“ச்ச ச்ச… இல்ல அப்பாமாதிரி யாரும் என்னை பார்க்க முடியாது… அம்மா இல்லன்னு நினைச்சு ஃபீல் பண்ணினது இல்ல…. ஆனா இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சிருக்கேன்…”
“அட போடா…. இப்ப என்ன சொல்ல வர…. நான் என்ன செய்ய…?”
“என்னடி நான் சொல்றதெல்லாம் கேட்கற பொண்டாட்டி மாதிரி பேசுற… வள்ளுவர் பொண்டாட்டி வசந்தியா மாறிட்டியா என்ன..?” என்று அவன் கேட்க
“வள்ளுவர் வொய்ப் வசந்தி இல்ல… வாசுகி டா அய்யோ அய்யோ…. ஏன்டா…” என்றவளுக்கு அப்படி சிரிப்பு வர,வாய்விட்டு சிரிக்க,
“விடுடி… ஏதோ ‘வா’ல வரும்னு தெரியும்…” என்று அவன் கடுப்பாக சொல்ல,
“நான் ஏன் வாசுகி மாதிரி இருக்கனும். நான் எப்பவும் நெப்போலியன் பொண்டாட்டி தான்…” என்றதும் குஷியில் அவள் பக்கம் கை போட்டு அணைக்க முயல, அவளுக்கிருந்த குழப்பத்திற்கு அவனை எதுவும் சொல்லவில்லை.
“என்ன மார்கழி என்ன யோசனை…? அம்மாக்கிட்ட பேசனுமா… கோபம் போச்சா..?” என்று அவன் ஆதரவாய்க் கேட்க“கோபமெல்லாம் போகல…! என்னமோ போ..” என்றபடி அவனை அணைத்துக்கொள்ள,
“என்ன ஆரும்மா…? அவங்களையும் யோசி உன்னை விட்டுட்டு போனது தப்பு…. ஆனா அவங்க நினைச்சிருந்தா இன்னொரு கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருந்திருக்கலாம்… ஆனாலும்
உன் அப்பாவை நினைச்சிட்டே அவங்களும் தனியா தானே வாழ்ந்திருக்காங்க. என்ன அவங்க உன்னை மாதிரி ஒரு சிங்கப்பெண் இல்ல… அவங்க அப்பன் மண்டையை உடைச்சிட்டு வந்திருக்கலாம் பாவம் விடு… நான் எதுவுமேசொல்ல மாட்டேன் மார்கழி… நீ எனக்காகவோ அவங்களுக்காகவோ பேசாத. உனக்குப் பேசனும்னு தோணுதோ உனக்காக அப்போ நீ பேசு…” என்று அணைத்துக் கொள்ள,அவளுக்கு அவனது அணைப்பில் இதமிருக்க, அப்படியே அவன் மெய் தீண்டலில் அவள் மெய் மறக்க, விழிகள் மூடி அப்படியே உறங்கிவிட, நெப்போலியனும் களைப்பில்அணைத்தபடி உறங்கி போனான்.
மறுநாள் மாலையில் நெப்போலியனும் வரதனும் வீட்டில் இருக்க, ஆர்கலியை அவன் தான் காலையில் கேப் வருமிடம் இறக்கி விட்டான். மாலையிலும் அவனே அழைத்து வந்தான். அவள் சண்டையைத் தொடரவில்லை. இவனும் சமாதானத்தை தொடங்கவில்லை. இயல்பு போல் அப்படியே வாழத் துவங்கினர்.
கிச்சனில் இருந்த வரதன், “என்னடா நீ வீட்ல இருக்க… ஆருவை அழைக்க போகல…?” என்று கேட்க
“அவ காயத்ரிக்கு ஏதோ சொல்லிக் கொடுக்கனுமாம் அதனால அங்கேயே இறங்கிட்டா…”
“சரி சரி இரண்டு நாளா வேலையா அலைஞ்சியே… முடிஞ்சிடுச்சா..?” என்றார்.
அவருக்கு எப்பவும் தோண்டித் துருவி கேட்டிட தெரியாது. நெப்போலியன் தவறாக எதுவும் செய்ய மாட்டான் என்ற நம்பிக்கையில் அவன் போக்கில் விட்டுவிட்டார். அதே பழக்கம் தான் அவனுக்கும். அவர் எதுவும் கேள்வி கேட்காததால் பதில் சொல்லி பழகவில்லை.
“லோனுக்காகத் தான் அலைஞ்சேன்….கிடைச்சிடுச்சு…”
“ஏன்டா நம்மளே அத்தனை பேருக்குக் கடன் கொடுப்போம்… நீ ஏன் கடன் வாங்கின…?”
“நம்ம அத்தன பேருக்குக் கொடுத்த கடன் மொத்தமும் தான் நான் ஒரு ஆள் வாங்கின லோன்… அதை வாங்க நான் எவ்வளோ லோ லோன்னு அலைஞ்சேன் நீ வேற…” என்று அலுத்துக்கொண்டவன்,“அதை விடு நைனா நீ ஏன் கல்யாணம் பண்ணலன்னு நான் கண்டுபிடிச்சிட்டேன்..” என்று சீரியசாக சொல்ல,
“என்னடா கண்டுக்கிட்ட…?”
“இந்த பொண்டாட்டி இருக்கே சண்டை போட்டா சமாதானம் ஆகாதுங்க… சமாதானம் பண்ணலன்னா அதுக்கு ஒரு சண்டை போடுறாங்க…. சரியான இம்சை வரதா, நல்ல காலம் கடவுள் உன்னைக் காப்பாத்திட்டார். பாரு யாருக்கும் எந்த பதிலும் சொல்லாம சிங்கிளா கெத்தா வாழ்ற….” என்று சிரிக்க,
“ஆனா கடவுள் உன்னைக் காப்பாத்தலயேடா மவனே…” என்று அவர் சொல்ல அவன் பின் ஆர்கலி அவனை முறைத்தபடி நிற்க,நெப்போலியன் அசரவில்லை.
“அட என் மார்கழி..!” என்று கொஞ்சலாக அழைத்தான்.
ஆர்கலியோ “நான்உனக்கு இம்சையா. நீங்களே சொல்லுங்க மாமா அன்னிக்கு ஏர்ப்போர்டுக்கு என்னை அழைக்க வரல. நானா போன் பண்ணினப்போ கத்தினான்… என்ன பண்ணாலும் எங்கிட்ட சொல்றது இல்ல. கேள்வி கேட்டா தான் பதில் வருது..” என்று அவரிடம் முறையிட
“அவன் வேற ஏதோ தொழில் பண்ணனுமாம் ஆரு. அதான் லோனுக்காக அலைஞ்சிருக்கான். அன்னிக்கு ஏதோ முக்கியமான வேலையா இருந்திட்டான். அதான் வரல…” என்று வரதன் வக்காலத்து வாங்க
“நம்ம இரண்டு பேரும் வீட்ல எதுக்கு மாமா இருக்கோம். எதையும் நம்ம இரண்டு பேர் கிட்ட சொல்றது இல்ல. நானே ராஜா நானே மந்திரி கதை தான் மாதிரி தான் உங்க புள்ள பண்றது. ஒன்னும் சொல்லாம எரிஞ்சு விழறது கேள்வி கேட்டா அதுக்கும் சத்தம் போடுறது…”
“அவன் அப்படியே பழகிட்டான்மா. போக போக மாறிடுவான்…” என்று சமாதானம் செய்ய, நெப்போலியன் சமாதானம் எல்லாம் செய்யவில்லை.
ஆர்கலிக்கு அருகே போக, அவன் என்ன செய்யப்போகிறான் என புரிந்து வரதராஜன், “ம்மா அவனை கிட்ட விடாத சேட்டைக்கார பைய…” என்று சொல்ல, ஆர்கலி புரியாது பார்க்க
“யோவ் நீயெல்லாம் ஒரு தகப்பனா? என்னை மாட்டி விடுற போய்யா…” என்று திட்ட, வரதராஜன் சிரிப்போடு வெளியே சென்றுவிட,ஆர்கலியை நெருங்கியவன் அவளை அணைத்துக் கொள்ள,
“ஏய்…! என்ன பண்ற….?” என்றாள்.
“ம்ம் கட்டிக்கிறேன்…” என்று உற்சாகமாக சொல்ல“நான்உன் மேல கோபத்துல இருக்கேன்…”என்றாள்.
“பாக்கு கம்பெனியில எல்லாமே மெஷினரிஸ் தானே? உனக்கு என்ன வேலை..?” என்றாள் கேள்வியாக.
ஆம் ‘வீ க்ரீன்ஸ்’ ஆரம்பித்த போது ஆர்கலியிடம் சொல்லி இருந்தான் ‘வரதன் பெயர் வர மாதிரி இருக்கனும்’ என்று கேட்க அதற்கு பெயர் வைத்ததே அவள் தான். பெயர் வைத்ததோடு சரி. அதற்குமேல் ஆர்கலி அதில் தலையிடவே இல்லை. எப்போதாவது அங்கிருந்து அவளுக்கு, காயத்ரி, ஷாலினிக்குபாக்கு மட்டையினால் செய்யப்பட்ட பைகள் கொண்டு வந்து தருவான்.
அவளைப் பொருத்தவரையில் அவன் பயனுள்ளதாக ஏதோவொன்று செய்கிறான். நஷ்டமில்லா தொழில் என்ற வரை அறிவாள். அவளுக்கும் தொழில் பற்றி எதுவும் தெரியாததால் எதாவது கேட்டு அவன் அதை தவறாக எடுத்துவிட்டால்..?
ஒருவர் ஒரு நிலையில் மேலும் இன்னொருவர் கீழும் இருக்க,ஏதோ ஒரு புள்ளி அது நட்போ திருமணமோ இணைத்து ஒரே நிலையாக்கிட அதில் யாரெனும் ஒருவரின் மன நிலை ‘நான் மேலே.. நீ கீழே..’ என்றோ… ‘நான் கீழோ… நீ மேலோ’ என்று சம நிலை தவறினால் அதில் உறவு நிலையும், அதில் நிலவிய உன்னதமும் ஒன்றுமில்லாமல் போய்விடும்.
துணை தேடும் இணையை குறைவாகவோ, தன்னை உயர்வாகவோ நினைத்தால் உறவென்பதில் உரசல் வந்து விரிசலாகி விட்டு கூட போய்விடும். ஏற்கனவே ஒரு முறை படிப்பு விஷயத்தில் இருவருக்குள்ளும் மனஸ்தாபம் வந்திருக்க, ஆர்கலி மிகவும் கவனமாக இருந்தாள். அதனால் அவன் மனம் வருந்தும்படி எதுவும் பேசவோ செய்யவோ மாட்டாள் ஆர்கலி. இப்போதையை கோபம் கூட அவன் மீதான மீகிய காதலால் மட்டுமே.
“இல்ல… புதுசா ஆட்டோமொபைல்ஸ் பார்ட்ஸ், மோட்டார்ஸ் எல்லாம் டீலர்ஷிப், ப்ரோடக்ஷன் அது மாதிரி செய்யப் போறேன்… அதான் நிறைய வேலை….” என்றிட
“என்ன வேலை…?”
“ஷோரூம்க்கு இடம் வாங்கியிருக்கேன்… லோனுக்காக அலைஞ்சேன் அதான் உன்னை அழைக்க வர முடியல…” என்றவனின் அணைப்பில் தான் இன்னும் ஆர்கலி இருந்தாள்.
“சொல்லி இருந்தா நான் அவ்வளவு கஷ்டப்பட்டிருக்க மாட்டேன். வேலையிருக்கு வரலன்னு மனசை தேத்தி இருப்பேன்…”
“இல்ல முடிஞ்சிடும். வரலாம்னு இருந்தேன் எப்படியும் நீதிட்டுவ தெரியும்… வீட்ல வாங்கிக்கலாம்னு தான் போனையும் எடுக்கல வெளியே வேற இருந்தேன்ல… அந்தடென்ஷன்…”
“சரி ஏன் நீ புதுசு புதுசா ஆரம்பிக்கிற… இருக்கிறது போதுமே…?”
“இப்ப அப்படி தான் தோணும் போதும்னு… பின்னாடி நமக்குத் தேவை படும்போது எதுவும் பத்தாது..”
ஆர்கலியும் இரண்டு நாளாக பார்க்கிறாள். அவன் நிறைய உழைப்பது அவளுக்குப் புரிய, அவன் மீதான் அக்கறையில்,
“இல்ல இவ்வளவு பணம் போட்டு கஷ்டப்பட்டு நமக்குப் பணம் தேவைதான்… பணக்காரங்களா ஆகனும்னு தேவை இருக்கா என்ன..?”
“இந்த மாதிரி கேள்வி வரும்னு தான் நான் யார்கிட்டையும் எதுவும் சொல்லல….. என்னால முடியும்… நான் பண்றேன்.. கஷ்டப்பட்டாலும் நான் நஷ்டப்பட மாட்டேன்…” என்றான் கோபமாக.
அவன் முகமும் சுருங்கிவிட, அணைப்பிலும் ஒரு விலகல் இருக்க, விடவில்லை ஆர்கலி. அவனை தன்னால் முடிந்த மட்டும் அழுத்தமாக அணைத்திருந்தாள்.