“யாராவது பார்த்தால் தப்பா நினைக்கப் போறாங்க” அகரன் சொல்ல, மெல்லினா சிரித்து விட்டு, அவன் சொன்னதை கண்டு கொள்ளாமல் அகரா,”எனக்கு ஒரு ஐடியா வந்திருக்கு ஓ.கே வான்னு சொல்லு?” என்று மெல்லினா கேட்க, அவளை பார்த்துக் கொண்டிருந்தான் அகரன்.
என்னால அவனிடம் நேர்ல சொல்ல முடியாது. நான் மது அருந்தி விட்டு போனால் தைரியம் வரும். சொல்லிடுவேனே? மெல்லினா சொல்ல, மறுபடியும் டிரிங்க் பண்ணப் போறீயா அவனுக்காக? அகரன் கோபமாக கேட்டான்.
“ஆமா, அப்ப தான் அவனை பார்த்து நேராக பேச முடியும்” மெல்லினா சொல்ல, உன்னோட ப்ரெண்ட்ஸ் மாதிரி அவன் இல்லை. அவனுக்கு இதெல்லாம் சுத்தமாக பிடிக்காது என்றான் அகரன்.
பையன் தான அவன்? மெல்லினா கூற, அதனால் தான் வேண்டாம்ன்னு சொல்றேன் என்றான் கோபமாக அகரன்.
எங்க வச்சு சொல்லுவ? அகரன் கேட்க, அவனோட அறைக்கு போய் தான் சொல்லணும்.
ரொம்ப நல்லது. வெளிய போ என்று அகரன் கோபத்தை குறைத்து சொன்னான்.
அப்ப இது சரிவராதா? வேற என்ன பண்ணலாம்? மெல்லினா கேட்க, என்னை இதுவரை யாரும் இப்படி சித்திரவதை செய்ததில்லை. என்னால இதுக்கு மேல இவளிடம் பேச முடியலை. இந்த அளவு யோசிக்கிறாளே? என் மனசை அதிகமாகவே உடைக்கிறாள் என்று அகரன் மனதினுள் குமுறிக் கொண்டிருந்தான்.
சொல்லுடா? மெல்லினா கேட்க, முதல்ல ஆரவ், யோகியை கரெக்ட் பண்ணு. அவன் தானாகவே உன் பக்கம் சாய்வான் என்று அகரன் சொல்லி விட்டு, நீ முதல்ல வெளிய போ என்றான்.
எதுக்கு என்னை வெளிய அனுப்புறதிலே குறியா இருக்க? மெல்லினா கேட்டுக் கொண்டே அவன் படுக்கையில் அமர்ந்தாள்.
உன்னை போக சொன்னேன் என்று அகரன் சொல்ல, நான் போக மாட்டேனே? என்று அகரன் பொருட்களை எடுத்து பார்த்தாள். அவனது சட்டையில் மெல்லினா கை வைக்க, ஏய் எதையும் தொடாதே என்று அகரன் வேகமாக இறங்கினான்.
சட்டென இறங்கியதில் அவனுக்கு வலிக்கவே நிற்க முடியாமல் தடுமாறினான். “விழுந்துறாத” என்று மெல்லினா அகரனை பிடித்தாள். அவள் கையை தட்டி விட்டு, “வெளிய போ” என்று சத்தமிட்டான்.
அகரா, நான் என்ன செய்தேன்? எதுக்கு கோபப்படுற? மெல்லினா கேட்க, போறீயா இல்லை பாஸை அழைக்கவா? என்று சீறினான். மெல்லினா கஷ்டமுடன் வெளியே வந்தாள். யாருமே ஹாலில் இல்லை. அவள் அமைதியாக அவளறைக்கு சென்று தயாராகி வந்தாள். வெளியே சென்ற தமிழரசன் அகரன் அறைக்கு வந்தார்.
அகரன் அழுது கொண்டிருந்தான். அவர் புரிந்து கொண்டு, நீ தயாராக இரு. நாம உன்னோட வீட்டுக்கு போகலாம் என்றார். அகரன் தமிழரசனை அணைத்து, ருச்சியால் கூட நான் இவ்வளவு கஷ்டப்படல சார் என்று அழுதான்.
சரி, நீ ஓய்வெடு என்று அவர் வெளியே சென்று ஆதிக்கு கால் செய்து, அகரனை அவன் வீட்டுக்கு அழைச்சிட்டு போறேன்னு சொல்லிக் கொண்டிருந்தார். ரசிகா இதை கேட்டு, அவனுக்கு என்னாச்சுப்பா? என்று கேட்டாள்.
ஒன்றுமில்லைம்மா. அவனால் இங்கே இருக்க முடியலையாம். ஏதோ சொல்றான்.
இருங்க. அவனிடம் நான் பேசுகிறேன் என்று ரசிகா உள்ளே சென்று அகரனிடம் பேச, ரசி இங்கே இருந்தாலும் கவனமா இரு. எல்லாரையும் கவனமா பார்த்துக்கோ என்று அகரன் சொல்ல, அகரா நீ மெல்லியால் தான் கிளம்புறியா? ரசிகா கேட்க, திகைப்பை காட்டிக் கொள்ளாமல், அதுக்கில்லை ரசி. நான் பாஸ் வீட்ல இருப்பது கம்பெனியில தெரிய ஆரம்பித்து விட்டது. அவருக்கு என்னால் பிரச்சனை ஆகிவிடுமே? அதற்குள் கிளம்புவது தான் சரியாக இருக்கும்.
அப்புறம், பெரியவங்க எல்லாரிடமும் சொல்லிக்கிறேன். பசங்ககிட்ட சொல்லாத. எஞ்சாய் பண்ணிட்டு வாங்க. ஏதும் பிரச்சனைன்னா கால் பண்ணு என்று அகரன் கூறினான்.
அகரா தமிழப்பாவுக்கு வேலை இருக்கும். அப்ப என்ன செய்வ?
நான் பார்த்துப்பேன் ருச்சி. நீ எல்லாரையும் பார்த்துக்கோ என்றான்.
விபுதன் அகரன் அறைக்கு வந்தான். மெல்லினா பசங்களும் அவனுடன் வந்தாள்.
பேபி பிங்க் கலந்த வெண்ணிற அழகான வெஸ்டர்ன் கவுனுடன் வந்தாள் மெல்லினா. அவள் அகரனை பார்த்து, விபு அருகே நின்று காட்ட, அவளை ரசித்த அவன் மனம் கனத்தது.
மாம்ஸ், நீயும் வந்தால் செம்மையா இருக்கும் என்று விபுதன் சொல்ல, சில நேரம் அடிபடுவதும் சரிதான் என்று அகரன் சொன்னான். ரசிகா மெல்லினாவை பார்த்தாள். அவளோ விபுவிடம் காதலை சொல்லி விட வேண்டும் என்று உறுதியுடனும் மகிழ்வுடனும் இருந்தாள்.
நான் என்ன சொல்றேன்? நீ என்ன சொல்ற மாம்ஸ்? என்று கேட்டான்.
சரி, போயிட்டு வாங்க. “என்ஜாய்” என்று அகரன் சொல்ல, எல்லாரும் வெளியே வந்தனர். விபுதன் அகரனை பார்த்துக் கொண்டே வெளியே வந்தான்.
விபு, பாஸ் வந்துட்டாரா? அகரன் கேட்க, ஆபிஸூக்கு போனார் என்று விபுதன் மீண்டும் அகரன் அறைக்குள் வந்தான்.
அந்த துரை பிரச்சனை ஏதும் பண்ணலையே? உதவ ஒத்துக் கொண்டானா? அகரன் கேட்க, ம்ம்..மாமாவே பேசிட்டார். நீ பயந்த அளவு இல்லை என்றான் விபுதன்.
இல்ல விபு, அவனுககிட்ட உதவிக்குன்னு போனாலும் சில நேரம் வாயை கொடுத்து சிலர் அடி வாங்கிட்டு வருவானுக. துரை ஆளுங்க கொஞ்சம் ஓவரா பேசுவானுக. அதான் பாஸ்ஸை தனியா அனுப்ப வேண்டாம்ன்னு யோசித்தேன்.
மாம்ஸ், ஏதும் பிரச்சனையா? விபுதன் கேட்க, என்ன பிரச்சனை? யாருக்கு? என்று அகரன் கேட்க, சரி மாம்ஸ், நாங்க போயிட்டு உனக்கு ஏதாவது வாங்கி வாரோம் .உனக்கு ஏதாவது வேண்டுமா? விபுதன் கேட்க, இல்லடா, எனக்கு என்ன தேவைப்படப் போகுது. நீ கிளம்பு. முடிந்தால் ருச்சியிடம் பாஸ்ஸை கல்யாணம் பண்ணிக்க சொல்லு என்றான்.
மாம்ஸ், அத்தை நான் சொல்லி கேட்பாங்களா? அவன் கேட்க, சரி கிளம்புங்க என்றான் அகரன்.
ஆதிரேயன் வீட்டிற்குள் வந்ததும் ரசிகா அவனை அழைக்க, கண்ணசைத்த ஆதி வேகமாக அகரன் அறைக்கு சென்று தாழிட்டான்.
அகரன் பயந்து பாஸ்..என்று எழுந்தான்.
அகரா, நீ எதுக்கு போகணும்ன்னு சொல்ற? ஆதி கேட்க, எனக்கு இங்கே இருக்க முடியலை பாஸ் என்றான் அகரன்.
அதான் ஏன்? என்று ஆதி தெரியாதது போல் கேட்க, ரசிகாவிடம் கூறியதையே ஆதியிடமும் அகரன் சொன்னான்.
இதுக்கெல்லாமா?
பாஸ், இது இப்ப சாதாரண பேச்சாக இருக்கும். ஆனால் என்னை பற்றி என்ன பேசுவாங்கன்னு நான் உங்களிடம் சொல்ல தேவையில்லை. உங்களுக்கே தெரியும் என்றான் அகரன்.
யாருமில்லாமல் இந்த நிலையில் கஷ்டமா இருக்குமேடா? ஆதி கேட்க, தமிழ் சார் வாரேன்னு சொன்னார்.
இருவரும் க்ளோஸ் ஆகிட்டீங்க போல? ஆதி கேட்க, ஆமா பாஸ். நாங்கள் தான் ஒரே நிலையில் இருக்கிறோமே? அதான் என்று அகரன் புன்னகைத்தான்.
சரி, நீ போயிட்டு வா. அப்புறம் ஏதும் உதவி வேணும்ன்னா தயங்காம கேளு என்றான் ஆதி.
பாஸ், எனக்கு பேசவா சொல்லித் தரணும்? அகரன் கேட்க, புன்னகைத்த ஆதி அகரனை அணைக்க, பாஸ் பசங்க யாருக்கும் இப்பொழுதைக்கு தெரிய வேண்டாம். இரவு நான் போனில் சொல்லிக்கிறேன் என்றான் அகரன்.
சரி, பார்த்து இரு. சீக்கிரம் நம்ம கம்பெனிக்கு வந்துரு. என்னால அந்த பொண்ணை வைத்து வேலை பார்க்க முடியாது என்றான் ஆதிரேயன்.
சரிங்க பாஸ். சீக்கிரம் வந்துருவேன் என்று அகரன் சொல்லி விட்டு, பிரபா சாரை எஸ்டேட்டில் பார்த்து சொல்லீட்டு போறேன் என்றான்.
அப்பாவிடம் மாமா சொல்லி இருப்பார்.
ஆனால் பாஸ்?
கால் பண்ணி சொல்லிடுடா. நேரமாகுது நாங்க கிளம்புகிறோம் என்றான் ஆதிரேயன். அகரன் வெளியே வந்து அனைவர் அருகேயும் வந்து அமர்ந்தான். அமைதியாக அவன் எல்லாரையும் பார்த்துக் கொண்டிருந்தான். அகரன் அடிக்கடி மெல்லினாவை பார்ப்பதை பார்த்து ரசிகா அவனிடம் பேச அருகே வந்து அமர்ந்தாள்.
அமைதியா இரு ருச்சி. நீ எதுவும் சொல்ல வேண்டாம். என்னோட லிமிட் எனக்கு தெரியும் அகரன் சொல்ல, ரசிகாவிற்கு அவனை நினைத்து கஷ்டமாக இருந்தது. விபுதனும் இருவரையும் கவனித்தான்.
ஆதி தயாராகி வர, அனைவரும் கிளம்பினார்கள். அவர்கள் சென்ற பின் தமிழரசன் அகரனுடன் அவன் வீட்டிற்கு செல்ல, பிரபாகரனை பார்த்து சொல்லி விட்டு செல்ல எஸ்டேட் சென்றனர்.
என்னடா உனக்கென ஒரு மகனை சம்பாதித்துட்ட? பிரபாகரன் கேட்க, இருவரையும் அகரன் பார்த்தான்.
அகரா, இவன் உன்னை மகனாக நினைக்கிறானாம் என்று பிரபாகரன் சிரித்துக் கொண்டே செல்ல, அகரன் அழுது கொண்டே தமிழரசனை அணைத்தான்.
எதுக்குடா? நீ தான் அம்மா, அப்பா இல்லைன்னு கஷ்டப்பட்ட? நான் வேண்டுமானால் உன்னை தத்தெடுத்துக்கவா? என்று தமிரசன் கேட்க, அகரன் ம்ம்..என்றான். இருவரும் அகரனை பார்க்க, சார் நாங்க எங்க வீட்டுக்கு கிளம்புகிறோம்.
வாங்கப்பா என்று அகரன் சட்டென தமிழரசன் கையை பிடித்தான். அவர் கண்ணீருடன் அவனை பார்த்து, உனக்கு அக்கா, அண்ணா இருக்காங்க. அவங்க? அவர் கேட்டார்.
நான் சீரியசாக தான் உங்களை அப்பான்னு சொன்னேன். எனக்காக ஒருவர் இருப்பதால் எல்லாரும் சந்தோசம் தான் படுவாங்க என்றான் அகரன்.
பிரபா, உன் வாய் பேச்சு பழித்ததுடா என்று தமிழரசன் தன் நண்பனை அணைத்தார். அகரனும் தமிழரசனும் அகரன் வீட்டிற்கு சென்றனர்.
ஆதிரேயன், ரசிகா பசங்க அனைவரும் இரவு வீடு வந்து சேர்ந்தனர். சாப்பிட்டு வந்ததால் பிரபாகரனை பார்த்து பேசி விட்டு அவரவர் அறைக்கு சென்றனர்.
மெல்லினா எப்பொழுதும் போல் அகரன் அறைக்கு சென்றாள். அவன் பொருட்களும் இல்லை, அவனும் இல்லை.
எங்க போனான் இவன்? அங்கிள் எங்க போனாரு? அவரையும் காணோமே? அகரா, எங்க போன? இன்று நீ சொன்னது போல ஆரவும் யோகியும் விபுவும் கூட என்னோட ப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க. அதனால நான் விபுவிடம் காதலை சொல்லலை. ஆனால் சீக்கிரமே சொல்லணும். ஏதாவது உதவுவன்னு வந்தா உன்னை காணோமே? என்று அகரன் அறையை விட்டு யோசனையுடன் வந்தாள் மெல்லினா.
பிரபாகரனை பார்த்து, அவரிடம் கேட்க, அவன் அப்பாவுடன் சென்று விட்டான் என்று அவர் கூற, அவனுக்கு ஏது அப்பா? மெல்லினா கேட்டாள்.
நம்ம தமிழ் அகரனை தத்தெடுத்துக்கப் போறானாம் பிரபாகரன் மகிழ்ச்சியாக சொல்ல, அவன் என்ன சின்னக் குழந்தையா? மெல்லினா கேட்க, மெல்லிம்மா, சின்ன குழந்தைக்கு மட்டும் பெற்றோர் தேவைப்பட மாட்டாங்க. அகரனும் எத்தனை நாள் தனியா கஷ்டப்படுவான்? பிரபாகரன் கேட்டார்.
அவன் கஷ்டப்படுவானா? அப்பா, அவனுக்கு தான் அண்ணா, அக்கா எல்லாரும் இருக்காங்களே?
உறவுகள் பெயருக்கென இருக்கக்கூடாதும்மா. அதில் அக்கறை வேண்டும். உன்னோட அண்ணாவிடம் அவன் பேசி நானும் கேட்டிருக்கேன்.
அக்கா, மாமா பாசமாக இருந்தாலும் அம்மா, அப்பா போல் வருமா? நேற்று பெற்றோர் இல்லாததை நினைத்து ரொம்ப கஷ்டப்பட்டானாம். அழுதிருக்கான்.
உன்னோட மாமாவும் இலக்கியா போனதில் இருந்து தனியா தான இருக்கான். இருக்கட்டும். இருவருக்கும் நல்லா பொருந்துதே? அப்பா பிள்ளையா இருந்துட்டு போகட்டும் என்றார்.
அகரன் அழுதானா? என முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு மெல்லினா கேட்டாள்.
ஆமாம்மா, அம்மா அப்பா இல்லாம வளர்வது சாதாரண விசயமில்லை. ரொம்ப கஷ்டம் தான் என்றார் அவர்.
ஓ..அதனால் தான் நம் மீதும் கோபமாக இருந்திருக்கான் போல என்று எண்ணிய மெல்லினா, அப்பா அவனோட அண்ணா, அக்கா எல்லாரும் ஒத்துக்கணுமே? எனக் கேட்டாள்.
அதை பற்றி நீ கவலைப்பட வேண்டாம்மா. எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் என்று தமிழரசன் உள்ளே வந்தார்.
மாமா, இப்ப அகரன் நல்லா இருக்கானா? அவனிடம் பேசலாமா? மெல்லினா கேட்க, அவன் இப்பொழுதைக்கு பேசும் படி இல்லை. அவன் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறான்.
சரிம்மா, நீ போய் தூங்கு என்று பிரபாகரன் அருகே தமிழரசன் அமர்ந்தார்.
மாமா, அகரன் நம்பர் தாரீங்களா? அவனிடம் பேசணுமே? மெல்லினா கேட்க, முகத்தில் அடித்தாற்போல் இல்லம்மா, அவன் ஓய்வெடுக்கட்டும் என்று அவளை பார்த்து, அவன் நம்பர் உனக்கெதுக்கு? என்று கேட்டார்.
சும்மா தான் கேட்டேன். அப்பா நான் தூங்கப் போறேன் என்று வருத்தமாக சென்றாள். பிரபாகரனும் மனதினுள் அவனிடம் இவள் எதுக்கு பேசணும்ன்னு சொல்றா? என்று சிந்தித்தார்.
ரசிகா, பசங்க எல்லாரையும் தூங்க வைத்து விட்டு மெதுவாக ஆதி அறையை எட்டிப் பார்த்தாள்.
“உள்ள வா ப்ளாக் மூன்” என ரசிகாவை அறைக்குள் அழைத்தான் ஆதி.
ஆதி, நான் சும்மா தான் பார்க்க வந்தேன். நான் காலையில் வாரேன் என்று நகர்ந்த ரசிகாவை இடையோடு இழுத்து ஆதி படுக்கையில் அமர்த்தினான்.
ஆதி, விடுங்க என்று அவன் கையை எடுத்து விட்டாள்.
ஓ.கே ரசி, நீ கண்ணை மூடு என்று ஆதிரேயன் சொல்ல, நோ, நான் கண்ணை மூட மாட்டேன். நீங்க கிஸ் பண்ணிடுவீங்க என்றாள்.
என்னோட மூனுக்கு இந்த ஆசையும் இருக்கா? என்று அவளை நெருங்கி முத்தமிட வந்தான்.
நான் இல்லை. என்னை விடுங்கள் என்று எழுந்தவள் கையை பிடித்து, ரசி நான் உன்னை ஏதும் செய்யலை. “கண்ணை மட்டும் மூடு” என்றான் ஆதிரேயன்.
எதுவும் செய்ய மாட்டீங்கல்ல? சுயர்ல்ல? ரசிகா கேட்க, சுயர் என்று ஆதி அவளை அமர வைத்தான்.
ரசிகாவும் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள். இரு இதயம் வடிவிலான தங்க டாலரில் சிம்பிளாக செயின் ஒன்றை ரசிகா கழுத்தில் போட்டு விட்டான். அவள் அதிர்ந்து கண்ணை திறந்து அவனையும் செயினையும் பார்த்தாள்.
ஆதி, என்ன பண்ணீட்டீங்க? புரிஞ்சு தான் பண்ணீங்களா? வாங்கினால் என் கையில் கொடுத்திருக்கலாமே? எதுக்கு நீங்களே போட்டு விட்டீங்க?
நீ தான் என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னேல்ல. அதான் இப்ப முடிஞ்சதே? ஆதி சாதாரணமாக சொல்ல, ரசிகா கண்ணீருடன் எழுந்தாள்.
ஆதி, இதை நீங்களே எடுத்துக்கோங்க என்றாள் ரசிகா.
ரசி..பேச்சை நிறுத்து. என்னை கோபமாக்காதே! நீ தான் ஒரு மாசத்துல எங்களை விட்டு போகப் போறேல்ல. அப்புறம் நாம எப்படி பார்ப்பது? பேசுவது? உன்னால என் காதலை ஏத்துக்க முடியுது. நீயும் என்னை காதலிக்கிற? ஏன் எல்லார் முன்னும் என் அருகே கூட வர மாட்டேங்கிற?
நான் எவ்வளவு ஆசையாக என் வேலை அனைத்தையும் விட்டு, உனக்காக தான் அங்கே அழைத்து சென்றேன். ஆனால் நீ என் பக்கம் கூட வரலை. முழுவதும் பசங்களுடன் தான் இருந்த? என்னை கொஞ்சமாவது யோசித்தாயா? ஆதி கேட்டுக் கொண்டே அழுதான்.
ரசிகா, ஆதியை அணைத்துக் கொண்டு, சாரி ஆதி. எல்லார் முன்னும் என்னால் உங்க பக்கம் வர கூட முடியலை. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று அவளும் அழுதாள்.
அப்ப, என்னையும் நம்ம பசங்களையும் விட்டு போக தான் போற? அப்படித்தானே? ஆதி கேட்க, ஆதி எனக்கும் அது வலி தான். ஆனால் எல்லார் முன்னும் உங்கள் அருகே என்னால் நிற்க முடியலை. பொருத்தமில்லாதது போல் இருக்கு என்று ரசிகா மேலும் அழுதாள்.
ரசி, அடுத்தவங்கள பத்தி எதுக்கு யோசிக்கிற? நம்ம வாழ்க்கையை நாம் தான் வாழணும்.
ஆமா சார், அப்ப உங்கள் பக்கம் இந்த அறையினுள் மட்டும் உங்க பொண்டாட்டியா நான் இருந்துக்கவா? எத்தனை நாள் உள்ளேயே நான் இருக்க முடியும்? அவள் அழ, அவளை புரிந்து கொண்ட ஆதிக்கு கோபம் வந்தாலும் அவனுக்கு பரிதாபம் தான் வந்தது ரசிகாவின் மீது.
சரி ரசி, ஒரு மாதத்தில் நீ கிளம்பிடுவேல்ல. போயிடு. ஆனால் நீ எப்ப அவன் கட்டிய தாலியை தூக்கி எறியிறியோ? அதிலிருந்து நான் தான் உன் கணவன்னு மனசுல வச்சுக்கோ. ஏன்னா, இது நான் உனக்கு போட்டு விட்டது. நம் கல்யாணத்திற்கு சாட்சி இந்த அறையும், உன் கழுத்தில் இப்பொழுதைக்கு நீ போட்டிருக்கும் இந்த செயினும் தான்.
இந்த செயின் உன்னோட கழுத்தில் இல்லைன்னா நான் செத்துட்டேன்னு அர்த்தம். உனக்கு புரியுதா? ஆதி சீற்றமுடன் பேச, ப்ளீஸ் ஆதி, இப்படியெல்லாம் பேசி என்னை கஷ்டப்படுத்தாதீங்க. உங்களுக்கு ஏதும் ஆகாது. இந்த செயினை நான் கழற்றவே மாட்டேன். இது என்னோட ஆதி எனக்கு போட்ட முதல் பரிசு மாங்கல்யம் என்றாள் ஆதிரேயனை அணைத்துக் கொண்டு. பின் ஆதியே ரசிகாவை சமாதானப்படுத்தி அவளறைக்கு அனுப்பி விட்டு, அவனும் படுத்தான்.
“சன் டே” காலையில் தேனீர் அருந்த எல்லாரும் குழுமி இருக்க, அதிசயமாக ஆதியும் கீழே வந்தான். அனைவரும் ஆச்சர்யமாக பார்த்தனர்.
மாம்ஸ் எங்க? விபுதன் கேட்க, தேனீர் எடுத்து வந்த ரசிகா, “அகரா அவன் வீட்டிற்கு போயிட்டான் விபு” என்று கூறினாள்.
என்னது அவர் வீட்டுக்கு போயிட்டாரா? சொல்லாமல் போயிட்டார்? என்னாச்சு? யாரும் ஏதும் சொன்னீங்களா? நேற்றே அவர் சரியில்லாதது போல் இருந்தது என்று விபுதன் பேசிக் கொண்டே சென்றான்.
ஏன் அவன் கிளம்பியதில் உனக்கென்ன பிரச்சனை விபு? ஆதிரேயன் கேட்டான்.
மாமா, மாம்ஸ் நான் பார்த்தவரை இவ்வளவு அமைதியா இருக்கவே மாட்டார். ரொம்ப அமைதியா இருந்தது. ஏதோ சரியில்லை. எங்கள் ஊரில் இருக்கும் போது அவரை சுற்றி நிறைய பாஸிட்டிவ் வைப் இருக்கும். ஆனால் இங்க அவர் சந்தோசமா இருந்த மாதிரி இல்லை என்றான் விபுதன்.
விபு..ரசிகா சத்தமிட்டாள்.
அவளை பார்த்த ஆதிரேயன், எங்க வீட்டுக்கு வந்ததால் உங்க மாம்ஸ் சரியில்லைன்னு சொல்றீயா? என்று விபுதனிடம் கேட்டான்.
இல்ல மாமா, அவர் இந்த ஊருக்கு வந்த பின் தான் சரியில்லைன்னு சொல்றேன் என்று விபுதன் சொல்ல, ஆமா விபு, நம்ம அகரன் மாதிரியே இல்லை என்று ரசிகாவும் கூறினாள்.
என்னது? ஆதிரேயன் கேட்க, அது வந்து அகரன் என்று ஆதியை பார்த்து ரசிகா அமைதியானாள்.
அது சரி, இது என்னம்மா புதுசா செயினெல்லாம் போட்டுருக்க? பிரபாகரன் கேட்டார்.
சார்..ஆதி தான் வாங்கி தந்தார் என்றாள்.
எல்லாரையும் உரிமையா கூப்பிடுற? நான் இன்னும் சார் தானாம்மா? பிரபாகரன் கேட்டார். அவள் ஆதியை பார்த்தாள்.
அங்கிள் இல்ல மாமான்னு கூப்பிடும்மா என்றார் அவர்.
“சரிங்க அங்கிள்” என்றாள் ரசிகா.
ரசி, நான் வாங்கி கொடுக்கவா செய்தேன்? என்று ஆதிரேயன் கேட்க, அப்புறம் என்னடா செஞ்ச? பிரபாகரன் கேட்டார்.
அங்கிள், அதெல்லாம் ஒன்றுமில்லை என்று ரசிகா மழுப்பினாள்.
அப்பா, இது சர்பிரைஸ் கிப்ட். கையிலா கொடுப்பது. அதனால் நான் தான் போட்டு விட்டேன் என்றான் ஆதிரேயன். விபுதனுக்கு புரை ஏறியது.
மெதுவாடா..என்று மெல்லினா அவன் தலையை தட்டினாள்.
வாயை துடைத்து விட்டு, மாமா என்ன சொல்றீங்க? நீங்க எப்படி இப்படி செய்யலாம்? விபுதன் ஆதியிடம் கோபமாக கேட்டான்.
உங்க அத்தை விட்டு போறதிலே குறியாய் இருக்கா? இதை போட்டு விட்டாலாவது ஏதாவது அவளிடம் மாற்றம் வருதான்னு பார்க்கலாம் என்று தான் போட்டு விட்டேன்.
இது என்ன விளையாட்டா ஆதி? பிரபாகரன் கேட்க, எங்கள் இருவருக்கும் பிடிச்சிருக்கு. அதான் செய்தேன். அவள் என்னை விட்டு சென்றாலும் என்றாவது எனக்காக வருவான்னு நிம்மதியாகவாது இருப்பேனே? என்றான் ஆதி.
தாலியாக இருந்தாலும் அத்தை வருவாங்கன்னு நிம்மதியாவது இருக்கும். இதை கழற்றி வைத்து விட்டால் என்ன செய்வீங்க மாமா?
இதை உன்னோட அத்தை கழற்றவும் மாட்டாள். இந்த செயினை பார்க்கும் எவனும் ரசி பக்கமே வர மாட்டான் என்றான் ஆதிரேயன் கூலாக.
செயினில் என்ன இருக்குண்ணா? மெல்லினா கேட்க, இந்த செயின் ரொம்ப அரிதானது. நம்ம குடும்ப டிசைனில் செய்தது. இந்த செயினில் இருக்கும் இரு இதயத்தையும் ஓபன் செய்ய முடியும் என்றான் ஆதி.
விபுதன் ஆர்வமுடன் ரசிகாவிடம் வந்து, அத்தை கையை எடு. அதை ஓபன் செய்யலாம் என்று ஓபன் செய்தான். அதில் ஆதி ரசிகாவின் புகைப்படமும், “ஐ லவ் யூ ப்ளாக் மூன்” என்ற ஆதியின் குரலும் இருந்தது.
வாவ், சூப்பரா இருக்கு மாமா. ஆனால் “ப்ளாக் மூன்” என்று விபுதன் ஆதியை கோபமாக பார்க்க, உன்னோட அத்தை எதற்கெடுத்தாலும் அழுறா? நீ கோபப்பட்டுகிட்டே இருக்க? ஆதி கேட்க, இப்படியா செல்லமாக பெயர் வைப்பாங்க? மெல்லினா கேட்டாள்.
அது ஒன்றும் தவறில்லை. அதில் அர்த்தம் இருக்கு என்று ரசிகா ஆதியை பார்த்துக் கொண்டே சொன்னாள்.
மெல்லி, உனக்கு வெளிய போறது பிடிக்குமே? நாம இன்று “ப்ளாக் தென்டர்” போகலாமா? என்று ஆதிரேயன் கேட்க, எல்லாரும் குஷியானார்கள். ஆதிரேயன் ரசிகாவை பார்த்தான். அவள் வெட்கமுடன் புன்னகைத்தான்.
என்னை விட்டு எல்லாரும் போறீங்களா? என்று சத்தம் கேட்டு அனைவரும் குரல் வந்த திசையில் பார்த்தனர். சவிதா அறைக்கதவை பிடித்துக் கொண்டு பாவமாக நின்று கொண்டிருந்தார்.
ரசிகா அவரிடம் செல்ல, ரசி..நகர்ந்துக்கோ..நானே நடந்தால் தான் அவர் என்னை வெளியே அழைத்து செல்வார் என்று சவிதா கூறிக் கொண்டே எதையும் பிடிக்காமல் நடந்தார்.
கண்ணீருடன் மனைவியை பார்த்துக் கொண்டிருந்த பிரபாகரன் அவரிடம் ஓடி வந்து அவரை அணைத்து, நாமும் போகலாம். ஆனால் ரைடு போகணும்ன்னு நீ பிடிவாதம் பண்ணக் கூடாது சவி என்று பிரபாகரன் கேட்க, சவிதா புன்னகைத்தார்.
எல்லாரும் கிளம்புங்க. போகலாம் என்று ஆதி சொல்லி விட்டு ரசிகாவை தனியே அழைத்து சென்றான்.
ஆதி, என்னை விடுங்க. பசங்களை தயார் செய்யணும் என்று ரசிகா சொல்ல, நீ போகணும்ன்னா, இப்ப இங்கேயாவது என்னுடன் நீ இருக்கணும் என்றான் ஆதி.
ஓ.கே ஆதி. இப்ப விடுங்க என்று அவனை நகர்த்தி விட்டு அவள் செல்ல, அவளை போக விடாமல் இடையே வந்து, அவள் கன்னத்தில் முத்தமிட்டு, புடவையில் தயாராகி வா என்று ஆதி புன்னகையுடன் ஓடினான்.
லிது, நிதுவை தயார் செய்து விபுவிடம் விட்டு ரசிகா, சவிதா தயாராக உதவினாள். பின் அவள் சென்று தயாராகி “சான்டில் வித் ஆரஞ்சு” நிறப்புடவையில் தலையை பின்னி மல்லிகை பூவுடன் வந்தாள். ஆதி அவளை பார்த்து கண்ணடித்தான். அவள் அவனை பார்த்து சிரித்து விட்டு, லிது நிதுவிடம் வந்தாள்.
விபு அனைவருக்கும் விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தான். மெல்லினாவும் விபுவும் க்ளோஸ் ஆனார்கள். அவளுக்கு சந்தோசமாக இருந்தாலும் ஏதோ ஒன்று அவளிடம் இல்லாதது போல் உணர்ந்தாள்.
ரசி, இங்க பாரு. விபு மாமா சிரிக்க வச்சுக்கிட்டே இருக்காங்க என்று நிது ரசிகாவை அணைத்துக் கொண்டாள். ஆரவும் லிதுவும் விளையாட, அங்கே வந்த சவிதா..கிளம்பலாமா? எனக் கேட்டார்.
ஆதியும் பிரபாகரனும் அவரை கண்ணில் தேங்கிய கண்ணீருடன் அவரை பார்த்தனர்.
ஆன்ட்டியால ரொம்ப நேரம் நிற்க முடியாது ஆதி, கிளம்பலாமா? என்று கேட்டாள் ரசிகா.
வாங்க என்று அனைவரும் கிளம்பினர். இதுவரை அவர்கள் வாழ்வில் இல்லாத மொத்த சந்தோசமும் அன்றானது. நிறைய விளையாட்டு, புகைப்படம், சாப்பாடு, என நினைத்த அளவு எஞ்சாய் செய்தனர்.
ஆதியையும் ரசிகாவையும் ஊட்டி சாப்பிட வைத்து அனைவரும் மகிழ்ந்தனர். ஆனந்தமே அவர்களை கண்டு மகிழ்ந்தது.
இரவு அனைவரும் சோர்வுடன் வீட்டிற்கு வந்து சோபாவில் சாய்ந்தனர். ரசிகா சவிதாவை எல்லார் போலும் அமர வைத்தாள். சவிதா எல்லாரும் மகிழ்வுடன் இருப்பதை பார்த்து மகிழ்ந்திருப்பார்.
சீதாம்மா வேகமாக பிரபாகரனிடம் வந்து, அய்யா..ரொம்ப நேரமாக அகரன் தம்பியோட மாமா உங்களை பார்க்க காத்திருக்கார். அவர் அகரன் தம்பியை தான் பார்க்க வந்திருப்பார் போல. அவர் இல்லை என்றதும் கிளம்ப பார்த்தார். நான் ரசிகாவை பற்றி சொல்லி இருக்க வைத்தேன். அவர் பொண்ணும் கூட வைத்திருக்காங்கய்யா என்றார்.
மாமா வந்திருக்காரா? என்று விபுதன் எழுந்தான். ரசிகாவும், அவர் எங்க இருக்கார்? என்று கேட்டாள்.
என்னாச்சு ரசி? அவரும் அகரனை திட்டுவாரா? ஆதிரேயன் கேட்டான்.
இல்லை ஆதி, அவர் அதிகமா பேச மாட்டார். ஆனால் அகரனை அவருக்கு ரொம்ப பிடிக்கும். அவருக்கு மற்றவர் வீட்டில் தங்குவது பிடிக்காது. மழை வேற பெய்யுது? அவரை இந்த நேரத்தில் எப்படி வெளியே அனுப்ப?அனுப்பக்கூடாது. கூடவே பிரணிதாவும் வந்திருக்காள். ஏதாவது பேசி அவரை தங்க வையுங்க மாமா என்று ரசிகா பிரபாகரனிடம் கேட்டாள்.
சரிம்மா, நீ எதுக்கு இப்படி பதறுரு? நம்ம அகரனோட மாமா தான? பார்த்துக்கலாம் என்று சீதாவை பார்த்து, சீதாம்மா அவங்களை அழைத்து வாங்க என்றார் பிரபாகரன்.
அகரன் மாமாவும், பிரணிதாவும் அங்கே வந்தனர். பிரணி என்று ஆரவும் யோகிதாவும் அவளிடம் ஓடிச் சென்று அணைத்தனர். அவள் இருவருக்கும் சாக்லெட்டை நீட்டினாள். இருவரும் வாங்கிக் கொண்டனர். விபுதனும் ரசிகாவும் அவளிடம் வந்தனர்.
விபு, நீ இங்கே வந்ததை சொல்லவேயில்லை. சொல்லாமல் வந்துட்ட பிரணிதா அவனருகே வந்து கேட்டாள்.
நடந்த பிரச்சனையில சொல்லிட்டா வர முடியும். சரி, என்ன உன்னோட அப்பா இங்க வரை வந்திருக்கார். ஆச்சர்யமா இருக்கு விபுதன் கேட்க, அது வந்து..என்ற பிரணிதா அருகே அவள் அப்பா வரவும் பேச்சை நிறுத்தினாள்.
மாமா, நீங்களா இங்க வந்துருக்கீங்க? விபுதன் கேட்க, ஆமா விபு, அகரன் நேற்றிலிருந்து கால் பண்ணா எடுக்கலை. உன்னோட அத்தை என்னை படுத்துறா? அவளிடம் இருப்பதை விட, மாப்பிள்ளய பாக்க வர்றது தான் சரின்னு பட்டது வந்துட்டேன் என்று ரசிகாவை பார்த்தாள்.
ஏம்மா, பிரச்சனைன்னா சொல்ல மாட்டீங்களா? அவர் கேட்க, மாமா..நான் பயத்தில் இருந்தேன். விபுவிடம் கூட சொல்லலை என்றாள்.
உட்காருங்க பேசலாம் என்று பிரபாகரன் சொல்ல, இருக்கட்டும். மாப்பிள்ளைய பார்க்க போகணும் என்றார் அவர்.
உங்களுக்கு வேற பொண்ணு இருக்கா? சவிதா கேட்டார்.
இல்லை. ஒரே பொண்ணு தான் என்று பிரணிதாவை பார்த்தார். எதுக்கு கேக்குறீங்க? அகரன் மாமா கேட்க, இல்ல அகரனை மாப்பிள்ளைன்னு இவ்வளவு உரிமையா கேக்குறீங்களே? உங்களோட பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க கேக்குறீங்களோன்னு? கேட்டேன். இந்த பொண்ணு சின்ன பிள்ளையா இருக்கே? என்றும் கேட்டார்
இல்லம்மா, எனக்கு முதலில் இருந்தே பழகி விட்டது. அதனால் தான் என்று பிரணிதாவை அவர் பார்க்க, அவள் விபுதனையும், விபுதன் அவளையும் பார்த்தனர்.
இன்று இரவு மட்டும் இங்கே தங்குங்க. இது மலைபிரதேசம். மழை வேறு நிற்பது போல் தெரியல என்று ஆதிரேயன் சொல்ல, அவர் யோசித்தார்.
ஆமா, பொம்பள பிள்ளைய வச்சிட்டு இந்த நேரத்துல வெளிய போறதும் நல்லதில்லை. இருந்துட்டு காலையில வேணும்ன்னா கிளம்புங்களேன் என்று சவிதா சொன்னார்.
மெல்லினா கலக்கத்துடன் அவர்களை பார்த்தாள். பிரணிதா விபுவிடம் நெருக்கமாக பேசுவது போல் இருக்கே என்று மனதில் எண்ணியவாறு அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.
சரிம்மா, இன்று மட்டும் இங்கே தங்கலாம். காலையில் மாமாவை பார்க்க போகலாம்மா என்றார். சரிங்கப்பா என்று அவள் விபுதனை பார்த்தாள்.
சீதாம்மா, விருந்தாளிக்கு சாப்பாடு தயார் பண்ணுங்க பிரபாகரன் சத்தமிட்டார்.
அங்கிள், நானே தயார் செய்கிறேன் என்று ரசிகா சொல்ல, ரசி பசங்க தூங்கணுமே? தூங்க வைத்து விட்டு வா..என்று ஆதி பேச, பிரணிதா அவள் அப்பாவிடம் ஏதோ பேசினாள். அவர் புன்னகையுடன், ஆமாம்மா நீ சின்ன பசங்கள பார்த்துக்கோம்மா என்றார் அவர்.
ரசிகா ஒரு மாதிரி நிற்க, ரசி தூக்கம் வருது, தூங்கலாமா? லிது கேட்டாள்.
ஓ.கே வாங்க என்று இருவர் கையையும் பிடித்துக் கொண்டு, மாமா பசங்கள தூங்க வச்சிட்டு வாரேன். பேசலாம் என்றாள்.
இல்லம்மா, நாம காலையில் பேசிக்கலாம். நீயும் ஓய்வெடு என்று அவர் ஆதியை பார்த்தார்.
என்னிடம் பேசணுமா சித்தப்பா? அவன் கேட்க, என்ன? அவர் கேட்டார்.
ரசிக்கு மாமான்னா எனக்கு சித்தப்பா தான? ஆதி கேட்க, ம்ம்..சரியான தான் சொன்ன ஆதி என்று சவிதாவும் பேசினார்.
அப்பா, நானும் விபுவும் பேசணும் என்று பிரணிதா சொல்ல, விபுதன் அவளை பார்த்து புருவத்தை உயர்த்தினான். அவள் கண்ணை வெளியே காட்டினாள். எல்லாரும் இருவரையும் பார்க்க, மெல்லினா பயத்துடன் இருவரையும் பார்த்தாள்.
சிறு வயதிலிருந்து இருவரும் நல்ல தோழன், தோழிகள் என்று பிரணிதா அப்பா சொல்ல, ஆதியின் பார்வை மெல்லினாவை ஏறிட்டது. அவள் பயம் அவனுக்கு தெளிவாக தெரிந்தாலும் அவன் கண்டுகொள்ளவில்லை.
சாப்பிட்டு போய் பேசுங்கம்மா. நேரமாகுது பாரு சவிதா சொல்ல, அவரை திரும்பி பார்த்து மெல்லினா முறைத்தாள்.
அய்யா, தயாராகிடுச்சு சீதாம்மா அழைக்க, தம்பி நாங்க வந்துடுறோம். பேசணும் என்று பிரணிதா அப்பா சொல்ல, சற்று நேரத்தில் இருவரும் சாப்பிட்டு வந்து அமர்ந்தனர்.
ரசிகா லிது நிதுவை தூங்க வைத்து விட்டு, ஆரவ், யோகியை அறையில் விட்டு கீழே வந்தாள்.