தற்போதும் ரமணன் சொல்ல வருவது புரியாமல்.. ‘எதுக்குன்னு சொல்லுங்க சார்…” என ராகமிழுத்தான் சலுகையாக.
‘அட.. உனக்கு இப்படி கெஞ்சக் கூட தெரியுமா.?” என்றார் அதிசயமாக.
ஆமா குட் நியூஸ் சொன்னாரே என யோசித்தவன்.. ம்.. வேலை கிடைச்சிருக்கும்.. போன முறை கோல்ட் வாங்கிய போது ஏ கிரேடில் வேலை தருவதாக சொன்னார்கள்.. இப்போ கிடைச்சிருக்கும் என யூகித்தாலும்.. ‘சார்.. எதோ குட் நியூஸ் சொன்னிங்க..” என்றான் ஆர்வமாக.
‘ம்.. வயசு இருபத்தி இரண்டு.. பி.ஜி. எக்கனாமிக்ஸ் பைனல் இயர்.. ஆறடி உயரம்.. கரியர்காக மீசை வச்சிக்கலன்னாலும் அடர்ந்து நீண்டிருக்கும் புருவங்களோட கம்பீரமான முகம்.. மூனாவது படிக்கும்போது கரேத்தா கிளாஸ்ல ஆரம்பிச்சி.. இப்போ வரைக்கும் ஒரு நாளைக்கு ஆறு மணிநேரம் உடற்பயிற்சியோட நல்ல முறுக்கேறின உடம்பு..” என பெருமையோடு சொல்லி..
‘ஆனா.. இதென்னடா கலரு.? உன் கலரு.? மாநிறத்துக்கும் கொஞ்சம் ஜாஸ்தியா… பொண்ணுங்களை மயக்குற மாதிரி..” என ஒரு மார்கத்தோடு கேட்க..
‘சார்.. “ என இவன் பதற.. ‘அடப்பாவி வெக்கப்படுவன்னு பார்த்தா எதுக்குடா இப்படி பதறுற.?” என்றார் சிரிப்போடு.
‘சார்.. இன்னைக்கு என்ன ஆச்சு உங்களுக்கு..?” என்றான் தானும் சின்ன சிரிப்போடு.
‘ம்.. அப்படி கேளு.. ஒரு மாதிரி ரொம்ப பெருமையா உல்லாசமா இருக்குடா..” என்றார் பூரிப்போடு.
தங்கப்பதக்கம் வாங்கிய போதும் கூட கட்டிப்பிடித்து தட்டிக்கொடுத்து பெருமையடைந்தாரே அன்றி இப்படி நண்பன்போல் சகஜமாகவெல்லாம் பேசிராத ரமணனையே ஆச்சர்யத்தோடு பார்த்திருக்க.. ‘மிஸ்டர் கலையரசன்.. அசிஸ்டண்ட் கமிஸ்னர் ஆஃப் போலீஸ்..” என்றார் அதீத பெருமையோடு.
‘சார்..” என எழுந்தவன் பயிற்சியாளர் பாதம் பணிந்தான் பணிவோடு.
‘ஹே.. கெட் அப் மை பாய்.. இனி நான்தான் உனக்கு சல்யூட் வைக்கனும்..” என தோள் தொட்டு எழுப்பியவர் அணைத்துக்கொள்ள..
‘தேங்க்யூ சோ மச் சார்..” என்றான் சந்தோசத்தோடு.
‘எனக்கெதுக்கு தேங்க்ஸ்.? எல்லாம் உன் உழைப்புக்கு கிடைச்சது.. ஆறேழு மாசம் முன்னமே கிடைச்சிருக்க வேண்டியது.. லேட் செய்துட்டாங்க..” என சின்னதாய் வருந்தி.. ‘இந்த வாரத்துல அப்பாய்ண்மெண்ட் ஆர்டர் கொடுத்திடுவாங்க.. எப்போ எங்கன்னு கால் பண்ணுவாங்க.. நாளைக்கு எல்லா பத்திரிக்கையிலும் உன்னோட நியூஸ் வரும்..” என்றார் பெருமையாக.
‘கோல்ட் அடிக்கவும்தான் ஜாப் கொடுக்கிறாங்க.? உங்க கோச்சிங் இல்லன்னா தொடர்ந்து இரண்டு வருசம் கோல்ட் மெடல் வாங்கியிருக்கமாட்டேன் சார்..” என தனது பயிற்சியாளர் பெருமை கூறவே..
‘சரி..சரி.. என் புகழ் போதும்.. அம்மாப்பாக்கு கால் செய்..” என்றார் தன்னடக்கமாகவும் பொறுப்பாகவும்.
‘ம்கூம்.. சொன்னா நம்பறாங்களா என்னன்னு கூட தெரியலைங்க சார்..” என்றான் சிரிப்போடு.
( ம்.. நம் கலையரசன் விளையாட்டில் வீரத்திலெல்லாம் படு கெட்டிதான்.. ஆனால் படிப்பு.. ஏழாம் வகுப்பிலிருந்து பி.ஜி வரை ஐம்பதிலிருந்து அறுபது பர்சன்ட்டேஜை தாண்டியதில்லை. கலையரசனின் அக்காள்கள் இருவரும் படிப்பு புலிகள்.. பெரியவள் கீதாராணி.. கல்லூரி ஆசிரியை.. சின்னவள் செல்வராணி.. பத்திர பதிவாளர்.. கீதாராணிக்கு இரண்டு குழந்தைகள்.. பெரியவள் ஒன்பதாம் வகுப்பும் சின்னவன் ஏழாம் வகுப்பும் படிக்கிறான்.. செல்வராணிக்கு ஒரே மகன்.. ஐந்தாம் வகுப்பு படிக்கிறான்..செல்வராணி பிறந்து ஐந்து வருடம் கழித்து பிறந்தவன் கலையரசன்.. ஆண்மகன் வேண்டுமென வரமிருந்து பெற்றமகன்.. செல்லமகன்.. ஆனால் செல்லமெல்லாம் ஐந்தாம் வகுப்பு வரையில்தான்..
பின்னே ஐந்தாம் வகுப்புவரை இருபதிலிருந்து இருபத்தி ஐந்தாவது ரேங்கிற்குள் வந்தவன்.. ஆறாம் வகுப்பு சேர்ந்ததிலிருந்து ஒரு பரிச்சையில் கூட ரேங்க் வாங்குவதில்லை.. அறிவியலிலும் கணித்திலும் எத்தனை அடித்தும் இருபது மார்க்கை தாண்டுவதில்லை..
கலையரசனின் அப்பா மயில்சாமி அடித்தால் அம்மா கலாவின் கண்ணில் ரத்தம் வரும்.. அம்மாவின் செல்லத்திலேயே இவனின் படிப்பு இன்னும் கீழே போக.. இது வேலைக்கு ஆகாது என முடிவெடுத்த மயில்சாமி.. அடுத்த முறை பாஸ் ஆகவில்லையென்றால் கராத்தே கிளாசிற்கு அனுப்பமாட்டேன் என்று தீர்க்கமாக சொல்லி ஒரு வாரம் அதை செயல்படுத்தவும் செய்யவே சற்றே கவனம் செலுத்தினான் படிப்பில்.
இன்றுவரை கலையரசன் வாங்கும் மெடல்களிலெல்லாம் அவனின் பெற்றோருக்கு சந்தோசமில்லை.. நல்ல மதிப்பெண்களில் வெளிவரும் மாணவர்களுக்கே வேலைகிடைப்பது திண்டாட்டமாக உள்ள காலகட்டத்தில்,இவனின் ஐம்பது பர்சன்டேஜ்மார்க்கிற்கு எந்த வேலை கிடைக்கும்.? எப்படி பிழைப்பான்.? மகள்கள் நல்ல நிலையில் இருக்க.. இவன் மட்டும் இப்படி விளையாட்டு விளையாட்டு என விளையாட்டிலேயே உயிர் மூச்சாக இருக்கிறானே என்ற வருத்தம்.. வருத்தம் என்பதை தாண்டி வேதனை என சொல்வதே சரி.
இவர்களின் வேதனைக்கான காரணம்.. கிரிக்கெட் விளையாட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் வேறு விளையாட்டிற்கு இல்லையென்பதே மயில்சாமியின் எண்ணம். முதல்முறை தங்கமெடல் வாங்கியபோது வேலை தருவார்கள் என சொல்லியிருந்தான்.. மயில்சாமி நினைத்தது போலவே அது நடக்கவில்லை.. இரண்டாம்முறை வேலைதருவதாக அரசு அறிவித்தபோதும் இத்தனை மாதமாக அது பற்றிய பேச்சே வரவில்லையென்பதால் எல்லாம் கண்துடைப்பு என்ற முடிவிற்கே வந்திருந்தார்..
அதிலும் கலையரசன் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் ரகமல்ல..விபரம் அறிந்த நாளிலிருந்து எங்கு அநியாயம் நடந்தாலும் சண்டையோடுதான் வீடு வருவான்.. அதிலும் சற்று வளர்ந்த பின்னே பெண்களை வம்பிளுக்கும் ஆண்களுக்கு எளிதில் மறக்க முடியாத அளவிற்கு சிறப்பான கவனிப்பு இருக்கும்.
கலையரசனின் இந்த குணமே மயில்சாமி கலாவின் பெரும் வேதனை.. எங்கே பெரிய இடத்தில் பசங்களோடு வம்பு வளர்த்து போலீஸ் அடிதடி கேசாகிடுமோ.? பழியை மகன்மீது போட்டு மானம் போய்விடுமோ என்ற பயம்.. ம்.. போலீஸ்டேசன் ஏறிவிட்டாலே பெரும் அவமானம் என நினைக்கும் பெற்றோர்தான் மயில்சாமி கலா தம்பதி.
தனது குணத்திற்கும் பெற்றோர்களின் கண்டிசனிற்கும் ஒத்துபோக முடியாததாலே சொந்த ஊரான தஞ்சாவூரிலிருந்து திருச்சி வந்துவிட்டான்.. இங்குள்ள காலேஜில் சேர்த்தால் தான் மேற்கொண்டு படிப்பேன் என பிடிவாதம் செய்து வந்திருந்தான்.
அந்த கல்லூரியில் சீட் கிடைப்பது கடினம் என்றாலும் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் சீட் கிடைத்தது. தனது பனிரெண்டாம் வகுப்பு வரை மாநில அளவிளான குத்து சண்டை போட்டிகளில் மட்டுமே விளையாடிக்கொண்டிருந்தவன்.. இங்கு காலேஜில் சேர்ந்த பிறகுதான் ரமணனை சந்தித்தான்.. ரமணனின் தனித்துவமான பயிற்சியோடு இவனின் அயராத உழைப்பால் தற்போது பலன் கிட்டியது கலையரசனிற்கு. )
‘இன்னைக்கு நாளைக்குள்ள ஆர்டர் கொடுக்க கால் செய்வாங்க.. என்னைக்குன்னு தெரிஞ்சதுக்கப்புறம் அவங்களை இங்க வரவச்சி சர்ப்ரைஸ் கொடு..” என்றார் ரமணன்.
கலையரசன்.. ‘ஓ.கே சார்..” என தன் கட்டை விரலை சந்தோசத்தோடு உயர்த்திக்காட்ட.. ‘ஏய்.. அங்கென்னடா காயம்..?” என்றார் சின்ன பதட்டத்தோடு.
‘ஓ.. இதுங்களா சார்..” என நிலவழகியின்நினைவில்.. ‘ஒரு சின்ன நண்டு என்னை அடிச்சிடுச்சு சார்..” என்றான் சிரிப்போடு.
‘நண்டு அடிச்சி இத்தனை பெரிய காயமா.? அதுவும் இந்த வீரனையா.?” என சந்தேகத்தோடு உற்று நோக்கியவர்.. ‘இந்த காயத்தை பார்த்தா அடிச்சதால ஆன காயம் மாதிரி தெரியலையே.. எதோ கத்தியால கிழிச்ச மாதிரியில்ல இருக்கு..?” என சந்தேகித்தவர்..
‘இதுக்குத்தான் கண்ட பிரச்சனைல தலையிடாதன்னு சொல்றது.. இதே காயம் கண்ணுல அங்கயிங்கன்னு ஆகியிருந்தா என்னாகுறது.? அந்த லேடிக்கு சப்போர்ட் செய்யப்போனப்ப ரௌடிப் பசங்களால ஆனா காயம் தான இது.? இன்னும் மூனு மாசத்துல மேட்ச் வேற வருது..” என ரமணம் கடுகடுக்க..
‘எது.? ரௌடிப் பசங்களால..?” என வெற்றி சிரிப்பு சிரித்தவன்.. ‘அவனுங்களால ஆகியிருந்தா கூட சந்தோசப்பட்டிருப்பேன்.. இது ஒரு சின்ன நண்டு அடிச்சது சார்.. அதுவும் பெண் நண்டு..” என்றான் சின்ன சிரிப்போடு.
கலையரசனின் சிரிப்பில் ரமணன் சந்தேகத்தோடும் சந்தோசத்தோடும் பார்க்க.. ‘ஹா..ஹா.. சார்.. இது நீங்க நினைக்கிற மாதிரி இல்ல சார்.. “ என அன்று சுவாதி வீட்டிற்க்கு சென்றபோது கத்தி சொருகிய நீண்ட குச்சியால் நிலவழகி தன்னை அடித்ததால் ஆன காயம் என விளக்கினான்.
‘எனக்கு தெரிஞ்ச கலையரசன் கோவக்காரனாச்சே.. இப்படி அடிவாங்கியதை பெருமையா சொல்ற கலையரசனை எனக்கு தெரியாதே..” என்றார் யோசிக்கும் பாவனையோடு.
‘ம்.. திருடன் திருடன்னு சில்லி வண்டாட்டம் என்ன சத்தம்ங்கிறிங்க..? சின்ன பெண்ணுன்னாலும் அவ அக்காவுக்காக என்னையே அடிக்க துணிஞ்சிட்டா சார்.. அந்த தைரியம் எனக்கு ரொம்ப பிடிச்சது.. அந்த பொண்ணு எட்டோ இல்ல ஒன்பதோதான் படிச்சிட்டிருக்கும்னு நினைக்கிறேன்.. சின்னதா மிரட்டினதுக்கே அழுதுட்டா..
அதான், இங்க கேம்ப்ல தெரியாம தப்பு செய்யிற சின்ன பசங்ககிட்ட எப்படி என் கோபத்தை காட்டுவனோ அதே போல அவகிட்டயும் காட்டிட்டு வந்துட்டேன்..” என நிலவழகியின் நடத்தையை சொன்னான் பெருமையோடு.
இங்க பயிற்சியில ஜூனியர்ஸ் தப்பு செய்தா கோபத்தை கட்டுப்படுத்த முத்தமில்ல கொடுக்க சொல்வான் எனப்பதறி.. ‘என்ன.? வழக்கம்போல கோபத்தை காட்டினியா.? கலை.. பசங்ககிட்ட முத்தம் வாங்குறது ஒ.கே.. அதையே பொண்ணுகிட்டயும் நீ எப்படி செய்யலாம்..? அதுவும் எட்டாவது படிக்கிற பொண்ணுகிட்ட.?” என்றார் பதறி.
சற்றும் பதறாமல்.. ‘சார் எனக்கு இதுல தப்பேதும் தெரியல.. எனக்கு பசங்க பொண்ணுங்க எல்லாம் ஒன்னுதான்.. என்னதான் அவ தைரியத்தை பாராட்டினாலும் என் கையை கிழிச்சிட்டா சார்.. எவ்ளோ ரத்தம் வந்துடுச்சி தெரியுங்களா.? ஒரு பொண்ணு அடிச்சி இவ்ளோ ரத்தம் வந்துடுச்சேன்னு கோபம் வந்துடுச்சி.. என் கோபத்தை கட்டுப்படுத்த எனக்கு வேற வழிதெறியலங்க சார்.. அதான் முத்தம் கொடுக்க சொன்னேன்.. கையிலதான்..” என்றான் அலட்டாமல்.
‘அதெல்லாம் எனக்கு தெரியாது சார்..” என இலகுவாய் சொன்னவன்.. பிறகுதான் அவள் பெயர் என்னவாக இருக்கும் என யோசிக்க.. கலையரசனின் பிரகாச முகத்தை கண்ட ரமணன்.. சில் வண்டுகிட்ட சிக்கிடுவானோ என தானும் யோசிக்கலானார்.