“சொல்ல முடியலைல. உன் தம்பிக்காக அவனோட வாழ்க்கைக்காக உன் மாமியார் வீட்டுல ஒருவார்த்தை கூட உன்னால எதிர்த்து கேட்க முடியலை. ஆனா உனக்காக அவன் அவனோட எதிர்காலத்தை பாழாக்கிக்கனுமா? என்னம்மா நியாயம்?…” என்றார் மகளிடம்.
“அப்பா…” கங்கா வாயடைத்து நின்றாள்.
“சரி, உன் தம்பி அந்த பொண்ணை தான் கட்டுவேன்னு சொன்னா உன் மாமியார், அதான் என் அக்கா அதுக்கு எவ்வளோ நகை, பணம் வேணும்ன்னு கேட்பாங்க? அதை குடுத்துட்டா பிரச்சனை பண்ணமாட்டீங்க இல்ல?…” என நம்பி கேட்க,
“என்ன நம்பி, பேச்செல்லாம் ஒரு மாதிரியா இருக்கு?…” என்றார் கமலன்.
“பார்த்துக்கோ கங்கா. இப்பவும் நீ எடுக்கற முடிவு தான். நீ என்ன செய்ய போற?…” என்று நம்பி மகளிடம் தான் பேசினார்.
“அப்பா நான் ரெண்டு பிள்ளைங்களை பெத்து வச்சிருக்கேன். அவங்களுக்கு அவங்க குடும்பம் வேணும். அப்பா வேணும். என் பிள்ளைங்க எதிர்காலம் எல்லாம் யோசிக்கவேண்டாமா? என் அத்தை சொல்றதை கேளுங்களேன்…” என அப்போதும் கங்கா பேச அவ்விடத்தில் மொத்தமாய் உடைந்தார் நம்பி.
“ஏம்மா, இப்ப தான் வளர்ந்து வர்ற குருத்துங்க உன் பிள்ளைங்க. பெத்தவளா உனக்கு உன் பிள்ளைங்க எதிர்காலம் எவ்வளோ முக்கியம்ன்னு படுது. அதுமாதிரி தானம்மா எங்களுக்கும் எங்க பையனும் குடும்பமா இருக்கனும்ன்னு ஆசை இருக்கும்…” என்றவர் புவனாவை திரும்பி பார்த்தார்.
“புவி இப்ப நான் பேசறதுக்கு நீ என்னை தப்பா நினைச்சாலும் பரவாயில்லை…” என்று சொல்லிய நம்பி,
“இங்க பாரு கங்கா. என் மகன் அவன் விருப்பப்படி தான் கல்யாணம் செய்வான். அவன் காதலிச்சு கல்யாணம் பண்ண போறான். என்னையே கூப்பிடுவானான்னு தெரியலை. கூப்பிட்டா போய் நிக்க போறேன். இல்லையா சந்தோஷமா இருய்யான்னு மனசார வாழ்த்த போறேன்…” என்றவர்,
“இதுக்காக உன் மாமியாரும், புருஷனும் உன்னை வெளில அனுப்பினாங்கன்னா தாராளமா வந்திடு நீ. அப்படி ஒன்னும் அங்க வாழ்ந்து கிழிக்க போறது ஒண்ணுமில்லை. அதுக்கு இங்கயே நிம்மதியா இருப்ப. நாங்களும் நிம்மதியா இருப்போம்….” என்று ஒரே போடாக போட்டுவிட்டார் நம்பி.
“அப்பா…” கங்கா அலற,
“உண்மைய தான் சொல்றேன். உன் வீட்டுல இருந்து ஒவ்வொருவாட்டியும் என்னத்தையாச்சும் சொல்லி மிரட்டிட்டே இருந்து நான் சரின்னுட்டே போக முடியாது. உன்னை பெத்ததுக்காக நாங்க கஷ்டப்படலாம்….” என்றவர்,
“கூட பிறந்தவன் வாழ்க்கையே போனாலும் பரவாயில்லைன்னு நினைக்கிற உன்ன மாதிரி சுயநல அக்காவுக்கு எல்லாம் அவன் அவனோட எதிர்காலத்தை தொலைக்க நான் அனுமதிக்கமுடியாது…” என்றுவிட்டார் நம்பி.
அதன்பின் அத்தனை சண்டைகள் பார்வதி எகிற, கமலன் குதிக்க சந்தனநம்பி அசரவே இல்லை.
உறவே வேண்டாம் என்று சொல்லியதற்கும் கூட பெரிதாய் எந்தவித உணர்வையும் காண்பிக்கவில்லை அவர்.
சுகன்யாவும், புவனாவும் தான் இவரா என்று அதிர்வு குறையாமல் பார்த்தனர் நம்பியை.
“எப்படி அவனுக்கு அவளை கல்யாணம் பன்றன்னு பார்த்துடறேன் நானும். நான் பேசற பேச்சுல அந்த குடும்பம் தானா ஓடனும்…” என்றுவேறு கமலன் கொந்தளித்துவிட்டு செல்ல,
“என்ன சுகா?…” என்று பயந்தார் புவனா.
செய்யக்கூடியவர் தான் கமலன். வீம்புக்கென்றே போய் தகராறு செய்து தீக்ஷாவின் வீட்டில் மீண்டும் அவர்களை காயப்படுத்தும்படி நடந்துகொள்வாரோ என்று அஞ்சினார்.
“ஒன்னும் பதட்டப்படாதீங்க. நான் எதுக்கு இருக்கேன். இவங்களுக்கு எல்லாம் சொல்லி புரியவைச்சோ, அடிச்சு தெளியவச்சோ ஆகற கதையே கிடையாது. கல்யாணம் வரைக்கும் இந்த பக்கமே வராம பார்த்துக்கறேன். இவர் அடங்கினா அந்தம்மாவும் கம்முன்னு இருக்கும். என் புருஷன் இருக்கற திமிர்ல தான் அதுவும் தைய தக்கன்னு ஆடிட்டு இருக்கு…” என்று சொல்லி சென்றிருந்தார் சுகன்யா.
இத்தனை பேச்சுவார்த்தையிலும் சுகன்யாவும் அங்கே சென்றுவந்ததை பற்றி நம்பியும், புவனாவும் மூச்சு கூட விடவில்லை.
இல்லையென்றால் கூடுதல் பிரச்சனை என்று வாயை திவறவாமல் இருந்தனர் இருவரும்.
பார்வதி கங்காவை வராதே என்று சொல்லி அங்கேயே இருக்க வைத்து நம்பியை பார்க்க விட்டு சென்றால் செல் என்பதை போல தான் நம்பி நின்றார்.
“இங்க பாருக்கா, இப்ப கங்கா உன் மருமக. உன் வீட்டு மக. கூட்டிட்டு போ. பின்னாடி பார்த்துக்கலாம். எரியறத பிடுங்கினா கொதிக்கிறது அடங்கும். அப்பறம் நம்மக்கிட்ட தான் வரனும் அக்கா, தம்பின்னு…” என்று இளக்காரமாய் பேசி சென்றிருந்தார் கமலன்.
இவ்வளவு கலவரம் நடந்த பின்னர் அவர்கள் எங்கே இருக்கின்றனர் என்று விசாரிக்க முயன்றார்.
நம்பி பேசியதில் இருந்து சென்னையில் உள்ளனர் என்பது மட்டுமே தெரிந்தது. அதுவேறு கமலனை கொதிக்க செய்தது.
“கமுக்கமா அந்த பொண்ணை கண்டுபிடிச்சு பழகிட்டு இருக்கான்னா இவனுக்கு எவ்வளோ துணிச்சல் பாரேன். அடக்கறேன் இரு….” என்று ஒருபக்கம் கொந்தளித்தார்.
என்ன செய்வது என்று மகன் குமரன் கேட்டதற்கும் சுகன்யா மூச்சு விடவில்லை.
“நான் பார்த்துப்பேன்டா, விடேன்…” என்று தான் சொல்லிக்கொண்டார் சுகன்யா.
சொல்லியபடி கமலனை ஒரு காட்டு காட்ட ஆணவம் பிடித்தவர் அடிவாங்கியதை கூட ஒப்புக்கொள்ள மனமில்லாமல் சமாளிக்க சுகன்யாவிற்கு பொடுபொடுவென்று வந்தது.
“நான் எம்புட்டு நேரமா கேட்டுட்டு இருக்கேன். நீ என்னத்த யோசிக்கிற?…” என்று கமலன் சொல்ல,
“யோசிக்கலைங்க. உங்க காதை பார்க்கறேன்…” என்று ஐஸ் வைத்தவர்,
“எல்லாரும் சேர்ந்து ஹரியை விட்டுட்டோம்ன்னு புலம்பினாங்க. அவங்க இருந்தப்பவே அப்பவே யோசிச்சு இவ்வளோ வளரவிடாம பேசி முடிச்சிருந்தா இன்னும் இருந்திருப்பேன்னு சொன்னாங்க…”
“அப்படின்னா வந்து, இப்ப என்ன நான் சொல்றது? ஆங் இந்த பக்கம் காதை காமிங்க. ஒரு பக்கமாவே வச்சு ப்லோவ்ல உளறிட்டேன்…” என்று நிஜமாகவே உளற,
“என்ன? உளறிட்டியா?…”
“ஆமாங்க…” என்றவர்,
“ஒருவயசுக்கு மேல வாழ்க்கைல ஒரு ஞானோதயம் வரும்ல. அது மேலோகம் போய் உங்கம்மாவுக்கு கிடைச்சிருக்கு. அதுதான் மன்னிப்போம் மறப்போம்ன்னு ஒளிவட்டம் தெரிய பேசறாங்க…” என்றவர் கமலன் முகத்தில் நம்பும் பாவனை தெரிகிறதா என்று பார்த்தார்.
“எங்கம்மாவுக்கு அப்பப்ப இந்தமாதிரி கிறுக்கு உசுரோட இருந்தப்பவும் புடிக்கத்தான் செய்யும். இப்ப என் நொண்ணன் பேசறான்ல அப்படி அதுவும் அப்பப்ப பேசும்…” என கூற,
“ஒருவேளை உங்கண்ணனுக்கும் அவர் கனவுல நாலு வப்பு வச்சு புத்தி சொல்லிருப்பாங்களோ உங்கம்மா…” என்ற சுகன்யா,
“ஸ்ஸ்ஸ்யம்மா, என்னா அடி? உசுரோட இருந்தப்ப கூட அடிச்சதில்ல. எரியுது…” என்று தன் கன்னத்தையும் தொட்டு பார்த்தவர்,
“என்னமோ பண்ணிட்டு போகட்டும் நாம என்ன கல்யாணத்துக்கு போக போறோமா? விடுங்க…” என்றார் பேச்சு வார்த்தையில்,
“அதெப்படி விட? பட்ட அவமானம் கொஞ்சமா என்ன?…” கமலன் மீண்டும் முதலில் இருந்து தொடங்க,
“என்னமோ நாமளா அந்த பொண்ணு வீட்டுக்கு போய் நிக்க போறோம். உங்கண்ணனே உங்களை வேண்டாம்ன்னு சொல்லிட்டார். அப்பறம் என்ன? நாமளும் நாம உண்டு நம்ம குடும்பம் உண்டுன்னு இருப்போம்…” என்று பேசி பேசியே கமலனை திசை திருப்பி இருந்தார் சுகன்யா.
“யப்பா எனக்கு உயிர் போய் உயிர் வருது. அவங்கம்மாவை சொல்லி சொல்லியே பயங்காட்டி ஆஃப் பண்ணி, அப்பப்ப ஆன் பண்ணி என் ஜீவன்ல பாதி போயிரும் போல…” என்று ஹரிணியிடம் தான் அவ்வப்போது புலம்புவார்.
இதில் ஹரித்திரன் வந்ததும் திருமணம் பற்றிய பேச்சு ஆரம்பிக்க சந்தனநம்பி சொல்லியதை போல தான் அவனின் திருமணம் என்றும் முடிவாகி இருந்தது.
பார்வதி அதற்கு ஒருமூச்சு ஆடி தீர்த்தார் கமலனிடம் வந்து. ஏற்கனவே வெறுப்பில் இருந்தவர் அக்கா என்றும் பாராமல் பார்வதியை வேறு பேசிவிட்டார்.
“சும்மா தொணதொணன்னு. அவன் தான் மதிக்கலைல. என்னவும் செஞ்சு தொலைச்சிட்டு போகட்டும். உன் வேலையை பாரு…” என்பது வரை பேசியவர்,
“அந்த கல்யாணம் நடக்கவும் கூடாதாம். அதேநேரம் இவ மருமக நாத்தனார் முடிச்சு போட கூப்பிடலை, அவமானப்படுத்திட்டாங்கன்னு குதிப்பாளாம். வந்துட்டா…” என்று கொந்தளிக்க,
“உங்கம்மாவும் கனவுல வந்து என் பேரனை விட்டுட்டீங்கன்னு புலம்பினாங்க…” சுகன்யா பழைய பல்லவியை பாட,
“அதுக்கு என்னை அங்க போய் நிக்க சொல்றியா?…” என்று சுகன்யா பக்கம் கத்தி திரும்பிவிட்டது.
“அய்யய்யோ, நீங்க வேற? அவ்வளோ ரோஷமா நீயுமாச்சு உன் மகன் கல்யாணமும் ஆச்சுன்னு சொல்லிட்டு நாம அங்க போனா நம்மளை மதிப்பாங்களா?…” என்று சொல்ல,
“அப்பறம் என்ன அம்மா சொன்னாங்க, ஆட்டிக்குட்டி சொன்னாங்கனு?…”
“அம்மா எல்லாம் சும்மா இல்லங்க….” என ஒரு ப்ளோவில் பாடியே காண்பித்தவர்,
“அப்படின்னு சொல்லவந்தேன். அவங்களுக்கு மனசு ஆறாது. எல்லாரும் ஒண்ணா இருக்கனும்ன்னு நினைக்கிறது தான தாய் மனசு. என்னமோ பண்ணட்டும். பிரச்சனை எல்லாம் பண்ணவேண்டாம். நமக்கென? நாமளா போக போறோம், வர போறோம்…”
“நான் எப்ப பிரச்சனை பண்ண போறேன்னு சொன்னேன்?…” கமலன் அதற்கும் எரிந்துவிழ,
“இல்லையா? உங்க நல்ல மனசு யாருக்கு தெரியுது? வேண்டாம்ங்க, விட்டுடுங்க. இனிமே அந்த குடும்பம் சங்காத்தமே வேண்டாம். பார்த்தாலும் பாக்காதமாதிரியே போயிருவோம்….” என்ற சுகன்யா சத்தமின்றி ஹரித்திரன் தீக்ஷா திருமணத்தில் கலந்துகொள்ள, அதனை கேள்விப்பட்ட கமலன் கோபத்துடன் கிளம்பி வர திருஷ்டி பூசணி கமலன் மேல்.
“வாய திறந்தா மணிமணியா பேசுவாரு எம்புருஷன். யார் கண்ணு பட்டுச்சோ? இப்படி பல்லு உடைஞ்சு வாய்ல கட்டு போட்டு பேசமாட்டாம இருக்கார்…” என்று மருத்துவமனையில் கமலன் முன் ஒப்பாரி வைத்ததோடு நில்லாமல்,
“சாபம் குடுக்கற மாதிரி பேசி இப்படி உங்க தம்பியை படுக்க வச்சிட்டீங்களே மதினி? இது உங்களுக்கே நியாயமா?…” என்று கேட்டு பார்வதியை ஓடவிட்டார் சுகன்யா.