“வேற வழி இல்லாம சரின்னு சொன்னேன். என்னால மறுக்க முடியலை. அவங்களும் பாவம் இல்லையா? நம்பிக்கை வச்சு வந்திருக்காங்க….” என்றவர்,
“நாமளே கொண்டுபோய் குடுத்திடுவோம் ருதி. ஒருவேளை எதாச்சும் சரி பண்ணனும்ன்னா அங்கயே பண்ணி குடுத்திருவோம்…” என்று கையடக்க தையல் மிஷின் ஒன்றையும் எடுத்துக்கொண்டே சென்றுவிட்டார் நர்மதா.
“நாங்களே வந்து வாங்கிக்கறோம்ன்னு சொன்னோமே…” என்றவர்கள் சொல்லியும்,
“பரவாயில்லை, திரும்ப உங்களுக்கு அலைச்சல் வேண்டாம் பாருங்க. கல்யாண நேரம். அதான் நாங்களே வந்துட்டோம்…” என்று கொண்டுவந்த ப்ளவுஸை கொடுத்திருக்க உடனே அணிந்து பார்க்க சென்றாள் அந்த பெண்.
“நீங்க ஸ்டிச் பண்ணி குடுத்த லெஹெங்கா ப்ளவுஸ் கொஞ்சம் லூஸா இருக்கு. அதையும் ஆல்ட்டர் பண்ணலாமா? தைச்சப்போ கரெக்ட்டா இருந்தது. ஆனா பத்துநாளைக்கு முன்னாடி வந்த காய்ச்சல்ல பிள்ளை ரொம்ப மெலிஞ்சுட்டா…” என்றும் சொல்ல சம்மதித்து அங்கே இருந்தவர்,
“நீ கிளம்பு ருதி. நானே கூப்பிடறேன். நிவா தனியா தூங்கறா…” என்று சொல்லி மகளை அனுப்பி வைத்த பின்னர் தான் அவருக்கே தெரிந்தது திருமணத்தில் மணப்பெண் யார் என்று.
“வாங்க எங்க வீட்டுக்கு வரப்போற பொண்ணுக்கிட்ட உங்களை அறிமுகப்படுத்தறேன்…” என்று மணமகனின் தாய் அழைத்து செல்ல,
“பொண்ணுக்கு அவங்க ரெகுலரா தைக்கிற இடத்துல குடுத்திட்டாங்க. அதனால நாங்களும் உங்ககிட்ட குடுக்க சொல்லி சொல்ல முடியலை. பொண்ணோட விருப்பம் தானே முக்கியம். ஆனா நேத்து எங்க ட்ரெஸ் எல்லாம் பார்த்து ரொம்ப பிடிச்சிருச்சு. அடுத்து உங்ககிட்ட தான் தரனும்ன்னு சொல்லிட்டிருந்தா…” என பேசிக்கொண்டே மணமகள் அறைக்கு அழைத்து சென்றனர்.
நர்மதாவிற்கு சங்கோஜமாக இருந்தது. எத்தனை மறுத்தும் கூட்டி வந்துவிட்டனர்.
அத்தனை இயல்புடன் அவர்கள் பேசி பழக, அவரால் தான் இத்தனை நாளாகியும் ஒட்டி பேச இயலவில்லை.
அவருக்கு முன்னால் நர்மதாவும் நடந்து சென்றுவிட புவனாவும், சுகன்யாவும் கங்காவை பார்த்தனர்.
“அவங்க தான சுகா? எனக்கு முதல்ல சட்டுன்னு ஞாபகம் வரலை. ஆனா அவங்க பெயரை சொல்லவும், அவங்க பார்த்த அந்த பார்வையும். இப்ப அவங்களோட நிலைமையை பார்த்தியா?…” என்று புவனா கண் கலங்க,
“கங்கா நீ இங்க இரு. ஹரிணியை ரெடி பண்ணு. நாங்க போய் பேசிட்டு வர்றோம்…” என்றார் சுகன்யா கங்காவிடம்.
“இல்ல சித்தி, நானும் வர்றேனே. நான் மன்னிப்பு கேட்கனும்…” என்றாள் கங்கா.
“அடிச்சேனா பாரு. மன்னிப்பாம். உன்னால தான் இவ்வளோ தூரம் வந்திருக்கு. பேச வைக்காத என்னை. என் மனசெல்லாம் கொதிக்குது அந்தம்மாவை பார்த்து. பேசாம இங்கயே இரு…” என்று சொல்லிவிட்டு புவனாவை அழைத்துக்கொண்டு சென்றார் சுகன்யா.
அவர் அங்கே சென்றநேரம் தீக்ஷாவும் தன் தாய்க்கு அழைத்து பேச நர்மதாவின் குரலில் ஏகத்திற்கும் அழுத்தம்.
பேசி முடித்து அவர்களை ஏறிட்டும் பார்க்கவில்லை நர்மதா. சுகன்யா அருகில் வந்து பேச முயற்சி செய்ய, அதனை தவிர்ப்பதை போல மற்றவர்களிடம் நர்மதா பேச சுகன்யாவுக்கும், புவனாவிற்கும் முகம் சுண்டிப்போனது.
“அதான் வந்துட்டேனே. நான் கிளம்பறேன். நீங்க பாருங்க…” என்று சொல்லி மகளுக்கு அழைக்க போனை எடுக்க,
“இருங்க நர்மதா, நாங்களே ட்ராப் பன்றோம். என் தம்பி இருக்கான்…” என்று சொல்லி ஹரிணியின் மாமியார் வெளியே வர,
“இல்லை, நானே பார்த்துக்கறேன்…” என்று தன் கையடக்க தையல் மிஷினை எடுத்து வைத்துக்கொண்டவர் புறப்பட தயாராகி வெளியே வந்தார்.
“இருங்க, இருங்க ப்ளீஸ். கொஞ்சம் பேசனும். ஒருநிமிஷம்…” என்று சுகன்யா நர்மதாவின் கையை பற்ற, நாசூக்காய் அதை தவிர்த்த நர்மதா படிகளில் இறங்கி கீழ் தளத்திற்கு வந்தவிட அங்கே சந்தனநம்பியுடன் தணிகைவேல் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
“நர்மதா ஒருநிமிஷம்….” என்று புவனாவும் அவரின் பின்னே வர,
“யார் நீங்க? என்ன பேசனும்?…” என சட்டென்று நின்றுவிட்டார் நர்மதா.
அவரின் பேச்சிலும், சத்தத்திலும் அவர்களும் ஆணியடித்ததை போல் நின்றுவிட, இதனை என்னவோ என்று பார்த்துக்கொண்டிருந்த தணிகைவேல் அப்போதுதான் நர்மதாவை கவனித்து பார்த்தார்.
“இவங்க, இவங்க….” என யோசித்து,
“மாப்பிள்ளை இவங்க கும்பகோணம், அவங்க…” என்று சொல்லி அவரை காண்பிக்க,
“என்ன?…” என்று அதிர்ந்து பார்த்தார் சந்தனநம்பி.
“இவங்க எப்படி இங்க?…” என்றவர் தானும் அங்கே வர, அதற்குள் நர்மதா அவர்களை எச்சரிக்கும் பார்வை பார்த்ததோடு விருட்டென்று திரும்பி வாசலை நோக்கி செல்ல,
“நர்மதா ஒருநிமிஷம்…” என்ற ஹரிணியின் மாமியாரின் சத்தத்தில் தன்னை நிதானித்துக்கொண்டு முகத்தை இலகுவாக்கி நின்றார்.
“நான் சொன்னேன் தானே? என்ன புறப்பட்டுட்டீங்க? இருங்க. இங்க ஆட்டோ எதுவும் கூட கிடைக்காது. என் தம்பிக்கு கொஞ்சம் முடியலை. இதோ இவங்க ட்ராப் பண்ணுவாங்க…” என்றவர் அழைத்தது ஹரித்திரனை.
நர்மதாவின் பார்வை ஹரித்திரனை துளைக்க அவன் இன்னும் அடுத்தடுத்த அதிர்வில் இருந்து மீள முடியாமல் ஸ்தம்பித்து பார்த்தான் நர்மதாவை.
“வேண்டாம்ங்க. யாரையும் தொந்தரவு செஞ்சு எனக்கு பழக்கம் இல்லை. இங்க எனக்கு எந்த சிரமமும் இல்லை. நான் போயிருவேன்…” என்றார் நர்மதா ஸ்திரமான குரலில்.
அவரின் வார்த்தைக்கு பின் ஒளிந்திருக்கும் பொருளை உணர்ந்தவர்கள் கலங்கி போய் அவரை பார்க்க,