ஸ்ரீமதி.. தன் கணவனிடம் மாமியார் கேட்ட.. “ நீங்க லவ் பண்ணி இருக்கிங்க..?” என்ற வார்த்தை மட்டுமே திரும்ப திரும்ப அந்த வார்த்தையையே நினைத்து பார்த்து கொண்டு இருந்தாள்..
அதை யோசித்து கொண்டே தான் அன்றைய தினம் மட்டும் அல்லாது அந்த வாரம் சென்றது..கணவன் தன்னிடம் சரியாக பேசாததிற்க்கும், நடந்து கொள்ளாததிற்க்கும் கணவனுக்கு திருமணத்திற்க்கு முன் காதல் இருந்து இருக்க கூடுமா..?
எப்போதும் கணவன் தன்னிடம் சரியாக நடந்து கொள்ளாததிற்க்கு ஏதேதோ யோசித்து கொண்டு இருந்தவளுக்கு.. இப்போது புதுவகையாக காதல் இருந்து இருக்க கூடுமோ..
இந்த வகையான யோசனை அவளுக்கு துளிக்கூட பிடிக்கவில்லை. சீ அப்படி எல்லாம் இருந்து இருக்காது..
காதலித்து இருந்தால், கண்டிப்பாக அந்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ளும் தைரியம் கணவனுக்கு இருக்கிறது..
வீட்டு பேச்சு கேட்டு தன் காதலை துறக்கவோ… மறுக்கவோ.. கூடியவர் கிடையாது என்று அது இருக்காது என்ற அவளின் அந்த நிம்மதி எல்லாம் இரண்டு மணி நேரம் மட்டும் தான்..
அடுத்து ஒரு சமயம்.. அந்த பெண் வீட்டில் பிரச்சனை இருந்து.. ஏதோ ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தான் ஆக வேண்டும் என்று நினைத்து தன்னை திருமணம் செய்து இருந்தால்..
ஆனாலுமே.. பால் குடித்து கொண்டு இருந்த குழந்தையின் தலையை தடவி விட்டவள்.. தன்னிடம் சரியாக பேசுவது இல்லை தான்.
ஆனாலுமே அது போலான சமயங்களில் ஆசையாக தானே தன்னிடம் நடந்து கொள்கிறான்.. நினைத்த அந்த நொடியே.. எங்கோ எப்போதோ படித்த நியாபகம். ஆண்களுக்கு விளக்கு அணைத்து விட்டால், எல்லா பெண்களுமே ஒன்று தான் என்பது..
கதையை டைப் செய்து கொண்டு இருந்தவள்.. கதை மாந்தார்களின் நிகழ்வுகளை கொண்டு வர முயற்ச்சிக்கும் வேளயில் எல்லாம் கணவனின் மீதான அந்த சந்தேகம் வந்து விட.
அது கொடுத்த தாக்கத்தில் “நோ..” என்று கத்தி விட்டாள்.. கணவனின் இது போலான யோசனையில் கணவன் தங்கள் அறைக்குள் வந்ததையோ.. சட்டையை கழட்டி அதற்க்கு உண்டான இடத்தில் மாட்டி கொண்டு இருந்தவன் மனைவியின் இந்த கத்தலில்..
அதுவும் தான் அறைக்குள் நுழைந்தும் தன்னை கவனியாது லேப் டாப்பில் கையும்.. யோசனை எங்கோ வைத்து கொண்டு அமர்ந்து இருந்தவளை யோசனையுடன் பார்த்து கொண்டே தான் அறைக்குள் வந்தது..
எப்போதும் தான் வரும் போது எதுவும் செய்யாது கட்டிலில் கண் மூடி படுத்து கொண்டு இருப்பாளே தவிர.. தூங்க கூட மாட்டாள்..
ஆனால் லேப் டாப்பில் ஏதோ செய்கிறாள் என்ற அளவில் மட்டும் தான் குருபவனுக்கு தெரியும்.. சினிமா சீரியல் பார்ப்பாள் என்ற எண்ணம் அவனுக்கு..
என்ன எதோ டைப் செய்வது போல் இருக்கு. என்று அந்த லேப் டாப்பை பார்த்து கொண்டே தான் சட்டையை கழட்டும் போது..
இன்னுமே தன்னை கவனியாது யோசனையில் இருந்த மனைவியிடம்..
“சாப்பாடு எடுத்து வை.” என்றது.
தன் பேச்சுக்கு சிறிது நேரம் பதில் இல்லாது பின் நோ என்ற இந்த கத்தல் இதை எதில் எடுத்து கொள்வது என்பது குருபவனுக்கு புரியவில்லை..
“சாப்பாடு எடுத்து வைக்க மாட்டியா.ஏன்..?” என்ற கணவனின் குரலில் தான் ஸ்ரீமதி தன் யோசனையில் இருந்தே வெளியில் வந்ததும்..அதுவும் யோசனையின் முடிவில் சத்தமாக கத்தியும் விட்டோம் என்றும் புரிந்தது..
இந்த ஒரு வாரமாக தளத்தில் ஒரு அத்தியாயத்தை கூட பதிவு இடமுடியவில்லை.. சரி இன்றாவது சின்ன அத்தியாயமாவது கொடுக்கலாம் என்று நினைத்து தான் கதையை சிந்திக்க.. பாவம் அவள் சிந்தனை முழுவதுமே கணவனாக போனதில் ஒரு எழுத்தும் டைப் செய்யவில்லை..
அதே போல் கணவன் வரும் முன் எழுதுவதை எழுதி லேப் டாப்பை ஷட்டவுன் செய்து விடுபவள் இன்று கணவன் வருவது கூட தெரியாது இருந்ததோடு மனதில் நினைத்ததை வெளியில் கேட்கும் படி கத்தியும் இருக்கிறோமே..
அதுவும் அவன் பேச்சின் மூலம் கணவன் தன்னிடம் சாப்பாடு போடு என்று சொல்லி இருக்கான் போலவே. தன் கேள்விக்கு எதுவும் சொல்லாது தன்னையே பேந்த பேந்த முழித்து கொண்டு இருந்தவளின் செயல் குருபவனுக்கு வித்தியாசமாக காணப்பட்டது..
அய்யோ நான் லேப் டாப்பில் என்ன செய்கிறேன் என்று கேட்க போகிறான் என்ற நினைவில் சட்டென்று பதறி போய் அதை முறையாக ஷட்டவுன் கூட செய்யாது மூடி விட. அந்த இடைப்பட்ட நேரத்தில் ஏதோ ஒரு சைட்..கதை படிக்கிறாளா.? என்று நினைத்தவன். அதை கேட்க.
உடனே. “ஆமா ஆமா.” என்று தலையாட்டி விட்டாள்.
“கதை படித்தா எமோஷனல் ஆகி நோ என்று கத்தின.” என்று கேட்க.
நீ தெய்வம் என்பது போல் கணவனை பார்த்த ஸ்ரீமதி.. அதற்க்கும் ஆமாம் என்று விட்டவள்.. விட்டால் போதும் என்று அவனுக்கு உணவை எடுத்து வைக்க அறையை விட்டு ஓடி விட்டாள்..
அவளையும் அவளின் செயல்களையும் ஒரு மாதிரியாக பார்த்து கொண்டே தான் குருபவன் தன்னை சுத்தப்படுத்தி கொண்டவன் சாப்பிட வந்து அமர்ந்தது..
அங்கு அவனுக்கு முன் தீபக் அமர்ந்து இருக்க.. ஸ்ரீமதி தீபக் முன்னும் ஒரு தட்டை வைத்து அவனுக்கும் சேர்த்து தான் உணவை பரிமாறியது.
இது போல் தீபக் திருமணத்திற்க்கு முன்னும் ஸ்ரீமதி அவளின் மாமியார் இல்லாத சமயங்களில் மச்சினருக்கு உணவை பரி மாறி இருக்கிறாள் தான்..
ஆனால் இந்த இடைப்பட்ட நாட்களில் எப்போதுமே தீபக்கு கவிதா தான் சாப்பாடு போடுவது.. அதுவும் இரவில் நேரம் யார் இருக்கிறார்கள் இல்லை என்பது எல்லாம் இல்லாது தான் அந்நியோன்னியமாக தான் சாப்பிடுவது.. முதல் வாய் ஒருவருக்கு ஒருவர் ஊட்டி கொண்டு என்று இந்த நிகழ்வுகளை பார்த்தவளுக்கு இன்று ஏதோ ஒரு நினைவில் ஏனோ தானோ என்று சாப்பிட்டு விட்டு தன் அறைக்கு சென்ற சென்றே தீபக்கையே பார்த்து கொண்டு இருந்தளை..
குருபவன்.. “மதி மதி என்று எத்தனை தடவை உன்னை கூப்பிடுறது.” என்ற கணவனின் சுல் என்ற பேச்சில் தான் அவள் அவன் முகத்தை பார்த்தாள்..
எப்போதுமே கணவன் முகத்தை வைத்து ஸ்ரீமதியால் இது வரை என்ன நினைக்கிறான் என்று தெரிந்து கொண்டது கிடையாது.. இன்று மட்டும் தெரிந்து விடுமா என்ன..? ஆனால் அவன் முகத்தில் ஏதோ ஒரு மாற்றம்.. அது மட்டும் தான் தெரிந்தது..
சாப்பிட்டால் எப்போதுமே குருபவன் தன் தம்பியோடு தான் சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்வது.. கவிதா சென்றதில் இருந்து தீபக் அவனாக இல்லாத காரணத்தினால், ஸ்ரீமதி தான் கணவனோடு சுத்தம் செய்வது. இன்றும் சுத்தம் செய்து முடித்தும் தன் அறைக்கு ஸ்ரீமதி செல்ல பார்த்தாள்..
குருபவன் எப்போதுமே அவள் அறைக்கு சென்று சிறிது நேரம் கழித்து தான் அவன் அறைக்கு வருவது.. இது அவளின் திருமணம் ஆன புதியதில் இருந்து நடப்பது தான்.
அதனால் கணவனை திரும்பியும் பாராது தான் ஸ்ரீமதி தன் அறையை நோக்கி நடந்தாள், நடந்தவளின் காதில்.
“தூங்கிடாதே..” என்ற வார்த்தை காதில் விழ.. அவள் கண்கள் வணிக சங்கத்தினர் கொடுக்கும் அந்த கேலண்டரில் தான் சென்றது.
இன்றும் கூட பாதுகாப்பான நாள் கிடையாது தான்.. அதாவது குழந்தை உண்டாவதற்க்கு தோதான நாள்.. என்ன இது என்று யோசனையுடன் தங்கள் அறைக்குள் நுழைந்தைவளின் காதில் மீண்டும்.
“அதுக்கு ஏத்தது போல் இன்னைக்கு வாங்கி வந்து விட்டேன்..” என்ற பேச்சு காதில் விழ. இதற்க்கு ஏன்ன எதிர்வினை ஆற்றுவது என்று ஒரு வித சங்கடத்துடன் தான் படுக்கையில் அமர்ந்தது..
இது வரை இது போலான பேச்சுக்கள் இருவருக்கும் இடையே நடைப்பெற்றது கிடையாது.. திருமணம் ஆனதில் இருந்தே குழந்தையை தள்ளி போடுவது பற்றியான பேச்சுக்கள் நடைப்பெற்றது கிடையாது..
உண்மையை சொல்ல போனால். உடனே குழந்தையை பெற்று கொள்ளலாமா..? இல்லை தள்ளிப்பபோடலாமா..? இது போலான பேச்சுக்கள் கூட அவர்களுக்கு இடையே வந்தது கிடையாது.
இயல்பான தாம்பத்தியம்.. அதில் திருமணம் ஆன அடுத்த மாதமே தியா தங்கி விட்டாள்.. அதே போல் தான் தீக்க்ஷா.. இரண்டாவது பிரசவத்திற்க்கு முன் தான் குருபவன்.
“குடும்ப கட்டுப்பாடு நான் செய்து கொள்கிறேன்..” என்று அவன் சொன்னது.
அது என்னவோ தெரியவில்லை.. ஸ்ரீமதிக்கு அதை ஏற்று கொள்ள மனது இல்லை.. உடனே.. “வேண்டாம் நானே செய்து கொள்கிறேன்..” என்று விட்டாள்..
“உன்னால முடியுமா.? தியா இருக்கா. கைக்குழந்தையை வைத்து கொண்டு மேனஜ் செய்து கொள்வாயா.?” என்று கேட்டவனுக்கு முடியும் என்று சொன்னாள். அந்த பேச்சே ஸ்ரீமதிக்கு ஒரு வித சங்கடத்துடன் தான் பேசினாள்..
என்ன இது கணவனிடம் தானே பேசுகிறேன்.. இன்னும் கேட்டால் இது போலான பேச்சுக்கள் கணவனிடம் தானே பேசனும்.. இதுவும் நினைத்து கொண்டாள்.. தங்களுடைய உறவு அது போலான லட்சணத்தில் தான் இருக்கு என்பதையும்..
ஆனால் இரண்டாம் பிரசவத்தின் போது அதிக உதிரப்போக்கால் லோ பி.பியாகிட.
“இப்போ செய்ய முடியாது.” என்று மருத்துவர் சொல்லி விட்டதால், அன்று குடும்பகட்டுப்பாடுஅவளுக்கு செய்யவில்லை..
இப்போது அது தான் பிரச்சனையாக வந்து நிற்கிறது என்று யோசிக்கும் போதே. குருபவன் அவர்கள் அறைக்கு வந்து கதவை அடைப்பதை பார்த்தவளுக்கு ஏதோ மூச்சு முட்டுவது போன்ற உணர்வு..
அவர்களுக்கு திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்து விட்டது தான்.. இரண்டு குழந்தைகளும் வந்து விட்டது..
ஆனால் இன்று ஏனோ புதியதாக.. உடலில் ஒரு பரபரப்பு.. இந்த பரபரப்புக்கு காரணம் கணவனின் அருகாமை கிடைத்து நீண்ட நாட்கள் ஆனதினாலா.. இல்லை இன்று ஒரு தளத்தில் படித்த அதிகப்படியான ரொமான்ஸ் கதையினாலா..? தெரியவில்லை..
ஆனால் குருபவனுக்கு அது போல் ஏதும் இல்லை… எந்த வித தடங்கலும் இல்லாது தடுமாற்றமும் இல்லாது தான் அவளிடம் கூடினான்.. எப்போதும் போல் முடிவில் அவள் கண்களை பார்த்தான்.. அவளுக்கு தான் என்னவோ போல் ஆனாது..
இது இன்று மட்டும் கிடையாது என்றுமே.. அதுவும் அந்த அறையின் இரவு விளக்கே கொஞ்சம் வெளிச்சமாக தான் இருக்கும்..
இங்கு வந்த முதல் நாள் அன்று இரவே.. ஒரு வித கூச்சத்தோடு அன்றைய கூடலின் போது அந்த வெளிச்சம் அவளுக்கு கொடுத்தது… நீண்ட நாட்கள் தாம்பத்தியத்தில் கொஞ்சம் கூச்சம் விடலாம்.. ஆனால் திருமணம் ஆன மூன்றாம் நாளில்.. வெளிச்சத்தில், மிகவும் தயங்கினாள் அன்று…அதுவும் அன்றும் இதே போல் தான் முடிவில் தன் கண்ணை பார்த்தது.
அந்த வெளிச்சத்திலேயே அவனோடு ஒன்ற முடியாது தத்தளித்து கொண்டு இருந்தவளுக்கு முடிவில் கணவனின் இந்த பார்வையில், அவள் அவன் முகத்தை பார்க்காது. கண்களை அங்கும் இங்கும் அலை மோதி கொண்டு இருந்தாள்..
அமைதியான அந்த இரவில் மெல்ல அவன் சொன்ன.. “என்னை பார் மதி..” என்ற அந்த வார்த்தை கூட கணீர் என்றும் ஒரு வித கட்டளையாக அவன் தன்னிடம் சொல்வது போல் தான் அவளுக்கு கேட்டது..
அதோடு அவன் சொன்னது போல் பார்த்தவளின் கண்ணையே பார்த்து கொண்டு இருந்த தன்னிடம்..
“ஏன் பிடிக்கலையா..?” திருமணம் முடிந்த மூன்றாம் நாள் இரவு அது.. பிடிக்கவில்லையா… ?என்று கேட்டதுமே.. அய்யோ.. இவன் என்ன பிடிக்கவில்லையா.. என்று கேட்கிறான்.. என்று நினைத்ததுமே, அவள் முகம் எல்லாம் சிவந்து போய் விட்டது..
அந்த இரவு வெளிச்சத்தில் கணவனுக்கு அவளின் அந்த சிவந்த முகம் நன்கு தெரிந்தது போல்.. அது தானே அவளின் பிரச்சனையும்.
“நீ வெட்கப்படுவதை பார்த்தா வேறு ஏதோ பிடித்து இருக்கா. என்று கேட்கிறேன் என்று நினச்சிட்ட போல. நான் கேட்டது என்னை உனக்கு பிடித்து இருக்கா என்று தான்..?”
இப்படி கேட்டு விட்டு தன்னையே பார்த்து கொண்டு இருந்தவளுக்கு.. விட்டால் போதும் என்று தான் உடனே.. “பிடிக்கும்..” என்று விட்டாள்..
இன்று தோன்றுக்கிறது.. அன்று நாமும் கணவன் கேட்ட கேள்வியை திரும்ப அவனிடம் கேட்டு இருக்க வேண்டும் என்று..
ஆனால் எப்படி கேட்டு இருப்பாள்.. அது தான் அவள் பிடிக்கும் என்று சொன்ன உடனே கணவன் அடுத்து சொன்ன..
“நீ முன் நினைத்ததை கூட ஒரு நாள் கேட்பேன்.” என்று..
தான் என்ன நினைத்தோம் என்று அவள் யோசனை செய்யும் போதே அவள் காதில் சொன்ன அந்த வார்த்தையில் முன் என்னை பார் என்று கணவன் சொன்ன போதும் அவன் முகத்தை பார்க்க தயங்கிய ஸ்ரீமதி அப்போது விடாது அவன் முகத்தை பார்த்தாள். அதிர்ச்சியில் தான்..
இன்றும் அதே போல் தன்னை பார்க்க வைத்து தான் அவன் தன்னிடம் இருந்து விலகினான்.. அது என்ன தான் தன் கண்ணில் பார்ப்பானோ.. அவளுக்கு சுத்தமாக அன்றும் புரியவில்லை.. இதோ இன்றும் புரியவில்லை.
இதோ ஒன்றுக்கு இரண்டு குழந்தை வந்த பின்னும்..
மறு நாள் எப்போதும் போல் தான் விடிந்தது. அதே வேலைகள் என்று .. ஸ்ரீமதிக்கு வேலைகள் என்றால் சமையல் வேலைகள் மட்டும் தான். மேல் வேலைகள் அனைத்திற்க்கும் வேலையாட்கள் வந்து செய்து கொடுத்து விட்டு சென்று விடுவர்..
அன்றும் காபி பின் நிதானமாக காலை உணவை செய்து கொண்டு இருந்த போது சாமூண்டிஸ்வரி ஹாலுக்கு வந்து அமர்ந்தவர்..
தன் முன் அமர்ந்திருந்த கணவனிடம். “தனியா இந்த வீட்டை ராஜங்கம் பண்ணனும் என்று பார்த்தா. அது நடந்து முடிஞ்சிடுச்சி.. இன்னும் ஆட்டம் அதிகமா தான் இருக்கும்..” என்று சொன்னதுமே..
சங்கரன்.. “ஈஸ்வரி சும்மா இருக்க மாட்டே..” என்று ஒரு அதட்டல் போட்டார்..
“ம் இனி நான் சும்மா தானே இருந்து ஆகனும்… வேறு வழி..” அதற்க்கும் கழுத்தை ஒரு இழுப்பு வைத்து சொல்லி கொண்டு இருந்த போது தான் ஸ்ரீமதியின் பெற்றோர் அங்கு வந்தது..
எப்போதுமே ஸ்ரீமதி பெற்றோருக்கு சாமூண்டிஸ்வரியிடம் இருந்து அந்த அளவுக்கு வர வேற்ப்பு கிடைத்தது இல்லை..
“வாங்க..” என்று மட்டுமே.. அந்த வாங்க என்ற அழைப்பு கூட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினுசாக அவரின் மூடை பொறுத்து இருக்கும்..
சாதாரண நாட்களிலேயே சாமூண்டிஸ்வரியின் வரவேற்ப்பு அப்படி எனும் போது..
அதுவும் இன்று வந்ததுமே சாமூண்டிஸ்வரியின் முகத்தை பார்த்து ஏதோ சரியில்லை என்பதை தெரிந்து கொண்டு விட்ட ஸ்ரீமதியின் பெற்றோரான சாமியப்பனும் சாந்தகுமாரியும்..
“சின்ன பெண் பூஜாவுக்கு சீமந்தம் வைத்து இருக்கோம்.. அது தான் முறையா அழைக்க வந்தோம்..” என்று தாங்கள் வந்த விசயத்தை போட்டு உடைத்து விட்டனர்.
பூஜாவின் திருமணம் காதல் மணம்.. படிக்கும் காலத்திலேயே விரும்பி வேலையில் அமர்ந்த பின்.. காதலித்தவனை தான் மணந்து கொள்வேன். என்று அடமாக உண்ணாவிரதம் இருந்து மணந்து கொண்டாள்..
மாப்பிள்ளையும் பெரிய படிப்பு.. சொந்த வீடு என்று.. அதோடு வீட்டுக்கு ஒரே மகன் என்று நல்ல இடம் தான்.. ஸ்ரீமதியின் பெற்றோர்கள் முதலில் காதல் திருமணத்தை மறுத்தாலும்,பின் மகளின் சந்தோஷம் தான் முக்கியம் என்று பூஜா காதலித்த ஷ்யாமுக்கே திருமணம் செய்து கொடுத்து விட்டனர்..
சாமூண்டிஸ்வரி அப்போதே இதை வைத்து ஒரு மாதிரியாக பேசினார். இன்றும் அதை வைத்து மட்டும் பேசாது உங்க வீட்டில் இரண்டு பெண்ணுமே காதல் என்று திரிந்தது தானா. என்ற இந்த கேள்வியில் ஸ்ரீமதி என்ன இது என்று அதிர்ந்து போய் விட்டாள்..