வெளியில் செல்ல கூட பிடிக்காமல் நான்கு நாட்களாக அறைக்குள்ளயே முடங்கி விட்டிருந்தாள் பைரவி… அன்னையின் பாரா முகம் மனதை உறுத்தியது… சில நாட்களாக விடுப்பில் இருந்த விஜயேந்திரன் அவசர வேலையாக அலுவலகம் கிளம்பிட விட துளசி காலை சமையலில் ஈடுபட்டிருந்தார்.
அர்ஜூனுக்கும் அடுத்த நாள் பரிட்சை என்பதால் அன்றைய தினம் பள்ளி விடுப்பு அளித்திருக்க வீட்டில் தான் இருந்தான்.
“அஜூமா” சமையல் அறையில் இருந்து அர்ஜூனை அழைத்தார் துளசி.
“இதோ வரேன் மா” அருகில் சென்றவனிடம் “அஜூ சாப்பாடு எல்லாம் ரெடியா இருக்கு… இப்போ ரெண்டு பேரும் சாப்பிடுங்க… மதியம் சாம்பாரை மட்டும் சூடு பண்ணி சாப்பிடுங்க… அப்புறம் அக்கா சாப்பிடாம இருக்க போறா ஒழுங்கா சாப்பிட வை… நீயும் சாப்பிட்டு ஒழுங்கா படி என்ன” என்றவர் தன் மதிய உணவு பையை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினார்.
“அஜூ உன் வேலையை மட்டும் பாரு அம்மாவுக்கு தெரியும் எப்போ பேசனும்னு போய் படி போ” அவனை அதட்டி அனுப்பியவர் தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டார்.
அவர் சென்றதும் பைரவியின் அறைக்கு வந்தவன் அக்கா வா சாப்பிடலாம்…” அவளை அழைத்தான்.
“எனக்கு வேண்டாம் அஜூ நீ போய் சாப்பிடு…” என்றவாறு கட்டிலில் கண்களை மூடி படுத்துக்கொள்ள பைரவியின் போன் சிணுங்கியது.
எடுத்து பார்க்க சர்வேஷ் தான் அழைத்திருந்தான். திரையில் அவன் பெயருடன் வரும் புகைப்படத்தை பார்க்கவும் கண்கள் நீரில் திரையிட, அப்படியே சைலண்டில் போட்டு விட்டு, தலையணையில் முகம் புதைத்துக் கண்ணீரால் நனைத்தாள். இரண்டு மூன்று தொடர் அழைப்புக்கு பின் அதுவும் அமைதியாகி விட்டது.
முதல் அழைப்பிலேயே போனை எட்டி பார்த்த அர்ஜூன் அதில் இருப்பது யார் என அறிந்துக்கொண்டான். ஆனால் தன் அக்கா இப்படி அழுவதின் காரணம் தான் அவனுக்கு விளங்கவில்லை …குழப்பமாக இருந்தது. வீட்டில் நடந்த பிரச்சனை ஒரளவு தெரியும் ஆனால் அதையே ஏன் நினைத்துக்கொண்டு அழுகிறாள் என்று தான் புரியவில்லை அதிலும் அதில் பதிந்திருந்த பெயர் வேறு அவனை குழப்பியது இருந்தும் அழுதுக் கொண்டிருந்தவளின் மனநிலையை மாற்ற எண்ணி
“ஏய் பிசாசு அக்கா… எதுக்கு இப்படி அழற?.. சர்வேஷ் மாமா போன் பண்றாரு, ஆனா அவரு பேரை ஈசான்னு போட்டு சேவ் பண்ணி வைச்சிருக்க பைரவியிடம் தன் சந்தேகத்தை கேட்க, அவள் விடை சொல்லாது அமைதியாக இருக்க,
சரி,… ஏதோ ஒன்னு…. அதை எடுத்து பேச வேண்டியது தானே, எத்தனை முறை போன் பண்ணுவாரு ஒரு மரியாதைக்காவது எடுத்து பேசலாம்ல… உன்னால முடியலன்னா நானாவது பேசி இருப்பேன் ல…” அர்ஜூன் வேண்டுமென்றே பேசி பேசி அவளை வெறுப்பேற்றி வம்பிழுத்தான்
“டேய் எழுந்து போறியா இல்லையா?’ அவன் மேல் எரிந்து விழுந்தவள், தலையணை கொண்டு அவனை மொத்தி விட்டு போடா என மீண்டும் படுத்துக்கொள்ள மறுபடியும் அவளது அலைபேசி அழைத்தது. இம்முறை சட்டென விளையாட்டாய் போனை எடுத்துக் கொண்டான் அர்ஜூன்.
அதில் பதறியவள் “ஹேய் அஜூ… ப்ளீஸ் டா…அதை ஆன் பண்ணாதடா ப்ளீஸ் டா “… என பைரவி எவ்வளவு முறை சொல்லியும் அதை காதில் ஏற்காதவன் முதல்ல நீ வந்து சாப்பிடு,… என் கூட நார்மலா இரு,.. அப்போ ஆன் பண்ண மாட்டேன் இல்ல ஆன் பண்ணுவேன்” என்றான் பிடிவாதமா
“அஜூ விளையாடாத… சொல்றதை கேளு” எச்சரிக்கை செய்து அவனிடமிருந்து போனை வாங்க முயற்சித்தவலாள் அது முடியால் போக, அஜூ அடிவாங்கத கொடுத்துடு என்றாள் மிரட்டலாய்.
“நோ வே… முதல்ல சாப்பிடு அப்புறம் மத்தது” பேரம் பேச எரிச்சலானவள் “முடியாது… வரமாட்டேன் நீ போடா” பைரவி முறுக்கிக் கொண்டு வர மறுக்க, அவளை பார்த்துக் கொண்டே அலைபேசியை ஆன் செய்து
“ஹலோ சர்வேஷ் மாமா” என்றவன் ஸ்பீக்கரில் போட்டான்.
“ஹலோ…. அர்ஜூன் நீயா?… அக்கா இல்லையா?…” என்றான் சர்வேஷ் கவலை தோய்ந்த குரலில், . இத்தனை நாளாக அணைத்து வைத்திருந்த அலைபேசிக்கு இன்று தானே, உயிரே கொடுத்து வைத்திருக்கிறாள்… தினமும் அழைத்து ஏமாந்தவன், இம்முறை அழைப்பை ஏற்கவும், தன் மனம் கவர்ந்த தேவதையின் நிலை என்ன ஆனதோ என வருந்தமுடன் கேட்டிருந்தான்.
“இங்க தான் இருக்கா மாமா”
“அவளை பேச சொல்றியா அர்ஜூன்?” என்றான் எதிர்ப்பார்ப்புடன் அதை கேட்டவளுக்கோ கண்கள் கலங்கியது.
இல்லை என்னும் விதமாய் தலை அசைத்தவள் கண்களிலும் மனதிலும் அத்தனை வலி
“மாம அக்கா அக்கா வாஷ் ரூம் போயிருக்க… நீங்க என்னன்னு சொல்லுங்க மாமா நான் வந்தவுடனே சொல்லிடுறேன்” என்றான் சிறு தடுமாற்றத்துடன்
அவன் கூறுவது பொய் என தெரிந்தாலும் அதை காண்பித்து கொள்ளாமல் “சரி அர்ஜூன் பரவாயில்லை… பைரவி நல்லா இருக்கால்ல அவளுக்கு எதுவும் பிரச்சனை இல்லையே” என்றான் தவிப்புடன்,
அக்காவின் முகம் பார்த்தான் இல்லை என சொல்லும் விதமாய் பைரவி சைகை செய்ய “பிரச்சனையா!… அப்படி ஒன்னும் இல்லை மாமா அக்கா நல்லா இருக்கா” அர்ஜூன் பொய் உரைத்தான்.
“சரி அர்ஜூன் அவளை கொஞ்சம் கூட இருந்து பாத்துக்கோ… சரியா சாப்பிட மாட்டா, எப்படியாவது அவளை சாப்பிட வைச்சிடு” தம்பிக்கே அறிவுரை கூறிட விச்சித்திரமாய் இருந்தது அர்ஜூனுக்கு, இருந்தும் “சரி மாமா” என்றவன் போனை அணைத்து விட்டு அக்காவையே குறுகுறுவென பார்த்தான். அவன் சந்தேகம் உறுதியாகி விட “அக்கா உண்மையை சொல்லு” என்றான் வளர்ந்த ஆண் பிள்ளையாய்.
“என்னடா சொல்ல சொல்ற?” என்றாள் கோவம் கொண்டவள் போல, அப்படியவாது அவன் கேள்வி கேட்பதை விட்டுவிடுவான் என்று நினைக்க அதற்கு மாறாக அவளை கேள்விகளால் துளைத்து எடுத்தான் அர்ஜூன்
“இப்போ இங்க ஒரு சீன் ஓடுச்சே அதை பத்தி” என்றான் துப்பறியும் நிபுணன் போல முகத்தை வைத்துக் கொண்டு
“அஜூ நீ குட்டி பையன்டா உனக்கு சொன்னா புரியாது ப்ளீஸ் விடு” என்றிட
“இப்படி சொல்லி சொல்லியே என்கிட்ட எதுவும் சொல்லாம தப்பிச்சிடலாம்னு நினைக்காத… நான் ப்ளஸ் டூ படிக்கிறேன்… எனக்கும் எத்தனை ப்ரோப்போசல் வருது தெரியுமா?… ஒழுங்கா உண்மையை சொல்லு ஏற்கனவே உன்மேல கொஞ்சம் டௌவுட் இருந்தது… ஆனா நீ அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டியேன்னு தப்பு கணக்கு போட்டுட்டேன்… ஆனா இப்போ நீ சர்வேஷ் மாமா கிட்ட பேசாம அவாய்ட் பண்றது…. அவரு உனக்காக அக்கறையா பேசுறது… நீ அவங்க வீட்டுக்கு ஹெல்ப் பண்றது… இதெல்லாம் பார்த்தா என்னோட டௌவுட் கம்பாஃம்டுன்னு தெரியுது… அப்படித்தானே” என்றதும் அவள் சட்டென திகைத்து அவனை பார்த்தாள்.
“சரி தெளிவாவே கேக்குறேன் நீ சர்வேஷ் மாமாவை லவ் பண்றியா? அவரும் உன்னை லவ் பண்றாரா?” என்றான் புருவம் உயர்த்தி
இதற்கு மேலும் தம்பியிடம் மறைக்க முடியாது தன் வேதனையையும் அடக்க முடியாமல் ஆம் என தலையாட்டியவள் அவனை அணைத்துக்கொண்டு அழுதிட
அவளின் முதுகை தட்டிக்கொடுத்தவன் “அக்கா நல்ல சாய்ஸ் தான், செல்க்ட் பண்ணி இருக்க… அப்புறம் ஏன் இப்படி அழற? இன்ஃபேக்ட் உன்னை செலக்ட் பண்ணி இருக்கறதுக்கு அவரு தான் அழனும்” என்றான் வேடிக்கை போல அவனுக்கு அவன் அக்கா அழுவது பிடிக்கவில்லை… அவளின் மனநிலையை மாற்ற ,பைரவியை வம்புக்கு இழுத்துக்கொண்டே இருந்தான்.
தம்பியின் கூற்றில் “டேய்” என அவன் முதுகில் ஒன்று வைத்தவள் “எனக்கு ரொம்ப கில்டியா இருக்குடா அர்ஜூ… அவருக்கு பொய்யா ஒரு ஹோப் கொடுத்துட்டு, அம்மா கஷ்டப்படுவாங்களேன்னு அவருகிட்ட எதுவுமே சொல்லாம வந்துட்டேன் பாவம் டா அவரு” என்றாள் வருத்தமாக
“ம் ஆமாக்கா வாய்ஸ் கூட ரொம்ப டல்லா இருந்துச்சி… பட் இது எல்லாம் வரும்னு உங்க ரெண்டு பேருக்கும் முன்னாடியே தெரியும் தானே அப்புறம் எதுக்கு இவ்வளவு சீனு…. மாமா போன் பண்ணும்மோது அம்மா இல்லையே, பேசி இருக்கலாம் இல்ல” என்றாவன் “போன் பண்ணி தரேன் பேசுறியா?” என்றான் ஆவலாக
“வேணாம் அஜூ… பேசினா இப்போவே அவரை பாக்கனும்னு தோனும்… அவருக்கும் கஷ்டமா இருக்கும்… அவர் குரலை கேட்டதே மோதும்டா எனக்கு… கொஞ்ச நாள் போகட்டும் பேசுறேன்” என்றாள் மூக்கை உறிஞ்சியபடி
“சரி … சரி… ரொம்ப வயலின் வாசிக்குற ஆனா எனக்கு தான் போர் அடிக்குது… ஆமா உங்க விஷயம் அம்மாவுக்கு தெரியுமா?”
“ம்கூம்” என்று தலையை இடவலமாக அசைத்தால் இல்லையென
“இதுக்கே அம்மா இப்படி உன்னை வைச்சி செய்யறாங்களே, அந்த குடும்பத்துல இருக்க ஒருத்தரை நீ லவ் பண்றன்னு தெரிஞ்சா நினைக்கவே வயிற்றில் புளியை கரைக்குதேக்கா” சற்று பயந்தவாறே கூறியவன் அவள் வருத்தப்படுவதை பார்த்ததும் அவளை இயல்பாக்க எண்ணி,
“அப்புறம் உங்க ஆளு நீ சரியா சாப்பிட மாட்டன்னு உனக்கு ஊட்டி விடவேற சொன்னாரு, சாப்பிட வரியா? இல்ல கொண்டு வந்து ஊட்டனுமா? என்றான் அவளை கிண்டலடித்தவாறே “சீ பே” அவன் கன்னத்தில் குத்தியவள் “வரேன் போ” என அனுப்பி விட்டு அலைபேசியில் இருந்த அவன் உருவத்தை கைகளால் வருடிவிட்டாள். மறுபடி அர்ஜூன் உள்ளிருந்து அழைக்க உணவு மேசையை நோக்கி ஓடினாள் பைரவி.