Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
காதலினும் காதல் கேள் – 1(1)
Post Views:
8,045
அத்தியாயம்
1
‘
வேலுண்டு
வினையில்லை
மயிலுண்டு
பயமில்லை
குகனுண்டு
குறையில்லை
மனமே
’
என்ற
பாடல்
ஒலிக்க
“
யோவ்
!
வரதா
ஏன்யா
காலையில
பாட்டு
போட்டு
என்
தூக்கத்தைக்
கெடுக்கிற
?”
என்று
கத்தினான்
நெப்போலியன்
.
“
டேய்
!
இன்னிக்கு
ட்ராவல்ஸ்ல
அந்த
இன்னவா
காரை
செர்வீஸுக்கு
விட
சொன்னேனே
.
அதை
மறந்துடாத
”
என்று
அதட்டி
விட்டுப்
போனார்
வரதராஜன்
.
வரதராஜன்
வீட்டில்
இருந்து
கிளம்பி
மெயின்
ரோடில்
இருக்கும்
அவர்கள்
ட்ராவல்ஸில்
வந்து
நிற்க
,
அவர்
வரும்
முன்
அலுவலகத்தில்
வந்து
காத்து
நின்றாள்
ஆர்கழி
.
“
சுரேஷ்
உங்க
கிட்ட
சாவி
வாங்கிக்க
சொன்னாங்க
சார்
”
என்று
சொல்ல
“
வாம்மா
,
சுரேஷ்
தம்பி
சாவி
கொடுக்க
சொல்லிச்சு
.
வாடகை
மாசம்
மாசம்
வந்து
ட்ராவல்ஸ்ல
கொடுத்திடு
மா
,
ஒன்னு
நான்
இருப்பேன்
இல்ல
என்
மகன்
இருப்பான்
”
என்று
சொன்னார்
.
அவர்
வீட்டின்
உரிமையாளர்
அல்ல
.
அவளுடன்
வேலைப்பார்க்கும்
ப்ரசாத்தின்
உறவினன்
தான்
சுரேஷ்
.
சுரேஷின்
வீடு
தான்
வாடகைக்குப்
பார்த்திருக்கிறாள்
ஆர்கழி
.
சுரேஷ்
இப்போது
அமெரிக்காவில்
இருப்பதால்
அவன்
வீட்டு
சாவி
,
மற்ற
பொறுப்புகள்
எல்லாம்
வரதராஜன்
வசம்
.
சுரேஷ்
வரதராஜனிடம்
கடன்
வாங்கி
இருக்க
,
அதை
வாடகை
மூலம்
அடைக்க
முடிவு
செய்து
அவரையே
வசூல்
செய்து
கொள்ள
சொல்லியிருந்தான்
.
காஞ்சிபுரத்தில்
அவர்கள்
ஏரியாவில்
பெரிய
மனிதர்
அவர்
.
ட்ராவல்ஸ்
,
வட்டி
,
பஞ்சாயத்து
என்று
பலதும்
பார்ப்பவர்
.
உடன்
நெப்போலியன்
வலது
இடது
என
அவரின்
யாதுமாக
இருப்பவன்
.
“
சரிங்க
சார்
”
என்றாள்
ஆர்கழி
.
ஆர்கழி
மஹிந்திரா
சிட்டியில்
உள்ள
பன்னாட்டு
நிறுவனத்தில்
மென்பொருள்
பணியாளர்
.
சொந்த
ஊர்
பட்டுக்கோட்டை
.
நான்கு
வருடமாக
சென்னைவாசி
.
“
அப்புறம்
எத்தனை
பேர்மா
வீட்ல
தங்க
போறீங்க
?”
என்று
வரதராஜன்
அவளைப்
பற்றி
அறிந்து
கொள்ள
விசாரிக்க
“
அப்பா,
என்
தம்பி
தங்கச்சிங்க
சார்
.
சுரேஷ்
கிட்ட
எல்லாம்
பேசிட்டேன்
”
என்றாள்
.
ஆர்கழி
அழுத்தி
சொல்லாவிடினும்
அதில்
மறைந்திருந்த
அழுத்தம்
வரதராஜனுக்கு
நன்றாகவே
புரிந்தது
.
‘
வீட்டு
உரிமையாளரிடம்
பேசி
விட்டேன்
.
நீ
என்னை
கேள்வி
கேட்காதே
’
என்பதாய்
அவள்
பதில்
இருக்க,
அப்போது
உள்ளே
நுழைந்தான்
நெப்போலியன்
.
“
நான்
சொன்னேன்லம்மா
நான்
இல்லன்னா
இவன்
கிட்ட
வாடகை
கொடுத்துடு
.
எதாவது
வேணும்னாலும்
சொல்லு
நம்ம
கிட்ட
பசங்க
இருக்காங்க
செஞ்சு
கொடுத்திடலாம்
”
என்று
வரதராஜன்
சொல்ல
நெப்போலியனோ
களைந்த
தலையும்
.
ஷார்ட்ஸும்
டீஷர்ட்டுமாக
இன்னும்
தூக்கத்தை
தூக்கி
சுமப்பவனாகத்
தெரிந்தான்
,
“
வரதா!
நேத்து
குடிச்சது
இன்னும்
தலைவலி
போகலை
?
ஒரு
டீ
சொல்லேன்
”
என்றபடி
வரதராஜனோடு
நின்றிருந்த
ஆர்கழியைக்
கண்டு
கொள்ளாது
ட்ராவல்ஸீன்
உள்
அறையில்
போய்
உட்கார்ந்து
கொள்ள
,
ஆர்கழிக்கு
முதல்
பார்வையில்
அவன்
முதல்
பேச்சில்
முழுவதுமாக
அவன்
மேல்
ஒரு
தப்பெண்ணம்
தவறாமல்
உருவானது
.
‘
குடிகாரன்.
அப்பாவை
மரியாதை
இல்லாமல்
பேசுகிறான்
’
என்று
தான்
நெப்போலியனின்
பிம்பம்
அவள்
அகத்தில்
ஆழப்
பதிந்து
போனது
நெப்போலியன்
டீ
கேட்கவும்
ட்ராவல்ஸின்
அருகில்
இருக்கும்
டீக்கடை
பையனை
அழைத்து
,
“
மூணு
டீ
கொண்டா
”
என்றவர்
ஆர்கழியைப்
பார்த்து
,
“
டீ
குடிச்சிட்டுப்
போமா
”
என்று
சொல்ல
“
அதெல்லாம்
வேண்டாம்
சார்,
நான்
காபி
டீயெல்லாம்
குடிக்க
மாட்டேன்
”
என்று
மறுத்தாள்
.
“
சரிம்மா
. ”
என்று
வரதராஜன்
சொல்ல
,
ஆர்கழியும்
சாவியை
வாங்கிக்
கொண்டு
அவளது
அலுவலகம்
போனாள்
.
************
அந்த
மாலை
நேரத்தில்
,
“
பார்த்து
இறங்குங்க
பெரியப்பா
. . ”
என்று
கைத்தாங்கலாக
மாணிக்கவாசகத்தை
அந்த
தனியார்
சொகுசு
பேருந்தில்
இருந்து
இறக்கினான்
ரஞ்சித்
.
மாணிக்கவாசகம்
ஆர்கழியின்
அப்பா
.
ஒரு
விபத்தில்
வெகு
சிரமத்திற்குப்
பின்
தப்பிப்
பிழைத்தவர்
.
அந்த
விபத்தில்
ஒரு
காலை
இழந்தவர்
.
“
ஏய்!
ஓடாம
ஒழுங்கா
நில்லுங்க.
அக்கா
வருவாங்க
”
என்று
தன்
தங்கைகள்
காயத்ரியையும்
ஷாலினியையும்
அதட்டினான்
ரஞ்சித்
.
“
டேய்
ஓவரா
பண்ணாத
இன்னும்
எவ்வளவு
நேரம்
வெயிட்
பண்றது
.
பஸ்ல
வந்தது
டயர்டா
இருக்கு
”
என்று
காயத்ரி
கத்த
“
வந்துடுவா
காயத்ரி
.
அக்கா
ஆபிஸ்ல
பர்மிஷன்
கேட்டு
வரனுமில்லையா
?”
என்று
மாணிக்கவாசகம்
மகளுக்காகப்
பேச
“
அப்போ
லீவ்
இருக்கப்ப
நம்மள
வர
சொல்ல
வேண்டியது
தானே?
எல்லாமே
அவ
இஷ்டமா
பெரியப்பா
?”
என்று
அதற்கும்
கத்தினாள்
.
அவள்
சொல்வது
போல்
ஆர்கழிக்கு
அனைத்தும்
அவள்
இஷ்டம்
தான்
.
அவள்
எடுக்கும்
முடிவுகள்
தான்
அவள்
வாழ்க்கையைத்
தீர்மானிக்க
வேண்டும்
என்பதில்
உறுதியாக
இருந்தாள்
.
இப்போது
இவர்கள்
வாழ்க்கையையும்
தீர்மானிக்கும்
நிலையில்
அவளே
.
“
காயு!
”
என்று
அதட்டினான்
ரஞ்சித்
.
“
அக்கா
வந்துட்டா
”
என்று
உற்சாகமாக
ஷாலினி
கத்த
மகளை
பார்த்த
மாணிக்கவாசகத்தின்
முகத்தில்
மலர்ச்சி
.
அப்பாவைப்
பார்த்து
விட்ட
ஆர்கழிக்கும்
ஒரு
மகிழ்வு
தோன்றினாலும்
முகத்தில்
எல்லாம்
எதுவும்
காட்டவில்லை
.
காட்டியும்
பழக்கமில்லை
.
“
வாங்கப்பா
.
ரொம்ப
நேரம்
ஆச்சா
?”
என்று
ஆர்கழி
கேட்டதுமே
,
“
ஆமா
ரொம்ப
நேரமா
வெயிட்
பண்றோம்
.
நீ
மெதுவா
பொறுமையா
வர,
ஆமா
சென்னையில
வேலைப்
பார்க்குறேன்னு
ஊரெல்லாம்
சொல்லிட்டு
இந்த
காஞ்சிபுரத்துலையா
இருக்க
நீ
?
சென்னைக்குப்
போறோம்னு
நாங்க
வந்தா
இப்படி
பண்ணிட்ட
”
என்று
விடாமல்
காயத்ரி
பேச
“
நான்
ஐடில
வேலைப்
பார்க்குறேன்னு
தான்
சொல்லி
இருப்பேன்
. .
அண்ட்
ஐடி
கம்பெனி
பாதி
சென்னையில
இல்ல
செங்கல்பட்டுல
இருக்கு
”
என்று
கடினக்குரலில்
சொன்னாள்
ஆர்கழி
.
“
அக்கா!
விடுக்கா
அவ
கேள்வி
கேட்டா
நீ
பதில்
சொல்லுவியா
?
வா
போகலாம்
”
என்று
ரஞ்சித்
சொல்ல
உடமையெல்லாம்
காரில்
வைத்து
ஏறினர்
.
தந்தையைப்
பத்திரமாக
முன்
இருக்கையில்
ஏற்றி
உட்கார
வைத்தவள்
,
பின்னால்
வந்து
தம்பி
தங்கைகளோடு
அமர்ந்து
கொண்டாள்
.
****************************
“
அண்ணே!
எப்படி
உங்களுக்கு
மாவீரன்
நெப்போலியன்னு
பெயர்
வந்துச்சு
.
அது
நீங்க
படிச்சு
வாங்கின
பட்டமா
?”
என்று
அங்கிருந்த
ப்ள்க்ஸ்
போர்டில்
காஞ்சிபுரம்
கிங்க்ஸ்
என்று
எழுதியிருக்க
அதன்
கீழே
மாவீரன்
நெப்போலியன்
என்று
நெப்போலியனின்
படம்
போட்டிருக்க
,
அதைப்
பார்த்து
மாஸ்கோ
வேண்டுமென்றே
கேட்க
,
“
அது
ஒரு
பெரிய
வரலாறுடா
.
இந்தா
வரதன்
தான்
எனக்கு
பெயரு
வைச்சாரு
அந்தாளு
கிட்டயே
கேளுடா
”
என்று
சொல்ல
“
மசுரு
வரலாறு
ஒழுங்கா
வட்டி
வசுல்
பண்ண
வக்கில்ல,
இப்படியே
போனா
பெருமாள்
கோவில்ல
புளிசோறு
வாங்கித்தான்
திங்கனும்
”
என்று
வரதராஜன்
சத்தம்
போட
“
யோவ்
வரதா!
நெப்போலியன்
நெருப்பு
மாதிரி
யார்கிட்ட
எப்படி
வசூல்
பண்றதுன்னு
எனக்குத்
தெரியும்.
இப்படியே
பேசினன்னு
வை
மார்க்கெட்ல
நார்த்
போற
லாரில
வாயைக்
கட்டித்
தூக்கிப்
போட்டுடுவேன்
.
இந்தி
தெரியாம
சாவ
நீ
”
என்று
பதில்
பேசினான்
.
Advertising
Advertising