“குருவோட மச்சினிச்சி கனகா.. அவர் நம்ம சங்ககத்தில் முக்கிய பதவியில் இருக்கார்.. நான் இன்னைக்கு கடைக்கு சரக்கு வந்து இறங்கிடுச்சி நாம கூட இல்லை என்றால் பாத்திரத்தை அப்படியே வீசி எரிவது போல் தான் இறக்குவாங்க. அது தான் கூட இருந்தேன்.. இதோ இங்கு முடிஞ்சிடுச்சி.. நான் வந்துடுறேன்.. நீ அங்கு இருந்து கிளம்பி விடாதே என்று சொல்ல தான் கூப்பிட்டேன்..” என்று சொன்ன கணவனின் பேச்சை மறுக்க முடியாது இருந்த போது தான் ஸ்ரீமதி வந்து அமர்ந்து நலம்… விசாரித்தது..
கனகா.. ரகுவரன் பேச்சை எடுக்கவும் தான்.. அவளுக்கு கனகா ரகு காதல்.. நியாபகத்தில் வந்தது.. ஆனாலுமே ரகு வந்து இருப்பதை ஸ்ரீமதி சொல்லி இருக்க மாட்டாள்… இனி கனகாவுக்கு ரகு யாரோ தான்..
ஆனால் இன்று கனகா இந்த விழாவுக்கு வருவாள் என்று தெரிந்து இருந்தால், இந்த சங்கடத்தை தவிர்த்து இருக்கலாம் என்ற எண்ணம்.. இனி என்ன செய்ய முடியும்..
ரகுவை ஏதாவது காரணம் சொல்லி வீட்டிற்க்கு அனுப்பி விட முடியுமா.. என்று சுற்றி முற்றியும் பார்த்தவள் கண்ணுக்கு அவள் அம்மா தெரிய.
“ம்மா ரகு எங்கேம்மா…?” என்று சத்தமாக தான் கேட்டாள்..
சாந்தகுமாரியும்.. அதே சத்தமான குரலிலேயே… “வாழை இலை எடுத்து வர வீட்டுக்கு போய் இருக்கான்.. நீ ஏன் அங்கு உட்கார்ந்துட்டு இருக்க… போ பூஜாவுக்கு அலங்காரம் முடிஞ்சிடுச்சினா மனைக்கு கூட்டிட்டு வா…” என்று சொல்ல.
இந்த பேச்சு வார்த்தைகளை ரவியும் குருவும் கேட்டு கொண்டு தான் இருந்தனர்..
ரவிக்கு குழப்பம்.. என்ன தான் சின்ன வயதில் இருந்து ரகு பிரண்டாக இருந்து பின் காதலனாக ரகு ஸ்ரீமதிக்கு மாறி இருந்து அது கை கூடாது போய் ..வேறு ஒருவனை திருமணம் செய்த பெண்.. இப்படி அவனிடம் பேச முடியுமா…? தன் அம்மாவிடம் சாதாரணமாக ரகுவை பற்றி கேட்க முடியுமா..?
மீண்டும் ஸ்ரீமதி அன்று ஒட்டலில் பேசியது நியாபகம்.. ஆனால் எந்த இடத்திலும் தான் காதலிப்பதாக ஸ்ரீமதி சொல்லவில்லையே…இப்போது அது உணர்ந்தான்.. ஆனால் தன் தங்கை கனகா சொன்னாளே.. ஸ்ரீமதி காதலனை பார்க்க வந்தது.. ஸ்ரீமதியின் தங்கையும் சொன்னாளே தன் அக்கா ஒருவனை விரும்புகிறாள் என்று…
ஆனால் தன் சகோதரியை விரும்பியவன் வரதட்சணைக்காக திருமணம் செய்யாது வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டவனை.. பூஜா எப்படி அவனோடு பேசி கொண்டு இருக்கிறாள்…
ஆம் ரவி மேடையை பார்க்க. அங்கு மேடையில் பூஜாவை அமர வைத்து இருக்க. பக்கத்தில் ஸ்ரீமதி நின்று கொண்டு இருந்தாள்…வாழை இலை எடுத்து வந்து கொண்டு இருந்த ரகுவை பூஜா மேடைக்கு அழைத்து ஏதோ கேட்டு கொண்டு இருக்கும் காட்சியை தான் ரவியும்.. குருவும் கை கட்டி பார்த்து கொண்டு இருக்கின்றனர்..
ஸ்ரீமதி பெற்றோர்களுக்கு மகளின் காதல் தெரியாது.. ரகுவை வீட்டில் பழக விடுகிறார்கள் என்று வைத்து கொண்டாலும்.. பூஜா ஸ்ரீமதி.. பூஜா போல் ஸ்ரீமதி சிரித்து எல்லாம் பேசவில்லை.. கோபமாக தான் பேசி கொண்டு இருக்கிறாள்.. ஆனாலும் அதுவும் தான் பேச முடியுமா..?
தங்கையிடம் கேட்க வேண்டும் என்று நினைத்து கொண்டான்.. ஆனால் தங்கையிடம் கேட்காதே .. ரவி அன்று ஒட்டலில் கேட்டது யாருடைய காதல் என்று அவள் தங்கை தெரியப்படுத்தி விடுவாள் என்று தெரியவில்லை.. ரவிக்கு மட்டுமா..? குருபவனுக்கும் தான்..
உண்மை தெரிந்து குருபவன் தன் மனைவியிடம் உண்மை சொல்வானா.. அதாவது நீ வேறு ஒருவனை காதலித்ததினால் தான் நான் என் காதலை உன்னிடம் சொல்லவில்லை..
அதிகமாக பேசவில்லை.. அப்படி பேசினால், மனதில் இருப்பதை அனைத்தையும் கணவனிடம் சொல்கிறேன் என்ற பெயரில்.. நீ உன் முன் காதலை உன் வாயில் இருந்து கணவனாக கேட்க எனக்கு விருப்பம் கிடையாது.. அதனால் தான் பேசுவதையே தவிர்த்தேன் என்ற அவனின் மனநிலையை சொல்வானா..? பார்க்கலாம்…
அன்றைய விழாவில் ரகுவரன் தான் சொந்தம் போல.. குருபவன் வேறு யாரோ போல் தான் எட்ட நின்று கொண்டு இருந்து கொண்டான் குருபவன்..
காரணம். குருபவன் தன் மாமனாரிடம். “ஏதாவது செய்யட்டுமா. என்று மூன்று முறை கேட்டதற்க்கு..
“எல்லாம் ரகு பார்த்துக்குறார் மாப்பிள்ளை.” என்று சாமியப்பன் சொல்லி விட்டார்..
அவருக்குமே பூஜா திருமணத்தின் போது குருபவன் ஏதோ வேலை செய்ய சம்மந்தி சாமீண்டிஸ்வரி …
“மகன் இல்லாத வீட்டில் பெண் எடுத்தால், மாப்பிள்ளை எடுப்பிடி வேலை தான் மாமியார் வீட்டில் செய்யனும் போல..” என்று சுருக்கென்று சொல்லி விட்டார்.
அதனால் தான் குருபவன் உதவி கேட்க மறுத்து விட்டார்..
ஆனால் குருபவனுக்கு இன்று மேடைக்கும் சமையல் செய்யும் இடத்திற்க்கும் சாப்பிடும் இடத்தில் அனைத்திலுமே ரகுவரன் நிற்க. அங்கு அவன் அந்நியப்பட்டு நின்று இருந்தான்.
கூடுதல் தகவலாக சாப்பிடும் இடத்தில் ரகுவரனை சுட்டி காட்டி இருவர்கள் பேசி கொண்ட விசயமான…
“ம் நல்ல பையன் தான்.. ஆனா பாருங்க.. அவனுக்கு கல்யாண வாழ்க்கை தான் சரியா அமையாது போயிடுச்சி… விவாகரத்து செய்துட்டு இந்தியா வந்து இருக்கான்.. ரகு அம்மா சொன்னா…” என்ற செய்தி குருபவனின் எரியும் மனதின் நெருப்பில் எண்ணைய் ஊற்றியது போல…
அதுவும் பூஜா ரகுவரனிடம் பாசமாகவும்.. ஸ்ரீமதி கோபமாகவும் ரகுவரனிடம் பேசி கொண்டும்.. தன் மாமனார் மாமியார் ரகுவிடம் உரிமை எடுத்தும் வேலைகள் கொடுத்து கொண்டும் இருந்தனர்..
அந்த விழாவில் அண்ணன் மனநிலை அப்படி இருக்க. தம்பி தீபக்கோ தன் மனைவி இந்த விழாவுக்கு வருவாள்.. இங்கு பேசி சமாதானம் செய்யலாம் என்று ஒரு எண்ணத்ததில் தான் வந்தது..
ஆனால் இந்த விழாவுக்கு கவிதா வராது அவள் தந்தை பேருக்கு என்று அந்த விழாவுக்கு தலையை காட்டி விட்டு..
“ஒரு முக்கியமான வேலை இருக்கு..” என்று சொல்லி சாப்பிடாது கூட சென்று விட்டார்..தீபக்குக்கு அடுத்து தன் வாழ்க்கை என்ன என்பது போல் கேள்வி குறியோடு மேடையில் அமர்ந்திருந்த பூஜாவை பார்த்திருந்த தீபக்குக்கு கவிதா திருமணம் ஆன புதியதில் உடனே குழந்தை பெற்று கொள்ளலாம் என்று அவள் ஆசைப்பட்டது…
தன் கடன்.. அதை வைத்து கொண்டு குழந்தை என்று ஒன்று வருவது தீபக்கிற்க்கு விருப்பம் இல்லை..
தன் கடன் தெரியாத மனைவியிடம் அதை சொல்லவா முடியும்.. அதனால்..
“திருமணம் ஆன உடனே குழந்தை என்று வந்து விட்டால், கணவன் மனைவிக்குள் ஒரு நெருக்கம் இருக்காது கவி.. ஒரு இரண்டு வருஷம் நாம லவ் மட்டும் பண்ணலாம்.. பின் குழந்தை ப்ளான் செய்து கொள்ளக்கலாம். இப்போ அண்ணாவை பார் கல்யாணம் செய்த உடனே குழந்தை வந்துடுச்சி… குழந்தை வந்தும் கூட அவங்க அந்நியோனியம் இல்லாது தான் இப்போ வரை இருக்காங்க.. நாம சொந்தம் என்றாலும், நீ என்ன மேரஜ் செய்து கொள்ள சொன்னாலுமே, நாம கல்யாணத்திற்க்கு முன் லவ் பண்ணல தானே.. அது இப்போ பண்ணலாம்..”
தீபக் அன்று தன் தவறை மறைக்க அண்ணன் வாழ்க்கையை சுட்டி காட்டி குழந்தை பிறப்பை தள்ளி வைத்து விட்டான்..
இன்று நினைக்கிறான்.. குழந்தை இருந்து இருந்தால், குழந்தை தங்களை இணைத்து இருக்குமே என்று…
அம்மா வீட்டிற்க்கு சென்ற மனைவியை பலவிதமாக பேசி சமாதானம் செய்ய முயன்றும் கவிதா அவனிடம் முகம் கொடுத்து பேசவில்லை.. போதாதிற்க்கு இன்று அவனின் மாமா தன்னை கண்டு கொள்ளாது சென்றது.. தீபக்கு வாழ்க்கையின் மீது ஒரு வித பயத்தை கொடுத்தது..
இதோ அண்ணி கூட தான் அண்ணனிடம் கோவித்து கொண்டு அம்மா வீட்டில் இருக்கிறார்கள்.. ஆனால் அண்ணனுக்கு தன்னை போல வாழ்க்கை பற்றிய பயம் அவன் முகத்தில் தெரியவில்லையே…
குழந்தையை தூக்கி வைத்து கொண்டு ரவியிடம் பேசி கொண்டு இருந்த போது தியா அண்ணனிடம் மேடையின் பக்கம் நின்று கை காட்டி ஏதோ சொல்வதும்..
குருபவன் மகள் கை காட்டிய திசையான மேடையை பார்ப்பது.. மேடையில் நின்று கொண்டு இருந்த அண்ணி கை அசைத்து அழைப்பது என்ற இந்த காட்சி தீபக் கண்ணில் பட. இவர்கள் இந்த இணைவுக்கு காரணம் குழந்தை என்று குருபவன் நிலை தெரியாது தீபக் நினைத்து கொண்டான்..
இங்கு குருபவன் நிலை ரவியிடம்… “இந்த இடத்தில் நான் யாரோ போல் இருப்பது ஒரு மாதிரி இருக்குடா…” என்று குழந்தையை மட்டும் வைத்து கொண்டு இருந்தவனிடம் தியா வந்து.
“ப்பா ம்மா உங்களை அங்கு கூப்பிட்டாங்க. சித்திக்கு வளையல் போடனுமாம்…”
மண்டபத்திற்க்கு வந்து ரகுவரன் எதிரில் மனைவியுடன் உரிமை எடுத்து பேசும் போதே.. மத்துனிக்கு என்று வாங்கிய தங்க வளையலை மனைவியிடம் கொடுத்து விட்டான்..
இப்போது தன்னை அழைக்கவும் இத்தனை நேரம் இருந்த கோபம் கூட குருபவனுக்கு கொஞ்சம் குறைந்து விட்டது.. அதில் முகம் சற்று நேரம் முன் இருந்த இந்த இறுகிய முகம் கூட தெளிவது போல..
அதை கவனித்த ரவி.. “போடா போ. இவ்வளவு நேரம் என் காதில் ரத்தம் வரும் வரை புலம்பிட்டு இருந்தே ..இதோ கூப்பிடுறாங்க பார்.. போ போ… அங்கு நடக்கும் ரொமான்ஸை நான் படம் பிடிக்கிறேன்..” என்று சொல்லி ரவி குருபவனை கிண்டல் செய்ததை நிஜம் ஆக்கி விட்டான் குருபவன்..
உண்மையில் மேடையில் அவர்கள் இருவரும் பூஜாவுக்கு வளையல் போட்டு விடுகிறேன் என்ற பெயரில் அடுத்து ஸ்ரீமதிக்கு இது போல் வளையல் மாட்டும் விழா கூடிய விரைவில் நடக்கும் என்பது போல் தான் காட்சிகள் நடந்தது.
ரவி சொன்னது போல அதை தன் பேசியில் பதிவு செய்து கொண்டு இருந்தாலும், ரவியின் பார்வை ரகுவரனிடம் சென்ற வண்ணம் தான் இருந்தது..
ரவி ரகுவரன் முகத்தில் கண்டது.. குருபவன் ஸ்ரீமதியின் காட்சியை பார்த்து. ரகுவரன் பொறாமையோ வன்மமோ எல்லாம் படவில்லை. குறைந்த பட்சம் ஒரு ஏக்கம்.. அது கூட இல்லாது ஒரு புன் சிரிப்புடன் கை கட்டி கொண்டு குருபவன் ஸ்ரீமதியை பார்த்து கொண்டு நின்று இருந்தான்..
மேடையை பார்த்து கொண்டு இருந்த ரகுவரனுக்கு ஏதோ ஒரு நினைவு அவனை தாக்கியது போல்.. கனகா தன் கணவன் குழந்தையுடன் மேடையில் ஏறுவது பார்த்த போது தான் ரகுவின் முகத்தில் ரவி நினைத்த அந்த ஏக்கம் அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.. நல்ல நேரமா.? இல்லை கெட்ட நேரமா..? என்று தெரியவில்லை.. இதை ரவி கவனிக்காது.. மேடையில் தன் நண்பன் குருவையும் ஸ்ரீமதியையும் தன் பேசியில் புகைப்படமாக அடக்கி கொண்டு இருந்தான்..