தியா கதவை திறந்த நொடி வீட்டிற்க்குள் நுழைந்த குருபவனின் கண்கள் மனைவியை தான் தேடியது.. தேடியவனின் கண்களுக்கு மூலையில் அமர்ந்து தன்னை மறந்த நிலையில் பிதற்றிக் கொண்டும், அழுது கொண்டும் இருந்த மனைவியை தான் ..
தியா.. “ப்பா…” என்று அழைத்ததை கூட கவனியாது மனைவியிடம் தான் ஓடினான்.. அவனை பின் தொடர்ந்து வந்த ரவி தான்.. தியாவை தூக்கி கொண்டது..
அடுத்து அங்கு நடந்த நிகழ்வுகளை பார்த்த ரவிக்கு அந்த ரவுடிகளே பரவாயில்லை போல என்ற நிலையில் தான் அங்கு சூழ்நிலை நிலவியது…
குருபவன் ..” மதி… மதி… என்னை பார். என்னை பார்…” என்று முதலில் மென்மையாக மனைவியின் கன்னத்தை தட்டி மதியை நிகழ்வுக்கு கொண்டு வர முயன்றதில் தோல்வி அடைந்தவன்..
பின் அந்த கன்னம் தட்டலை மென்மையில் இருந்து வன்மைக்கும் மாறியும் மதி நிகழ்வுக்கு வருவதாக காணும்…
மதி பாட்டுக்கு.. “ எல்லாம் என்னால தான்.. எல்லாம் என்னால தான்..” என்று மார்பில் அடித்து கொண்டு அழுதுக் கொண்டு இருந்தவள்..
பின்.. “ அவருக்கு என்னவோ ஆயிடுச்சி.. அது தான் இவ்வளவு நேரம் ஆகியும் வரல…” தன் கண் முன் இருந்த கணவன் அவள் கண்ணுக்கு தெரியாது அவள் பாட்டுக்கு பிதற்றிக் கொண்டு இருந்தாள்..
மனைவியை நிகழ்வுக்கு கொண்டு வர அனைத்து முயற்சியும் செய்தும் முடியாது போக…
.
குருபவன் என்னை நினைத்தானோ.. அன்னையின் மடியில் அமர்ந்து கொண்டு தன்னையே பார்த்து கொண்டு இருந்த தீக்க்ஷாவிடம்..
“ரவி அங்கிள் கிட்ட போடா செல்லம்…” என்று குரு சொன்னதுமே தீக்க்ஷாவுமே அன்னையின் இந்த தொடர் அழுகை பிதற்றில் பயந்து இருந்தால் போல. சட்டென்று ரவியை நோக்கி ஓட..
ரவியும் தியா இப்போது கொஞ்சம் சமாதானம் ஆகி விட்டதால், அவளை கீழே இறக்கி தீக்க்ஷாவை தூக்கி கொண்டவன்.. நினைத்தது.. குழந்தைகளை தன் வீட்டிற்க்கு அழைத்து செல்ல சொல்கிறான் என்று தான்…
ஆனால் அவனோ.. “குழந்தைகளின் கண்ணை மூடு ரவி…” என்று குரு சொன்னதுமே என்ன என்று தெரியாது போனாலுமே… ரவியின் கைகள் தன் பாட்டுக்கு ஒரு கை கொண்டு தியாயின் கண்ணையும் மறு கை கொண்டு தீஷாவின் கண்களையும் மூடிக் கொண்டவன் தன் கண்ணை மூட மறந்து விட்டான்..
அதனால் அவன் கண்களுக்கு தெரிந்ததோ.. ஆங்கில படத்தில் அவன் பார்த்த முத்தக்காட்சியை இப்போது நேரிடையாக பார்க்கும் பாக்கியத்தை பெற்றான்..
பார்த்த நொடி.. “ ஏய் என்ன டா செய்யிற..? உன்னை டாக்டர் ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்கார் டா…” என்று அதிர்ந்து கேட்டவனை திரும்பி பார்த்த குரு…
“உன்னை கண்ணை தானே மூட சொன்னேன்..” என்றது தான்..
“ டேய் நல்லவனே… நீ குழந்தைகள் கண்ணை தானேடா மூட சொன்ன…?” என்று அவனும் நண்பனின் பேச்சில் கோபத்துடன் தான் கேட்டான்..
“ உன் கண்ணை உன் கை கொண்டு தான் மூட முடியுமா…? அது கூட தெரியாத முட்டாளா.. நீ…” என்றும் கேட்டவனிடம்..
“ நீ இப்படி செய்வே என்றா நான் நினச்சேன்.. அதுவும் இது போலான சூழ்நிலையில்…” என்று குருவிடம் பேசி கொண்டு இருந்தாலும், ரவி இப்போது தான் ஒன்றை கவனித்தான். அது இப்போது ஸ்ரீமதி அழுகாது புலம்பாது கணவனையே அதிர்ச்சியுடனும்.. ஆராய்ச்சியுடனும் பார்த்து கொண்டு இருப்பதை தான்…
இது என்ன டா அதிசயம். என்று ரவி பார்க்கும் முன்னே… இது என்னடா அதிர்ச்சி ஆச்சரியம் இன்னும் இருக்கு பாருடா என்ற வகையாக குருவாவது குழந்தைகளின் கண்ணை மூடு என்று சொல்லி மனைவிக்கு தன் காற்றை கொடுத்து தான் நன்றாக இருப்பதை மனைவிக்கு உணர்த்தினான்..
ஆனால் மதியோ… கணவன் நலமாக இருப்பதை உணர… தன் மூச்சு காற்றை கணவனுக்கு கொடுக்கும் போது ரவி என்ன குழந்தைகள் இருப்பதை கூட மறந்து தான் போய் விட்டாள்..
ரவி தான் அவர்களை பார்க்காது திரும்பி நின்றுக் கொண்டதோடு குழந்தைகளையும் திருப்பி கொண்டவன்..
இப்போது நாம இங்கு இருப்பதா..? இல்லை குழந்தைகளை தன் வீட்டிற்க்கு அழைத்து செல்வதா என்பது தான்..
ஆனால் டாக்டர் குருவை ஒரு வாரம் ஒய்வில் இருக்க சொல்லி இருப்பது நியாபகத்தில் வர.. இவர்களை தனியே விட்டு சென்றால், குரு ஒய்வில் இருப்பான் என்று அவனுக்கு தோன்றவில்லை..
அதனால் அங்கு இருந்து போகாது சிறிது நேரம் கழித்து அவர்களை நோக்கி மெல்ல மெல்ல தான் திரும்பி பார்த்தான்..
இன்னும் நான் என்ன எல்லாம் பார்க்கும் படி இருக்குமோ என்ற பயத்திலேயே பார்த்தவனுக்கு நல்ல வேலை இப்போது ரொமன்ஸ் சீன் ஓடாது. சென்டிமென்ட் சீன் தான் அவர்களுக்கு இடையே ஓடிக் கொண்டு இருந்தது..
ரவி பார்க்கும் போது மதி.. “நீங்க நீங்க எப்படி..? உங்களுக்கு உங்களுக்கு…?” என்று ஏதோ யோசித்து யோசித்து பேசியவளின் கண்கள் குருபவனின் உடலை வலம் வந்தன..
அப்போது தான் மதி ஒன்றை உணர்ந்தாள்.. குருபவன் மேல் சட்டை போடாது உள் பனியன் அணிந்து கொண்டு இருந்தது.. அதுவும் அந்த பணியன் கூட அவனுடையது இல்லை என்பதும்..
உடனே மதி.. “ பனியனை கழட்டுங்க. கழட்டுங்க…” என்று .. இப்போது ரவி புரிந்து கொண்டான் எதற்க்கு என்று..
அதனால்.. “ பெருசா ஒன்னும் இல்ல மதி.. சும்மா அவங்க மிரட்ட தான் குத்தி இருக்காங்க.. “ என்று ரவி சொல்லியும் மதி நம்பாது கணவனை தான் பார்த்தாள்..
“உண்மை மதி.. பெருசா எல்லாம் ஒன்னுமே இல்ல..ஸ்டிச்சர் போடும் அளவுக்கு கூட இல்ல. பெருசா இருந்தா வீட்டிற்க்கு அனுப்பி இருப்பாங்கலா…” என்று சொல்லியும் அவள் நம்பாத பார்வையை தான் மதி கணவனை பார்த்தது…
‘ என் கண்ணால் பார்த்தால் தான் நான் நம்புவேன்..’ என்பது போல கணவன் முகத்தையும், அந்த பனியன் மறைத்து இருந்த பகுதியையுமே அவள் கண்கள் மேய.
இவள் பார்க்காது நம்ப மட்டாள் என்று அவனுமே பனியனை கழட்டி பார் ஒன்றும் இல்லை.. என்று குரு சொன்னது எல்லாம் மதியின் காதில் விழவில்லை..
அவள் கண்களுக்கு தெரிந்த அந்த வெள்ளை கட்டையும் தான்டி சிவப்பாக படிந்து இருந்த அந்த ரத்த கரையையே பார்த்து கொண்டு இருந்தவளின் கைகள் மெல்ல அந்த காயத்தின் மீது வைத்தாள்..
வைத்தவள்.. “ இது உங்களுக்கு சின்ன காயமா….? எல்லாம் என்னால தானே ரொம்ப வலிக்குதுதாங்கலா…?” என்று கேட்டவளுக்கு வலிப்பது போலவே அவள் முகத்தில் அத்தனை வலியின் சாயல்….
“ஏய் ஒன்னும் இல்லடா…” என்று எப்படி தனக்கு ஒன்றும் இல்லை என்று மனைவிக்கு புரிய வைப்பது என்று குருபவன் திணறும் போதே ரவியிடம் இருந்த தியா தந்தையிடம் ஓடி வந்தவள்.
“ப்பா என்னப்பா என்ன ஆச்சு..” என்று தியாவுமே… என்னவோ ஏதோ என்று பயந்து போய் தந்தையை பார்க்க..
ரவி தூக்கி வைத்து கொண்டு இருந்த தீக்ஷாவுமே.. அப்பாவுக்கு அடிப்பட்டு இருப்பது புரிந்து கொண்டது போல..
“ஊ..ஊ.” என்று தந்தையின் பக்கம் கை நீட்டி நீட்டி அழ. தன்னை சுற்றி மூன்று தேவதைகள் இருக்க.. தனக்காக இல்லை என்றாலுமே, இவர்களுக்காகவாவது தன்னை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.
அதை மனைவியிடமும் சொல்ல செய்தான்..
“ இனி நான் என்னை கவனமா பார்த்து கொள்கிறேன் மதி.. பாரு உன்னை பார்த்து குழந்தைகளும் ரொம்ப பயந்து கொள்றாங்க..” என்று சொன்னவனின் பேச்சில் தன்னை சிறிது நிலை நிறுத்திக் கொண்டாலுமே. அவளுக்கு மனது ஆறவில்லை…
“நீங்க நீங்க நான் இதுல தலையிட மாட்டேன் என்று தான் சொன்னிங்க.. ஆனா ஆனா நான் தானே…உங்க தம்பிக்கு உதவி செய் என்று சொன்னது..”
“வெளியில் இருந்து வந்த பெண் நான் உங்க தம்பியே வேறு ஆளா பார்க்கல. ஆனா ஆனா அவர் எப்படிங்க உங்களை விட்டுட்டு ஓடி வந்து இருப்பாரு.. ரவி அண்ணா இருக்க தொட்டு ஆச்சி இல்லேன்னா இல்லேன்னா ..” “என்னால நினச்சி கூட பார்க்க முடியலேங்க..” என்று மதி சொல்லி கொண்டு இருக்கும் போதே அவள் உடல் பயத்தில் உதற. சொன்னதை ரவி இல்லாத அந்த சூழலில் நடந்து இருந்தால் என்று யோசித்து பார்த்து இருப்பாள் என்பதை அவள் உடலின் உதறல சொன்னது..
“ஏய் அது தான் ஒன்னும் நடக்கலலே… விடு.. சும்மா சும்மா அழுதுட்டு பயந்துட்டு இருந்தா குழந்தைங்க பயப்படுறாங்க பாரு..” என்று குருபவன் பேச்சிலும் …
ரவி சொன்ன… “டாக்டர் குருவுக்கு ஏதாவது சாப்பிட கொடுத்துட்டு இந்த மாத்திரைங்களை எல்லாம் கொடுக்க சொன்னாங்க…” என்ற பேச்சிலும் தான் மதி கொஞ்சம் நிதானத்துக்கு வந்தது…
இப்போது மதிக்கு குழந்தைகளை பார்ப்பதா..? கணவனை பார்ப்பதா..? என்று இருவரையும் மாறி மாறி பார்த்தாள்..
கணவனுக்கு சாப்பிட ஏதாவது கொடுத்து மாத்திரை கொடுத்தால் தான் வலி குறையும்.. ஆனால் குழந்தைகளும் பாதி தூக்கத்தில் எழுந்ததில் தூக்க கலக்கத்துடன் இருப்பதை பார்த்தவளுக்கு யாரை என்று யோசிக்கும் போதே ரவி…
“ ஸ்ரீ நான் குழந்தைகளை தூங்க வைக்கிறேன்.. நீ போய் குருவை கவனி..” என்ற சொன்ன ரவி அவர்கள் படுக்கை அறையில் எப்படி போவது என்று தயங்கி நின்றவனை…
மதி தான்.. “ அண்ணா போங்க..” என்று ரவியின் கையை உரிமையுடன் பிடித்து தங்கள் அறைக்குள் தள்ளினாள்…