தளர்ந்த நடையுடன் அறைக்குள் வந்த சர்வேஷின் கண்களில் இருந்த சிகப்பு அவன் அழுதிருக்கிறான் என்பதை தெளிவாக எடுத்துரைத்தது.
காலையில் பைரவியை பார்க்கும் போதே முகம் தெளிவில்லாமல் தான் இருந்தது. கேட்கலாம் என அருகே செல்லும் போது நடராஜன் தாத்தாவும் விஜயேந்திரனும் கூடவே இருந்ததில் அவனால் எதையும் கேட்க முடியாமல் போனது. ஆனால் அது இவ்வளவு பெரிய விஷயமாக இருக்கும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை…
தந்தை மட்டுமே தன் காதலுக்கு எதிர்ப்பாக இருப்பார் என நினைத்திருந்தவனுக்கு துளசியின் கோபம் உள்ளுக்குள் பயத்தை உண்டு பண்ணியது.
பகல் பொழுது கடந்து இராப்பொழுதும் வந்து விட்டது. காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை, சாப்பிடவும் தோன்றவில்லை இரண்டு மூன்று அழைப்புக்கள் அன்னையிடமிருந்து வந்திருந்தது. பேசும் நிலையில் இல்லாதவன் அப்புறம் பேசுவதாக கூறி போனை அணைத்து வைத்து விட்டான்.
கண்களை மூடி கட்டிலில் சாய்ந்தவன் முன் நிழலாட யாரென பார்த்தான் விக்னேஷ் தான் கையில் சாப்பாட்டு கேரியருடன் நின்றிருந்தான். “பச் விக்கி, நான் இப்போ சாப்பிடுற நிலையில் இல்லை… நீ கிளம்பு, அண்ணி உன்னை எதிர்ப்பார்த்துட்டு இருப்பாங்க” என்றான் சற்று அதட்டும் தோணியில்
“டேய் ச்சீ… எழுந்து வா… துளசி அத்தை பைரவிய கூட்டிட்டு போயிட்டா உலகமே இருண்டுடுச்சின்னு அர்த்தமா? நாமா எதுக்கு இருக்கோம்… எல்லாம் பாத்துக்கலாம்… இப்படி எல்லாம் போனா மாதிரி சோகமா உட்கார்ந்து இருக்காத டா… வா… வந்து சாப்பிடு…” சிறு அதட்டலோடு கூறியவன் உணவு பாத்திரத்தை திறந்து வைத்து கொண்டிருந்தான்.
“விக்கி, சொல்றதை கேளு, எல்லாத்தையும் எடுத்துட்டு போ என்னை தனியா இருக்க விடு… பேசறத்துக்கு வேணா சாதரணமான விஷயமா தெரியலாம் விக்கி ஆனா இது சாதாரண விஷயம் இல்லை” என்றான் சர்வேஷ் பிரச்சனையின் ஆழம் உணர்ந்து.
“சரி… இது பெரிய பிரச்சினையாவேனா இருக்கட்டுமே நாம பாக்காததாடா? முதல்ல நீ எழுந்து வா சாப்பிட்டு தெம்பா இரு… அதுவா நாமலான்னு ஒரு கை பாத்துடுவோம்” என்றான் தம்பிக்கு தெம்பூட்டும் விதமாகவே,
“விக்கி, நீ… இன்னைக்கு தான் வெளியேவே வந்து இருக்க, நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு…. நான்… நான்… சரியாகிடுவேன் நீ என்னை நினைச்சி கவலைப்படாதே டா” என்றான் திணறலுடன். அவனுக்கு பைரவியை நினைக்கையில் துக்கம் தெண்டையை அடைத்தது.
“இப்போ என்னடா? நான் போகனும் அவ்வளவு தானே…. சரி டா… நான் போறேன்… ஆனா வீட்டுக்கு போக மாட்டேன், நேரா துளசி அத்தைய பாக்க சென்னைக்கு தான் போவேன்” என எழுந்தான் சட்டென, அவனால் தானே பிரச்சனை ஆரம்பித்தது அவனே அதை சரிசெய்ய நினைத்தான்.
பதறி எழுந்த அவனை தடுத்த சர்வேஷ் “ஏன்டா என் உயிரை வாங்குற? நீ எங்கேயும் போக வேண்டாம் முதல்ல வீட்டுக்கு கிளம்பு” என்றான் கண்டிப்போடு “அப்போ நீ சாப்பிடு” நான் கிளம்புறேன் என்றான் விக்னேஷ் வீம்பாக எங்கே தான் சென்று விட்டால் சாப்பிடாமல் கொள்ளாமல் படுத்து விடுவானோ என்ற எண்ணத்தில் வீம்புடனே நின்றான் விக்னேஷ்.
தான் சாப்பிடாமல் இங்கிருந்து செல்ல மாட்டான் என அறிந்துக்கொண்ட சர்வேஷ்வரன் “பச்” சலித்தபடி வேண்டா வெறுப்பாக உணவினை எடுத்து உண்டவன் “இதோ சாப்பிட்டேன் இப்போவாவது கிளம்புறியா?” விக்னேஷினை அங்கிருந்து அனுப்புவதிலேயே குறியாக இருந்தான்..
“சரி நீயும் கிளம்பி வா போகலாம்”.
“எங்க?”
“எங்கன்னா?…. நம்ம வீட்டுக்கு தான்”
“என்ன விக்கி விளையாடுறியா? என்னால அந்த வீட்டுக்கு எல்லாம் வர முடியாது… மேலும் மேலும் பேசி என்னை வெறியேத்தாம கிளம்பேன்டா ” என்றான் சற்று பொறுமையாகவே.
“சரி நீ எங்கேயும் வர வேண்டாம் படு நானும் இங்கேயே படுக்குறேன்” அவனுக்கும் ஒரு விரிப்பை கீழே விரிக்க, அதை பிடிங்கி துர எரிந்தவன்
“என்னடா வம்பு பண்றியா? நான் அங்க வரமாட்டேன்னு உனக்கு தெரியாதா? தேவையில்லாம நீ உன் டைமை வேஸ்ட் பண்ணிட்டு இருக்க… அண்ணி அங்க உனக்காக வெய்ட் பண்டிட்டு இருப்பாங்க டா… நீ போ நான் இருந்துப்பேன்” என்றான் காட்டமாக,
“ஆமா வம்பு பண்றேன்னே வைச்சிக்க…, அதுல என்ன தப்பு… நீ இப்படி தனியா கஷ்டப்படும் போது நாங்க எல்லாம் எப்படி டா அங்க சந்தோஷமா இப்போம்னு நினைக்கிற?… உன்னை நினைச்சி அம்மாவும் அங்க அழுதுட்டு தான் இருக்காங்க…” என்றான் விக்னேஷ் அவனுக்கு சற்றும் குறையாத காரத்துடன்.
சர்வேஷினை தனியாக விட விருப்பமில்லை முன்னர் எப்படியோ ஆனால் இப்போது உறவுகளை மதிக்கவும், அன்பாக இருக்கவும் கற்றக்கொண்டதால் வந்த தெளிவில் தம்பியை வீட்டிற்கு அழைத்தான் விக்னேஷ்.
முத்து, நண்பனை தேடி வர விகனேஷ் பேசியதை எல்லாம் கேட்டு மனதில் அவனை மெச்சிக் கொண்டான், அவனும் விக்னேஷ் சொன்னதையே சொல்லி வற்புறுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
…..
பைரவி ஊருக்கு கிளம்பி சென்றிட, அன்று மாலையே அரவிந்த் ஒரு கேஸ் விஷயமாக அலைந்து திரிந்தததில் அந்த இரவும் தாமதமாக தான் வீட்டிற்கு வந்தான்.
அவனிடம் பேச வேண்டும் என காத்திருந்த தாரணிக்கு அவன் வருவதற்கு முன்னதாகவே மகன் சிணுங்கும் குரல் கேட்க அவனை தூங்க வைக்க அறைக்குள் சென்றிருந்தாள்..
வந்தவன் அனைவரும் தூங்கி விட்டனர் என்று நினைத்துக்கொண்டு சத்தம் எழுப்பாது அறைக்குள் நுழைந்தான், அறையில் மகனை தூங்க வைக்கும் தாரணியை பார்த்ததும் எதுவும் பேசாமல் காக்கி உடையை கழட்டி விட்டு துண்டுடன் குளியலறைக்குள் புகுந்து விட தன்னை பார்த்தும் பேசவில்லையே என்ற கோபமும், வீட்டில் நடந்ததை நினைத்து அழுகையும் வர கடுகடு முகத்துடன் அமர்ந்திருந்தாள் தாரணி.
குளியலறைக்குள் சென்றவன் பதினைந்து நிமிடங்களில் டிராக் பேண்ட் டீ ஷர்ட் சகிதம் தலையை துவட்டிய படியே வெளியே வந்தான். வந்தவன் இப்போதாவது தன்னிடம் பேசுவான் என தாரணி எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க, அரவிந்த் அவள் புறம் கூட திரும்பாமல் வெளியே சென்றான்.
‘ரொம்ப ஓவரா போறானே… இந்த முரட்டு போலீஸ்’ மனதில் அவனை வறுத்தவள் குழந்தையை தொட்டிலில் கிடத்தி விட்டு அவனுக்கு உணவு பரிமாற சென்றாள்.
உணவு மேசை முன் அமர்ந்தவன் தானே பரிமாறிக்கொள்ள தட்டினை திருப்பி வைத்தான். வீட்டில் அவன் சத்தமிட்டதில் இருந்து இரவு வெகு நேரம் கழித்து வருவதால் யாரையும் தொந்தரவு செய்யாமல் தானே உணவினை போட்டுக்கொள்ள இதுவே மூன்று நாட்களாக தொடர்ந்தது.
இப்படி பேசி விட்டானே என்று கோவம் தாரணிக்கு தனக்கு பிடிக்காததை செய்து விட்டாளே என்று கோபம் அரவிந்திற்கு இவர்களின் ஊடல் நான்கவது நாளாக தொடர்ந்திருக்க வேகமாக அறையிலிருந்து வெளியே வந்தவள் உணவு பாத்திரத்தை கையில் எடுத்து கணவனுக்கு தானே பரிமாற ஆரம்பித்தாள்.
புருவம் சுருங்க மனைவியை பார்த்தான் அரவிந்த். கண்களில் லேசான வீக்கம் அவள் அழுது இருப்பதை உறுதி செய்திட சற்று மனம் இளகியவன் எதுவும் பேசாது அமைதியாக உண்டான். அவள் கவனம் முழுவதும் தட்டில் இருந்தது கணவனுக்கு பார்த்து பார்த்து பறிமாறினாள். மூன்று நாட்களாக அவனை கவனிக்காமல் விட்டதை எல்லாம் இப்போது ஈடுசெய்து கொண்டிருந்தாள்.
போதும் கை நீட்டி தடுத்தவன் கை கழுவிக்கொண்டு அறைக்குள் சென்று விட்டான். தாரணியும் பாத்திரத்தை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு அவனயே நூல் பிடித்தது போல பின் தொடர்ந்தாள்.
தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த தங்கள் தவ புதல்வனை பார்த்து கண்களில் நிறைத்துக் கொண்டவன் அவன் தூக்கம் கெடா வண்ணம் கொஞ்சி விட்டு கையில் ஒரு புத்தகத்துடன் மெத்தையில் சாய்ந்த வாக்கில் அமர்ந்துவிட்டான்.
மூன்று நாட்களாக தெரியாத அவன் அமைதி இன்று அவளை தாக்கியது அவன் பேசாதது அவளுக்கு உறுத்தியது. ‘நான் பேசலன்னா இவன் வந்து பேச மாட்டானா?, நான் அவ்வளவு தானா இவனுக்கு…,’ மனம் சுணங்கினாலும் அவனை மீறி தான் செய்தது சற்று அதிகப்படியே என தோன்றி அவளை இம்சிக்க “உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்” என்றாள் அரவிந்திடம்
புத்தகத்தில் கண்களை பதிந்திருந்தவன் தாரணியின் குரல் தேட்டு நிமிர்ந்து அவளை பார்த்தான். கலங்கிய கண்களுடன் கணவனை பார்த்திருந்த தாரணி “சாரி” என்றாள் குரலில் வலியை தேக்கியபடி
அவன் எதுவுமே பேசாமல் அந்த இடத்தை விட்டு அகல ‘என் மேல தப்பு இருக்க போய் தானே சாரி கேக்குறேன்… வாயை திறந்து ஏதாவது சொன்னா தான் என்னவாம் இத்தனைக்கும் என்னை பேசினதுக்கு ஒரு பேச்சிக்கு கூட இவன் இன்னும் சாரியே கேக்கல… நானே வலிய போய் பேசினா மிதப்பை பாரேன்’ உள்ளுக்குள் பொறுமியவள் “இந்தா உங்களத்தான் கொஞ்சம் நில்லுங்க” என்றாள் சற்று குரலை உயரத்திய படி
‘திரும்பியும் ஆரம்பிச்சிட்டாளா இத்தனை நாள் அமைதியா இருந்தா இன்னைக்கு பத்ரகாளி வேஷம் போட போறாப்போல இருக்கே’ என நினைத்தவன் என்னதான் செய்கிறாள் என்று பாக்கலாம் என எதுவுமே பேசாது நின்றான்.
“இப்படி நின்னா என்ன அர்த்தம்? சாரி கேக்குறேன் ல அதுக்கு பதிலை சொல்லிட்டு போங்க” என்றாள் அவனை முறைத்தபடி.
“இப்போ எதுக்குடி இந்த டிராமா?” என்றான் சலித்தபடி நடந்த பிரச்சனைகளுக்கு தாரணியும் ஒரு காரணம் என்று அவள் மேல் கோபத்தில் இருந்தவன் மனைவியின் பேச்சை நம்ப மறுத்தான்.
“நீ என்கிட்ட இப்படி சமாதானமா போறன்னாலே ஏதோ இருக்குன்னு தான் நினைக்க தோனுதுடி, இன்னும் என்ன? அவங்க ரெண்டு பேரையும் எப்படி பேச வைக்கலாம்னு ஐடியா பண்ணி வைச்சிருக்கியா? அதை மறைக்கத்தான் இந்த டிராமாவா?” என்றான் அவளின் மேல் குற்றம் சாட்டியவாறே
அதில் பொங்கி அவன் சட்டை பிடித்து உலுக்கியவள் “போதும் நிறுத்துயா” என்றாள் சீற்றத்துடன், “நான் தப்பு பண்ணிட்டேன் தான் இல்லன்னு சொல்லல…, ஆனா அதை நான் ஒன்னும் வேணும்னே பண்ணல, நாம லவ் பண்ணி தானே கல்யாணம் பண்ணிக்கிட்டோம்… சொல்லுய்யா லவ் பண்ணி தானே கல்யாணம் கட்டிக்கிட்டோம்…” அவனை மிரட்டி கேட்க மனைவியின் அதட்டலில் அதிர்வாய் நின்றவன் தலை ஆம் என்று அசைந்தது.
“அப்புறம் எப்படி அவங்க லவ் பண்றாங்கன்னு தெரிஞ்சும் அவங்களுக்கு உதவி பண்ணாம இருக்க முடியும்… ஒரு பக்கம் என் நாத்தனாரு ஒரு பக்கம் என் அண்ணன்… அவங்க மனசுல இருக்க வலி புரிஞ்சதுனாலதான் நான் ஹெல்ப் பண்ணேன் …” என்றாள் சற்று கரகரப்பான குரலில். அவளுக்கு அழுகையே வந்துவிட்டது கணவனின் வார்த்தைகளில்,
பின் சற்று நிதானித்தவள் “ஆரம்பத்துல பைரவியும் சர்வேஷ் அணணாவும் ஒன்னு சேர்ந்தா நல்லா இருக்கும்னு நினைச்சது என்னவோ உண்மை தான்… அதுக்கு நான் சப்போர்ட்டும் பண்ணேன் தான்…., ஆனா சர்வேஷ் அண்ணா பைரவிய லவ் பண்ற விஷயம் தெரிஞ்சி அன்னைக்கு பெரியப்பா நடந்துக்கிட்ட முறை கொஞ்சம் கூட சரியில்லை… சர்வேஷ் அண்ணாக்கிட்ட சண்டை கூட போட்டேன்…”
அவன் கட்டுனா பைரவியை தான் கட்டுவேன்னு பிடிவாதமா இருக்கவும் என்னாலையும் எதுவும் சொல்ல முடியல…. எல்லாம் சுமுகமா போற நேரத்துல அப்பா அம்மாவால இந்த விஷயம் அத்தைக்கு தெரிய வரும்னு நான் கனவுல கூட நினைக்கல அந்துமா…. அத்தை பெரியப்பா பேசினது தெரிஞ்சி இப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு நான் சத்தியமா எதிர்ப்பாக்கலங்க நெஜமாவே பைரவியை நினைச்சி ரொம்ப வலிச்சுது அந்துமா” என்றாள் கண்கள் கலங்க. உள்ளார்ந்த வருத்தத்தோடு
வெகு நாட்களுக்கு பிறகான அவளது பிரேத்யேகமான அழைப்பில் உடல் சிலிர்த்தது அவனுக்கு, விழியெடுக்காமல் அவளையே பார்த்திருந்தான் அரவிந்த்.
கல்லூரி காலங்களில் தாரணி அரவிந்தை துரத்தி துரத்தி காதலித்த போது அவள் அழைத்தது, அதன் பிறகு பெரியவர்கள் முன் அழைக்க முடியாமல் போக, காலப்போக்கில் இருவருமே அதை மறந்து விட்டிருந்தனர். ஆனால் இப்போது அவள் உணர்ச்சிவசத்துடன் பேச ஆழ் மனதில் இருந்து அவனுக்கான பிரேத்யேகமான அழைப்பு வந்தது.
குடும்பத்தை மட்டுமே முன் நிறுத்தி சிந்திருத்தந்தவன் தாரணியின் கண்ணோட்டத்தில் சிந்திக்க தவறினான் ஒரு வேலை பைரவிக்கு இதில் விருப்பமா என ஒரு வார்த்தை கூட தங்கையை விசாரிக்காதது குற்றவுணர்வாய் இருந்தது.
பச் நேற்று வந்தவள் தன் தங்கைக்காக யோசிக்கும் போது ஒரு நிமிடம் கூட தான் அவளுக்காக யோசிக்கவில்லையே, தானும் காதலித்து திருமணம் செய்தவன் தானே தனக்கு ஏன் இப்படி தோன்றவில்லை என நினைத்து வருந்தியவன் அன்று சர்வேஷூடன் பார்த்ததும் கோவத்தில் தவறாக வார்த்தைகளை விட்டுவிட்டதை நினைத்து வருந்தத்துடன் மனைவியை பார்த்தான்.
“சாரி தாரு” என்றான் உள்ளார்ந்த வருத்தத்தோடு, அவ்வளவு நேரமும் அழுகையில் நின்றிருந்த தாரணி அவன் “சாரி” என கேட்கவும் நிமிர்ந்து அவனை பார்த்தவள் ஓடி சென்று ஜன்னலின் புறம் பார்வை பதித்தாள்.
மனைவியின் செய்கை ஏன் என்று புரியாமல் நின்றிருந்தவன் “தாருமா நான் சாரி கேட்டேன் டி… நீ ஒன்னுமே சொல்லாம ஜன்னலை வெறிச்சி பாக்குற”
“நீங்க சாரி கேட்டிங்கள்ள அதுதான் மழை வருதான்னு பார்த்தேன்” என்றாள் நக்கலாக….
மனைவியின் பேச்சு அவனுக்கு சிரிப்பை வரவழைக்க அதை மறைத்தபடியே அருகில் சென்று “உனக்கு வாய் மட்டும் குறைச்சலே இல்லடி” அவள் இதழ் நோக்கி குனிந்தவன் இடையில் கையிட்டு தன்னை நோக்கி இழுத்தான்.
பட்டும் படாலும் தீண்டி சென்ற இதழ் முத்தத்தில் அவனை முறைத்தவள் அவன் அணைப்பில் இருந்துக்கொண்டே “பின்ன என் ரவுடி புருசனை பத்தி எனக்கு தெரியாதா? உங்களுக்கு என் பெரியப்பாவை புடிக்காம இருக்கலாம்… ஆனா குணம் மொத்தம் அவருது தான்… கிழக்கே உதிக்குற சூரியன் மேற்கு பக்கமா உதிச்சாலும் உதிக்குமே தவிர உங்க ரெண்டு பேரு கிட்ட இருந்து இப்படி ஒரு வார்த்தையை வாங்கவே முடியாதே அதான் மழை வருதோன்னு பார்த்தேன்” என்றாள் கிண்டல் தோணியில்…
அவள் சொல்வதும் உண்மையாக இருந்தாலும் அவளை பொய்யாய் முறைத்தபடியே “ரொம்ப கிண்டல் பண்றடி… வாய் கொழுப்பு அதிகம் ஆகிடுச்சி டீச்சர் அம்மாவுக்கு” அவளை தள்ளிக்கொண்டு கட்டிலுக்கு வர அவன் நோக்கம் புரிந்தவள் “யோவ் கையை எடுய்யா” என்றாள் காரமாக
“என்னது யா வா?”
” ரவுடி போலீஸ்… கையை எடு என்னை தொடாத” என்றாள் மிரட்டலாக
அவளை விட்டு விலகாமலேயே “ஏன் டி” என்றான் அதார்வுடன்.
“நான் பண்ண தப்புக்கு தான் சாரி கேட்டேன்… ஆனா நீ, பேசின வார்த்தைக்கு சாரியே கேட்டாலும் பனிஷ்மெண்ட் இருக்கு… ஒரு வாரம் என் பக்கத்துல கூட வந்துடாத” என்றவள் அவனை கட்டிலில் இந்த பக்கம் தள்ளிவிட்டு குழைந்தையை நடுவில் கிடத்தி மறுபக்கம் படுத்துக்கொண்டாள்.
அவளையே ஏக்கமாக பார்த்தவனின் பார்வை புரிந்தாலும் சிரிப்பை மறைத்தபடி கண்களை மூடி தூங்குவது போல குழந்தையை அணைத்துக்கொண்டு படுத்துவிட்டாள் தாரணி.
தான் விட்ட வார்த்தைக்கு இந்த தண்டனை தேவை நான் என்று நினைத்தவன் அதற்கு மேலும் மனைவியை வறுத்தாமல் அவளை ஆசையாய் கண்களால் வருடி, நித்திரையை தழுவிட கூடலே இல்லாத அந்த இரவும் காதலுடன் இனிமையாக நகர்ந்தது.