கவிதை – 16
அக்னியின் இத்தனை கோபமும் அவனின் நஷ்டத்தையும் தான்டி அதுவரை கஷ்டப்பட்டு வாங்கியிருக்கும் பெயர் சிறு கவன சிதறலில் தொலைக்க இருந்தானே?
ஒருவேளை இதையும் தான் கவனிக்காமல் இருந்திருந்தால் இந்த தயாரிப்புகள் கொள்முதல் வியாபாரிகளிடமும் உலக வர்த்தகத்திலும் நுழைந்திருந்தால் அதன் பின் இந்த பெயரை மீண்டும் திரும்ப பெற முடியுமா?
நினைக்கவே ஆடிப்போனது அவனின் கனவுக்க சுமந்த மனது. இன்னும் எத்தனை இலக்குகளை திட்டமிட்டு வைத்திருக்கிறான்.
“அக்னி, கொஞ்சம் உட்கார்…” அடைக்கலம் சொல்லியும் அவனால் ஒரு நிலையில் நிற்க கூட முடியவில்லை.
கதவிற்கு வெளியே சம்பந்தப்பட்ட பணியாளர்கள் இருபதுபேர் முகத்தில் கலவரத்துடன் நின்றிருந்தார்கள்.
“இப்ப எதுக்கு இவங்க எல்லாம் இங்க வெய்ட் பன்றாங்க?…” என கேட்டவனின் குரலில் இன்னும் அனல் பறந்தது.
“அக்னி, கொஞ்சம் அமைதியா இரேன். அவங்க எல்லாம் உன்கிட்ட பேச தான் வெய்ட்டிங்…” பன்னீர்செல்வம் சொல்ல,
“அவசியமில்லை. அனுப்பிவிடுங்க…” என்றான் இன்னும் கோபத்துடன்.
“இங்க பார் அக்னி, அதான் எதுவும் பேக்கிங் ஆகலை தானே? அதுக்கு முன்ன கண்டுபிடிச்சாச்சு. பெரிய தவறை நிகழாம பார்த்தாச்சு. ஸ்ரீநிவாஸ் வரட்டும் பேசிக்கலாம்…”
“பேசறதுக்கு என்ன இருக்குது சித்தப்பா? சும்மா இதையே சொல்லாதீங்க…”
“சுரேன் நீ அங்க நிக்கறவங்களை அனுப்பு. இங்க கூட்டம் போட வேண்டாம்னு சொல்லு…” என சுரேனிடம் சொல்லியவன்,
“அந்த இன்சார்ஜர் ஆவுடையையும், பழனியையும் மட்டும் நிக்க சொல்லு. பேசனும்…”
“ஹ்ம்ம், உள்ள வர சொல்லனுமா?…”
“ஆமா அனுப்பிவிடு…” என சொல்லி அங்கிருந்த ஒரு சேரை இழுத்து போட்டு அவன் அமர்ந்துகொள்ள அடைக்கலமும், பன்னீர்செல்வமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
சுரேன் மற்ற பணியாளர்களை அனுப்பிவிட்டு அந்த இருவரை மட்டும் உள்ளே அழைத்து வந்தான்.
“ஸாரி ஸார்…” என அவர்கள் வந்ததுமே இவனிடம் மன்னிப்பை வேண்ட,
“ரெடிகுலஸ்…” என்று பல்லை கடித்த அக்னி,
“அந்த இளநீர் வழுக்கை எல்லாம் என்னைக்கு பேக் பண்ண வேண்டியது?…” என கேட்க,
“ஸார் நேத்தே பண்ணவேண்டியது தான்…”
“ஏன் இன்னைக்கு பண்ணுனீங்க? நேத்து நான் வந்தப்போ கூட ஆல்மோஸ்ட் ரெடின்ற மாதிரி ரிப்போர்ட் வந்திருந்ததே?…”
“வந்து ஸார்…” என பழனி இழுக்க,
“நான் சொல்றேன் ஸார். பிரசர்வேட்டிவ் பன்றதுக்காக இளநீர் வழுக்கை எல்லாம் ப்ராசஸ் போய்ட்டிருந்ததுல அதுக்கான லிக்விட்ஸ் அதிகமாகி பாதி வழுக்கை கெட ஆரம்பிச்சிருச்சு. எல்லாம் மிக்ஸ் ஆகி இருந்ததால எங்களால என்ன பண்ணணு தெரியலை…”
“ஹ்ம்ம்…”
“ஸ்ரீநிவாஸ் ஸார் தான் பிரிச்சு கிளீன் பண்ணி அடுக்கிடலாம்ன்னு சொன்னார். ஒன்டே டிலே ஆனாலும் சமாளிச்சுக்கலாம்னு. அதுக்கு டைம் எடுத்ததால மத்த வழுக்கை எல்லாம அப்படியே…”
“இப்ப புரியுது. அப்போ உங்க பாஸ் நானா இல்லை ஸ்ரீநிவாஸ் தானா?…” என அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் கேட்க,
“ஸாரி ஸார்…” என்றனர்.
அதுவே அக்னியின் கோபத்தை தூண்ட இன்னும் காரணமாகியது.
மன்னிப்பு, வெகு சுலபமாய் இந்த வார்த்தையை கேட்டுவிட்டு கடந்துவிடுவார்கள் இவர்கள். ஆனால் பாதிப்பும், நஷ்டமும் அவனுக்கு தானே?
தனக்கு தானே நிதானம், நிதானம் என சொல்லிக்கொண்டவன் மூச்சை இழுத்து விட்டு அவர்களை பார்த்தான்.
“இதுக்கு உங்க மேல என்ன ஆக்ஷன் எடுக்கனுமோ தயாரா இருங்க. என் நாலேட்ஜ் இல்லாம இனி இங்க எதுவும் நடக்க கூடாது. கெட் லாஸ்ட்…” என்று இரைந்தவனின் முன்னால் அதற்கு மேலும் நிற்க முடியாமல் வெளியேறிவிட்டார்கள்.
என்ன விதமான நடவடிக்கை நடவடிக்கை எடுக்கவிருக்கிறானோ என்னும் பதைபதைப்புடன் வெளியேற,
“அப்பவே நான் அக்னி ஸார் நாலேட்ஜ்க்கு கொண்டுபோய்டலாம்னு சொன்னேன். கேட்டியா நீ?…” என பழனி மற்றவனை ஏச,
“நான் மட்டும் இப்படி ஆகும்னா நினைச்சேன். ஸ்ரீநிவாஸ் ஸார் முன்ன மாதிரி இல்லை. இப்ப அக்னி ஸார்க்கு சகலை. நெருங்கின சொந்தம். அவர் பேச்சை மீறி எப்படி அக்னி ஸார்க்கிட்ட இதை சொல்லமுடியும்? சும்மாவே ஸ்ரீநிவாஸ் ஸார் அவரை தாண்டி தான் இங்க எதுவும் நடக்கனும்ன்ற மாதிரி இருப்பாரு. இப்ப சொந்தம் வேற…”
“நீ சொல்றதும் சரிதான். ஆனா இப்ப ஸார் கோபத்தை பார்த்த தானே?…”
“நாம ஒன்னும் பண்ண முடியாது….” பேசிக்கொண்டே வெளியே வந்து நிற்க அதற்குள் ஸ்ரீநிவாஸ் உள்ளே நுழைந்துகொண்டு இருந்தான்.
“என்ன பழனி ஸார் உடனே வர சொல்லிருந்தாரு?…” என அவன் கேட்க,
“உள்ள உங்களுக்காக தான் ஸார் வெய்ட்டிங். போய் பாருங்க ஸார்…” என எரிச்சலை அடக்கியபடி பழனி சொல்ல அவனின் பேச்சில் முறைப்புடன் பார்க்க,
“எங்களுக்கு தெரியலை ஸார்…” என்றான் ஆவுடை உடனே.
“அப்போ ரெண்டு பேரும் இங்க ஏன் நிக்கறீங்க? பேக்கிங் செக்ஷன்ல இல்லாம இங்க ஒபியா? இந்த மாச சம்பளத்துல கை வைக்கனும் போல?…” என மிரட்டி பேச,
“ஸார் முதல்ல நீங்க போய்ட்டு வாங்க ஸார்…” என பழனி சொல்ல அதில் புருவம் சுருக்கியவன்,
“உங்கக்கிட்ட எதுவும் பேசினாரா ஸார்?…” என்று வேகமாய் கேட்டான் ஸ்ரீநிவாஸ்.
பதில் சொல்ல வாயை திறந்த ஆவுடையின் கையை பற்றி ஸ்ரீநிவாஸ் அறியாமல் அழுத்திய பழனி,
“எங்களையும் வெய்ட் பண்ண சொல்லிருக்கார். உங்கக்கிட்ட பேசிட்டு கூப்பிடறதா சொல்லிருக்கார் ஸார்…” என சொல்லிவிட,
“ஹ்ம்ம், சரி, அங்க என்ன பேசறதா இருந்தாலும் பார்த்து பேசனும். நானும் இருப்பேன்…” என எச்சரித்துவிட்டு உள்ளே சென்றான் ஸ்ரீநிவாஸ்.
“ஏன்டா சொல்லவிடாம பொய் சொன்ன? விஷயத்தை சொன்னாவாச்சும் அவர் என்ன பேசறதுன்னு யோசிப்பார்…”
“தப்பு ஆவுடை, நாம பண்ணின வேலையால பிரச்சனை. அக்னி ஸார் முகத்தை பார்த்த தானே? இந்த ஸ்ரீநிவாஸ் ஸார் அவர் தப்பிக்க என்ன வேணும்னாலும் சொல்லுவார். நாமளும் அதிகளவு கெமிக்கல் சேர்த்து பெரிய நஷ்டத்தை இழுத்துவிட்டுட்டோம். கெட்டுபோனதை மனசாட்சி இல்லாம சுத்தம் பண்ணி பேக் பண்ண போய்ட்டோம்…”
“ஹ்ம்ம், ஆமா…”
“அவங்களுக்கு எவ்வளவு நஷ்டம். நம்ம ஸார் நேர்மை உனக்கு தெரியாதா? நாமளும் பயத்துல இந்த தப்பை பண்ண உடந்தை ஆகிட்டோம். நமக்கு வஞ்சனை இல்லாம சம்பளம் குடுக்கறவரு அவரு…” என பழனி ஆவுடையிடம் சமாதானமாய் சொல்லிக்கொண்டிருந்தான்.
அறைக்குள் நுழையும் முன்பே கண்ணாடி தடுப்பின் வழி அங்கு அமர்ந்திருப்பவர்களை பார்த்தபடி பவ்யமாய் கதவை தட்டினான் ஸ்ரீநிவாஸ். உள்ளே வா என்பதை போல சுரேன் கையை அசைக்க கதவை திறந்து உள்ளே நுழையும் முன்பே,
“வெல்கம் ஸ்ரீநிவாஸ்…” என நக்கலுடன் சுரேன் அழைக்க,
“சுரேன்…” என்றார் அடைக்கலம்.
“எதுவும் பேசிட கூடாது…” என்ற முணங்களுடன் அவன் நகர்ந்து நிற்க,
“சொல்லுங்க ஸார், உடனே கிளம்பி வர சொன்னீங்க…” என பன்னீர்செல்வத்தை பார்த்து கேட்டவனின் குரல் லேசாய் நடுக்கத்துடன் இருந்தது.
ஸ்ரீநிவாஸ் அக்னியை பார்த்ததுமே புரிந்துகொண்டான் கடும் கோபத்தில் இருக்கிறான் என்பதை. அதனால் அவன் பக்கமே திரும்பாமல் பன்னீர்செல்வத்திடம் பேச,
“உங்களை வர சொன்னது நான் ஸ்ரீநிவாஸ்…” என்றான் அக்னி.
“ஸார்…” என அவனின் புறம் திரும்ப,
“எத்தனை நாள் ப்ளான் இது ஸ்ரீநிவாஸ்?…” என பல்லை கடித்துக்கொண்டு அவன் கேட்டவிதத்தில் இவனுக்கு உள்ளுக்குள் ஆட்டமெடுத்தது.
“என்ன ப்ளான் ஸார்? எனக்கு புரியலை?…”
“ஷட் அப் டேமிட். பன்றதெல்லாம் பண்ணிட்டு புரியாத மாதிரி நடிக்கவா செய்யற?…” என அமர்ந்திருந்த சேரை விடு வேகமாக எழ அவன் எழுந்த வேகத்தில் அந்த இருக்கை பின்னால் சென்று விழுந்தது.
“ஸார்…” என இரண்டடி அவன் பின்னால் போக,
“உன்கிட்ட தான் மேன் கேட்கறேன். என்ன ப்ளான் உன்னோடது?…” என்று கத்த,
“ஸார் நான் எந்த பிளானும் பண்ணலை ஸார். சத்தியமா. என்னை நம்புங்க ஸார்….” என அழாத குறையாக ஸ்ரீநிவாஸ் தனக்கு ஒருவரும் உதவமாட்டார்களா என்பதை போல அனைவரையும் பார்த்தான்.
“ப்ளான் பண்ணலைன்னா இவ்வளவு பெரிய தப்பு நடந்திருக்கு. அதை ஏன் என் பார்வைக்கு நீ கொண்டு வரலை. அத்தோட நீ பண்ணினது க்ரைம். உன்னை சும்மா விட சொல்றியா?…” என்று எகிறு எகிறென எகிற,
“ஸார் நீங்களாவது சொல்லுங்க ஸார். க்ரைம் அது இதுன்னு பேசறார். நிஜமாவே நான் வேணும்னு பண்ணலை ஸார்…” என்று பன்னீர் செல்வத்திடம் முறையிட அவரோ அக்னியை பார்த்தார்.
“யாராச்சும் ஒரு வார்த்தை பேசினீங்க?…” என எச்சரித்தவன் ஸ்ரீநிவாஸ் பக்கம் திரும்பி,
“நாம ஃப்ரோசன் பன்றதுக்கு யூஸ் பன்ற கெமிக்கல் லிக்விட்ஸ் ஒரு ட்ராப் எக்ஸ்ட்ராவா ஆனா கூட அதோட ரியாக்ஷன் வேற மாதிரி இருக்கும்னு உனக்கு தெரியுமா தெரியாதா மேன்?…”
எந்த கோபத்திலும் எப்பொழுதும் மரியாதையாகவே பேசும் அக்னியின் வாயில் அவனை கண்டவிதமாய் திட்டும் ஆத்திரம் தான் அப்பொழுது இருந்தது.
“நீ என்னன்னா செட் பண்ணி வச்சிருந்த கெமிக்கல் இன்க்ரீஸ் ஆனதும் தெரியாம கெட்டுபோன வழுக்கைக்கு கிளீன் பண்ண இன்னும் சேர்த்திருக்க. நீ பண்ணினது எல்லாம் பாய்சன். இது மட்டும் பேக் ஆகி யாருக்காச்சும் ஃபூட் பாய்சன் ஆகி உயிருக்கு ஆபத்துனா நான் தான் கம்பி எண்ணனும்…”
“ஸார் இப்படிலாம் பயம் காட்டாதீங்க ஸார். அவ்வளவுக்கு எல்லாம் சேர்க்கலை. நானும் செக் பண்ணினேன்…” என ஸ்ரீநிவாஸ் தொண்டை உலர சொல்ல,
“ஈஸிட், அப்போ இதுல நாலு பாக்கெட் உனக்கு பேக் பன்றேன். நீ சாப்பிடுவியா? உன் பேமிலிக்கு தருவியா?…” என கேட்க திருதிருவென விழித்தான் ஸ்ரீநிவாஸ்.
“உனக்குன்னதும் எவ்வளவு யோசனை? படிப்பை யாருக்கும் பாதிப்பில்லாம யூஸ் பண்ணனும். நீ தப்பிக்க எவ்வளவு பெரிய தப்பு பண்ண இருந்த?…” என்று அவன் கேட்க கேட்க,
“ஸார், அதான் தெரியாம பண்ணிட்டேன்னு சொல்றேன்ல. நிஜமா வேணும்னு பண்ணலை…” என அப்போதும் பயந்துகொண்டே என்றாலும் அவனிடம் பேச,
“வாயை திறந்த பார்த்துக்கோ. செஞ்ச தப்பை ஒத்துக்க முடியலை. இஷ்டம் இல்லைன்னா வேலையை விட்டு போய்ட்டே இருக்கனும்….” என்று நிதானம் இழக்க ஆரம்பித்தான் ஸ்ரீநிவாஸ் நடந்துகொண்ட விதத்தில்.
“அக்னி, என்ன பேச்சு இது? இப்ப ஸ்ரீநிவாஸ் நம்ம குடும்பத்தில ஒருத்தர்…” என பன்னீர்செல்வம் சொல்ல,
“இங்க எல்லாருமே எம்ப்ளாயிஸ் தான். நான் உட்பட. என் தொழிலுக்கு நான் பன்ற மரியாதை இது. சொந்தம் எல்லாம் வெளில தான். இந்த கேட்டை தாண்டின பின்னால ஏதாவது சொன்னா என்னன்னு கேட்கட்டும்…”
“ஆனா இந்த விஷயத்துல நான் சும்மா விட மாட்டேன். நாளைக்கு சுரேன் பண்ணிருந்தாலும் இதுதான்…” என்றவனின் கோபத்தில் தெறித்த நியாயங்களும், அவன் பட்ட கஷ்டங்களும் தெளிவாய் தெரிந்தது.
என்னதான் குடும்பம் பேர்பெற்ற வசதி வாய்ப்பான குடும்பமாக இருந்தாலும் இந்த தொழிற்சாலை ஆரம்பிப்பது அத்தனை சுலபமாய் இருக்கவில்லை அவர்களுக்கு. அதிலும் அந்த கிராமத்தில் அதன் எழில் குன்றாமல் நடத்த அவன் மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம்.
“இதை ஆரம்பிக்க பட்ட கஷ்டம் உங்களுக்கு தெரியுமா தெரியாத? ஆரம்பிச்ச பின்னால வேலைக்கு வந்தவங்களுக்கு என்ன போச்சு? இப்ப இந்த ஆடரை நான் இன்னும் ரெண்டு நாளைக்குள்ள டெலிவரி அனுப்பனும். மொத்த இளநீர் வழுக்கையும் போச்சு…”
“அட்லீஸ்ட் இந்த மாதிரி ஆகிடுச்சுன்னு எனக்கு அப்பவே தெரிஞ்சிருந்தா வேற மாதிரி யோசிச்சிருந்திருப்பேன். என்னோட பேக்டரி எனக்கே தெரியாம இத்தனை பெரிய விஷயத்தை மறைச்சு செய்யனும்னா என்ன ஒரு துணிச்சல் இவங்களுக்கு? இவருக்கு என்ன இதை விட்டா வேற ஒரு வேலை. ஆனா நான்?…”
“சொந்தம்ன்றதை வச்சு இந்த பொறுப்பை இவர்க்கிட்ட ஒப்படைக்கலை. அவரோட வேலை மேல, திறமை மேல உள்ள நம்பிக்கையால தான் ஒப்படைச்சேன். ஒரு ரெண்டு நாள். அந்த நம்பிக்கை சுக்குநூறா சிதறி போச்சு. ஏதோ ஒரு வகையில இதை நான் நோட் பண்ணேன். பண்ணாம விட்டிருந்தா?…”
“அக்னி அதான் ஆண்டவன் புண்ணியத்துல எதுவும் நடக்கலையே. பார்த்துக்கலாம். வியாபார சங்கத்துல இளநீர்க்கு நான் பேசறேன். நாளைக்கே இறக்குமதி பண்ணிடலாம்….” என பன்னீர்செல்வம் சமாதானமாய் சொல்ல,
“சுரேன் நீ போய் கந்தசாமிக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி வை. அவருக்கு தெரிஞ்ச இடத்துல கேட்கட்டும். ஒன்னு இல்லன்னா இன்னொன்னு பேசிக்கலாம்…” என அடைக்கலம் மகனை அனுப்ப,
“நான் நேராவே போய் பார்த்துட்டு வரேன்ப்பா…” என ஸ்ரீநியை முறைத்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பினான் சுரேன்.
“அக்னி, அமைதியா இரு…” என அடைக்கலம் சொல்ல,
“என்ன அமைதியா இருக்கறது? அட போங்க சித்தப்பா. இப்ப நினைச்சாலும் எனக்கு பதட்டம் குறையலை. இத்தனை வருஷ முயற்சி, உழைப்பு, நேர்மை, மரியாதைன்னு எல்லாம் இழக்க இருந்தேன்…” என மீண்டும் அங்கிருந்த சேரில் அமர்ந்தவன்,
“இவனை போக சொல்லுங்க. இப்ப நான் இருக்கற கோவத்துக்கு இவன் எதாச்சும் பேசினா அடிச்சிருவேன் பார்த்துக்கோங்க…” என்று சொல்ல ஸ்ரீநிவாஸ் அதிர்ந்து பார்த்தான்.
“அக்னி…” என பன்னீர்செல்வம் சத்தமாய் அதட்ட,
“அப்பா, இதை ஆரம்பிக்க உங்கக்கிட்ட கூட கையேந்த கூடாதுன்னு எத்தனை பாடுபட்டு இதை ஆரம்பிச்சு இந்த நிலைமைக்கு கொண்டுவந்திருக்கேன். ஈஸியா வந்து ஸாரின்னு சொன்னா சரியாகிடுமா? பேக்கிங் அனுப்பலை ஓகே. அப்போ இந்த நஷ்டத்துக்கு என்ன பதில் சொல்வாராம் உங்க சொந்தக்காரர்?…”
அக்னியின் கேள்வியில் மொத்தமாய் அரண்டு நின்றான். வழக்கு போட்டாலும் தன்னை தான் பிடிப்பார்கள் என்பதில் நிச்சயம் தான். முகம் வெளிற நின்றிருந்தான் ஸ்ரீநிவாஸ்.
“இப்ப இந்த நிமிஷம் கூட நான் ஆக்ஷன் எடுக்க முடியும். இதுவரைக்கும் இங்க திறமையா வேலை பார்த்ததாலையும் நீங்க சொன்னீங்களே சொந்தம் அதுக்ககாவும் தான் பல்லை கடிச்சுட்டு நான் பொறுமையா இருக்கேன்…” என்றவன்,
“இங்க பாருங்க ஸ்ரீநிவாஸ் நீங்க கிளம்பலாம். இப்பவும் கீர்த்தி மாமான்றதாலையும், என் மாமனாருக்கு மூத்த மருமகன்றதாலையும் தான் உங்க மேல எந்த கம்ப்ளைண்டும் குடுக்காம அனுப்பறேன். மத்த விஷயத்தை முடிவு பண்ணிட்டு மேல பேசலாம். கிளம்புங்க…” என சொல்ல,
“ஸாரி ஸார்…” என்றன முகம் கன்றி முணுமுணுப்பாய்.
“உங்க கவனக்குறைவால சில விஷயம் நடந்த வரைக்கும் சரிதான். ஆனா அப்போவாச்சும் என்கிட்ட அதை சொல்லிருந்திருக்கலாம். நிச்சயம் மன்னிச்சிருப்பேன். ஆனா அதை மறைச்சு பேக் பண்ணி நாடுகடத்த ப்ளான் பண்ணுனீங்க பாருங்க. நீங்க தப்பிக்க மத்தவங்களை பலிகடா ஆக்க பார்த்திருக்கீங்க. இதை என்னால விட முடியாது…”
கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு அவன் சொல்ல சொல்ல ஸ்ரீநிவாஸ் எதுவும் செய்யமுடியாத இயலாமையுடன் முகம் இறுக நின்றான்.
“ஸ்ரீநி நீ கிளம்புப்பா. நாளைக்கு நாங்க போன் பன்றோம்…” என அடைக்கலம் சொல்ல பன்னீர் செல்வம் தலையில் கை வைத்தபடி கண்ணை மூடி அமர்ந்திருந்தார்.
அத்தனை அவமானமாய் இருந்தது அவனுக்கு. இப்படி பேச்சு வாங்கவேண்டியதாகி போனதே என கோவமும், ஆற்றாமையும் பொங்கியது.
அத்தனைக்கும் காரணம் சுரேன். அக்னி இல்லாத நேரத்தில் அவன் படுத்தியபாட்டால் தான் இந்த பிசு நேர்ந்தது. ஆனாலும் நேர்ந்துவிட்ட பிசகை சரி செய்கிறேன் பேர்வழி என்று இழுத்துவிட்டுக்கொண்டது தான் இத்தனை பெரிய இக்கட்டில் தன்னை நிறுத்தி இருக்கிறது என கூட உணராமல் கோபத்துடன் வெளியே வந்தான்.
ஸ்ரீநிவாஸ் பொறுத்தவரை சுரேன் சாதாரணமாக சொல்லும் வேலைகளும், கேட்கும் கேள்விகளும் கூட அவனை எரிச்சல் படுத்தியது, வேண்டுமென்றே செய்வதாக எண்ணி கோபத்தை வளர்த்துக்கொண்டான்.
கோபத்துடன் அவன் கிளம்பி செல்ல அக்னி அந்த கோபத்தை விடுத்து அடுத்து என்ன செய்வது என யோசிக்க ஆரம்பித்தான்.
முதலில் டீலர்களிடம் பேசி சரக்கை அனுப்ப நாள் கேட்க வேண்டும். இதுவரை எந்த நேர தாமதமும் இன்றி தரமாக செயல்பட்டுக்கொண்டிருந்த நிறுவனத்தின் நற்பெயருக்கு இதுவே சிறு கரும்புள்ளி தான்.
ஆனால் வேறு வழி இல்லையே. சிலர் புரிந்து கொள்வார்கள். சிலர் இதுதான் சாக்கென்று தன்னை இழுத்தடித்து பேசுவார்கள். எத்தனை பார்க்கவேண்டும். அவர்களை சமாதானப்படுத்தி வேறு பேசவேண்டும். நினைக்கவே கசந்தது.
“அக்னி…” என அடைக்கலம் அழைக்க,
“சித்தப்பா நீங்க அப்பாவோட கிளம்புங்க. நான் பார்த்துக்கறேன்…” என்றான் அவரை பார்க்காமலே.
“உன்னை விட்டுட்டா? முதல்ல இதிலிருந்து வெளில வா…”
“நோ நோ, இதை யோசிக்கலை. யோசிச்சா மட்டும் என்னாகிடும்? நான் அதை நினைக்கலை. இப்ப டீலர்ஸ்க்கிட்ட பேசனும். முதல்ல யார் யார்க்கிட்ட பேசனும்னு லிஸ்ட் அவுட் பன்றேன். எத்தனை நாள் அவகாசம் கேட்கனும்னு ஒரு மைண்ட் கால்குலேஷன்…”
அக்னி சொல்லவும் அடைக்கலமும், பன்னீர்செல்வமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
இந்த ஆளுமையும், புத்தி கூர்மையும் தானே அவனை இந்தளவிற்கு உயரத்தில் கொண்டு வந்திருக்கிறது.
நடந்துவிட்டதை எண்ணி அங்கேயே தேங்காமல் அதற்கடுத்து என்ன செய்வதென யோசிக்கும் அவனின் திறமையை அபாரமென நினைத்தாலும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
“ஓகே, எல்லார்ட்டையும் நீ பேச முடியாது. லோக்கல் டீலர்ஸ், ஏஜென்ஸி எல்லார்ட்டையும் நான் பேசறேன். சுரேன் மத்ததை பார்த்துப்பான். நீ ஃபுல்லா ஸ்ட்ரெஸ் எடுத்துக்காத…” என அடைக்கலம் சொல்ல,
“பார்த்துக்கலாம் சித்தப்பா…” என்றவன்,
“சாரிப்பா, கொஞ்சம் வேகமா பேசிட்டேன்…” என்றான் வருத்தத்துடன்.
“புரியுது அக்னி, ஆனாலும் இன்னும் கொஞ்சம் நிதானமா இருந்திருக்கலாம். உன்னோட கோபம் ஸ்ரீநியை பாதிக்கும் போதும் அவன் ராகாட்ட காண்பிப்பான். அது ராகாவை பாதிக்கும் போது அவ பேரன்ட்ஸ்கிட்ட போய் கீர்த்தனாக்கிட்ட வந்து கடைசி நம்ம குடும்பத்துக்கே வந்து சேரும்…”
“அதுக்காக அவனை அப்படியே விட சொல்றீங்களா?…” என்றான் மீண்டும் கோபத்துடன்.
“ம்ஹூம், அப்படின்னு சொல்லலை. நம்ம வீட்டுக்கு வந்திருக்கற பொண்ணுக்கு மனநிம்மதி முக்கியம். அக்கா புருஷனும் தன் புருஷனும் இப்படி சண்டைக்கு நின்னா கீர்த்தனாவுக்கு எப்படி இருக்கும்? அதுக்காக தான் சொல்றேன்…”
“ப்ச், அப்பா நான் சொல்றது புரியுதா? தவறுதலா தவறு செய்யறவங்க இருக்காங்க. ஸ்ரீநிவாஸ் விதிவிலக்கில்லை. பட், தப்பு நடந்துட்டா அதை என்கிட்டே சொல்லியிருக்கனும். அதை விட்டுட்டு அதை மறைக்க செஞ்சது தான் என்னால ஏத்துக்க முடியலை…” என்றவன்,
“அதோட இது நம்ம தொழில். இதோட முடிவுகள் நம்ம தான் எடுக்கனும். ஆயிரம் இருந்தாலும் ஸ்ரீநிவாஸ் இங்க ஒரு ஸ்டாஃப். தன்னிச்சையா முடிவெடுக்கற அதிகாரத்தை அவருக்கு யார் குடுத்தா? இதை நான் அனுமதிக்க முடியாது…”
அக்னி சொல்வதில் இருந்த நியாயம் பிடிபட்டாலும் அனுபவஸ்தர்களாய் பன்னீர்செல்வமும் அடைக்கலமும் கவலையுடன் அமர்ந்திருந்தார்கள்.
அனுபவமே ஆசான். சில கோபங்கள் நீருபூத்த நெருப்பென அடக்க அடக்க வெடிக்கும் நேரம் சிதறல்களில் சிக்குண்டவர்கள் மீள முடியாமலே செல்ல கூடிய அபாயமும் உள்ளதெ.