“ருதி….” என்று நர்மதாவின் சத்தம் கேட்க வெளியே வந்தவள் அனைவரும் கிளம்ப தயாராய் இருக்க கண்டு முன்னே வந்தாள்.
“இங்க பாரும்மா, தப்பு எங்க பேர்ல. எங்க பையன் அப்படி கிடையாது. விலகி போறோம்ன்னு அவனை தண்டிச்சிடாத ம்மா. வேற என்ன சொல்லன்னு தெரியலை எங்களுக்கு…” என தணிகைவேலும்,
“இப்ப வரைக்கும் அந்த ஒத்த படத்தை வச்சு உன்னை உசுரா நினைச்சு வாழ்ந்துட்டு இருக்கான் என் மகன். குடும்பத்துக்குள்ள நடக்கற பிரச்சனையால அவனை தனியாவே நிக்க விட்டுடாதம்மா. உன்னை கெஞ்சி கேட்டுக்கறேன்…” என்ற புவனா,
“நீங்களும் மனசு வைங்க. நாங்க வேணும்னா விலகி இருந்துக்கட்டுங்களா? கல்யாணம் முடிச்சு வச்சு தனியா வச்சிருவோம் ரெண்டுபேரையும். அப்போ சரிங்களா? நாங்க கூட ரொம்ப போய் எல்லாம் இருக்கமாட்டோம். அப்பப்ப நல்லதுபொல்லதுக்கு போய் பார்த்துட்டு வந்துருவோம்…” என்றார் நர்மதாவிடம்.
“அக்கா…” என அவரை பிடித்துக்கொண்டு சுகன்யா பரிதவிக்க,
“ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க?…” என்றாள் தீக்ஷா.
“அம்மாடி, அம்மாடி இங்க பாரு…” என்று அவளின் கையை பிடித்துக்கொண்ட புவனா,
“உன்னை வீட்டுல வேண்டாம்ன்னு சொன்னதுல இருந்து நாலு வருஷம், நாலு வருஷம் என் புள்ளை கண் காணா தூரத்துக்கு போய்ட்டான். என் கையால நல்ல நாளுங்கல்ல ஒருவாய் சோறு சாப்பிட முடியாது அவனால. அவனை விட்டுட்டு என்னாலையும். மனசு கிடந்து தவிக்கும். இப்பவும் அவன் இங்க இருக்கான்னா நீ இங்க இருக்கன்ற காரணம் தான்…” என்றார் அவளிடம் மன்றாடும் குரலில்.
“என்னங்க நீங்க? இது என்னங்க பேச்சு? அழாம உட்காருங்க…” என்ற நர்மதா,
“ருதி இவங்களுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வா. தண்ணி வேண்டாம். வேற ஏதாவது. சீக்கிரம்…” என்று மகளை துரிதப்படுத்தியவர்,
“குடிங்க…” என்று தர சுகன்யா அவரின் தலையை நீவி விட புவனாவிற்கு கண்ணில் நீர் வழிந்தது.
மெதுவாய் குடித்து முடிக்கவும் அவரை பார்த்துக்கொண்டிருந்த தீக்ஷாவின் மனதிலும் அத்தனை வேதனை.
“எமோஷனலா பேசி உன்னை கட்டாயப்படுத்தறோம்ன்னு நினைக்காதம்மா. நல்லா யோசிச்சு சொல்லு…” என்றார் தணிகைவேல்.
தீக்ஷா செய்வதறியாமல் அவர்களின் பேச்சுக்களை கேட்டபடி நிற்க, நர்மதா தான் அனைவரையும் திடமாய் பார்த்தார்.
“இங்க பாருங்க. எல்லாரும் பேசினீங்க சரி. ஆனா யாரும் சொல்றதுக்காக யாரும் அவங்க வாழ்க்கையோட முடிவை எடுத்துட முடியாதே. இது என் பொண்ணோட எதிர்காலம். அவ தான் முடிவெடுக்கனும். அதுல நானுமே தலையிடமுடியாது. புரிஞ்சுக்கோங்க…” என்று சொல்லவும் வேறு வழியின்றி கிளம்பிவிட்டனர் ஹரித்திரன் இல்லத்தினர்.
அவர்கள் கிளம்பவும் நர்மதா அதைப்பற்றி எதுவும் பேசுவார் என்று பார்த்தால் இல்லவே இல்லை.
என்ன நினைக்கிறார் என்று எதுவும் பிடிபடவில்லை தீக்ஷாவிற்கு. அன்றைக்கும் ஹரித்திரன் வந்துவிட்டு கிளம்பிய பின்னர் தன்னிடம் அதைப்பற்றி பேசுவார் என்று நினைத்திருக்க அன்றும் எதுவுமில்லை.
“என்னவோ பேசனும்ன்னு சொன்னியே ருதி? இவங்க எல்லாம் வரவும் மறந்துட்ட. என்ன விஷயம் ம்மா…” என்றார் மகளிடம்.
“ஹாங், ஆமாம்மா, பேசனும்…” என தடுமாறியவள்,
“ம்மா…” என தயங்கி பார்த்தாள்.
ஹரித்திரன் குடும்பத்தினர் வராமல் இருந்தாலே இதனை எப்படி தாயிடம் கூற என்று யோசனையில் இருந்தவளுக்கு இப்போது அவர்கள் வந்துவிட்டு சென்றதும் இன்னும் கடினமாக இருந்தது.
“சொல்லு ருதி…” என்றார் மீண்டும் அவர்.
“ம்மா, ஆபீஸ்ல ஆன்சைட் போற மாதிரி இருக்கும்…” என்று ஒருவாறு சொல்லிவிட,
“ஓஹ், சரி. அதனால என்னம்மா? போய்ட்டு வா…” என்றவர்,
“எவ்வளோ நாள்? நாள்கணக்கா இல்லை வருஷமாவா?…” என கேட்டார்.
“ஒன்வீக் தான். ஒரே வாரம். போய்ட்டு வந்திருவோம். இது ஒரு நல்ல வாய்ப்பு. பெர்பாமென்ஸ் நல்லா இருந்தா அடுத்து அங்க போய் வேலை பார்க்கற வாய்ப்பும் கிடைக்கலாம்…” என்றவள்,
“நாம, நாமளுமே அங்க போய்டுவோம் ம்மா. அங்க செட்டிலாகிடுவோம். இங்க எதுவுமே வேண்டாம்…” என்றாள் அவரின் முகம் பாராமல்.
“அதை கிடைக்கும்போது யோசிப்போம் ருதி. சரி இது சந்தோஷமான விஷயம் தானே? போய்ட்டு வா…” என்றார் நர்மதா.
“இங்க பார். உன் விருப்பம் தான். அன்னைக்கு அவர் பேசினது அவரோட பாயின்ட் ஆஃப் வியூ. அவருக்கு தோணினதை வெளிப்படையா பேசியிருக்கார். இப்ப வந்துட்டு போனாங்களே அவங்க குடும்பமும் இன்னைக்கு உணர்ந்துட்டேன்னு வந்து நிக்கறாங்க…”
“அதுதான் ம்மா எனக்கும் புரியலை…”
“தானா புரியட்டும். இப்ப உனக்கு என்ன தோணுதோ அதை செய். நான் சொல்லி செய்யற வயசை எல்லாம் நீ தாண்டியாச்சு ருதி. உன் வாழ்க்கைக்கான பாதையை நீ தான் முடிவு செய்யனும்…” என்றவரை திகைப்புடன் அவள் பார்க்க,
“இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கறதும் வேண்டாம்ன்னு முடிவு பன்றதும் உன்னோட கையில. உன்னோட விருப்பம்…” என்றார் நர்மதா.
“ம்மா, அப்போ நான் போகவா?…” தீக்ஷாவும் புரியாமல் பார்க்க,
“உன் வேலையோ, வழக்கையோ அதுல இருக்கற சூட்சமம், கஷ்டநஷ்டம் எல்லாமே நீ தான் ஹேண்டில் பண்ணனும். அப்போ உனக்கு தான் அதை எப்படி ஹேண்டில் பன்றதுன்றதும் தெரியும். என்கிட்ட வந்தா எனக்கு என்னம்மா தெரியும்?…” என்று தெளிவாய் குழப்பிவிட்டு சென்றார் நர்மதா.
செல்வதா வேண்டாமா என்ற கேள்விக்கு வாழ்வதா வீழ்வதா என்பதற்கான பதிலை தந்துவிட்டு சென்றிருக்கும் தாயின் சாதுர்யம் புரிந்தாலும் பயமாய் இருந்தது.
தான் புரிந்துகொண்டது தானா? இல்லை வேலைக்கு மட்டுமே சொல்கிறாரா என்று நம்பமுடியாமல் தலையை பிய்த்துக்கொள்ளாத குறை தான்.
அந்த குழப்பத்துடனே அந்த நாள் நகர்ந்து மறுநாள் விடிய அலுவலகத்தில் அவர்கள் குழு கிளம்புவதற்கான ஆயத்தம் வேகப்பட்டிருந்தது.
“என்ன ருதி, ஒன்டே டைம் கேட்டிருந்தியாம். ஹரி பாஸ் சொன்னார்…” என்று வினோதா கேட்க,
“அது எப்படி உனக்கு தெரியும்?…” என்றாள் தீக்ஷா கோபத்துடன்.
“ஒருவேளை நீ வரலைனா நம்ம டீம்ல வேற ஒருத்தரை சூஸ் பண்ணனும்ன்னு சொல்லிட்டிருந்தார். அலர்ட்டா இருக்கனும்ல…” என்று சொல்ல,
“பாஸா?…”
“ஆமாமா, பாஸ் தான்…” வினோதாவும் நக்கலாய் சொல்ல,
“இப்ப வந்திடறேன்….” என்று விறுவிறுவென்று ஹரித்திரனை தேடி சென்றாள் தீக்ஷா.
“இப்பத்தான் எனக்கு நிம்மதியா இருக்கு. இப்ப வரைக்கும் ஒருவார்த்தை இவளும் சொல்லலை. அந்த மனுஷன் பொண்டாட்டின்ற ரேஞ்ச்ல அன்னைக்கு பேசிட்டு ஆபீஸ்ல எதுவுமே நடக்காத மாதிரி என்ன ஒரு பில்டப். நல்லா முட்டிக்காங்க…” என்று வினோதா ஆழ்ந்த பெருமூச்சுடன் வேலையில் திரும்பினாள்.
“என்ன பாஸ் நினைச்சிட்டிருக்கீங்க?…” என தீக்ஷா உள்ளே வந்ததும் ஆரம்பிக்க,
“ஓஹ், வந்துட்டீங்களா? உங்களை தான் நினைச்சிட்டிருந்தேன்…” என்றான் ஹரித்திரன்.
“வாட்?…” தீக்ஷா திகைக்க,
“அட என்னம்மா நீங்க? தப்பாவே புரிஞ்சுக்கறது. இன்னைக்கு பதில் சொல்றேன்னு சொல்லியிருந்தீங்களே? அதை சொல்றேன்…” என்றவன் முகத்திலேயே பார்வையை பதித்திருந்தவள்,
“நான் வேண்டாம்ன்னா என் இடத்துக்கு இங்க அடுத்த ஆளை சூஸ் பன்றதுக்கா?…” என்றாள் தீக்ஷாவும்.
அவள் கேட்கும்விதம் என்னவென்று கப்பென்று புரிந்துகொண்டவன் தன் இதழ்களுக்குள் புன்னகையை அடக்கி அடுத்து பேசும்முன்,