அன்று ஸ்ரீமதி கணவனை வழி அனுப்ப எப்போதும் போல் சின்ன குழந்தை தீக்க்ஷாவை இடுப்பில் வைத்து கொண்டும் பெரிய மகள் தியாவை கைய் பிடித்து அழைத்து வந்தும் தான் வெளியில் நின்றது..
குருபவனும் எப்போதும் போல் தன் புல்லட்டின் மீது அமர்ந்து அதை ஸ்டார்ட் செய்தவனின் பார்வை முதலில் தன் மனைவியிடம் தான் சென்றது..
கணவனின் பார்வையில் தன் இடுப்பில் இருந்த குழந்தையை வண்டியின் முன் பக்கம் அமர வைத்தாள்..
தன் அன்னையின் கை பிடித்து நின்று கொண்டு இருந்த தியா தீக்க்ஷா பாப்பாவை அம்மா வண்டியில் அமர வைத்ததும்.. அவளே எப்போதும் புல்லட்டில் ஏறும் பழக்கத்தில் வண்டியின் கால் வைக்கும் பகுதியில் கால் வைத்து ஏறியவள் இரு பக்கம் கால் போட்டு கொண்டு சமத்தாக தந்தையின் இடுப்பையும் கெட்டியாக பிடித்து கொண்டவள் அன்னைக்கு டாட்டா காண்பிக்க..
குருபவனும் தியா டாட்டா காட்டிய பின் அந்த தெருவை ஒரு சுற்றி விட்டு மீண்டும் தன் வீட்டு வாசல் முன் நின்றது..
அவர்கள் வரும் வரை வெளியிலேயே தேவுடு காத்து கொண்டு இருந்த ஸ்ரீமதியும் கணவன் முன் அமர்ந்து இருந்த தீக்க்ஷாவை தூக்கி கொள்ள. தியாவும் ஏறியது போலவே இறங்கி கொண்டவள்..
தந்தைக்கு. “டாட்டா டாடி..” என்று தெளிவாக வழி அனுப்பினாள்.
அக்காவின் இந்த வழி அனுப்புதலை கேட்டு பழகி இருந்த அந்த சின்ன சிட்டும்..
“டா..ட்.. டி..” என்று குழந்தை வாயில் வந்த பேச்சின் மூலம் வழி அனுப்ப முகம் முழுவதும் புன்னகையாக இரு குழந்தைகளிடம் விடை பெற்ற குருபவன் பின் கடைசியாக மனைவி ஸ்ரீமதியின் பக்கம் ஒரு பார்வை பார்த்து ஒரு தலையசைப்பை மட்டுமே கொடுத்து விட்டு விடை பெற்ற கணவனை ஒரு பெரும் மூச்சுடன் பார்த்தவளின் பார்வை அவளையும் மீறி ஏக்கமாக அவன் ஒட்டி சென்ற அந்த புல்லட்டின் மீது படிந்தது..
அவளை பெண் பார்க்க வந்த போதும் குருபவன் இதே புல்லட்டில் தான் வந்து இறங்கினான்..
இவர்கள் வசிப்பிடம் திருநின்றவூர். தன் இளங்களை படிப்பு முடித்ததுமே ஸ்ரீமதிக்கு வந்து முதல் இடமே குருபவன் தான்..
மேற்படிப்பு படித்து வேலைக்கு சென்று என்று எந்த வித இலக்கும் ஸ்ரீமதிக்கு கிடையாது..அதனால் எதற்க்கு இவ்வளவு சீக்கிரம் திருமணம் என்று வாதிடாது சமத்தாகவே மாப்பிள்ளையின் புகைப்பட்டத்தை தனக்கு காட்டிய அன்னை சாந்த குமாரியிடம் பெற்று கொண்டு தன் அறைக்கு சென்று தனித்து பார்த்தவளுக்கு புகைப்படத்தில் சிரித்த முகத்துடன் நின்று கொண்டு இருந்த குருபவனை பார்த்ததுமே பிடித்து விட்டது தான்..
அதனால் சின்ன மளிகை கடை வைத்து இருந்த தந்தை சாமியப்பன் மதியம் உணவுக்கு வீடு வந்தவர் நேரிடையாக தன்னிடம்
“மாப்பிள்ளையை பிடித்து இருக்கா உனக்கு.” என்று கேட்டதுமே சம்மதமாக தலையாட்டி விட்டாள்..
இவள் சம்மதம் சொன்னதுமே அந்த வார ஞாயிறே குருபவன் குடும்பம் பெண் பார்க்க வந்து விட்டனர்.
முதல் பெண் பார்க்கும் வைபோகம்.. கதையில் படித்தது எல்லாம் நினைவுக்கு வந்தது ஸ்ரீமதிக்கு..
மாலையில் தான் மாப்பிள்ளை வீட்டவர்கள் வந்தது. தங்கள் அறையில் முழு அலங்காரத்துடன் அமர்ந்து இருந்த ஸ்ரீமதியிடம் அவள் தங்கை பூஜா தான்.
“ஸ்ரீ. மாப்பிள்ளை வந்துட்டார்..” என்ற தகவல் சொன்னது.. இருவருக்குமே ஒன்னரை வயது தான் வித்தியாசம்..
அதனால் அக்கா என்ற் மரியாதை அழைப்பு எல்லாம் பூஜாவிடம் இருக்காது..
தகவல் சொன்னவள்.. தங்கள் அறை தெரு பக்கம் இருந்ததால், அதை ஒட்டிய ஜன்னலை திறந்து மாப்பிள்ளையை பார்க்க ஏதுவாக ஸ்கீரினையும் விலக்கி விட்டு மாப்பிள்ளையை பார்க்க ஆர்வமாக பார்வை இட்டாள்..
அவர்களின் அன்னை முன் தினமே.. பூஜாவிடம் சொல்லி விட்டார்…
“நீ மாப்பிள்ளை வீட்டவர்கள் முன் வந்து நிற்க கூடாது..” என்று.. அதனால் இப்படி பார்த்தால் தான் ஆச்சி என்று தான் பூஜா முதல் ஆளாக ஜன்னல் பக்கம் வந்து நின்று கொண்டது..
மாப்பிள்ளை வீடு காரில் தான் வந்து இறங்கினர்.. குருபவனின் அன்னை தந்தை தம்பி என்று இறங்க..
தன் பின் வந்து நின்ற ஸ்ரீயிடம்.. தீபக்கை காட்டி..
“இவரா ஸ்ரீ மாப்பிள்ளை. ஆனா போட்டோவில் வேறு மாதிரி இருந்தார்..” என்று கேட்க.
“இல்ல இவர் இல்ல.” ஒரு விதத்திலுமே போட்டோவில் பார்த்த குருபவன் சாயலில் இல்லாத தீபக்கை பார்த்து சொல்ல.
“அப்போ மாப்பிள்ளை வரலையா..?” என்று திரும்பி பூஜா கேட்ட போது தான் குருபவனின் இந்த புல்லட். மாப்பிள்ளை வீட்டவர்களின் காரின் பின் வந்து நின்றது..
ஸ்ரீமதியின் பார்வை புல்லட்டின் மீது அமர்ந்து இருந்தவனை பாராது அந்த புல்லட்டின் மீது தான் இருந்தது..
பூஜா தான்.. “மாப்பிள்ளைக்கு உனக்கு புல்லட் புடிக்கும் என்று தெரியுமா என்ன..?” காரின் இடம் இருந்தும் வராது புல்லட்டில் வந்து இறங்கிய மாப்பிள்ளையை பார்த்து கேட்டதும் தான் ஸ்ரீமதியின் பார்வை அந்த புல்லட்டின் மீது அமர்ந்து இருந்தவனை பார்த்தது..
பின் அன்று மாப்பிள்ளை முன் அவளை நிற்க வைத்தது.. இருவரையும் தனியாக பேச விட்டது..
அன்று தனியே பேசும் போது கூட குருபவன் அன்று தன் பிடித்ததை சொல்லாது..
“உனக்கு பிடித்து இருக்கா.. கல்யாணத்திற்க்கு டேட் குறிக்கலாம் தானே..” என்று தான் அவளை பார்த்து கேட்டான்..
பிடித்து இருக்கு தான்.. அந்த பிடித்தம் அவனை தோற்றத்தை மட்டும் வைத்து தானே … அதுவும் பெண்..
“பிடித்து இருக்கு..” என்று எப்படி சொல்ல முடியும்.. அதனால் அவள் விருப்பத்தை அன்று இலை மறை காயாக தான்..
“அப்பா அம்மா டேட் குறிக்க சொன்னா ஒகே தான்..” என்று கூறி விட்டாள்.. ஆனால் அவன் அன்று அது கூட சொல்லாத குருபவன்.. தன்னை விளக்க முடியாத ஒரு பார்வை பார்த்து விட்டு அனைவரும் இருந்த இடத்திற்க்கு சென்றவன்..
அவன் அப்பா காதில் என்ன சொன்னானோ.. அடுத்த மூன்று மாதத்தில் ஸ்ரீமதி இந்த வீட்டிற்க்கு மருமகளாக ஆகி விட்டாள்..
ஆனால் அன்று ஸ்ரீமதி ஆசையாக பார்த்த அந்த புல்லட்டில் குருபவன் இவளை அழைத்து சென்றது.. நான்கு முறை மட்டுமே தான்..
தன்னோடு செல்வது என்றால் குருபவன் எப்போதும் காரை தான் எடுப்பான்.. இப்போது குழந்தை என்று குடும்பமாக இரு சக்கர வாகனத்தில் செல்வது பாதுகாப்பு இல்லை என்று எடுத்து கொண்டாலும்.. திருமணம் முடிந்து மறு வீடு என்று அனைத்தும் முடிந்து ஸ்ரீமதி இங்கு வந்து பின்,,
சாமூண்டிஸ்வரி.. “கோயிலுக்கு கூட்டிட்டு போய் வா குரு..” என்று மகனிடம் சொன்ன போது..
ஸ்ரீமதிக்கு கோயில் கணவனோடு செல்கிறோம் என்ற ஆர்வத்தோடு முதல் முறை இரு சக்கர வாகனத்தில் செல்கிறோம்.. அதுவும் தனக்கு மிகவும் பிடித்த புல்லட்டில் என்ற ஆர்வம் தான் அவள் மனதில் மேலோங்கி இருந்தது..
ஆனால் அன்று அவளின் அந்த ஆர்வம்.. கணவன் புல்லட்டின் சாவீயை எடுக்காது காரின் சாவீயை கையில் எடுத்ததும்.. அதுவும் அவள் மாமியார்.
“என்ன காரிலா கூட்டிட்டு போற.. இங்கு இருக்க கோயில் தானே. உன் அந்த பெரிய வண்டியிலே போகலாமே..” என்ற பேச்சில் தான்.
ஸ்ரீமதி அப்போ புல்லட் இல்லையா..? காரா என்று தயங்கி நின்று விட்டாள்.. குருபவன் தன் மாமியாருக்கு பதில் அளிக்காது நின்று விட்ட தன்னை பார்த்து..
“கோயிலுக்கு போக எல்லாம் பிடிக்காதா..?” என்ற கேள்வியில் தான்.. அவசரமாக.
“இல்ல அது எல்லாம் இல்ல.. பிடிக்கும்..” என்று சொல்லி அவன் பின் ஓடியது..
அது என்னவோ குருபவன் அதற்க்கு பின்னும் கூட மனைவியுடன் தனித்து போகும் போது அந்த புல்லட்டை எடுக்காது காரை தான் எடுத்தான்..
ஒவ்வொரு முறையும் கணவனோடு காரில் செல்லும் போது ஸ்ரீமதிக்கு வாய் வரை.. “ புல்லட்டில் போகலாமே..” என்று கேட்க தோன்றும்..
ஆனால் இது வரை தன்னிடம் சகஜமாக. அவன் விருப்பு வெறுப்பு சொல்லாது. தன்னுடைய விருப்பு வெறுப்பை கேட்காதவனிடம்.. தான் வலிய சென்று தன் ஆசையை சொல்லவோ.. கேட்கவோ தயக்கம் ஏற்பட்டது பெண்ணவளுக்கு..
அவளின் அந்த தயக்கம். இதோ திருமணம் முடிந்து ஐந்து ஆண்டுகள் தொட்ட பின்னும் தொடர்கிறது..
குழந்தைகளை மட்டும் தினம் இதோ இது போல் தன் புல்லட்டில் வைத்து ஒரு ரவுண்டு அடித்து வீட்டில் விட்ட பின் தான் தன்னுடைய கடைக்கு செல்வான்..
தியா பிறந்த ஒரு வயதில் தொடங்கிய இந்த பழக்கம் இதோ அடுத்து தீக்க்ஷா என்றும் தொடர்கிறது..அன்று போல் இன்றும் ஆசையாக அந்த புல்லட்டை பார்க்க மட்டுமே தான் செய்கிறாள்..
பழையதை நினைத்து கொண்டே வீட்டிற்க்குள் வந்த ஸ்ரீமதியிடம் அவள் மாமியார் சாமூண்டிஸ்வரி..
“குழந்தையை என் கிட்ட கொடுத்துட்டு மதியத்துக்கு ஆக வேண்டியதை பார்..” சமையலை பற்றி குறிப்பிட்டார்..
மாமியார் கையில் குழந்தையை கொடுக்காது ஸ்ரீமதி.. தன் அறைக்குள் சென்ற வாரே.. “ சின்ன குட்டி தூங்கும் சமயம் அத்த. நான் தூங்க வைச்சுட்டு சாப்பாடு வேலையை பார்க்கிறேன்..” என்று பதில் அளித்து விட்டு தங்கள் அறையில் இருந்த டிவியில் குழந்தைகள் பார்க்கும் சேனலை வைத்தவள்.. தியாவை அதை பார்க்க விட்டு சின்ன குட்டிக்கு பால் கொடுத்து அதை தூங்க வைத்த பின் தான் ஸ்ரீமதி சமையல் அறைப்பக்கம் சென்றது..
குழந்தைக்கு இன்று பிறந்த நாள் என்பதினால்.. ஸ்வீட் கேசரி செய்தவள்.. அடுத்து ஒரு சாம்பார் வறுவல் பொறியல் ரசம்.. என்று ஒரு மணி நேரத்தில் தன் சமையலை முடித்து விட்டு வெளி வந்து விட்டாள்..
மாமியார் கேட்ட. “என்ன செய்த “ என்ற கேள்விக்கு தான் செய்த உணவுகளை சொன்ன வாறே தன் அறைப் பக்கம் அவள் கால்கள் சென்றது..
“பெரியவ வீட்டில் இருக்கிறாளே.. அவள் கிட்ட கேட்டுட்டு சமையல் செய்யனும் என்று எல்லாம் இல்ல.” என்ற மாமியாரின் பேச்சு காதில் விழாத வாறே ஸ்ரீமதி தன் அறைக்குள் சென்று விட்டாள்..
முன் எல்லாம்… முன் என்றால் ஸ்ரீமதி திருமணம் முடிந்ததுமே ஒரு வாரம் தான் புதுப்பெண் என்று சலுகைகள் அவளுக்கு கொடுக்கப்பட்டது..
அதன் பின் சமையல் அறைக்குள் தள்ளி விட்டார் அவளின் மாமியார். ஸ்ரீமதி படிப்பு முடிந்ததுமே திருமணம் முடிந்து விட்டதால், சமையல் எல்லாம் அவ்வளவாக தெரியாது.. அம்மா ஏதாவது விசேஷத்திற்க்கு வெளியில் சென்று விட்டால், ஆத்திரம் அவசரத்திற்க்கு என்று ஸ்ரீமதிக்கு சமையலில் ஏதோ செய்ய தெரியும்.. அவ்வளவே..
என்னடா இது இத்தனை பேருக்கு எப்படி செய்வது என்று பயந்தாலுமே ஸ்ரீமதி யூட்யூம் புன்னியத்தில் முதலில் தடுமாறினாலும், பின் சமையலில் சமாளித்து விட்டாள்..
இவளின் அந்த சமையல் முதல் குழந்தை தியா பிறந்து இரண்டாம் குழந்தை தீக்க்ஷா பிறக்கும் வரை தொடர்ந்தது.. இடையில் தியா பிறந்த போது தாய் வீட்டிற்க்கு சென்று வந்த அந்த ஐந்து மாதம் மட்டுமே அவளுக்கு அந்த சமையல் அறையில் இருந்து விடுதலை கிடைத்தது எனலாம்..
தீக்க்ஷா இங்கு மாமியார் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததினால், ஸ்ரீமதிக்கு முதல் குழந்தைக்கு கிடைத்த அந்த விடுமுறையும் கிடைக்காது.. அவள் உடல் நிலையில் பாதி முடிந்தும் முடியாத போதும் ஏதோ செய்து விட்டாள்..
இதில் கிடைத்த ஒரே நன்மை ஒரு நாள் அவள் கணவன் ..”உன்னால முடியலேன்னா சமையலுக்கும் ஆள் வைத்து விடலாமே..” என்று சாப்பிடும் போது தான் இதை ஸ்ரீமதியிடம் சொன்னது..
அதற்க்கு ஸ்ரீமதி பதில் அளிக்கும் முன் சாமூண்டிஸ்வரி… “நம்ம வீட்டில் வேலையாட்களையே வீட்டுக்குள் விடுவது இல்ல.. இப்போ மேல் வேலைக்கு என்று வைத்து விட்டோம்.. இப்போ சமையல் அறைக்கும் அவங்களை விட வேண்டுமா…” என்று மாமியார் சமையலுக்கு ஆளை வைப்பதில் தன் மறுப்பை மறை முகமுகமாக சொல்லி விட.
ஸ்ரீமதி. “பரவாயில்லை நான் சமாளித்து கொள்வேன்..” என்று விட்டாள்..
அப்போது கூட குருபவன் தன் அம்மாவிடம்.. “ நீங்க கொஞ்சம் உதவி செய்து கொடுங்க.” என்று விட சாமூண்டிஸ்வரி மகனின் இந்த பேச்சுக்கு மகனை முறைக்காது தன்னை முறைத்தது..
பின் மகனிடம் சரி என்றாலுமே ஒரு பூண்டை கூட உரித்து கொடுக்காது இருந்தது எல்லாம் வேறு விசயம்.. இருந்தும் அப்போது இரண்டு வயதில் இருந்த தியாவை வைத்து கொண்டே மசக்கையில் ஏற்படும் உடல் சோர்வையும் சமாளித்து சமையல் வேலைகளை பார்த்து கொண்டாள் தான்..
இவளுக்கு ஏழு மாதம் இருக்கும் போது தான் அவளின் மச்சினர் தீபக்குக்கு அவரின் மாமன் மகள் கவிதாவோடு திருமணம் முடிந்தது.