“தாத்தா எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க” என்று காலில் விழுந்த புதுமண தம்பதிகள் இருவரின் மேலும் அட்சதை தூவி “பதினாரும் பெற்று பெரு வாழ்வு வாழனும்” என ஆசிர்வாதம் செய்தனர் நடராஜன் தம்பதியினர்.
சர்வேஷ்வரனையும் பைரவியையும் அனைத்து நடராஜன் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, சுப்ரஜாவோ பேத்தியின் உச்சியிலும் சர்வேஷ்ரன் உச்சியிலும் முத்தம் பதித்து நா தழுதழுக்க “நல்லா இருக்கனும் யா உன்னைப் போல ஒருத்தர் என் பேத்திக்கு கிடைக்க என் பேத்தி கொடுத்து வைச்சி இருக்கனும்… நாங்களே தேடி எடுத்தாலும் கிடைக்காத சொக்க தங்கம் யா நீ… நீங்க ரெண்டு பேரும் எந்த நோய் நொடியும் இல்லாம நல்ல ஆரோக்கியத்துடன் நூறு வருஷம் நல்லா இருக்கனும்” அவனை வாழ்த்தி பாராட்டியதும்,
“சர்வேஷ் அண்ணனை மட்டும் புகழ்ந்து சொல்றிங்க… எங்க பைரவி மட்டும் என்னவாம் அவ கிடைக்க எங்க அண்ணனும் கொடுத்து வைச்சி இருக்கனும்… இப்படி அன்பா அறிவு இம்புட்டு அழகா ஒரு பொண்ணு கிடைக்க நீ என்ன தவம் செஞ்சியோ அண்ணா எங்க பைரவி உனக்கு பொண்டாட்டியா வாச்சி இருக்கு… நீ தங்கம்னு பாட்டி சொன்னாங்க எங்க பைரவி வைரம் பாத்து பதுவிசா என் நாத்தனாரை பாத்துக்க” என சொல்லும் தங்கையை கிண்டலுடன் பார்த்தவன் “இந்த வைரத்தை தங்கத்துல தானே பதிக்க முடியும் தாரணி” மனைவியை காதலுடன் தன்னுடன் அணைத்துக் கொண்டவன் விஷ்வநாதன் சாரதாவிடம் ஆசி வாங்க அவர்கள் முன் வந்தான்.
எப்போதும் முறைப்பும் திரும்புமாய் இருவரும் எதிர் எதிர் துருவங்களாக நிற்கும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். ‘என்னடா இது இவங்க விவகரம் ஒரு முடிவுக்கு வராதா’ என்று குடும்பத்தினர் பார்த்துக்கொண்டிருக்க இவர் மனசு புரியாம இவன் ஏனோ இப்படி முறைப்பு திருப்புமா இருக்கனோ’ என சாரதாவின் மனம் அடித்துக்கொண்டது…
முழுதாய் இரண்டு நிமிடங்கள் தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் சட்டென சிரித்து விட “அப்பா” என விஷ்வநாதனை இறுக்கமாக கட்டிக் கொண்டான் சர்வேஷ்வரன்.
காலையில் அன்னையை அவசரமாய் அழைத்துச் செல்லும் தந்தையை பார்த்தவன் என்னவோ ஏதோ என பின்னால் செல்ல அவர் செய்த காரியத்தில் சிரிப்புடன் திரும்ப இருந்தவனுக்கு தாய் வருத்தத்துடன் தங்களை பற்றி பேசியது கேட்க நேரிட்டது அதற்கு தந்தையின் பதிலையும் கேட்டவனுக்கு கண்கள் பனிக்க அந்த இடத்தை விட்டு உடனடியாக அகன்று விட்டவனுக்கு மனது முழவதும் சில்லென்று உணர்வு தாக்கி இருக்க அதற்கான எதிரொலி இதோ இங்கே நிகழ்ந்துக் கொண்டு இருக்கிறது.
விஷ்வநாதனுக்கும் மகனின் இந்த அணைப்பு தேவையான ஒன்றாய் இருந்தது. பிள்ளைகளிடம் அதிகாரத்தை செலுத்தியே பழக்கப்பட்டவருக்கு இந்த அன்பும் அரவணைப்பும் அவரை உணர்வுக்குவியலாய் மாற்றி இருந்தது.
அப்பாவும் மகனும் முகம் கொடுத்தாவது பேசுவார்களா என எதிர்ப்பார்த்து காத்திருந்த சாரதாவிற்கும் மற்றவர்களுக்கும் இந்த காட்சி கண்ணிற்கும் மனதிற்கும் நிறைவை கொடுத்தது எனில் சாரதாவின் கண்கள் கலங்கி உள்ளமும் நெகிழ்ந்திருந்தது.
“அப்பாடா ரெண்டு இணையா கோடுகளும் இணைஞ்சிடுச்சி..
இனி வீட்ல இந்தியா பாக்கிஸ்தான் மேட்ச் இருக்காது” சிரிப்புடன் தாரணி அரவிந்தின் காதை கடிக்க
“ஏய் கேடி எவ்வளவு எமோஷனலா ஒரு சீன் போய்ட்டு இருக்கு… அதை அப்படியே உன் கவுண்டரால காமெடி ஆக்கிடுறியே” செல்லமாய் அவள் காதை வலிக்காமல் திருகிட
“இதோ பாரு இன்ஸ்சு… பப்ளிக் பிளேசுல மேல கைய வைச்ச, ஈவ்டீஸிங் கேஸ்ல உள்ள போக வேண்டி இருக்கும்” தாரணி எச்சரித்துவிட்டு சுப்ரஜாவின் புறம் ஓடிவிட்டாள்.
அவர்களுக்கு நேர் எதிரே நின்றிருந்த ரேகா, “மாமா மாறினாலும் மாறினார் நான் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்ப்பார்க்கவே இல்லங்க… என் கண்ணே பட்டுடும் போல, வீட்டுக்கு போனதும் சுத்தி தான் போடனும்… இதை அப்படியே ஒரு போட்டோ எடுக்க சொல்லுங்க..
ரொம்ப அழகா இருக்கு” ரேகா விக்னேஷிடம் உரைக்க அந்த காட்சி புகைப்பட கலைஞரால் அழகாக பதிவாக்கப்பட்டது.
மகனை அணைத்துக்கொண்ட விஷ்வநாதன் “உன்னை பார்க்க பார்க்க பெருமையா இருக்கு சர்வேஷ்” என்றார் கண்களில் ஒரு மிளிர்வுடன்,
அவனுக்கும் தந்தையின் மாற்றங்கள் சந்தோஷத்தை தான் கொடுத்திருந்தது. இருந்தும் அவரிடம் பேச ஒரு வித தயக்கத்துடன் விலகி இருந்தான். இதோ இப்போ அவரின் மனதில் இருப்பதை முழுவதுமாக அறிந்த பின் தயக்கத்தை உடைத்தெரிந்தவன் தானே முதலடியை எடுத்து வைத்து அவரை நெருங்கி விட்டான்.
“என்னை மன்னிச்சிடுங்கப்பா உங்களை மேலும் வருத்த வேண்டாம்னு தான் நான் விலகியே இருந்தேன்… என்மேல கோவமா இருப்பிங்கன்னு நினைச்சேன்… ஆனா எந்த அப்பாவுக்கும் பெத்த பிள்ளை மேல கோவம் ரொம்ப நாள் இருக்காதுன்னு உணர்த்திட்டிங்க… உங்களை அப்பான்னு சொல்லிக்க எனக்கும் பெருமையா இருக்குப்பா” என்றவனின் வார்த்தைகளில் மகிழ்ச்சியை உணர்ந்த விஷ்வநாதன்
“ஆனா நீ எப்பவும் நிமிர்வா தான் இருக்கனும்… என்னை மெதப்பா ஒரு பார்வை பார்ப்ப பத்தியா அதுக்கு ஈடு இணையே இல்லடா.. எனக்கு என் புள்ளைன்னு கர்வமா இருக்கும்… நீ அப்படியே இரு நீ மாறத” அவன் தோளில் தட்ட விரிந்த புன்னகையுடன் அவரை பார்த்தவன் பின் பைரவியை பார்க்க அவன் பார்வையின் அர்த்ததை உணர்ந்தவள் இருவரும் ஒன்றாக விஷ்வநாதன் சாரதாவின் பாதங்களில் விழுந்து ஆசி பெற்றனர்.
சசீதரனிடமும் கமலத்திடமும் ஆசி வாங்கியவர்கள் துளசி விஜயேந்திரனிடம் வந்தனர். அம்மா என்று அழும் குரலில் துளசியை கட்டி அணைத்து கொண்டாள் பைரவி.
“அழக்கூடாது டா என் தங்கம் ல” பைரவியின் கண்களை துடைத்துவிட்ட துளசி கணவருக்கு கண்களை காட்ட “பையூ மா என்னடா இது நல்ல நாள் இப்போ போய் கண் கலங்கலாமா? நீ ஒரு ஐ ஏ எஸ் ஆபீசர் திடமா இருக்க வேண்டாமா? அப்புறம் மாப்ள நாங்க தான் உன்னை அழ வைச்சிட்டோம்னு சண்டைக்கு வந்துடப்போறாரு… இப்போவே பாரு நீ அழறதை பாத்து மாப்ளையோட முகம் எப்படி போகுதுன்னு” மகளை அணைத்தபடி சமாதானமாக பேச
மாமனாரின் பேச்சை சிரிப்புடன் பார்த்துக்ஙொண்டிருந்தவன் கடைசி வாக்கியத்தில் “அய்யோ மாமா மாட்டி விட்டுட்டிங்களே” என்ற முகபாவத்துடன் அவரை பார்த்தான்.
வெடுக்கென்று நிமிர்ந்தவள் மூக்கை உறிஞ்சியபடியே “ஐ ஏ எஸ் ஆபீசரா இருந்தா அழக்கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்காப்பா…? எனக்கு என்னமோ தெரியல இந்த நிமிஷம் அழயா வருது… நானும் திடமான பொண்ணுதான்…” தந்தையை பார்த்தவள் “நான் அழுதா, அதுக்கு அவரு உங்க கிட்ட சண்டைக்கு வந்திடுவாரா? எங்க வரச்சொல்லுங்க பாக்கலாம்” கணவனை பார்க்க “அயம் சரண்டர் மேடம்” இரு கைகளை நெஞ்சிக்கு நேராக தூக்கியபடி அவளை பார்க்க “போதும் நடிச்சது வாங்க ஆசிர்வாதம் வாங்கலாம்” கணவனுடன் பெற்றவர்களின் பாதங்களில் விழ “நீண்ட ஆயுளோட நல்லா இருக்கனும் ரெண்டு பேரும்” மனமார வாழ்த்தினர் விஜயேந்திரன் தம்பதியர்.
“அட அட எல்லாம் இங்கயே பேசி முடிஞ்சிடுவிங்க போல… இன்னும் எவ்வளோவு சடங்கு சம்பரதாயம் இருக்கு… இவங்களுக்கு அப்புறம் லவ் பண்ணவன் முத்து கூட குடும்பம் புள்ள குட்டின்னு பொறந்து மூனாவது புள்ள போற பாக்க அவன் பொண்டிட்டிய ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போயிருக்கான்… ஆனா இங்க இன்னும் பேசிக்கிட்டு இருக்கிங்களேப்பா?” கூட்டத்தில் பேசுவது போல கிண்டல் கேளியுடன் ஒரு குரல் வர எல்லோரும் யார் என திரும்பி பார்த்தானர்.
எங்கே அர்ஜூன் தான் குரலை மட்டும் கொடுத்துவிட்டு ஓடி ஒளிந்து விட்டானே… சசீதரன் அரவிந்தை போல போலீஸ் ஆக வேண்டும் என்று சிவில் சர்வீஸ் கமிஷன் தேர்வை எழுதி காத்துக்கொண்டு இருந்தவன் அக்காவின் திருமணத்தில் தன்னால் முடிந்த கலாட்டாவை செய்திருந்தான்.
தம்பி தான் பேசியது என்று அறிந்த பைரவி கணவனை சிரிப்புடன் பார்க்க “அவனே சொல்ற அளவுக்கு இருக்குடி நம்ம டக்கு” அவள் காதில் ரகசியம் பேசியவன் மின்னல் வேகத்தில் அனைத்தையும் முடித்துக்கொண்டு விஷ்வநாதனின் வீட்டிற்கு சென்றிருந்தான்.
……
கருநிற வானில் மின்னி மறையும் நட்சத்திர கூட்டத்தின் மத்தியில் வைரமாய் ஜொலித்து கொண்டிருந்த பௌர்ணமி நிலவை ரசித்தபடியே சமையல் அறையில் நின்று பாலை காய்ச்சிக் கொண்டிருந்தான் சர்வேஷ்வரன்.
ரசனையின் பிடியில் சிக்கி இருந்தவனை முத்துவிடம் இருந்து வந்த அலைபேசி அழைப்பு கவனத்தை சிதறடிக்க அதை எடுத்து பார்த்தவன், இதழில் தோன்றிய முறுவலுடனே “சொல்றா மச்சா” என்றான் உற்சாகம் நிறைந்த குரலில்..
“ஹலோ… டேய் புது மாப்ள… என்னடா பண்ற?… இப்போ நீ போனை எடுக்க மாட்டேன்னுல்ல நினைச்சிட்டு இருந்தேன்…” என முத்து சிறிது கிண்டலுடனே நகைக்க
” அப்புறம் எதுக்கு நாயே கால் பண்ண?… அவனை திட்டி விட்டாலும், “நான் என்ன பண்ண போறேன்” என்று கையில் இருந்த கரண்டியும் அடுப்பில் இருந்த பால் பாத்திரத்தையும் பார்த்தவன் குறும்பு புன்னகையுடன் “முழு குடும்பஸ்தனா மாறிட்டேன்டா பங்கு… நீ சொல்லு… குழந்தை எப்படி இருக்கு… கீர்த்தி எப்படி இருக்கா?” அவள் நலத்தை விசாரித்தான்.
புதுமண ஜோடிக்கு தனிமை தர எண்ணியவர்கள் குடும்பத்துடன் நடராஜன் தாத்தா இல்லத்திற்கு சென்று விட வீட்டில் சர்வேஷ்வரன் பைரவி மட்டுமே இருந்தனர்.
” ரொம்ப கடுப்பா பேசுறா மாதிரி இருக்கே!!!” அவனை வாரினாலும் “பெண் குழந்தை பிறந்து இருக்குடா… நார்மல் டெலிவரி தான்… கீர்த்தி நல்லா இருக்கா… எனக்கு தான் உன் கல்யாணத்தை பாக்க முடியாம போயிடுச்சி மாப்ள… ஆனா பைரவியும் நீயும் ஒன்னா சேர்ந்ததை நினைச்சி செம ஹேப்பி டா மாச்சான்” தன் மகிழ்ச்சியையும் வாழ்த்தையும் ஒன்றாக தெரிவித்தான் முத்து.
அதை சிரித்தபடி ஏற்றுக்கொண்ட சர்வேஷ்வரன் “அட்ரா சக்க…. மச்சா உனக்கு தான்டா முதல்ல வாழ்த்து சொல்லனும்…. சரி கீர்த்தி வீட்டுக்கு வந்ததும் சொல்லு நான் பைரவியோட வந்து பாக்குறேன்… பைரவி கூட கேட்டுக்கிட்டே இருந்தா பாக்கனும்னு… கீர்த்தியை கேட்டதா சொல்லுடா’ என்றான் துள்ளளான குரலில்.
“சரி மச்சான் உனக்கு நேரம் கிடைக்கும் போது வா…. இன்னைக்கு உனக்கு பஸ்ட் நைட் இதுக்கு மேல நான் உன் கிட்ட கடலை போட்டா கெட்ட வார்த்தையால கூட திட்டுவன்னு தெரியும்… சோ இப்போ போனை வைக்குறேன் ஆல் த பெஸ்ட் டா மச்சா” கிண்டலுடன் மொழிந்தவன், சர்வேஷ்வரன் மறுவார்த்தை பேசுவதற்கு முன் போனை வைத்துவிட்டான்.
“மவனே உன்னை அப்புறம் பாத்துக்குறேன் டா” வாயிற்குள் முனங்கியவன் தனக்கும் பைரவிக்கும் இரண்டு டம்பளர்களில் பாலை ஊற்றி எடுத்துக் கொண்டு தங்களது அறைக்கு சென்றான்.
அலங்கரித்த கட்டில் மெத்தை காலியாக இருக்க, எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்து லேட் டாப்பில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தாள் பைரவி. கதவு திறக்கும் ஓசை கேட்கவும் தலையை உயர்த்தி பார்த்தவள் ஒரு பத்து நிமிஷம்ங்க இதோ வந்துடுறேன்” அவனிடம் கண்களால் இறஞ்சியவள் தன் வேலையை பார்க்க துவங்கி விட்டாள்.
இதுவரை அவனிடம் வம்பு செய்து பழக்கப்பட்டவள் மணவறையில் அவன் செய்த அட்டகாசங்களை பார்த்துக்கொண்டு இருந்தவளுக்கு தனி அறையில் நடக்க போகும் நிகழ்வைக் நினைத்து வயிற்றுக்குள் ஏதோ ஒன்று உருண்டது. அதனாலேயே நேரத்தை கடத்திக்கொண்டு இருந்தாள்.
ஒரு மார்கமாக அவளை பார்த்தவன் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான். “முதல்ல சூடு ஆறதுக்கு முன்னாடி இந்த பாலை குடிச்சிட்டு வேலை பாருங்க கலெக்டர் மேடம்” அமர்த்தலாக மொழிந்து அவள் முன் பாலை நீட்டினான் சர்வேஷ்வரன்.
மேலுக்கு சிரித்தவள் பாலை வாங்கிக்கொண்டு தெங்க்ஸ் என கணவனுக்கு நன்றியை கூறி தன் வேலையை தொடர, கட்டிலின் விளிம்பில் சாய்ந்து அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் சர்வேஷ்வரன்.
கருவிழி வண்டுகள் இரண்டும் இங்கும் அங்கும் அசைந்து அவனை இம்சிக்க, கதோரத்தில் விழுந்திருந்த முடி கற்றைகள் கன்னத்தை உரசி விளையாடி அவனை அலைகழித்தது,… மதுரசமோ என மயங்கும் அளவிற்கு சிவந்த மெல்லிய ஆரஞ்சு சுளை அதரங்கள் குறுகுறுப்பை கூட்டி அவனை படாய் படுத்தி எடுக்க,… பட்டுப்போன்ற வெண்பஞ்சு விரல்கள் வேலப்டாப்பில் உறவாடிட காலம் கடத்தி அவனை பித்தாக்கியது… அவளை காண காண தெவிட்டவில்லை “எப்படியும் நீ இங்க வராமா இன்னைக்கு நான் தூங்க மாட்டேன்டி” கங்கணம் கட்டிக்கொண்டவன் அவளுக்காகவே காத்திருந்தான்.
கணவன் சற்று கண் அசந்திருப்பான் என நினைப்படி வேலையை முடித்து நிமிர்ந்த பைரவிக்கு தன்னையே வைத்த கண் வாங்கமால் பார்க்கும் சர்வேஷின் பார்வை கண்டு முகத்தில் செம்மை படர்ந்தது.
வெளியே தைரியமாக காட்டிக்கெண்டாலும், உள்ளே ஒரு குறுகுறுப்பு ஓடிக்கொண்டிருந்தது என்னவோ நிஜம்… என்னதான் ஊரையே தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆட்சியராக இருந்தாலும் அவளும் ஒரு பெண் தானே… வெட்கம் அவளை அணைப்போட்டு தடுத்து நிறுத்த, இதற்கு மேல் நேரத்தை கடத்த முடியாமல் லேட்டாப்பை அணைத்து மேசையில் வைத்தவள், மெல்ல சோபாவை விட்டு எழுந்து கட்டிலின் அருகில் வந்து நின்றாள்.
அவளின் நடையை வைத்தே பைரவியின் மனதில் இருக்கும் தயக்கத்தை கண்டுக்கொண்டவன் “என்ன கலெக்டர் மேடம் வேலையை முடிச்சிட்டிங்களா???..” என்றான் சற்று கிண்டல் தோணியிலேயே…
“ம்…” என்றவளுக்கு நாக்கு மேல் அண்ணத்தில் ஒட்டிக்கொண்டது போல சதி செய்ய, அதற்கு மேல் வார்த்தைகளை தேடிக்கொண்டு இருந்தவளின் கைகளை சட்டென பிடித்து இழுக்க அவன் அதிரடியை எதிர்ப்பார்க்காதவள், பூப்போல் வந்து மார்பில் மோதினாள், அவன் பூங்கொடியாள்.
சட்டென நடந்த நிகழ்வில், விழிகள் தெரித்துவிடும் அளவிற்கு, அவனையே படப்படக்கும் இமைகளோடு பார்க்க,
“என்ன பயமா இருக்கா?” என்றான் அவள் கன்னத்தை மென்மையாக வருடியபடியே,
“பயம்… பயம் இல்ல… அது ஒரு மாதிரி ஃபீலா இருக்கு” என்றாள் அவனை பார்க்க முடியாமல் தலையை தாழ்த்தி
“அப்போ இது நமக்குள்ள நடக்க வேண்டாமா?” என்றவனது முகம் அவளையே அளவெடுத்துக்கொண்டு இருக்க, விழிகளோ காதல் பாடம் படிக்கும் ஆசையில் மிதந்தது.
“சே… சே… நான் அப்படி சொல்லல எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல…. உங்கள எப்பவும் நான் தானே வம்பு இழுப்பேன், அப்போ எல்லாம் நீங்க விலகி போகுறது எனக்கு ரொம்ப காமெடியா இருக்கும்…. அதுக்காவே உங்க கிட்ட வம்பு பண்ண நினைப்பேன்…. ஆனா இப்போ நீங்க நெருங்கி வந்து, வம்பு பண்ணும் போது எனக்கு என்னமோ ஒரு மாதிரி வயித்துக்குள்ள ஏதேதோ பறக்கறா மாதிரி கூசுது” என்றாள் அங்கம் சிலிர்த்து.
மெல்ல சிரித்து அவள் இதழ்களை அவன் விரல் கொண்டு வருடியவன் “அந்த ஃபீல் உனக்கு பிடிச்சி இருக்கா ஜில்லு?” என்றான் இதழ் தேன்குடிக்கும் ஆசையில், அவன் குரலே தாபம் கலந்து ஒலித்தது.
“ம்…’ என வெட்கத்துடன் தலை குனிய, அவள் நாடியை நிமிர்த்தி தன் கூர் விழிகளோடு அவள் கெண்டை விழிகளை கலக்க விட்டு, தன் தடித்த அதரங்களை சிவந்த அவள் பட்டுப் போன்ற இதழ்களுடன் பொருத்தி காதல் பாடத்தில் முதல் அத்தியாத்தை தொடங்கினான் சர்வேஷ்வரன்.
வேகத்தோடு அவன் தேடுதலை இதழில் இருந்து தொடங்க, நொடிகள் நிமிடங்களாக நிமிடங்கள் மாற அவள் மூச்சிற்கு ஏங்குவாளே என்ற ஒரே காரணத்தை மனதில் வைத்து விருப்பமே இன்றி இதழ்களை விடுவித்தவன் “செம டேஸ்டு ஜில்லு என்ன ஸ்வீட் சாப்பிட்ட” கிரக்கிய குரலில் கேட்க,.
மேல் முச்சு கீழ்மூச்சு வாங்க அவனை விளையாட்டாக முறைத்தவளின் கன்னத்தில் கன்னம் வைத்து இழைத்தவன், “இப்போ பயம் போயிடுச்சா ஜில்லு” என்றான் மயக்கிய மதுரசத்தை குடித்த வண்டாக,
அவன் சீண்டலில் சிவந்தாலும் “டேய் நீயெல்லாம் எவ்வளவு சாப்ட்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன் தெரியுமா ஒரு முத்தத்தை கூட இவ்வளவு ஹார்டா கொடுப்பேன்னு நான் நெனைக்கலடா” அவனை தலையணை கொண்டு மொத்தியவளின் கரங்களை பிடித்து முத்தமிட்டவன்.
“அடியேய் சக்கரை கட்டி” அவள் இடைவளைத்து தன்னுடன் இறுக்கியவன் “மாமா எவ்வளவு ஏங்கி போயிருக்கேன்னு உனக்கு காட்ட வேண்டாமா? என்னமோ என்னை புதுசா பாக்குறா மாதிரி இவ்வளவு வெக்கப்படுற?… 7வருச கனவுடி இது இதோ இப்போ நீ என்னோடஇந்த அறையில இருக்க” அவளை விடாமல் இறுக்கிக்கொண்டான். அவன் இறுக்கமே கூறியது அவனின் உள்ளத்தின் உணர்வுகளை,
அவனை அணைத்தபடியே தன் கரங்களை கொண்டு அவன் முதுகை நீவியவள் “ப்ளீஸ் ரிலாக்ஸ் மாமா… இப்போ நம்ம ஒன்னா ஒரே அறையில இருக்கோம் அதுவும் யாரையும் நோகடிக்காம… எல்லோரோட ஆசிர்வாதத்தோட, நம்ம கல்யாணம் நடந்து இருக்கு… அதை நினைச்சி சந்தோஷப்படுங்க ப்ளீஸ் மாமா… என்றவள் குரலும் ஒரு வித நெகிழ்ச்சியாகத்தான் இருந்தது.
“நான் இது நடக்குமா?… நடக்காதான்னு எவ்வளவு ஏங்கி இருக்கேன் தெரியுமா ஜில்லு… உன் கூட வாழ முடியாம போயிடுமோன்னு அவ்வளவூ தவிச்சி இருக்கேன் டி… இப்போ என் கூட, என் சொந்தமா, என்னோட உரிமையா, எனக்கானவளா நீ இருக்க…” உணர்வு குவியலாக கூறியவன் அவள் கன்னம் முகம் உதடு கண்கள் என ஒரு இடம் விடாமல் முத்த மழையில் நனைத்து அவளை கொண்டாட.
“டேய் மாமா… இவ்வளவு ஆசைய வைச்சிக்கிட்டு எப்படி நாலு வருசம் என்னை பாக்கமா பேசமா இருந்த…” செல்ல கோபத்துடன் அவன் மார்பில் சாயந்த நொடி, அவள் உச்சியில் இதழ் பதித்தபடியே “எல்லாம் என் பொண்டாட்டியோட கனவு நிறைவேற தான்…” என்றதும் அவனை ஆச்சர்யமாக பார்த்தாள் பைரவி.
“என்ன பொண்டாட்டி அப்படி பாக்குற?” அவள் கையெடுத்து அதில் தன் விரல்களை கோர்த்துக் கொண்டவன் “நான் பேசி உன்னோட மைன்ட் டிஸ்டர்ப் ஆக கூடாதுன்னு தான் தள்ளியே இருந்தேன் ஜில்லு… ஆனா தள்ளி இருந்த ஒவ்வொரு நிமிஷமும் உன்னை மட்டுமே நினைச்சிட்டு இருந்தேன் …” என்றான் கண்களை சிமிட்டி
அவளுக்கு இவன் ஏன் தன்னை பார்க்கவில்லை என கோபம் இருந்தது அதை வாய்விட்டு கேட்க முடியாமல் மனதிலேயே அமிழ்த்தி வைத்திருக்க, இப்போது அவன் வாயாலேயே அந்த காரணத்தை அறிய கன்னியவளின் கண்களில் கண்ணீர் உற்பத்தியாகியது.
“ஜில்லு மா ஏண்டா அழகுற மாமா உன்னை ஹர்ட் பண்ணிட்டேனா?” அவளை விலக்க இல்லை என தலையசைத்து அவனை விட்டு விலக மறுத்து, அவனோடு இறுக்கியவள்,
“சாரி மாமா உன் மேல செம கோவத்துல இருந்தேன்… இப்போ அப்படியே வானத்துல பறக்கற மாதிரி இருக்கு… உன்னை ரொம்ப பிடிக்குது டா… நான் ரொம்ப லக்கி அதான் நீ எனக்கு கிடைச்சி இருக்க…. இதுவரை இந்த வார்த்தையை சொல்லாம உன்னை ரொம்ப சுத்தல்ல விட்டு இருக்கேன்… அதுக்கெல்லாம் சாரி மாமா…. ஐ லவ்யூ மாமா…” அவன் இதழில் முத்தமிட்டு அவனை அணைத்து கொண்டாள்.
அவள் இதழ் அணைப்பை ஆசையுடன் வாங்கிக் கொண்டவனோ “இந்த ஒன்னுல மட்டும் உன்னை விட நான்தான் லக்கி ஜில்லு… நான் காதலிச்ச தேவதையே எனக்கு வரமா கிடைச்சி இருக்காளே” விரல்கள் அவள் இடையில் வீணை மீட்ட சுகமாய் அவனுள் புதைந்தாள் பாவை.
பைரவி ஆரம்பித்து வைத்ததை தனதாக்கி கொ
ண்டவன், அவளுடன் இல்லறம் என்னும் நல்லறத்தை ஆரம்பிக்க, காதலின் சங்கீதம் இனிய சுவரங்களாக மாறி இசை மீட்டிக்கொண்டிருந்தது…