வீட்டின் நடு கூடத்தில் அமர்ந்து இருந்தவர்களின் வரவில்,
பைரவியின் இதயம் பந்தயக் குதிரையின் வேகத்திற்கு இணையான வேகத்தில், தரிக்கெட்டு ஓடிக் கொண்டு இருந்தது.
“ப்ளீஸ் போனை எடுங்களேன்” மனதில் இருப்பவனிடம் மானசீகமாக பேசியவள் சர்வேஷ்வரன் அழைப்பை எடுக்கும் வரையில் படபடப்புடன் காத்திருந்தாள்.
இரண்டு அழைப்புக்கள் முழுதாய் அழைத்து அடங்கிய அலைபேசியில், இருந்து அழைப்பு வர அவசரமாக எடுத்து காதில் பொருத்தியிருந்தவள் “அடேய் வளர்ந்து கெட்டவனே… ஒருத்தி நொய்யி நொய்யின்னு போனு அடிச்சிக்கிட்டோ இருக்காளே எடுக்கனுமுன்னு எண்ணமிருக்கா உனக்கு?… அங்க என்ன கழட்டுற வேலையா பாத்துக்கிட்டு இருந்த?” அவன் மேல் இருந்த கடுப்பில் மொத்தமாக அவனை வாணலியில் இட்டு வறுத்தாள் பைரவி.
படபடப்புடன் கூடிய கோவத்தில் அவள் அழைத்த அழைப்பினில் முதலில் சிரிப்பு உண்டானாலும், அடுத்து அடுத்து அவள் பேசிய வார்த்தைகள் காதில் கேட்க முடியாமல் போனை சற்று எட்ட பிடித்தவன் “ஏய் ஜில்லு இப்போ எதுக்கு நீ இவ்வளவு பாசமா பேசிக்கிட்டு இருக்க?” என்றான் பாவமான குரலில்.
“உன்னை வெறுமனே திட்டிட்டு இருக்கேனேன்னு சந்தோஷப்படு சர்வேஷ்… எனக்கு இருக்க கோவத்துலயும் டென்சன்லயும் நீ மட்டும் என் முன்ன இருந்து இருந்தா கண்டிப்பா உன்னை கொலை பண்ணி இருப்பேன்…. ஜில்லாம் ஜில்லு நானே இங்க தகதகன்னு நெருப்புல நிக்கறா மாதிரி நிக்குறேன் இவருக்கு கொஞ்சல்ஸ் ஒன்னுதான் குறைச்சல்” பற்களை நறநறத்தவளின் பேச்சில் ஒரு நொடி ஜர்க் ஆனவன் அவளின் நிலையை எண்ணி சிரித்தபடியே
“ஹேய் ஏய் ராட்சசி கொஞ்சம் பொறுமையா பேசி தொலையேன்டி எதுக்கு இப்போ உன் பிபீயை ஏத்திக்கிட்டு இருக்க…. உன்னை இந்த மாமான் கொஞ்சாம வேற எவன் கொஞ்சுவான்…. ஏன் உனக்கு இந்த மாமா வரலயேனு கோவமா இருக்கா..?” என்றான் சிரிப்பை மறைத்தபடி
“என்னத்த பொறுமையா பேசுறது …. எனக்கு அம்மாவை ஃபேஸ் பண்ணவே பயமா இருக்கு… இதுல இந்த மாதிரி நீயும் விளையாடி, என்னை இரிட்டேட் பண்ணிக்கிட்டு இருக்க… கொஞ்சம் கூட உனக்கு சீரியஸ்னஸே இல்ல சர்வேஷ்… இப்போ உடனே எல்லாரையும் எதுக்கு இங்க அனுப்பி வைச்சிருக்க” பைரவி காச்சு மூச்சு என கத்திக்கொண்டு இருந்தாள்.
அவள் பேசுவதை எல்லாம் பொறுமையாகவே கேட்டவன், “பையூ மா… நீ ஏன்டா நர்வசா இருக்க எப்போவேனாலும் இது தெரியப்போற ஒன்னு தானே அது இப்போ தெரிஞ்சா என்ன நீ எதுக்கும் வொரி பண்ணிக்காத… வந்தவங்க அதை பாத்துப்பாங்க.. நான் அவங்களை தடுக்காம இருந்து இருப்பேன்னு நீ நினைக்கிறியா? நான் எவ்வளவு சொல்லியும் அவங்க யாரும் கேக்கலமா…. மொத்தமா கிளம்பி வத்துட்டாங்க… சரி இப்போ அதனால என்ன குறைஞ்சி போச்சி உனக்கு மனசுல என்னத் தோனுதோ அதை அங்க பேசு எனக்காக பாக்கனும்னு அவசியம் இல்லடா” என்றான் அவள் மனம் கோணாது.
நடராஜனிடமும், சுப்ராஜவிடமும் தன் மன்னிப்பை வேண்டிய விஷ்வநாதன், அடுத்த வேலையாக மனைவி சாரதாவுடன் நடராஜன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு வந்து விட்டவரை கண்டு தன் இத்தனை வசவுகளை அவனுக்கு வாரி வழங்கி இருந்தாள் பைரவி.
ஒருவித அலைப்புறுதலுடன் இருந்த மனது அவன் பேச்சில் சற்று சமாதானம் ஆனாலும், ஏனோ அன்னையை எதிர்க்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவளிடம் சுத்தமாய் இல்லை.
அவள் அமைதியாக இருக்கவும் “பையூ லைன் ல இருக்கியா நான் சொல்றது உனக்கு ஓகே தானே…. நீ போல்டா உன்னோட டெசிஷனை சொல்லு… உன்னை மீறி அங்க எதுவும் நடக்காது… அத்தையும் உன் மனசை கண்டிப்பா புரிஞ்சிக்குவாங்க” என்றான் ஆழ்ந்த குரலில் அவன் குரலே அவளுக்கு புதுவித தெம்பை கொடுத்தது.
அவனுக்கும் துளசியின் மீது சிறிது பயம் இருக்கத்தான் செய்தது… எங்கே பழசை எல்லாம் ஞாபகம் வைத்து திருமண விஷயத்தில் மறுத்து விடுவாரோ!!! என்ற எண்ணம் இருந்தும், அவளுக்காக பேசிட அவன் குரல் செய்த மாயமோ என்னவோ இதழில் தோன்றிய முறுவளுடனே,
“இப்போ தான் என் மனசு லேசா ஆன மாதிரி பீல் ஆகுது சர்வேஷ்… கொஞ்சம் எமோஷ்னால வேற இருந்தது பக்கவா இந்த ஸ்ச்சிவேஷனை ஹேண்டில் பண்ணதுக்கு தேங்க்ஸ்” என்றாள் உண்மையை மறைக்காது.
“இப்போ ஓகே தானே இல்ல மாமா இன்னும் கொஞ்ச நேரம் பேசவா ஜில்லு” என அவளை இப்போது கடுப்படிக்க
“ம் இப்போ ஓகே தான் … முறைப்பாக உரைத்தவள் போதும் போய் வேலை இருந்தா பாருங்க… இங்க என்ன வெட்டியா பேசிக்கிட்டு இருக்கிங்க?” என்றாள் அவன் பேச்சினை வெட்டுவது போல
“சொல்லுவமா செல்லுவ…. ஏன் சொல்ல மாட்ட?…” கிண்டலுடன் பேசினாலும் மனது அவள் சமாதானமாகி விட்டாள் என நிம்மதியடைய “சரிடா வைச்சிடட்டுமா” அவள் மன்னவனின் தித்திக்கும் தேன் குரலில் சொக்கி நின்றாள் அவன் தாரகை.
அவன் குரல் தந்த கதகதப்பில் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது அவள் தேகம். கண்களை மூடி தன்னை நிதானப்படித்தியவள் “சரி…” என மனதே இன்றி போனை வைத்துவிட்டு கீழே என்ன நடக்கப்போகுதோ என்ற தவிப்புடன் அமர்ந்திருந்தாள்.
….
சமையல் அறையில் யோசனையுடன் நின்றிருந்த துளசியை தன் புறம் திருப்பி “இங்க என்னப் பண்ற துளா? அங்க எல்லாம் உனக்காக வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க? நீ இங்க வந்து நின்னுக்கிட்டு இருக்க?!!” என்றார் விஜயேந்திரன் அதிர்பதியான சிறு குரலில்,
“விஷ்வநாதன் சார் மன்னிப்பு கேட்டவரை சரிதாங்க… ஆனா இந்த சம்பந்தம், கல்யாணம், இதுல்லாம் எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்ல” என்றார் முடிவாக,
“துளா” என்றார் விஜயேந்திரன் கண்டன குரலில்.
கணவரை முறைப்புடனே பார்த்திருந்தவர், “என்னங்க துளான்னு? என்னை அடக்குறிங்க? இப்போ அவரு மன்னிப்பை கேட்டுட்டாருன்னு பொண்ணை கட்டிக்கொடுக்க முடியுமா? நாளைக்கு நம்ம பொண்ணுக்கு அவங்க வீட்டுல என்ன மதிப்புங்க இருக்கும்?” என்றார் கொஞ்சம் கோபமாகவே…
“யாரும் பைரவியை தப்பாவோ கீழாவோ பாக்க மாட்டங்க துளா… அவங்க யாரு? நம்ம சொந்தம்… மனசு மாறி, நம்மளை புரிஞ்சி நம்ம சொந்தம் வேணும்னு வந்தவங்கக்கிட்ட போய் மறுபடியும் பகையை பாரட்டனுமா துளா?” என்றார் மகளின் காதல் கை கூட வேண்டுமே என்ற எண்ணத்தில்.
கூடத்திலோ ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். விஷ்வநாதன் நடந்துக் கொண்டதற்கு வந்தவுடனே சிறியவள் என்பதையும் விடுத்து பைரவியை அழைத்து தன் தவறை உணர்ந்து மன்னிப்பை வேண்டினார் விஷ்வநாதன்.
“அச்சோ… அங்கிள் நீங்க பெரியவங்க நீங்க போய் என்கிட்ட மன்னிப்பை எல்லாம் கேட்டுக்கிட்டு… நீங்க உங்களோட தவறை உணர்ந்தாலே போதும் மன்னிப்பு எல்லாம் வேண்டாம்… என் தாத்தா அதாவது உங்க மாமா செய்த செயலை நீங்க அங்கிகரிச்சிக்கிட்டு என் பாட்டியையும் உங்க குடும்பத்துல ஒருத்தரா ஏத்துக்கிட்டாலே போதும்…” என பெருந்தன்மையாகவே கூறிட அவள் முதிர்ச்சியிலும் பக்குவத்திலும் வியந்த விஷ்வநாதன்,
“உன் குணம் உன்னை கோபுரத்துல உக்கார வைச்சி அழகு பாக்குதும்மா… இன்னும் நீ பெரிய இடத்துக்கு போவ… என வாஞ்சையாக அவளது தலையை வருடி விட்டவர், நீ அன்னைக்கு சொன்ன மாதிரியே உன் வீட்டு வாசப்படி ஏறி என்னை மன்னிப்பு கேக்க வைச்சிட்ட டா… இதை கேட்க எனக்கு அருகதை இருக்கான்னு கூட தெரியல ஆனா எங்க வீட்டு மகாலட்சுமியா உன்னை கூட்டிட்டு போகனும்னு ஆசையா இருக்கு…” அவளிடம் தன் மனதை உரைத்தவர் துளசியிடமும் விஜயேந்திரனிடமும் சர்வேஷ்வரனுக்காக பைரவியை பெண் கேட்க துளசி பதிலை கூறாமல் உணவு தயாரிக்கிறேன் பேர்வழி என அடுப்படிக்குள் புகுந்து விட்டார்.
நடராஜனுக்கும் சர்வேஷ்வரனை போல் ஒரு குணமான மாப்பிள்ளை பைரவிக்கு அமைவதில் பூரண திருப்தி… அதிலும் விஷ்வநாதன் மகன் தன் பேத்திக்கு மாப்பிள்ளை என்பதில் பரம சந்தோஷம்… ஒரு கல்யாணத்தில் பிரிந்த குடும்பம் இந்த கல்யாணத்தின் மூலமாக ஒன்று சேர்ந்திடும் என்ற ஆவலுடன் இதில் தனக்கு சந்தோஷமே என மகனுக்கு கோடிட்டு காட்டியவர் ஒரு நல்ல பதிலுக்காக காத்திருக்க துளசியை காண உள்ளே சென்றார் விஜயேந்திரன்.
“விஜி ப்ளீஸ்…. இதுல ஃபோர்ஸ் பண்ணாதிங்க… சர்வேஷ் பத்தி பிரச்சனை இல்ல… ஆனா இவ்வளவு நடந்த பிறகு அந்த வீட்டுல நம்ம பொண்ணு நிம்மதியா இருப்பாளா?… அவளுக்கு இதுல இஷ்டம் இருக்காது… நீங்க என்னை ஃபோர்ஸ் பண்றா மாதிரி அவளை பிரைன் வாஷ் பண்ணி இந்த மேரேஜிக்கு அக்சப்ட் பண்ண வைச்சிடாதிங்க விஜி” என்றார் மிகுந்த வருத்தத்துடன் துளசியின் மனதில் பைரவிக்கு இந்த திருமணத்தில் சுத்தமாக விருப்பம் இருக்காது என நினைத்திருந்தார்.
இவளுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறது என்ற யோசனையுடன் நின்றவர் “துளா உன்கிட்ட இதுவரையும் நான் எதுவும் மறைச்சது இல்லை” எனக் கூறிட அவரை எரிக்கும் பார்வை பார்த்தார் துளசி.
“சரி சரி முறைக்காத… பைரவி விஷயத்தை தவிர… ஆனா இப்போ நான் சொல்றதை கேட்டு நீ கோவப்பட கூடாது” என்றார் புதிரை போல்
“அப்படி நான் கோவப்படுற மாதிரி நீங்க என்ன சொல்ல போறிங்க?” என்றார் குறுகுறு பார்வையுடன்.
“பைரவிக்கு இந்த கல்யாணத்துல பூரண சம்மதம்” என்றதும் அதிர்ச்சியாக கணவரை பார்த்தார் துளசி.
மனைவியின் கரங்களை எடுத்து தன் நெஞ்சுக்குள் வைத்துக் கொண்டவர் “இங்க பாரு துளசி, பைரவியை மிஞ்சி நமக்கு எதுவும் பெருசு இல்லை… அவளே இந்த வாழ்க்கைக்கு ஓகே சொன்ன பிறகு நாம எதுக்கு அதை அப்ஜக்ட் பண்ணனும்… சர்வேஷ், மாமா அத்தை அவங்க பேமிலி எல்லாருக்குமே பைரவின்னா அவ்வளவு இஷ்டம் அதுலயும் பைரவிக்கு சர்வேஷ் னா ரொம்ப இஷ்டம்” என்றார் மனைவிக்கு விளக்கி விடும் நோக்கில்.
“இதையும் அப்பாவும் பொண்ணும் என்கிட்ட இருந்து மறைச்சிட்டிங்க ல இன்னும் என்னென்ன எனக்கு தெரியாம நடக்குது” என முறுக்கிக்கொண்டார்…
மனைவியை தன்னை நோக்கி திருப்பியவர் சாரி துளாமா… வேணும்னு இதை செய்யல…உனக்கு பயந்து தான பையூ இதை சொல்லாம மறைச்சது… ப்ளீஸ் அவளுக்காக இதை ஒத்துக்கோடா… விஜயேந்திரன் மனைவியிடம் காதலாய் கோரிக்கை வைக்க
கணவரின் கையை தள்ளி விட்டு “போதும் அப்பாவும் பொண்ணும் சேர்ந்து எல்லாம் பண்ணிட்டு இப்போ இதுக்கு மட்டும் என்கிட்ட வாங்க… சரி இதுக்கு மேலும் நான் அப்ஜக்ட் பண்ணல… எனக்கு பைரவியோட ஃபீலிங்ஸ் தான் முக்கியம்.. அவ சந்தோஷமா இருந்தா அதுவே போதும் அங்க போன தான் அவ சந்தோஷமா இருப்பான்னா எனக்கு இந்த மேரேஜ் ஓகே தான் விஜி… முகத்தை தூக்கி வைத்து கொண்டு துளசி தன் சம்மதத்தை சொல்லவும்,
மகளின் காதலை சொன்னதும் தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் இந்த திருமணத்திற்கு சம்மதம் சொன்ன தன் மனைவியின் செல்ல கோபத்தை ரசித்த தீரன், “நீ கோவப்பட்டா கூட அழகு தான் துளா…” துளசியின் முகம் நிமிர்த்தி காதலாக சொல்ல,
கணவரின் கொஞ்சலில் வெட்கம் வர அவர் கையை தட்டி விட்டு “போங்க தீரன்… போய் வந்து இருக்கவங்க கிட்ட பேசிட்டு இருங்க…. பொண்ணுக்கே கல்யாணம் வயசாகிடுச்சி இன்னும் கொஞ்சிக்கிட்டு” அலுத்துக் கொண்டது போல பேசி அவரை அங்கிருந்து விரட்ட முயல,
“ஏய்… துளா யாரை பார்த்து வயசாகிடுச்சின்னு சொல்ற இன்னும் யெங் மேன்டி” மனைவியை காதலோடு அணைக்க வர “விளையாடாத இங்க தீரன் வெளியே எல்லாம் இருக்காங்க போங்க போய் பேசிட்டு இருக்க” துளசி இப்போது கணவரை கெஞ்சலாக பார்க்க
“சரி நீயும் வா… வந்து நீயே உன்னோட சம்மதத்தை அங்க சொல்லு” தீரன் துளசியை தன்னுடன் அழைத்திட,
சரி வாங்க போகலாம் நாம வந்து ரொம்ப நேரம் ஆகிடுச்சி” வெளியே வந்த துளசியும் விஜயேந்திரனும் இந்த திருமணத்தில் தங்களுக்கு பரிபூரண சம்மதம் எனக் கூறியவுடன் சந்தோஷத்தில் திக்கு முக்காடி போனார் சாரதா.
“சாராதம்மா அந்த தாம்பூல தட்டை கொண்டா…. என் தங்கச்சி மனசு மாறுவதுக்குள்ள தட்டை மாத்தி நிச்சயம் பண்ணிக்குவோம்…” விஷ்வநாதனின் ஒற்றை குரலுக்கு பட்டு சேலை சரசரக்க மலர்ந்த முகத்துடன் தாம்பூல தட்டை எடுத்து வந்தார் சாரதா.
மனைவியிடத்தில் தான் என்னும் அகந்தையையும், அகங்காரத்தையும், விடுத்து தன்னுள் சரிபாதியாய் உணர்ந்து அவருக்கான அங்கிகாரத்தை கொடுக்க கணவனின் மனமாற்றத்தில் முழு மனதுடன் அவரை ஏற்றுக்கொண்டார் சாரதா. இளைய மகனுக்கும் தந்தைக்கும் மட்டும் விட்ட குறை தொட்ட குறை போல, பட்
டும் படாமலும் பேசிக்கொண்டு இருந்தனர். அதற்கும் அவன் திருமண நாளில் ஒரு முடிவு வந்தது.