“அன்னைக்கு உன்கிட்ட காபி ஷாப்ல பேச வந்தது இந்த வீடு விஷயமா தான்” என்றான் நியாபகம் வந்தவனாய்.
“எனக்கு தெரியும்! நீங்க சொல்றதுக்கு முன்னடியே மல்லிகா அத்தை அம்மாகிட்ட சொல்லிட்டாங்க போல.. அம்மாவும் எல்லா வீட்டுலயும் இருக்குறது தானேன்னு சொன்னாங்க” என்று கூற,
“ஹ்ம் சொல்லாம உன்னை கல்யாணம் பண்ணினா தப்புன்னு தோணுச்சு.. ஆனா அன்னைக்கு சொல்ல தோணல.. ஜானு புரிஞ்சுப்பான்னு தோணுச்சு” என்றதும் அவள் புன்னகைக்க,
“லோன் ட்ரை பண்ணனும் ஜானு! லோன் கட்டுறது தான் பெட்டர்.. வெளில கடன்னு சொல்றதுக்கு இது தான் சரின்னு ஒரு தாட் இருக்கு.. சூர்யாகிட்ட முதல்ல பேசிடணும்.. இல்ல என்னைவிட்டு நீ மட்டும் எப்படி பண்ணலாம்னு சண்டைக்கு வந்திடுவான்” என்று கூற,
“உங்க விருப்பப்படி பண்ணுங்க..” என்று மட்டும் அவள் முடித்துக் கொள்ள,
“அங்கே எங்க நீ என்னை பேச விட்ட.. இல்லாத சேட்டை!” என்று கூற, இன்னும் கன்னம் சிவந்தது அதை நினைத்து அவளுக்கு.
“எதுக்கெல்லாம் வந்தேன்னு சொன்ன?” என்று குனிந்திருந்த அவள் முகத்தை இவனும் குனிந்துப் பார்க்க, அவள் இன்னுமாய் முகத்தை மறைத்தாள்.
விளையாட்டு அடுத்த கட்டத்திற்கு செல்ல, இருவரின் பேச்சுக்களும் தடைப்பட்டு சிணுங்கல்களுடன் அவர்களின் வாழ்க்கையும் அடுத்த நிலையை தொடங்கியது.
அடுத்த நாள் காலை சூர்யா எழுந்து கொள்ளும் போது அருகில் அஞ்சலி இல்லை. மணியை பார்க்க ஆறு ஆக பத்து நிமிடம் இருந்தது.
“இவ்வளவு காலையில எழுந்துக்க மாட்டாளே! சொல்லாம மறுபடியும் அவ வீட்டுக்கு ஓடிட்டாளா” சூர்யா நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே குளியலறையில் இருந்து குளித்து முடித்து அவள் வர, ஆச்சர்யமாய் பார்த்தான் சூர்யா.
“எலி! நல்லாருக்க தானே?” சூர்யா கேட்க,
“விடியும் முன்னயே ஆரம்பிக்கிறியா?” என்று அஞ்சலியும் கேட்டாள்.
“ஓகே! வாய்ஸ் டோன் எல்லாம் நல்லா தான் இருக்கு.. ஆனா இவ்வளவு சீக்கிரம் எழுந்து என்ன பண்ணிட்டு இருக்குற?” என்றான் சந்தேகமாய்.
“வெளில மகி வாய்ஸ் உனக்கு கேட்கல?” அத்தனை பற்களும் தெரியும் படி சிரித்து அவள் கேட்க,
“ஓவர் நைட்ல ஓவர் சேஞ் தான் போ!” என்று கிண்டல் செய்து அவன் எழும் பொழுதே இவள் வெளியே கிளம்பி இருக்க, சூர்யாவின் சிரிப்பு சத்தத்தில் நின்று என்னவென பார்த்தாள்.
“எதாவது பண்ணிட்டே இருப்பியா நீ?” சலிப்பாய் அஞ்சலி வெளியே கேட்டாலும் அது தான் அவளுக்கும் பிடிக்க ஆரம்பித்து இருந்தது.
“இல்ல! இவ்வளவு காலையில நீ எழுந்ததுக்கே என்னை மாதிரி வீட்டுல எல்லாரும் உன்னை பார்ப்பாங்க.. இதுல நீ வேற தலைக்கு குளிச்சு..” என்றவன் சொல்லாமல் இன்னும் சிரிக்க, அது புரிந்தும் புரியாமலுமாய் அஞ்சலியை சிவக்க வைத்தது.
அஞ்சலி அவன் கூறியதில் விழி விரித்து அங்கும் இங்கும் பார்த்து என இறுதியில் மீண்டுமாய் அவன் முகம் பார்க்க,
“இவ லுக்கு சரி இல்லையா இல்ல நான் தான் சரி இல்லையா?” நினைத்ததை முணுமுணுத்தவன்,
“நீ கிளம்பு!” என்று விட்டு பாத்ரூம் சென்றுவிட, சில நிமிடங்கள் அங்கேயே அமந்துவிட்டாள்.
அவன் கூறியது நன்றாய் புரிய ஆரம்பிக்கவும் வெளியே செல்ல வந்த தயக்கத்தில் அமர்ந்தவள் மணி ஆறை தாண்டவும் தலையை நன்றாய் உலர்த்தி பின்னலிட்டு வெளியே வர, அங்கே மகிழினி பிரியா, பிரேமா என அனைவர்க்கும் விளையாட்டு காட்டி ஓடிக் கொண்டிருந்தாள்.
அஞ்சலி வந்ததும் பிடித்துவிட, “பாலைக் குடிக்க சொன்னா இவ்வளவு அடம்!” என்று கூறி பிரியா புகட்ட, விளையாடியபடி குடித்து முடித்தாள் அதை.
அன்றே மறுவீடு அழைத்து செல்வதும் முடிவாக, சூர்யா அஞ்சலியையும் துணையாய் அனுப்பி வைத்தனர் ஜெய் ஜனனியோடு.
நானும் என அடம்பிடித்து கல்லூரிக்கு மட்டம் போட்டு நிவியும் உடன் சென்றாள்.
மீண்டும் ஜனனி வீட்டில் ஒரு கலாட்டாவனா கலகலப்பாய் அந்த நாள் சென்றது.
பிரியா அஞ்சலியையும் பேச்சில் இணைத்துக் கொள்ள, அவளுமே தானாய் முன் வந்தாள் அஞ்சலி சில பேச்சுக்களில்.
சூர்யா அருகேயே இருப்பவள் இன்று மகிழினியை வைத்து அங்கும் இங்குமாய் ஓடிக் கொண்டு இருக்க, அவ்வப்போது அஞ்சலியையும் பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யா.
ஜெய் ஜனனியின் கண் பார்வை பாஷைகளை கவனித்து பிரியா அடுத்த விளையாட்டை ஆரம்பித்து வைக்க, அது புதிதாய் இருந்தது அஞ்சலிக்கு.
முதலில் ஜெய் பார்வையால் பேசுவதும் அதற்கு ஜனனி பதிலுக்கு வாயசைப்பதுமாய் இருக்க, பிரியா சமிக்ஞ்சையில் அதை அனைவர்க்கும் காட்ட என இருக்கையில் அஞ்சலி அவர்களைப் பார்த்தவள் பார்வை நேராய் சூர்யாவிடம் செல்ல, அவனும் தற்செயலாய் அவள் பக்கம் திரும்பி இருந்தான்.
என்ன என புருவத்தை அவன் கேள்வியாய் உயர்த்தவும் தலையசைத்து திரும்பியவளுடன் ஒரு கட்டத்தில் அனைவருமாய் சிரித்தபின் தான் ஜெய் அவர்கள் பார்ப்பதை கவனிக்கவே செய்தான்.
“இங்க என்ன டா லுக்கு உனக்கு?” என தம்பி தோளில் ஜெய் தட்ட, ஜனனி தான் அனைவரிடமாய் மாட்டி விழி பிதுங்கி இருந்தாள் வெட்கத்தில்.
அடுத்தடுத்த நாட்களில் ஜனனி வந்ததோடு வீடு இன்னும் வண்ணங்களுடன் கலாட்டாவாய் மாறி இருக்க, சூர்யா, நிவியுடன் ஜனனியும் கூட்டணி ஆரம்பித்தால் ரகளையே நடக்கும்.
ஜெய் அமைதியாய் சிரித்தபடி அவர்களை பார்த்து ரசித்து அமர்ந்து விடுவான் என்றால் அஞ்சலியும் அவர்களுடன் ஓரளவு பேச்சில் கலந்துவிடுவாள்.
ஜெய் ஜனனி திருமணம் முடிந்து ஒரு வாரம் கடந்திருக்க, அன்று காலையில் ஜனனி சட்னிக்கு அரைத்துக் கொண்டிருக்க, அஞ்சலி மாவினை எடுத்துக் கொண்டிருந்த நேரம் அஞ்சலி மொபைல் அடித்தது.
“அஞ்சலி உன் மொபைல் தான்! அம்மா பன்றாங்க” ஜனனி கூற,
“ப்பா! என்னாச்சு ப்பா? ஏன் ஒரு மாதிரி பேசுறீங்க?” அஞ்சலி கேட்க,
“அம்மா கால் வழுக்கி கீழ விழுந்துட்டா டா.. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ட்டு இருக்கேன்.. ரொம்ப வலில அழுவுறா.. நீ கொஞ்சம் சீக்கிரம் வாயேன்.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல” என்ற குரலில் அஞ்சலி அதிர்ந்திருக்க,
வெளியே டைனிங் டேபிளில் அமர்ந்து காய் வெட்டிக் கொண்டிருந்த பிரேமா, மல்லிகாவிடம் கூறிய ஜனனி, சூர்யா அறைக்கு சென்று அவனையும் அழைத்து வந்தாள்.
அடுத்த பத்து நிமிடத்தில் அஞ்சலியை அழைத்துக் கொண்டு சூர்யா சென்று கொண்டிருக்க உடன் பிரேமாவும் சென்றார்.
“ஒன்னும் இருக்காது அஞ்சலி! அழாத..” என்று பிரேமா சமாதானம் செய்தபடி வர, கண்ணாடி வழியே அவளைப் பார்த்தபடி தான் சென்றான் சூர்யா.
மருத்துவமனை உள்ளே காஞ்சனாவிற்கு சிகிச்சை கொடுத்துக் கொண்டிருக்க, வெளியில் படபடப்புடன் நின்று கொண்டிருந்தார் குணசீலன்.
“ப்பா! அம்மாக்கு என்னாச்சு?” என்று அஞ்சலி கேட்க, சரியாய் மருத்துவரும் வெளியே வந்திருந்தார்.
“பெரிய அடி இல்லை.. பிராக்சர் ஆகி இருக்கு.. ஒரு மாசம் பெட் ரெஸ்ட்ல கண்டிப்பா இருக்கனும்.. சரி ஆக ஆறு மாசமாவது ஆகும்” என்று சொல்லி செல்ல, அழுதவளை கைகளில் அழுத்தம் கொடுத்து சமாதானம் செய்திருந்தான் சூர்யா.
அடுத்த நாள் வரை மருத்துவமனையில் தங்கி இருக்க கூறிவிட அஞ்சலியும் அன்னையுடன் தங்கிக் கொண்டாள்.
மாலை ஜெய்யும் ஜனனியும் வந்து பார்த்துவிட்டு செல்ல, சூர்யா காலையில் விட்டு சென்றவன் இரவும் துணைக்கு என்று வந்துவிட, மதியமும் இரவும் சமைத்து கொடுத்து அனுப்பிவிட்டார் பிரேமா, மல்லிகா.
சூர்யா, ஜெய் இருவர் தவிர குணசீலனிடம் மற்றவர்கள் பேச தான் செய்தனர். குணசீலனுக்கு இப்பொழுது தான் நன்றிக்கடனும் குற்ற உணர்வுமாய் பெருகியது.
அடுத்தநாள் டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வரும் பொழுது சூர்யாவும் பிரேமாவும் உடன் சென்றனர்.
“நான் அம்மா கூட கொஞ்சநாள் இருந்துட்டு வரவா ஆண்ட்டி!” என்று அஞ்சலி கேட்கவும் பிரேமாவும் சரி என்றுவிட, சூர்யா முகத்தைப் பார்த்தாள் அஞ்சலி.
அமோதிப்பாய் தலையசைத்தவன் “நத்திங் டு ஒர்ரி! சீக்கிரம் சரியாகிடும்!” என்று அவளுக்கு ஆறுதல் கூறி பிரேமாவுடன் தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.