என் முகம் பார்க்காம எப்படி பார்த்திய வாங்கிடறன்னு நானும் பார்த்துடறேன் என நினைத்தவன்.. ‘கடத்தினதுலயிருந்து சரியா சாப்பிடல போல.. ரொம்ப ரெஸ்ட்லசா இருக்கான் கதிர்.. அவனால அங்கையே நிக்க கூட முடியல.. இறக்கி விட்டு விழுந்துட்டான்னா..” என்றதுதான் பதறி எழுந்தாள் நிலவழகி.
‘வா பார்த்தி..” என கை நீட்டிய நிலவழகி தற்போதும் பார்த்திபனிடம் மட்டுமே தன் பார்வையை பதித்திருந்தாள். பார்த்திபன் நிலாவிடம் தாவ.. ‘ஹே.. பார்த்து..” என கொடுத்தான் குழந்தையை. ம்.. தானாக பேசியும் நிலவழகியை தன் முகம் பார்க்க வைக்க முடியவில்லை கலையரசனால்.
கலையரசனிற்கும் அசாருக்கும் தோசை வார்த்து வெளியே எடுத்து வந்த அம்பிகா.. ‘கதிர் தம்பிகளை உன் ரூமுக்கு கூட்டிட்டு போறியா.? முகம் கை கழுவிட்டு உன்னோட பேசிகிட்டு அங்க வச்சே சாப்பிடட்டும்..” என்றார்.
இவ பக்கத்துல இருக்கிற பத்து நிமிசத்துக்கும் ஆப்பு வைக்கிறாங்களே என கலையரசன் யோசிக்க.. ‘வாங்க கலை.. வாங்க அசார்..” என கதிரவன் இன்முகத்தோடு வரவேற்க.. ‘உங்களுக்கு எதுக்கு ஆன்ட்டி சிரமம்.? இப்ப எங்களுக்கு பசியில்ல..” என்றான் கலையரசன்.
‘என்ன தம்பி இப்படி சொல்லிட்டிங்க.? என் பொண்ணு.. பேரப்பிள்ளைங்களுக்காக நீங்க இத்தனை சிரமமெடுத்துருக்கிங்க.. உங்களுக்கு சாப்பிட கொடுக்கிறதுல எனக்கு ஒரு சிரமமும் இல்ல..” என்றார் அன்போடு.
‘உங்கோட டின்னர் சாப்பிடுவேன்னு நான் கனவுல கூட நினைச்சி பார்க்கல.. இப்படி சான்ஸ் திரும்ப கிடைக்குமா.?வாங்க கலை சாப்பிடுவோம்..” கதிரவன் அழைக்க.. ‘உண்மையா எனக்கு பசிக்கல கதிர்.. டீ வேண்ணா குடிக்கிறேன்..” என்றான்.
‘உபசரிப்புன்ற பேர்ல உங்களை கட்டாயப்படுத்த நான் விரும்பல.. டீ குடிச்சாலும் ஓ.கே தான்.. அதுக்கு முன்ன முகம் கழுவிக்கோங்க..” என்க.. ‘ம்..” என அவ்விடம் விட்டு நகர.. ‘ண்ணா..” என கலையின் பேண்ட்டை பிடித்தான் பார்த்திபன்.
மனதில் குழந்தையை மெச்சியவன்.. ‘முகம் கழுவிட்டு வந்திடறேன் பார்த்தி.. டிஸ்யூம் செய்து கை கால்லாம் அழுக்கு..” என்றான்.
‘ம்..” என அரை மனதோடு தலையசைத்தான் சிறுவன். பின்பு கதிரவனோடு அவனின் ரூம் செல்ல.. அங்கே தனது ஆளுயரப் புகைப்படம் சுவற்றின் ஒரு பகுதியை ஆக்ரமித்திருந்ததை கண்டு பிரமித்து நின்றான் கலையரசன்.
‘என்ன கலை அப்படி பார்க்குறிங்க.? உண்மையாவே உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. நீங்கதான் என்னோட ரோல்மாடல்.. அந்த ஜப்பான்காரன் தப்பா விளையாடுறான்னு புரிஞ்சதுக்கப்புறம் அவனைப் பார்த்திங்க பாரு ஒரு பார்வை.. அந்த ஸ்டில்தான் இது.. நான் உங்களோட பெரிய பெரிய ரசிகன்..” என்றான் பெருமையோடு.
கலையரசனிற்கு பெருமை என்பதை விட மிகுந்த சந்தோசம் வந்தமர்ந்தது.. நாளுக்கொரு முறையேனும் அண்ணனின் ரூமிற்கு தங்கை வராமளா இருப்பாள்.? அப்போதெல்லாம் தன்னை பார்த்துதானே ஆகவேண்டும் என்ற சந்தோசம்.
‘அதுதான் பாத்ரூம்.. போய் பிரஸ்சாகிக்கோங்க..” என்றான் கதிரவன்.
‘கலை நீ முதல்ல போ.. நீ இல்லன்னா பார்த்தி பயப்படுறான்..” என்றான் அசார்.
‘ம்..” என முகம் கழுவி வெளியே வர.. அங்கே கதிரவன் இல்லாததால் அசார்.. ‘ம்.. பார்த்தி அவன் சித்தியோட சமத்தா சாப்டுட்டுதான் இருந்தான்.. நான்தான் சும்மா சொன்னேன்..” என்றான் சிரிப்போடு.
கலையரசன்.. கேடி.. கண்டுபிடிச்சிட்டான் என சன்னப் புன்னகை புரிய.. ‘இதுக்காகத்தான் மாய்ஞ்சி மாய்ஞ்சி வேலை நடக்குதா.?” என்றான் அசார்.
‘டேய்.. அப்படில்லாம் இல்லடா..” என அன்று நிலவழகி தன்னை அடித்ததை சொன்னவன்.. முத்தம் கேட்டதை மறைத்து.. ‘ஆனா மச்சான்.. தம்மாத்துண்டு புள்ளை ரத்தம் சிந்த வச்சதாலயோ என்னவோடா.. இந்த ஊருக்கு வரன்னதும் அவ நினைப்புதான் முதல்ல வந்துச்சி..” என்றான் உல்லாசமாக. ‘அடி வாங்கிட்டு பெருமையை பாரு..” என கலையரசன் வயிற்றில் ஒரு குத்துவிட்டு.. ‘என்ன லவ்வா.?” என்றான்.
‘இவ்ளோநாள் கிரஸ்ன்னு நினைச்சிட்டிருந்தேன்.. இங்க வந்து இவளைப் பார்த்ததும்தான் இது அதுக்கும் மேலயோன்னு தோணுது..” என்றான் புன்னகை முகமாக.
‘ரொம்ப சின்ன பொண்ணு மாதிரி தெரியுதேடா..” என அசார் கவலை தெரிவிக்க.. நண்பனை முறைத்தவன்.. ‘அங்க டேபிள்ல அவ புக் இருந்தது.. பதினொன்னாவது படிக்கிறா.. எனக்கும் இருபத்திமூனுதான் ஆகுது.. ஒரு ஐஞ்சாறு வருசம் கழிச்சிதான கல்யாணம் செய்துக்குவேன்.. அதுக்குள்ள வளர்ந்திடுவா..” என்றான்.
‘சரி சரி முறைக்காத.. நாம பேசுறது வெளில கேட்ற போகுது.. ஏற்கனவே பார்த்தியோட அம்மா லவ் மேரேஜ்ன்றதாலதான் இத்தனை வருசம் பேசாம இருக்காங்க.. கொஞ்சம் அடக்கி வாசி.. ” என்றான் நண்பன்.
ம்ம்.. அடக்கித்தான் வாசிச்சாகனும்.. வேற வழி.. என மனதில் நினைத்தவன்.. ‘சரி சீக்கிரம் போய் முகம் கழுவி வா.. நமக்கும் டைம் ஆகுது..” என்றனுப்பினான்.
‘அண்ணா.. அண்ணா..” என பார்த்திபன் தன்னை கேட்பது காதில் விழ.. இங்கே கலையரசனிற்கு அப்படியொரு சந்தோசம்.. முகம் கழுவிய வந்த அசார்.. ‘என்னடா அதுக்குள்ள தனியா சிரிக்கிற அளவுக்கு முத்திடுச்சா..?” என்றான்.
கலையரசன் பதில் சொல்லும்முன் கதிரவன் வெளியிலிருந்து அழைக்க.. ‘வாடா..” என இருவரும் ரூமிலிருந்து ஹாலுக்கு வந்தனர்.. கலையரசனைக் கண்டதும் ‘ண்ணா..” என ஆசுவாசப்பட்டான் குழந்தை.
கலையரசன்.. ‘இங்கதாண்டா இருக்கேன்.. சாப்பிடு..” என பார்த்திபனருகில் அமர.. ‘கலையரசன் எழுந்து மேல உக்காருங்க..” என பதறினான் கதிரவன்.
ம்.. நிலா அருகாமையை விட கலையரசனிற்கு அந்த சோபா சுகம் தருமா என்ன.? ‘பரவால்ல கதிரவன்.. பார்த்தியை கடத்துனதுல ரொம்ப பயந்திருக்கான்.. நான் பக்கத்துல இருந்தா பயப்படாம சீக்கிரம் சாப்பிடுவான்..” என்றவன்.. ‘ஆமாம்தான பார்த்தி..” என்றான்.
ஆமாம் என ஆமோதித்து.. ‘லிலா.. அண்ணா டிஸ்யூம் செஞ்சி.. என்னை காப்பாத்தி..” என கலையரசனின் புகழைப் பாட ஆரம்பித்தான் பார்த்திபன்.
‘நிலா.. அங்கயும் இந்தண்ணாதான் எங்களை காப்பாத்துனாங்க.. ரொம்ப நல்ல அண்ணா..” என்றாள் கவிப்பிரியா.
இருவரும் தங்கையிடம் சகஜமாய் பேசுவதை பார்த்தவன் இதுதான் சமயம் என நினைத்து.. ‘இனி எப்போவும் நிலாகூடவே இருந்துக்கோங்க..” என்றான் கதிரவன்.
‘ம்கூம்.. அம்மாகிட்ட போகனும்..” என முகம் சுருக்கினான் பார்த்திபன்.
நினைவு வந்தவளாய்.. ‘நிலா அம்மாக்கு ஊசி போட்ருக்காங்க..” என வெம்பினாள் சிறுமி.
‘சீக்கிரம் நல்லாகிடும் கவிம்மா..” என ஆறுதலளித்தவாறு குழந்தைகளுக்கு ஊட்டினாள் நிலவழகி. அதற்குள் கலையரசனும் அசாரும் டீ குடித்து முடித்திருந்தனர்.
குழந்தைகளும் சாப்பிட்டு முடித்திருக்க.. ‘சரிங்க கதிரவன் நாங்க கிளம்பறோம்..” என கலையரசன் எழவே.. நிலாவிடமிருந்து அவசரமாய் எழுந்த பார்த்திபன்.. ‘பாய் லிலா..” என்றான்.
‘அச்சோ குழந்தைகள் கிளம்பிடுவார்களோ என்ற பரிதவிப்போடு நிலவழகி கதிரவனைப் பார்க்க.. ‘பார்த்தி குட்டி.. நீங்க நிலாவோட இருப்பிங்களாம்.. நான் போய் அம்மாவை இங்க கூட்டிட்டு வந்திடுவேனாம்..” என்றான் கதிரவன்.
இத்தனை நேரம் பொறுமை காத்திருந்த நாகராஜனிற்கு பொறுமை பறந்திட.. ‘அந்த தறுதலை இந்த வீட்டுக்கு வரக்கூடாது..” என்றார் ஆத்திரமாக.
நாகராஜனின் திடீர் கத்தலில் பார்த்திபன் முகம் சட்டென பயத்தை பூச.. தறுதலை என்ற வார்த்தையின் அர்த்தம் புரியவில்லையென்றாலும் எதோ திட்டுகிறார் என கவிப்பிரியாவிற்கு புரிய.. ‘அண்ணா.. போலாம்..” என பயத்தோடு கண்கலங்கினாள் சிறுமி.
குழந்தைகளின் வாடிய முகம் கதிரவனையும் பாதிக்க.. ‘அவ செய்ததுக்கு குழந்தைகள் என்ன செய்வாங்க.. இவங்க முன்ன எதுவும் பேசக்கூடாதுன்னு சொன்னேன்தான.?” என அதட்டல் விட்டவன்..
‘மாமா சொல்றாங்கள்ல..? நிலாகூட இருங்க குட்டிங்களா..” என அம்பிகாவும் கெஞ்ச.. குழந்தைகள் ஒப்புக்கொள்ளவே இல்லை. கலையரசனின் கையை இறுக்கமாக பிடித்த பார்த்திபன்.. ‘அண்ணா எனக்கு பயமா இருக்கு.. அம்மாகிட்ட போலாம்..” என்றான் நாகராஜனைப் பார்த்தவாறு.
குழந்தைகள் தன்னோடு இருக்க சம்மதிக்காததை விட.. அண்ணா அண்ணா என கலையரசனோடே ஒன்றியது நிலவழகிக்கு அத்தனை கோபத்தை கொடுக்க.. ‘என்னடா அண்ணா..? அங்க போனதாலதான் உன்னை கடத்துனாங்க.. அவங்க கூட போனா திரும்பவும் யாராவது கடத்திட்டு போய்டுவாங்க.. ரெண்டு பேரும் ஒழுங்கா என்கூடயே இருங்க..” என அதட்டினாள் கோபமாக.
நிலாவின் கோபத்தில் சிறுமியின் முகம் வாடிட.. ‘அண்ணா லிலாவும் திட்டறா.. அம்மாகிட்ட போலாம்..” என பார்த்திபன் அழ ஆரம்பித்தான்.
கதிரவன்.. ‘ப்ச்.. நிலா.. அவனே பயந்து போயிருக்கான்..” என தங்கையை கடிய.. ‘பார்த்திபனின் அழுகையில் தன் தவறுணர்ந்த நிலவழகி.. ‘சாரிடா பார்த்தி..” என்றாள் பாவமாக.
‘போ..” என வெம்பியவன்.. ‘அண்ணா போலாம்..” என்றான் மீண்டும்.
பிறகு அம்பிகா கதிரவன் நிலவழகி என்ன சமாதனம் செய்தும் குழந்தைகள் தன்னோடே வர அடம்பிடிக்கவும்.. ‘கதிர்.. நாலுநாளா முகம் தெரியாதவங்களோட இருந்ததில பார்த்தி ரொம்ப பயந்திருக்கான்.. அவங்கம்மாவைப் பார்த்தாதான் அமைதியாவான்..
உங்கக்காவும் இப்போ இருக்க மனநிலையில குழந்தைகள் இல்லாம போனா ரொம்ப பயந்துப்பாங்க.. அதோட குழந்தைகளுக்கு விருப்பமில்லாம இங்க விட எனக்கும் ஒருமாதிரி இருக்கு..
இப்போதைக்கு என்னோடவே கூட்டிட்டு போறேன்.. நீங்க வேண்ணா நாளைக்கு வாங்க.. உங்கக்காவைப் பார்த்து பேசுங்க.. அதுக்கப்புறம் என்ன செய்யலாம்னு முடிவெடுப்பிங்களாம்..” என்றான் கலையரசன்.
கலையரசன் சொல்வது சரியெனப் பட்டாலும்.. இரு குழந்தைகள் பிறந்தபோது கூட அன்னை சொல்லியும் சுவாதியை பார்க்காத நிலையில் தற்போது இத்தனை வருட இடைவெளிக்குப் பிறகு நாளை தனியே போய் எப்படி அவள் முகம் பார்ப்பது..? என்ற யோசனை ஒருபுறம் ஓட..
சுவாதிக்கும் உடம்பு சரியில்லையென்கிறார்கள்.. குழந்தைகள் நம்மோடும் ஒட்டமாட்டார்கள்.. மூவரையும் இங்கே அழைத்து வரும்போது குழந்தைகளை எப்படி சமாளிப்பது எனவும் யோசித்தவன்.. ‘அம்மா.. நாமளும் இவங்களோடவே போய் சுவாதியை கூட்டிட்டு வந்திடலாம்.. கிளம்புங்க..” என்றான் அம்பிகாவிடம்.
அம்பிகா கணவன் முகம் பார்க்க.. நாகராஜன் முறைக்கவும்.. ‘அம்மா..சுவாதி நிலைமை என்னன்னு முன்னமே சொல்லிட்டேன்.. அவளுக்கு எதாவது ஆனாலும் இல்ல குழந்தை திரும்ப காணாம போனாலும் உங்களால நிம்மதியா இருக்க முடியுமா யோசிங்க.. இப்போ விட்டா திரும்ப எப்பவும் சுவாதிக்கு நான் ஹெல்ப் பண்ணமாட்டேன்..” என மிரட்டினான் அன்னையை.
கணவனிற்கு பயந்த அம்பிகா.. ‘என்னோட குழந்தைங்க பேச மாட்றாங்க.. நிலாவை கூட்டிட்டு போ கதிரு.. அவகிட்டதான் நல்லா பேசுறாங்க..” என்றார்.
‘நிலாவையா.? இந்த நேரத்துல அவளை எப்படிம்மா.?” என கலையரசனிற்கு தெரியாதபடி கதிரவன் முனக.. ‘உன் கூடதான வரா.. கூட்டிட்டு போடா.. உங்கப்பா போலீஸ் கேசாகிடும்னு பயத்துல இருக்கார்.. சுவாதிய இந்த நேரத்திலயே வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாத்தான் ஆச்சு..” என கணவன் காதில் விழாதபடி கிசுகிசுத்தார் அம்பிகா.