இருள் பிரியாத அதிகாலை வேளையில் விஜயேந்திரன் ஊருக்கு கிளம்பிக் கொண்டு இருந்தார்.
எப்போதும் எழுந்துக்கொள்ளும் நேரமாதலால் கண்விழித்த துளசி,
“என்னங்க எங்க இவ்வளவு அவசரமாக கிளம்புறிங்க?” அவரை வினவியபடியே படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தார்.
“எழுந்துட்டியா துளா…” சட்டை பட்டன்களை போட்டுக்கொண்டு இருந்த தீரன் “ஊருக்கு தான் கிளம்புறேன் துளா அண்ணனுக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சாம் நைட் போன் வந்தது நீ தூங்கிட்ட சரி காலைல கிளம்பும் போது சொல்லலாம்னு தான் உன்னை எழுப்பல” துளசியிடம் பேசிக்கொண்டே போனை எடுத்து பேன்ட் பாக்கெட்டில் திணித்தார் தீரன்.
“அச்சோ… எப்போங்க எப்படி ஆச்சி? இப்போ மாமா எப்படி இருக்காங்க?” துளசி அதிர்ச்சியும் பதற்றமுமாக விசாரிக்க,
“நேத்து நைட் தான் ஆக்ஸிடென்ட் ஆகி இருக்கு துளா… பையூ தான் கால் பண்ணி சொன்னா… பயப்பட ஒன்னும் இல்லன்னு தான் சொன்னா… இருந்தாலும் மனசு கேக்கல… சரி நான் கிளம்புறேன் நீ பார்த்து இரு” தீரன் அறையில் இருந்து வெளியேறினார்.
சசீதரனை போட்டு தள்ள, தக்க தருணத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்த அம்பலவாணனுக்கு கட்சிதமாக சிக்கியது அவர் கடலூரில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த அந்த இரவு நேரம்.
வேலனை அரவிந்திடம் ஒப்படைத்தான் சர்வேஷ் , கீர்த்தியின் செயலில் மனம் உடைந்த முத்து கோபத்துடன் பைக்கில் வெளியேறுவதை பார்த்தான். கோபத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடுமோ என அஞ்சிய சர்வேஷ் முத்துவை சமாதானம்
செய்ய பின்னாடியே பைக்கினில் சென்றுக் கொண்டிருந்த சமயம் ஒரு போலீஸ் ஜூப்பை தண்ணீர் லாரி வேகமாக தட்டி விட்டு சென்றதை பார்த்துவிட்டு இருவரும் பதட்டத்துடன் அங்கு சென்ற போதுதான் தெரிந்தது அது சசீதரனின் வாகனம் என உடனே பைரவிக்கும் அரவிந்திற்கும் தகவலை கொடுத்து சசீதரனை மருத்துவமனையில் சேரத்திருக்க இதோ காலையில் விஜயேந்திரன் ஊருக்கு கிளம்பிக்கொண்டு இருக்கிறார்.
“ஏங்க கொஞ்சம் இருங்க நானும் வரேன்… எனக்கும் பயமா இருக்கு… அங்க வந்து மாமாவை பார்த்தா தான் எனக்கும் நிம்மதியா இருக்கும்” தானும் உடன் வருவதாக கூறினார் துளசி.
“இல்லம்மா அர்ஜூனுக்கு ஸ்கூல் இருக்கே” தீரன் இழுக்கவும்
“இல்லங்க அவனுக்கு ஒன் வீக் ஸ்டடி ஹாலிடேஸ் தான் அதனால் ப்ராப்ளம் இல்ல ஒரு 5 மினிட்ஸ் இருங்க நான் அவனையும் எழுப்பிட்டு வரேன் ரெடியாகிடுவான்” துளசி கூறிய அடுத்த அரைமணி நேரத்தில் மூவரும் காரில் சிதம்பரத்தை நோக்கி பயணித்துக் கொண்டு இருந்தனர்.
…..
தலையிலும் கையிலும் சிறு கட்டு இருக்க வலி நிவாரணியின் உதவியுடன் மருத்துவமனையில் தூங்கிக் கொண்டு இருந்தார் சசீதரன். பெரிதாக அடி இல்லை என்றாலும் வண்டி உருண்டு விழுந்ததில் உடலில் அங்காங்கே சிராய்புக்களும் காயங்களும் இருக்க அது தந்த வலிக்கு மருந்தை உட்கொண்டவர் அதன் வீரியத்தால் உறங்கிக் கொண்டிருந்தார்.
சுப்ரஜா பாட்டியும் கமலமும் மாறி மாறி அறையை எட்டி பார்த்துக் கொண்டு இருந்தனர். நடராஜன் தாத்தாவிற்கு மனதே கேட்கவில்லை அவரும் எப்போது மகன் கண் விழிப்பான் என காத்து கொண்டிருந்தார். தாரணிக்கு ஒரளவு கால் வீக்கம் குறைந்து இருக்க அவளும் இன்று பள்ளிக்கு விடுப்பை எடுத்து அவரை சென்று பார்த்து வந்தவள் குழந்தையுடன் வீட்டிலேயே இருந்தாள்.
கமலம் உள்ளே செல்லவும் சசீதரன் விழிக்கவும் சரியாய் இருந்தது. கலங்கிய கண்களுடன் கணவரை பார்த்தவர் “என்னங்க…. இப்போ எப்படி இருக்கு? கமலத்தின் குரல் தழுதழுத்து கலங்கி ஒலித்தது.
மனைவியின் கலங்கிய கண்களையும் நலிந்து ஒலித்த குரலையும் வைத்தே அவரின் பயத்தையும் பதட்டத்தையும் உணர்ந்த சசீதரன்,
“என்னம்மா நீ ஒரு போலீஸ்காரன் பொண்டாட்டியா இருந்துட்டு இந்த சின்ன அடிக்கு போய் அழலாமா?’ ஆறுதலாக கூறியவர் கமலத்தின் கைகளை பற்றி அருகில் அமர வைத்தார்.
எத்தனை படித்தாலும் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் கட்டிய கணவனுக்கு ஒன்று என்றால் உடல் தன்னால் ஆட்டம் காணும்போது இவ்வளவு பெரிய கண்டத்தில் இருந்து தப்பி பிழைத்து வந்தவரை கண்டு உள்ளம் துடிக்காதா என்ன அதில் கமலமும் விதிவிலக்கு அல்லவே…
கணவரின் காயங்களை கண்களால் வருடியவாரே “நீங்க எவ்வளவு சாதாரணமா சொல்லிட்டிங்க… போலீஸ்காரன் பொண்டாட்டிக்கு பதட்டம் பயம் இருக்க கூடாதா… அவங்களுக்கு இருக்கறதும் உயிர் தானே… உங்களுக்கு ஒன்னுன்னா நான் எப்படி தாங்கிப்பேன்… நீங்க அடிப்பட்டு ஆஸ்பிட்டலில் இருக்கிங்கன்னு பைரவி சொல்லும் போது என் உயிரே போயிடுச்சி தெரியுமா?” கமலத்தின் கண்களில் இருந்து கண்ணீர் உருண்டு சசீயின் கரங்களில் பட்டு தெறித்தது.
மனைவியின் கண்ணீர் தனக்கானது என்ற கர்வம் கொண்டாலும் அதை காண சகியாதவர் “கமலா… என்னம்மா… இங்க பாரு எனக்கு ஒன்னும் இல்ல நான் ரொம்ப நல்லா இருக்கேன்… அதான் சர்வேஷ் வந்து காப்பாத்தி ஆஸ்பிட்டல்ல சேர்த்துட்டானே இது ஒருவாரத்துல சரியாகிடும்” கூறி மனைவியின் கண்ணீரை துடைத்து விட்டார்.
தன்னை நோக்கி நீண்ட கணவரின் கரங்களை இறுக்க பற்றிக்கொண்ட கமலம் கண்களில் ஒற்றிக் கொண்டு அழுது கரைந்தார்…
என்னம்மா இது சின்ன குழந்தையாட்டம் இப்படி அழற… பைரவியே எவ்வளவு போல்டா என்னை பாரத்துக்கிட்டா தெரியுமா நீ என் பொண்டாட்டி எனக்கு இருக்கும் தைரியத்துல பாதியாவது இருக்கவேண்டாமா?” கேட்டவாறே மனைவியின் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்திட,
கணவரின் பேச்சில் இருந்த உண்மை உரைத்தாலும் அதை எல்லாம் பெரியதாக எடுத்துக்கொள்ளாதவர் “அதெல்லாம் நிறையவே இருக்கு… நீங்கன்னு வரும்போது எல்லாம் காணம போயிடது… உங்களுக்கு ஒன்னுனா என்னால சத்தியமா தாங்க முடியாதுங்க” என கண்ணீரை வடித்த கமலத்தை தன் மார்பில் சாய்த்து கொண்டு அவரின் முதுகை மெல்ல வருடி விட்டு மனைவியை சமாதானம் செய்தார் சசீதரன்.
நரை தரித்து தோல் சுருங்கி கிழப்பருவம் எய்தி காலங்கள் மாறினாலும், காட்சிகள் மாறினாலும், மாறாது காதலும் அன்பும் மட்டுமே இங்கும் அது அழகாக பறிமாறிக் கொள்ளப்பட்டது.
“அந்தாளு இருக்கானா இல்லையான்னு நாங்க பாத்துக்குறோம் நீ தள்ளு மேன்” அந்த காவலாளியை தள்ளி விட்டு தான் அழைத்து வந்த போலீசுடன் அம்பலவாணனின் வீட்டிற்குள் நுழைந்தான் அரவிந்த்.
“சார்…. சார்….” காவலாளி அழைத்துக் கொண்டே அவன் பின்னே ஓடி வர
“டேய் அவனை மட்டும் தான் அரஸ்ட் பண்ணனும்னு வந்தேன்… விஸ்வாசத்தை காட்டுறேன் விஷத்தை கக்குறேன்னு நடுவுல வந்து நீயும் அவங்களோட உள்ள போய் உட்காந்துடாத” அவனை மிரட்டிட,. அதில் வெடவெடத்து போன காவலாளி அமைதியாய் பாதியிலேயே நின்று விட்டான். அதற்குள் வீட்டிற்குள் நுழைந்த அரவிந்த் “சர்ச் ஹிம்” என்றான் அதிகாரம் நிறைந்த குரலில்.
வீட்டிற்குள் போலீஸ் நுழைந்து ஆளுக்கு ஒரு பக்கமாய் தேடிக் கொண்டிருக்க, “யாருயா நீங்க?… யாரு வீட்டுல வந்து என்ன பண்றிங்க?… உங்கள அவர்கிட்ட சொல்லி என்ன செய்றேன் பாருங்க…” தன் கனத்த சரிரத்தை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு, “என்னங்க என்னங்க இங்க வாங்க இந்த ஆளுங்க என்ன பண்றாங்க பாருங்க” கணவரை சத்தமிட்டு அழைத்தார் அம்பலவாணின் ஆருயிர் மனைவி.
அவரை கேவலமான ஒரு பார்வை பார்த்தவன் “செல்வம் கடமையை செய்யும் போது யாராவது தடுத்து கேள்வி கேட்டு, மரியாதை இல்லாம பேசினா, எந்த பதிலும் பேசாம அரஸ்ட் பண்ணி ஜீப்ல ஏத்துங்க” அரவிந்த் கட்டளையாக கூறினான்.
அதுவரை தாம் தூம் என குதித்துக்கொண்டு இருந்த அம்பலவாணனின் மனைவி அரவிந்தின் மிரட்டலில் கப்சிப் என அடங்கி கணவரின் வருகைக்காக காத்திருந்தார்.
“அது “என்ற மிரட்டல் பார்வையுடன் வீட்டை சுற்றிலும் பார்வையை சுழலவிட்ட அரவிந்தின் முன்னே வந்து நின்றனர் அம்பலவாணனும் அவரது மகன் மனோஜூம்…. அவர்களை கண்டதும் “அட நீயும் இங்க தான் இருக்கியா? நல்லதா போச்சி” கேலிபார்வையுடன் மனோஜினை பார்த்தான் அரவிந்த்.
அவன் பார்வையில் தந்தையின் பின் பக்கம் பதுங்க நினைத்தவன் அப்படியே சோஃபாவில் கால் தடுமாறி சரிந்து விழுந்திட, அரவிந்தனை கண்டும் அஞ்சும் மகனை பார்த்து ஆத்திரமான அம்பலவாணன்,
“என்ன இன்சு… என் வீட்டுக்கு வந்து என் பையனையே மிரட்டுர? தெரிஞ்சி தான் இந்த வேலை எல்லாம் பண்றியா? நான் ஆளும் கட்சி எம்எல்ஏ என் வீட்டுலயே வந்து உன் அதிகாரத்தை காட்டுறியா? யாரை கேட்டு இங்க வந்து இப்படி பண்ற?” கோபம் பொங்கும் விழிகளுடன் அரவிந்தனை அடுக்கடுக்கான கேள்விகளுடன் உறுத்து பார்த்தார் அம்பலவாணன்.
அவரது கேள்விகளை தூசியை போல தட்டியவன் “நல்ல வேலை நான் வீட்டை சல்லடையா சலிச்சி தேடனுமோன்னு நெனச்சேன் எனக்கு அதிகமா வேலை வைக்காம நீயும் உன் புள்ளையும் வெளியே வந்துட்டிங்க… வந்தது தான் வந்திங்க அப்படியே நல்ல புள்ளைங்களா அந்த வண்டில் போய் ஏறிடுங்க” அரவிந்த் நக்கலும் நையாண்டியும் கலந்த குரலில் உரைக்க
ஏய் என்று சத்தமிட்டு தன் கோவத்தை வெளிப்படுத்திய அம்பலவாணன் “என்னை அரஸ்ட் பண்ண போறியா? நான் யாரு தெரியுமா? என் கிட்ட விளையாடுறியா என் கையில் எத்தனை மந்திரி இருக்காங்க தெரியுமா? நான் நினைச்சா உன்னை இன்னைக்கே இந்த வேலையில் இருந்து தூக்கி வேற ஆளை வைக்க முடியும்… பாக்குறியா? பாக்குறியா?” கண்கள் சிவக்க தாடைகள் இறுகி சினம் பொங்கும் குரலில் கொடூரமாக வார்த்தைகளை வெளியேற்றினர் அம்பலவாணன்
அவரை ஒரு பொருட்டாக கூட எண்ணாத அரவிந்த் தன் தலை முடியை பிடிங்கி அதை ஊதி பறக்கவிட்டு “நீ எந்த இதுவா வேணா இருந்துட்டு போ… அதை பத்தி எனக்கு எந்த கவலையும் இல்லை… தப்பு செய்தா அரஸ்ட் பண்ணி இழுத்துட்டு போக தான் செய்வேன், அது யாரா இருந்தாலும், நீ பண்ண வேலைக்கு உன்னை இங்க இருந்தே நடக்க வைச்சி கூட்டிட்டு போகனும் ஏதோ போனா போகுதேன்னு ஜீப்ல கூட்டிட்டு போறேன்னு சொன்னா ரொம்ப துள்ளுற… நடய்யா ஸ்டேஷனுக்கு” வலுக்கட்டாயமாக கையில் விலங்கினை பூட்டி ஜீப்பில் ஏற்றினான். கூடவே மனோஜின் கரங்களிலும் விலங்கு மாட்டப்பட்டு அவனும் ஜீப்பில் ஏற்றப்பட்டான்.
அப்போது தான் அம்பலவாணனுக்கு பெருமூளையும் சிறு முளையும் ஒருசேர வேலை செய்தது போல, “இன்ஸ்பெக்டர்…. காரணம் இல்லாமா என்னை அரஸ்ட் பண்ண முடியாது… அதுவும் நான் ஒரு ஆளுங்கட்சி எம் எல்ஏ…. நீ எப்படி என்னை அரஸ்ட் பண்ணுவ எங்கே அந்த அரஸ்ட் வாரண்டை காட்டு” அவன் பாய்ண்டை பிடித்து பேச
“நான் ஒன்னும் உன்னை போல் முட்டாள் இல்லை தகுந்த ஆதரத்தை மாஜிஸ்ட்ரேட் முன்னாடி சப்மிட் பண்ணி உனக்கு அரஸ்ட் வாரண்டை வாங்கிட்டு வந்துதான் உன்னை அரஸ்ட் பண்ணி இருக்கேன்… அதுவும் செல்வப்பாண்டியன் தூக்குல தொங்கியதுக்கு எவிடன்ஸ் பக்காவா இருக்கு…” என்றதும் அம்பலவாணனுக்கு வியர்க்க ஆரம்பித்துவிட்டது. இருந்தும் அதை வெளியே காட்டாமல்
“என்ன மிரட்டுறியா? நீ வேணும்னே என் மேல் பொய்யா ஆதாரத்தை ஏற்படுத்தி இருக்கேன்னு சொல்லி நாளைக்கே வெளியே வந்துடுவேன்” அரவிந்தின் முகத்திற்கு நேரே சொடுக்கிட்டு பேசிட
அதை எள்ளலான சிரிப்புடன் பார்த்த அரவிந்த் “இன்னைக்கு வெள்ளிக்கிழமை நேரம் பாத்தியா சாய்ந்தரம் ஐந்து மணி… இப்போ உன் அப்பனா கோர்ட் வாசலை துறந்து வச்சிருப்பான்… அதுவும் இல்லாம அதுக்கு அடுத்த ரெண்டு நாட்களும் கோர்ட் லீவு திங்கட்கிழமை ஸ்ட்ரெய்ட்டா உன்னை கோர்ட்டில் நிக்க வைச்சிடுவேன்…. அதுவரையும் நீ என் கஸ்டடிதான்” மிடுக்குடன் கூறியவனின் குரலே சொன்னது அவன் வன்மத்தின் அளவை அதை கண்ட மனோஜூக்கும் அம்பலவாணனுக்கும்
தாங்கள் செய்த செயல் கண் முன்னால் விரிய பயத்தில் எச்சிலை விழுங்கினார்கள் இருவரும்.