ஆர்கலியின் அணைப்பில் இருந்தாலும் நெப்போலியன் ஒரு வார்த்தை பேசிடவில்லை. ஆர்கலியின் இருகரங்களும் அவனை இறுக்கிப் பிணைந்திருக்க, அவனது நெஞ்சில் சாய்ந்தவள், முகம் பார்த்தபடி, “உன்னால முடியாதுன்னு நான் சொன்னேனா…?” என்க
அப்போதும் அவனிடம் பேச்சு இல்லை. அவன் மிகவும் கோபமாக இருக்கிறான் என ஆர்கலிக்குப் புரிய,
“நீ மனசுல நினைக்கிறதெல்லாம் எனக்கு மந்திரத்தால தெரியுமா என்ன…? உன்னை என்னமோ டிஸ்டர்ப் பண்ணுது… என்ன சொல்லு…” என்று கேட்க,பதிலே பேசவில்லை அவன்.
அதை அமைதியென்பதா..? அழுத்தமென்பதா…? என்று தெரியாமல் ஆர்கலி பார்த்தவள், “நீ என்னோட உன்னை கம்பெர் பண்ணி குறைவா நினைக்கிறியா..?” என்று பளிச்சென கேட்டுவிட
“ஏய்..! என்ன பேசுற நீ..?” என்றான் கோபமாக.
“பின்ன நீபண்றதெல்லாம் அப்படி தானே இருக்கு… என்ன செஞ்சாலும் என்ட்ட சொல்ல மாட்டேங்கிற… கேள்வி கேட்டா உனக்குப் பிடிக்கல…”
“நீசெய்ற பிஸினஸ் பத்தி எனக்குத் தெரியலன்னா பரவாயில்ல…நீ என்ன செய்றன்னு கூட எனக்குத் தெரியல அப்போ என்னால நீ இன்ஃபீரியரா ஃபீல் பண்ற. அப்படி தானே அர்த்தம்..” என்றவளுக்குக் கண்கள் கலங்கிவிட,
“ச்ச என்னடி நீ…. நீ என்னை விட நிறைய உயரம் போகனும்னு தான் என்னோட ஆசை…. இப்படி பேசாத…” என்றவனும் இறுக்கம் தளர்ந்து அவளை அணைத்துக் கொண்டான்.
“அது எல்லாம் சரியா வந்த பின்னாடி சொல்லனும்னு வெயிட் பண்ணினேன் அவ்வளவுதான்…. ரொம்ப அலைச்சல் நான் இது மாதிரி வேலையெல்லாம் செஞ்சதில்லை இல்லையா..? எல்லாம் சரியா நடக்கனும்னு டென்ஷன்…. ஒவ்வொன்னும் நானே பார்த்து செஞ்சா தான் எனக்குத் திருப்தி….” என்றவனுக்கு ஆர்கலி பதிலேதும் சொல்லாமல் இருக்க,
“என்னடி எதுவும் பேசாம இருக்க…?” என்று அவள் முகம் நிமிர்த்திக் கேட்க“நீபேசு நான் கேட்கிறேன்…” என்றாள்.
அவள் குரலில் வேற்றுமை வெளிப்பட“ஏன் டி… இப்படி பண்ற….?” என்றதும்
“அப்படி தான் பண்ணுவேன் இவ்வளவு நேரம் கேள்வி கேட்டப்ப பதில் பேசுனியா நீ…? உன் மேல உள்ள அக்கறையில தான் நான் சொல்றேன்னு கூட உன்னால புரிஞ்சிக்க முடியல…” என்றாள் கோபமாக.
“அப்படி இல்ல ஆரு…”
“வேற எப்படி..? நீ சரியா சாப்பிட்டு தூங்கி நான் இந்த மூணு நாளா பார்க்கவே இல்ல. மாமாவும் சொன்னார் நாலு மாசமாநீ அப்படி தான் இருக்கேன்னு அதைக் கேட்டா நீ என்னை பேசுற..”
“ஏய் தூங்குறதில்ல வேணும்னா சொல்லு… நான் நல்லா தான் டி சாப்பிடுறேன்… எனக்குப் பேசத் தெரில தெரியாம பேசிட்டேன் விடு…”
“இப்படி சொல்லி எஸ்கேப் ஆகப் பார்க்கிறியா..?”
“வேற எப்படி சொன்னா எஸ்கேப் ஆகலாம் சொல்லேன் நீயே..” என்றான் அவளை இன்னும் அணைத்தபடி.
“பேச்சை மாத்தாதடா… நீ என்னமோ மனசுல நினைக்கிற ஆனா எங்கிட்ட சொல்ல மாட்டேங்கிற… எனக்குக் கஷ்டமா இருக்கு எனக்காக நீ இப்படியெல்லாம் கஷ்டப்படுறியோன்னு தோணுது… எனக்காகன்னா கண்டிப்பா வேண்டாம் நீ முன்னாடி ரொம்ப ஜாலியா இருப்ப நல்லா பேசுவ இப்போ அப்படி இல்ல..”
“எப்பவுமே அப்படி இருக்க முடியாது ஆரு… அப்போ நானும் வரதனும் மட்டும் தான். ஏனோ தானோன்னு வாழ்ந்துட்டோம்…. ஆனா இப்ப அப்படி இல்ல. என்னை நம்பி நீ இருக்க காயத்ரி, ஷாலினி, ரஞ்சித் எல்லாம் இருக்காங்க. அப்போ நான் கஷ்டப்பட்டு தான் ஆகனும். அதுக்கு ஏன் ஃபீல் பண்ற..?”
“நீ வேலை செய்றதை நான் சொல்லல. அது செஞ்சு தான் ஆகனும். ஆனா என்ன செய்ற சொல்ல மாட்டேங்கிற எங்க போற வர ஒன்னும் தெரியல…. கேட்டாலும் எரிஞ்சு விழற…”
“எனக்கு இங்க போறேன் வரேன்னு சின்ன பசங்க மாதிரி சொல்லி பழக்கமில்ல டி… புரிஞ்சிக்கோ…”
“அப்ப என்னதான் உன் பழக்கம்….? கொஞ்சம் கூட நீ மாறமாட்டேன்னா நான் என்ன செய்றது..?” என்று அவள் மூக்கு விடைக்கக் கேள்வி கேட்க, அவளது அந்த கோபம் முகம் கூட அவனை கொஞ்சிட அழைக்க,அவளுக்கும் அவனுக்குமான இடைவெளியை இடையில் கையிட்டு குறைத்தவன்,முகத்தை ரசனையுடன் ரசித்தவாறே,
“எனக்கு எதுவுமே பழக்கமில்ல. உன்னைத் தவிர. எதையும் புதுசா பழகல…” என்று சொல்லியவன்,
“இனிமே எங்க போனாலும் சொல்லிட்டுப் போறேன். என்ன செஞ்சாலும் சொல்லிட்டு செய்றேன்…” என்று சொல்ல ஆர்கலிக்கு அவனது சமாதானங்களினால் மனம் சமனாகவே இல்லை.
“இன்னும் என்னடி மூஞ்சை இப்படியே வைச்சிருக்க..?” என்று முகத்தைப் பிடித்து ஆட்ட, “பார்க்கலாம் பார்க்கலாம்… இப்படியே தான் சொல்ற எத்தனை நாளைக்கு வாக்குறுதியைக் காப்பாத்துறன்னு நானும் பார்க்கிறேன்…” என்று அவள் சலித்தபடி சொல்ல
“அதைவிடு.. நாலு மாசம் ஆச்சு என்னைப் பார்த்து ஒரு முத்தம் கொடு..” என்று கேட்டு அவள் முகம் பார்க்க
“ஏன் அதை கூட நீ கொடுக்க மாட்டியா…?” என்று அவள் சண்டை இழுத்தாள்.
“ஆசையா கேட்டா ஓவரா பண்ற…” என்று அவள் முகத்தில் அவன் விரல்கள் வருட,“உனக்கு தானே வேணும்… நீயே கொடு நான் கொடுக்க மாட்டேன்…. அன்னிக்கு ஏர்ப்போர்ட்க்கு வந்திருந்தா அங்கேயே நிறைய கொடுக்க ஆசையா தான் வந்தேன். இப்போ நீ கேட்டா உடனே நான் உன் ஆசையை நிறைவேத்தனுமா… முடியாது போடா..” என்று அவள் சொல்லிவிட,
“நானா ஆரம்பிச்சா நிறுத்த மாட்டேன்..”
“நான் ஆரம்பிக்கவே மாட்டேன்… உன்னால என்ன முடியுமோ செஞ்சிக்கோ…” என்று அவள் முகம் திருப்பி பதில் பேச“ஏன் டி இப்படி பண்ற…?” என்றான் ஆயசமாக.
“என்ன பண்ணினேன் நான்..?” என்று அவள் கேட்டு அவனை நிமிர்ந்து பார்க்க“இப்படிஅமைதியா நின்னா என்ன அர்த்தம்..?
“இப்படியே தான் இருப்பேன்னு அர்த்தம்…”
“எப்பவும் நான் தானே டி கொடுக்கிறேன்…. நீ எனக்குக் கொடுத்த மாதிரி எனக்கு ஞாபகமே இல்ல…”
“பொய் சொல்லாதடா ஃப்ராடு… நான் தான் நிறைய கொடுத்திருப்பேன்…”
“இல்ல டி ராங்கி… நான் தான் கொடுத்திருப்பேன்….” என்று இருவரும் சண்டையிட அவர்கள் பேச்சினில் இருவருக்குமே வெட்கம் வந்திட,சில நொடிகள் அமைதியாக இருந்தவர்கள் பின் வாய் விட்டு சிரித்திட
“என்னடி சிரிப்பு உனக்கு?” என்று சிரித்தபடி அவன் கேட்டிட
“நீ எதுக்கு சிரிச்சியோ அதுக்கு தான் நானும் சிரிச்சேன்…” என்று அவள் சிரித்தபடி கீழேதூணில் சாய்ந்து உட்கார,அவளருகே உட்கார்ந்தவனும்,
“முன்னாடி எல்லாம் இந்த வீட்ல ஒரு பொண்ணோட இருக்க முடியும்னு நான் நினைச்சதே இல்ல… ஒரு பொண்ணு வரும்னு கூட நினைச்சதில்ல. ஆனா இப்போ என் பொண்டாட்டி இல்லாம என்னால இருக்கவே முடியலடி… நாலு மாசம் வரதன் கூட தூங்கினாலும் உன் ஞாபகம் தான்…” என்று சொல்லி அவள் கையை வருட,
“முன்னாடியாச்சும் நான் பேசாம போயிட்டேன். ஆனா இந்த தடவ போக மனசே இல்ல… போன அப்புறமும் உன் ஞாபகம் தான் ரொம்ப மிஸ் பண்ணினேன் உன்னை..” என்று ஆர்கலியும் அகம் திறக்க
“மிஸ் பண்ணின… நீ.. அப்படியே ஒரு கிஸ் பண்ணினா என்ன..?” என்று அவன் விளையாட்டாக கேட்டான்.
“நானும் ஆரம்பிச்சா நிறுத்த மாட்டேனே.. பரவாயில்லையா உனக்கு..?” என்று அவள்நக்கலாக கேட்க
“அட என் மார்கழி…! ” என்றபடி அவன் அவள் கன்னத்தில் காதலாக முத்தமிட, அவளும் அதனை வாங்கிக் கொண்டாள்.
“இன்னிலேர்ந்து கணக்கு வைச்சிப்போமா..?” என்று அவன் காதோரமாக ஆர்கலி கேட்க“முடிஞ்சா வைச்சிக்கோ…” என்றவனின் முத்தங்கள் முற்றுப்பெறாமல் தொடர்ந்தன.
ஆர்கலி இரவில் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தாள். இப்போது அவளுக்கு ஏழு மாதம். வரதனும் நெப்போலியனும் அவளை அப்படி தாங்கினர். அவள் புரண்டு கொண்டு புரள, அதில் நெப்போலியனின் தூக்கம் கலைய,
“என்ன ஆரு தூங்கல…. என்ன செய்யுது…” என்று கேட்டபடி எழ
“கால் வலிக்குது நான் அப்பவே வாக்கிங் வர மாட்டேன் சொன்னேன்… கேட்டியா… என்னை நடக்க விட்டு இப்போ பார்….” என்று அவள் கோபமாகக் கேட்க,
“ஏன் டி ஷாலு பாப்பா… வாக்கிங் போகலயான்னு கேட்கிறா, ஷ்யாம் பொண்டாட்டியை வாக்கிங் கூட்டிப் போகறதங்காட்டியும் என்ன வெட்டி முறிக்கிறன்னு திட்டுறான். இப்போ என்ன கால் வலிக்குது அவ்வளவுதானே?” என்றவன் கால்களை பிடித்து அழுத்திவிட
ஆர்கலிக்கு வீட்டில் பெரிதாக வேலை கிடையாது. வீட்டு வேலை மட்டுமே. சமையல் முழுக்க வரதராஜன் தான். (staminaproducts.com) நெப்போலியனும் அவனது தொழில்களில் முனைப்போடு செயல்பட, காலை செல்பவன் இரவில் தான் வருவான். வரதராஜன் கடைக்கு எப்போதாவது செல்ல, மாணிக்கம் மட்டுமே கடைக்கு முழு பொறுப்பு.
மாஸ்கோ ‘வீ க்ரீன்ஸை’ பார்க்க, ஆர்கலிக்கு காலையில் எழுந்து அலுவலகத்திற்குப் போய் வருவதே அவ்வளவு களைப்பாக இருக்க,நெப்போலியன் கூட, “வேலைக்கு லீவ் போட்டுக்கோ…” என்று சொல்லி பார்த்தான்.
ஆர்கலிக்கு தான் மனதில்லை. வீட்டில் இருந்தால் நாள் முழுவதும் சும்மாதானே இருக்க வேண்டும். காயத்ரி, ஷாலினி, ரஞ்சித் என யாருமே வீட்டில் இருக்க மாட்டார்கள் என்பதால் வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தாள்.
நெப்போலியன் கால்களைப் பிடித்துவிட, “வலிக்குதுன்னு உன்னை பிடிக்க சொன்னா… நீ பிடிக்குறது தான்டா ரொம்ப வலிக்குது..” என்றுவலியில் கத்தியவள்,
“அன்னிக்கு நல்லா தானே பிடிச்சு விட்ட. நீ பிடிக்குறது தான் ரொம்ப வலிக்குது எனக்கு. பேசாம வந்து படு கொஞ்ச நேரத்தில நான் தூங்கிடுவேன். மணி பத்தரை ஆச்சு நீ காலையில சீக்கிரம் போகனும்ல…” என்றவள் அவனிடம் இருந்து கால்களை இழுத்துக் கொண்டு கண்மூடி படுத்துவிட, கொஞ்ச நேரத்தில் அவள் உறங்கியும் விட்டாள்.
நள்ளிரவு நேரம் இருக்கும். கால்களை யாரோ பிடித்து வைத்திருப்பது போல் தோன்ற,விழித்து பார்க்க, அவள் முன் வள்ளி இருந்தார். மகளது கால்களை அவர் கரம் பற்றியிருக்க, கட்டிலின் ஒரத்தில் உட்கார்ந்து அதில் சாய்ந்தபடி தூங்கி இருந்தார். கண்டிப்பாக இது கணவனின் வேலையாகத்தான் இருக்கும் என்று ஆர்கலிக்குப் புரிந்தது.
அவள் குழந்தை உண்டானதுமே சொல்லிவிட்டான்.
“இங்க பார் இங்கேயும் எனக்கு அம்மா இல்ல… அதனால வள்ளிம்மா என்ன செஞ்சாலும் சண்டை போட கூடாது… இது நம்ம குழந்தை சம்மந்தப்பட்ட விஷயமும் கூட…..” என்று சொல்ல“அவங்க ஒன்னும் எனக்கோ என் குழந்தைக்கோ செய்ய வேண்டாம்..” அவள் எப்போதும் போல் மறுக்க,
“நீதானே சொன்ன அம்மாவா எனக்கு ஒன்னும் செய்யலன்னு… இப்போ அவங்க என்ன செஞ்சாலும் தடுக்காத. அவ்வளவுதான் ஆரு…” என்று பிடிவாதமாக சொல்லி இருக்க, மீற முடியவில்லை.