அவர்களின் மோன நிலையை கலைப்பது போல் மிருதுளாவின் அலைபேசி ஒலி எழுப்பியது. அவன் கையணைப்பில் இருந்தவாறே அலைபேசியை பார்க்க, அழைத்தது கலைவாணி. காணொளி அழைப்பு விடுத்திருந்தார்.
பதறி அடித்து எழுந்தவள்,
“லெக்ஸி அம்மா” என்க,
“ஹேய் ரிலாக்ஸ். அம்மா தானே. பொறுமையா பேசு. யூ ஆர் அ அடல்ட். நீ டென்ஷன் ஆகுற அளவுக்கு எந்த தப்பும் பண்ணல. சோ தைரியமா பேசு.
ஐ’ல் மேக் சம் டீ ஃபார் அஸ்” என்று அவள் தோளை தட்டியவன், அவளுக்கு தனிமை கொடுத்து நகர்ந்து விட்டான்.
பதட்டத்துடனே அழைப்பை ஏற்றவள், “சொல்லுங்கமா” என,
அவள் இருந்த இடத்தைப் பார்த்ததும், கலைவாணியின் நெற்றி சுருங்கியது.
“எங்க இருக்க மிரு?” என்பது தான் முதல் கேள்வியே.
அதற்குள் தன்னை சுதாரித்தவள்,
“ஈஸ்ட்ஹேம் கோவிலுக்கு வந்தேன்மா. பக்கத்தில தெரிஞ்சவங்க வீட்டுக்கு வந்தேன். பிறந்த நாளைக்கு ட்ரீட் கேட்டாங்க. சேர்ந்து *** பவன் போனோம்.
என்ன விஷயம்மா? காலைல பேசினோமே” என பாதி உண்மையை உரைத்து. கூட கேள்வியும் கேட்டாள்.
புது புடவை கட்டி, மகள் முகத்தில் கோவிலுக்கு சென்று வந்த தடயங்கள் தெரிய, அதிலேயே மகிழ்ந்து போனவராக,
அது தான் என்ன சாப்பிட்ட, என்ன பண்ற கேக்குறதுக்கு சும்மா தான் கூப்பிட்டேன்” என்றவர்,
“புடவை உனக்கு ரொம்ப அழகா இருக்கு மிரு. நான் எப்ப எடுத்துக் கொடுத்தேன். ஏதோ, இப்பவாவது இதை கட்டனும்னு ஆசை வந்துச்சே. அதுவே பெரிசு தான்” என அவளைப் பாராட்டியவர், சிறிது நேரம் பொதுவாக பேசிக் கொண்டிருந்து விட்டு, வீட்டில் மற்றவர்களிடம் பேசக் கொடுத்தார்.
தந்தை, அண்ணி, அண்ணன் குழந்தைகள் என எல்லாரிடமும் பேசி, அவர்கள் வாழ்த்தைப் பெற்றுக் கொண்டவள் மனம் நெகிழ்ந்திருந்தது. இரண்டு – மூன்று வருடங்களுக்குப் பின் அவளது இயல்பு மீண்டிருப்பது கண்டு வீட்டினருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.
மதிவாணனுக்கோ கண்கள் கலங்கி விட்டது. பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து, அவள் முகம் சிரிப்பதையே மறந்து விட்டது போல் இருக்க, அதை நினைத்து வருந்தாத நாள் இல்லை எனலாம். இப்போது அவள் மகிழ்வாக இருப்பதை கண்டதும் தந்தை மனம் நிறைவாக உணர்ந்தது. அதன் காரணம் அறியும் போது அவர் எதிர்வினை எவ்வாறு இருக்குமோ?
எல்லாரிடமும் பேசி முடித்த பின், கடைசியில் அலைபேசி மகேந்திரனிடம் வர, ஏதோ வேலை இருப்பது போல் அறைக்கு வந்தவன் கதவை அடைத்து விட்டான்.
“சொல்லு மிரு. அம்மாட்ட பேசுறப்போ ஏதோ டென்ஷன்ல இருந்த மாதிரி இருந்தது? எதுவும் பிரச்சனையா?” என இவ்வளவு நேரம் அவள் பேசுவதைப் பார்த்தவன், சரியாகக் கணித்துக் கேட்டான்.
“பிரச்சனை ஒன்னும் இல்லைணா. இன்னிக்கு கோவில் போனப்புறம் அலெக்ஸ் அவங்க வீட்டுக்கு கூப்பிட்டாங்க. அங்க தான் இருக்கேன்.
அம்மா சட்டுன்னு கூப்பிட்டதும் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன். வேற ஒன்னும் இல்லை.”
“ஓ ஓகே. இந்த பேர்த்டே ரொம்ப ஸ்பெஷல் தான் போல” என கண் சிமிட்டினான்.
“ஹம்ம்ம், எங்க? ஆரம்பம் எல்லாம் ஆர்ப்பாட்டமா தான் இருக்கும். முடிவு தான் பிச்சிகிட்டு போகும்”
தங்கையின் குரலில் சலிப்பை உணர்ந்தவன்,
“என்னடா, நான் வேணும்னா அலெக்ஸ் கிட்ட பேசவா” என கேட்டான்.
“இல்லை நீங்க இது பத்தி எதுவும் கேட்காதீங்க. நான் இன்ட்ரோ குடுக்குறேன், நீங்க ஒரு ஹாய் மட்டும் சொல்லுங்க. இருங்க, அலெக்ஸுக்கு ஓகேவான்னு முதல்ல கேட்டுட்டு வர்றேன்” என்றவள், அழைப்பை ‘மியூட்டில்’ போட்டு விட்டு, சமையலறைக்கு விரைந்தாள்.
“முடிஞ்சுதா? இந்தா டீ எடுத்துக்கோ. ஆறிடும்னு டிராவல் மக்ல ஊத்தி வைச்சிருக்கேன் பாரு” என அவன் தேநீரை நீட்ட, அதை வாங்கி கீழே வைத்தவள்,
“லெக்ஸி, அண்ணா உங்களுக்கு ஹாய் சொல்லனும்னு சொல்றாங்க. ஆர் யூ ஓகே வித் தேட்?” என கேட்டாள்.
“ஆஃப் கோர்ஸ்” என்றவன் மீண்டும் ‘மக்’கை அவள் கையில் திணித்து விட்டு, வரவேற்பறைக்கு வந்தவனிடம், அவள் அலைபேசியின் கடவுச்சொல்லை பதித்து அவன் கைகளில் திணித்தாள்.
மகேந்திரனிடம் தன்னை முறையாக அறிமுகப்படுத்திக் கொண்டவன்,
“மிஸ்டர் மதிவாணன், கேன் ஐ டாக் டு யு இன் பிரைவேட் ஃபார் ஃபைவ் மினிட்ஸ்” என கேட்க, மகேந்திரன் சரியென்று தலையசைக்க, மிருதுளா ‘என்னடா நடக்குது இங்க?’ என வாய் பிளந்து பார்த்தாள்.
படுக்கை அறைக்கு சென்று கதவை அடைத்தவன், பேசி முடித்துவிட்டு வந்த போது, கிட்டத்தட்ட அரை மணி நேரம் கடந்திருந்தது.
அவன் வெளியே வந்ததும், மிருதுளா அவனை பார்வையாலே எரித்து விட்டு, அலைபேசியை அவனிடம் இருந்து வாங்கினாள்.
“என்ன விஷயம்ணா. இவரு என் கிட்டயே இதுவரை ஃபோன்ல இவ்ளோ நேரம் பேசினது இல்லை. அப்படி பிரைவேட்டா உன் கிட்ட என்ன பேசினாரு?” என குறுகுறுப்புடன் வினவ,
“சும்மா தான் பேசிட்டு இருந்தோம் மிரு. என்ன பேசினோம்னு அலெக்ஸே சொல்லுவாரு. நீ வீட்டுக்கு வந்துட்டு எனக்கு மெசேஜ் பண்ணு” என்றவன் அழைப்பை துண்டித்து விட்டான்.
அவள் கேள்வியாக அலெக்ஸைப் பார்க்க, அவன் ‘இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்பது போல் பதில் பார்வை பார்த்து வைத்தான்.
“என்ன லெக்ஸி பேசுனீங்க, அண்ணன் கிட்ட?” என கேட்டே விட,
“ஹேய் அது மேன்-டு-மேன் டாக். எங்களுக்குள்ள பேசுறதுக்கு ஆயிரம் விஷயம் இருக்கும். எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லனுமா” என அவளை சீண்டி விட்டான்.
அவ்வளவு தான். மிருதுளா பொங்கி விட்டாள்.
நீள்விருக்கையில் இருந்த சிறு தலையணையை எடுத்து, அவனை மொத்தி எடுத்து விட, அதற்குப் பின்பும் அடங்காமல் சிரித்துக் கொண்டிருந்தான்.
அடித்து ஓய்ந்தவள், தலையணையை தூக்கி போட்டு விட்டு, நீள்விருக்கையின் ஒரு ஓரம் போய் அமர்ந்து விட, அலெக்ஸுக்கு அவளது சிறு பிள்ளைக் கோபம் பார்க்க குதூகலமாக இருந்தது.
அவள் அருகில் அமர்ந்து, தோள்களில் கை போட்டவன்,
“கண்டிப்பா சொல்லனுமா?” என்க,
“இல்லைல்ல. ஒன்னும் தேவை இல்லை” என முறுக்கினாள்.
“நிஜமா வேண்டாமா ஸாஃப்டி?” என அவன் கண் சிமிட்ட, அவள் விழி விரித்துப் பார்த்தாள்.
“ஹேய், இது எப்படி தெரியும் உங்களுக்கு?” என மிருதுளா ஆர்வமாக கேட்க,
“அதெல்லாம் தான் உன் அண்ணன் கிட்ட கேட்டுட்டு இருந்தேன். மிருதுளான்னா ஸாஃப்டி தான் அர்த்தமாமே. நீ பேபியா இருக்கிறப்போ உங்க அண்ணா அப்படி தான் உன்னை கூப்பிடுவாங்களாமே” என்றான்.
“ஆமா, கிட்டத்தட்ட அண்ணன் கல்யாணம் ஆகுற வரை அப்படி தான் கூப்பிடுவாங்க” என்றவளுக்கு சகோதரனின் நினைவில் முகம் கனிந்தது.
சில நொடிகள் அதில் திளைத்தவள்,
“ஆமா, இதுவா அரை மணி நேரம் பேசினீங்க?” என்று திரும்பவும் விஷயத்துக்கு வர,
‘அலெக்ஸ், உன் பாடு ரொம்ப கஷ்டம்டா. மேடம் செம ஷார்ப்’ என நினைத்துக் கொண்டவன்,
“இல்லை. நீதான் உன்னைய கூல் பண்றது எப்படின்னு சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டியே. அது தான் உங்க அண்ணன் கிட்ட கேட்டேன்” என தோளைக் குலுக்க, அவனை சந்தேகமாக பார்த்தாள்.
‘இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு’ என்பது தான் மிருதுளாவின் மைண்ட் வாய்ஸ்.
“நீங்க சொல்ற எதுவும் நம்புற மாதிரியே இல்லையே” என நிறுத்தியவள்,
“சரி, அதுக்கு என் அண்ணா என்ன சொன்னாங்க?” என இடுப்பில் கைவைத்து கேட்டாள்.
“அதெல்லாம் சீக்ரெட். நான் உன்னைய கூல் பண்றப்போ தெரிஞ்சுக்கோ” என நழுவி விட்டான்.
அதற்கு மேல் அவனை துருவாமல், ‘கத்தரிக்காய் முற்றினால் கடைக்கு வந்தே தீரும். வரும் போது பார்த்துக் கொள்ளலாம்’ என நினைத்துக் கொண்டவள், நேரமாவதை உணர்ந்து,
“லெக்ஸி, கிளம்பலாமா? டைம் ஆச்சு” என்க, அவனும் ஒரு பெரு மூச்சுடன் எழுந்து கிளம்பினான்.
இருவரும் திரும்பவும் ஈஸ்ட்ஹேமிற்கு சென்று, இந்த முறை *** ஆஃப் இந்தியா உணவகத்தில், மதிய விருந்து உண்டனர். போகிற வழியில் அலெக்ஸுக்கு அவனது தேடுதலுக்கு ஏற்ற தகவல்கள் சில கண்ணில் பட்டன.
இதை இன்னொரு முறை பொறுமையாக வந்து பார்க்க வேண்டும் என முடிவெடுத்தவன், அந்த இடங்களை மனதில் குறித்துக் கொண்டான். அவன் கவனம் பாதையில் இல்லாததை உணர்ந்தவள்,
“என்ன லெக்ஸி பார்க்குறீங்க?” என அவளும் அவன் பார்த்த திசையில் பார்த்து கேட்க,
“நத்திங்” என நேராக திரும்பி விட்டான்.
அவள் திரும்பி அந்த இடத்தில் பார்க்க, அவள் கண்களுக்கு வித்தியாசமாக எதுவும் புலப்படவில்லை.
“நீங்க ஒன்னும் சரியே இல்லை இன்னிக்கு. ஏதோ ‘ஆட்’ஆ பிஹேவ் பண்றீங்க” என அவள் குறைபட,
“ஓய் பேர்த்டே பேபி, நோ வொரீஸ். நீ யோசிக்கிற அளவு எதுவும் இல்லை. ஜஸ்ட் என்ஜாய் யுவர் டே.
நீ போட்டிருக்கிற மாதிரி டிரெஸ் இங்க கடைல இருக்குல்ல. நான் உனக்கு ஒன்னு வாங்கி தரட்டுமா? உங்க அண்ணா உனக்கு சாரி பிடிக்கும்னு சொன்னாங்க” என அவளை சமாதானம் செய்தான்.
“வேண்டாம் லெக்ஸி, என் கிட்ட அம்மா எடுத்து கொடுத்ததே நிறைய இருக்கு. எல்லாம் பெட்டில தூங்குது. நான் எங்க போறேன்? இதெல்லாம் கட்டிட்டி போறதுக்கு” என அவள் மறுக்க, அவனும் அதற்கு மேல் வற்புறுத்தாமல் விட்டு விட, இருவரும் தொடர்வண்டி நிலையத்தை அடைந்தனர்.
“நீங்க வேணும்னா இப்படியே கிளம்புங்க. நான் போய்க்கிறேன். எதுக்கு வேஸ்டா அலைச்சல். ஒரு நாளாவது ரெஸ்ட் எடுங்க” என அவனைக் கருத்தில் கொண்டு சொல்ல, அதற்கு அலெக்ஸ் மறுத்து விட்டான்.
அவளுடன் வீடு வரை வந்தவன், திரும்ப போக, மிருதுளா தயங்கிக் கொண்டே,
“வீட்டுக்கு வாங்க லெக்ஸி” என அழைக்க,
“ஹேய், நோ ஆப்ளிகேஷன். உனக்கு கம்ஃபோர்ட் இல்லாத விஷயத்தை கஷ்டப்பட்டு முயற்சி பண்ணாதே” என்றான்.
“இல்லை, இட்ஸ் ஓகே. நான் பாயாசம் பண்ணினேன், ஜெனிக்கு ரொம்ப பிடிக்கும்னு. வந்து ஒரு வாய் சாப்பிட்டு போங்க” என மீண்டும் அழைக்க, அலெக்ஸ் மகிழ்ச்சியாகவே உள்ளே வந்தான்.
மிருதுளாவின் வீடு அவன் வீட்டுக்கு எதிர்பதமாக இருந்தது. அடக்கமான, ஸ்டுடியோ பிளாட் என்றாலும், வண்ண மயமாக இருந்தது. ஆங்காங்கே சிறு சிறு தொட்டிகளில் வண்ண வண்ண பூக்கள் பூத்திருந்தது.
அதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனிடம், அவள் பாயாசத்தை ஒரு சிறு கண்ணாடி கிண்ணத்தில் ஊற்றி எடுத்து வந்து கொடுத்தாள்.
அதை சுவைத்துப் பார்த்தவன்,
“வாட்ஸ் திஸ்?” என்க,
“அது ரைஸ் புட்டிங் மாதிரி ஒரு ஸ்வீட். மேட் வித் மில்க், சுகர் அன்ட் ரைஸ்” என்றவள்,
“பிடிச்சிருக்கா” என ஆவலுடன் கேட்டாள்.
“ம்ம்ம், இட்ஸ் டெலிசியஸ். இன்னிக்கு சாப்பாடு ஓவராயிடுச்சு. இன்னும் ஒரு வாரத்துக்கு வெறும் சூப் தான்” என்றவன் முழு கிண்ணத்தையும் முடித்த பின்னரே எடுத்து கழுவி வைத்தான்.
“எங்க போறீங்க நீயும், ஜெனியும்?”
“தெரியல, ஏதோ ஸ்பால அப்பாயின்மெண்ட் வாங்கிருக்கேன்னு சொன்னா. சோ ஜஸ்ட் பேம்பரிங் அவர்செல்வ்ஸ்”
“நைஸ். வெல் என்ஜாய் ரெஸ்ட் ஆஃப் யுவர் டே அண்ட் பேம்பரிங். நம்ம நாளைக்குப் பார்க்கலாம்” என்றவன், கிளம்ப எத்தனிக்க, மிருதுளாவுக்கு மனம் கிடந்து அடித்தது.
அவனது எதிர்பார்ப்புகளும், ஏக்கங்களும் இன்னும் ஒரு முறை மனதில் நிழலாடியது. அவனளவுக்கு இல்லை என்றாலும், அவளுக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கும் தானே. ஏக்கங்களும், ஆசைகளும் உண்டு தானே. மனத்தளைகள் இருந்தாலும், இதையும் எதிர்கொண்டு ஆக வேண்டும் தானே.
திடீரென்று அவள் முகம் கலவரமானதைப் பார்த்தவன்,
“என்னாச்சு மிரு? ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு?” என்க,
“ம்ம்ம், ஒன்னும் இல்லை” என வேகமாக பதில் அளித்தாள்.
“ம்ப்ச், இவ்ளோ நேரம் ஹாப்பியா இருந்தியே? இப்ப என்ன ஆச்சு? சட்டுனு ஃபேஸ் மாறிடுச்சு”
“அ…அது நீங்க கிஃப்ட் கொடுத்தீங்கள்ள. நான் ரிடர்ன் கிஃப்ட் எதுவும் கொடுக்கலைல அது தான்” என சோகமாக உரைக்க,
அவள் பதிலில் சிரித்தவன்,
“நம்ம என்ன பேபிஸா. கிஃப்ட், ரிடர்ன் கிஃப்ட் எல்லாம் குடுக்குறதுக்கு. அது தான் ஸ்வீட் கொடுத்துட்டியே. அதுவே ரிடர்ன் கிஃப்ட் தான் ” என்று விட்டு வாசலை நோக்கி நடந்தான். மிருதுளாவும் அவன் பின்னே நடந்தாள்.
வாசல் வந்ததும் அவள் புறம் திரும்பியவன், “பை மிரு, தேங்க்ஸ் ஃபார் ஹேவிங் மீ அண்ட் த லவ்லி புட்டிங்” என்க,
“நான் ரிடர்ன் கிஃப்ட் கொடுத்தே ஆகனும்” என அவள் பிடிவாதம் பிடித்தாள்.
“சரி ஓகே, நாளைக்கு எடுத்துட்டு வா. போதுமா. இது ஒரு பிரச்சனையா?” என முடிக்கப் பார்த்தான். இது என்ன சிறுபிள்ளைத்தனம் என்று தான் தோன்றியது அவனுக்கு,
“இல்லை, இப்போவே கொடுக்கனும்”, அவள் விடுவதாக இல்லை.
“ஓய் என்னாச்சு உனக்கு?. சரி நீ போய் எடுத்துட்டு வா. நான் வெயிட் பண்றேன்”
“நீங்க கண்ணை மூடுங்க”
“இது வேறயா. போ இன்னிக்கு உனக்கு என்னவோ ஆயிடுச்சு” என்றவன் சிரித்துக் கொண்டே, கண்களை மூடி காத்திருக்க, மலரினும் மென்மையாக எதுவோ ஒன்று அவன் உதடுகளை ஒத்தி எடுக்க, பட்டென்று கண்களை திறந்து விட்டான்.
அவன் கண்களைத் திறப்பான் என எதிர்பார்க்காத மிருதுளாவின் முகம் அவன் முகத்தருகில்.
“ஹேய், இது சீட்டீங். ஒரு விஷயம் முடிவு பண்ணிட்டா, அதை கரெக்டா பண்ணனும் ஸாப்டி” என்றவன், வெட்கத்தில் முகம் சிவக்க, காலை ஊன்றி எம்பி நின்றவளை, லேசாக தூக்கி வசதியாக அணைத்துக் கொண்டவன் அவள் ஆரம்பித்ததை நிறைவாக முடித்து வைத்தான்.
இதழ் முத்தம். முதல் முத்தம். இருவருக்கும் சற்று முன் சாப்பிட்ட இனிப்பை விட பல மடங்கு தித்தித்தது.