“இதையும் விட இன்னொரு காரணம் பயம். ஒருவேளை தீக்ஷாவுக்கு வேற லைப்ன்னு எதாச்சும். அதை பார்க்கற அளவுக்கு எனக்கு சக்தி இல்லையோன்னு தான் விலகியே இருக்க முடிவுக்கு வந்தேன்…”
“ஹரிணி நிச்சயத்துக்கு வந்தப்போ தான் நீங்க கும்பகோணத்துல இல்லைன்னது தெரிஞ்சது. தீக்ஷா அப்பாவும் இல்லைன்னது தெரியவந்துச்சு. கோவில்ல தீக்ஷாவை பார்த்தேன். என்னோட காத்திருப்புக்கு கடவுள் இன்னொரு பாதையை ஏற்படுத்திருக்காருன்னு நினைச்சேன்….”
“அங்க பார்த்த வேலையே விட்டுட்டு இங்க வந்தேன். நான் வந்த இடத்துலயே தீக்ஷாவும் இருந்தா. எல்லாமே எனக்குள்ள ஒரு நம்பிக்கையை குடுத்துச்சு. அவளோட விலகல், கோபம் கூட எனக்கு நிம்மதியை தந்தது. ஆனா மொத்தமா உடைஞ்சது எப்போ தெரியுமா? நீங்க பேசினீங்களே அப்போ தான்…”
மூச்சு விடாமல் ஹரித்திரன் தன் மனதில் தோன்றியவற்றை எல்லாம் அவர்களின் முன் கொட்டிவிட நர்மதாவும், தீக்ஷாவும் வெறித்து பார்த்தனர்.
சுகன்யாவுக்கும், ஹரிணிக்கும் கண்ணீரே வந்துவிட்டது. எத்தனை தூரம் அவன் வருந்தி பேசுகிறான் என்று பார்த்து.
“என்ன சொன்னீங்க? என்னோட வாழறது உயிருள்ள பிணத்துக்கு சமம்ன்னு தானே? எப்படி அந்த வார்த்தையை சொல்ல முடிஞ்சது உங்களால? வாழவே விடாம அதுக்கு முன்னவே சாகடிக்கிறது மட்டும் என்னவாம்?…” என்றவன் தீக்ஷாவின் கையை பிடித்து தனக்கருகில் நிறுத்தியவன்,
“இப்ப மட்டும் இவ சந்தோஷமா இருக்காளா? இல்ல நான் நிம்மதியா இருக்கேனா? இப்பவும் நாங்க அப்படித்தான் வாழ்ந்திட்டு இருக்கோம்…” என்று சொல்லி அவளின் கையை விட்டவன்,
“வாழவே இல்லை. பேசிக்கவே இல்லை. பழகவும் இல்லை. அதுக்கு முன்னாடியே இப்படி ஆகும். அப்படி நடந்திடும். என்ன பேச்சு இதெல்லாம்?…” என்றான் வேகத்துடன்.
“எல்லாமே யூகம் தானா? யூகத்துலையே நாலு வருஷம் நிம்மதி சந்தோஷத்தை தொலைச்சிட்டு ஜடமா நான் நிக்கறேன். போதாதா? அந்த வாழ்க்கை எத்தனை கஷ்டம்ன்னு தெரியுமா உங்களுக்கு?…”
“உண்மையை நான் மறைச்ச காரணம் என்னனு சொல்லிட்டேன். நீங்க சொன்னதுனால இவ்வளோ நாள் இலகியும் இருந்துட்டேன். ஆனா இனிமே அப்படி இருக்க முடியாது. அந்த மாதிரி தளி நின்னு கஷ்டப்படறதுக்கு சேர்ந்து பட்டுக்கறோம்…”
“உங்களுக்கு என்னங்க, பழைய மாதிரி என் வீட்டுல என் சித்தப்பா, அத்தை, உங்க பொண்ணு சொன்ன மாதிரி என் அக்கா, அவ புருஷன்னு யாரும் பேசி அவளை நான் விட்டுடுவேனோன்னு தானே? கற்பனையிலையே அப்படி செஞ்சிடுவேன்னா இது மட்டும் எந்த வகையில நியாயம்?…”
“அந்த மாதிரி செய்யமாட்டேன்னு நான் சொல்றேன். வார்த்தைல நம்பிக்கை குடுத்தா போதாது.ஆனா அதுக்கு வாழவும் விடவேண்டாமா? சேர விடுங்க. என்ன பிரச்சனைன்னாலும் சேர்த்து சமாளிக்கறோம்…”
“உங்க பொன்னும் அத்தனை சீக்கிரம் என்னை சும்மா விடமாட்டா. நான் பேசாம இருந்தா எனக்கும் சேர்த்து அவ பேசட்டும். என் குடும்பம்ன்னா முதல்ல நான் என் மனைவி, என் குழந்தைங்க. அதுக்கடுத்து என்னோட அம்மாப்பா. அதை தாண்டி தான் மத்தவங்க எல்லாம்…” என்றான் தெளிவாய்.
“அப்படி சொல்லுடா என் சிங்கக்குட்டி…” என்று சுகன்யா பொங்கி பூரிக்க,
“நாம எல்லாம் அவன் குடும்பம் இல்லையாம் சித்தி…” ஹரிணி அவரின் காதில் கிசுகிசுக்க,
“புண்ணியமா போகும். நீங்கலாம், நான்லாம் அவன் குடும்பமா இருக்கவே வேண்டாம்டி. அவ அவ பொழப்பை பார்த்துட்டு அவனை விட்டாலே போதும். முக்கியமா என் புருஷனுக்கும், உன் அத்தைக்கும் ஒரு எலுமிச்சம்பழத்தை உருட்டிவிட்டு ஆளை விடுங்கடான்னு அக்கக்கா பிரிஞ்சு போய் அவன் நிம்மதியா இருப்பான்….” என்றவர் அருகில் லாவண்யா நிற்க கண்டு,
“ஹிஹிஹி, ப்ரீ அட்வைஸ். ஹெல்த் இஸ் வெல்த்…” என்றார் அசடு வழிந்து.
“அந்த அத்தைன்னு சொன்னது?…” லாவண்யா கேட்க,
“ஆத்தீ, என் நாத்தியை சொன்னேன். என் புருஷனோட உடன்பொறப்பை…” என்றார் உடனே.
“அப்பா அந்த எலுமிச்சை பழம்?…”
“அதுவும் அவங்களுக்கு தான்….”
“அப்ப நாம சொந்தம் இல்லையாமா?…” என விடாமல் லாவண்யா கேலி பேச, அவரின் கையை பிடித்துக்கொண்டார் சுகன்யா.
“இங்காருங்க சம்பந்தி, முதல்ல இந்த சம்பந்தி வீட்டு பஞ்சாயத்து முடியட்டும். நாம பொறவு ஆற அமர உக்கார்ந்து பேசிக்கலாம். இப்பவே இவன் பேசின வீர வசனத்துக்கும், கோவத்துக்கும் அந்தம்மா என்ன சொல்லுமொன்னு எனக்கு நெஞ்சு அடைக்குது…” என்றார் சுகன்யா.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் தீக்ஷாவின் விலகளை மீண்டும் கண்டு அவளருகில் நின்றவன்,
“உங்க பொண்ணை ஹாஸ்பிட்டல்ல இருந்து கூட்டிட்டு வந்திருக்கேன். ஏன் தெரியுமா?…” என்றவன் அவள் திடுக்கிட்டு பார்க்க கண்டு,
“மயங்கி விழுந்துட்டா. எதனால தெரியுமா?…” என்றவன் அவள் விழிகளால் வேண்டாம் என்று இறைஞ்ச கண்டு,
“இப்ப நீயும் தான இதை செய், இதை செய்யாதன்ற மாதிரி கன்ட்ரோல் பன்ற? அப்போ இது மட்டும் சரியா?…” என்றவனுக்கு அத்தனை கோபம்.
“உங்கம்மா சொல்லும் பொது சரின்னு விலகி போனாலும் தப்பு. அவங்க பேச்சை கேட்டுட்டு போவியான்னு நீ பேசுவ. போகலன்னா அவங்க பேச்சுக்கு மதிப்பில்லைன்னு அவங்க நினைப்பாங்க. என்ன ஆளாளுக்கு ஆட்டி படைக்கறீங்க?…” என்றவன்,
“வாழ்க்கையை ஆரம்பிக்க பிடித்தமும், விருப்பமும் மட்டும் போதாது, நம்பிக்கை வேணும்ன்னு சொன்னீங்க. அந்த நம்பிக்கையை எப்படி காமிக்க? சொல்லுங்க…” என்று அர்மதாவின் முன் கை கட்டி நின்றான் ஹரித்திரன்.
“அப்படி நாங்க நல்லவிதமா வாழ மாட்டோம்ன்னு நீங்க எப்படி நம்பறீங்க? எங்களுக்குள்ள பிரச்சனை தான் வரும்ன்னு நீங்க எப்படி நம்பறீங்க? எங்க வீட்டு மனுஷங்களால தீக்ஷா உயிரோட எரியவேண்டியதா இருக்கும்ன்னு நீங்க எப்படி நம்பறீங்க? நான் அவளுக்கு பக்கபலமா இருக்கமாட்டீங்கன்னு எந்த நம்பிக்கைல சொல்றீங்க?…” என்றான் ஹரித்திரன்.
அவன் பேச பேச நர்மதாவின்மனதிற்குள் எந்தளவிற்கு நிம்மதி உருவானதென அவனறிய நியாயமில்லை.
“சும்மா நம்பிக்கை நம்பிக்கைன்னு வார்த்தைல கேட்டா போதுமாங்க? நாலு வருஷம் அவளை நினைச்சிட்டு வாழ்ந்திட்டுருந்தவன் நான். அவ பக்கம் என்னை பத்தின நினைப்பு இருக்க இல்லையான்னு கூட தெரியாம அவ நினைப்போடவே இருந்தவன் நான்….”
“முதல்ல எல்லாம் எனல்ளதா நடக்கும்ன்னு நம்புங்க. ஏன் நீங்க உங்க பொண்ணுக்கு சொல்லவேண்டியது தானே? எத்தனை பிரச்சனை இருந்தாலும் நீ சமாளிக்கனும்ன்னு. அவளால முடியாதா?…” என்று சொல்ல, தீக்ஷாவிற்கு நர்மதாவின் அமைதிதான் பயப்பந்தை உருவாக்கியது.
“நான் இவ்வளோ பேசினேன். உங்களுக்கு எந்த மாதிரி புரிஞ்சதுன்னு தெரியலை. இனியும் யாருக்காகவும் நான் என் வாழ்க்கையை சோதிக்க விரும்பலை. எனக்கு தீக்ஷா தான் மனைவி. அது நீங்க எப்போ தந்தாலும் சரி. வெய்ட் பண்ணுவேன்…” என்றவன்,
“உங்க பொண்ணை கேட்காம சொல்றேனேன்னு நினைக்காதீங்க. அவ மனசுல என்ன இருக்குன்னும் தெரியும். நான் மட்டும் தான் இருப்பேன்னும் தெரியும். சும்மா இதாகிடும், அதாகிடும்ன்னு புலி வருமன்ற கதை சொல்லிட்டிருக்காதீங்க. எங்கம்மாப்பா வருவாங்க. உங்களுக்கு எப்ப எனக்கு பொண்ணை தரனும்ன்னு தோணுதோ தாங்க….” என்று சொல்லியவன் அப்போதுதான் மூச்சே விட்டான்.
நர்மதா இதில் எதிலுமே வார்த்தைகளை விடவில்லை. அவன் பேச்சில் இடைமறிக்கவில்லை.
அத்தனை அமைதியுடன் அவர் நிற்க கண்ட சுகன்யாவிற்கு தான் பீதியானது. இவன் என்ன எதுவும் சொல்லவில்லையே என்று.
“சம்பந்தி…” என்ற சுகன்யாவின் அழைப்பில் நர்மதா அங்கே திரும்பி பார்க்க,
“அன்னைக்கு நடந்ததுக்கு முழுக்க முழுக்க காரணம் என் புருஷன் தான். அவரோட பேச்சு தான் அத்தனைக்கும் காரணமா அமைஞ்சிடுச்சு. அதுக்காக் அனான் மன்னிப்பு எகத்தா முடிஞ்சு போயிட கூடியதில்லை. இதென்ன ஆளாளுக்கு மன்னிப்பு கேட்காங்கன்னு நினைக்காதீங்க….”
“அதுக்காக ஹரியை தண்டிச்சிடாதீங்க. உங்களுக்கு என்ன என் வீட்டுல, என் நாத்தனார் வீட்டுல எதுவும் பேசிருவாங்கன்னு தானே? நாங்க விலகி நின்னுக்கிட்டா சரியா?…” என்றவர் கணம் கூட யோசிக்கவில்லை.
“நாங்க விலகிக்கறோம். எப்பாடுபட்டாச்சும் ஹரியை விட்டு, ஹரியை விட்டு….” என்று அவனை பார்த்தவருக்கு கண்ணீர் கரைபுரண்டது.
“சித்தி…” என ஹரித்திரன் அவரின் கையை பிடிக்க,
“அட நீ சும்மா இருடா. நான் பேசறேன்ல….” என்று கண்ணீரை துடைத்தவர்,
“வாழ வேண்டிய பிள்ளைங்க. மனசு வைங்க. ஒரு அம்மாவா நீங்க எவ்வளவு தவிச்சு போவீங்கன்னு புரியும். நானும் அம்மா தான. எனக்கும் புரியும்ங்க. நடந்து முடிஞ்சதுக்காக பிள்ளைங்க எதிர்காலம் இப்படியே நின்னுட கூடாது பாருங்க…” என்று கெஞ்சியவர் நர்மதாவின் கையை பிடித்துக்கொண்டார்.
“என் புருஷன் தான் முதல் பிரச்சனை. அவரை ஏத்தி விடற அவங்க அக்கா. இவங்க ரெண்டுபேரையும் தள்ளி வச்சிட்டு ஹரியை மட்டும் பாருங்க. அந்த வீட்டுல என் மூத்தாரும், புவனாக்காவும் அம்புட்டு நல்லவங்க. எல்லாம் இந்த உடன்பிறப்புங்க ரெண்டுபேரும் பன்ற கூத்து தான். நாங்க போக்குவரத்து இல்லாம இருந்தாலே அங்க எல்லாம் சரியா இருக்கும்….” என்றவர்,
“நாங்கன்னா நான் நான் என்னை சொல்லலை. நான் அப்பப்ப வந்து பார்த்துட்டு போவத்தான் செய்வேன். என்னால ஹரியை, புவனாக்காவை எல்லாம் பார்க்காம இருக்க முடியாதுல. அதுவும் உங்களுக்கு விருப்பம் இல்லன்னா. இல்லன்னா…” என்று தேம்ப்லியா அடக்கி கொண்டு சிறுபிள்ளை போல நர்மதாவை பார்த்தார் ஏதாவது பேசுவாரா என்று.
“சித்தி ஏன் சித்தி இப்படி சொல்றீங்க?…” என ஹரிணி அழுதுவிட,
“இந்தா எதுக்குடி அழற? உன் அண்ணன் நல்லாருந்தா போதாதா. அவன் சந்தோஷம் முக்கியமில்லையா? நாம என்ன அப்படியேவா போயிட போறோம். அங்க தானே இருக்கோம். கண்ணெதுக்க இருக்க போறான். நல்லாருப்பான்ல…” என்றார் சுகன்யா கண்ணீரை துடைத்தபடி.
“அதெப்படி உங்க வீட்டுக்காரர் நீங்க சொல்றதை கேட்டு அவர் அண்ணன் வீட்டு விஷயத்துல மூக்கை நுழைக்காம இருப்பாரா என்ன?…” லாவண்யா தெரிந்துகொள்ள கேட்க,
“அதெல்லாம் நிறைய ஐடியா இருக்கு. நாலுபேருக்கு நல்லதுன்னா நாரதர் வேலை தப்பில்லைல…” என்றார் சுகன்யா மூக்கை உறிந்துகொண்டு.
“யார் அந்த நாலுபேர்?…”
“ஹரி, அவன் பொண்டாட்டி, ரெண்டு புள்ளைங்க…” என்று சுகன்யா சிரிக்க,
“ஏன் நீங்க எல்லாம் வந்தாலும் நான் சரியா தான் இருப்பேன்னு இவங்களுக்கு தோணாதா என்ன? முதல்ல அந்த நம்பிக்கையை இவங்க வளர்த்துக்கட்டும்…” என்ற ஹரித்திரன்,
“நீங்களே நல்லா யோசிங்க த்தை…” என்று சொல்லிவிட்டு,
“கிளம்பறேன். வர்றேன் தீக்ஷா…” என்றுவிட்டு வெளியே வர அவனோடு வந்த சுகன்யா,
“இரு தொண்டை அடைக்குது. தண்ணி குடிச்சிட்டு வர்றேன்…” என்று உள்ளே வேகமாய் ஓடினார்.
தீக்ஷா நடந்த விஷயத்தில் கலவரமும், அதிர்வுமாய் நிற்க நர்மதா முகத்தில் எந்தவித அறிகுறியும் இல்லை. மீண்டும் சுகன்யா உள்ளே வர பார்த்ததும் நர்மதாவின் கையை பிடித்துக்கொண்டார்.
“இங்க பாருங்க, நான் சொன்னது சொன்னது தான். என் புருஷனை எப்படி என்ன செய்யனும்னு நான் பார்த்துக்கறேன். நீங்க பிள்ளைங்க கல்யாணத்தை நடத்த என்ன செய்யனுமோ செய்ங்க….” என்றவர்,
“நானும் என் பையனும் வர்றதுக்கு ஓகே சொல்றதும் கூட உங்க விருப்பம் தான். நான் கட்டாயப்படுத்த மாட்டேன். என் புருஷன் தான் அப்படி. நான் என் பிள்ளை எல்லாம் உங்களுக்கு செட்டாகற ஆளுங்க தான். மனசு வைங்க…” என்று சொல்லிவிட்டு கிளம்ப நர்மதா தீக்ஷாவை திரும்பி பார்த்தார்.
தாயின் பார்வையில் தளர்ந்து போனவள் மெதுவாய் உள்ளே சென்றுவிட, நர்மதாவின் முகத்தில் மலர்ச்சியும், சிறு புன்னகையும்.