அடுத்த நாள் மாணிக்கம் வழக்கம்போல் வேலைக்குப் போய்விட்டார்.
அவர் அமைதியாக உட்கார்ந்து வேலையைப் பார்க்க, ஒரு காரை ரீப்பேருக்கு வீட்டுவிட்டு அப்போதுதான் உள்ளே நுழைந்தான் நெப்போலியன்.
மாணிக்கத்தைப் பார்க்கவும் நேற்றை நிகழ்வு ஞாபகம் வர, மகளைக் கண்டு மனிதர் பம்மியது இவனுக்குப் படமாக ஓட, அவரோ இவன் வந்ததும் ஒரு முறை பார்த்தவர் வேலையில் கவனமாகிட,
“என்ன மாணிக்கம்…? என் மேல கோவமா?” என்றான்.
“இல்ல தம்பி” என்றார் கோபம் இருந்தாலும் கூட.
“இல்லையே, என்னை மனசுக்குள்ள திட்டுற மாதிரி தெரியுதே…” விடாமல் அவரை வம்பிழுக்க,
இவன் ரவுசு தாங்காதவர்,
“ஏன் தம்பி இப்படி பண்றீங்க?”என்றார் ஆயாசத்தோடு.
“அட! என்ன மாணிக்கம் நீங்க? நேத்து நான் வீட்டுக்கு விடல இல்ல., அதான் கோச்சுக்கிட்டீங்களான்னு கேட்டேன்”
“நான் ஏன் தம்பி கோச்சுக்கப்போறேன்? வேலை நேரத்துல போகனும்னு கேட்டது என் தப்பு தானே?” என்று அவர் ஒரு மாதிரி வருந்தி சொல்ல
நெப்போலியனுக்கும் அவரைக் கண்டு பாவமாகிட
“என்ன மாணிக்கம்? நான் அப்படியெல்லாம் நினைக்கல, சும்மா தான் உங்களை கிண்டல் பண்ணினேன்” என்று விளக்கினான்.
“பரவாயில்ல தம்பி” என்றவரின் குரல் உள்ளே போய்விட
“டேய் மாஸ்கோ! மாணிக்கத்துக்கு ஒரு டீ சொல்லு” என்றவன்
பின்னே நேற்றே அவன் இருக்கும்போதே அவள் கண்களில் அவ்வளவு சீற்றமும் சினமும் சிறப்பாய்த் தெரிந்ததே.
“அவ சரியாவே பேசல தம்பி, அதான் கவலையே” என்று கவலையாக சொல்ல
அதற்குள் மாஸ்கோ டீ கொண்டு வர,
“இதைக் குடிங்க முதல்ல” என்று டீயை நீட்டியவன் “உங்க பொண்ணுகிட்ட வேலைக்கு வரத ஏன் நீங்க சொல்லல?” என்று கேட்டான்.
“சொன்னா கோச்சுக்குவா தம்பி”
“உங்க பொண்ணு தான் சம்பாரிக்குதே..அப்புறம் நீங்க ஏன் கஷ்டப்படுறீங்க?”
“அவ வாரத்துல ஏழு நாளும் வேலைக்குப் போறாளே தம்பி” என்றதும் நெப்போலியனுக்கு அதிர்ச்சி.
“அப்போ அக்கா தினமும் வேலைக்குப் போவாங்களா.?” என்று மாஸ்கோவும் சந்தேகமாக கேட்க
“ஆமா மாஸ்கோ…” என்றார்.
“எவன் அவன் ஏழு நாளும் ஆபிஸை தொறந்து வைச்சிருக்கான்..?” என்று நெப்போலியன் ஆச்சரியமாகக் கேட்க, அதற்குள் கலெக்ஷனுக்குப் போய் விட்டு வரதராஜன் வந்துவிட, இவர்கள் மூவரையும் பார்த்தவர்,
“என்னடா உட்கார்ந்து கதைப் பேசிட்டு இருக்க?” என்று நெப்போலியனைக் கேட்க
அதற்குள் மாஸ்கோ,
“நேத்து இந்த சார் பொண்ணு வந்து திட்டிட்டுப் போச்சுல, அதைப் பத்தி அண்ணே விசாரிச்சுட்டு இருக்காரு” என்று சொல்லிவிட, வரதராஜன் நெப்போலியனை நன்றாக முறைத்தார்.
“தம்பி சும்மா தான் கேட்டார்” என்று மாணிக்கம் சொல்ல
“மாணிக்கம்! இவ்வளவு பாசமா உங்க பொண்ணு இருக்கு. உங்களை நல்லா வைச்சிக்கனும்னு அந்த பிள்ளை ஆசைப்படுது, நீங்க பேசாம வீட்ல இருக்கலாம் தானே?” என்று வரதராஜன் கேட்க
“அவளுக்கு என்னை நல்லா வைச்சிருக்கனும்னு ஆசை இருக்க மாதிரி என் பொண்ணை நல்லா வைச்சிருக்கனும்னு எனக்கு ஆசை இருக்காதா?” என்றார் வேதனையாக.
“அது என்ன ஆர்கழி, மார்கழின்னு” என்று நெப்போலியன் முகத்தை சுருக்கிக் கிண்டலாக கேட்க, வரதராஜன் முறைத்தார்.
“எங்க மாமா தமிழ் படிச்சவர். அவர் தான் எனக்கு என் தம்பிங்களுக்கு எல்லாம் பெயர் வைச்சார். என் மகளுக்கு அவர் தான் பெயர் வைச்சாரு, ஆர்கழினா கடல்னு அர்த்தம்…தம்பி” என்றார்.
“மாணிக்கம் தயவு செஞ்சு என்னை தம்பினு சொல்லாதீங்க. உங்க வயசு கம்மியா தெரியுதோ இல்லையோ, என் வயசு அதிகமா தெரியும். பெயர் சொல்லியே கூப்பிடுங்க” என்று நெப்போலியன் சொல்ல
“இந்த பயல நம்பி அப்படி கூப்பிட்டிறாதீங்க மாணிக்கம். அப்புறம் இவன் உங்களை வாடா போடானு கூப்பிடுவான். குசும்புக்காரன்!” என்று நெப்போலியனை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே சொல்ல
“ஏன் தம்பி அப்பாவை பெயர் சொல்லிக் கூப்பிடுறீங்க…?” என்று மாணிக்கம் எதார்த்தமாக கேட்டுவிட, இருவருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சின்னவயதில் இருந்து அதே பழகி விட்டது.
“இவர் சின்ன வயசுல இருந்தே என்னை அப்படி பழகிட்டாரு மாணிக்கம், அதனால எனக்கு எல்லாரையுமே பெயர் சொல்லியே பழகிடுச்சு. என்னோட வளர்ப்பு சரியில்லன்னா முழு காரணம் இதோ இந்த ஆள் தான்!” என்று வரதராஜனை நக்கலாய்ப் பார்த்து நெப்போலியன் சொல்ல, மாணிக்கவாசகத்துக்கு சிரிப்பு வந்தது அவனின் பாவனையில்.
“மாணிக்கம் அப்புறம் சிரிக்கலாம். பெயர் சொல்லி தான் இனி என்னைக் கூப்பிடனும்” என்று கண்டிப்பாக சொல்ல
“சரிங்க மாவீரன்..” என்று அவர் சொல்ல
“யாரு இவனா…?” என்று வரதராஜன் பயங்கரமாக சிரிக்க,
“இல்லையா? எல்லா இடத்துலேயும் மாவீரன் நெப்போலியன்ல எழுதி இருக்கு…நான் பெயரே அதுன்னு நினைச்சிட்டேன்.” என்று மாணிக்கம் அப்பாவியாக சொல்ல
“சரி! சரி அடங்குங்க….எல்லாம்…” என்று கடுப்பானான் நெப்போலியன்.
“சார்! உங்களுக்கு அண்ணன் பெயர் பின்னாடி இருக்க வரலாறு தெரியுமா?” என்று மாஸ்கோ கேட்க
“வரதனுக்கு ப்ரஞ்ச் மாவீரன் நெப்போலியனா ரொம்ப பிடிக்கும்! அதனால எனக்கு அந்த பெயரை வைச்சிட்டார். என்ன வரதா? அதானே?” என்று கேட்க
‘அடப்பாவி’ என்பதாகப் பார்த்தவர் ஆமாம் என்று சொல்லாவிட்டால் கோபித்துக் கொள்வான் என்பதால் பூத்து வந்த பெருஞ்சிரிப்பை அரும்பாடுபட்டு அதரத்துக்குள் அடக்கியவராக, ஆமாம் என்றிட மாணிக்கவாசகமும் அப்பாவியாக நம்பினார்.
******
ஆறு மாதங்கள் அமைதியாக ஓடி விட, அன்று திருவண்ணாமலை வரை ஒரு வேலை விசயமாக வரதராஜன் போனவர் நெப்போலியனை போனில் அழைத்தார். மாணிக்கவாசகத்தின் வீட்டில் அவர் தம்பிக்கு திதி என்றும், அவரால் வர முடியாது என்பதால் நெப்போலியனை போக சொன்னார், அவன் மறுக்க திட்டினார்.
அவன் இதுவரை வரதராஜன் இல்லாமல் எங்கேயும் போனதில்லை. அப்படியே போனாலும் நண்பர்களுடன் தான். மாணிக்கத்தின் வீட்டில் அவரைத் தவிர அவர் பிள்ளைகள் எல்லாம் இருக்கும் என்ற எண்ணமே அவனை இயல்பாக இருக்கவிடவில்லை. மாணிக்கத்திடம் நன்றாகப் பேசுவான். அவரையும் பேச வைத்து விடுவான். ஆனால் வீட்டினரோடு பழக்கமில்லை.
வரதராஜன் சொன்னதிற்காகவும் மாணிக்கம் அழைத்ததற்காகவும் போக வேண்டும் என்று நினைத்தவன் மாஸ்கோவைக் கடையில் நிறுத்தி விட்டு, மாணிக்கத்தின் வீட்டிற்கு நடந்து போனான்.
அவர் வீட்டை நெருங்கவும் பார்த்தால் பக்கத்து வீட்டில் கார் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டவன் உற்சாகமாக கதவைத் திறந்து பக்கத்து வீட்டிற்குள் போனான். அங்கே ஷ்யாம் நின்றான், ஷ்யாம் ஒரு மருத்துவன்.பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் வேலைப் பார்க்கிறான்.நெப்போலியனின் சினேகிதன். ஷ்யாமும் நெப்போலியனும் வாசலில் நின்று, சுவரில் சாய்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
“பக்கத்து வீட்ல பொண்ணு இருக்காமே, எப்படி டா அழகா இருக்குமா…?”
“அது மூஞ்சியெல்லாம் எவன் பார்த்தான்? அதுல அழகா இருக்கான்னு கேள்வி வேற…!போடா…” என்று இவன் எரிச்சலாக சொல்ல
“ஆஞ்சிநேயர் அசிஸ்டெண்ட் உன்னைப் போய் கேட்டேன் பாரு..என்னை சொல்லனும்…” என்று தலையில் அடித்துக் கொண்டான்.
மாணிக்கம் வெளியே பேச்சுக்குரல் கேட்டு வந்தவர்,
“என்னப்பா, அங்கேயே நின்னுட்ட வா உள்ளே” என்றார். ‘ஆர்கழி’ என்று மகளை குரல் கொடுக்க,
ஷ்யாம், “ஏய்…அந்த ஆர்கழி எப்படி இருப்பா…” என்று ஆர்வமாக கேட்க
“டேய்! ஷ்யாம்!!! போதும் நிறுத்துடா, அந்த வீட்டுப் பொண்ணுங்களை நீ ஆண்டாளை எப்படி பார்ப்பியோ அப்படி தான் பார்க்கனும். புரிஞ்சதா?! சும்மா இப்படி பேசாத! வேற ஊர்ல இருந்த வந்தவங்க, நம்மளால அவங்களுக்கு எந்த கெட்ட பெயரும் வரக்கூடாது.!” என்றான் கண்டிப்பாக.
“அட பாதகா! ஜஸ்ட் சைட் அடிக்க தானே டா கேட்டேன், அதுக்கேன் டா…என்ன என்னவோ பேசுற” என்றான் கடுப்பாக. நெப்போலியன் முறைத்து பார்க்க, மீண்டும் மாணிக்கம் அழைக்க, உள்ளே போனான். ஒரு வழியாக சாப்பிட்டு முடித்து அவன் வெளியே போகும் போது,
“உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்” என்றபடி அவனை நிறுத்தினாள் ஆர்கழி.
“என்ன?” என்று நெப்போலியன் பார்க்க
“எங்கப்பா உங்களை விட பெரியவர். அவரை பெயர் சொல்லிக் கூப்பிடுறது எனக்கு சுத்தமா பிடிக்கல” என்று அவள் கோபமாக சொல்ல
“அதுக்கு என்னாங்கிற?” என்றான் தெனாவெட்டாய்.
அதில் ஆர்கழிக்கு இன்னமும் இறுக்கம் ஏறிப்போக, ஆத்திரம் அணைக் கடந்தது.
“ஏய்! நான் சொல்லிட்டே இருக்கேன், நீ திமிரா பேசுற?” என்றாள் ஆர்கழி. அவனிடம் பொறுமையாக சொல்ல வேண்டும் என்றது ஆரம்பித்தாள், தொடர அவன் விடவில்லை.
“மாணிக்கத்துக்குப் பிடிக்கலன்னு அவரை சொல்ல சொல்லு. நான் கேட்டுக்கிறேன்..” என்றான்.
“அப்பா எதுவும் சொல்ல மாட்டார். என் அப்பாவை அப்படி பெயர் சொல்றது எனக்குப் பிடிக்கல, அதனால் அப்படி கூப்பிடாத..”
“உனக்குப் பிடிச்சது பிடிக்காதது எல்லாம் எப்போ நான் செய்ய ஆரம்பிச்சேன்? ஆர்டர் போடுறதெல்லாம் எங்கிட்ட வேண்டாம்…” என்று அவன் மிரட்டலாக சொல்ல
“ச்ச.! உன்னையெல்லாம். போடா!” என்று எரிச்சல் மீகி ஆர்கழி சொல்ல
“ஏய்…போடி!” என்று நெப்போலியன் சொல்லும்போதே மாணிக்கம் வந்துவிட்டார்.
“அப்புறம் மாணிக்கம் நான் கிளம்புறேன்” என்று அவர் தோளில் கைப்போட்டு சொன்னாலும் விழியெல்லாம் ஆர்கழி மீதிருக்க, அவளோ கடுங்கோபத்தோடு அவனை முறைத்தாள்.