கவிதை – 12
அக்னி மறுவீட்டிற்கு வந்து மூன்று நாட்கள் ஆனது. இதோ கிளம்பிவிடுவான் என ஸ்ரீநிவாஸ் காத்திருக்க அவனோ நகர்வதை போலவே தெரியவில்லை.
“என்ன ராகா அவர் இன்னும் கிளம்பலை?…” என ஸ்ரீநிவாஸ் ராகாவிடம் கேட்க,
“அதெப்படி அதுக்குள்ளே போவாங்க? ஒரு வாரம் இருக்கறதா வந்திருக்காங்க. உங்களுக்கு ஏன்?…” என்றவளுக்கு பதில் சொல்லாமல்,
‘ஒரு வாரமா?’ என அதிர்ந்து நின்றான்.
அவனால் அக்னி இருக்கும் இடத்தில் இருக்கமுடியவில்லை. என்ன தான் அக்னி தன்னிடம் எதுவும் சொல்லாமல் கேட்காமல் இருந்தாலும் அவனிருக்கும் அதே வீட்டில் இருப்பது நெருப்பில் நிற்பதை போலவே இருந்தது.
அக்னியின் பார்வை முன்பை போல் அல்லாது தன்னை துளைப்பதை போல இருக்க ஒருவித அவஸ்தையை தந்தது அவனுக்கு.
“இன்னும் என்ன யோசனை?…” என கேட்டுக்கொண்டே ராகா இடியாப்பத்திற்கு தண்ணீரை காய வைக்க,
“சும்மா தான் கேட்டேன். ஒண்ணுமில்லை…” என்றுவிட்டான் அவன்.
“எரிச்சலா இருக்கற மாதிரி இருக்கே?…”
“ஒண்ணுமில்லைன்னா விடனும். சும்மா சும்மா கேள்வி கேட்டுட்டு…” என அவள் மீது எரிந்து விழ,
“கேட்டது நீங்க தான். என்னை பேசறீங்க…” என ராகாவும் எதிர்த்து பேச,
“என்னடி ஓவரா வாய் நீளுது. தொலைச்சிடுவேன் ராஸ்கல். உனக்கு அவ்வளவு துணிச்சல் வந்துருச்சோ?…” என்று அவளை அடிப்பதை போல நெருங்க மிரண்டு நின்றாள் ராகா.
“பயமில்லாம போச்சுல. இருக்கட்டும். அவன் இங்க இருந்து கிளம்பட்டும். இருக்குது உங்களுக்கு கச்சேரி…” என மிரட்டிவிட்டு அடுப்பில் இருந்த பாத்திரத்தை ஓங்கி கீழே தள்ளியவன் வீட்டிலிருந்து வெளியே வர,
“ஸ்ரீநிவாஸ்…” என்ற அக்னியின் குரலில் திடுக்கிட்டு மாடியை பார்த்தான் அவன்.
கையில் பேப்பருடன் மாடி பால்கனி பகுதியில் அமர்ந்து கொண்டிருந்த அக்னி இவனை பார்த்ததும் அழைக்கவும் யோசனையானது.
ராகாவிடம் கத்திய கத்தல் நிச்சயம் வெளியே வரை கேட்டிருக்கும். இப்பொழுது அமர்ந்திருந்த இடத்தில் அக்னி வெகுநேரமாக அமர்ந்திருந்தான் என்றால் பேசியதை கண்டிப்பாக கேட்டிருப்பான்.
ஸ்ரீநிவாஸ்க்கு அதில் உதறல் எடுக்க ‘இவனை வச்சுட்டு என் வீட்டுல சத்தமா கூட என்னால பேச முடியமாட்டிக்கே. போச்சு என்ன சொல்ல போறானோ?’ என மாடிக்கு வர அவனையே பார்த்தபடி இருந்த அக்னி,
“எங்க கிளம்பிட்டீங்க?…” என்றான்.
அக்னியின் நிர்மலமான முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை ஸ்ரீநிவாஸால்.
“இல்ல சும்மா தான் ஸார்…” என இழுத்தவன்,
“நீங்க சொல்லுங்க…” என கேட்க,
“இந்த ஸார் எல்லாம் வீட்டுல வச்சு வேண்டாம். ஓகே…” என அக்னி சொல்ல,
‘இதை சொல்லத்தான் கூப்பிட்டாரா?’ என நிம்மதியானவன்,
“ஓகே…” என்றான் சிரிப்புடன்.
“பேக்டரிக்கு கிளம்பறேன். இன்னும் அரைமணி நேரத்துல கிளம்பிருவேன்…” என்று அவனுக்கு குறிப்பாய் சொல்ல,
“ஓகே, அப்போ நானும் கிளம்பிடறேன்…” என்றவன் கீழே இறங்கும் முன்,
“இங்கதான் ரொம்ப நேரமா உட்கார்ந்திருந்தீங்களா?…” என்றான் அவனிடம்.
“ஏன் கேட்கறீங்க?…” என அக்னி திருப்பி கேட்க,
“இல்லை ரொம்ப நேரமா இங்கயே நிக்கறீங்களோன்னு தான்…”
“அதை தெரிஞ்சு இப்ப என்ன ஆக போகுது ஸ்ரீநிவாஸ்? கண்டிப்பா சொல்லனுமா என்ன?…” என அமர்த்தலாக அவன் கேட்க,
“இல்லை இல்லை. சும்மா தான் கேட்டேன்…”
“டீ குடிக்கறீங்களா?…”
“இல்லை இப்பதான் ராகா குடுத்தா. குடிச்சுட்டேன். சரி நான் போய் கிளம்பி வரேன்…” என்று இறங்கி செல்பவனை பார்க்க அக்னியின் எரிச்சல் அதிகமாகியது.
சற்று முன் வரை அங்கே தங்கதுரையும் கனகாவும் தான் நின்றுகொண்டு இருந்தார்கள். அக்னி வரவும் அவனுக்கு டீ கொண்டுவந்து தந்துவிட்டு அவர்கள் உள்ளே சென்றுவிட அப்போது தான் ஸ்ரீநிவாஸ் குரல் வெளியே கேட்டது.
“என்ன மனுஷன் இவன்?…” என முணுமுணுப்போடு கையில் இருந்த டீயை குடித்தான்.
அவனின் மனதில் தன் தந்தையும் அடைக்கலம் சித்தப்பாவும் வந்து நின்றனர். அவர்கள் இருவரும் இத்தனை வருஷமாய் எத்தனை அன்னியோன்யம் என்பது நினைத்து பார்த்தவன் அவ்விடத்தில் தங்கள் இருவரையும் வைத்து பார்க்கவே முடியாமல் நின்றான்.
“இங்க இருக்கீங்களா? நான் மேலே தேடி போனேன்…” என கீர்த்தனா வந்து நிற்க அவளை பார்த்ததும் புன்னகைத்தான்,
“கையை காட்டு…” என கேட்டு பார்த்தான். காயம் எல்லாம் சற்று ஆறி இருந்தது.
“பார்த்தாச்சா?…” என்று கையை மடக்கி கொண்டவள்,
“கிளம்பி ரெடியா இருக்கறது மாதிரி இருக்கு? வெளில போறோமா?…”
“ம்ஹூம், நான் பேக்டரி போறேன். வேலை இருக்கு…” என குடித்த டீ கப்பை அவளிடம் தந்துவிட்டு மேலே தங்கள் அறைக்கு சென்றான்.
“கீர்த்தி இங்க சாப்பிடறாரா? இல்லை மேல கொண்டு போறியா? டிபன் ரெடி ஆகிடுச்சு…” என கேட்க,
“இங்க தான் வருவாருன்னு நினைக்கேன். இருங்கம்மா…” என சொல்லி மாடிக்கு சென்றாள்.
“சாப்பிடலாம். அம்மா ரெடி பண்ணிட்டாங்க…”
“நேரமாச்சுமா, ஒரு முக்கியமான பிரச்ச…” என்றவன் அப்படியே நிறுத்திவிட்டு புன்னகைக்க,
“சொல்லுங்களேன் முழுசா…” என்று கேட்டாள் கீர்த்தனாவும் முறைப்புடன்.
“ஒரு முக்கியமான விஷயம், போய்ட்டு பதினோரு மணிக்குள்ள வந்திடறேன். வெளில போகலாம்…”
“நான் கேட்டதுக்காகவா? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். இங்கயே இருப்போம்…” என்றவளின் ஜடையை பிடித்து தன்னருகே இழுத்தவன்,
“சொன்னா சரின்னு கேட்கனும். கிளம்பி ரெடியா இரு. நான் வந்திடறேன்…” என்று அவளின் மூக்கை பிடித்து ஆட்ட,
“இன்னும் நாலு நாள்ல கிளம்பிடுவோம். அதுவரைக்கும் அம்மா கூட இருப்போமே…” என்றவளை பார்க்க சிரிப்பாக வந்தது.
“நான் இருந்தா அவங்க இயல்பா இருக்கமாட்டிக்காங்க கீர்த்தி. உனக்கு புரியுதா? நாமளும் வீட்டுக்குள்ளையே அடைஞ்சு கிடக்க முடியாது…” என சொல்ல,
“ப்ச், நீங்க டைவர்ட் பன்றீங்க?…”
“ஓகே நீயே வா, இப்ப என்ன பன்றாங்கன்னு பாரு….” என கீழே வந்தவன் சாப்பிட அமர தங்கதுரை தனியாக நின்றுகொண்டு இருக்க கனகா கீர்த்தனாவிடம் சாப்பாடுகளை கொடுத்தனுப்பி அவளை பரிமாற சொல்லி தள்ளி நின்றார்.
“இப்ப என்ன சொல்ற?…” என மனைவியிடம் கேட்டவன்,
“மாமா, வாங்க சாப்பிடலாம். சேர்ந்தே சாப்பிடுவோம்…” என அழைக்க,
“ஐயோ இருக்கட்டும்ங்க மாப்பிள்ளை. நான் இப்ப தான் மாத்திரை போட்டேன். அரைமணி நேரம் கழிச்சு தான் சாப்பிடனும்…” என சொல்லி அங்கேயே நின்றுகொண்டார்.
“பார்த்தியா உங்கப்பா என்னோட சாப்பிட வரமாட்டார். நம்ம ரெண்டுபேருக்கும் தனிமை கொடுக்கறதா நினைச்சு அவங்க ஓரமா போய் நிக்கறாங்க. அதான் சொல்றேன், வெளில எங்கையாவது போய்ட்டு வருவோம். அவங்களும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்…”
கீர்த்தனாவிற்கு மட்டும் கேட்கும் விதமாய் அவன் முணுமுணுப்புடன் சொல்ல சரி என தலையை அசைத்துக்கொண்டாள்.
“நீயும் சாப்பிடு. இப்ப கை பரவாயில்லை தானே?…” என வேகமாக சாப்பிட்டுக்கொண்டே அவளை சாப்பிட சொல்ல,
“இல்லை பசிக்கலை. இப்படி திடீர்ன்னு கிளம்புவீங்கன்னு தெரியாதே. அம்மா அப்பாவுக்கு சத்து கஞ்சி காய்ச்சினாங்கன்னு கொஞ்சம் குடிச்சுட்டேன்…”
“எனக்கெல்லாம் இல்லையா? ஏன் குடுக்கலை?…” என்றவன்,
“அத்தை…” என அவன் அழைக்கவும் வேகமாய் வந்த கனகா,
“சொல்லுங்க தம்பி, வேற ஏதாவது வேணுமா?…” என கேட்க,
“ஹ்ம்ம், உங்க எல்லாருக்கும் கஞ்சி செஞ்சிட்டு எனக்கு மட்டும் இதை செஞ்சிட்டீங்களே?…”
“அய்யோ அதில்லை தம்பி, அவருக்கு குடுக்கறது காலையில. அப்படியே நாங்களும் சேர்ந்து காய்ச்சி குடிச்சுப்போம். உங்களுக்கு அதெல்லாம் பழக்கமோ என்னவோன்னு தான்…” என்றவர் கீர்த்தனாவை முறைத்தார்.
“அதெல்லாம் குடிப்பேன். நீங்க கொண்டு வாங்க. எனக்கு டிபன் போதும்…” என்று எழுந்து கையை கழுவிவிட்டு வந்து அமர அதற்குள் ஸ்ரீநிவாஸ் வந்துவிட்டான்.
“நான் ரெடி…” என அக்னியின் முன்னே வந்து நின்றான்.
“உட்காருங்க ஸ்ரீநிவாஸ் போவோம்…” என அமர சொல்லியவன் தங்கதுரையின் ரிட்டயர்மென்ட் பற்றி பேசிக்கொண்டு இருந்தான்.
கனகா சத்து கஞ்சியை ஊற்றிக்கொண்டு வந்து அக்னியிடம் நீட்டியவர் மூத்த மருமகனை பார்த்து,
“வாங்க மாப்பிள்ளை, சாப்பிடறீங்களா?…” என கேட்க,
“இல்லை, ஒன்னும் வேண்டாம்…” என்றான் அமைதியாக.
“ஸ்ரீநிவாஸ் இதை குடிங்க உடம்புக்கு நல்லது…” என சொல்லி,
“அத்தை நீங்க கொண்டுவாங்க. இல்லைன்னா ஷேர் பண்ணிக்கறோம். தம்ளர் மட்டும் கொண்டு வாங்க…” என அக்னி சொல்ல அதற்குள் ஸ்ரீநிவாஸ் முகமே அஷ்டகோணலாக மாறியது.
“இல்லை அவருக்கு…” என தங்கதுரை தயங்க கனகா கீர்த்தனாவை பார்த்து சொல் என்பதை போல சமிங்சை காட்டினார்.
“என்ன ஸ்ரீநிவாஸ், உங்களுக்கு ஓகே தானே?…” என அவன் கேட்டதும் வேகமாய்,
“எனக்கு ஓகே தான். குடிக்கலாமே…” என பல்லை கடித்துக்கொண்டு அவன் சொல்ல கீர்த்தனாவின் முகத்தில் அத்தனை இறுக்கம்.
ராகாவும் வினய்யுடன் மாடிக்கு வர அங்கே ஸ்ரீநிவாஸ் கையில் இருந்த சத்து கஞ்சியை பார்த்து ஆச்சர்யமானாள்.
கீர்த்தனாவோ அக்காவின் இடது கையை அழுத்தமாக பார்த்துவிட்டு மீண்டும் ஸ்ரீநிவாஸ் பக்கம் திரும்பினாள். அவளின் பார்வையின் பொருள் உணர்ந்தவன் கடுப்பாக கையில் இருந்ததை வேகமாக குடித்துவிட்டு கீழே வைத்துவிட்டான்.
“ரொம்ப நல்லா இருக்குது அத்தை. நான் கிளம்பற வரைக்கும் காலையில இதையே குடுங்க…” என சொல்லி,
“நான் கிளம்பறேன்…” என்றபடி மனைவியை பார்த்துவிட்டு கிளம்பினான். அவன் சென்றதும் பின்னே செல்ல போன ஸ்ரீநியை,
“இப்ப உங்களுக்கு இதை குடிக்க எந்த கஷ்டமும் இல்லையே மாமா…” என்றாள் கீர்த்தனா வெடுக்கென்று.
“கீர்த்தி…” என ராகா சத்தம் போட,
“நீ சும்மா இருக்கா…” என அக்காவை அதட்டினாள்.
அவள் ஏன் கேட்கிறாள் என அறிந்த ஸ்ரீநிவாஸ் முறைப்புடன் அவள் பக்கம் திரும்பி பார்த்தவன் அக்னி சென்றுவிட்டதையும் கருத்தில் கொண்டு,
“ஆமா, என்ன இப்ப?…” என்றான் தெனாவெட்டாக.
“இந்த கஞ்சியை உங்களை குடிச்சு பார்க்க சொன்னதுக்கு தானே என் அக்கா கையில அதை தட்டிவிட்டு தலை தீபாவளிக்கு வந்த இடத்துல சண்டை போட்டு அவளை கூட்டிட்டு வந்தீங்க?…” என அன்று உண்டான அதே கோபத்துடன் இன்று அவள் கேட்டுவிட ஸ்ரீநிவாஸ் முகம் கறுத்துவிட்டது.
“ரொம்ப பேசற கீர்த்தி, நான் எப்ப என்ன செய்யனும்னு எனக்கு தெரியும். உன் வேலையை பாரு…”
“இதுவும் என் வேலை தான். அப்போ உங்களுக்கு பிடிக்காததா இருந்தா கூட உங்களுக்கான சந்தர்ப்பத்துல அதை செய்ய தயங்கமாட்டீங்க. இதுதான் நீங்க…” என முகத்துக்கு நேராக கீர்த்தனா சொல்லவும்,
“ஆமான்றேன். நானும் பார்த்துட்டு தான் இருக்கேன். உன் பேச்சு, உன் அக்கா பேச்சு எல்லாமே ஒரு தினுசா இருக்கறதை. இப்ப எனக்கு நேரமில்லை. வந்து பேசிக்கறேன்…” என்று முறைப்புடன் அவன் சொல்லி செல்ல,
“எதுக்குடி கீர்த்தி இதெல்லாம்? சும்மா இருக்கமாட்டியா?…” என கனகா சத்தம் போட,
“அன்னைக்கு இவ கையில சுட சுட அந்த கஞ்சியை கொட்டிவிட்டு என்ன ஏதுன்னு பார்க்கறதுக்குள்ள அவமானப்படுத்திட்டீங்கன்னு அவளுக்கு வலிக்க வலிக்க கூட்டிட்டு அக்காவோட கிளம்பினாரே? கேட்க யாருமில்லாம போச்சேன்னு உட்கார்ந்து புலம்பினீங்க. இப்ப நான் கேட்டதும் உங்களுக்கு கோவம் வேற. போங்கம்மா…” என்றாள் கீர்த்தனாவும்.
“அதுக்குன்னு? முன்ன நடந்தது. அதை இப்போ கேட்கனுமா? அவருக்கு ஏற்கனவே நம்மை கண்டா ஆகறதில்லை. இப்ப இது வேற. நீ மறுவீடு வந்திருக்கற நேரத்துல இது எதுக்குன்றேன்…” என கனகா திட்ட,
“அம்மா, அதான் கேட்டுட்டாள. விடுங்க. யாருமே கேட்காம இருந்தா இன்னும் ஆடுவாரு…” என ராகா சொல்லியபடி தனது கையை பார்த்தாள். அன்றைய எரிச்சல் இன்னமும் மனதில் மிச்சமிருந்தது அவளிடத்தில்.
“நான் என்ன சீக்காளியா? கஞ்சி கொண்டு வந்து குடுக்கற? இதெல்லாம் எனக்கு பழக்கமில்லை. நல்லா இருக்குது உங்க குடும்ப விருந்தோம்பல். தலை தீபாவளிக்குன்னு கூட்டிட்டு வந்து கஞ்சி காய்ச்சி ஊத்தறது. இதுக்கு என்னை அழைக்காமலே இருந்திருக்கலாம்ல. வேஸ்ட்…” என்று அவன் இரைந்தது இன்னும் காதில் ஒலித்தது.
“ராகா…” என தன் அக்காவின் கையை பிடிக்க,
“ம்மா…” என மகன் வினய் அவளின் முகத்தை பிடித்து இழுத்தான்.
“ஒண்ணுமில்லடா கண்ணா…” என மகனை கட்டிக்கொண்டவள்,