அத்தியாயம்…23….1
ஸ்ரீமதி எழுதி குருபவன் படித்த முதல் வார்த்தைகள்…
‘மனதும் மனதும் சேர்வது தான் காதல்… உடலும் உடலும் சேர்ந்து, மனது சேராது வாழும் வாழ்க்கையானது காமத்தில் மட்டுமே அடங்கி விடும்’
இது எழுதிய பின் தான் முதல் அத்தியாயம் என்றே போட்டு கதையை ஆரம்பித்து இருந்தாள் அவன் மனைவி….
அடுத்த அத்தியாயத்திலும் ஏதாவது இது போல் எழுதி இருக்கிறாளா…? என்று அவசரமாக குருபவன் பக்கத்தை திருப்ப எட்டு பக்கம் திருப்பிய பின் தான் இரண்டாம் அத்தியாயமே வந்தது..
இரண்டாம் அத்தியாயத்திலுமே, மனது பார்க்காது உடல் மட்டுமே பார்த்தால், அந்த தாம்பத்தியம் போக போக கசந்து விடும்…
முடியவில்லை.. குருபவனால் அடுத்த பக்கத்தை அவனால் திருப்ப முடியவில்லை….
மீண்டும் முதல் அத்தியாயத்திலேயே அவன் கைகள் பக்கத்தை திருப்பி வந்து நின்றது…
படித்தான்… அந்த கதையை முழுவதுமாக படித்து முடித்தான்.. கடைசி அத்தியாயத்தில் ஸ்ரீமதி அத்தியாயம் ஆரம்பிக்கும் முன் எழுதி இருந்தது இது தான்…
காதல் கூடி களித்திட நினைத்த பெண்ணுக்கு, வாய்த்த வாழ்க்கை தினம் தினம் இரவில் உடல் மட்டுமே கூடி களித்து சுகித்து இருக்கும் வாழ்க்கை தான் … என்று…
இந்த அத்தியாயத்தில், அத்தியாயம் ஆரம்பத்தில் மட்டும் அல்லாது முடிவிலும் ஆசிரியர் தன் கருத்தை கூறுவது போல…
நிறைவு,,
இந்த கதையை அழகாக நிறைவு செய்து விட்டேன்.. இந்த கதையின் நாயகியின் வாழ்க்கையில் நிறைவு என்பது.. வருமா..? வந்தால், இந்த கதையின் அடுத்த பாகத்தை தொடர்கிறேன்… கதை மட்டும் நிறைவு இல்லாது மனது நிறைவோடு அப்போது எழுதி முடிக்கிறேன்… என்று எழுதி இருந்தது..
படித்தவன் புரிந்து கொண்டது.. ஸ்ரீமதி புரிய வைத்தது இது தான்… இந்த கதையின் நாயகி காதலோடு கணவனோடு கலக்கும் ஒரு வாழ்க்கையை விரும்பி திருமணம் செய்து கொள்கிறாள்..
ஆனால் அவளுக்கு கிடைத்ததோ.. காமத்தோடு தன்னோடு கலக்கும் கணவன்..இது தான்.. தான் வாழ்ந்து கொண்டு இருக்கும் அவலமான வாழ்க்கையை சொல்லி இருந்தாள்.. குருபவனின் மனைவி…
குருபவனால் முடியவில்லை.. இடிந்து போய் அமர்ந்து விட்டான்.. தான் பேசாதது எத்தனை பெரிய பிழையாக ஆகி விட்டது…
இப்படி.. அவன் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை… தலையில் அடித்து கொண்டான்.. அது பத்தாது என்று சுவர் மீது தன் தலையை மோதிக் கொண்டான்…
இருந்தும் அவனுக்கு வலிக்கவில்லை.. மனது வலியோடு இது எல்லாம் ஒன்றும் இல்லை என்பதை தான் அந்த தலை இடித்தல் அவனுக்கு உணர்த்தியது…
இந்த மனதின் வலி எப்போதும் போகாது… இருந்தும் கொஞ்சமாவது குறையாதா..? குறைய இதை விட அதிகம் வலி ஏற்பட்டால் தான் இந்த மனதின் வலி கொஞ்சமாவது குறையும்…
இப்போது தலை போய் கை கொண்டு சுவற்றில் குத்தினான்.. முட்டி பகுதி டொங்கு டொங்கு என்ற அந்த குட்டலில் முட்டியில் ரத்தம் தான் வழிந்தது….
மாடியில் ஏறி குதித்து விடலாமா…? அது வரை பொறுமை இல்லை. வீட்டை சுற்றியும் முற்றியும் பார்த்தான்..
பழம் நறுக்கி வைத்த கத்தி அவன் கண்ணில் பட , அதை கையில் எடுத்து விட்டான்.. எடுத்து கொண்டவன் அதை கை நரம்புகள் இருந்த இடத்தில் வைத்த போது தான் சரியாக ஸ்ரீமதி பள்ளியில் இருந்து தியாவை அழைத்து கொண்டு…
அன்று பிரதோஷம் . அதனால் கோயிலுக்கு சென்று இதோ இப்போது வீடு வந்தவள்…
வீடு பூட்டாது இருப்பதை பார்த்து.. ‘இவர் கடைக்கு இன்னும் போகவில்லையா…’ என்று நினைத்து கொண்டு தான் ஸ்ரீமதி ஹாலுக்கு வந்தது..
வந்தவள் கண்ணில் பட்டது கொரியர் வந்ததில் மேல் அட்டை பிரித்து இருந்தது தான்…
அதை பார்த்த பின் தான்.. இன்று கொரியர் வரும் என்று பதிப்பகத்தார் அவளை பேசியில் அழைத்து சொன்னதும்.. கொரியரை பின் தொடர பேசியின் எண் தன்னிடம் கொடுத்ததுமே ஸ்ரீமதியின் நியாபகத்திற்க்கு வந்தது..
கவர் மட்டும் இருக்கு.. புக்.. என்று நினைத்தவளுக்கு நாக்கு ஒட்டிக் கொண்டது போலான ஒரு உணர்வு..
தியா.”ம்மா பசி…” என்ற அழைப்பு கூட ஸ்ரீமதியின் காதில் விழவில்லை.. அவசரமாக தங்கள் அறை நோக்கி ஓடினாள்….
ஓடியவளின் கண்ணில் பட்டது.. கணவன் கத்தியை தன் மணி கட்டில் கொண்டு சென்ற காட்சியை தான்…
புரிந்து விட்டது… ஏன் கணவன் இதை செய்கிறான் என்று புரிந்து விட்டது.. அதனால் பதட்டம் எல்லாம் படவில்லை…
“சரியான இடத்தில் நல்லா ஆழமா வெட்டிக்கோங்க. அப்போ தான் எனக்கு மேரஜுக்கு முன் இருந்த அந்த EMA தொடர.. உங்களை தற்கொலைக்கு தூண்டினேன் என்று உன் வீட்டு ஆட்கள் சொல்வதற்க்கு சரியா இருக்கும்….
சொல்ல முடியாது.. தற்கொலைக்கு தூண்டினேன் என்று சொல்வாங்களோ.. இல்ல நானே கொன்னுட்டேன் என்று சொல்வாங்களோ எனக்கு தெரியல….”
ஸ்ரீமதி அறைக்கு வந்ததுமே குருபவன் தன் செயலை நிறுத்தி விட்டான்.. மனைவியின் வருகை அவனுக்கு தான் செய்ய இருந்த முட்டாள் தனத்தை அவனுக்கு உணர்த்தி விட்டது…
ஆனால் மனைவியின் இந்த பேச்சில் அவளை குருபவன் அடிப்பட்ட ஒரு பார்வை பார்த்தான்.. அந்த பார்வை ஸ்ரீமதியை ஏதோ செய்தது தான்… ஆனாலும் மனது இறங்க வில்லை அவள்…
கணவன் செய்தது சின்ன விசயம் கிடையாது.. தன்னை மனது ரீதியாக ஐந்து ஆண்டுகளாக மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறான்…
இவன் ஏன் பேசவில்லை.. பேசவில்லை என்று நினைத்து வாழ்க்கை பற்றிய பயத்தில் தனக்கு மனநிலையில் ஏதாவது பிறழவு ஏற்பட்டு இருந்தாள்.. தன் குழந்தைகளின் கதி என்ன ஆகி இருக்கும் …?
இதோ இப்போது கூட அவனை பற்றி மட்டுமே யோசித்து இது போல் செய்ய முயன்று இருக்கிறானே.. எங்கள் நிலையை இவன் யோசித்து பார்க்கவில்லையா..?
எப்போதும் தன்னை பற்றி மட்டுமே யோசிக்கும் சுயநலக்காரானா…? தன் கணவன்.. நினைத்ததை அனைத்தும் கணவனிடம் கேட்டும் விட்டாள்…
கத்தியை கீழே போட்டு விட்டு மனைவியின் கை பற்றி கொண்டவன்….
“சாரி மதி சாரி.. ஆனா இது நான் சாகனும் என்று எடுக்கல…” கத்தியை காட்டி சொன்ன குருபவன்..
“ இங்கு வலிக்குது மதி.. “ தன் நெஞ்சிப்பகுதியை தொட்டு காட்டி கூறியவன்…
“இது அடங்காது காலத்திற்க்குமே இந்த வலி போகாது தான்.. ஆனா கம்மியா ஆக ஏதாவது செய்யனும் செய்யனும் என்று தான்..” என்றவனின் பேச்சையே கேட்டு கொண்டு இருந்த ஸ்ரீமதி…
“ உங்களுக்கு வலி குறைய.. எங்களுக்கு வலி ஏற்படுத்த நினைச்ச்சிட்டிங்க லே….. இப்போது கூட என் நிலையில் இருந்து நீங்க யோசிக்கல.. நீங்க…”
சொன்னவளின் கண்களில் இருந்து கண்ணீர் ஓ என்று அழவில்லை.. சின்ன சத்தம் கூட இல்லை.. ஏன் உடல் கூட குலுங்கவில்லை.. ஆனால் கண்களில் இருந்து கண்ணீர் அது பாட்டுக்கு வந்தது..
அப்படி வந்த அந்த கண்ணீரை ஸ்ரீமதி துடைக்கவில்லை… கண்கள் குலம் கட்ட தன்னை பார்த்து பேசியவளின் பேச்சில், அந்த பார்வையில்.. நிஜத்தில் குருபவன் கத்தி இல்லாது செத்து விட்டான்…
என்ன சொல்வான்.? என்ன பேசுவான்..? மீண்டும் தப்புக்கு மீது தப்பு செய்தால், மன்னிப்பு… கேட்டால் மட்டும் போதுமா…? உண்மையில் குருபவனுக்கு இப்போது என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை….
வாழ்க்கையில் முதல் முறை அடுத்து என்ன செய்வது என்று திணறி நின்றான்.. அந்த ஆடவன்…
குருபவனுக்கு ஸ்ரீமதியை பார்த்த முதல் பார்வையிலேயே மிகவும் பிடித்து விட்டது.. ஆனால் தனக்கு பிடித்தவளை மற்றவனின் காதலி என்று தான் அவனுக்கு அவளை தெரிந்து கொள்ளும் படியான ஒரு சூழலில் ஸ்ரீமதியை குருபவனுக்கு தெரிந்தது…
அப்போது கூட இன்று போல் அன்று உடைந்து எல்லாம் போகவில்லை.. மனது வலித்தது தான்.. பின் அவனுக்கு அவனையே தேற்றிக் கொண்டவனாக தான் அன்று ரவியை அந்த ஓட்டலுக்கு அழைத்து சென்றது…
அந்த ஓட்டலில் ஸ்ரீமதியை அவன் நிச்சயமாக எதிர் பார்க்கவில்லை… அதுவும் அவள் ப்ரேக்கப் என்று இவன் நினைத்த அந்த நாளில் இவன் நினைத்தது இது தான்….
எனக்கு இவள் தான்.. அதனால் தான் இது போலான நிகழ்வு அன்று நடந்தது என்று நினைத்து கொண்டு தான் அனைத்தும் செய்து முடித்தான்…
திருமண விசயத்தில் அனைத்தும் சரியாக செய்து முடித்து விட்ட குருபவன்.. அதன் பின் நாளில் குடும்ப வாழ்க்கையில் தான் ஏகத்துக்கும் சொதப்பி விட்டான்….
திருமணம் முன் பேசவில்லை என்றாலுமே, முடிந்த பின் தன் மனைவியிடம் மனம் திறந்து பேசி இருக்கலாம்… அப்படி பேசி இருந்தால், தன் மனைவியுடன் ரணப்பட்டு இன்று நின்று இருக்க தேவையில்லை….
தானுமே ஒரு வித மனது சங்கடத்துடனும்..ஒரு வித எதிர் பார்ப்புடனும்.. அவனின் ஐந்து வருட மண வாழ்க்கையை கடத்தி இருக்க தேவையிருந்து இருக்காது….
இவனின் இந்த முட்டாள் தனம் இதோடு முடிந்ததா. இதோ வலி ஏற்பட கத்தியை எடுத்து சே. சே… என்று நினைத்து குருபவன் தன்னையே திட்டி கொள்ள…
ஆனால் ஸ்ரீமதி அவனை திட்டவில்லை.. கத்தவில்லை.. பேசினாள்.. நீ செய்ய இருந்த இந்த செயலின் பின்ளைவுகளை பற்றி பேசினாள்…
“தனியா வந்து ஒன் வீக் தான் ஆகுது.. உங்களின் இந்த செயல்ல. உங்களுக்கு எதுவும் ஆகலேன்னாலுமே… ஒரு சின்ன காயம்.. என்னை தானே காயம் படுத்தும்….
ஏற்கனவே உங்க வீட்டில் புருஷன் கூட இருக்கிறதே பெருசா பேசினவங்க… செய்தவங்க.. இதை என்ன என்ன செய்து இருப்பாங்க உங்க அம்மா…?” என்ற ஸ்ரீமதியின் அந்த கேள்வியில் குருபவன் அதிர்ந்து போய் விட்டான்….
இது போல் இவன் யோசிக்கவில்லை.. ஆனால் மதி சொன்னது போல் செய்ய கூடியவர்கள் தான் தன் அம்மா..
அதுவும் தான் தனியாக வந்தது… சின்ன மகன் பெற்றோர்களிடம் இருந்து வாங்கிய காசு கொடுக்கும் வரை.. அவர்களுக்கு உண்டான செலவை தீபக் தான் செய்ய வேண்டும்.. என்றதில் தன் மீது கோபம் என்பதை விட..
இதை எல்லாம் செய்ய வைப்பது மதி தான் என்று நினைத்து. அவள் மீது கோபத்தில் இருப்பவர்கள்.. கண்டிப்பாக இதையே சாக்காக வைத்து அவள் மனதை காயம் படுத்துவது நிச்சயம் தான்….
அதிர்ந்து பார்த்தவனிடம்.. “என்ன எங்க வீட்டு ஆட்கள் அது போல செய்ய மாட்டாங்க…?” என்று ஒரு சொல்ல போறிங்கலா….?” என்று கேட்டவளிடம் என்ன என்று குருபவன் பேசுவான்..
குருபவன் பேசுவது என்ன..? ஸ்ரீமதியை நிமிர்ந்து பார்க்க கூட அவனால் முடியவில்லை.. நான் என்ன செய்து வைத்து இருக்கிறேன்.. என்ன செய்து இதை சரி செய்ய போகிறேன்.. என்று முழித்து கொண்டு இருக்க…
அடுத்து பிரச்சனை முழுவதும் வெடிக்கும் முன் ஸ்ரீமதியின் தந்தை குருபவன் பேசிக்கு அப்போது அழைத்தார்…
இந்த சமயத்தில் யார்…? என்பதை விட சத்தம் இடும் தன் பேசியை எடுக்க கூட தோன்றாது தான் தலை மீது கை வைத்து கொண்டு அமர்ந்திருந்தான்.. மனது அவ்வளவு கணத்து இருந்தது…
ஸ்ரீமதி தான் கணவனை பார்த்தவள் அங்கு டேபில் மீது இருந்த செல்லில் யார் அழைப்பது என்று பார்த்தவளுக்கு தன் அப்பா என்றதும்…
உடனே அழைப்பை ஏற்று விட்டாள்.. அவளின் தந்தை சும்மா என்று எல்லாம் மாப்பிள்ளையை அழைத்து பேசுபவர் கிடையாது.. அதனால் என்னவோ என்று தான் அழைப்பை ஸ்ரீமதி ஏற்றாள்..
ஆனால் அழைப்பில் சொல்ல பட்ட விசயத்தில்….
“ப்பா ரொம்ப சந்தோஷம்.. நார்மலா…? பெண் குழந்தையாப்பா… பூஜா எப்படி இருக்காப்பா.. ..?”
மனைவியின் பேச்சில் தான் குருபவன் தன் குற்றவுணர்ச்சியில் இருந்து வெளி வந்தது…
குருபவன் மனைவியின் பேச்சில் புரிந்து கொண்டது பூஜாவுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது என்ற விசயம்..
இது வரை நடந்ததை என்னால் மாற்ற முடியாது.. மனைவி ஆசைப்பட்ட அந்த கற்பனை வாழ்க்கைக்கு என்னால் கை கொடுக்க முடியவில்லை…
அதுவும் நானுமே விரும்பியும் கூட… போனது போகட்டும்.. ஆனால் இனி வரும் நாட்களில் மனைவியிடம் இதை பற்றி சொல்ல கூடாது செயலில் காட்ட வேண்டும் என்ற முடிவு செய்தவனாக குருபவன்.. ஸ்ரீமதியிடம்..
“பெண் குழந்தையா மதி…? எந்த ஆஸ்ப்பிட்டல்…?” நார்மல் டெலிவரி என்று மனைவியின் பேச்சின் மூலம் தெரிந்து கொண்டவன் அதை கேட்காது மற்றதை மட்டும் கேட்க…
ஸ்ரீமதியோ.. நீ என்ன மேக் டா என்பது போல் தான் அவனை பார்த்திருந்தாள்…
மனைவியின் பார்வை குருவுக்கு புரிந்தது.. அது ஏன் என்று தெரிந்தது.. இருந்தும் ஒன்றும் பேசவில்லை…
புத்தகத்தை காட்டி.. “ரொம்ப நல்லா எழுதுற.. வாழ்த்துக்கள்.. இது தான் முதல் புத்தகமா..?” என்று தொடர்ந்து கேட்க.. ஸ்ரீமதியிடம் இருந்து பதில் கிடைக்கிறதா…? என்று எல்லாம் குருபவன் பார்க்கவில்லை .. தொடர்ந்து பேசினான்…
ஸ்ரீமதியும் இப்போது தங்கையை பார்க்க போக வேண்டும் என்று கணவன் மருத்துவமனைக்கு கிளம்ப சொன்னதில் கிளம்பியவள் குழந்தைகளுக்கும் சாப்பிட கொடுத்து விட்டவள்..
குழந்தையை எங்கு விட்டு செல்வது என்று ஸ்ரீமதிக்கு யோசனை.. காரணம் தங்கைக்கு குழந்தை பிறந்து இருக்கிறதில் அம்மாவே தங்கையோடு தான் இருக்கிறார்…
அப்பா வீட்டிற்க்கும் மருத்துவமனைக்கும் நடந்து கொண்டு இருப்பார்.. அந்த மருத்துவமனையில் குழந்தைகளையும் அனுமதிக்க மாட்டார்கள்… குழந்தையை எங்கு விட யோசனையில் ஸ்ரீமதி இருக்க…
குருபவன் தன் புல்லட் சாவீயை எடுக்க… அதில் சுயம் வந்தவள்.. காரில் போகலாம்… என்று இப்போது ஸ்ரீமதி முறுக்கி கொண்டாள்..
குருபவனுமே.. மனைவியின் பேச்சை தட்டாது… கார் சாவீயை கையில் எடுக்க. ஸ்ரீமதி பார்வை சொன்னது.
“நீ இவ்வளவு நல்லவன் கிடையாதே..” என்று..
அதை சரியாக புரிந்து கொண்ட குருபவன்.. “தப்பா ஏதோ அர்த்தம் கொண்டு அப்படி நடந்துக்கிட்டேன் மதி. பேசிக்லி நான் நல்லவன் தான்..”
சிரித்து கொண்டே சொன்னவனை ஒரு மாதிரியாக பார்த்தாளே தவிர. அதற்க்கும் ஸ்ரீமதி பதில் பேசவில்லை.. குருபவனுமே மனைவியிடம் இருந்து பதிலை எதிர் பார்க்கவில்லை….
இது வரை பேசாத பேச்சுக்களை மனைவியிடம் பேச வேண்டும்.. காட்டாத காதலை காட்ட வேண்டும்.. வாழாத வாழ்க்கையை வாழ வேண்டும்.. அவளின் கற்பனைக்கு தான் கரம் கொடுக்க வேண்டும் என்பதே…..
இதோ அதன் முதல் படியாக மனைவியின் சொல் கேட்டு கார் சாவீயை எடுத்தவன் போகும் வழியில் மனைவியின் குழந்தை பிரச்சனையை தீர்க்க…
“குழந்தைகளை ரவி வீட்டில் விட்டுட்டு போகலாம்..இப்போ கவிதா அங்கு தான் இருக்கா.. கவிதா குழந்தையும் இருக்காம்… அவள் கூட தியாவும் தீக்ஷாவும் விளையாடிட்டு இருப்பாங்க. அழ மாட்டாங்க…” என்று மனைவி என்ன நினைப்பாள்…? கேட்பாள்…? என்று மனைவி கேட்காதே பதில் சொல்ல.
இப்போதும் ஸ்ரீமதியிடம் இருந்து குருபவனுக்கு பதில் கிடைக்கவில்லை.. பக்கத்தில் அமர்ந்திருந்தவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தாள் அவ்வளவே..
ஆனால் குருபவனுக்கு அதுவே போதுமாக இருந்தது போல. அவள் பார்வையில் அவளை பார்த்து ஒரு காதல் பார்வை பார்த்தான்..
ம் என்று மீண்டும் சாலையை பார்த்த ஸ்ரீமதியின் மனதிலோ… இப்போ இந்த பார்வை பார்த்து என்ன பிரயோசனம் என்ற எண்ணம்.. அவளுக்கு. இதுவும் இரண்டு குழந்தைகளை பெற்ற நிலையில்..
குருபவனுக்கோ… இனி தான் என் காதலை உனக்கு காட்ட உள்ளேன்.. அனைவரும்.. காதலித்து திருமணம் செய்து பின் பிள்ளை பெற்று கொள்வார்கள்.. நாம புதியாதாக குழந்தை பெற்ற பின் காதல் செய்வோம்.. என்று ஒரு முடிவோடு தான் குருபவன் சொன்னது போல குழந்தைகளை ரவி வீட்டில் விட்டனர்..
கணவன் சொன்னது போல கவிதாவும் அவள் குழந்தையும் அங்கு தான் இருந்தனர்.. சிறிது பேசி விட்டு இருவரும் மருத்துவமனைக்கு கிளம்பினர்..
நம் குருபவன் தான் புதியதாக காதல் செய்யும் திட்டத்தில் இருக்கிறானே.. அதனால் வழியில் ஒரு பூ கடையை பார்த்து தன் காரை நிறுத்தினான்..
மனைவியின் பார்வைக்கு.. “பூ வாங்க தான் நிறுத்தினேன்.. உன் தலையில் பூ இல்லை பார்..” என்று சொல்ல. ஸ்ரீமதியோ நீ லூசாப்பா என்ற பார்வை தான் கணவனை பார்த்து வைத்தாள்…
இது என்ன பார்வை என்று யோசித்தவனுக்கு தான் சீ ஆஸ்பிட்டலும் பூ வைத்து கொண்டு போவாங்கலா என்று நினைத்து தன்னையே திட்டி கொண்டவன்… மனைவியை ஒரு வழிசல் பார்வை பார்த்தான்..
இன்னும் இவன் காதலிக்கும் முடிக்கும் வரை.. இது போலான பார்வை எத்தனை பார்ப்பானோ…