அடுத்த நாள் விடிந்ததுமே நெப்போலியன் அவனது பாக்கு ஃபேக்டரிக்கு சென்றுவிட, ஆர்கலிக்கு அவன் மீதான கோபத்தின் அளவீடு பெருகிக் கொண்டிருக்க,வீட்டு வேலைகளை செய்தாள். நாளை தான் அவள் வேலைக்குச் செல்ல வேண்டும். அதனால் மாலையில் மாணிக்கத்தின் வீட்டிற்கு செல்ல, அங்கு ரவிவர்மன் இருந்தான்.
அவன்முகமே சரியில்லாமல் இருக்க, ஆர்கலியைப் பார்த்தவுடன், “வா ஆரு… எப்படி இருக்க..?” என்று கேட்க
“நான் நல்லா இருக்கேன் ரவி… நீ ஏன் டல்லா இருக்க…?” என்று கேட்டிட“எல்லாம் இவங்க அப்பனால…” என்று வள்ளியைக் கை காட்ட,
“என்னடா ஆச்சு..?” என்று ஆர்கலி கேட்க ரவிவர்மன் நடந்த அத்தனையும் சொன்னான்.
ஒருவாரம் முன்பு ரத்னாவை யாரோகடத்திவிட குடும்பம் மொத்தமும் பதறிவிட்டது. ஆர்கலிக்கு மட்டும் வெளிநாட்டில் இருந்ததால் இதை யாரும் தெரியவிடவில்லை.
“யார்டா இப்படி செஞ்சா.. ஏன் போலிஸ்ல கம்ப்ளயண்ட் பண்ணியா..?” என்று படபடக்க“ம்ம் எல்லாத்துக்கும் காரணம் அந்த ஆள் தான்… சோமசுந்தரம்னு ஒருத்தர் தாத்தா கிட்ட கம்பெனியை ப்லேட்ஜ் பண்ணி கடன் வாங்கியிருக்கார்… ஒரு இருபது வருசம் முன்னாடி. அது நல்ல லாபம் தர கம்பெனி, அதை எப்படியாவது தன்னோடதா ஆக்கனும்னு ஆசைப்பட்டு விலைக்குக் கேட்க, அதுதான் அவங்களோட ஒரே இன்கம் ஸோர்ஸ்… எப்படி கொடுப்பாங்க கடத்தி வைச்சு அவங்க கையாலயே கம்பெனியை மிரட்டி எழுதி வாங்கிட்டார். அதோட அவங்க குடும்பமே போச்சு…”
“அந்த கம்பெனியை வித்த சோமசுந்தரத்தோட பேரன் நம்ம ரத்னா படிக்கிற காலேஜ்ல சீனியர்… எப்படியோநம்ம ஃபேமிலி பத்தி தெரிஞ்சு பழிவாங்க நினைச்சிருக்கான். பிகாஸ் அவங்க ஃபினான்ஸியலி ரொம்ப டவுன் ஆகிட்டாங்க… அவங்க தாத்தாவும் இறந்துட்டார் ஸோ சின்ன வயசுல இருந்தே அந்த வெஞ்சன்ஸ் அவன் மனசுல இருந்திருக்கு… அதனால் அவங்களை மிரட்டி வாங்கின சொத்துதானே அப்படின்னு ரத்னாவை கடத்தி ப்ளாக்மெயில் பண்ணினான்.”
“ரத்னா விஷயம்ன்றதால நான் போலிஸுக்குப் போகல… என்னோட ப்ரண்ட் அபினவ் டிபார்ட்மெண்ட்ல இருக்கான். அவனை வைச்சு அந்த பையனைப் பிடிச்சிட்டோம்… ஆனாலும் அவன் சொன்னதெல்லாம் கேட்டப்போ ரொம்ப கஷ்டமா இருந்துச்சு…
இன்னிக்கு அவன் மிரட்டின மாதிரி தானே தாத்தா அவங்க குடும்பத்தை அன்னிக்கு மிரட்டியிருக்கார்… அந்த சொத்துலவாழ்றோம்னு மனசு ரொம்ப உறுத்தலா இருக்கு… அதனால் அவங்க கிட்ட வாங்கின கம்பெனி இப்போ ரொம்ப நல்லா போகுது, சொல்லப்போனா அதிக லாபம் வரதே அதுல தான். ஆனாலும் அது வேண்டாம்னு அப்பாவும் நானும் முடிவு பண்ணிட்டோம்… முன்னாடியே இப்படின்னு தெரிஞ்சிருந்தா அப்பா கொடுத்திருப்பார்… ஏற்கனவே அம்மா இல்ல அத்தை வாழ்க்கையும் போச்சு. ரத்னாவால பேச முடியலன்னு அப்பாவுக்கு நிறைய வருத்தம்…”
“எல்லாமே தாத்தாவோட அந்த அரகன்சிதான் காரணம். நினைச்சபடி நடக்கனும்ன்ற வெறி… அதை விடு ரத்னா எப்படியோ பத்திரமா வந்துட்டா. ஸோ அவங்க கம்பெனியைஅவங்க பெயர்ல ரிஜிஸ்டர் பண்ணி தர முடிவு பண்ணிட்டோம்… அத்தையும் சைன் பண்ணனும்.. அதைப் பத்திஅத்தைக்கிட்ட பேசலாம்னு தான் வந்தேன்…” என்றான்.
இடையே நெப்போலியனும் வந்துவிட, மனைவிக்கு அருகிலேயே அவன் அமர்ந்து கொள்ள, “இதெல்லாம் ரொம்ப மோசம் தான். ரவி பட் நீ சூப்பர்டா…” என்று புன்னகை செய்ய,
“போ ஆரு… நானே அவ்வளவு டென்ஷன்ல இருக்கேன். இதை கொடுத்திட்டா ரொம்ப டவுனாகிடுவோம்… அதையெல்லாம் சமாளிக்கனும். அவங்கிட்ட எம்ப்ளாயிஸ் மட்டும் அப்படியே வைச்சிக்கோன்னு சொல்லி கேட்டிருக்கேன்..” என்று தலையில் கைவைத்து பேச, ஆர்கலி கிச்சனுக்குள் சென்றவள் எல்லாருக்கும் காபி கலக்கி எடுத்து வர,
“தேங்க்ஸ்டி..” என்று ரவிவர்மன் சொல்ல, நெப்போலியனுக்கு உள்ளுக்குள் எரிந்தது.
‘என் பொண்டாட்டியை அவன் என்ன வா டி போ டின்னு பேசறது..’ என்று கடுப்பானான்.
“எல்லாம் சரியாகிடும் ரவி…” என்றவள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு வீட்டிற்குச் செல்ல, சாப்பிட்டு தூங்கும் வரையில் இருவரும் பேசவில்லை.
நெப்போலியனுக்கு இரவில் குளித்தால் தான் தூக்கமே வரும். அன்றும் குளித்துவிட்டு பனியனுடன் வந்து அவளருகே படுக்க, “தாத்தா இவ்வளவு மோசம்னு நான் நினைக்கவே இல்ல..” என்றுஆர்கலி அவளாகவே அவனிடம் பேசினாள்.
ஆர்கலிக்குஅவன் மீதான் கோபங்கள் தீரவில்லை தான்.ஆனாலும் அவனை விட்டால் யாரிடம் அகம் திறந்து அவளால் பேச முடியும்?இன்னமும் சண்டைத் தீரவில்லை தான்.சமாதானம் செய்யவில்லை தான். அதற்காக அதையே பிடித்துத் தொங்கவோ பிடிவாதம் கொண்டாலோ ஒன்றும் செய்ய முடியாது.
எல்லா சண்டைகளுக்கும் சமாதானம் தேவைப்படாது. அதற்கு சாத்தியமும் கிடையாது. அப்படியே அதன் போக்கில் கொண்டு செல்ல வேண்டும். மறந்தோம ன்னித்தோ கடந்தோ, காதலாலோ எப்படியோ அடுத்தடுத்து நடப்புக்கு நகர்தல் வேண்டும்..!
சிலதை காலம் மாற்றும்..! சிலவற்றை காதல் மாற்றும்..!
ஒன்று சமாதானம் செய்ய வேண்டும் அல்லது சமாளித்து செல்ல வேண்டும். அல்லதில் ஒரு நல்லது இருக்க, அதையே செய்தான் நெப்போலியன். அவளாகப் பேசவும் சந்தோஷமானவன் அவள் போக்கிலேயே பேசினான். பழையதை இழுக்கவே இல்லை.
“ஆமா ஆரு பெரிய கிரிமினல் தான் போல… பாவம் ரவி அந்த கிரிமினல்தாத்தா இந்த மாதிரி என்ன என்ன பண்ணி இருக்காரோ…? இன்னும் எத்தன கம்பெனி இப்படி இருக்கோ..?” என்றிட,
“அப்படி பேசாத ரவி நல்லவன்… இனிமே அப்படி நடக்காம இருக்கனும்…”
“ஆமா ரொம்ப நல்லவன்…. ஒரு பொண்ணை மரியாதையில்லாம பேசுறான்…” என்று பல்லைக் கடித்து முணுமுணுக்க, “எந்த பொண்ணை…?” என்று ஆர்கலி அதுவரையில் விட்டம் பார்த்து பேசியவள் அவன் விழி பார்க்க,
“பொண்ணை இல்ல… என் பொண்டாட்டியை வாடி போடிங்கிறான்..” என்று கோபமாகச் சொல்ல
“அவன் என் மாமா மகன் அப்படித்தான் சொல்வான்… அவனுக்கு அந்த உரிமை இருக்கு.சின்ன வயசுல இருந்து அப்படி தானே சொல்றான்..” என்றாள்.
“அதுக்காக எனக்கென்னமோ பிடிக்கல… இனிமே சொன்னா அவ்வளவுதான்….” என்று நெப்போலியன் கடுப்பில் பேச“அப்படிதான் சொல்வான்… ஏன் நீயே என்னை கல்யாணத்துக்கு முன்னாடி வாடி போடின்னு தான் பேசுவ…”
“நான் பேசுவேன் அவன் எப்படி பேசலாம்… நான் போய் அவன் மனைவியை அப்படி பேச முடியுமா..?”
“ஹலோ மிஸ்டர்.நெப்போலியன், உங்க மனைவியை அவன் பேசலாம்… ஏன்னா நான் அவன் அத்தைப் பொண்ணு நான். ஆனா அவன் மனைவி உங்களுக்கு அப்படி இல்ல..” என்று வெறுப்பேற்ற,
“அத்தை மட்டும் தான் அவனுக்கு. பொண்ணெல்லாம் எனக்கு அத்தை பொண்ணாம் அத்தை பொண்ணு..” என்று எரிந்துவிழ‘அத்தை’ என்றதும் ஆர்கலிக்குத் தாயின் நினைவு வந்திட,அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, முகமும் யோசனையில் மூழ்கியிருக்க,அவளின் அமைதியின் அர்த்தம் உணர்ந்தவனாக,
“வள்ளிம்மாவையும் உன் தாத்தா இப்படி டார்ச்சர் பண்ணியிருப்பார்னு நினைக்கிறியா ஆரு..” என்று அவள் பக்கம் பார்த்து படுத்தபடி பேசினான்.
“அவர் ரொம்ப திமிர் பிடிச்சவர். பணக்காரர்னு கர்வம் ஜாஸ்தின்னு தெரியும்… இப்படி கடத்தல் மிரட்டல்னு எல்லாம் என்னால நினைக்கவே முடியல…” என்று நெப்போலியன் மனம் திறக்க,
“எல்லா அப்பாவும் நம்ம அப்பா மாதிரியே இருக்க மாட்டாங்கடி…. இதே உன் அப்பா இடத்துல வேற யாராவதுஇருந்தா கூட படிப்பு வேலை அதையெல்லாம் விட கௌரவம் பார்த்து என்னை மாதிரி ஒருத்தனை உனக்குக் கட்டி வைச்சிருக்க மாட்டாங்க… உன் தாத்தாவே பாரு அந்த கோபம் தானே அவருக்கு அதிகம்… அதான் பொண்ணை அடச்சி வைச்சி மிரட்டியிருக்கார்..”
“என்னநைசா என் அப்பாவை புகழ்ந்து பேசி என்னை சமாதானம் செய்ய பார்க்கிறியா..?”
“ஏய்…! ஓவரா பேசாதடி…. எனக்கு என் வரதன், ஷ்யாம் அப்பாவுக்கு அப்புறம் ரொம்ப மதிக்கிற ஒரு ஆள்னா அது கண்டிப்பா மாணிக்கம் மாமா தான்… அவர் உன் அப்பாவா இல்லாம என் மாமனாரா ஆகாம இருந்திருந்தாலும் எதுவுமே மாறியிருக்காது…”
“அது மட்டுமில்லாம… உன்னை சமாதானம்செய்யனும் நினைச்சா அதை விட முட்டாள்தனம் வேற இல்ல .எப்படி இந்தியா பாகிஸ்தான் சமாதானம் ஆகாதோ அதை மாதிரி நீ ஆகமாட்ட…”
“ஏன்டா… நம்ம வீட்டு பிரச்சனையும் நாட்டு பிரச்சனையும் ஒன்னா..?”
“அதை விடு ஆரு… என்ன வள்ளிம்மா கிட்ட பேசனும் போல இருக்கா..?”
“இல்ல இல்ல…” என்று மறுத்தவள்“தெரியல…” என்று குழப்பமாகச்சொல்ல
“யாருமே இருந்தா தெரியாது மார்கழி… இல்லாம போய்ட்டா தான் அருமைதெரியும்…” என்றான்.
“உனக்குஅம்மா இல்லன்னு ஃபீல் பண்றியா…?” அவன் அவளுக்காக நினைக்க, அவளோ அவனை நினைத்தாள்.