அந்த வீட்டில் தான் மட்டுமே மருமகளாக இருந்த போது தெரியாத விசயங்கள் அனைத்துமே கவிதா மருமகளாக வந்த போது ஸ்ரீமதிக்கு தெரிய வந்தது.
அது முதலாவதாக.. கவிதா திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் சென்று கூட. அந்த வீட்டில் அவள் புதுப்பெண்ணாகவே இருந்தாள்.. அதாவது சமையல்கட்டிற்க்கு அவள் வரவில்லை..
ஸ்ரீமதி கேட்காத போதே.. அவளின் மாமியார்.. “இப்போ தானே கல்யாணம் முடிந்து வந்து இருக்கா பொறுமையா சமையல் செய்ய ஆரம்பிக்கட்டும்..” என்று..
அடுத்து வெளியில் செல்வது.. அடுத்து அவள் செய்யும் சமையல்களில் பெரும்பாலும் கவிதாவுக்கு பிடித்தவகையாகவே இருந்தது..
அதுவும் அதை ஸ்ரீமதியே சமைத்து கொடுத்தது தான் அங்கு பெரிய விசயம்.. அது தெரியாதே ஸ்ரீமதி மாமியாற் சொல்லும் சமையலை செய்து விடுவாள்..
அதே போல் மாமாயார் வெளியில் செல்லும் போது..” ஏதாவது வேண்டுமா கவி..” என்று தன் தம்பி மகளை பார்த்து கேட்கும் தன் மாமியார்.. இது வரை தன்னிடம் இது போல் ஒரு முறை கூட கேட்டது இல்லை என்பதை ஸ்ரீமதி அப்போது தான் உணர்ந்தாள்.. இது போல் எத்தனையோ. விசயங்களில் தன் மாமியார் தனக்கும் கவிதாவிற்க்கும் வேற்றுமை பார்ப்பதை உணர்ந்து கொண்ட பின் தான். இதோ இப்போது எல்லாம் மெல்ல மெல்ல தன்னை மாற்றி கொண்டு வருகிறாள்..
முதலாவதாக.. ஸ்ரீமதி முன் எல்லாம் “என்ன சமையல் செய்யட்டும்..” என்று தன் மாமியாரிடம் கேட்டவள்.. இப்போது எல்லாம் இருக்கும் காயை கொண்டு அவளே சமையலை செய்து முடித்து விடுகிறாள்..
அடுத்து இன்று காலை நடந்தது போல் தான் கடந்த சில நாட்களாக அரக்க பறக்க எல்லாம் காலையில் எழாது நிதானமாகவே எழுந்து பத்தரைக்கு காலை உணவை சாப்பிடும் கணவனுக்கு அதற்க்கு ஏற்ற நேரத்திற்க்கு தகுந்தது போல் தான் டிபனை செய்கிறாள்..
முன் எல்லாம் தீபக் ஒன்பது மணிக்கு வீட்டை விட்டு கிளம்புவதற்க்கு தகுந்தது போல் தான் அவள் காலை உணவை செய்து முடித்து விடுவாள்.. மதியம் சமையலும் கட்டி கொடுப்பாள்..
அப்போது எல்லாம் ஸ்ரீமதி அதை தவறாகவும் பெரியதாகவும் எடுத்து கொண்டது கிடையாது.. நம் வீடு.. நம் குடும்பம் என்ற எண்ணம் மட்டும் தான் அவளுக்கு இருந்தது.
ஆனால் அவளின் இந்த சமையல் செய்தல்.. தீபக்கோடு கவிதாவிற்க்கும் செய்து கொடுப்பதில் தொடரவும் தான் ஸ்ரீமதி முழித்து கொண்டு விட்டாள்..
முதலில் புதுமணப்பெண் என்று சொன்ன மாமியார்.. பின் வேலைக்கு போகும் பெண்.. வீட்டில் இருக்கும் நீ காலையில் எழுந்து சமையல் செய்து கொடுத்த பின் வேறு என்ன வேலை இருக்க போகிறது.. பகலில் கூட நீ தூங்கலாமே.” என்று கவிதா சமையல் அறைப்பக்கம் வராததிற்க்கு காரணங்கள் அடுக்க..
ஸ்ரீமதி தன் மாமியாரிடம் “முடியாது.” என்று சொல்லாது தன் செயலில் காட்டினாள்..
அதாவது காலையில் எழுந்து தீபக் கவிதாவுக்கு மதிய உணவை கட்டாது.. இது போல் பன்னிரெண்டு மணிக்கு தொடங்கி ஒரு மணிக்குள் தன் சமையலை முடித்து கொள்கிறாள்..ஒரு மணி நேரத்திற்க்குள் முடிப்பது போல் தான் தன் சமையலையும் குறைத்து கொண்டாள்..
இந்த பழக்கம் தொடங்கிய ஆரம்பத்தில் இரண்டு நாள் சாமூண்டிஸ்வரி ஒன்றும் சொல்லவில்லை.. மூன்றால் நாளும் ஸ்ரீமதி காலையில் எழுந்து சின்ன மகனுக்கும் மருமகளுக்கும் மதிய உணவை கொடுக்காததிலும்.. அதுவும் நேற்று தீபக்..
“வெளி சாப்பாடு ஒத்துக்க மாட்டேங்குதும்மா. அவங்க ஏன் கட்டி கொடுக்கல…” என்ற பேச்சும் இரண்டும் சேர்ந்து அன்றும் காலையில் அனைவரும் சாப்பிடும் போது தான் சாமூண்டிஸ்வரி.
“என்ன ஸ்ரீமதி காலையில் எழுந்து சாப்பாடு கட்டல…?” என்று ஒரு வித அதிகாரமாக தான் இதை கேட்டார்..
சாப்பிட்டு கொண்டு இருந்த குருபவன் சட்டென்று நிமிர்ந்து தன் அன்னையை பார்த்தவன் மனைவியையும் பார்த்தான்..
அவளோ யாரையும் பார்க்காது.. “குழந்தைங்க ராத்திரி சரியா தூங்க மாட்டேங்குறாங்க அத்த… அவங்க கூட நானும் முழிச்சிட்டு இருக்குறேன்.. அது தான் எழுந்துக்க முடியல..” என்று சொன்னவள் அதோடு விடாது.
“அதோடு உங்க பெரிய மகன் இரண்டு மணிக்கு தானே அத்தை சாப்பிடுவது.. காலையில் அவ்வளவு சீக்கிரமா செய்த உணவு அவர் சாப்பிடும் நேரம் ஜில்லுன்னு ஆகிடும் தானே…”
தான் கணவனுக்கு மட்டுமே கட்டி கொடுக்கும் கடமை எனக்கு இருக்கு.. அவரை பெற்றவர் நீங்க என்பதினால் சரியாக ஒரு மணிக்கு உணவு உண்ணும் மாமனார் மாமியாருக்காக அந்த நேரத்திற்க்குள் தன் சமையலை முடித்து கொண்டு சரியான நேரத்திற்க்கு பெரியவர்களுக்கும் உணவு கிடைக்கும் படி பார்த்து கொள்கிறேன்.. இது எல்லாம் சொல்லாது செயல்களின் மூலம் செய்து காட்டினாள் ஸ்ரீமதி..
சாமூண்டிஸ்வரிக்கு மகன் எதிரில் அடுத்து என்ன சொல்வது என்று தெரியாது இருந்தாலுமே, பின்
“தினம் தினம் தீபக்கும் கவிதாவும் வெளியில் சாப்பிட்டா ஆகுமா..?” என்று கேள்வி எழுப்ப.
ஸ்ரீமதி.. “கண்டிப்பா அத்த ஒத்து கொள்ளாது.. நீங்க இதை உங்க தம்பி பெண் கிட்ட சொல்லுங்க அத்த..” என்று விட்டாள்..
ஸ்ரீமதியை பொறுத்த வரை.. விட்டு கொடுப்பதிற்க்கும் அடிமை தனத்திற்க்கும் இருக்கும் வித்தியாசத்தை தெரிந்து வைத்து இருந்தாள்..கூடவே கணவனை பற்றியும் தான்..
தன்னிடம் காதல் வார்த்தை பேசியது இல்லை என்றாலுமே, மற்றவர்களிடம் தன்னை குறைவாகவும் பேசியது கிடையாது.. குறைத்து பேசவும் விட்டு விட மாட்டன் என்ற நம்பிக்கை ஸ்ரீமதிக்கு.
சமையல் முடித்து அறைக்கு வரவும் தீக்க்ஷா தொட்டிலில் உடம்பை முறுக்கவும் சரியாக இருக்க. பின் சின்ன குட்டி பெரிய குட்டி என்று அவள் நேரம் கழிய..
மதிய உணவுக்கு குருபவன் வீடு வராது கடை பையனை அன்று அனுப்பி இருந்தான்.. அவனிடம் கணவனுக்கு சாப்பாட்டை கட்டி கொடுத்தாள்..
இதுவும் சில சமயம் நடப்பது தான்.. குருபவன் சில சமயம் வீடு வந்தும் சாப்பிட்டு செல்வான்.. வேலை அதிகல் இருந்தால் கடை பையனை வீட்டுக்கு அனுப்பி வைப்பான்..
கணவனுக்கு கொடுத்து விட்டு தன் உணவையும் முடித்து கொண்டவள்.. மதியம் கொஞ்சம் ஒய்வு எடுத்து கொள்ள. சிறிது நேரத்திற்க்கு எல்லாம் காலையில் கணவன் சொல்லி விட்டு சென்றது போல கடை பையன் இரண்டு பேர் வந்து சேர்ந்தனர்.. வீட்டை அலங்கரிக்கும் பொருட்களோடு.
ஸ்ரீமதி அவர்களிடம். இது இங்கு கட்டு.. அங்கு கட்டு என்று மேற்பார்வை மட்டும் செய்ய. ஒன்னரை மணி நேரத்திற்க்குள் பிறந்த நாள் விழாவுக்கு தகுந்தது போல் அந்த வீட்டின் ஹால் தயாராகி விட்டது..
மாலை காபி மட்டுமே மாமனார் மாமியாருக்கு கலந்து கொடுத்து விட்டு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய பானத்தை கொடுத்த பின் அவர்களை தயார் செய்து விட்டு தானும் தயாராகிய பின் ஒலா கார் புக் செய்து கணவன் சொன்ன கோயிலுக்கு சொன்ன நேரத்திற்க்கு வந்து சேர்ந்தாள்..
இவளுக்கு முன்னவே குருபவன் கோயிலில் காத்திருக்க. குழந்தை பெயரில் அர்ச்சணை செய்து சாமீ கும்பிட்டு விட்டு வீடு வர.. குருபவன் மீண்டும் ஒலா கார் புக் செய்து மனைவி சின்ன சிட்டை காரில் அனுப்பி விட்டு தன் புல்லட்டில் தியாவை அமர வைத்து காரை பின் தொடர்ந்தான்.
மாலை பிறந்த நாள் விழா அருகில் இருக்கும் சின்ன குழந்தைகளோடு எளிய முறையில் முடித்து கொண்டனர்..
குருபவன் வீட்டில் சமைக்க வேண்டாம் வெளியில் ஆர்டர் செய்து கொள்ளலாம் என்று விட.
அதன் படி குருபவன் உணவை ஆர்டர் செய்யும் முன் யார் யாருக்கு என்ன என்ன வேண்டும் என்று கேட்டு தான் உணவு வகைகளை ஆர்டர் செய்தது.
கவிதா தனக்கு வேண்டிய உணவை சொல்லும் போதே முகத்தை ஒரு மாதிரியாக வைத்து கொண்டு தான்.. சொன்னது.
குருபவன் கவிதா சொன்ன விதத்தில் அவளை ஒரு மாதிரியாக பார்த்தான்.. அப்போது அவனின் ரியாக்ஷன் அவ்வளவு தான்..
ஆர்டர் செய்த உணவு வந்த பின் சாப்பிட்டு முடித்து விட்டு எப்போதும் போல் ஸ்ரீமதி குழந்தைகளை தூங்க வைக்க தன் அறைக்குள் சென்று விட்டாள்..
அண்ணன் தம்பி இருவரும் சாப்பிடும் மேஜையை தூய்மை செய்து விளக்கு அணைத்து விட்டு குருபவன் தன் அறைக்கு வந்து குளித்து முடித்து என்று எந்த நாளும் போல் தான் அந்த நாளும் இருந்தது..
ஆனால் பத்து மணிக்கு ஹால் விளக்கு ஏரிய. பின் அன்னை பின் அன்னையில் பேச்சு சத்தத்தில் என்ன என்று கணவன் மனைவி இருவரும் வெளியில் வந்தனர்..
அவர்கள் ஹாலுக்கு வந்து பார்த்த போது கவிதா சோர்ந்து போய் அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தாள்..
அவள் எதிரில் சாமூண்டிஸ்வரி வாய் முழுவதும் பல்லாக… குருபவனிடம்..
“எல்லாம் நல்ல விசயம் தான் குரு.. நீ பெரியப்பாவா ஆக போற..” என்று சந்தோஷமாக சொல்ல..
இத்தனை நேரம் குனிந்து அமர்ந்திருந்த கவிதா.. “அத்த சும்மா இருங்க. எல்லாம் தெரிந்தது போல பேசாதிங்க…” என்று தன் எரிச்சல் குரலை அப்பட்டமாக காட்டிய படி பேசினால் என்பதை விட சாமூண்டிஸ்வரியை அதட்டினாள் என்று சொன்னால் சரியாக இருக்கும்..
கவிதாவின் இந்த வகையான பேச்சில் குருபவன் தன் தம்பி தீபக்கை தான் முறைத்தான்..
அண்ணனின் பார்வையில்.. “இல்ல அண்ணா அவளுக்கு அல்சர்… தினம் தினம் மதியம் வெளியில் சாப்பிடுவது ஒத்துக்காது இரண்டு நாளாவே. வயிறு சரியில்ல என்று தான் சொல்லிட்டு இருந்தா. இன்னைக்கு நையிட்டும் வெளியில் இருந்து வாங்கி சாப்பிடவும் இன்னும் ஒத்துக்காது போயிடுச்சி… அதுல வாந்தி எடுத்துட்டா. நான் அம்மா கிட்ட கவிதா வாந்தி எடுக்குற என்றதை தப்பா புரிஞ்சிட்டாங்க போல.. ஏற்கன்ஸ்வே உடம்பு சரியில்லாததினால்..” என்று அண்ணனின் தீபக் மென்று முழுங்கி இவ்வளவு விளக்கமாக சொல்லி முடிக்க..
அதற்க்கு குருபவன்.. “அதுக்கு அம்மாவிடம் அப்படி சத்தம் போடுவதா..?” குருபவன் தன் தம்பியிடம் சொல்லி கொண்டு இருக்கும் போதே..
கவிதா இடை புகுந்து ஸ்ரீமதியிடம்.. “ நாளையில் இருந்து எனக்கு நீ கட்டி கொடுக்குற..” இதை கவிதா ஸ்ரீமதியிடம் அதிகாரமாக தான் சொன்னாள்..
ஸ்ரீமதி கவிதாவின் இந்த பேச்சுக்கு பதில் அளிக்காது தன் கணவனை பார்த்தாள்… கவிதா பேச்சுக்கு பதில் கொடுக்க முடியாது எல்லாம் ஸ்ரீமதி கணவனை பார்க்கவில்லை..
கணவன் என்ன சொல்கிறான் பார்க்கலாம்.. தனக்கு ஆதரவாக பேசுகிறானா என்று பார்க்க தான் கணவனை பார்த்தது…