்க, தெரியாது. ஆனால் அகரன் சொல்லி தான் நாங்க ஒரே காலேஜ்ன்னு ஒரு வாரம் முன் தான் தெரிந்தது என்றான்.
அத்தைக்கு இது தெரியுமா? விபுதன் கேட்க, அவளுக்கு தெரியாது. இப்பொழுதைக்கு தெரிய வேண்டாம்ன்னு நாங்க விட்டுட்டோம் என்றான்.
எதுக்கு தெரிய கூடாது?
முதல்ல அவள் என்னை கல்யாணம் பண்ண ஒத்துக்கட்டும். அப்புறம் பார்க்கலாம் என்றான் ஆதி.
ம்ம்..அவன் சொல்லிக் கொண்டிருக்க, ரசிகா உள்ளே வந்தாள்.
விபு, இங்க என்ன பண்ற? என்று ரசிகா கேட்க, ஆதி அவனை இழுத்துக் கொண்டு வெளியே வந்து அவ்வறையை சாத்தினான். ரசிகா அவனை பார்த்து விட்டு விபுதனை பார்த்தாள். விபு ஆதியை பார்த்துக் கொண்டிருந்தான்.
நான் கேட்டேன்? என கோபமாக ரசிகா விபுவை முறைக்க, “நான் தான் அவனை என் அறைக்கு அழைத்து வந்தேன்” என்றான் ஆதி புன்னகையுடன்.
எதுக்கு? ரசி கேட்க, நாங்க ஆயிரம் பேசுவோம். உனக்கென்ன? விபுதன் கேட்டான்.
நீங்களா பேசுவீங்களா? என்ன பேசுவீங்க? ரசிகா கேட்க, ஆதி அவளை காதலுடன் பார்த்தான்.
தேனீரை ஆதிக்கு கொடுத்து விட்டு, நீ அறைக்கு போ. பள்ளிக்கு தயாராகணும் என்றாள்.
ஒரு நிமிசம் விபு என்ற ஆதி அவனை நிறுத்தி, ஒரு கவரை கொடுத்தான்.
என்னது இது? ஆதி கேட்க, பள்ளிக்கு ஒன்று மட்டும் இதை போட்டுக்கோங்க. உனக்கு, ஆரவ், யோகிக்கும் ஆடை இருக்கு என்றான்.
“தேங்க்ஸ் மாமா”, என்று ஆதி கன்னத்தில் முத்தமிட்டு விபு ரசிகாவை வெறுப்பேற்ற, டேய் நில்லுடா, என்ன சொன்ன? என்ன சொல்ற? என்று ரசிகா வந்த வழியே செல்ல, ரசிகாவை இழுத்து அணைத்துக் கொண்டான் ஆதிரேயன்.
மாமா, கதவை சாத்திக்கோங்க. யாராவது பார்க்கப் போறாங்க என்று சத்தமாக விபுதன் புன்னகையுடன் கீழிருந்தவர்களை பார்த்துக் கொண்டே அறைக்கு சென்றான்.
அய்யோ, என்ன க்யூட்டா சிரிக்கிறான்? என மெல்லினா அகரனிடம் சொல்ல, ஆமா “எனக்கு இது தேவை தான்” என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டான் அகரன்.
அய்யோ, விடுங்க சார் ரசிகா சொல்ல, அப்பா ரசிய என்ன பண்றீங்க? லிது கேட்க, ரசிகாவை விட்டு விலகிய ஆதி, அசட்டு புன்னகையுடன் தலையை அழுத்தமாக கோதினான்.
சீக்கிரம் தயாராகி, பசங்களையும் தயார் செய்து நீங்கள் தான் அழைத்து வரணும் என்று ரசிகா சொல்லி விட்டு, லிது, நிது அப்பா சொல்வதை கேட்டு தயாராகி வாங்க. நான் உங்களுக்கு பால் எடுத்துட்டு வாரேன் என்று அவள் சென்றாள்.
அனைவரும் பள்ளிக்கு தயாராக, நீங்களும் எங்களுடைய பள்ளிக்கு தான் வர்றீங்களா? என விபுதனை பார்த்து கேட்டாள் மெல்லினா.
இல்ல, “உங்க ஸ்கூலுக்கு பக்கத்து ஸ்கூல்ல தான் சேரப் போறோம்” என்றான் விபுதன்.
என்ன? மெல்லினா கேட்க, சொன்னது கேட்கலையா? விபுதன் கேட்டான். அகரன் இருவரையும் பார்த்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
ரசி நீயும் சாப்பிடு. நாம போயிட்டு வர நேரமாகும் என்ற ஆதிரேயன் ரசிகா அருகே வந்து அவள் கையை பிடித்து, நாங்க இந்த ஒரு மாதம் டேட் பண்ணப் போறோம் என்றான்.
ஒரு மாதம் தானா? தமிழரசன் கேட்க, ரசிகா அவரை முறைத்தாள்.
சரிம்மா..சரி, “நல்ல படியா பண்ணுங்க” என்றார் அவர்.
ஏம்மா, அப்படியே கல்யாணமும் பண்ணிக்கலாமே? பிரபாகரன் கேட்க, சார் இந்த மாதமும் வீட்டுக்குள்ள தான் டேட் பண்ணப் போறோம் என்றாள்.
என்னது? என்று அதிர்ந்து ஆதிரேயன் ரசிகாவை பார்த்தான். அகரன் சிரித்துக் கொண்டு, அவள் சொல்லும் போதே நினைத்தேன். பாஸ், இது டேட் மாதிரியா இருக்கும்? என்று அகரன் அவனை கிண்டல் செய்தான்.
டேய், சும்மா இரு. “எரிச்சலாக்காத!” என்ற ஆதிரேயன், ரசி வெளியே எங்கேயும் போகாமல் டேட்டா? எப்படி?
“பேமிலி டேட்டிங்” என்றாள் ரசிகா.
இது என்ன புதுவிதமான டேட்டிங்கா இருக்கு? மெல்லினா கேட்க, ஆமா ருச்சி தான் புதுசு புதுசா யோசிப்பா என்ற அகரன், “எஞ்சாய் பாஸ்” என்றான் கேலியாக.
வீட்ல எப்படி டேட்டிங் பண்ண முடியும் ரசி? மெல்லினா கேட்க, சமையலுக்கு உதவலாம். துணி துவைக்க உதவலாம். சமையலுக்கு பொருள் வாங்க உதவலாம் என்று ரசிகா சொல்ல, பிரபாகரனுக்கு புரை ஏறியது.
சார், இந்தாங்க என்று ரசிகா தண்ணீர் எடுத்து பிரபாகரனுக்கு கொடுத்து விட்டு, ஆதி சார் ஓ.கே வா? என கேட்டாள் ரசிகா.
கண்டிப்பா டேட்டிங்கில் இது அவசியமா? ஆதி கேட்க, பாஸ் லவ்வுக்காக இதை கூட செய்ய மாட்டீங்களா? பசங்க என்னவெல்லாம் செய்வாங்க தெரியுமா? ரசி நீ இதிலும் தோற்று தான் போயிட்ட அகரன் சொன்னான்.
அகரா, சும்மா இரு என்றாள் ரசிகா.
சரி, பசங்க என்னவெல்லாம் செய்வாங்க? ஆதி கேட்க, பாஸ் அவங்க சொல்ற இடத்துக்கெல்லாம் கூட்டிட்டு போகணும். அவங்க லேட்டா வருவாங்க. ஆனால் நாம சரியான நேரத்துல நாம இருக்கணும். இல்ல உடனே பிரேக் அப் தான் என்றான் அகரன்.
உனக்கு இதெல்லாம் எப்படி தெரியுது? ஆதி கேட்க, பாஸ் பொண்ணுங்க சைக்கலாஜியே இது தான். நமக்கு பிடிச்சது அவங்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.
ஓய், என்ன ஓவரா பேசுற? ரசிகா சத்தமிட, நான் பசங்களுக்கு உதவியதை வைத்து சொல்றேன். என்னை விட்டுரு தாயி என்றான் அகரன்.
ஆமா மாமா, மாம்ஸ் நிறைய காதலர்களை சேர்த்து வச்சிருக்கான். அவனிடம் கேட்டுக்கோங்க விபுதன் சொல்ல, ஆரவ் அவனிடம் வந்து, மாம்ஸ் எனக்கும் கெல்ப் பண்ணுவியா? என்று கேட்டான்.
என்னது உனக்கா? ஆதி கேட்க, ஆரவ்..ரசிகா சத்தமிட்டாள்.
அத்தை எனக்கில்லை என்று விபுதனை பார்த்தான் ஆரவ். எல்லாரும் அவனை பார்க்க, ரசிகாவும் பார்த்தால் ஆனால் ஏதும் சொல்லவில்லை.
வெட்டியா பேசாம? முதல்ல எல்லாரும் பள்ளிக்கு கிளம்புங்க என்று அகரன் சொல்ல, டேய் வர வர அதிகமா பேசுற? ஆதி சொல்ல, அதுவா வருது பாஸ் என்று அகரன் சொல்ல, அனைவரும் பள்ளிக்கு கிளம்பினார்கள்.