“உனக்கு கூழுக்கும் ஆசை… மீசைக்கும் ஆசை தான் ரகு… அப்போ எனக்கு என்ன என்று போயிட்டு இப்போ எதுக்கு திரும்பி வந்த…?” என்று ஸ்ரீமதி கோபத்துடன் உடன் நடந்து வந்து கொண்டு இருந்த ரகுவரனை திட்டி கொண்டு இருந்த போது தான் வழி மறித்தது போல் வந்து நின்றவனை ஸ்ரீமதி நிமிர்ந்து பார்த்தது..
குருபவனுக்கோ.. இவள் இப்படி பழமொழியோடு எல்லாம் பேசுவாள்.. பேச தெரியும் என்பதே ஐந்து ஆண்டு குடும்பம் நடத்தி.. இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாகிய பின் இப்போது தான் மனைவியின் இது போலான பேச்சை அவன் கேட்டது..
இது போல் எல்லாம் ஒரு நாளாவது இவள் உரிமையுடன் என்னிடம் பேசி இருக்கிறாளா.. ?அது என்ன கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை.. இப்போ இந்த வில்லன் எதுக்கு ஆசைப்படுறான்.. என்று கோபமுடன் நின்றவனிடம் ரகுவரன் கையில் இருந்த குழந்தை தன் தந்தையிடம் தாவியது..
ரகுவரனோ குருபவன் யார் என்று தெரியாததால் குழந்தையை கொடுக்காது குழந்தையில் இந்த தாவலில் கீழே நழுவி விட போகிறாள் என்று இன்னும் கெட்டியாக பிடித்து கொள்ள… அதை குருபவன் கண்டு கொண்டு விட்டான்.
கண்டு கொண்டவனுக்கு அப்படி ஒரு கோபம் என் குழந்தையை தூக்கி வைத்து கொண்டு இருப்பதோடு என்னிடம் தர மாட்டானா.? எல்லாம் இவளை சொல்ல வேண்டும்.. என்று மனைவியை முறைத்து கொண்டே.. ரகுவரன் கையில் இருந்த குழந்தையை வெடுக்கென்று பிடுங்கி கொண்டான்.
ரகுவரன்.. “ஏய் மிஸ்டர்..” என்று ஆரம்பித்த ரகுவரன் வார்த்தை முடிவடைவதற்க்குள் தன்னை தூக்கி கொண்ட தந்தையை.. இத்தனை நாள் பாராது பார்த்தவனின் கன்னத்தில் எச்சி ஒழுக தன் வாயில் முத்தம் இட்டவள்..
“ப்பா.. ப்பா..” என்று அழைத்து தன்னை கொஞ்சிய மழலையின் பேச்சில். குருபவனின் கோபம் குழந்தையின் அந்த முத்தம் சில் என்ற பனி போல் அந்த ஒத்தடத்தில் கோபம் கொஞ்சம் குறைந்து இருந்தது..
ஆனால் அந்த கோபத்தை குறையாது இன்னும் கூட்டுவது போல ரகுவரன்.
“முண்டக்கண்ணி… யார் இவர்.?” என்று அடை பெயர் வைத்து ரகுவரனின் அந்த அழைப்பில் கண்கள் பெரியதாக இருந்த ஸ்ரீமதியின் கண் அளவை விட சாதாரண அளவில் இருக்கும் குருபவனின் கண்கள் தான் முண்டக்கண்ணு அளவுக்கு விரிந்து என்ன டா என்பது போல் பார்த்தான்..
அதற்க்குள் ரவி குருபவன் பக்கம் வந்து விட்டவனின் காதில்.. ரகுவரனின் அந்த அழைப்பு விழுந்ததில் இவனுக்கு கொழுப்பு அதிகம் தான்டா..
ஆனால் இந்த பெண் என்ன பதறாது.. குருபவனை முறைத்து பார்த்து கொண்டு இருக்கு… இந்த நாள் கணவனையும் முன்நாள் காதலனையும் பார்த்தால், சாதாரணமாக ஒரு பண்ணின் முகத்தில் பயமும். பதட்டமும் தானே தெரியும்.. ஆனால் இந்த பெண் கோபப்படுது..
அந்த கோபம் எதனால் என்றும் தெரியும்.. குருபவன் வீட்டில் நடந்த விசயத்தை ரவியிடம் மேலோட்டமாக குருபவன் சொன்னான்..
ரவி கூட. “குரு இது நல்ல சான்ஸ் டா. அம்மா சொன்னது போல நான் உன்னை லவ் பண்ணி தான் மேரஜ் செய்து கொண்டேன்.. என்று சொல்லி விடுடா.. இனி எப்போடா சொல்வ.. இரண்டு குழந்தையும் வந்துடுச்சி… உன் அறுபதாம் கல்யாணத்திற்க்கு சொல்லுவீயா டா.” என்று கூட கோபமாக நண்பனிடம் கேட்டான்.
அதனால் ஸ்ரீமதியின் கோபம் எதனால் என்று புரிந்தது. இருந்தும் இந்த சமயம் இந்த பெண்.. பயப்பட தானே செய்யனும். என்ன இது என்று ஸ்ரீமதியின் முகத்தை ஆராய்ந்தான். அவன் எதிர் பார்த்த எதுவும் ஸ்ரீமதியின் முகத்தில் ரவி காணவில்லை..
ஆனால் இது எல்லாம்.. அதாவது ரவி எதிர் பார்த்த அந்த பதட்டம் பயம்.. என்று அனைத்தும்.. அணணன் எங்கு போகிறான் என்று அமர்ந்து இருந்த இருக்கையில் இருந்து திரும்பி பார்த்த கனகாவின் முகத்தில் ரகுவரனை பார்த்ததும் வந்து ஒட்டி கொண்டது.. அவள் அண்ணன் காரனுக்கு திரும்பி பார்த்தால் தெரிந்து இருக்கும்..
ஆனால் அவன் கவனம் நண்பன்.. அவனின் மனைவி என்று தான் இருந்தது.. ஸ்ரீமதியின் முகம் ரவிக்கு குழப்பத்தை ஏற்படுத்தி விட அமைதியாக இருந்தான். ஏதாவது தவறு நடந்து இருக்குமோ என்று.
ஆனால் குருபவனுக்கு அது எல்லாம் தெரியவில்லை.. கோபம் வந்தால் அறிவு மங்கி போகும் என்பது சரி தான் என்பது போல்.. அவன் என் குழந்தையை என் கிட்ட தர மாட்டேங்குறான்.. என்னையும் யார் என்று கேட்கிறான்.
‘இவன் தான் என் கணவன். என் இரண்டு குழந்தைகளுக்கு அப்பா. நான் நல்லா இருக்கேன்.. என் கணவரை தான் இப்போ நான் காதலிக்கிறேன் என்று சொல்வதற்க்கு என்ன கேடு இவளுக்கு.. அவன் முன்னே என்னை கோபமாக முறைக்கிறா.. அப்போ அவனுக்கு இன்னும் குளிர் விட்டு விடும் தானே..
ஆனால் அது போல எல்லாம் நான் நினைக்க விட்டு விட மாட்டேன் டா. என்று தங்களுக்குள் இருக்கும் பிணக்கை.. முக்கியமாக ரகுவரன் முன் காட்ட கூடாது என்று..
ஸ்ரீமதியின் தோள் மீது கை போட்டு கொண்டவன்..
“என்ன டா.. இவ்வளவு லேட்… நம்ம பசங்க கிளம்ப அடம் பிடிச்சாங்கலா…” என்று என்னவோ ரொமான்ஸ் மன்னன் போல தன்னிடம் பேசும் தோளில் கை போட்டு கொண்டும் தன்னை அவர்கள் குடும்பம் இருக்கும் இடத்திற்க்கு நடத்தி கொண்டு செல்லும் கணவனை ஸ்ரீமதி கோபம் மறைந்து குழப்பத்துடன் பார்த்தாள்.. என்ன இது…? இவன் இப்படி எல்லாம் செய்பவன் கிடையாதே.
திருமணம் ஆன புதியதில் கூட.. வெளி இடங்களில் வெளி இடம் என்றால் வீட்டை விட்டு வெளியில் எல்லாம் கிடையாது..
அவர்கள் வீட்டுக்குள்ளேயே. அவர்கள் அறையில் இருந்த ஹாலில் குருபவன் அமர்ந்து இருந்தால் பக்கத்தில் கூட அமர கூடாது.. அப்படி ஒரு நாள் இவள் அமர்ந்து விட. சட்டென்று அவன் எழுந்து விட்டான்.. அதுவே அவளுக்கு முகத்தில் அடித்தது போல் என்னவோ போல் தான் இருந்தது.
அதன் பின் தங்கள் அறைக்கு வந்ததும்.. நான் என்னவோ ஹாலில் அவன் மடியில் அமர்ந்தது போல்.
“இது கூட்டு குடும்பம்.. அம்மா அப்பா என்று பெரியவங்க இருக்காங்க/. திருமணம் ஆகாத தம்பி இருக்கான்.. கொஞ்சம் பார்த்து நடந்துக்கோ.” என்று அப்படி அத்தனை கதை சொன்னான்..
அவன் தம்பி திருமணம் முடிந்து ஹாலில் ப்ரீ ஷோ காண்பித்தது எல்லாம் அது வேறு விசயம்.. ஆனால் கணவன் அன்று அப்படி சொன்னவன்.. இன்று என்ன ஊரே பார்க்க இப்படி செய்கிறான் என்று குழப்பத்தோடு வந்தவள் முன் அவளின் மாமியார் குடும்பம் அமர்ந்து இருந்தார்கள்…
தன் தங்கை விழாவுக்கு தன் அப்பா அம்மா அழைத்து வந்தவர்களை தான் அழைப்பது தான் மரியாதை என்று.
“வாங்க அத்த.. மாமா.. தீபக்கிடம் ஒரு தலையசைப்பு கொடுத்து விட,..
ஆனால் தன் மாமியார் தன் அழைப்புக்கு தன்னையே முறைத்தப்படி இருப்பதை பார்த்து என்ன இது என்று கவனிக்கும் போது தான் கணவன் தன் தோள் மீது போட்ட கையை எடுக்காது இருக்கிறான் என்பதையே அவள் உணர்ந்தாள்..
அவள் எடுங்க என்பதற்க்குள் நல்ல வேலை குருபவன் சங்க உறுப்பினர் தெரிந்த ஒருவர்..
“குரு சார்..” என்று அழைத்து விட.. தன் கையில் இருந்த குழந்தையை மனைவியிடம் கொடுத்து விட்டு அழைத்தவரை நோக்கி சென்று விட்டான்.. குழந்தையை கொடுக்கும் போது மனைவியை நன்றாக ஈஷிக் கொண்டு தான் கொடுத்தான்..
தூரம் நின்று கொண்டு இருந்த ரகுவின் பார்வை தங்களை பார்த்து இருப்பதை கவனித்து விட்டு..
இவனின் இந்த செயல்.. சின்ன பிள்ளைகள் இது என் அம்மா என் அப்பா என்று மற்ற குழந்தைகள் தன் பெற்றோர்களை நெருங்கும் சமயம் உரிமை காட்டுவார்கள் அது போல் இருந்தது.. இதை ரவியும் கவனித்தான் தான்.. அவன் என்ன இது சின்ன பிள்ளைதனமாக என்று சரியாக கணித்து விட..
ஆனால் இதை பார்த்த குருபவன் அன்னை சாமூண்டிஸ்வரி… “உண்மையை சொன்னா மட்டும் கோபம் வந்து கோச்சிக்கிட்டு அம்மா வீட்டில் உட்கார்ந்துக்க வேண்டியது…”
அவர்களின் இந்த நெருக்கம்.. காதல் திருமணம் என்பது போல் பேசினார்.. அம்மா வீடு அழைத்து வந்தவர்கள் என்று ஒரு மரியாதைக்கு பக்கத்தில் அமர வந்தவள்.. மாமியாரின் இந்த பேச்சில் கோபத்துடன் எழுந்தவள் அமர்ந்த இடம் கனகா பக்கத்தில்..
அவளை இங்கு பார்த்தவள்.. “ஏய் கனகா நீ எப்படி இருக்க… நீ எப்படி இங்கு..” என்று நீண்ட நாள் கழித்து சந்தித்த தோழியை பார்த்து அனைத்தும் மறந்து விசாரித்தாள்.. ஆம் ஸ்ரீமதி உண்மையில் அனைத்தும் மறந்து விட்டால் என்று தான் சொல்ல வேண்டும்..
ஆனால் கனகாவினால் ஸ்ரீமதி போல் மறந்து விட முடியுமா.? என்ன..? அதனால் தோழி கேள்விக்கு பதில் சொல்லாது..
“ஏன்டி அவன் வந்து இருப்பதை என் கிட்ட சொல்லவில்லை.” என்று ஒரு விதமான ஆதங்கத்தில் கேட்டாள்..
ரகுவரன் இந்தியாவிற்க்கு வந்து இருப்பது சொல்லாது போய் விட்டாளே.. அதோடு அவன் இந்த விழாவுக்கு வருவதாக தெரிந்து இருந்தால், அவள் இந்த பக்கம் கூட தலை காட்டி இருக்க மாட்டாளே…
அதோடு இவனை பார்க்காது சென்று விடலாம் என்று நினைக்கும் சமயம். அவள் கணவனிடம் இருந்து பேசியில் அழைப்பு.
அழைத்தவன்.. “கனகா நீ பங்கஷனில் தானே இருக்க. நான் பாப்பாவை ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வர தான் போயிட்டு இருக்கேன்.. நான் நம்ம பாப்பாவை கூட்டிட்டு அப்படியே பங்கஷனுக்கு வந்துடுறேன்..” என்று சொல்லவும்..
“நீங்க ஏங்க வீணா அலச்சல் பட்டுட்டு.. பாப்பா ஸ்கூல் இங்கு இருந்து பக்கம் தானே.. நானே பங்கஷன் முடிந்து பாப்பாவை அழச்சிட்டு வீடு வந்துடுறேன்…”
முன் ரவி நினைத்த முன் நாள் காதலனையும். இந்நாள் கணவனையும் ஒன்றாக பார்த்தால், அந்த காட்சியை அவளாள் நினைத்து கூட பார்க்க முடியவில்லை..
ஆனால் கனகாவுக்கு அன்று நீ பார்த்து தான் ஆக வேண்டும் என்று இருக்கிறது போல.