வினயுடனான சந்திப்பு மிருதுளாவை சற்று கலக்கமடைய செய்திருந்தது. அவள் கடந்து போய் விட நினைக்கும் விசயங்களே திரும்பத் திரும்ப பிடித்திழுப்பது போல் தோன்றியது.
அலெக்ஸை எந்த இடத்தில் வைப்பது என்றும் குழப்பம். அந்த நேரத்தில் ஏதோ அவனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டோமோ என்ற குற்ற உணர்ச்சி வேறு லேசாக எட்டிப் பார்த்தது.
இவை அனைத்திற்கும் நடுவில் மகேந்திரன் பேச வேண்டும் என்று சொன்னது வேறு மனதில் ஓட புரண்டு புரண்டு படுத்தவள், வெகு நேரம் கழித்தே உறங்கினாள்.
காலையில் அவள் எழுந்ததே, அலைபேசியின் சத்தத்தில் தான்.
“அவேக்?” என்று மகேந்திரன் தான் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.
மீண்டும் ஒருமுறை கண்களை கசக்கி அதைப் பார்த்தவள், தூக்கக் கலக்கத்திலேயே, மகேந்திரனின் எண்ணிற்கு அழைத்தாள்.
முதல் ரிங்கிலேயே அழைப்பு ஏற்கப்பட,
“சொல்லுண்ணா” என்றாள்.
தங்கையின் குரலில் தூக்கம் இன்னும் மிச்சம் இருப்பதை உணர்ந்தவன்,
“தூங்கிட்டு தான் இருந்தியா மிரு. சாரிடா, எழுப்பி விட்டுட்டேனா” என்று கனிவாகக் கேட்டான்.
“இல்லைண்ணா, எழுந்துக்கிற நேரம் தான். ஆஃபிஸ் கிளம்பணுமே. என்ன விஷயம்ணா? எல்லாரும் நல்லா இருக்காங்க தானே?”
“ம்ம்ம், எல்லாரும் நல்லா இருக்காங்க. நீ எப்படி இருக்க?”
“ஓகே தாண்ணா”
“என்கிட்ட எதுவும் சொல்லணுமா மிரு?”
மகேந்திரனின் கேள்வி அவளுக்குப் புரியவில்லை, பேச வேண்டும் என்று சொன்னதே அவன் தானே.
“நான் என்ன சொல்றதுண்ணா. நீங்க தானே பேசணும்னு சொன்னீங்க. எதும் பிரச்சனையாண்ணா?” என குழப்பமாக கேட்டாள்.
தங்கையிடம் என்ன கேட்பது என்று தயங்கிய மகேந்திரன்,
“அலெக்ஸ் யாரு மிரு? உன் கூட வொர்க் பண்றவங்களா?” என்று மெதுவாகக் கேட்டான்.
அதில் தூக்கம் தூர போக, எழுந்து அமர்ந்தாள்.
“வினய் அத்தான் கால் பண்ணாங்களா?” என எரிச்சலாகக் கேட்டாள்.
“ம்ம்ம், நேத்து நைட் கால் பண்ணி ஏதோ உளறினான். எனக்கு ஒன்னும் புரியல. அது தான் உன் கிட்ட கேட்கலாம்னு கால் பண்ண சொன்னேன்.”
“ம்ப்ச், என்னண்ணா நீ? அவங்க சொல்றது எல்லாம் நீ காது கொடுத்து கேட்குறீயா?”
“அவன் சொல்றது கேட்குறேன்னு இல்லைடா. இத்தனை வருசத்துல அவன் இந்த மாதிரி எதுவும் சொன்னது இல்லை. நடந்த பிரச்சனைக்கப்புறம் எனக்கும் அவனுக்கும் பேச்சே இல்லை.
நான் அத்தை, விஜய் கிட்ட கூட பேசுறது கிடையாது. அப்பா கிட்ட தான் அப்பப்ப அத்தை ஏதாச்சும் சொல்லிட்டு இருப்பாங்க.
நேத்து கூட வினய் எனக்கு கால் பண்ணா எடுக்க மாட்டேன்னு, விஜய்க்கு கால் பண்ணி அவன் கான்பரன்ஸ் கால் போட்டு தான் பேசினான். அதுவும் ‘காலை கட் பண்ணிடாதே. மிருவோட சேஃப்டி பத்தி பேசனும்னு’ சொல்லி என்னைய பயமுறுத்திட்டான்.
என்னாச்சுடா? இஸ் எவிரிதிங் ஓகே? வினய் மேல நான் கொலை வெறில இருக்கேன். ஆனா அதை விட உன்னோட சேஃப்டி முக்கியம்ல. அவன் சொல்றான்னுட்டு அப்படியே விட முடியாதே.
உன்னோட முடிவு தான் மிரு. உனக்கு அலெக்ஸ பிடிச்சிருந்தா நான் என்ன பண்ணனும்னு சொல்லு. அப்பா, அம்மா கிட்ட பேசுறேன்” என ஜெட் வேகத்தில் செல்ல, மிருதுளாவுக்கு தலை சுற்றாத குறை தான்.
பின் அவனிடம் ஸ்காட்லாந்தில் நடந்த விஷயங்களைக் கூறி, அவன் உதவியதைப் பகிர்ந்தவள்,
“நான் இது வரை அவங்களை ரெண்டு மூனு வாட்டி தான் பார்த்திருக்கேன். என்னோட டிரெயின் லைன்ல தான் வருவாங்க போல. நேத்து கூட அப்படி தான்.
அத்தான் என்கிட்ட பிரச்சனை பண்றாங்கன்னு நினைச்சு தான் ஹெல்ப் பண்ண வந்தாங்க.” என்பது வரை கூறியவள், அதற்கு மேல் தமையனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் நிறுத்தினாள்.
“ஆனா, வினய்….” என்ற மகேந்திரனுக்கும் வினய் கூறியதை நேரடியாகக் கேட்க முடியவில்லை.
வினய் என்ன உளறி வைத்தானோ என்று பதறியவள்,
“அண்ணா” என்று அழைத்து தயங்கி நின்றாள்.
“என்ன மிரு? என் கிட்ட சொல்றதுக்கு என்ன தயக்கம்?”
“இல்லைண்ணா, அ…து அலெக்ஸுக்கு என் மேல ஒரு இண்டிரெஸ்ட் இருந்த மாதிரி இருந்துச்சு. நான் அதை அத்தானை வெறுப்பேத்த யூஸ் பண்ணிகிட்டேன்.அதுனால தான் அத்தான் உன் கிட்ட ஏதாச்சும் சொல்லிருப்பாங்க”
‘அதில் தனக்கு உடன்பாடில்லை’ என்பது போன்ற கண்டிப்பான குரலில்,
“மிரு” என்று அழுத்தமாக அழைத்தான்.
“சாரிண்ணா” என்றவள் குரல் உள்ளே போய் விட்டது.
“வினய் சொன்னத பத்தி எனக்கு கவலை இல்லை. உனக்கு அலெக்ஸ நிஜமாவே பிடிச்சிருந்தாலும், பிரச்சனை இல்லை. ஆனா வினயை வெறுப்பேத்துறதுக்கு நீ ப்ளே பண்ணன்னு சொல்றது சரியா படல.
ஒன்னு நீ சொல்ற மாதிரி அலெக்ஸுக்கு இண்டிரெஸ்ட் இருந்து நீ இந்த மாதிரி பண்ணினது ஃபால்ஸ் ஹோப் கொடுக்கிற மாதிரி ஆயிடலாம். இல்லாட்டி யாரு என்னன்னு தெரியாத ஒருத்தன், இதையே ஒரு சாக்கா வைச்சு உன் கிட்ட அட்வாண்டேஜ் எடுக்க நீயே ஒரு சான்ஸ் அமைச்சு கொடுத்த மாதிரி ஆகிடாதா?
இதையெல்லாம் யோசிக்காம சட்டுன்னு ரியாக்ட் பண்ணக் கூடாதில்ல. அவ்ளோ தூரம் தள்ளி தனியா இருக்க. கூட உதவிக்கு யாரும் இல்ல. எதாச்சும் ஒன்னுன்னா என்ன பண்ண முடியும்.
தேவை இல்லாம நாமளே ஏன் மிரு பிரச்சனைய தேடிக்கணும்? வினய் உன் லைஃப்ல முடிஞ்சு போன சேப்டர். அதுக்காக எதிர்காலத்தை கேள்விக் குறி ஆக்கிடாதடா.”
இது வரை இந்தக் கோணத்தில் எல்லாம் யோசிக்காதவள், மகேந்திரன் சொன்னதைக் கேட்டவுடன், அவன் கூறுவதும் சரியென்றே பட்டது. ஆனால் அலெக்ஸை அவன் தவறாக நினைத்து விடுவானோ என்றும் தோன்ற,
“நீங்க சொல்றதெல்லாம் கரெக்ட் தான் அண்ணா. நான் அந்த டைம்ல அவ்ளோ யோசிக்கலை. திடீர்னு அத்தானை பார்த்ததும் டென்ஷனாகிட்டேன். அலெக்ஸ் எனக்கு ஹெல்ப் வந்தப்புறம் பேச்சு வேற மாதிரி போய்டுச்சு.
ஆனா அலெக்ஸ் நீ நினைக்கிற மாதிரி மோசமான ஆள் கிடையாது” என்று அவசரமாகக் கூற, அதிலேயே தங்கையின் மனப் போக்கை உணர்ந்து கொண்டான் மகேந்திரன்.
“நான் அப்படியெல்லாம் நினைக்கவே இல்லையே மிரு” என்ற மகேந்திரனுக்கு இப்பொழுது லேசாக புன்னகை எட்டிப் பார்த்தது.
இதற்கு மேல் அண்ணனிடம் தன் பக்கத்து விருப்பத்தையும் வெளிப்படுத்தாமல் இருப்பது சரியில்லை என்று தோன்ற,
“அ…அண்ணா, நான் சொன்னது முழுசும் பொய் கி..கிடையாதுண்ணா. அலெக்ஸ் என்னை டேட்கு கூப்பிட்டது உண்மை தான். எனக்கும் இன்னும் சரியா தெரியலைண்ணா. எனக்குமே கொஞ்சம் இண்டிரெஸ்ட் இருக்கு தான்.
ஆனா ரெண்டு பேருக்குமே ஒரு தயக்கம் இருக்கு. ரெண்டு பேருக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கு. ஒத்து வருமோ, வராதோ.
டூ ஏர்லி டு சே எனிதிங். இப்போதைக்கு பேசிப் பார்க்கலாம், ஒருத்தர ஒருத்தர் தெரிஞ்சுக்கலாம் அப்டின்னு தான் பிளான் பண்ணிருக்கோம்” என்று ஒருவாறு கூறி விட்டாள்.
“ம்ம்ம்ம், நல்ல விசயம் தானே மிரு. இதுல என்ன டென்ஷன் உனக்கு?” என தமையன் இலகுவாக கேட்க, அப்பொழுது தான் மூச்சே வந்தது மிருதுளாவுக்கு.
அவள் பதிலளிக்காமல் போக,
“மிரு திங்க் ஆஃப் இட் அஸ் அ ப்ராக்ரஸ். இவ்ளோ நாள் நீ ஃப்யூச்சர் பத்தி யோசிக்க எதுவுமே இல்லைன்னு தானே சொன்ன. இப்ப பார்த்தா ஒரு குட்டி பேபி ஸ்டெப்.
பி ஓபன் மிரும்மா. ஒரு அண்ணனா எனக்கு உன்னோட சேஃப்டி முக்கியம் தான். ஆனா உன்னோட தேர்வு சரியா தான் இருக்கும்னு நம்பிக்கையும் இருக்கு. கவனமா இரு, அது மட்டும் தான் சொல்லுவேன்.
நான் வேணும்னா அலெக்ஸ் கிட்ட பேசிப் பார்க்கட்டுமா. உனக்கு அது ரிஅஸ்யூரிங்கா இருக்கும்னா நான் பேசுறேன்.” என நேர்மறையாக பேசினான்.
“இல்லை வேண்டாம்ணா. இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும். இப்ப போய் பேசினோம்னா ரொம்ப ஆக்வேர்ட்டா இருக்கும்.
அ…ண்ணா, அம்மா ஒத்துப்பாங்களா?”
“கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க”
“என்னண்ணா இப்படி சொல்ற?”
“மிரு நடை பழகுறதுக்கு முன்னாடியே ஓட முயற்சி பண்ணக் கூடாது. அம்மா, அப்பா ரெண்டு பேரும் கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க.
வினய் இளைய தலைமுறை தான். அந்த நாட்டில தான் இத்தனை வருஷமா இருக்கான். அவனுக்கே எவ்ளோ குறுகிய மனப்பான்மை பார்த்தியா.
ஏன் நீயுமே வேறுபாடுகள், தயக்கம்னு தான் சொல்லிட்டு இருக்க. அப்படி இருக்கப்போ அம்மா எல்லாத்தையும் ஒத்துப்பாங்கன்னு எப்படி எதிர்பார்க்க முடியும் சொல்லு?”
இதற்கு என்ன பதில் சொல்ல முடியும். அவன் சொல்வது நிதர்சனம் தானே.
“ஹேவிங் செட் தேட், இது உன்னோட வாழ்க்கை மிரு. அதை உன் விருப்பப்படி அமைச்சுக்கோ. அண்ணனா உன் கூட எப்பவும் நான் இருப்பேன்.
நீ அலெக்ஸ் கிட்ட பேசிப் பாரு. மித்ததெல்லாம் வர்றப்போ பார்க்கலாம். ஒன் திங் அட் எ டைம்டா”
“ம்ம்ம், சரிண்ணா, தேங்க் யூ சோ மச். அப்புறம், உன் கிட்ட சொல்லக் கூடாதுன்னு எல்லாம் இல்லை. சொல்ற அளவுக்கு இல்லை, எனக்கே ஒரே குழப்பம்ணா.
ஸ்காட்லேர்ந்து வந்தப்புறம் அலெக்ஸ் என்னைய கண்டாக்ட் பண்ணல, நான் நேத்து தான் அவங்கள திரும்பி பார்த்தேண்ணா. அப்போ தான் இந்தப் பேச்செல்லாம் வந்துச்சு. இது சீரியஸ் ரிலேஷன்சிப்னு முடிவு பண்ணிர்ந்தேன்னா கண்டிப்பா உன் கிட்ட சொல்லிருப்பேன்” தன்னை விளக்கி விடும் முயற்சியில் மிருதுளா.
“ஓய், எனக்கு எதுக்குடா எக்ஸ்பளனேஷன்? ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட். நோ வொரீஸ் சரியா. உனக்கு ஆஃபிஸ் கிளம்ப நேரம் ஆகலையா? நீ போய் வேலைய பாரு. நான் வீக் எண்ட் கால் பண்றேன்.” என்றவன் அழைப்பைத் துண்டித்தான்.
தாங்கள் அமைத்துக் கொடுத்த வாழ்வு தான் நினைத்தபடி நடக்கவில்லை, தானாய் அமைதாவது தங்கைக்கு மகிழ்ச்சியை தந்தால் போதும் என்ற வேண்டுதல் மட்டுமே தமையனுக்கு.
அண்ணனிடம் பேசிய பின் மிருதுளாவுக்கு அப்படி ஒரு மன நிம்மதி. வினய் வந்து கிளப்பி விட்டதுமே, ‘வொய் நாட்?’ என்ற நிலைக்குத் தள்ளப்பட்டவள், இப்போது தமையன் தந்த ஒப்புதலில் இன்னுமே தெளிவிற்கு வந்து விட்டாள்.
என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். பிடித்தமா, ஈர்ப்பா என இந்த உறவின் எல்லைகளைப் பார்த்து விடலாம் என்ற உறுதி பிறந்து விட்டது. அதே உற்சாகத்துடன் வேலைக்குக் கிளம்பினாள்.
மதிய உணவு இடைவேளையின் போது, அவளது அலுவலகத்தின் அருகிலே ஒரு இடத்தில் பார்க்கலாம் என்பது போல் அலெக்ஸ் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான். மாலையில் ஜெனியிடம் கூறி விட்டே கிளம்பி இருந்தாள்.
அங்கே ராபர்ட் தலையும் புரியாமல், காலும் புரியாமல் அலெக்ஸுடன் அமர்ந்து இருந்தான். யாரோ முக்கியமான நபரை அறிமுகப்படுத்துவதாக கூறி அழைத்து வந்தவன் வேறு எந்தத் தகவலும் பகிர வில்லை.
மிருதுளா வந்த போது அப்படி ஒரு விருந்தாளியை ராபர்ட் சத்தியமாக எதிர்பார்த்திருக்கவில்லை.
‘இப்படி ஒரு சம்பவம் எப்படிடா நடந்துச்சு? என் கூட தானே சிங்கிளா சுத்திட்டு இருந்தான் இவன்’ என தலையை பிய்த்துக் கொள்ளாத குறை ராபர்ட்டுக்கு. அலெக்ஸ் மிருதுளாவை அறிமுகம் செய்த போது, நண்பனை முறைத்து விட்டு, மிருதுளாவைப் பார்த்து புன்னகைத்து கை குலுக்கினான்.
“டிரிங்க்ஸ்?” என அலெக்ஸ் கேட்க,
“ஐ டோண்ட் டிரிங்க். ஐ’ல் டேக் ஆரஞ்ச் ஜூஸ்” என மிருதுளா பதிலளிக்க,
‘முடிஞ்சது கதை’ என்பது போல் அலெக்ஸைப் பார்த்து நக்கலாக உதடசைத்தான் ராபர்ட்.
‘நங்’கென்று அவன் காலில் மிதித்த அலெக்ஸ், மிருதுளாவிடம்,
“ஸ்யூர். ராபி, யுஸ்யுவல் ஃபார் யூ?” என அவனிடமும் கேட்டு, எல்லாவற்றையும் ஆர்டர் செய்தான்.
“அப்புறம், உங்களை பத்தி சொல்லுங்க மிருதுளா” என ராபர்ட் கேட்க, சற்று நேரம் பொதுவான பேச்சுக்கள் ஓடியது.
அவர்களுக்கு தனிமை கொடுக்க நினைத்த ராபர்ட், சிறிது நேரத்திலேயே கிளம்பியும் விட்டான். போகிற போக்கில், அலெக்ஸின் காதில், ‘உன்னோட பெர்சனல் ப்ராஜக்ட் பத்தி எல்லாம் சொல்லிட்டியா ப்ரோ’ என்று வேறு கிளப்பி விட்டு சென்று விட்டான்.
அவன் கிளம்பியதும், அதுவரை மிருதுளாவின் எதிரில் அமர்ந்து இருந்தவன் அவள் பக்கம் வந்து அமர்ந்தான்.
மிருதுளா சும்மா இருக்காமல்,
“லெக்ஸி, ஐ தாட் டேட் இஸ் ஜஸ்ட் ஃபார் டூ பிப்புள். இஸ் இட் நாட் இன் இங்லண்ட்?” என்று அலெக்ஸை சீண்டினாள்.
“என்ன பண்றது டார்லிங், எல்லாம் ஒரு சேஃப்டிக்கு தான். நீ பாட்டுக்கு நேத்து டிரெயின்ல பண்ண மாதிரி என் கைய பிடிச்சு இழுத்துட்டேன்னா. அதுக்கு பயந்து தான், ராபிய துணைக்கு வர சொன்னேன்.
அந்த ராஸ்கல் என்னன்னா பாதிலேயே விட்டுட்டு ஓடிட்டான். புவர் மீ” என சோகம் போல் சொல்லி அவளை வார, அவனின் பாசாங்கான பாவனையில் மிருதுளா சிரித்து விட்டாள்.
“ஹ்ம்ம், பரவாயில்ல. ரொம்ப தெளிவா தான் இருக்கீங்க” என்று நொடித்தவள், தன் தொனியை மாற்றி,
“எனி வே தேங்க்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப் யெஸ்டர்டே” என்றாள்.
“பிளஷர்” என்றவன்,
“அப்புறம், நம்ம டேட்டிங் ரூல்ஸ் என்னன்னு யோசிச்சிட்டியா?” என ஆவலாக வினவினான்.
அவள் இல்லை என்பது போல் தலை அசைக்க,
“சரி, வொய் லெக்ஸி? ஐ வாஸ் க்யூரியஸ்” என கேட்டான்.
“அது நான் ஒரு வெப் சீரிஸ் பார்த்தேன், அதுல வர்ற லீட் கேரக்டர் பேரு அலெக்ஸ், அவன் ப்ரெண்ட்ஸ் எல்லாம் லெக்ஸின்னு தான் கூப்பிடுவாங்க. அது அப்படியே வந்துடுச்சு போல” என ஒரு கதை சொல்ல, கேட்ட அலெக்ஸுக்கு சப்பென்று ஆகி விட்டது.
‘சுத்தம்’ என முனங்கியவன்,
“ரைட். நான் கூட வேற ஏதோன்னு ஒரு நிமிஷம் சந்தோசப்பட்டுட்டேன்” என அவன் சலித்துக் கொள்ள, மிருதுளாவுக்கு முகம் கொள்ளா சிரிப்பு.
அதை சில நொடிகள் ரசித்துப் பார்த்த அலெக்ஸுக்கு, இது இவள் முகத்தில் நிலைக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றே தோன்றியது.
“வெல், நீ எதுவும் டிசைட் பண்ணாததுனால, ஹௌ அபவுட் நோ ரூல்ஸ் டார்லிங்” என கண் சிமிட்டினான்.
“வொய்னா என்ன அர்த்தம். நீங்க ராபர்ட்டுக்கு என்னைய இன்ட்ரோ குடுத்தீங்கள்ள அது மாதிரி தான்” என சடைத்துக் கொண்டாள்.
“ஓ ரைட். ஜெனி, பீட்டர் மாதிரி ராபிக்கு இன்ட்ரோ. பேமிலிக்கு இஸ் இட் நாட் டூ ஏர்லி?”
“ம்ம்ம், அது தான் நானும் சொன்னேன். பட், அட் சம் பாயிண்ட் இது திரும்ப வரும்”
“ஹ்ம்ம்ம், புரியுது. வர்றப்போ டீல் பண்ணிக்கலாம். பேக் டு அவர் ரூல்ஸ். மே ஐ கிஸ் யூ?”
“நோ”
“மே ஐ ஹக் யூ?”
“நோ”
“வாட்ட்ட்?”
“நோ கெட்டிங் பிசிகல், ப்ளீஸ்”
“ஹேய், ஹக் எல்லாம் பிசிகல் செக்ஸன்ல வராது டார்லிங். இங்க இது சகஜம்”
“அண்ட் நோ டார்லிங் ப்ளீஸ். கால் மீ மிரு. வேற எதுவும் வேண்டாம்.” என மிருதுளா ஸ்டிரிக்ட் ஆபிஸராக சொல்ல அலெக்ஸ் திரு திருவென்று விழித்தான்.
‘காலம் போன கடைசியில உனக்கு காதல் வந்துருச்சு போலன்னு கூட நீ சந்தோஷப்பட முடியாது அலெக்ஸ். மேடம் பயங்கர ரூல்ஸ் போடறாங்க. உன் பாடு திண்டாட்டம் தான் போல’ என நொந்து கொள்ள மட்டுமே அவனால் முடிந்தது.
ஆனால், அவன் ஒன்று நினைக்க, அதை அவள் தவறாக புரிந்து கொள்வதற்கு பதில் இந்த வெளிப்படையான பேச்சு மேல் என்றே நினைத்தான்.
“சரி, கையவாது பிடிச்சுக்கலாமா” என பாவமாக கேட்க,
மிருதுளா சிரிப்பை அடக்கிக் கொண்டு,
“மே பி” என்றாள்.
அதுவே போதும் என்று நினைத்தவன், மென்மையாக அவள் கரங்களைப் பற்றி வருடினான்.