கவிதை – 11
மாலை வீட்டிற்கு வரும் முன்னரே ஹாஸ்பிட்டல் சென்று கீர்த்தனாவின் கை காயத்திற்கு மருந்திட்டுவிட்டு தான் வந்தனர்.
இரவு உணவின் பொழுது கீர்த்தனாவால் அங்கே அமர்ந்து சாப்பிடமுடியாமல் போனது அவளுக்கு ஒரு நிம்மதி.
காலை நிகழ்வு அவளின் மனதில் இன்னமும் வாட்டத்தை கொடுத்துதான் இருந்தது. அதனை கொண்டு நடந்தது நல்லதற்கு தான் என்று நினைத்துக்கொண்டாள்.
“நான் மேல போகட்டுமா?…” என அக்னியிடம் கீர்த்தனா கேட்க,
“நான் இங்க தானே இருக்கேன்? நீ தனியா என்ன பண்ணுவ?…” என்றவன்,
“சாப்பிட்டு போகலாம். இல்லைன்னா எடுத்துட்டு வரேன், சேர்ந்து சாப்பிடலாம்…” என்று அவளிடம் அவன் சொல்லிக்கொண்டிருக்க,
“அக்னி, நீ இங்கயே சாப்பிட்டு அப்பறமா கீர்த்திக்கு கொண்டு போ…” என சந்திரிகா சொல்ல மறுக்க முடியாமல் அவனுமே சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டான்.
கீர்த்தனா வெறுமனே அமர்ந்திருக்க சுபாவும், சாதனாவும் இடையிடையே அவளை பேச்சில் இழுத்தபடி சாப்பிட்டார்கள்.
“ஸ்பூன் எடுக்க முடியும்னா சாப்பிடேன்மா கீர்த்தி…” என பன்னீர் செல்வம் சொல்ல வேறு வழியின்றி அவரின் பேச்சை தட்ட முடியாமல் இட்லியை எடுத்து வைத்து ஸ்பூனில் சாப்பிட அவளுக்கு அக்னி உதவினான்.
அவர்கள் உண்டு முடித்து அவர்கள் கலைந்து சென்றதும் கீர்த்தனாவின் பக்கம் திரும்பியவன்,
“அவங்க சொன்னா பரவாயில்லை, நேரமாகட்டும்னு சொல்றதுக்கென்ன? நான் உனக்கு தரமாட்டேனா?…” என முறைப்புடன் கேட்க,
“மாமா சொல்லும் போது இருக்கட்டும்ப்பா நான் குடுக்கறேன்னு நீங்களும் சொல்லலாம் தானே? என்னை மிரட்டறீங்க?…” என்றாள் கீர்த்தனாவும்.
அவளை பார்த்தபடி எழுந்தவன் எதுவும் பேசாமல் மாடிக்கு திரும்ப ‘கோவித்துக்கொண்டானோ?’ என நினைத்து அப்படியே அமர்ந்திருந்தாள் கீர்த்தனா.
“கூப்பிட்டா தான் வருவியா? வா…” என்று அவன் திரும்பி பார்த்து அழைத்த பின்னர் தான் எழுந்து அவனின் பின்னே சென்றாள்.
அறைக்குள் நுழைந்தத்தில் இருந்து உடை மாற்ற, புத்தக அலமாரியில் எதையோ தேட என்று அவன் சுற்றிக்கொண்டு இருக்க அவனிடம் எப்படி கேட்பதென்று அமைதியாய் அமர்ந்திருந்தாள்.
“என்ன கீர்த்தனா ஏதாவது பேசனுமா?…” என வேண்டுமென்றே அவளிடம் சீண்ட,
“ஒரு ஹெல்ப்…”
“சொல்லேன்…” என அவளின் முன்னால் வந்து நிற்க,
“இந்த பேக்ல என்னோட ட்ரெஸ் இருக்கும். இதை ஓபன் பண்ண முடியலை. அதான்…” என சொல்ல,
“ஓஹ், எடுத்து குடுத்தா போதுமா?…” என்றான் சிரிப்புடன்.
“போதும் போதும், நைட்டி மாத்திட்டு வந்துருவேன்…”
“ஓஒஹ், எடுக்க மட்டும் தான் ஹெல்ப்பா?…” என அதையும் கிண்டலாய் கேட்டவன் பேக்கை தூக்கி வைத்துவிட்டு அப்படியே நிற்க,
“தள்ளுங்க, நானே எடுத்துக்கறேன்…” என அவனின் முகம் பார்க்காமல் அவள் பேக்கை எடுக்க கை நீட்ட அதை தூக்கி வைத்துக்கொண்டு போக்கு கட்டினான் அக்னி.
“நான் ஊட்டறேன்னு சொல்லியும் ஸ்ட்ரெய்ன் பண்ணி நீயே சாப்பிட்ட தானே? எவ்வளவு ஏத்தம் உனக்கு?…”
“இது ஒரு பிரச்சனையா? சாப்பிடுன்னு மாமா சொல்லும் போது என் புருஷன் ஊட்டுவாருன்னா சொல்லமுடியும்? அதான் நீங்க ஹெல்ப் பண்ணுனீங்க தானே?…”
“இதுதான் பெரிய பிரச்சனை. அது ஒரு ஹெல்ப்பா? நல்லா சொன்ன…”
“ப்ளீஸ் பேக்கை குடுங்க, காலையில இருந்து இந்த புடவையிலையே இருக்கேன். ஒரு மாதிரி கசகசன்னு இருக்கு…” என்றவளை ஆழ்ந்து பார்த்தவன்,
“நமக்கு நேத்து தான் கல்யாணம் ஆகிருக்கு கீர்த்தனா. என்னமோ பத்துவருஷம் ஆனா மாதிரி பேசற…”
“வேற எப்படி பேசனும்? குடுங்க பேக்கை…”
“அம்மா வைய்யும் சந்தைக்கு போகனும்…” என அவனும் அவளை போல சொல்லி பார்க்க,
“கிண்டலா?…” என்றாள் கீர்த்தனா.
“நீ தான் கிண்டல் பன்ற? நேத்து அவ்வளோ பிரச்சனை சால்வ் பண்ணின பின்னாடியும் நீ எடுத்துக்குடுங்கன்னு நின்னா மனுஷனுக்கு காண்டாகுமா ஆகாதா?…” என்று சண்டைக்கு நிற்பதை போல அவளிடம் அவன் பொரிய,
“ஐயோ போதும்…” என்று அவனை தாண்டிக்கொண்டு அவனின் முதுகில் ஒளிந்து நிற்க அவளின் செயலில் புன்னகைத்தவன்,
“முன்னாடி வந்து நில்லு கீர்த்தி. சும்மா சும்மா ஒளிஞ்சிட்டு…” என திரும்பி நின்று இடுப்பில் கை வைத்து அவன் நின்றான்.
“ஒன்னும் இல்லை. பேக்கை குடுங்க. மாத்திக்கறேன்…”
“ம்ஹூம், மாத்திவிடுங்க. எங்க சொல்லு பார்ப்போம். மாத்தி விடுங்க…” என பாடம் நடத்துவதை போல அவன் சொல்ல,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். குடுங்க நீங்க…”
“முடியாது. முடியாது. நான் சொல்றதை நீ கேளு. என்னை பார்த்தா எப்படி தெரியுது?. இது கூட தெரியாமலா இத்தனை வருஷம் வளர்ந்து உனக்கு புருஷனாகிருப்பேன். என்னை நீ அண்டர் எஸ்டிமேட் பண்ணிவச்சிருக்க…” என்று புகார் மேல் புகார் சொல்லியவனின் பார்வை அவளை துளைக்க,
“ஒன்னும் வேண்டாம். நான் இப்படியே தூங்கறேன்…” என அவள் சென்று படுத்துக்கொள்ள சிரிப்போடு அவளருகே வந்து கட்டிலில் சாய்ந்தமர்ந்தவன் தன் பக்கமாய் அவளை திருப்பி அவளின் கையை விரித்து பார்த்தான்.
“ரொம்ப எரியுதா?…” என கேட்க அவனின் மடியில் தலை சாய்த்துக்கொண்டவள்,
“ஹ்ம்ம், ஆமா. அதுவும் இந்த ஆயின்மென்ட் ரொம்ப எரிச்சல் குடுக்குது…” என்றாள் முகத்தை சுருக்கி.
கைகளை தன் இதழருகே கொண்டு சென்று மெதுவாய் காற்றை இழுத்து ஊதியவன் கண்கள் அவளின் உள்ளங்கையிலேயே இருந்தது.
“நீ பிள்ளையார் பிடிப்ப தானே?…” என்றான் சிரிப்புடன்.
“ஹ்ம்ம், உங்களுக்கு எப்படி தெரியும்?…” ஆச்சர்யத்துடன் அவள் கேட்க,
“நேத்து சொன்னேனே? நியாபகம் இல்லையா?…” என கள்ளப்புன்னகையுடன் கேட்க,
“எப்போ என்ன சொன்னீங்க?…” என்று எழுந்தமர்ந்து கதை கேட்கும் பாங்கில் உட்கார அவளை குறும்புடன் பார்த்தவன்,
“நேத்து நான் சொன்ன ரெண்டாவது பிரச்சனை இதுதான். ஞாபகம் இல்லைன்னு சொல்றியே?…” என அவளின் கன்னத்தை நிமிண்டி,
“சரியா பிரச்சனையை சொல்லலையோ?…” என கேட்டுக்கொண்டே தன் கைகளால் அவளுக்கு குறுகுறுப்பு மூட்ட கூச்சத்தில் நெளிந்தவள் அவன் மீதே சாய்ந்தாள்.
“கை வலிக்குதா கீர்த்தி?…” என்றான் மீண்டும்.
“ஹ்ம்ம், ம்ஹூம்…” என ஆமோதித்தும் மறுத்துமாக அவனின் அணைப்பினுள் சொல்ல,
“ஹேய் இதை நான் என்னன்னு மீன் பன்றதாம்?…” என சிரித்துக்கொண்டே கேட்டவனுக்கு,
“உங்க இஷ்டம்…” என அவள் சொல்ல,
“உனக்கு கஷ்டமில்லையே…” என மனைவியின் கன்னத்தில் மீசையால் உரசியபடி கேட்க,
“ப்ச், பேசாதீங்க…” என்று வெட்கத்துடன் அவனிடம் மொத்தமாய் தன்னை ஒப்புக்கொடுத்தாள் கீர்த்தனா.
மறுநாள் காலை எழுந்ததுமே ஸ்ரீநியிடம் வந்து நின்றாள் ராகா. முதல்நாள் மாலை வந்ததும் படுத்தவன் தான். எதுவும் பேசவில்லை. எழுந்துகொள்ளவும் இல்லை. அடித்துபோட்டதை போல உறக்கம் உறக்கம் தான் அவனுக்கு.
கனவிலும் அடைக்கலம் வந்து ஸ்ரீநியை தூளியில் போட்டு ஆட்டி பாடிக்கொன்று இருந்தார்.
“என்னங்க? எழுந்துக்கோங்க…” என ராகா பிடித்து உலுக்கி எழுப்பிவிட்டு டீ எடுக்க சென்றாள். மீண்டும் வந்தவள் அவன் இன்னும் உறக்கத்திலேயே இருக்க,
“இன்னும் என்ன நீங்க தூங்கிட்டு? கிளம்ப வேண்டாமா? நாம தான் முதல்ல போகனும். நமக்காக வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க கீர்த்தி வீட்ல…”
“அவங்க ஏன் வெய்ட் பண்ணனும்?…” என்று அவன் கேட்டது அவளின் காதில் சுத்தமாய் விழவில்லை.
வினய் அழுகை சத்தத்தில் ஸ்ரீநியின் கேள்வி மறைந்துவிட்டிருக்க மகனை சமாதானம் செய்தபடி உள்ளே வந்தவள்,
“அடடா உட்கார்ந்துட்டே இருக்கீங்க? அங்க உங்க முதலாளி இன்னும் வரலைன்னு இருக்க போறாரு. நான் போய் வினயை அம்மாக்கிட்ட குடுத்துட்டு வரேன்…” என சென்றுவிட,
“இவ எதுக்கு அங்க போகனும்ன்றா? வெய்ட் பண்ணுவாங்களா? ஏன்?…” இப்படி தனக்குள்ளாக பேசிக்கொண்டு வேகமாய் கிளம்பியும்விட்டான்.
ராகா வந்ததும் தானும் புடவையை மாற்றிக்கொண்டு வர அவளிடம் ஏன் என்று கேட்க கூட தோன்றாமல் அடுத்தடுத்து பேக்டரியில் இருந்து வந்த அழைப்புகளால் அக்னியின் வீட்டிற்கு செல்லும் வரை மிகவும் பிஸியாகவே இருந்தான்.
“எவ்வவளவு நேரம் தான் போன்லயே பேசுவீங்க?…” என ராகா கேட்க,
“நீ சிரிச்சு பேசறேன்னு சொல்லு நாள் முழுக்க உட்கார்ந்து பேசறேன்…” என்று சிரித்துக்கொண்டே ஸ்ரீநி கேட்க,
“போன்லயே பேசுங்க நீங்க. இப்ப உள்ள வாங்க…” என்று சொல்லி செல்ல,
“வச்சிக்கறேன் உனக்கு ஒரு நாள் இருக்கு…” என பல்லை கடித்தபடி அவன் பின்னால் செல்ல,
“வாம்மா ராகா…” என ஆர்ப்பாட்டமாய் அழைத்தார் அடைக்கலம்.
‘வீட்ல இருந்து கிளம்பும் போது இவர் பேக்டரி போய்ட்டதால பேசும் போது சொன்னாரு?’ என யோசனையுடன் ஸ்ரீநிவாஸ் வர,
“என்ன ஸ்ரீநி யோசனை பலமா இருக்கு?…”
“இல்லை ஸார், நீங்க பேக்டரிக்கு போய்ட்டதா?…” என கேட்க,
“போறதா தானே சொன்னேன். உனக்கு போய்ட்டதா கேட்டுடுச்சா?…” என சிரித்துக்கொண்டே அவர்களை அழைத்து உள்ளே வர சந்திரிகாவும், பன்னீர் செல்வமும் அவர்களை வரவேற்று அமர சொல்ல ராகா சாதானவை தேடினாள்.
“சாதனா கோவிலுக்கு போயிருக்காம்மா. வர நேரம் தான்…” என்று சந்திரிகா சொல்லவும் சிரிப்புடன் அவரிடம் பேசிக்கொண்டே அமர சாமி கும்பிட்டுவிட்டு பூஜை அறையில் இருந்து கீர்த்தனாவும் வந்துவிட்டாள்.
“கீர்த்தி கை எப்படி இருக்கு இப்போ?…” என்று ராகா அவளின் கையை பிடித்து பார்க்க,
“உட்காருங்க மாமா…” என்றாள் ஸ்ரீநியிடம் முதல் நாள் அவன் பேசியதை மனதில் வைத்து. அவனும் அமரும் முன்,
“எங்க உன் வீட்டுக்காரர்?…”
“இப்ப வந்திடுவார்…” என திரும்ப வெளியே இருந்து வீட்டுக்குள் நுழைந்துகொண்டு இருந்தான் அக்னி.
‘அதுக்குள்ளே இவன் வரனுமா? கொஞ்சம் மெதுவா வந்தா என்ன?’ என ஸ்ரீநிவாஸ் மனதிற்குள் வைதபடி நிற்க,
“எத்தனை மணிக்கு கிளம்பனும் அத்தை? நல்ல நேரம் ஏதாவது குறிச்சிருக்கீங்களா?…” என ராகா சந்திரிகாவிடம் கேட்டாள்.
‘என்ன நல்ல நேரம்? எங்க கிளம்பறோம்? கூட இவர் வந்த எங்கயும் வேண்டாம். மெடிக்கல் லீவ் போட்டு வீட்டுல இருந்துக்கனும்.’ என தனக்குள் பல திட்டங்களை போட்டபடி ஸ்ரீநிவாஸ் நிற்க,
“என்ன சொல்லு, இதுதான் ஸ்ரீநியோட பொறுப்புன்றது….” என அடைக்கலம் அவனின் தோளில் தட்ட,
‘என்னது பொறுப்பா? திடீர்ன்னு தலைக்கு மஞ்சத்தண்ணிய ஊத்துறாரே? ’ என அவன் முழிக்க,
“என் நம்பிக்கையை காப்பாத்தன்னே என்னை மாதிரி ஆனில பொறந்து வந்திருக்கான்…” என மீசையை நீவியபடி சொல்ல,
‘ஐயோ இவர் அந்த மாசம் பொறப்பாருன்னு தெரிஞ்சிருந்தா நான் பொறந்திருக்கவே மாட்டேன். எல்லாம் எங்கம்மா சாரதா சதி’ என கோபத்துடன் நினைத்தபடி முகத்தில் சாந்தத்துடன் அவன் நிற்க,
“ராகா உங்க கூட சுபாவும் சாதனாவும் வருவாங்க…” என சந்திரிகா சொல்ல,
“சரிங்கத்தை…” என ராகா சொல்லும் பொழுதே,
“கிளம்புவோமா?…” என கேட்டான் அக்னி.
‘ஹப்பா பத்து நாள் எங்கையாச்சும் நிம்மதியா ஹனிமூனுன்னு கிளம்பிட்டு சாமி. புண்ணியமா போகும்’ என மனதினுள் வேண்டியபடி சந்தோஷமாய் ஸ்ரீநிவாஸ் நிற்க,
“ஸ்ரீநிவாஸ்…” என்று அவன் பக்கம் திரும்பினான்.
“எல்லாம் ரெடி தானே?…” என கேட்டதும் அவன் எதை எக்ட்கிறான் என்றே புரியாமல்,
“ரெடி ஸார்…” என்றான் வழக்கம் போல.
“அம்மா, சித்தியையும், சாதனாவையும் போற வழில கூப்பிட்டுக்கறோம். இப்ப கிளம்பறோம்…” என்றவன் கீர்த்தனாவை பார்க்க ஒரு பேக்கை தூக்கிக்கொண்டு வந்தாள் அவள்.
“நல்லபடியா போய்ட்டு வாங்க…” என பன்னீர்செல்வம் சொல்ல அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு கிளம்ப,
‘குடும்பத்தோட போறாங்க போல. இந்த ராகா கூட எதையும் சொல்லலை. இருக்கட்டும். போகட்டும்’ என மனதிற்குள் குத்தாட்டம் ஆடியபடி ஸ்ரீநிவாஸ் நடக்க போகிற வழியில் சுபாவையும் சாதனாவையும் காரில் ஏற்றிக்கொண்டு சென்று நின்றது அந்த வாகனம் கீர்த்தனாவின் வீட்டின் முன்னால்.
சொல்லிக்கொண்டு கிளம்ப தான் வந்திருக்கிறார்கள் என்று நினைக்க அக்னி அந்த பேக்குடன் மாடிக்கு ஏற என்ன இது என்பதை போல பார்த்தபடி கீழே நின்றான் ஸ்ரீநிவாஸ்.
“ராகா இவங்க ஹனிமூன் போகலை?…” என அவளிடம் கேட்க,
“மறுவீட்டு சம்பிரதாயமே முடியலை. அதுக்குள்ளே ஹனிமூனா? என்ன நீங்க?…” என கேட்டுவிட்டு சாதனாவுடன் மாடிக்கு செல்ல அங்கே கீர்த்தனா அக்னி இருவருக்கும் ஆரத்தி சுற்றப்பட்டு கொண்டு இருந்தது.
‘எங்கையாவது போவான்னு பார்த்தா என்னை எங்கயுமே போகவிடமாட்டான் போல’ என அதிர்ச்சி விலகாமல் இன்னும் அவன் அப்படியே நிற்க,
“என்ன ஸ்ரீநி இன்னும் யோசனையில இருந்து வெளில வரலை போல? அப்படி என்னதான் நினைக்கற நீ? என்கிட்டே சொன்னா உனக்கு ஹெல்ப் பண்ணுவேன்?…” என அடைக்கலம் அவனிடம் கேட்க அதே நேரம் மாடியில் இருந்து தங்கதுரை வேகமாய் கீழே இறங்கி வந்தார்.
“என்ன சம்பந்தி அவசரமா கிளம்பற மாதிரி இருக்கு?…” என்று அவரை அடைக்கலம் பிடித்துக்கொள்ள,
“கறிக்கடையில சொல்லியிருந்தேன். அதான் இப்ப வர சொன்னான். போய் வாங்கிட்டு வந்துடறேன்…” என அவர் சொல்ல,
“அட என்ன நீங்க? நம்ம ஸ்ரீநி இருக்கையில நீங்க போய் கறி எடுத்துட்டு வந்தா அவன் மனசு என்ன பாடுபடும்?…” என்ற அடைக்கலம்,
“என்ன ஸ்ரீநி நான் சொல்லுறது?…” என கேட்க ஜெர்க் ஆனான் ஸ்ரீநிவாஸ்.
“அதத்தான் ஸார் நானும் யோசிச்சுட்டு இருந்தேன்…” என்றான் சமாளிப்பாக.
“என்ன யோசிச்ச?…”
“மறு வீடு, கறி எடுக்கனும். அக்னி சார்க்கு ஸ்பெஷலா ஒண்ணொண்ணா பிரிச்சு பிரிச்சு பார்த்து வாங்கனும்…” என்று உள்ளே அழுதுகொண்டே சொல்ல,
“பார்த்தீங்களா சம்பந்தி. இதுதான் மூத்த மாப்பிள்ளை. எப்படி யோசிக்கிறான் பாருங்க…” என ஸ்ரீநியை காண்பித்த அடைக்கலம்,
“மூத்தமாப்பிள்ளைக்கு அம்புட்டு ஆசை. வர மாப்பிள்ளையை கவனிக்கனும்னு. உபசரிப்புல உன்னை மிஞ்ச முடியாது போலையே. சரி சரி நீயே போய் எடுத்துட்டு வந்துடு. இல்லைன்னா உன் மனசு கஷ்டப்படும்…” என்ற அடைக்கலம்,
“வாங்க சம்பந்தி மாடிக்கு போகலாம்…” என்று தங்கதுரையுடன் மேலே சென்றுவிட அங்கேயே அசையாமல் நின்றான் ஸ்ரீநிவாஸ்.
அவனுக்கு யாருமே இதை பற்றி தன்னிடம் சொல்லவில்லையே என்று அத்தனை ஆத்திரமாக வந்தது.
“வச்சு செய்யறீங்களா எல்லாரும் சேர்ந்து? இந்த ஸ்ரீநிவாஸ் யாருன்னு காமிக்கறேன் உங்க எல்லாருக்கும்…” என கருவிக்கொண்டே அவன் கடையை நோக்கி சென்றான் கொந்தளிப்புடன்.
அனைவரும் வேண்டுமென்றே இதை தன்னிடம் சொல்லாமல் மறைத்துவிட்டதாகவே அவன் கருதினான். யாருக்கும் சொல்வதற்கு தான் வாய்ப்பளிக்கவே இல்லை என்பது அவனுக்கு மறந்துபோனது.
மூத்த மாப்பிள்ளையாக இது தனக்கு செய்யப்பட மிகப்பெரிய அவமதிப்பாகவே கருதினான். அவனின் முதல் கோபம் அனைத்தும் ராகாவின் மேல் திரும்பியது. இப்போதைக்கு எதையும் காட்டிக்கொள்ள வேண்டாம் என நினைத்தபடி சென்றான் அவன்.
அன்று விருந்து தடபுடலாக இருந்தது. அடைக்கலமும், சுபாவும் சாதனாவுடன் மாலை வரை இருந்துவிட்டு தான் சென்றார்கள்.
மதிய விருந்து அக்னியின் வீட்டிற்கு அனுப்பப்பட அவர்களும் சந்தோஷமாக வாங்கிக்கொண்டனர். ஸ்ரீநிவாஸ் வீட்டிற்கும் தனியாக அனுப்பப்பட்டது. அவர்களை சாப்பிட வர சொல்ல வரமுடியாதென மறுத்துவிட தேவைக்கு அதிகமாகவே செய்து அனுப்பினார் கனகா.
அடைக்கலம் கிளம்பியதும் விரைவிலேயே இரவு உணவை முடித்துக்கொண்டு மேலே தங்களுக்கென பிரத்யோகமாக கட்டியிருக்கும் மாடி வீட்டிற்கு அக்னி சென்றுவிட நேரம் சென்று தான் கீர்த்தனா அங்கே சென்றாள்.
லேப்டாப்பில் ஏதோ படத்தை போட்டு அவன் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்க அவனை பார்த்து புன்னகைத்தவள்,
“அப்பவே வந்திருப்பேன், தெரிஞ்சவாங்க வந்துட்டாங்க. அதான் கீழே பேசிட்டு இருந்தோம். லேட் ஆகிடுச்சு…” என்றபடி வந்தவள் தன் கையில் இருந்த கிண்ணத்தை ஓரிடத்தில் வைத்துவிட்டு தோளில் மாட்டியிருந்த பிளாஸ்க்கை எடுத்து அவனுக்கருகே வைத்தாள்.
“நீங்க பால் குடிக்காம வந்துட்டீங்கன்னு அம்மா குடுத்து விட்டுட்டாங்க நம்ம ரெண்டுபேருக்கும் சேர்த்தே…” என அதனையும் சொல்லி அவனருகே அமர,
“அதென்ன கிண்ணத்துல?…” என அவன் கேட்டதும்,
“அதுவா அம்மா மருந்து அரைச்சு குடுத்தாங்க. இது மஞ்சள் போட்டு அரைச்சாங்க. தூங்கறப்போ இதை போட்டுட்டு தூங்க சொன்னாங்க…” என சொல்லவும் வாய்க்குள் சிரிப்பை அடக்கினான்.
“என்ன சிரிக்கறீங்க?…”
“இல்லை நேத்து உன் கையில பூசிவிட்ட ஆயின்மென்ட் ஃபுல்லா என் மேல தான் பூசி விட்ட. இப்ப இந்த மஞ்சள். நாளைக்கு எண் உன் மேல மஞ்சள் பூசியிருக்கன்னு யாரும் கேட்டா என்ன பதில் சொல்லன்னு நினைச்சேன். அதான் சிரிப்பு வந்துச்சு…” என்று சிரிக்காமல் அவன் சொல்ல,
“உங்களை…” என்று அவனின் தோளில் அடித்தவள்,
“எல்லாம் உங்களால தான். உங்களால்தான்…” என அவனின் தோளிலேயே முகத்தை புதைக்க சிரிப்போடு அவளை அணைத்தவன்,
“ஆமா என்னால தான். இன்னைக்கும் என்னால தான். என்னன்ற?…” என்று சொல்லியவன்,
“இங்க பாரு. உன்கிட்ட ஒன்னு கேட்கனும்…” என அவளை நிமிர்த்தி,
“நீ கிண்டர் கார்டன் டீச்சர் தானே?…”
“ஆமா…”
“அப்ப எனக்கு ரைம்ஸ் சொல்லிகுடு. நான் படிச்சது இப்ப ஞாபகம் இல்லை. கமான் ஸ்டார்ட்…” என சொல்ல திருதிருவென விழித்தாள்.
“அப்படியே கையை ஆட்டி கண்ணை உருட்டி லேசா தலையசைச்சு க்யூட்டா சொல்லி தருவ தானே? நீ ரைம்ஸ் சொல்லித்தரும் போது எப்படி இருப்பன்னு நானும் பார்க்கனும். ஹ்ம்ம்…” என்று சொல்ல,
“அது குழந்தைங்களுக்கு. உங்களுக்கு எப்படி?…”
“பொண்டாட்டிக்கு புருஷனும், புருஷனுக்கு பொண்டாட்டியும் தான் முதல் குழந்தை…” என சொல்ல,
“ம்ஹூம், இது சரிவராது. விளையாடாதீங்க…” என்று அவள் சொல்ல,
“நான் நிஜமா தான் சொல்றேன். சொல்லிகுடு….” என்று பிடிவாதமாய் அவன் சொல்லவும் விடமாட்டான் என புரிய,
“ரொம்ப பன்றீங்க. ஓகே ஒன்னே ஒன்னு…” என சொல்லி ஒரு ரைம்ஸ் பாட,
“உன்கிட்ட இந்த ரைம்ஸா கேட்டேன்?…” என்று அவன் புருவம் உயர்த்தி கேட்டவிதமே வில்லங்கமாய் இருந்தது.
“இது ஆகறதில்லை. நீங்க கேட்டீங்க நான் பாடினேன். அதுவும் ஒரு லைன் பாடமுன்ன வேண்டாம்னு சொல்றீங்க…”
“நான் வேண்டாம்னு எங்க சொன்னேன். இந்த ரைம்ஸ் வேண்டாம்னு சொல்றேன்…” என்று தன் மீது சாய்த்து கட்டிக்கொண்டவன்,
“புருஷனுக்கு எந்த ரைம்ஸ் சொல்லிக்குடுக்கனும்னு தெரியாத தத்தி பொண்டாட்டி…”
“அப்ப எதுக்கு என்கிட்டே கேட்டீங்க?…” என்று அவள் சிலிர்த்துக்கொண்டு எழுந்து நிற்க மீண்டும் அவளை இழுத்து தன்மீது போட்டுகொண்டவன்,
“தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லு. நானே கத்து தரேன். பிரச்சனைகளை கண்டு ஒளிய கூடாது கீர்த்தி. எதிர்த்து நின்னு பேஸ் பண்ணனும்…” என பாடம் சொல்லித்தந்தவனின் ஜாலங்களில் கரைந்துகொண்டு இருந்தாள் கீர்த்தனா.
“ரைம்ஸ்…” என அவள் கிசுகிசுப்பாய் கேட்க,
“ஹ்ம்ம், சொல்றேன். கவனமா கேளு. நேத்து மாதிரி கோட்டை விட்டுடாதே திருமதி தீப்பொறி…” என்று அவளோடு இழைந்தான் அக்னிசெல்வன்.
பெண்மையில் பேராண்மை ஆண்மையில் ஓர் பெண்மை
கண்டறியும் நேரமிது காதலியே
ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய்