எப்போதுமே கூடல் முடிந்த பின் தன் வேலை முடிந்தது என்று திரும்பி படுத்து கொள்ளும் கணவன்.. அன்று கூடலுக்கு பின் கூட மனைவியிடம் பல கதைகள் பேசினான்..
பெண்களுக்கு முழு கூடல் இல்லாது ஆசை வார்த்தைகளும் சின்ன சின்ன தீண்டல்களும் தானே மன நிறைவை தரும்.. அந்த மன நிறைவு திருமணம் முடிந்து ஐந்து ஆண்டுகள் கடந்த பின் தான் ஸ்ரீமதி அனுபவித்தாள்..
அதே உணர்வுதான் குருபவனுக்குமே, அன்று ஏதோ மனதிலும் சரி உணர்வாகவும் சரி முழு மனது நிறைவு போல குருபவன் உணர்ந்தான்..
அது கொடுத்த தாக்கத்தில் தன் கை மனைவியின் மீது பட்டு கொண்டே இருக்கும் படியாக தன் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள்…மறக்க முடியாத விசயங்கள்.. சந்தோஷத்தை கொடுத்தது.. துக்கத்தை கொடுத்தது..
ஏன் தன் சிறுவயது க்ரஷ் கூட தன் மனைவியிடம் மனம் திறந்து சொல்லி மனைவியிடம் இருந்து ஒரு சில செல்ல அடிகளை கூட குருபவன் பெற்று கொண்டான்..
குருபவனுக்கு மனைவி கொடுத்த அந்த அடி கூட சாமரசம் வீசுவது போல் தான் இருந்தது…
“ உனக்கு ஏதாவது இருக்கா.. என் போல க்ரஷ்…?” “ என்று கேட்ட கணவனை அந்த சிறு வெளிச்சத்தின் ஒளியில் அவன் முகத்தை பார்த்தவள்.. ஒன்றும் பேசாது இருக்க.
ஸ்ரீமதி ஒன்றும் பேசாத அந்த இடைப்பட்ட சில மணி துளிகள்… கூட குருபவனுக்கு நரகமாக ஆனது.. சிறித்து நேரம் முன் இருந்த அந்த இலகு மனநிலை மாறி.. ஒரு பெரிய குண்டை வைத்தது போல மனது கணத்து போக..
அவளையே பார்த்து கொண்டு இருந்த கணவனை பார்த்த ஸ்ரீமதி கணவனின் முகபாவனையில் சட்டென்று சிரித்து விட.. மனைவியின் அந்த சிரிப்பில் தான்…
குருபவன் தன் மனைவி தன்னை பயம் முறுத்த பார்த்து இருக்கிறாள் என்று புரிந்து கொண்டவனுக்கு… அவ்வளவு கோபம்..
“எதிலாவது விளையாடு மதி.. ஆனா இதுல.. விளையாட்டுக்கு கூட. வேண்டாமே.. இனி இது போல ஒரு சின்ன க்ரஷ் கூட உனக்கு இருந்தது என்று சொல்லாதே..” என்ற கணவனையே பார்த்து கொண்டு இருந்த ஸ்ரீமதி.
“இல்ல நிஜமா எனக்கு ஒரு க்ரஷ் கூட இல்ல.. ஆனா எனக்கு வர போகும் கணவன் இப்படி இருக்கனும் என்ற ஒரு எதிர் பார்ப்பு எனக்கு இருந்தது…” என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே ஸ்ரீமதியின் முகம் கொஞ்சம் கசங்கி தான் போனது..
என்ன தான் போனது போகட்டும் இப்போதான வாழ்க்கை என்று நினைத்தாலுமே, ஒரு சில விசயங்களை மறக்க முடியாது தானே..
அதுவும் திருமணம் ஆன புதியதில், ஸ்ரீமதி அப்படி ஒரு எதிர்பார்ப்பை வைத்து கொண்டு தான் கணவனின் கை பிடித்து கணவன் வீடு வந்தாள்..
தனக்கு மிகவும் பிடித்த அந்த புல்லட்டில் தன்னை வெளியில் அழைத்து செல்ல வேண்டும்.. தன்னிடம் ஆசையாக பேச வேண்டும்.. தன்னையே தான் முதன்மையாக நினைக்க வேண்டும்.. என்று எத்தனையோ.. ஆசைகள் அவளுக்கு இருந்தன.
ஆனால் அதில் ஒன்று கூட நிறைவேறாது போனது.. அது ஏன் என்று காரணம் தெரியாது எத்தனையோ இரவுகள் தன்னை நாடிய பின் கணவன் படுத்து உறங்கியும் இவள் உறங்காது காரணம் தேடி இவள் முழித்து கொண்டு இருந்த இரவுகள் பல… அதை நினைக்கும் போதே ஸ்ரீமதியும் முகம் கசங்கி போக.
மனைவியின் இந்த முகம் கசங்களுக்கு உண்டான காரணம் குருபவனுகு புரிந்து போக. தன் நெஞ்சத்தில் மனைவியின் முகத்தை பதிய வைத்து கொண்ட குருபவன்..
“புரியாது செய்துட்ட இந்த புருஷனை நீ மன்னிக்க மாட்டாயா மதி.. ப்ளீஸ்…” என்றவன் தன் நெஞ்சத்தில் இருந்த மனைவியின் முகத்தை தன்னை பார்க்கும் மாறு வைத்து கெஞ்ச.. ஸ்ரீமதி என்ன நினைத்தாளோ…
மனம் இறங்கினாலும் … “அது இனி நீங்க எப்படி நடந்துக்குறிங்க என்பதை பொறுத்து தான் இருக்கு…” என்று பிகு செய்து கொண்டவளை கெஞ்சி.. கொஞ்சி. என்று மறுநாள் விடியலில் மனைவியின் மனதை தன் வசம் செய்து கொண்டு விட்டான் தான்..
மறுநாள்.. மீண்டும் ஸ்ரீமதிக்கு முன் நாள் மாமியார் வீட்டவர்கள் பேசி சென்றது நினைவுக்கு வர… அன்றும் தியாவை பள்ளிக்கு விட்டு வந்த பின்…
“உங்க தம்பி தானே..ஏதாவது செய்யலாம் தானே…” என்று ஸ்ரீமதி கேட்டதற்க்கு…
குருபவன்… “ நான் அது வில்லங்கம் பிடித்த இடம் என்று சொன்ன பின் கூட அவன் கொழுப்பு பிடித்து இன்னும் பணத்தை கொடுப்பான். பிரச்சனை என்று வந்தால் நான் போய் நிற்கனுமா…?”
குருபவன் தன் பேச்சை கேட்காத தம்பிக்கு நான் ஏன் செய்ய வேண்டும் என்று வாதம் செய்தான்..
ஸ்ரீமதி.. “ அப்போ ஒருத்தவங்க உங்க பேச்சை கேட்டா தான் அவங்களுக்கு நீங்க உதவி செய்வீங்க. இல்லேன்னா இல்லையா…?” என்று கேட்ட ஸ்ரீமதி.
“ அப்போ நாளைய பின்னே உங்க பேச்சு கேட்காம நான் ஏதாவது பிரச்சனையில் மாட்டிக்கிட்டா… நீங்க எனக்கு உதவி செய்ய மாட்டிங்க.. அப்படி தானே…?” என்று கேட்டவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாது பாவம் குருபவன் தான் தவித்து போய் விட்டான்..
அன்று மட்டும் இல்லாது அந்த ஒரு வாரமும். இதே பேச்சு தான் அவர்கள் இருவருக்கும் இடையே நடந்தது.. குருபவன் மனைவியை இரவில் செய்த தாஜா எல்லாம் விடியலில் மறைந்து விடும்.. நாம் செய்த ராஜதந்திர வேலைகள் எல்லாம் பாழாகி போனதே என்ற நிலையில் தான் குருபவன் இருந்தான்..
மனைவியின் தொடர் பேச்சிலும்.. அதுவும் ஸ்ரீமதி சொன்ன….
“ கவிதா இப்போது குழந்தை உண்டாகி இருக்கிறாள்.. இந்த சமயம் அவள் மனதிற்க்கு அமைதி வேண்டும்.. அந்த பணம் போனதில் கணவன் மனைவி இருவருக்கும் தினம் தினம் சண்டையாம்..”
“உங்க தம்பி என் அண்ணன் சொன்னான். இந்த இடம் வேண்டாம் என்று உங்க அப்பா பேச்சு கேட்டு தான் நான் பணத்தை கொடுத்தேன்.” என்று தான் ஏமாந்ததிற்க்கு முழு காரணமும் உன் அப்பா தான் என்று தீபக் மனைவியிடம் தர்க்கம் செய்ய.
கவிதாவோ… “உங்க எல்லா கடனையும் அடச்சது என் அப்பா தான்.. என் அப்பா மீதே மொத்த பழியையும் போடுவீங்கலா நீங்க…”
“உங்களுக்கு திறமை இல்லை. அது தான் நீங்க எடுத்து வைக்கும் ஒவ்வொன்னும் இப்படி முடியுது… என்னவோ உங்களுது இந்த பணம் தான் போனது போல பேசுறிங்க… நீங்க சம்பாதித்த எல்லாமே ஏமாந்து தானே போனிங்க…”
“என் அப்பா உங்க அண்ணன் பொறாமை படுறான் என்று சொன்னதுமே தானே பணத்தை எடுத்து அந்த இடத்திற்க்கு கொடுத்திங்க… நான் சொல்றான் உண்மையில் உங்களுக்கு தான் பெரிய அத்தான் மீது பொறாமை…”
“உங்க அளவுக்கு படிப்பு இல்லை என்றாலும், உங்களை விட முன்னுக்கு வந்த பெரிய அத்தான் மீது உங்களுக்கு தான் பொறாமை…” என்று கணவன் மனைவி தாங்கள் ஏமாந்த பணத்திற்க்கு உண்டான பழியை ஒருவர் மீது ஒருத்தர் போட.. முடிவில் தீபக் மனைவியை அடித்து விட்டான்…
பொதுவாக கணவன் மனைவியை அடித்தால் மனைவி கணவன் மீது கோவித்து கொண்டு தாய் வீட்டிற்க்கு செல்வாள்..
இங்கு அந்த மனைவி இருப்பதே தன் தாய் வீடு என்ற போது.. அதுவும் தீபக் அவன் மாமன் முன் அதாவது கவிதாவின் அப்பாவின் முன்னே மனைவியை கை நீட்டி விட்டான்…
அதை பார்த்த கவிதாவின் அப்பாவோ.. “ என் மகளுக்காக தான் உனக்கு இத்தனையும் செய்தேன்.. என் மகள் மீதே கை வைக்கிறியா..?” என்று சொல்லி தீபக்கை அவன் மாமனார் மரியாதை குறைவாக பேசி விட…முடிவில் தீபக் தான் தன் தாய் தந்தை இருக்கும் வீட்டிற்க்கு வந்து சேர்ந்தது…
இந்த விசயங்கள் அனைத்துமே குருபவனின் தந்தை ஸ்ரீமதியுடம் கூற. ஸ்ரீமதி கணவனிடம் இதை வைத்து இன்னும் பெரிய சண்டையாக இட…
முடிவில் குருபவன் அந்த பணத்தை வாங்கி கொடுக்கும் வேலையில் இறங்கினான்.. அப்போது கூட தன் தம்பிக்காக கிடையாது… முன் தான் மனைவியின் விருப்பம் போல தன்னால் நடந்து கொள்ள முடியவில்லை.. இப்போது அவள் கேட்பது என்ன. தம்பி கொடுத்த அந்த பணத்தை வாங்கி கொடு என்று தானே..
அந்த வீட்டின் உரிமையாளரிடம் போய் பேசலாம்.. என்று குருபவன் முடிவு செய்தான். இந்த முடிவை குருபவன் எடுக்க மனைவி ஒரு காரணம் என்றால், மற்றொரு காரணம் அவனின் தந்தை…
இதை வைத்து வீட்டில் பெரிய பிரச்சனை இருக்க போய் தான் தன் தந்தை பிரச்சனை தாங்க முடியாது மருமகளிடம் புலம்பி உள்ளார்.. தன்னிடம் இது செய் என்று அவரால் சொல்லவும் முடியாது அவரின் தவிப்பு புரிய… தம்பி பணம் கொடுத்தவனிடம் குருபவன்…
முதலில் முறையாக தான் தன் பக்கம் இரு ஆட்களை அழைத்து சென்று குருபவன் பேசினான்
“அந்த சொத்து உங்களுக்கு மட்டும் உரிமை இல்லாத போது அதை விலை பேசியதே தப்பு… இதுல பத்து லட்சம் என் தம்பி கிட்ட இருந்து அட்வான்ஸ் வாங்கி இருக்கிங்க…”
“ அந்த சொத்துக்கு உரிமை பட்டவன் இன்னொருத்தன் வந்து இருக்கான்.. இப்போ அவர் கேஸ் போட்டு இருக்கார். இது உங்க பிரச்சனை என் தம்பி கிட்ட வாங்கிய பணம் கொடுத்து விடுங்க …” என்று கேட்டதற்க்கு…
பணம் வாங்கியவரோ… “ பணம் செலவு ஆகிடுச்சி.. கேஸ் என் பக்கம் தான் ஜெயிக்கும் கவலை படாதிங்க… அந்த வீட்டை உங்க தம்பிக்கே கொடுக்கிறேன்.. “ என்று சொல்ல..
“கேஸ் என்று கோர்ட்டுக்கு போனா எத்தனை வருஷம் இழுத்து அடிக்கும் என்று தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை… அதோடு நியாமே இல்லாது உங்க பக்கம் ஜெயிக்கும் என்று காத்துட்டு இருக்கும் அளவுக்கும் நான் ஒன்னும் தெரியாதவனும் இல்ல…”
“ புரியுதுங்கலா… ஒரு வாரத்தில் என் தம்பி கொடுத்த பணம் வந்து ஆகனும்.. இல்லேன்னா நடப்பதே வேறு.” என்று மிரட்டி விட்டு தான் வந்தான் குருபவன்..