நிலவழகி அழகான பேரு என மனதில் நினைத்தவன்.. ‘இரண்டு நாள்ல உங்களுக்கு ஒரு சிம் வாங்கி தரேன்.. என் நம்பர் பிரபா நம்பர் உங்கப்பாம்மா நம்பர்ன்னு முக்கியமான நம்பர் மட்டும் சேவ் செய்துக்கோங்க.. பழைய சிம் என்கிட்ட கொடுங்க.. உங்க ஹஸ்பண்ட் சம்மதமா எதாவது க்ளு கிடைக்குதா பார்ப்போம்..” என்றான்.
‘அண்ணா.. ட்ரீட் எதுவும் இல்லைங்களா..?” என்றான் பிரபாகரன்.
ஆச்சர்யத்தோடு கலையரசன் பார்க்க.. ‘பேப்பர்ல பார்த்தேன்.. கங்ராட்ஸ்ண்ணா..” என கைகுலுக்க.. ‘உனக்கில்லாததா.? இத்தனை சின்ன வயசில எத்தனை உதவி மனப்பான்மையோட இருக்க.. நீ மட்டும் இவங்களை கூட்டிட்டு வரலன்னா கண்டிப்பா இவங்க நிலைமை ரொம்ப மோசமாகிருக்கும்.. இதுக்காகவே நிச்சயம் ட்ரீட் உண்டு..“ என என மனதார பாராட்டினான் பிரபாகரனை.
‘ரொம்ப சரியா சொன்னடா.. யாருக்கும் தேடி தேடி உதவி செய்யனும்னு இல்ல.. நம்ம கண்ணு முன்ன ஒரு பிரச்சனை வரும்போது நமக்கென்னன்னு ஒதுங்கிக்காம நம்மளால முடிஞ்சதை செய்தா கூட போதும்..” என பாராட்டிவன்..
‘ஒரு ரெண்டு மாசத்துக்கு நான் பிஸிடா..” என தனது போட்டிகள் குறித்து விளக்கி.. ‘உனக்கும் ரெண்டு மாசத்துக்கு லீவ் தான.? குழந்தைகளோட கொஞ்சம் ஸ்பெண்ட் பண்ணு.. அடுத்த மாசம் எனக்கு கேம்ப் ஸ்டார்ட் ஆகுது.. டெல்லி போய்டுவேன்.. நான் பிஸியா இருக்கேன்னு யோசிக்காத.. எதாவது அவசரம்ன்னா தயங்காம எனக்கு கால் செய்.. என்னால வரமுடியலன்னாலும் என் பிரண்ட்ஸ்கிட்ட சொல்லி எதாவது ஏற்பாடு செய்யறேன்.. நான் ஃப்ரீ ஆனதும் இவங்களுக்கு ஒரு நல்ல வழி செய்துடலாம்.. அதுக்கப்புறம் உன்னை சிறப்பா கவனிக்கிறேன்..” என சிரிக்க..
‘சரிண்ணா.. பார்த்துக்கலாம்ண்ணா..” என பிரபாகரன் நம்பிக்கை கொடுக்க.. நிம்மதியோடு அவனிடம் விடைபெற்று தனது ஜூனியர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்ய கிளம்பினான்.
மாலை பயிற்சி முடிந்ததும் இரவு டின்னருக்கு ஏற்பாடு செய்துகொள்ளலாம் என முடிவெடுத்து உணவு வகைகள் ஆர்டர் கொடுத்து வரும்போது புதிய சிம் வாங்கினான். மாலை பயிற்சி முடிந்ததும் பார்ட்டி முடித்து வீடு வர இரவு பத்து மணியாகியிருக்க.. இந்நேரத்தில டிஸ்டர்ப் செய்ய வேணாம்.. புது சிம்மை காலை கொடுத்திடலாம் என தன் வீட்டிற்குள் சென்றான்.
மறு நாள் காலை சுவாதியிடம் சிம்மை கொடுத்து.. அவளின் பழைய சிம்மை வாங்கியவன்.. ‘இதுல இருந்து எதாவது நம்பர் எடுக்கனுங்களா.?” என்றான்.
‘இல்லயில்ல.. அவர் நம்பரும் அப்பா நம்பரும் எனக்கு நியாபகத்துல இருக்கு.. உங்க நம்பரும் பிரபா நம்பர் மட்டும்தாங்க.. இதுல சேவ் செய்துக்கிறேன்..” என்றாள் பயத்தோடு.
‘சிம் என்கிட்டதான இருக்கு.? இன்னும் எதுக்கு பயம்..?” என்றான் சிறு அதட்டலாக.
‘நீங்க ஆக்டிவேட் செய்ததும் லொகேசன் கண்டு பிடிச்சி வந்துட்டாங்கனா என்ன பண்றதுன்னு பயமாயிருக்கு..” என்றாள் குறையாத பயத்தோடு.
‘நான் இப்போதைக்கு இந்த சிம்மை ஆக்டிவேட் செய்யப்போறதில்ல.. இன்னும் இரண்டு மாசம் கழிச்சி என் மேட்ச் முடிஞ்சி இங்க வந்ததுக்கப்புறம்தான் ஆக்டிவேட் செய்வேன்.. சிம் ஆக்டிவேட் செய்யும்போது நீங்க என் பார்வையிலதான் இருக்கப்போறிங்க.. பயப்படாம இருங்க..” என கலையரசன் தைரியமளிக்க.. நிம்மதியோடு தலையசைத்தாள்.
சுவாதியின் மகனிடம்.. ‘பார்த்திபா.. அம்மாவை தொல்லை செய்யக் கூடாது.. அம்மாகிட்ட சொல்லாம எங்கையும் போகக்கூடாது.. அம்மா அக்காவைல்லாம் நீதான் பத்திரமா பார்த்துக்கனும்.. சரியா.?” என கேட்க.. ‘ஊ.. கூ..” என பார்த்திபன் சண்டையிடுவது போன்ற பாவனை செய்ய.. கலையரசன் சிரிக்க..
‘அன்னைக்கு நீங்க சண்டை போட்டதை பார்த்து அவனும் கத்துகிட்டானாம்.. இனி யாராவது வந்தா நீங்க சண்டை போட்டது போல இவனும் எல்லாரையும் அடிச்சிடுவானாம்.. நான் அழும்போதெல்லாம் நானிருக்கேன் பயப்படாதம்மான்னு சொல்லுவான்..” என சுவாதி பெருமையோடு எடுத்துரைக்க..
‘ம்.. பார்த்திபன்னா சும்மாவா.? இப்படித்தான் தைரியமா இருக்கனும்..” என சொல்லி சிறுவனை தட்டிக்கொடுத்து தன் வீடு வந்தான்.
————————–
‘ஒத்த ஆளுகிட்ட நாலு பேர் அடிவாங்கிட்டு வந்திருக்கிங்களே.. வெக்கமா இல்லையாடா.?” என ஆத்திரத்தோடு ரங்கன் கேட்க..
‘அண்ணே.. அவன் பார்க்கத்தான் நரம்பாட்டம் இருந்தான்.. ஆனா அடி ஒன்னும் இடிமாதிரி விழுந்துச்சி.. விலாவில ஒரு குத்து குத்தினான் பாருங்க.. அப்டியே அந்த இடத்திலயே சுருண்டுட்டேன்.. அதுக்கப்புறம் உயிர் பிழைச்சா போதும்ன்ற நிலைக்கு வந்துட்டேன்..” என்றான் ஒருவன்.
‘மானங்கெட்டவனே.. என்கிட்டயே அவனை பாராட்ட வேற செய்றியா.? தினமும் அண்டா சோறும் குண்டா குழம்பும் திங்கறதுக்கு மட்டும் சத்து இருக்கா.. இரண்டு முறை கோட்டை விட்டுட்டு வந்துட்டு விளக்கம் வேற கொடுக்கறான்.. ஒரு பொட்டச்சியை தூக்கிட்டு வர வக்கில்ல.. நீல்லாம் இன்னும் ஏண்டா உசுரோட இருக்க..? அப்டியே வர வழியில எங்கையாவது நாண்டுருக்கலாமில்ல..?” என கர்ஜித்தான் ரங்கன்.
இன்னொருவன்.. ‘நீங்க வேற கத்தி கபடான்னு எதுவும் கூடாதுங்கிறிங்க.. வெறுங்கையோட போய்ட்டோம்.. அவனை அடிச்சிட்டு என்னை முறைச்சிகிட்டே சர்ட்டை கழட்டினான்.. அப்டியே அசந்துட்டேன்.. சர்ட்டோட இருக்கும்போது ஒல்லியா தெரிஞ்சவன்.. சர்ட்டை கழட்டினதும் ஒரு நிமிசம் ஆடிப்போய்ட்டேன்.. எக்ஸைஸ் பாடிண்ணே அவன்.. என்னமா உடம்பை வச்சிருந்தான் தெரியுமா.? இவன்கிட்ட வேலையாகாதுன்னும்.. ஒருத்தன் மாட்டினாலும் எல்லாரும் கூண்டோட சிக்கிடுவோம்னும்தான் திரும்ப வந்துட்டோம்..
அந்த பொம்பளை எங்க போய்டப் போறா.? ஊன்னு ஒத்த வார்த்த சொல்லுங்க.. அங்கையே டேரா போட்டு காத்திருந்து அவளோட சேர்த்து அந்த குமாரோட வாரிசுங்களையும் போட்டு தள்ளிடறோம்..” என்றான் ரோசமாக.
‘போடாங்க..” என எட்டி உதைத்தவன்.. ‘ஏண்டா.. என்னை என்ன பரம்பரையா வெட்டு குத்து செய்து பொழப்பு நடத்தறவன்னு நினைச்சியா.? முட்டாள்.. அந்த குடும்பத்தை போட்டு தள்ளிட்டு ஜெயில்ல சாக ப்ளான் போடுறியா.? அவங்களை போடறது எனக்கு தேவையில்லாதது.. எனக்கு என்னோட பணம் முக்கியம்.. பொண்டாட்டி புள்ளையை தூக்கினா அந்த குமாரு எந்த பொந்துக்குள்ள ஒழிஞ்சிருந்தாலும் வெளில வருவான்ல.? அப்போ இருக்கு அவனுக்கு..” என மருகினான் ரங்கன்.
‘அப்ப அந்த குழந்தையை தூக்கிடுவோம்ண்ணே.. அந்த பையன் வீட்டு முன்னாடியேதான் விளையாடிட்டு இருப்பான்.. யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி ஈசியா தூக்கிடலாம்.. குழந்தைக்கு ஒன்னுன்னாலும் அவன் வந்துதான ஆகனும்..” என இன்னொருவன் சொல்ல..
‘நீ கிழிச்ச..” என என தரங்கெட்ட வார்த்தையில் திட்டி.. ‘மறுபடியும் உடனே ஆரம்பிக்க கூடாது.. நம்மூரா இருந்தாலாவது பரவால்ல.. அந்த பொம்பள அங்க போய் உக்கார்ந்திருக்கா.. ஒரு இரண்டு மூனு மாசம் ஆகட்டும்.. பொறுமையா காத்திருந்து மொத்தமா தூக்கிடலாம்.. “ என்றான் ரங்கன்.
அடியாட்கள் ‘நீங்க சொன்னா சரிதாண்ணே..” என ஒத்து ஊத..
‘அதுவரைக்கும் தண்ட சோறு சாப்பிடலாம்னு நினைச்சிடாதிங்க.. அந்த குமாருக்கு சொந்த ஊர் கன்னியாகுமரில புத்தேரின்ற கிராமம்.. அங்க போய் ஒழிஞ்சிட்டிருக்கானான்னு பாருங்க.. ஒரு வேளை அங்கையும் இல்லன்னா அவனைப் பத்தின விபரம் எதாவது சேகரிங்க.. அவன் தங்கச்சி அக்கான்னு யாராவது கிடைக்கிறாங்களா பாருங்க.. பொண்டாட்டி புள்ள இல்லன்னா என்ன.? அவங்களை தூக்கிடலாம்..” என்றான் ரங்கன்.
‘எப்படியும் அவன் வீட்டை கண்டு பிடிக்க நாலஞ்சி நாளாவது ஆகும்.. அதுவரைக்கும் தங்கறதுக்கு சாப்பாட்டுக்கு..” என ஒருவன் தலையை சொரிய..
‘ஒரு இரண்டு வாரம் கேப் விட்டு போகலாம்.. அதுவரைக்கும் கிரேனேட் அடுக்க வந்திடனும்..” என கட்டளையிட.. சரியென தலையாட்டினர்.
‘ஒருவேளை இவன் பணத்தை எடுத்துட்டு ஓடுனது அவன் பொண்டாட்டிக்கும் தெரிஞ்சிருக்குமோ.. உசுருக்கு பயந்து ஓடினாலும் தெரியாத ஊர்ல சீவனம் பண்ற அளவுக்கு அவளுக்கு பணம் எங்கயிருந்து வந்துச்சி.? பார்க்க அப்பிராண்டி மாதிரி இருந்துட்டு என் கண்லயே விரலைவிட்டு ஆட்டுறியா.? இருக்கட்டும் இருக்கட்டும்.. எவ்ளோ நாளைக்குன்னு ஊரான் பணத்துல உடம்ப வளர்துறன்னு பார்த்திடறேன்.. இரண்டொரு மாசத்துக்கு நிம்மதியா இரு.. என்னைக்குன்னாலும் என் கையில சிக்கத்தான் போற.. அன்னைக்கு இருக்குடி மொத்த குடும்பத்துக்கும்..” என சுவாதியை மருகினான் ரங்கன்.