“ஆமா, கொஞ்சநேரம் முன்னாடி தானே தெரியும் நாளைக்கு நீங்க எங்களோட வரலைன்னு…” விட்டால் சத்தமாக வெடித்துவிடுவாள் போலிருந்தது அவளின் பேச்சு.
“ஹேய், என்ன இது? இது வேலை விஷயமா…”
“சேர்ந்து தான வந்தோம்? அப்பறம் என்ன?…”
“ஓஹ், அப்போ உனக்கு நான் வரனுமா தீக்ஷா?…” என்றவனின் கேள்வியில் அவள் முறைக்க,
“என்னை மிஸ் பண்ணுவியா நீ? நிஜமா?…” என்றான் விளையாட்டு போல எதிர்பார்ப்புடன்.
“ம்ஹூம், உங்க தலைமைல கூட்டிட்டு வந்துட்டு நீயே போய்க்கோன்னு சொல்றீங்க? அநியாயம். இதுதான் ஒரு ஹெட் பன்ற வேலையா?…” என்று கேட்க இன்னுமே சிரித்தான் ஹரித்திரன்.
“அவங்க எல்லாரும் நம்மளை தான் பார்த்துட்டு இருக்காங்க…”
“ஸோ வாட்? நான் ஒன்னும் பர்சனலா பேசலையே? உங்களோட கடமையை நான் சுட்டி காட்டறேன். இதுல என்ன இருக்கு?…” என பல்லை கடித்தாள்.
“தீக்ஷா இப்ப நான் ரூம்க்கு போகலை. வேற ஒரு ப்ரெண்டை மீட் பண்ண போறேன்…” என தன்மையாய் சொல்ல,
“ஓஹ்…” என்றவள் உடல்மொழி தளர்ந்தது.
“அதனால நீ இவங்களோடவே இருந்து வா…” என்றவன்,
“டைம் ஆகிடுச்சு. கிளம்பறேன்…” என்றவன்,
“தேங்க்ஸ்…” என்றான் கண்ணமர்த்தி அவளிடம் தன் சந்தோஷத்தை தெரிவிப்பதை போல.
ஏன் எதற்கு என தீக்ஷாவும் கேட்கவில்லை. ஹரித்திரனும் கூறவில்லை. ஆனால் இருவரின் மனமுமே அதனை உணர்த்திக்கொண்டது.
“பை…” என்று சொல்லிவிட்டு அவன் புறப்பட தீக்ஷா வினோதாவுடன் சேர்ந்துகொண்டாள்.
“என்னடி சண்டை போட்டியா பாஸ் கூட?…” வினோதா கேட்க,
“இல்லையே, ஏன்? அப்படியா தெரியுது?…” என சாதாரணம் போல தீக்ஷாவும் எதிர்கேள்வி கேட்டாள்.
“சுத்தம், நீ கோவப்படறதும், உன்னை குழந்தையை சமாதானம் செய்யற மாதிரி பாஸ் பேசறதும் எல்லாருக்குமே புரிஞ்சது. என்ன விஷயம்?…” அப்போதும் வினோதா விடவில்லை.
“சண்டை எல்லாம் போடலை. சீரியஸா பேசிட்டிருந்தேன்…”
“அதாம்லே சண்டை…”
“ப்ச், வினோ. நாளைக்கு ஊருக்கு நாம மட்டும் தானே போறோம். பாஸ் வரலை இல்லையா? அதான் கேட்டுட்டு இருந்தேன்…” என்று சொல்ல,
“அதை நீ ஏன் கேட்கிற? நம்ம வேலை முடிஞ்சதுன்னா நாம கிளம்பவேண்டியது தானே?…” என்றதும் தீக்ஷாவிற்கு தலையில் அடித்துக்கொள்ளாத குறை.
“என்ன இப்போ? அவர் வர்ற தைரியத்துல தான நாம எல்லாம் இவ்வளோ தூரம் வந்தோம்? இப்படி பாதிலயே அனுப்பி வைக்காங்களேன்னு தான்….”
“உருட்டுடா உருட்டு, உன் நல்ல மனசுக்கு நீ நல்லா தான் இருப்ப?…” நொந்துபோய் வினோதா கூற,
“என்ன?…” என்றாள் தீக்ஷா.
“மீம் பார்த்தேன் கண்ணு. எப்படி அனுப்பிருக்காங்க பாரேன்…”
“ஓஹ்…”
“அதுவும் இந்த கரெக்ட் டைம்ல…” என்று வினோதா கூறவும், தீக்ஷா யோசனையாய் பார்த்தாள்.
“இதுல அந்த ப்ரபோசல் பொண்ணு எதுவும் பேசறதுக்கு கூட பாஸ் டைம் தரலை போல. மூக்கால அழுதுக்கிட்டு நிக்கிறா…”
“நான் தான் சொன்னேன்ல. நீ நம்பலை வினோ….”
“நீ ஒரு கிளி ஜோஸியம்ன்னு எனக்கு தெரியாம போச்சு பாரேன். சரி என் வாழ்க்கைக்கு ஒரு சதுரமோ, செவ்வகமோ எதையோ ஒன்னை வரைஞ்சு போட்டு பார்த்து சொல்லு….” என்று தன் உள்ளங்கையை நீட்டியவள்,
“பொண்ணு பார்க்க வந்து தனியா பேசனும்ன்றதோட சரி. அடுத்து ஆளை விடு தாயின்னு போய்டறானுங்க. இங்கயே மாப்பிள்ளை அமையுமா? இல்ல வெளியூர் ஜீவன்களுக்கு வாழ்க்கை குடுக்கலாமா? எதாச்சும் ஒரு சீட்டை எடுத்து போடு…” என்று கேலி செய்ய,
“உதை விழும் ராஸ்கல்…” என்று அவளின் முதுகில் அடித்த தீக்ஷா அதன்பின் வினோவுடன் கலகலப்பாய் இருந்தாலும் உற்சாகம் என்னவோ குறைவு தான்.
இரவு அறைக்கு வந்த பின்னரும் ஹரித்திரன் இன்னும் அறைக்கு வரவில்லை என்று குணால் சொல்லியிருக்க தீக்ஷாவிற்கு தான் தவிப்பாக இருந்தது.
வேண்டாம் வேண்டாம் என்று விலகினாலும் என்னவோ அங்கிருந்து அவனை மட்டும் விட்டுவிட்டு கிளம்பி செல்ல மனம் விரும்பவில்லை.
இருதலைகொள்ளி எறும்பென தவித்துக்கொண்டிருந்தாள் தீக்ஷா. நீருபூத்த நெருப்பாய் மனதினுள் அவன் வீட்டினர் மீதான கோபம் இன்னும் உள்ளுக்குள் கனன்றுகொண்டு தான் இருக்கிறது.
தள்ளி இருக்கையில் அதன் வெம்மை சற்று குறைவு தான். ஆனால் அந்த வீட்டினுள் தான் நுழைந்தால் தான், தன் தாய், தங்கை என நினைக்கையில் அவன் மீதான காதல் பின்னுக்கு சென்று பாசம் அவளை கட்டி வைக்கிறது.
இதற்காகவே அவனிடம் பேசுவதை அறவே வெறுத்திருந்தாள். பேசினால் எங்கே தான் உடைந்துவிடுவோமோ என்னும் பயம்.
அதுவும் அவனின் ஆசைகள் அவளுள் ஏற்படுத்தி இருந்த பாதிப்பில் இன்னும் மீளவில்லை.
‘ஏன் எனக்கு மட்டும் ஆசை இல்லையா? எதிர்பார்ப்பு இல்லையா?’ நினைக்கையில் நெஞ்சம் விம்மியது.
அதைவிட அவன் அந்த நான்குவருடங்களை எப்படி கழித்தான் என அறிந்திருந்தவளுக்கு தன்னுடைய மறுப்பும், அவன் அமைதியும், இப்போது தங்களுடன் வராததன் காரணமும் என மாற்றி மாற்றி ஆட்டிப்படைத்தது.
உள்ளுக்குள் ஒரு பயம். மீண்டும் அவன் அங்கே வர மறுத்து இங்கிருந்துவிடுவானோ என்றொரு எண்ணம் வேறு லேசாய் தலைதூக்கி அவளை உறக்கமிழக்க செய்திருந்தது.
காலை எழுந்ததில் இருந்து வினோதா அத்தனை பரபரப்பாய் அனைத்தையும் எடுத்து வைத்திருக்க தீக்ஷா சிலையாய் அமர்ந்திருந்தாள்.
“இன்னும் எவ்வளோ நேரம் வெய்ட் பண்ண ருதி? கீழ கார் வந்திரும். ஏர்போர்ட் போகவேண்டாமா?…” என மீண்டும் எல்லாம் எடுத்தாகிற்றா என சரி பார்த்துக்கொண்டே கேட்க,
“ஹாங், போகனும்….” என்று கண்ணீரை அடக்கிக்கொண்டு எடுக்க மீண்டும் வெளியே வைக்க என்றிருக்க வினோதாவிற்கு அவள் ஹரித்திரனை தான் தேடுகிறாள் என புரிந்தது.
“நீ ரெடியா இரு. வந்திடறேன்…” என வெளியே சென்றவள் குணாலிடம் பேசிக்கொண்டிருந்த ஹரித்திரனை அழைத்தாள்.
“என்னாச்சு, டைம் போகுது வினோதா?…” என்றான் அவன்.
“அது எனக்கு தெரியுது. ஆனா அவ அங்க கண்ணீரும் கம்பலையுமா மூக்கை உறிஞ்சிட்டு இருக்கா பாஸ். நான் என்ன பண்ணட்டும்?…”
“வாட்?…”
“உங்க பியான்ஸிக்கு ஊருக்கு வர இஷ்டம் இல்லையாம். அதை சொல்லவும் விருப்பம் இல்லையாம். நான் இங்கயே இருக்கேன். நீங்க போய் மண்டையில தட்டி தெளியவச்சு அனுப்புங்க…” என்றவளை பார்த்தவன் பக்கென்று சிரித்துவிட,
“ஹ்ம்ம், என் நிலைமை அப்படி…” என புலம்பிய வினோதாவை தாண்டிக்கொண்டு தீக்ஷாவை தேடி சென்றான் அவன்.
கதவை இருமுறை தட்டிவிட்டு உள்ளே செல்ல தீக்ஷா அவனை கவனிக்கவில்லை.
“வந்திடறேன் வினோ, நீ போறதுனா போ. ஏன் ப்ளைட் மிஸ்ஸானா அடுத்த பிளைட் பிடிச்சு வந்துட்டு போறேன். விடேன்…” என்றாள் அழுகையை அடக்கிக்கொண்டு மூக்கை உறிஞ்சியபடி.
அவனின் பேச்சின் ஆரம்பத்திலேயே சட்டென அவள் திரும்பிவிட அவன் முடித்ததில் கண்ணீர் உடைப்பெடுத்து விட்டது கண்களில்.
“போக விருப்பம் இல்லையா?…” என கேட்டபடி அவளை நெருங்க அவனின் நெருக்கத்தில் பின்னால் நகர்ந்தாள் தீக்ஷா.
“ஏன் விலகி போற தீக்ஷா? நில்லு….” என அவளின் கை பிடித்து நிறுத்த முயல பட்டென்று விலகினாள் அவனிடமிருந்து.
“ஓகே, ஓகே. நான் ஏற்கனவே சொன்னது தான். தப்புக்கு தண்டனை உண்டு. எனக்கு குடு. அனுபவிக்க காத்துக்கிட்டு இருக்கேன்…” என சொல்லியும் அவனை வெறித்து பார்த்தவள்,
“தயார்ன்னு சொன்ன பின்னாடியும் டவுட்டா? ஓகே, கல்யாணம் பண்ணிக்கிட்டு செய். சும்மா இந்த வார்த்தை மிரட்டல் வேண்டாம். வாழ்க்கைல மிரட்டு. இப்ப கிளம்பு…” என்று சொல்லி தன் கை கடிகாரம் பார்த்தான்.
“நம்மளால வந்திருக்கறவங்க கஷ்டப்படக்கூடாது பாரு…” என்றதும் முகம் கன்ற கிளம்பியவள், எல்லாவற்றையும் பரபரவென எடுத்துவைத்து அறையின் வாசலுக்கு சென்று அவனை கண்ணீர் ததும்ப திரும்பி பார்த்தாள்.
என்னவோ மனது அத்தனை அடம் பிடித்தது. கோபம் கொண்டது. ஆத்திரத்தில் அவனை அடித்து கன்னத்தை காயப்படுத்தும் ஆவேசம் மூண்டது.
விரல்களை மடக்கிக்கொண்டவள் மனது படும்பாடு விழிகளில் பிரதிபலிக்க அவளின் முன் சென்று நின்றவன்,
“வா…” என்றான் தன் கைகளை விரித்து.
அத்தனை நாட்கள் பேசியதும், அவ்வளவு மன்னிப்பு செய்யாத அந்த விஷயத்தை அவனின் அழைப்பும், ஹரித்திரன் விழியிலிருந்து உருண்டு விழுந்த ஒற்றை துளியும் நிகழ்த்திவிட்டது.
சென்னையில் அதற்கு நேர்மாறாய் சுகன்யா கமலனை அர்த்தராத்திரியில் அலற வைத்திருந்தில் குளிர்ஜுரம் கண்டுவிட்டார் கமலன்.