பருத்தி சாகுபடி நடக்கும் இடத்தை அடைந்ததும் பசங்க கிளாஸ் அணிந்து கொண்டனர். ஆதி தான் ஏற்கனவே கண்ணாடி அணிந்திருப்பானே? அவர்களை பார்த்து சுரேகா, நீங்க மட்டும் கிளாஸ் போட்டு இருக்கீங்க? எங்களுக்கு என்று கேட்டாள்.
இந்தா என்று திரிவேஷ் சுரேகாவிற்கு கொடுக்க, அகரன் தன் கண்ணாடியை கழற்றினான். ஆதி அதற்குள் ரசிகாவிடம் திரும்பி, ரசி உனக்கும் வேண்டுமா? வாங்கிடலாமா? எனக் கேட்டான். எல்லாரும் அவர்களை பார்த்தனர்.
“எனக்கு இதெல்லாம் வேண்டாம். வாட்டர் தான் வேணும்” என்ற ரசிகா யாரையும் கண்டு கொள்ளாமல் ஓரிடத்திற்கு சென்று அமர்ந்தாள்.
காரிலிருந்து எடுத்து ஆதி அவளருகே வந்து அமர்ந்தான். ஆனால் அவள் கவனம் வேறு பக்கம் இருந்ததால் அவனை கவனிக்கவில்லை.
அகரா, என்று ரசிகா திரும்பி ஆதியை பார்த்து சார் என்று எழுந்தாள். “ஏய், விழுந்துறாத” என்று ஆதி சொல்ல, அவன் சொன்னதும் பதட்டமாக பின்னே நகர்ந்தாள். கல் தடுக்கி அவளுக்கு உதவ வந்த ஆதி மேலே வந்து விழுந்தாள் ரசிகா.
ஆ..என பார்த்த நண்பர்கள், என்னடா நடக்குது அகரா? உன்னோட காதலை சொன்னாயா? என திரிவேஷ் கேட்டான்.
சொன்னேன். ருச்சி என்னை ஏத்துக்கலை. பாஸ்க்கும் அவளை பிடிச்சிருக்குடா. ஆனால் இன்னும் அவர் அவளிடம் சொல்லலை என்றான் வருத்தமாக.
“அவருக்கு மௌனிய பிடிச்சிருக்கா? அகரா அவளை விடு. உனக்கு நான் நல்ல பொண்ணா பார்க்கிறேன்” என்றான் திரிவேஷ்.
மாமா வேலையா பார்க்க போற திரோ? என்று சுரேகா கேட்க, “என் மச்சானுக்கு நான் பொண்ணு பார்ப்பதுக்கு நீ என்ன பேர் வேண்டுமானாலும் வச்சிக்கோ” என்றான்.
“டேய் மச்சான்” என்று அகரன் அவனை அணைக்க, “டேய், என்ன ஓய்யாம கட்டிப்பிடிச்சுக்கிறீங்க” என்று அகரனையும் திரிவேஷையும் பிரித்து விட்டு சுரேகா திரிவேஷை அணைத்தாள்.
சுரே, அவங்க ஜோடி கூட நல்லா தான இருக்கு? திரிவேஷ் கேட்க, நல்லா தான் இருக்கு. ஆனால் ருச்சி கண்டிப்பா பாஸ் காதல் தெரிந்தால் அவரிடமிருந்து ஓட தான் பார்ப்பாள் என்றான் அகரன்.
“ஆமாடா, நீ சொல்றதும் சரிதான்” என்று திரிவேஷ்.
ரசிகா ஆதியிடமிருந்து பதட்டமாக நகர, அவளை நகர விடாது உடும்பி பிடி போட்ட ஆதி, ரசி என்னோட காதல் தான் உன்னை என்னிடம் நெருங்க வைக்குது. உனக்கு என் மேல் துளி கூட காதல் வரலையா? என கேட்டான்.
இல்ல சார், என்னை விடுங்க. “ப்ரெண்ட்ஸ் நம்மை தப்பா நினைச்சுக்கப் போறாங்க” என்று அவன் அசந்த நேரம் அவனிடமிருந்து பிரிந்து நகர்ந்தாள்.
சரி, வா போகலாம். நேரமாகுது. ஆனால் எத்தனை வருசமானாலும் எனக்கு பொண்டாட்டியாகும் தகுதி உனக்கு தான் இருக்கு என்றான் ஆதி.
“இல்ல சார்” என்று அவள் நண்பர்களிடம் ஓடி வந்தாள். அவர்கள் இருவரையும் பார்க்காதது போல் நடந்து கொண்டனர்.
ஆதியும் திரிவேஷூம் ஆதி விருப்பப்படி அனைத்தையும் பார்த்தனர். பின் வாங்கவிருக்கும் மிஷின் பற்றியும் தொழிற்சாலையில் எங்கு அமைக்கலாம் என்று அனைத்தையும் திரிவேஷ் ஆதிக்கு விளக்கமளிக்க, மறுநாள் தயார் செய்ய பேச்சை ஆரம்பித்தான் ஆதி.
பாஸ், நாளை த்ரீயும், ரசியும் என்னுடன் தான் இருக்கணும். என்னோட பிளாட்டிற்கு “புதுமனை புகுவிழா நடத்தணும்” என்றான் அகரன்.
பிளாட் வாங்கி இருக்கியா? என்று ரசிகாவும் திரிவேஷூம் கேட்டனர். ஆமாடா, நாளைக்கு நீங்க தான் எல்லாமே செய்யணும்.
உன்னோட அண்ணா, அண்ணி வரலையா? ரசிகா கேட்க, அகரன் முகம் சுருங்கியது.
இல்ல ருச்சி, அண்ணி என் மேல கோபமா இருக்காங்க. அவங்களுக்கு போன மாதம் பணம் கொடுக்கலை.
நீ எதுக்குடா அவங்களுக்கு பணம் கொடுக்கணும்? திரிவேஷ் கேட்க, என்னடா பண்றது?
சிறு வயதிலிருந்து அவங்க தான பார்த்துகிட்டாங்க. அண்ணா எனக்கு படிக்க செலவு செய்யும் போது கூட அண்ணி தடுக்கலை. அவங்க என்னை கஷ்டப்படுத்தினாலும் படிப்பு விசயத்தில் அவங்க என்னை ஏதும் சொன்னதில்லை. அண்ணா பசங்க கூட அவங்கள போல தான் நடந்துப்பாங்க. எனக்கு திருமணம் முடியும் வரை பணம் கொடுப்பதாக சொன்னதால் தான் அண்ணாவை பேசவாது விடுறாங்க என்றான் வருத்தமாக.
என்னை விடு. ருச்சி அவள் சம்பாதித்து அண்ணன் பசங்கல்ல முழுவதும் அவள் தான் இப்ப வரை படிக்க வைக்கிறா? யாராவது அவள பத்தி யோசித்தாங்கல்லா? எல்லாரும் சுயநலம் பிடிச்சவங்க என்று அகரன் திட்ட ரசிகா அவனை முறைத்தாள்.
“என்ன முறைக்கிற? இதுக்கு மேல உங்க அண்ணிய உயர்த்தி பேசுன, நானே உன்னை கொன்றுவேன்” என்று திரிவேஷ் சொல்ல, “உங்கள மாதிரி ப்ரெண்டு இல்லைன்னு எனக்கு ரொம்ப பொறாமையா இருக்குடா” என்றாள் சுரேகா.
“எங்களுக்கு ப்ரெண்ட்ஸ் மட்டும் தான் எப்பொழுது சப்போர்ட்” என்று அகரன் ரசிகாவையும் திரிவேஷையும் பார்க்க, மூவரும் அணைத்தனர். மூவரையும் பிரித்து விட்டி சுரேகா என்னையும் சேர்த்துக்கோங்கப்பா என்றாள். ஆதிரேயன் இவர்களை புன்னகையுடன் பார்த்தான்.
ஆதிக்கு போன் வர, அவன் நகர்ந்து சென்றான்.
மௌனி ஆதி சாருக்கு உன் மேல கண்ணு போல? திரிவேஷ் கேட்க, அவள் அமைதியாக இருந்தாள்.
ருச்சி, அவர் சொல்லிட்டாரா? அகரன் கேட்க, அப்ப உனக்கு தெரியுமா? என்று ரசிகா அவனிடம் கேட்டாள்.
அவர் காதலை சொல்லீட்டார்ல்ல? அகரன் கேட்க, “அவர் என்னை கல்யாணம் பண்ணிக்கணுன்னு சொன்னார்” என்றாள்.
கல்யாணமா? என்று மூவரும் சத்தமிட, ஆதி திரும்பி அவர்களை பார்த்தான்.
பார்த்தியா, நான் சொல்லலை. ருச்சி இப்படி தான் செய்வாள் என்று அகரன் சொல்ல,
ரசிகா நீ ஆதி சாருக்கு “ஓ.கே” சொல்லீடு. உன்னோட பிரச்சனை எல்லாம் முடிஞ்சிரும் என்ற சுரேகா, ஆதி சார் ஸ்கூலுக்கு வந்தா போதும். அவரை சைட் அடிக்க ஒரு கும்பலே இருக்கு.
காலையில அவருடன் உன்னை பார்த்த பலருக்கு சரியான பொறாமை. அவருக்கென்ன? குழந்தைகளுக்கு அப்பா போலவா இருக்கார். செம்ம ஹேண்ட்சம், வசதியானவர், நல்ல மனுசன். அவர் அதிகம் ஸ்கூலுக்குள்ளே வர மாட்டார். அவரை பார்த்தால் டீச்சர்ஸ்ஸே அவர் முன்னே ஜொல்லு ஊத்துவாங்க தெரியுமா? பெருமையாக ஆதியை பற்றி சுரேகா பேச, ரசிகா கோபமாக முன் நடந்தாள். ஆதி அவள் முன் வந்து நின்றாள். அதே கோபத்தோடு அவனையும் முறைத்து விட்டு நகர்ந்தாள்.
உங்க ப்ரெண்டுக்கு என்ன தான் பிரச்சனையாம்? ஒன்று கோபமா முறைக்கிறா? இல்லை அழுறா? ஆதி கேட்க, “சார் அவளுக்கு பொறாமையா இருக்காம்” என்றான் திரிவேஷ்.
நின்ற ரசிகா அவனிடம் வந்து அவனது கழுத்தை பிடித்து, நான் பொறாமையா இருக்குன்னு சொன்னேன்னா? யார் என்ன செஞ்சா எனக்கென்ன? கிளம்பலாமா சார்? இன்னும் சற்று நேரத்தில் லிது, நிதுவை விட்டுருவாங்க என்றாள்.
ஓ..அப்படியா? சுரேகா கேலியாக கேட்க, “விடுங்க. ரசி தான் டென்சன் ஆகுறால்ல” என்று ஆதி சுரேகாவை பார்த்தான்.
முதல்ல பசங்கல்ல கூட்டிட்டு வந்து, சுரேகா உன்னோட அம்மா, அப்பாவை பார்ப்போம் என்றான் ஆதி. ஓ.கே சார் என்று அனைவரும் பள்ளிக்கு கிளம்பினர்.
பசங்களை அழைத்துக் கொண்டு நேராக சுரேகாவின் வீட்டிற்கு அனைவரும் சென்றனர். முதலில் சுரேகா திரிவேஷை அழைத்து சென்றாள். அவள் பெற்றோர் அவனை பார்த்ததும் சத்தமிட்டனர்.
அம்மா நிறுத்துறீங்களா? உங்களுக்கு என்ன தான் பிரச்சனை? அவன் பிசினஸ் ஆரம்பிச்சு இருக்கான். அது நல்ல படியாக செல்லும். என்னை பற்றி நீங்க கவலைப்பட வேண்டாம் என்று அவள் சொல்ல,
என்னடி கவலைப்பட வேண்டாம்? அதிகமாக பேசாத. உனக்கு என்ன தெரியும்? கஷ்டத்தின் ஆரம்பகாலம் எப்படி இருக்கும் தெரியுமா? அவள் அம்மா சத்தமிட்டார்.
அம்மா அவன் தனியா கஷ்டப்படுறான். நான் அவனுக்கு துணையா இருக்கணும் என்றாள்.
முடியாதுடி. அவன் என்ன பிசினஸ் நடத்தினாலும் என்றாவது ஒருநாள் அதை கைவிடும் நிலைக்கு அவனே வருவான். அப்பொழுது உன் வாழ்க்கை என்னாவது?
“அவன் எந்த நிலையில் இருந்தாலும் எனக்கு அவன் தான் வேண்டும்” என்று அவள் சத்தமிட, அவள் அம்மா அவளை கோபத்தில் அறைய, அவளை நகர்த்திய திரிவேஷ் மீது பட்டது. அவள் அம்மா விலகி நின்றார்.
ஆதி, அகரன், ரசிகா உள்ளே வந்தனர்.
பசங்களை அமர வைத்து விட்டு ரசிகா திரிவேஷிடம் வந்தாள்.
ஆதி சார், அகரா ஒன்றுமில்லை. மௌனி என்று ரசிகாவை பார்த்தான். அவள் கோபமாக சுரேகாவை பார்த்தாள்.
“ரசி, அமைதியா இரு” என்று ஆதி சத்தமிட, ரசிகா ஆதியை பார்த்தாள்.
இருக்கட்டும் சார். என்ன பண்றீங்க? யாருக்கும் எந்த வேலையும் நிரந்தரமில்லை. அவ்வப்போது கிடைப்பதை வைத்து வாழ்வது தான் வாழ்க்கை. திரிவேஷ் என்னோட பிசினஸ் பார்ட்னர். அவரை இப்படி அவமானப்படுத்துறீங்க?
“அவங்க பொண்ணை அவங்க வச்சிக்கட்டும். வாங்க நாம போகலாம்” என்று ஆதி சொல்ல, அனைவரும் விழித்தனர்.
ஆதி சுரேகாவிடம் கண்ணை காட்டினான். அவள் அவனை பார்த்து விட்டு திரிவேஷை பார்த்தாள். ஆதி அவனை அழைத்துக் கொண்டு நகர்ந்தான்.
“திரோ போகாத. சாரிடா” என்று சுரேகா அவர்கள் பின் அழுது கொண்டே ஓடி வந்தாள். அவள் அம்மா அப்பாவும் பின் வந்தனர். தெருவினர் வேடிக்கை பார்த்தனர்.
“ஓய், எங்க வர்ற? உங்க அம்மா, அப்பாவுக்கு தான் பிசினஸ் செய்பவர்களை பிடிக்காதுல்ல போ” என்று ஆதி சொல்ல, சார் என்ன பண்றீங்க? என்று ரசிகா ஆதி கையை பிடித்தாள்.
“நான் அருகே வரும் போது விட்டுட்டு இப்ப கையை பிடிக்கிறா பாரு” என மனதில் எண்ணிய ஆதி, ரசி நீ பேசாத. பாப்பாக்களை தூக்கிட்டு வா கிளம்பலாம்.
அங்க என்னடா வேடிக்கை பாக்குற? அகரா வா போகலாம். “மதியாதார் தலைவாசல் மிதிக்க கூடாது” என்று ஆதி பழமொழி கூற, ரசிகா அவனருகே வந்து அவனை உற்று பார்த்தாள். அவன் கண்ணடித்து விட்டு, “ரசி பக்கத்துல வந்த கிஸ் பண்ணிடுவேன்” என எல்லார் முன்னும் சத்தமாகவே கூறினான். அவள் பதறி வேகமாக நகர்ந்து அகரனை இடித்தாள்.
“இங்க பார்த்து வா. இல்ல உன்னை பிடிச்சு தள்ளி விட்டுருவேன்” என்று அகரன் கூறிக் கொண்டே ஆதியை பார்த்தான். ஆதி அகரனை முறைத்துக் கொண்டே திரிவேஷ் கையை இழுத்தான்.
டேய் வாடா,.ஆதி திரிவேஷை பார்த்தான். திரிவேஷ் அதிர்ச்சியாக நின்று கொண்டிருந்தான். அவன் கையை அவனது எதிர்கால மாமனார் பிடித்துக் கொண்டிருந்தார்.
ஆதி அவரை பார்த்து மனதினுள் புன்னகைத்து, “சார் அவனை விடுங்க. நாங்க வேற பொண்ணு தேடிக்கிறோம்” என்று சொல்ல,
எதுக்கு சார் வேற பொண்ணெல்லாம்? அதான் என் பொண்ணு சுரேகாவை காதலிக்கிறாரே? வாங்க என்று அவர் திரிவேஷை பார்த்து அழைத்தார்.
பிசினஸ் என்று வேண்டுமானாலும் சரியலாம் சார். அப்புறம் உங்க பொண்ணு நிலைமை? ஆதி கேட்க, “அவளை நங்க படிக்க வச்சிருக்கோம் சார். அப்படி பெரிய பிரச்சனை ஏதும் வராது” என்றார் அவர்.
ஆதி திரிவேஷ் கையை விட்டான். ஆனால் திரிவேஷ் அவரை பார்த்து, சார் உங்க பொண்ணை எனக்கும், அவளுக்கு என்னையும் ரொம்ப பிடிக்கும். நீங்க ஆதி சாருக்காக தான் என்னை ஏத்துக்கிட்டீங்க? திரிவேஷ் கேட்க, ஆதியும் உறைந்து திரிவேஷை பார்த்தான்.
“சார், எனக்கான கஷ்டநேரத்தில் உதவுகிறார். நான் எப்போதும் அவருக்கு லாயலா இருப்பேன். அதுக்காக அவரை வைத்து உங்க பொண்ணை கல்யாணம் பண்ண எனக்கு விருப்பமில்லை” என்று அவன் நகர்ந்தான். சுரேகா அழுது கொண்டே அறைக்கு ஓடி கதவை சாத்தினாள்.
ரேகாம்மா, வெளிய வா அவள் அம்மா கத்த, ரசிகாவும் உள்ளே சென்றாள்.
என்னடா த்ரீ, பைத்தியம் மாதிரி பேசுற? அகரன் கேட்க, இல்ல அகரா தெளிவா தான் பேசுறேன். சுரே பெற்றோர் என்னை பிடித்து, என் உழைப்பையும், என்னை நம்பி அவங்க பொண்ணு தரணும். அவங்க ஆதி சாரை பார்த்த பின் தான் மனசு மாறி பேசுறாங்க என்றான் கண்ணீருடன்.
திரிவேஷ் சொல்வது சரிதானே? அகரனும் ஆதியும் பேச முடியாமல் நிற்க, சுரேகா அப்பா திரிவேஷிடம் வந்து பேசினார்.
ஆதி சாரை பார்த்து, உனக்கு என் பொண்ணை கொடுக்கணும்ன்னா. நான் அவருக்கே என் பொண்ணை குடுத்திருக்கலாம். என்னுடைய நண்பர்கள் பிசினஸ் ஆரம்பித்து கடன் தொல்லை தாங்க முடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டாங்க. என்னோட ரகு செத்தே போயிட்டான். என்னோட பொண்ணுக்கும் அந்த நிலை வந்திருமோன்னு பயம் எனக்கு இருக்காதா?
நீ சும்மா இருக்கணுன்னு தான் முதல்ல கேள்விப்பட்டேன். ஆனால் நினைத்த வேலையை உடனே எடுக்காமல் நிதானமாய் சிந்தித்து, அதிகம் யாரும் போகாத பக்கம் சென்று இருக்க. அதுக்கு பொறுமை, தன்னம்பிக்கை எல்லாம் இருக்கணுமே? அது உன்னிடம் இருப்பதால் தான். அதுவும் ஆதி சாருடன் பழக்கமும் வச்சிருக்க. அப்புறம் என்ன? நல்ல பிள்ளையா தான இருப்ப? அந்த நம்பிக்கையில் தான் உன்னை ஏற்றுக் கொள்வதாக சொன்னேன்.
அவருடன் உள்ள பழக்கத்தில் எப்படி என் பொண்ணை உனக்கு கொடுப்பேன்? அவள் உன்னுடன் தானே வாழப் போறா? “உன்னை பற்றி புரிந்ததால் தான் உன்னை போக விடாமல் நிறுத்தினேன்” என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
சுரேகா கையில் பையுடன் வந்தாள். ரசிகாவும் சுரேகா அம்மாவும் அவள் பின்னே வந்தனர். சுரேகா அவள் அப்பாவிற்கும் திரிவேஷிற்கும் இடையே நுழைந்து ஆதியிடம் வந்தாள்.
சார், என்னை உங்க ஸ்கூல் விடுதியில் சேர்த்து விடுறீங்களா? ரெக்கமன்ட் மட்டும் பண்ணுங்க போதும். “பணம் என் சேமிப்பில் வச்சிருக்கேன்” என்று சொல்ல, அனைவரும் அவளை பார்த்தனர்.
அங்க தனியா எப்படி இருப்ப? ஆதி கேட்க, அது என்னோட தலையெழுத்து. இங்க இருக்குறதுக்கு நான் அங்கேயே இருந்துக்கிறேன். அப்புறம் சார் அவனும் என்னை பார்க்க வரக்கூடாதுன்னு சொல்லீருங்க? இவங்க யாரும் என்னை விட்டு போக வேண்டாம். எனக்கு யாருமே வேண்டாம். நான் போறேன் என்றாள்.
அம்மா, என்னம்மா இப்படி சொல்ற? சுரேகா அப்பா கேட்டுக் கொண்டே அவள் அம்மாவுடன் ஓடி வந்தார்.
ஆமா, நீங்க அவனை ஏத்துக்க மாட்டீங்க? அவனுக்கு என்னை விட அவனோட கௌரவம் பெருசா போச்சுல்ல. போங்க..போங்க என்று அவளாகவே ஆதி காரில் ஏறி அமர்ந்தாள்.
“இல்லம்மா, நீ காதலித்த பையனையே கல்யாணம் பண்ணிக்கோ” என்றார் அவள் அப்பா.
அப்பா, ஏமாத்த பாக்காதீங்க? என்று அவள் கேட்க, திரிவேஷ் அவளை சீரியசாக பார்த்தவன் சிரிக்க ஆரம்பித்தான். அவள் கோபமாக வெளியே வந்து, எதுக்குடா சிரிக்கிற? என்று திரிவேஷை அடித்தாள்.
எல்லாம் சுமூகமாய் முடிந்த பின் இப்படி காமெடி பண்ற? என்று அவன் மேலும் கிண்டல் செய்து சிரித்தான்.
“வாய மூடு. இல்ல நான் நிஜமாகவே போயிடுவேன்” என்றாள்.
சிரிப்பை அடக்கிக் கொண்டு அவள் தோளில் கையை போட்டு, என்ன ஒரு வேகமான யோசனைல்ல? என்று கேட்டான். அவள் முறைத்தான்.
“எல்லாரும் உள்ள வாங்க” என்று சுரேகா அம்மா அனைவருக்கும் தேனீர் செய்து அருந்த கொடுத்தார். திரிவேஷ் அவனுடைய தொழிற்சாலையை பற்றி ஆனந்தமாக சொன்னான்.
“ஆல் தி பெஸ் டா” என்று ரசிகாவும் அகரனும் அவனுக்கு கை கொடுக்க நிதுவும் ஓடி வந்து கையை கொடுத்தாள். அவனும் கை கொடுத்து நிதுவுடன் பேச, லிதுவும் திரிவேஷிடம் வந்து பேசினாள்.
ஆதியை பார்த்த திரிவேஷ், அவன் குழந்தைகளையும் ரசிகாவையும் பார்த்தான். அவன் எண்ணத்தை புரிந்து கொண்ட ரசிகா, அவனை முறைத்தாள்.
அகரனும், ஆதியும் புரியாமல் இருவரையும் பார்த்தனர். அகரன் எழுந்து சுரேகா வீட்டினரையும் அவன் பால்காய்ச்சும் விழாவிற்கு அழைத்தான்.
எங்களுக்கெல்லாம் அழைப்பு இல்லையா? ஆதி கேட்க, பாஸ் உங்க வீட்டுக்கு வந்து எல்லாருக்கும் சொல்லணும். உங்களை விட்டால் எனக்கு இங்க வேற யாரு இருக்கா? என்று அகரன் சோகமாக சொல்ல, நான் அண்ணியிடம் பேசவாடா? ரசிகா கேட்டாள்.
எதுக்கு உன்னை தேடி எல்லாரும் வரணுமா? திரிவேஷ் கோபமாக கேட்டான்.
சரிடா விடு. வாங்க மெல்லினாவை அழைச்சிட்டு கிளம்புவோம் என்று அவர்கள் பள்ளிக்கு சென்று மெல்லினாவை அழைத்து வீட்டிற்கு வந்தனர். திரிவேஷூடம் ஆதி போட்ட பார்ட்னர்ஷிப்பை பிரபாகரன், தமிழரசனிடம் சொன்னான்.
அகரன் எழுந்து அனைவரையும் அழைத்து விட்டு, அகரனும் திரிவேஷூம் வெளியே வந்தனர். “சில பொருட்கள் வாங்கணும். இன்று நீ என்னுடன் தான் தங்கணும். எனக்கு உதவுவேல்ல” அகரன் கேட்க, “உனக்காக எதையும் செய்வேன் டா” என்று திரிவேஷூம் அகரனுடன் புது வீட்டை பார்க்க சென்றான்.
இரவு உணவை முடித்து பசங்க அறைக்கு சென்றாள் ரசிகா. கீழிருந்து ஆதி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
சீதாம்மா ஆதியை பார்த்துக் கொண்டு, தம்பி உங்களுக்கு நம்ம ரசியை பிடிச்சிருக்கா? என்று கேட்டார். ஆதி திகைத்து அவரை பார்த்தான். அவரருகே பிரபாகரனும் தமிழரசனும் கையை கட்டிக் கொண்டு ஆதியை பார்த்தனர்.
ஆதி பதில் சொல்ல முடியாமல் எழுந்தான்.
மாப்பிள்ள, சொல்றதுனால உங்கள யாரும் இங்கே தவறாக நினைக்கப் போறதில்லை. மனதில் இருப்பதை சொல்லுங்க. நாங்க பார்த்துக்கிறோம் என்றார் தமிழரசன்.
ஆதி அவன் அப்பாவை பார்த்தான். முதலிலே நீங்க கூறியதை கேட்டிருக்கணும்ப்பா. என்னால தான உங்க வாழ்க்கையே தடம் மாறிப் போனது. இப்ப உங்களுக்கு இந்த பொண்ணை பிடிச்சிருந்தா தாராளமாக எங்களிடம் சொல்லுங்க. நாங்க பேசுறோம் என்றார் பிரபாகரன்.
எல்லாரும் காத்திருங்கள். நானே சொல்வேன் என்று ஆதி அவனறைக்கு சென்றான். மூவரும் அவனை பார்த்துக் கொண்டே நின்றனர்.
பசங்க தூங்கும் முன் ரசிகா அசதியில் தூங்கி விட்டாள். லிதுவும் நிதுவும் அவளை பார்த்துக் கொண்டே படுத்திருந்தனர். மெல்லினாவும் தூங்க முடியாமல் வீட்டின் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அறைக்கு சென்ற ஆதி அவன் படுக்கையை சரி செய்து படுக்கும் முன் குழந்தைகள் அறைக்கு வந்தான்.
மெல்லினாவை பார்த்த ஆதி, சப்ப மூக்கி நீ தூங்கலையா? எனக் கேட்டான்.
அண்ணா, நீ எங்களுடன் நன்றாக பேசியே வெகுநாட்கள் ஆயிற்று. இப்ப தான் பழைய மாதிரி பேசுற. சந்தோசமா இருக்கு. அண்ணா மித்திரனை நினைத்தால் கஷ்டமா இருக்கு. அவனுக்கு ஏதும் ஆகாதுல்ல” என்று மெல்லினா கண்கலங்க கேட்டாள்.
“இல்லடா, சீக்கிரம் அவனை கண்டுபிடித்து விடலாம்” என்ற ஆதி, அவனை பற்றி மட்டும் யோசிக்கிற? அவனை உனக்கு அவ்வளவு பிடிக்குமா?
அண்ணா, அவன் என்னோட ப்ரெண்டு தான். விசாகா வீட்ல அவங்கள தாண்டி அவள் பக்கம் யாரும் வர மாட்டாங்க. அவள் பாதுகாப்பாக தான் இருப்பாள். ஆனால் மித்திரனை அவன் வீட்டிலிருந்து துரத்தி விட்டிருக்காங்க. ஆகாஷ், லீனா போல் அவனுக்கும் ஏதாவது ஆகிடுமோன்னு ரொம்ப பயமா இருக்கு. அவன் சாப்பிட்டானா? தூங்கினானா? உயிரோட இருக்கானான்னே தெரியல. ரொம்ப பயமா இருக்கு என ஆதியை அணைத்து அழுதாள்.
அவனை சீக்கிரம் நானே கண்டுபிடிக்கிறேன் மெல்லி.” நீ அழாத” என்று அவளை சமாதானப்படுத்தினான்.
லிதுவும் நிதுவும் இவர்கள் சத்தத்தில் எழுந்து அமர்ந்தனர்.
“அப்பா”, என நிது அழைக்க, ஆதி மெல்லினாவை விலக்கி விட்டு ரசிகாவை பார்த்துக் கொண்டே குழந்தைகளிடம் வந்தான்.
“ரசி, இன்று கதை கூறாமலே தூங்கிட்டாப்பா” என்று லிது சொல்ல, அவள் தூங்கட்டும். வாங்க அப்பா சொல்றேன். நாம தூங்கலாமா? என்று தன் இரு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு மெல்லினாவையும் ஆதி அவனறைக்கு அழைத்து சென்றான். ரசிகா ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
குழந்தைகளும் மெல்லினாவும் தூங்கிய பின் ரசிகா இருக்கும் அறைக்கு வந்து படுக்கையில் அவளருகே அமர்ந்தான் ஆதிரேயன். ரசிகா பசங்களுடன் தூங்குவதை போல் ஆதியை கையை இழுத்து அவள் இடையில் போட்டுக் கொண்டாள். அவனும் அமைதியாக அவள் மீது கையை போட்டுக் கொண்டு அவளருகே படுத்து அவள் தூங்குவதையே பார்த்துக் கொண்டிருந்தான்.
பின் அவளை நெருங்க நினைத்த தன் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு அவள் கையை நகர்த்தி எழுந்து ரசிகா நெற்றியில் முத்தமிட்டு அவனறைக்கு சென்றான்.
அண்ணா, எங்க போயிட்டு வர்ற? மெல்லினா ஆதியிடம் கேட்க, அவன் அமைதியாக அவளை பார்த்தான்.
அண்ணா, நீ ரசிய கல்யாணம் பண்ணிக்கிறியா? அவ இல்லாம இனி நம்ம வீடு முழுமையடையாமல் போகும். நீ ரசியை கல்யாணம் பண்ணிக்கிட்டன்னா. அவள் எப்போதும் நம்முடனே இருப்பாள். லிது, நிதுவுக்கும் அம்மா கிடைத்தது போல் இருக்கும் என்றாள்.
“கொஞ்ச நாள் போகட்டும் பார்க்கலாம்” என்றான் ஆதி. மெல்லினா புன்னகையுடன், “நீ இங்கேயே தூங்கு. நான் ரசியுடன் படுத்துக்கிறேன்” என்றாள் மெல்லினா.
“அவளிடம் கல்யாணத்தை பற்றி பேசாத” என்று ஆதி மெல்லினாவிடம் சொல்லி அனுப்பினான். அவளும் ரசிகாவுடன் சென்று படுத்துக் கொண்டாள்.
ஆதி ரசிகாவை கட்டாயப்படுத்தக் கூடாது என்று தான் அமைதியாக இருந்தான். இப்பொழுது மெல்லினா பேசியதிலும் அவன் குடும்பமே அவன் காதலுக்கு ஒத்துக் கொள்ளவும். பசங்களிடம் அவளுக்குள்ள நெருக்கமும் அவர்கள் மனதையும் கஷ்டப்படுத்தி விடக் கூடாது என்றும் இனி எப்படியாவது ரசிகாவை கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்ள வைக்கணும் என நினைத்தான்.
அவன் என்ன தான் காதலித்தாலும் அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் தாலி அவனை ஏதும் செய்ய விடாமல் தடுக்கிறது. ஆதி மனதில் குழப்பமுடன் இருக்கிறான்.
எல்லாரும் தயாராகி அதிகாலை ஐந்தரை மணிக்கே அகரன் வீட்டிற்கு வந்தனர். அகரன் பட்டு வேஷ்டி சட்டையுடன் தயாராக இருந்தான். அவனுடன் திரிவேஷூம் இருந்தான்.
ஆதி குடும்பம் அகரனை பார்த்துக் கொண்டே உள்ளே வந்தனர்.
அகரன் ரசிகாவை பார்த்தான். அவள் அகரனிடம் வந்து, என்னடா எல்லாமே தயார் செய்துட்டியா? எனக் கேட்டுக் கொண்டே சமையலறைக்கு சென்றாள். அவனும் மற்றவர்களும் பின்னே சென்றனர்.
அகரனும் திரிவேஷூம் பால், தண்ணீர், பாத்திரம் என தயாராக வைத்திருந்தனர்.
ரசிகா புன்னகையுடன், “வீடு சூப்பரா இருக்குடா” என்று அகரனிடம் பேசிக் கொண்டே பாத்திரத்தில் பாலை ஊற்றி எடுத்து வைத்தாள் உரிமையுடன். அகரன் மகிழ்ச்சியுடன் அவளை பார்த்து பேசிக் கொண்டிருந்தான்.
பூஜைக்கு தயார் செய்துட்டியா? என்று ரசிகா கேட்க, ம்ம்..எல்லாமே தயாரா இருக்கு. பால் காய்ச்சவும் சாமி கும்பிடலாம் என்றான்.
ஓம குண்டம் வளர்த்திருக்கலாம்ல்ல ரசிகா கேட்க, இல்ல ருச்சி, இந்த அப்பார்ட்மெண்ட்ல்ல இதுக்கு அலோ பண்ண மாட்டாங்களாம். தனியா வீடு வாங்கினா பார்த்துக்கலாம் என்றான்.
ஓ.கே என்று ரசிகா எல்லாரையும் பார்க்க, லிது ஆதியுடன் இருந்தாள். பிரபாகரன் கையிலிருந்த நிது ரசிகாவிடம் ஓடி வந்து தூக்க சொன்னாள். ரசிகா பாப்பாவை தூக்க, ரசி என்ன பண்ற? நாம எப்ப வீட்டுக்கு போவோம்? என கேட்டாள்.
நிது, என்னோட வீட்ல நீங்க இருக்க மாட்டீங்களா? அகரன் கேட்டான்.
உன்னோட வீடா இது? உன்னோட பாட்டி, தாத்தா, அப்பா இல்லை என சுற்றி பார்த்துக் கொண்டே நிது கேட்க, “அம்மா, அப்பா இல்லைன்னா ஒருவர் வாழ்க்கையில் யாருமே இருக்க மாட்டாங்க நிது” என்றான் வருத்தமாக.
“அகரா, எதுக்கு இவ்வளவு வருத்தம்? நாங்க தான் இருக்கோம்ல்ல” என்று திரிவேஷ் சொல்ல, ரசிகாவிற்கும் அவள் குடும்பம் நினைவுக்கு வந்தது. அவளும் அமைதியாக இருந்தாள்.
பால் பொங்கி வரவே அதை எடுத்து சாமி அறையில் வைத்தாள். விளக்கு ஏற்றணும் என்று ரசிகா அகரனை பார்த்தாள்.
முதல்ல வீடு வாங்கி இருக்கான். பொண்ணுங்க யாராவது ஏற்றினால் தானே நன்றாக இருக்கும் என்று தமிழரசன் சொல்ல, எல்லாரும் ரசிகாவை பார்த்தனர்.
“ரசி, நீ ஏற்றக்கூடாது” என்று ஆதி ஒரு வித பயத்துடன் பார்த்தான்.
விளக்கு ஏற்றுவதற்கு எதுக்கு இப்படி எல்லாரும் மூஞ்சிய மூஞ்சிய பாக்குறீங்க? என்று மெல்லினா கேட்டுக் கொண்டே அவள் ஏற்றினாள்.
மெல்லி, என்ன பண்ற? பிரபாகரன் சத்தமிட்டார்.
நான் என்ன கொலைகுத்தமா பண்ணேன்? விளக்கு தானே ஏற்றினேன். இதில் என்ன உள்ளது? ரசி நான் சரியாக தானே ஏற்றி இருக்கேன் என்று மெல்லினா கேட்க, அகரன் என்ன சொல்லவென தெரியாமல் நின்றான்.
இல்ல மெல்லி, பொண்ணுங்க நம்ம வீட்லயும் கோவிலிலும் மட்டும் தான் விளக்கேற்றணும். இப்ப அகரனோட அண்ணி வந்திருந்தால் சரியா இருந்திருக்கும்.
ஏன், அவனோட அண்ணிக்கு தான் கை இருக்கோ? மெல்லினா கேட்க, அப்படி இல்லைம்மா உரிமையானவங்க, வீட்டு மருமகள்கள் தான் விளக்கேற்றுவாங்க. மத்த பொண்ணுங்க ஏற்றக் கூடாது என்றார் தமிழரசன்.
உரிமையானவங்களா? நாம எல்லாரும் அகரனுக்கு தெரியுமே? மெல்லினா கேட்க, தெரிஞ்சவங்க இல்லடா. உரிமையானவங்க. அவனுக்கு உரிமையானவங்க, அவனோட குடும்ப பொண்ணுங்க என்றாள் ரசிகா.
ஓ..அதான் எங்க வீட்ல என்னை பூஜை செய்ய வச்சியா? இப்ப நான் என்ன செய்றது? என்று மெல்லினா பாவமாக கேட்டாள். அதெல்லாம் ஒன்றுமில்லை. இருக்கட்டும் என்றான் அகரன்.
சுரேகாவும் அவள் குடும்பமும் வந்தனர். அவர்களை வரவேற்று சாமி கும்பிட்டு முடித்தனர். மெல்லினாவும் பசங்களும் பள்ளிச் சீருடையில் தான் வந்திருப்பர்.
ரசி, நாம வீட்டை பார்க்கலாமா? என்று சுற்றி பார்த்தனர். “ரசி இங்க பால்கனி தான் சூப்பரா இருக்கு” என்று மெல்லினா நின்று வேடிக்கை பார்த்தாள். அவளுக்கு ஓர் நறுமணம் வந்தது. அதை சுவாசித்துக் கொண்டு ஓர் அறை முன் வந்து நின்றாள்.
இவளை பார்த்த அகரனும், இவள் அங்கே என்ன செய்கிறாள்? என்று அவனும் வந்தான்.
இங்க என்ன பண்ற? அகரன் கேட்க, அகரன் கையை பிடித்த மெல்லினா, அகரா இந்த வாசனை உனக்கு தெரியுதா? என்று கேட்டாள்.
வாசனையா? ம்ம்..தெரியுது. இதுல என்ன இருக்கு? அகரன் கேட்க, அகரன் கையை விட்டு அறைக்குள் சென்று பார்த்தாள் மெல்லினா.
அகரா, அவன் இங்க இருந்தானா? நீ பார்த்தாயா? என்று அழுதாள் மெல்லினா.
ஏய், என்னாச்சு? எதுக்கு அழுற? அகரன் கேட்க, ரசிகா, திரிவேஷ், ஆதி உள்ளே வந்தனர்.
“சார், எதுக்கு அழுறான்னே தெரியல” என்று அகரன் ஆதியிடம் சொன்னான்.
மெல்லி, என்னாச்சும்மா? ஆதி கேட்க, “அண்ணா மித்திரன் இங்க தான் இருக்கான்” என்றாள்.
யாரு பாப்ஸ் அது? உன்னை அழ வைப்பவன்? திரிவேஷ் கேட்க, த்ரீ, நீ சும்மா இரு என்ற ரசிகா, எப்படி அவன் இங்க இருக்கான்னு சொல்ற? என்று கேட்டாள்.
இந்த வாசனை மித்திரன் அவனே கைப்பட தயாரித்த பர்ஃப்யூம் என்று அவ்வறை சன்னல் பக்கம் சென்றாள். யாரோ ஒருவன் சற்று தள்ளி கருப்பு நிற ஹூட்டியுடன் மரத்தின் பின் நிற்பதை பார்த்து, மெல்லினா வெளியே ஓடினாள்.
மெல்லி நில்லு, என்று எல்லாரும் அவள் பின் ஓடி வந்தனர். மெல்லினா அம்மரத்தை பார்த்தாள். அதில் விசாகாவின் நம்பர் எழுதி மித்திரனின் கையெழுத்து போட்டிருந்தான்.
மித்திரா, எங்க போன? வா..என்று மெல்லினா அழுது கொண்டே, ஆதியை பார்த்து அண்ணா இது மித்திரனின் சைன் தான். இது விசாகா நம்பர். எதுக்கு எழுதினான்னு தெரியல. அவன் என்னிடம் பேசாமல் போயிட்டான்.
அண்ணா, அவன் இங்கே எங்கோ தான் இருந்திருக்கான். அகரா..என்று அவனிடம் வந்து மித்திரன் உன்னோட அறையில தான இருந்தான். சொல்லு என்று அகரன் சட்டையை உலுக்கிக் கொண்டே மயங்கி அவன் மீதே சாய்ந்தாள்.
“மெல்லிம்மா, இங்க பாரு” என்று பிரபாகரனும், தமிழரசனும் பதறினர்.
அங்கிருந்த செக்கரட்டரியிடம் தண்ணீரை வாங்கி வந்து மெல்லினா மீது அகரன் தெளித்தான்.
எழுந்த மெல்லினா ஆதியையும் மற்றவர்களையும் பார்த்தாள். பின் அகரனை பார்த்து, அகரா அவன் உன்னோட வீட்ல தான் இருந்திருக்கான்.
அண்ணா, மித்திரன் என்னை கண்காணிக்கிற மாதிரி இருக்கு. ஆனால் விசாகா நம்பர் எதுக்கு எழுதினான்? மெல்லினா தலையை பிடித்துக் கொண்டு கேட்டாள்.
“நீ எதையும் யோசிக்காத” என்று ஆதி அகரனிடம் கண்ணை காட்டினான். அவன் அம்மரத்தில் உள்ளதை புகைப்படமாக எடுத்துக் கொண்டு, கீழிருந்த குச்சியை எடுத்து மரத்தில் இருந்ததை மறைப்பது போல் அழித்தான். அகரன் வீட்டிற்கு ஆதி மெல்லினாவை தூக்கிக் கொண்டு வந்தான்.
“மெல்லி, நீ பள்ளிக்கு போக வேண்டாம். நீ இங்கேயே ஓய்வெடு” என்று மெல்லினாவை அறையில் விட்டு ரசிகாவை பார்த்தான். அவள் குழந்தைகளுடன் மெல்லினா அறைக்கு சென்று அவளை தூங்க வைத்தாள்.
குழந்தைகள் வெளியே ஓடி வந்தனர். அகரன் யோசனையுடன் அமர்ந்திருந்தான். அவனிடம் வந்த நிது, மெல்லி அத்தைக்கு என்னாச்சு? காய்ச்சலா? எனக் கேட்டாள்.
சார், நீங்க கேட்டது என்று அப்பார்ட்மென்ட்டின் செக்கரட்டரி வந்து பென்டிரை ஒன்றை கொடுத்து சென்றான். அந்நேரம் ஆதிக்கும் போன் வந்தது. விசாகாவின் பாட்டியும் தாத்தாவும் மாரடைப்பில் இறந்ததாக நியூஸ் வந்தது. ஆனால் அவர்கள் குடும்பம் யாரையும் காணவில்லை என்றும் செய்தியையும் காவலர் ஒருவர் ஆதியிடம் கூறினார்.
ஆதி அதிர்ந்து கேட்டு விட்டு போனை வைத்தான். அகரன் அவனது லேப்பில் பென்டிரைவை சொருக, “மித்திரன் வீட்டிலிருந்து வந்த நாள் முதல் அகரனின் வீட்டில் தான் இருந்திருக்கான் என்றும் நேற்று அகரனும் திரிவேஷூம் வந்த சமயமும் மறைந்து தான் இருந்திருக்கான்” என்று தெரிய வந்தது. நேற்று நடு இரவில் அவன் தங்கி இருந்த அறையில் செல்பின் ஓரிடத்தில் எதையோ அவன் மறைத்து வைத்திருப்பதை பார்த்து, ஆதி, திரிவேஷ், அகரன், தமிழரசன் எல்லாரும் அவ்வறைக்கு ஓடினர்.
அவனது சில பொருட்களை அங்கங்கு மறைத்து வைத்திருந்தான். அவன் இரவு மறைத்து வைத்திருந்த கவரை பிரித்தான் அகரன். அதிலும் பென்டிரைவை பார்த்து உடனே போட்டு பார்த்தான். அதில் போதை மருந்து தயாரிக்கும் இடமும், யார் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்று முழுவிவரமும் இருந்தது.
வாங்க ரிப்போர்ட்டர்ஸ்ஸை பார்க்கலாம் திரிவேஷ் சொல்ல, நோ..என்றனர் ஆதியும் அகரனும்.
சார் என்று திரிவேஷ் அவர்களை பார்க்க, இப்ப மித்திரனுக்கு தான் ஆபத்து என்று சொன்ன அகரன் ஆதியிடம், சார் மரத்தில் எழுதிய அந்த பொண்ணு நம்பருக்கு கால் பண்ணுங்க. ஏதோ இப்பவே நடக்க போகுது. அந்த பொண்ணு குடும்பமே அந்த போதை மருந்து கும்பலிடம் மாட்டி இருக்காங்கன்னு நினைக்கிறேன். நீங்க பார்த்து பேசுங்க. நான் மெல்லினாவிடம் ஒன்று கேட்கணும் என்று எழுந்து அகரன் அவளறைக்கு ஓடினான். பிரபாகரனும் தமிழரசனும் அவன் பின் சென்றனர்.
“ரசி, அவளை எழுப்பு” என்று அகரன் சொல்ல, “அவள் ஓய்வெடுக்கட்டும்டா” என்று ரசிகா சொன்னாள். “ஓய்வு முக்கியம் பாரு” என்று அகரன் அவனே அவளை எழுப்பினான். அவள் பயந்து எழுந்தாள்.
மித்திரனுக்கு நீங்க செல்லும் கிளப்பில் ப்ரெண்ட்ஸ் இருக்காங்களா? என அகரன் கேட்டான்.
எதுக்கு கேக்குற? மெல்லினா கேட்க, “கேட்பதற்கு மட்டும் பதில் சொல்லு” என்றான் அகரன்.
ஆமா, கிளப்ல்ல அவனுக்கும் ஆகாஷூக்கும் ப்ரெண்ட்ஸ் இருக்காங்க. அவனுக யாருன்னு உனக்கு தெரியுமா? அகரன் கேட்க, ம்ம்..தெரியும். ஆனால் ஒருவனை மட்டும் தானே தெரியும்.
சொல்லு அகரன் கேட்க, எதுக்கு திடீர்ன்னு இப்படி கேக்குற?
சொல்லு இல்ல ஆகாஷை போல இவனையும் பார்க்க முடியாமல் போயிடும் என்றான் அகரன்.
என்னடா சொல்ற? என்று மெல்லினா அழ, இவ வேற, வா..என்று அகரன் மெல்லிகா கையை பிடித்து இழுத்து “த்ரீ, உன்னோட பைக்கை எடு” என்றான்.
எங்கடா அவள கூட்டிட்டு போறீங்க? ரசிகா சத்தமிட, ஆதியிடம் முன்னே சென்ற அகரன் சார், நாங்க மித்திரனை தேடி போறோம். உங்க தங்கச்சிக்கு தான் கிளப் பசங்கள தெரியும். அவள கூட்டிட்டு போறோம். நீங்க அந்த பொண்ணோட குடும்பத்தை பாருங்க என்றான்.
அகரன் கையை தட்டி விட்டு, அண்ணா இவன் என்ன சொல்றான்? மெல்லினா சத்தமிட, இதுக்கெல்லாம் நேரமில்லம்மா. சொன்னா கேளு. உன்னால தான் மித்திரனை காப்பாற்ற முடியும் என்று அகரன் சொன்னான்.
டேய் மெல்லினா பத்திரம் டா. போன முறை மாதிரி ஏதாவது ஆனால் உன்னை சாவடிச்சிருவேன் ஆதி சொல்ல, அந்த பொண்ணு பேசினாலா சார்? அகரன் கேட்டான். ஆதி அவனை முறைக்க, சார் யாருக்கும் ஏதும் ஆகாது. “ரசியையும் சுரேகா குடும்பத்தையும் வெளிய வர வேண்டாம்ன்னு சொல்லுங்க” என்று அகரன் ஆதியை பார்த்தான்.
விசாகா தான் பேசினா? முதல்ல நல்லா பேசுற மாதிரி தான் இருந்தது. ஆனால் அவளை யாரோ மிரட்டி பேச வைப்பது போல் இருந்தது என்றான் ஆதி.