ரசிகா, கார்த்திக் சார், பசங்க எல்லாரும் அவர்களுடைய பிராஜெக்ட்டை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மெல்லினா அகரனிடம் வந்து, மன்னிப்பு கேட்க, அவன் அவள் கையிலிருந்ததை பிடுங்கி ரசிகா அருகே வைத்து, “எப்போதும் போல் நீயே எடுத்துக்கோ. என்னோட மெல்லிக்கு நான் வாங்கி தந்துப்பேன்”.
ரசிகா நிமிர்ந்து அவனை பார்த்து, அவளையும் கூட்டிட்டு போய் வாங்கி கொடு. இங்கிருந்து தொந்தரவு பண்ணாத.
தொந்தரவா? மெல்லினா கேட்க, விடு மெல்லி அவ படிப்பிஸ். அவகிட்ட இப்ப பேசவெல்லாம் முடியாது என்று மெல்லினாவை பார்த்து விட்டு, ஆதியிடம் வந்து, இவளை கூட்டிட்டு வாரேன்னு நீங்க சொல்லவேயில்லை.
மௌனி “பை” என்று திரிவேஷ் வேண்டுமென்றே சொல்ல, என்னிடம் எதுக்கு சொல்லணும்? “போகணும்ன்னா போக வேண்டியது தான?” என்று திரிவேஷை முறைத்தாள். எல்லாரும் அவர்களை தான் பார்த்தனர். ஆதி கோபமாக நகர்ந்தான்.
அண்ணா நில்லு, நாங்களும் வாரோம் என்று மெல்லினா செல்ல, அவள் பின் அகரனும் திரிவேஷூம் சென்றனர்.
உஃப் என்று பெருமூச்சு விட்டாள் ரசிகா.
ஏன் மேம்? ஒரு பொண்ணு கேட்க, வாங்க நம்ம வேலையை பார்க்கலாம் என்று ரசிகா அவர்களை திசை திருப்பினாள். கார்த்திக் சார் மட்டும் யோசனையுடன் அவளை பார்த்தார். ஆதியின் நண்பர்கள் போகும் தன் நண்பனையும் ரசிகாவையும் பார்த்தனர்.
சற்று நேரத்தில் விழா ஆரம்பிக்க, ரசிகாவும் கார்த்திக் சாரும் பசங்களுடன் வந்தனர். அவளுடன் வேலை செய்பவர்கள் அவளுடன் பேச அவர்களுடன் ரசிகா அமர்ந்தாள். அவள் கண்கள் ஆதியை தேடியது. அகரனிடமிருந்து ரசிகாவிற்கு மெசேஜ் வந்தது. ஆதி முன் வரிசையில் இருக்கிறான். தேடாதே என்று. அகரனை தேடினாள் அவனும் திரிவேஷூம் அவளுக்கு பின் தான் அமர்ந்திருந்தனர் .அவர்களை பார்த்து விட்டு, விழாவின் வரவேற்புரையை கவனிக்கலானாள்.
இடையே காஃபியும் பிஸ்கெட்டும் கொடுத்தனர். சாப்பிட்டுக் கொண்டே அகரனை பார்த்தாள்.
“மானத்தை வாங்காதீங்கடா” ரசிகா சொல்ல, பசங்களா கொஞ்ச நேரம் தான். “சாப்பாடு தயாராகிடும்” என்றார் ஒருவர்.
மேம், அவன் சும்மா தான் கேட்டான்.
“இரும்மா” என்ற அவர், நீ என்னோட டேட்டிங் வர்றீயா? உனக்கு பிஸ்கெட் என்ன சாப்பிட கேட்பதெல்லாம் வாங்கித் தாரேன் என்று சொல்லி நகைத்தார்.
எனக்கு ஆசை தான் மேம். ஆனா பாருங்களேன். என்னோட வுட்பிக்கு தெரிஞ்சது என்னை கொன்றுவா என்றான் திரிவேஷ்.
உனக்கு மேரேஜ் ஆகப் போகுதா? இந்தா என்னோட நம்பர் வச்சுக்கோ. கல்யாணம் முடிந்த பின் அவளுடன் சண்டைன்னா என்னை அழை. நான் உனக்கு உதவுகிறேன் என்றார்.
மௌனி, பார்த்தியா? நீ செய்ய வேண்டிய வேண்டியதை இந்த மேம் பண்றேன்னு சொல்றாங்க? நீ எனக்காக ஒரு வார்த்தை பேசி இருப்பியா?
ராசா, “என்னை விட்டுரு” என்று தலையில் கை வைத்து திரும்பிக் கொண்டாள் ரசிகா.
சற்று நேரத்தில் ஓர் பெண்மணி. ரசிகாவிடம் வந்து பிரின்சி அழைத்ததாக சொன்னார்.
இப்பவா? ரசிகா கேட்க, ஆமா “சீக்கிரம் வா” என்று அவர் சென்றார்.
எழுந்து முன்னே சென்ற ரசிகா, பிரபாகரனையும் சவிதாவையும் பார்த்து தயங்கி நின்றாள். ஆதி, துகிலன், மெல்லினாவும் சேர்ந்து அவர்களுடன் அமர்ந்திருந்தனர்.
வேறு வழியில்லாமல் அவர்களை பார்த்துக் கொண்டே பிரின்சிபில் மேம்மிடம் வந்தாள்.
ரசிகா, நீ தான் ரிசைன் பண்ணிட்டேல்ல? “தேங்க் யூ ஸ்பீச்” நீ தான் கொடுக்கணும் என்றார்.
நானா? மேம் சர்விங் டியூட்டி வேற இருக்கு? என்று தயக்கமுடன் சொன்னாள். இவர்கள் பேசுவது யாருக்கும் கேட்கவில்லை என்றாலும் எதற்காகவோ தயங்குகிறாள் என்று தெளிவாக தெரிந்தது.
அதெல்லாம் பிரச்சனை இல்லை. நீ பேசி முடித்து விட்டு டியூட்டியை பார்க்க போ. வேலையையும் பர்சனலையும் கலக்க கூடாது. சொல்லி இருக்கேன்ல்ல?
“ஓ.கே மேம்” என்று ரசிகா நகர, பிரபாகரன் குடும்பம் முழுவதும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர். துகிலன் மட்டும் தன் அண்ணனை பார்த்தான்.
மேம்..சந்தீப் அழைக்க, ஷ்..என்றாள். பக்கமிருந்தவர்கள் அவளை பார்க்க, இன்று எனக்கு நேரமே சரியில்லை என்று முணுமுணுத்துக் கொண்டு, சந்தீப்பிற்கு மேசேஜ் செய்து கொண்டே மேடையின் பின் பக்க அறைக்கு சென்றாள். அங்கேயும் விரிவுரையாளர்கள் இருந்தனர். அவர்களிடம் விசயத்தை சொல்ல, “ரசிகா பெரிய ஆளா தான் பிடிச்சிருக்க” என்று ஒரு பொண்ணு சொல்ல, இங்கே எதுக்குடா வந்தோம் என எண்ணினாள் ரசிகா.
நான் பேச தயார் செய்கிறேன். கடைசி பிரோகிராம் என்னது? என சார் ஒருவரிடம் பேசி விட்டு வெளியே வந்தாள். அவள் கண்கள் கலங்கியது. அவள் முகத்தை கவனித்த மெல்லினா, அவள் அம்மா, அண்ணாவிடம் அவளை காட்ட, யோசனையோட அரங்கத்தின் பின்னே தனியே அமர்ந்தாள்.
ஆதி எழ, சவிதா அவனை நிறுத்தி “இப்ப வேண்டாம்ப்பா” என்றார். அகரனும் திரிவேஷூம் ரசிகாவை பார்த்து, அவளிடம் சென்று அமர்ந்தனர்.
ரசிகா பேசும் நேரமும் வந்தது. அவளும் நன்றாகவே பேசினாள். ஆனால் கேண்டியனில் இருந்த போது ரசிகாவின் ஈடுபாடு இப்பொழுது இல்லை. சோகமாகவும் தெரிந்தாள். ரசிகா பேசி முடிக்கவும் துகிலன் வேகமாக மேடை ஏறினான்.
துகி, எங்க போற? பிரபாகரன் சத்தமிட்ட, நான் கொஞ்சம் பேசலாமா? என்று ரசிகாவிடம் கேட்டான். அவள் பயத்துடன் பதிலளிக்காமல் நின்றாள். சக்தியும் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தான். அவன் ரசிகா மீட்டிங் நடக்கும் அரங்கத்திற்கு வரும் முன் தான் வந்தான்.
பிரின்சிபில் மேம் எழுந்து, “பேசுங்க” என்று அமர்ந்தார். அனைவரும் என்ன செய்யப் போகிறானோ? என்று பயத்துடன் அவனை பார்த்தனர்.
“முதல்ல நான் என்னை பற்றி சொல்கிறேன்” என்று அவனது வாழ்க்கையை கூறினான். ஆதியுடனும் பிரபாகரனுடனும் இருந்த புரிதல் இல்லா நிலையையும், இவனுக்கு ஆதி மீதுள்ள பொறாமையும், ஆதியின் பாசமும் என இலக்கியாவரை சொல்லி விட்டு ரசிகாவை பார்த்தான்.
“வேண்டாம்” என்று ரசிகா வாயசைத்தாள்.
சாரி ரசிகா, “நான் எல்லாத்தையும் சொல்லணும்” என்று துகிலன் சொல்ல, ஆதி எழுந்து துகி, “நீ பேசியது போதும். கீழ வா” என்று சத்தமிட்டான்.
ஆதி, அமைதியா உட்காரு. அவன் பேசுவதை பேசட்டும் என்று பிரபாகரன் சொல்ல, சரிப்பா அவன் பேசட்டும். ரசி, “நீ வா” என்று ஆதி மேடை ஏறினான்.
அண்ணா, நான் பேசணும்.
என்ன பேசணும்? “எதையும் புரிந்து செய்” என்று ஆதி ரசிகா கையை பிடித்தான்.
“உன்னோட ரசிகா இன்னும் என்னோட பொண்டாட்டியா தான் இருக்கா” என்று துகிலன் சொல்ல, ஆதி ரசிகா கையை விட்டான். அங்கே சலசலப்பு ஏற்பட்டது. எல்லாரும் அதிர்ந்து அவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இவன் மானத்தை வாங்கப் போறான்? சவிதா பிரபாகரனிடம் புலம்ப, அமைதியா இரும்மா. இதை நாமே சொல்வது தான் மரியாதை. யாராவது கண்டுபிடித்து சொல்வதற்கு இது பரவாயில்லை என்ற பிரபாகரன் எழுந்து அவரும் மேடை ஏறினார்.
துகிலன் எல்லார் முன்னும் நடந்ததை சொல்ல, எல்லாரும் அவனை ரொம்ப கேவலமாக பார்த்தனர். ஏற்கனவே நியூஸில் வந்ததை தவிர சில விசயங்களையும் சொன்னதால் சிலர் அமைதியானாலும் பலரின் அவசொல்லுக்கு ஆளானான் துகிலன்.
சில விநாடிகள் அனைவரும் பேச நேரம் கொடுத்தவன், நான் செய்த தவறை நானே திருத்தணும்ன்னு நினைக்கிறேன். எல்லாரும் என்னை மன்னிச்சிருங்கன்னு சொல்லி விட்டு, எல்லார் முன்னும் ரசிகாவிடம் மண்டியிட்டு கண்ணீருடன் மன்னிப்பு கேட்டு விட்டு, நீ சொன்னது போல இலக்கியாவுடன் நடந்தது போல் மறுபடியும் நடக்க எனக்கு விருப்பவில்லை.
மூன்று நாட்கள் நாம ஒரே வீட்டில் இருந்தாலும் தனியா இல்லை. நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். “என்னிடம் முதலாய் கேட்டதை நான் கொடுக்கிறேன்” என்று விவாகரத்து பத்திரத்தை ரசிகாவிடம் நீட்டினான்.
அன்று தான் சைன் பண்ண மாட்டேன்னு சொன்ன? ரசிகா கேட்டாள்.
சொன்னேன். இலக்கியாவிற்கு அடுத்ததாக எனக்கு உன்னை தான் பிடிக்கும். ஆனால் காதல் இல்லை. ஆனால் இந்த ஒரு வாரத்தில் ஆதியை விட்டு நீயும், உன்னை விட்டு அவனும் பட்ட கஷ்டத்தை நேரிலே பார்த்தேன். உங்களுக்கு நடுவில் இருக்க எனக்கு பிடிக்கலை.
புதியதாக தீர்மானிக்கப்பட்ட சட்ட விதிமுறை ஒன்று இருக்கு. விவாகரத்து செய்தால் ஆறு மாதத்தின் பின் தான் புரியணும் என்றது முந்தைய சட்டம். ஆனால் தற்பொழுது விருப்பமில்லாதவருடன் வாழ்வதை விட தனியா இருப்பதே சிறந்தது. இதிலும் ஆறு மாதம் கழித்து தான் விவாகரத்து கிடைக்கும். ஆனால் கண்டிப்பாக சேர்ந்து இருக்க தேவையில்லை. அதன் படி நாமும் விவாகரத்தை பெற்றுக் கொள்வோம்.
அப்புறம் ரசிகா, எனக்கு உன்னால் ஒரு காரியம் ஆகணும். எங்க குடும்பத்தோட நான் இப்பவே ஓரிடத்திற்கு போகணும். நீ ஆதியின் காதலியாகவோ மனைவியாகவோ இல்லை என்றாலும் அகரன் போல என்னை ஒரு நண்பனாக நினைத்து என்னுடன் வரணும் என்றான் துகிலன்.
நாம எங்கடா போகணும்? பிரபாகரன் கேட்டார்.
பிரபாகரனை அணைத்து நான் செய்த தவறை நான் ஒத்துக் கொள்கிறேன். மத்த பொண்ணுங்க அவங்களாக வந்ததால் தான் ஏற்றேன். ஆனால் என்னால இப்ப ஒரு பொண்ணு ரொம்ப கஷ்டத்துல இருக்கா என்று துகிலன் அழுதான்.
என்னடா விபத்து ஏதும் நடந்துவிட்டதா?
ஒரு நிமிஷம் அப்பா..என்று கண்ணை துடைத்த துகிலன், மச்சான் அர்னவ் என்னை மன்னிச்சிரு. எனக்கு எதுவுமே தெரியாது. அன்று நானிருந்த போதையில் அந்த பொண்ணு யாருன்னு தெரியாமல் போனது நீ சொல்லி தான் அந்த பொண்ணு தாருண்யான்னு தெரியுது.
மேடை ஏறிய அர்னவ், செமத்தியாக துகிலனை அடித்தான்.
மன்னிச்சிருடா..
மன்னிக்கணுமா? எதை மன்னிக்கணுன்னு எனக்கு தெரியல? தாரு கர்ப்பமா இருந்ததால வீட்டை விட்டு அவளோட வீட்டில இருந்து வெளிய அனுப்பலை. அவன் உன் பின் சுற்றியது தெரிந்து அவளோட அம்மா, அப்பா கண்டிச்சாங்க. அவள் அன்று உன்னை பார்த்து அவள் காதலை பற்றி பேச தான் வந்தாள். அன்று கிளப்பில் உன்னையும் இலக்கியாவையும் ஒன்றாக பார்த்து மனமுடைந்து ஆல்கஹால் அருந்தினாள்.
அப்படியும் உன்னிடம் பேச நினைத்தாள். ஆனால் உங்களிடையே தவறு நடந்து விட்டது. இரவு முழுவதும் கிளப்பில் தான் இருந்தாள்.
மறுநாள் காலை உன்னை பார்த்தாள். நீ போதையில் இருந்ததால் அப்புறம் பேசலாம் என அழுது கொண்டே சென்று விட்டாள். அவள் வீட்டிற்கு வராததால் அவளோட பெற்றோர் அவள் தோழியிடம் விசாரித்து இருந்திருக்காங்க. அவள் தோழிகள் மூலம் கிளப்பிற்கே வந்து உங்களை அந்த நிலையில் பார்த்து உடைந்து விட்டனர்.
அவளோட அம்மா, அப்பாவை அவள் காலையில் சென்ற போது பார்த்தது, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தவர்களை.
உங்க வீட்ல பிரச்சனை வந்து நீ வீட்டை விட்டு போயிட்டன்னு தெரிந்தது. மேலும் கஷ்டப்பட்டாள். அவள் உன்னை தேடினால்..நீ ஃபாரின் போனதால் உன்னை தேடுவதை கை விட்டு, படிப்பையும் விட்டு பெட்ரோல் பங்க், ஹோட்டல் சர்வராக, என சிறுசிறு வேலைகளாக ஆரம்பித்தாள்.
அப்படி ஒரு முறை சாப்பிட சென்ற போது தான் சந்தித்தேன். எனக்கும் அப்படியே விட மனதில்லை. என் அம்மா, அப்பாவிடம் சொல்லி படிக்க வைக்க உதவ சொன்னேன். அவங்க எனக்காக ஒத்துக்கிட்டாங்க. மீதியிருந்த படிப்பையும் படித்து முடித்தாள்.
எங்க கம்பெனியிலே நான்கு வருடமாக வேலை செய்தாள். பின் தான் அவள் கர்ப்பம் தெரிந்து எங்க வீட்ல அம்மாவை சமாதானப்படுத்தி தங்க வைத்தேன். அவங்க பார்த்துக் கொண்டாலும் குழந்தை பிறந்த பின் பார்த்துக் கொள்ள முடியாதுன்னு சொல்லீட்டாங்க. எனக்கு என்ன செய்றதுன்னு தெரியலை. உன்னிடம் சொன்னால் முன் போல் அவளது ஏழ்மையான நிலையை சொல்லி கஷ்டப்படுத்துவாயோன்னு சொல்லலை என்று அர்னவ் அழுதான்.
இதை கேட்டு அனைவரும் துகிலனை வில்லனாக பார்த்தனர். இந்த அளவிற்காக அவள் என்னை காதலித்தாள்? என்று கேட்டுக் கொண்டே அழுதான். ஆதி துகிலன் தோளில் கை வைத்தான். அண்ணா, என்று ஆதியை அணைத்து துகிலன் அழுதான்.
பிரபாகரன், வந்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு, அம்மாடி உன்னோட முடிவை அப்புறம் பர்த்துக்கலாம். இப்ப நீயும் எங்களுடன் வந்தால் நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறேன் என்று ரசிகாவிடம் பிரபாகரன் கேட்டார். அவள் கண்ணீருடன் துகிலனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அம்மாடி உன்னை தான்? அவர் சொல்ல, “அங்கிள் நான் வாரேன்” என்று பிரின்சிபிலை பார்த்தாள். அவரும் தலையசைக்க எல்லாரும் தாருண்யாவை பார்க்க கிளம்பினார்கள்.
அர்னவின் வீட்டினுள் முதலில் அர்னவ் செல்ல, அவனை பார்த்ததும் தாருண்யா அவனிடம் வந்து, அரு எனக்கு காரமா சாப்பிடணும் போல இருக்கு என்றாள்.
இந்த நேரத்தில் காரமாவா? இப்ப தான சாப்பிட்ட? அர்னவின் அம்மா கேட்க, பாருடா அம்மா ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்காங்க. எனக்கு சாப்பிடணும் போல இருக்கு.
இந்த நேரத்தில் நீ சாப்பிட்டு படுத்தால் உனக்கும் உன் குழந்தைக்கும் நல்லதல்ல.
அம்மா, “ப்ளீஸ் எனக்கு மட்டுமல்ல பாப்பாவுக்கும் வேணுமாம்” என்றாள்.
ஓ..இப்பவே உன்னிடம் கேட்க ஆரம்பித்து விட்டாலா? அவன் அம்மா கேட்க, ஆமாம்மா..தொட்டுப் பாருங்களேன். நல்லா அசையுறா.
குழந்தை பிறக்கும் நாளும் பக்கத்துல வந்திருச்சே. அதான் அதிகமா அசைவு தெரியும்.
அர்னவ் வந்தவர்களை பார்க்க, மற்றவர்களும் அவர்களை பார்த்தனர்.
தாருண்யா முதலில் ரசிகாவை பார்த்து, ஹேய் ரசிகா, நீ எப்படி இங்க வந்த? என்று புன்னகையுடன் அவளை பார்த்து விட்டு நகர, “வாங்க வாங்க” என்று அவள் பின் வந்தவர்களை அழைத்தார் அர்னவின் அம்மா.
அவர்களை பார்த்த தாருண்யா நகராது நின்றாள். அர்னவ் அவளை பார்க்க, அவளும் அவனை பார்த்து விட்டு பிரபாகரன் சவிதாவை பார்த்தாள். ரசிகா தாருண்யா அருகே வந்தாள்.
தாருண்யா க்ரே கலர் புடவையில் மென்மையான வெளிர் நிற சருமத்து அழகியாக பெரியதான வயிற்றுடன் நின்று கொண்டிருந்தாள். சவிதா அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். ஆதியும் துகிலனும் வந்தனர்.
துகிலனை பார்த்த தாருண்யா கண்கள் கலங்கியது. அவனும் தாருண்யாவை பார்த்து நின்றான். ஏதும் தெரியாமல் அர்னவ் அம்மா அனைவரையும் அமர வைத்தார். ஆதி துகிலன் கையை பிடித்து அவனுடன் அழைத்து சென்றான்.
அர்னவ் அவன் அப்பாவை அழைத்தான். அவரும் வந்து அவர்களை வரவேற்று அமர்ந்தார்.
பிரபா, என்ன திடீர்ன்னு வந்திருக்கீங்க? அவர் கேட்க, “நாங்க இந்த பொண்ணை எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போக வந்திருக்கோம்” என்றார் சவிதா.
தாருவையா? நீங்க எதுக்கு? என்று அவர் தாருண்யாவை பார்த்தார். அவள் கண்கலங்க தலைகவிழ்ந்து நின்றாள்.
அப்பா, “நான் சொல்கிறேன்” என்று அர்னவ் விசயத்தை சொல்லி விட்டு, துகிக்கு கூட தாருவின் கர்ப்பத்தை பற்றி தெரியாது.
தெரியாதா? நீ சொல்லி இருக்கலாம்ல்ல. அவன் இல்லைன்னா என்னடா இவங்க எல்லாரும் தான் இருந்தாங்களே! என்று அர்னவின் அம்மா சத்தமிட்டார்.
அம்மா, அவனில்லாமல் தாருவை பற்றி சொன்னால் எப்படி அவங்க நம்புவாங்க. சொல்லு என்றான் அர்னவ்.
துகிலன் எழுந்து பேசினான். அன்று நடந்தது தாருண்யாவுடன் தான் என்று எனக்கு தெரியாது. என்னால அவள் எல்லாவற்றையும் இழந்திருக்காள். இனி அவள் என் பொறுப்பு. நான் அவளை கல்யாணம் செய்து கொள்கிறேன். ஆனால் என்னால இப்ப பண்ணிக்க முடியாது என்று ரசிகாவுடன் நடந்ததையும் கல்லூரி மேடையில் அவன் பேசியதையும் சொல்லி விட்டு, ஆறு மாதத்திற்கு பின் திருமணம் செய்து கொள்கிறேன் என்று அவளை பார்த்தான்.
அதெல்லாம் தேவையில்லை. என்னை நானே பார்த்துப்பேன் இல்லையெனில் இவங்க பார்த்துப்பாங்க என்று அர்னவின் அம்மா, அப்பாவை பார்த்து, நான் உங்களுடன் இருந்தால் பிரச்சனையில்லையே? என்று கேட்டாள் தாருண்யா.
இங்கே இருக்கலாம்மா. ஆனால் வாழ்நாள் முழுவதுமா? அர்னவ் அப்பா கேட்க, அவன் அம்மா அமைதியாக இருந்தார். “இவர்களுக்கு விருப்பமில்லை” என்றதும் தாருண்யாவிற்கு மேலும் கஷ்டமானது.
சரிப்பா, நாம ஏற்கனவே பேசிய படியே குழந்தை பிறந்ததும் நான் கிளம்பிடுறேன். ஆனால் “நான் தனியா தான் இருக்கணும்” என்று துகிலனை பார்த்தாள்.
குழந்தையை வச்சுக்கிட்டு தனியா எப்படி இருப்ப? ரசிகா கேட்க, ஆமா, நார்மலாக குழந்தை பிறக்காதுன்னு டாக்டர் சொல்லீட்டாங்க. ஆப்ரேசன் தான் செய்தாகணும். குழந்தை பிறந்த பின் எப்படி தனியா இருப்ப? அர்னவ் கேட்டான்.
“நான் எப்படியோ இருந்துட்டு போறேன்” என்று தாருண்யா நகர்ந்தாள். துகிலன் ஓடிச் சென்று அவள் கையை பிடித்தான். “கைய விடு” என்று தாருண்யா சத்தமிட்டாள். ஆனாலும் துகிலன் கையை விடாமல் இருக்க, இப்ப எதுக்கு வந்த? வேற பொண்ணா இல்லை உனக்கு? எவளுடனும் சுத்து. என்னை விட்டுரு என்றாள்.
தாரு, “நான் இனி பழைய மாதிரி இருக்க மாட்டேன்” என்றான்.
இனி நீ எப்படி இருந்தால் எனக்கென்ன? கைய விடு என்றாள்.
“முடியாது” என்று அவள் கையை இறுக பற்றினான். அவனை ஓங்கி அறைந்தாள். துகிலன் அவள் கையை விட்டான். எல்லாரும் எழுந்தனர்.
அம்மாடி நில்லு, எங்க வீட்டு வாரிசு உன்னோட வயித்துல இருக்கு. நீ எங்க வீட்டுக்கு தான் வரணும் என்றார் பிரபாகரன்.
உங்க வாரிசுக்காக நான் வர முடியாது சார். இன்னும் எத்தனை பொண்ணுங்க உங்க வாரிசோட வருவாங்கன்னு சொல்ல முடியாதே? அத்தனை பேரையும் உங்க பையன் கல்யாணம் செய்து கொள்ள முடியுமா? என்று கேட்டாள்.
யாராலும் ஏதும் பேச முடியவில்லை.
கண்டிப்பாக வேற எந்த பொண்ணும் வர மாட்டாங்க. என்னை தேடி வந்த பொண்ணுங்க பேசியதை கேட்டு தான் யாருடனும் பழக்கம் வச்சுக்காமல் தனியே இருந்தேன். இலக்கியா, ரசிகாவை தவிர வேற எந்த பொண்ணிடம் நான் ஆர்வம் காட்டியதில்லை. அதனால் நான் யாரையும் கல்யாணம் செய்து கொள்ள முடியாது.
அப்ப நீ ரசிகாவுடனே சேர்ந்து வாழ வேண்டியது தானே?
அவளுக்கு என் மீது காதல் இல்லையே?
ஆமா, உனக்கும் என் மீது காதல் இல்லையே? நான் எப்படி உன்னை நம்பி திருமணம் செய்வது? திருமணம் முடிந்த பின் எவளும் என்னை போல் உன் முன் வந்தால் என்னை கழற்றி விட்டு அவளை கல்யாணம் பண்ணிப்ப? எனக்கு எதுவுமே தேவையில்லை. நானே பார்த்துக்கிறேன் என்று கண்ணீருடன் அவளறைக்கு சென்றாள்.
தாருண்யா கதவை மூடும் முன் ரசிகா அவளை நிறுத்தி அவளறைக்குள் சென்று தாழிட்டாள். பின் அவளிடம் பேச ஆரம்பித்தாள்.
துகிலனுக்கு கொஞ்சம் நேரம் கொடு. அவன் உடனே உன்னை கல்யாணம் பண்ணிக்க கேட்கலை. ஆறு மாதம் வரை அவனை கண்காணி. அவன் மாறி விட்டானா? இல்லையா? என்று தெரிந்த பின் கல்யாணம் பண்ணிக்கோ. உன்னுடைய பதிலில் தான் ஐவரது வாழ்க்கை இருக்கு.
ஐவரா? தாருண்யா கேட்க, துகிலன் திருந்தினால் தான் ஆதியை கல்யாணம் செய்து கொள்வதாக சொன்னாள் ரசிகா.
அப்படின்னா துகி என்னையும் குழந்தையையும் நன்றாக பார்த்துக் கொண்டால் தான் நீ ஆதியை கல்யாணம் பண்ணிப்பாயா? தாருண்யா கேட்டாள்.
ஆமா தாரு, இந்த ஆறு மாதம் நாம் இருவருமே துகிலனை கண்காணிப்போம். இதற்கு முன் இருந்த தவறான ஒன்று நம் கண்ணில் தெரிந்தாலே நாம் இருவருமே அவங்களை கல்யாணம் பண்ணிக்க வேண்டாம் என்றாள் ரசிகா.
நீ எதுக்காக ஆதி அண்ணாவை வேண்டாம்ன்னு சொல்ற? காரணம் இருக்கு என்று அனைவர் பேச்சுக்கும் நம் குடும்பம் விருந்தாகக்கூடாது என்று சொல்ல, தாருண்யா மனம் மாறியது. ஆனால் அவனுக்கு வேற குடும்பம் யாராவது வந்து விட்டால் நான் என்ன செய்வது? தாருண்யா கண்கலங்க கேட்டாள்.
அப்படி ஏதும் நடக்கக்கூடாதுன்னு அவனுடன் முன்னதாக ஒப்பந்தம் போட்டுக்கோ என்ற ரசிகா, இப்ப துகிலன் வருவான். நீங்க பேசிக்கோங்க. ஆனால் அவனை நாம் கண்காணிக்கப் போகிறோம் என்று ஏதும் சொல்லி விடாதே என்றாள் ரசிகா.
“போகாத ரசிகா, நீயும் இரேன். எனக்கு பயமா இருக்கு” என்றாள் தாருண்யா.
இனி அவன் தான் உன்னையும் உங்க குழந்தையையும் பார்த்துக்கப் போறான். அதனால பேசு. ஏத்துக்கோ. இது நிரந்தரமில்லைன்னு அடிக்கடி அவனிடம் சொல்லு. அவன் உன் வழிக்கு வந்திருவான் என்று ரசிகா வெளியேறி துகிலனிடம், லிது நிது பற்றி தாருண்யாவிடம் பேச வேண்டாம் என்று சொல்லி அனுப்பினாள்.
ரசிகாவிற்கு இருவரும் சேரணும். அதே போல் துகிலன் மீது தாருண்யாவிற்கு சந்தேகம் வந்திடக்கூடாது என்று தான் இரு பக்கமும் ரசிகா பேசினாள். அவள் துகிலனை அனுப்பி விட்டு வந்து அமர்ந்தாள்.
ரசிம்மா, அந்த பொண்ணு என்ன சொன்னா? சவிதா கேட்க, ஆன்ட்டி அவ இப்பொழுதைக்கு ஒத்துப்பா. அவங்க கல்யாணம் நடக்கணும்ன்னா எல்லாம் உங்க பையன் கையில் தான் இருக்கு என்றாள்.
இது போதும்மா. இதுக்கு தான் உன்னை கையோடு அழைத்து வந்தேன் என்றார் பிரபாகரன்.
அகரனும் திரிவேஷூம் வந்தனர். மெல்லினாவும் அவர்களுடன் வந்தாள்.
மெல்லி, சாப்பிட்டாயா? ரசிகா கேட்க, எங்கே? இவனுக இருக்கும் போது எப்படி அண்ணி நடக்கும்? மெல்லினா கேட்டாள்.
ஆமாவா? திரிவேஷ் கேட்க, அனைவரும் அமைதியாக இருந்தனர்.
தாருண்யா அருகே அமர்ந்த துகிலன், லிது நிதுவை பற்றி தான் முதலில் சொன்னான். அவள் கண்கலங்க அவனை பார்த்தாள்.
ஆனால் அவங்களோட அப்பா நான் தான்னு சொன்னாலும் பசங்க ஏத்துக்கலை. அவங்களுக்கு எப்போதும் அப்பாவாக நான் தான் இருப்பேன்னு என் அண்ணனும் சொன்னதால் யாரும் இதை பற்றி கேட்க மாட்டாங்க. நானும் அவங்களை விட்டுட்டேன். அண்ணா அவங்களை பார்த்துப்பான். ரசிகாவையும் பிள்ளைகள் அம்மாவாகவே எண்ண ஆரம்பிச்சுட்டாங்க. ஆனால் நான் செய்த தவறால் தான் அண்ணாவும் ரசிகாவும் பார்க்காமல் பேசாமல் இருந்தனர்
நாம் நன்றாக வாழ்ந்தால் தான் அவங்க கல்யாணம் பண்ணிப்பாங்க.
ஓ..அதனால் உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கணும்? என்று அவனை முறைத்தாள் தாருண்யா.
அதுகில்லை. நம்ம பிள்ளை என்று சிந்தித்த துகிலன். எனக்கு கொஞ்சம் நேரம் தருகிறாயா? கேட்டான். அவளும் ஒப்பந்தம் பற்றி சொல்ல, சரி என்றான் துகிலன்.
வேகமாக அவளை துகிலன் கட்டிக் கொள்ள வந்தான். அவள் வயிறு இடித்தது. சாரி..சாரி..என்று அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டான். அவள் கண்ணீர் வெளியே வர, அழாதே என்று கண்ணீரை துடைத்து விட்டு அவளது கையை பிடித்து வெளியே அழைத்து வந்து, அர்னவ் அம்மா, அப்பா அவனிடம், தாருண்யாவை அழைத்து செல்வதாக சொன்னான். அவளுக்கு குழந்தை பிறந்த பின் செல்லலாமே? என்று அர்னவ் அம்மா கேட்க, எல்லாரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
இங்கே இருக்கும் எங்க வீட்டிலே நானும் ரசியும், துகிலனும் தாருண்யாவை பார்த்துக் கொள்வதாக சொல்ல, ஆன்ட்டி நான் எதற்கு? நீங்க பார்த்துக்கோங்க என்றாள்.
எனக்கு துணைக்கு இருக்க மாட்டாயாம்மா? அவர் கேட்க, ரசிகா எல்லாரையும் பார்த்தாள்.
அவள் ஊட்டிக்கே செல்லட்டும். குழந்தை பிறந்த பின் ஊட்டியில் நம்முடன் வந்து தங்கிக் கொள்வாள் என்று ஆதி சொல்ல, ஆதியை ரசிகா முறைத்தாள்.
ஆன்ட்டி, நாங்க இடையிடையே பார்க்க வந்திருவோம் என்று ரசிகா சொல்ல, ஆமா அது தான் சரி. அவள் அவளோட அண்ணாவுடனே இருக்கட்டும் என்றான் அகரன்.
வா ரசி, “நீ வந்த வேலை முடிந்தது” என்று மெல்லினா கையை விட்டு ரசிகா கையை பிடித்து அழைத்தான் அகரன். ஆதி கோபமாக எழுந்தான்.
அண்ணா, கொஞ்ச நாள் காத்திரு. ரசிகா எங்கும் போகலை. ஊட்டிக்கு தான் வருவாள் என்ற துகிலன், இந்த இருநாட்கள் மட்டும் நீங்க மூவரும் எங்களுடன் தங்கலாமே? எனக் கேட்டான்.
ஆமா, “நீயும் எங்களோட வா” என்று தாருண்யா சொல்ல, “அகரனும் திரிவேஷூம் வந்தால் நானும் வருகிறேன்” என்றாள் ரசிகா. ஆதி முகம் வாடியது.
“நாங்களும் இருக்கோம்” என்று அகரன் சொல்ல திரிவேஷ் தயங்கினான்.
ஏன்டா, எங்களோட தான தங்க போற? அதனால என்ன? ஆதி கோபமாக ரசிகாவை முறைத்துக் கொண்டே கேட்டான்.
ஓ.கே சார், நானும் வாரேன். ஆனால் மௌனியை முறைக்காதீங்க. அவள் சொல்வதில் காரணம் இருக்கு. சிந்தித்து பாருங்க என்றான் திரிவேஷ். பிரபாகரன் திரிவேஷை முறைக்க, அவன் அமைதியானான்.
நாங்க கிளம்புகிறோம் என்று பிரபாகரன் சொல்ல, அங்கிள் கொஞ்ச நேரம் அவளோட ஆடைகளை பேக் பண்ணிக்கிறோம் என்று ரசிகாவும் அர்னவின் அம்மாவும் உடன் செல்ல சவிதாவும் உள்ளே வந்து தாருண்யாவிடம் பேச்சு கொடுத்தார். பின் அனைவரும் கிளம்பினார்கள்.
இரு நாட்கள் ரசிகா, அகரன், திரிவேஷ் சென்னையில் உள்ள பிரபாகரனின் வீட்டில் இருந்தனர். ரசிகாவை பார்த்ததும் லிதுவும் நிதுவும் ஓடி வந்து கட்டிக் கொண்டனர். பின் இருவரும் தாருண்யாவை பார்க்க, ரசிகா இருவரையும் அறிமுகப்படுத்தினாள்.
இவங்க வயிறு இவ்வளவு பெருசா இருக்கு? நிது கேட்க, லிது நிதுவுக்கு, குட்டி தம்பி பாப்பா வரப் போறாங்க என்று சவிதா மகிழ்ச்சியுடன் நிதுவை தூக்கினார்.
பாட்டி என்று லிதுவும் கையை தூக்க பிரபாகரன் அவளை தூக்கினார்.
துகி, நீ ஊட்டி வந்த பின் எங்களுடன் பேக்டரிக்கு, எஸ்டேட், ஹோட்டல் எல்லாத்தையும் பொறுப்பா பார்த்துக்க வரணும் ஆதி சொல்ல, அவன் தாருண்யாவையும் சவிதாவையும் பார்த்தான்.
ஆமாப்பா, நான் பார்த்துக்கிறேன். “நீ அண்ணா, அப்பாவுக்கு உதவியா இரு” என்று சவிதா சொன்னார். அவன் தாருண்யாவை பார்த்தான். அவள் “ஆம்” என்று தலையசைத்தாள்.
அன்றிரவு ரசிகா ஆதி அறைக்கு சென்றாள். அவன் சிந்தனையுடன் படுக்கையில் படுத்திருந்தான். லிதுவும் நிதுவும் அவனருகே உறங்கிக் கொண்டிருந்தனர். ரசிகாவை பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டான் ஆதி.
ஆதி ரசி மேல கோபமாக இருப்பது போல் தெரியுதே? மெதுவாக கேட்டாள். அவன் பிள்ளைகளை விட்டு எழுந்து வந்தான்.
ஆமா, நீ வெளிய போ. உன்னால தான் என்னிடம் பேசக் கூட முடியாதுல்ல. எல்லாரிடமும் பேசுவாலாம். என்னிடம் மட்டும் பேச மாட்டாளாம் கோபமாக ஆதி பேச, ஹப்பா..எவ்வளவு கோபம் என்று அவன் கண்ணில் அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி மேசை மீது வைத்தாள்.
என்ன பண்ற? ஆதி கேட்க, அதுவா என் புருசனோட கோபத்தை குறைக்கிறேன்.
இல்லை. என் கோபம் குறையாது என்றான் ஆதி.
சரி, அப்ப நீங்க என் மேல கோபமாகவே இருங்க. நான் என்னறைக்கே போகிறேன் என்றாள். அவன் அமைதியாக இருந்தான்.
ஓ.கே, “போகப் போறேன்” என்று ரசிகா கதவருகே வந்து விட்டாள். அவள் கையை பிடித்த ஆதி அவனின் தனி அறைக்கு இழுத்து சென்று, என்னை சீண்டவே வந்தாயோ? கேட்டான்.
சீண்டலா? அப்படின்னா என்ன? அவள் கேட்க, ஏய் நடிக்காத, என்னை ஏமாத்திட்டு போகப் பார்த்த அப்புறம் நீ என்னை உயிரோட பார்க்கவே முடியாது ஆதி மிரட்டினான்.
என்ன ஆதி, உங்களை விட்டு எங்கே போகப் போறேன்? இவ்வளவு சீரியசாகிட்டீங்க? ஏதோ நான் மட்டும் சந்தோசமா இருக்குற மாதிரி பேசுறீங்க? ரசிகா கேட்டாள்.
ஆமா, நீ ஜாலியா தான சுத்திக்கிட்டு இருக்க?
ஜாலியாவா? அப்படின்னா?
ஹாப்பியா?
ஓ..நான் சிரிக்கக்கூடாதா?
அப்படியில்லை..
அப்புறம் எப்படி? என்று புடவையை இழுத்து சொருகி விட்டு ஆதியை நெருங்கினாள். அவன் கவனம் அவள் சொருகிய இடுப்பில் பதிந்தது.
ஆதி சார், நினைப்பு எங்கோ போவது போல் இருக்கே? ரசிகா கேட்க, ஆமா நானும் எத்தனை நாட்கள் காத்திருப்பது? இப்ப தான் துகிக்கு குடும்பம் வந்திருச்சே நாம கல்யாணம் பண்ணிக்கலாம்ல்ல? ஆதி கேட்க, ஆறே மாதம் தான். தாரு கண்டிப்பாக துகிலனை நல்ல வழிக்கு கொண்டு வந்திருவா. அவங்க சந்தோசமா வாழ ஆரம்பித்த பின் நம் வாழ்க்கையை தொடங்கலாம் என்றாள் ரசிகா.
என்ன ரசி? இப்படி பேசுற? உன்னை பார்க்காமல் பேசாமல் என்னால இருக்க முடியாது. லிது, நிது, மெல்லியை பார்க்க போன? ஆனால் ஒரு முறையாவது என்னை பார்க்க வந்தாயா?
ஆதி, நீங்க பார்த்து பேசினால் அமைதியாக இருப்பீங்களா? பேசும் போதெல்லாம் கல்யாணத்தை பற்றி தான் பேசுவீங்க? நான் என்ன தான் செய்வது? ப்ளீஸ் ஆதி..கொஞ்சம் காத்திருங்கள்.
சரி, இங்கே இருக்கும் வரையாவது தினமும் என்னை பார்க்க வரணும்.
ஓ.கே ஆதி, ”இன்று போல் இரு நாட்களும் பார்க்கலாம்” என்றாள் ரசிகா.
ம்ம்..என்ற ஆதி ரசிகாவை நெருங்கி வந்து, ரசிக்கு பாப்பா வேணுமா? பையன் வேணுமா? என்று கேட்டான்.
“எனக்கு ஆதி தான் வேணும்” என்று அவனை கட்டிக் கொண்டாள். அவனும் புன்னகையுடன் அவளை அணைத்தான்.