மாலை நான்கு மணியாகிருந்தது. கல்லூரியை விட்டு வெளியேறிய ஷக்தி பஸ் ஸ்டாப்பை நோக்கி தன் நடையை தொடங்கிருக்க, அவள் வேகத்தை குறைத்த.. ‘டிங்’எனும் போனின் ஒலியில் பைக்குள் இருந்த போனை எடுத்துப் பார்த்தாள்.
வாட்சப்பில் அவள் நண்பி ரேஷ்மா யூடியூப் லிங்க் ஒன்றை குறுஞ்செய்தியாக அனுப்பிருந்தாள்.
அதை திறந்து பார்க்காதே எனும் மூளையின் முன்னறிவிப்பை முடக்கிப்போட்டு விட்டு கை நடுங்க திறந்து பார்த்தவளிடம் அலுப்பு குடிகொண்டது..
அவள் எலிமினேஷன் செய்யப்பட்ட போது அழுத காணொளி அது!
“ப்ச்ச்!!இன்னும் எத்தனை நாளைக்கு டா இதை போட்டு என்னை டார்ச்சர் பண்ணப் போறீங்க?”வாய்விட்டு புலம்பியவள்,மீண்டும் மூளை எச்சரித்ததையும் பொருட்படுத்தாது அந்த வீடியோவின் கீழ இருந்த கமென்ட்களை படிக்கத் தொடங்கினாள்!
“ஷக்தி ஹெஸ் சூப்பர் வாய்ஸ்” (Shakti has super voice) என ஆரம்பித்தது முதல் கமென்ட்! அவளிதழில் கீறலான புன்னை.
“பெஸ்ட் விஷேஸ் ஷக்தி, யூ ஹேவ்வ குட் வாய்ஸ்! யூ ஹேவ்வ குட் சிங்கிங் கேரியர்.. ஆல்சோ ட்ரை ஆக்டிங் சினிமா”கீறல் இப்போது கோடாக மாறியது.
“நாட் ஒன்லி கேமரா அண்ட் மைக்,பட் ஆல்சோ வீ ஹோல் ஃபேன்ஸ் லைக் அண்ட் லவ் யூ ஷக்தி!”ஏ.ஆர்.ஆரின் கமென்ட் போலவே கமெண்டிருந்தனர். அதில் முழுதாக புன்னகைத்தாள் இவள்.
“ஷக்தியை எலிமினேட் செஞ்சது அன்ஃபேர்!”என்ற அடுத்த கமெண்டில் புன்னகை வடிந்து விட கண்கள் கலங்க பார்த்தது.
“ஷி இஸ் அன்வேர்த்தி ஆஃப் திஸ் ஷோ!”(அவள் இந்த நிகழ்ச்சிக்கு தகுதியற்றவள்)
“இவ்வளவு நாளும் இவ இந்த ஷோல இருந்ததே பெருசு!சும்மா அந்த பாவமான மூஞ்சை வெச்சு பொழைச்சிட்டிருந்தா!”
“ஷக்தி இஸ் ஓவர் ஆக்டிங் அண்ட் ஓவர் ரேட்டட்!”
எதிர்மறையான கருத்துக்களை ஒவ்வென்றாக படித்துக் கொண்டிருந்தவள், ஒரு கட்டத்திற்கு மேல் படிக்க முடியாமல் போக போனை அணைத்து விட்டு, பஸ் ஸ்டாப்பில் போடப்பட்டிருந்த இருக்கையில் அயர்ச்சியுடன் அமர்ந்து கொண்டாள்.
சூப்பர் சிங்கர் டாப்டென்க்கான எலிமினேஷன் சுற்றுக்கள், ஷக்தி எலிமினேஷன் செய்யபட்டு இரு வாரங்கள் கழிந்த நிலையில் டீவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டது. அதன் புரோமோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய முதலே ஷக்தியின் பெயர் பேசும் பொருளாகியது.
கார்த்திக் சொன்னது போல் அதிகமாக ஷக்தி அழுதபடி இருந்த புரோமோக்களே நிறைய வியூவ்ஸ்ஸை பெற்றிருந்தது. இதனால் ஸ்டார் சேனலின் டீஆர்பி எகிறியது என்னவோ உண்மை தான்!அதிலும் இவளோடு சேர்ந்து ஒரு பெண் போட்டியாளரும், ஷக்திக்கு அடுத்த படியாக அதிகமாக ரசிகர்கள் கொண்ட ஶ்ரீதரும் என மொத்தமாக மூன்று பேர் எலிமினேட் செய்யப்பட்டிருந்தனர்.
ஷக்தியும்,ஶ்ரீயும் எலிமினேட் செய்யப்பட்டதை அவர்கள் ரசிகர்கள் மறுத்து கண்டனம் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் அவர்கள் இருவருக்கும் ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு கொண்டிருக்க,அதற்கு எதிர் மறையான கருத்துக்களும் பரவியவாறு இருந்தன.
இதனால் ஷக்தி அதிகமாவே மன அழுத்தத்துக்கு உள்ளானாள்.என்ன தான் அவளுக்கு ஆதரவு தெரிவித்து பலர் கருத்துக்களை வெளியிட்டாலும், எதிர் மறையான கருத்துக்கள் தான் அதிகம் பாதிப்பைக் கொடுத்தது.
இவள் இப்போது தான் இசை இளங்கலையில் இரண்டாவது வருடம் படித்துக் கொண்டிருப்பதால், கல்லூரி வேலைகளும் அவளை இழுத்துக் கொள்ள முற்றாகவே சோர்ந்து போனாள் அவள்.
“உன் கிட்டயோ, உன் மேலயோ தப்பு இல்லாத பட்சத்துல நீ உன்னை வேற யார்க் கிட்டையும் ப்ரூஃப் பண்ண வேண்டிய அவசியம் இல்ல ஷக்தி!”
“உன்னை சுத்தி ஆயிரம் பாஸிட்டிவ் இருக்கும் போது,ஒரு நெகடிவ் உன்னை உடைக்கிறதை நீ எப்டி அனுமதிக்கலாம் ஷக்தி?”
“உன்னைத் தவிர உன்னை பத்தி யாருக்கு அதிகம் தெரிஞ்சிருக்க போகுது ஷக்தி?!”
“இந்த வாழ்க்கைல யாரை திருப்தி படுத்திட முடியும்? ஒருத்தரை திருப்தி படுத்தி நீ நல்லவன்னு பெயர் எடுக்கறன்றது இங்க ரொம்பக் கஷ்டமானது!கடைசி வரையும் ஒருத்தரை பத்தி ஒருத்தர் குற்றம் குறை சொல்லிகிட்டே தான் இருப்பாங்க! ஏன்னா.. மனிதனே அப்படி தான்! அவனை திருத்தவும் முடியாது! திருப்தி படுத்தவும் முடியாது!சோ, ஜஸ்ட் கோ வித் த ஃப்ளோ!அண்ட் லெட் கோ!”
ஒரு நாள் இவிபியில் வைத்து கார்த்திக் அவளுக்காக அவளுடனே சண்டையிட்டு பேசிய வார்த்தைகள் தான் இவை.
எப்போதும் போல இப்போதும் அவை செவிவழி நுழைந்து ஆறுதல் தர நீண்ட மூச்சை இழுத்து.. ஆசுவாசமாக வெளிவிட்டுக் கொண்டாள்.
இருவருமே எதிர்ப்பார்க்காத ஒன்று,இந்த இரண்டு வாரங்களில் அவளுக்கு உற்ற தோழனாய் ஆகிருந்தான் கார்த்திக்!எப்போதும் அமைதியாக இருப்பவன் அவளுடன் மட்டும் அதிகமாக பேசினான்.ஆறுதல் செய்தான்!அவள் அழுத்தத்தை குறைத்தான்!
பார்வதி,மதி,சஞ்சய் என மூவரும் ஷக்தியை துவல விடாமல் பார்த்துக் கொண்டாலும்..ஏற்கனவே சஞ்சயாலும், மனோகராலும் கனமாகிருந்த வீட்டை தானும் கனப்படுத்த விரும்பாமல் தன் மனப் பாரங்களை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டாள் ஷக்தி. அப்படியான நேரத்தில் தான் அவளின் நண்பனானான் கார்த்திக்.
மனதார “தேங்க்ஸ் கார்த்திக்” என முணுமுனுத்தவளின் முன் நின்றிருந்தான் அவள் எண்ணத்துக்குறியவன்.
அமர்ந்தபடி குனிந்திருந்தவளின் முன் ஷூ அணிந்த நீண்ட கால்கள் தென்பட, நிமிர்ந்து பார்த்தவள் திகைத்தாள்.முழுவதும் கருப்பு நிற ஃபார்மல் உடை அணிந்து கண்கள் சிரிக்க அவளைப் பார்த்தவாறு நின்றிருந்தான் கார்த்திக்.
“கா..கார்த்திக்?!”கண்கள் விரிய திக்கியவளை பார்த்து என்ன என்பது போல் புருவம் உயர்த்தினான்.
“நீங்க எங்க இங்க?”
“அதை நான் தான் கேக்கனும் ஷக்தி?நீ இங்க என்ன செய்ற?அப்படி என்ன யோசனை?ரெண்டு நிமிஷமா உன் முன்னாடி தான் நிக்கறேன்?நான் வந்து நின்னது கூட உனக்கு தெரியல? ஹ்ம்ம்?”என்றான் அதட்டலுடன்.
“அ..அது..அது..காலேஜ் விட்டு பஸ் ஸ்டாப்க்கு வந்தேன்?நீங்க என்ன அதட்டி எல்லாம் பேசறீங்க? என முறைத்தவளிடம் தானும் முறைத்து,
“பஸ் போயாச்சு!”என்றான் அமர்த்தலான குரலில்.
“அச்சச்சோ…விட்டுட்டேனா!!” என்று தலையில் இருகைகளையும் வைத்தாள்.
அவள் செய்கையில் சிரித்தவன், ஹ்க்கும்..என குரலை செருமி, உள்ளெழுந்த தயக்கத்தை மறைத்த படி,
“நான் வேணா ட்ராப் செய்யட்டுமா?”என கேட்டான்.
அதில் அவள் பெரிய கண்கள் மேலும் பெரிதாகி வெளிப்படையாக திகைப்பை காட்டியது.
முன்பை விட இப்போது அவளிடம் பேசினான் தான்.ஆனால் அதிலும் ஒரு எல்லை,ஒரு விலகல் இருக்கும்.ஏனோ இவளும் அவனிடம் மட்டுமே ஆறுதல் தேட அவனும் ஆதரவாய் நின்றான்!அவள் அழுதால் ஆறுதல் செய்திருக்கிறான்! துவலும் நேரங்களில் தோள் கொடுக்கும்!(?) தோழனாய் இருந்தான்!அவர்கள் உறவுக்கு வேறொரு பெயர் கொடுக்க விரும்பாமல் நட்பு எனும் வட்டத்தை போட்டு அதனுள்ளேயே இருந்து கொண்டனர் இருவரும்!
இப்படி ஒரு கேள்வி அவனிடம் இருந்து இதுவரையிலும் எழுந்ததில்லை!இது புதிது! அவளுக்கும்!அவனுக்கும் கூட!
திகைப்பிலிருந்து வெளிவந்தவள்,இல்லை என தலையசைத்தாள்.
“அடுத்த பஸ் வர்ற வரை உன் கூட நிக்கவா?”என அவன் அடுத்த கேள்வி எழுப்ப,
அவனை பார்ப்பதை தவிர்த்து எங்கோ பார்த்தபடி இல்லை என மீண்டும் தலையசைத்தாள்.
அவளின் ரியாக்ஷனில் இன்ஸ்டன்ட்டாக ஒட்டிக் கொண்ட முறுவலை கண்களில் பிரதிபலித்தபடி பிடரியை சொரிந்தவன்,
“அப்போ கிளம்பறேன் ஷக்தி”என்றான்.
இப்போதும் தலையை திருப்பாது,அவனை ஓரப்பார்வை பார்த்து சரி என்றபடி மண்டையை டிங் டிங் என ஆட்டினாள்!
புரியாத அவள் செய்கையில் புருவம் சுருக்கி,”என்ன நீ திடீர்னு விசித்திரமா நடந்துக்கற?”என கேட்டவனை அதே பொசிஷனில் பார்த்து,
“உங்களை யாரும் பார்த்துட்டா ப்ராப்ளம் ஆகிடாதா கார்த்திக்? அப்பறம் மீடியா, ப்ரஸ்ன்னு உங்க பேரு வந்துடும்!” என்றவள் சுற்றி முற்றி யாராவது தங்களை பார்க்கிறார்களா என கண்களால் அலசினாள்.
அவள் பதட்டத்துடன் திருதிருவென கண்களை உருட்டுவதும்..ஒரு இடத்தில் நிற்காமல் இருகைகளாலும் பையை இறுக்கிப் பிடித்தவாறு அங்கும் இங்கும் அசைந்து.. அவன் பின்னால் எட்டிப் பார்ப்பதும் என இருக்க,
அதில்,”தக்குடு!” என அவளை பார்த்து மென்மையாக முணுமுணுத்துக் கொண்டவன்,
“ஹா ஹா ஹா!!”எனப் பெரிதாக சிரித்தான்.
ஆடுவதை நிறுத்தி விட்டு அவன் எதற்காக சிரிக்கிறான் என புரியாமல் பார்த்த ஷக்திக்கு அவன் வாய்விட்டு சிரிக்கும் சிரிப்பு ஆச்சரியத்தை கொடுத்தது!அவன் இப்படியெல்லாம் சிரித்து அவள் தான் இதுவரையிலும் கண்டதில்லையே?
“ஆஹ்?!! ஏ மூக்குக்கு மேல!”என அவளும் கோவமாக நொடித்துக் கொண்டாள்.
“ச்சு!!அப்டியா?நான் உன் பொடனியில இருக்குன்னு இல்லையே நினைச்சேன்” என்று குறும்புடன் கூறியவனை, கண்சிமிட்டாமல் பார்த்து வைத்தாள் அவள்.
இது இவன் இயல்பு இல்லையே?இல்லை இது தான் இவன் இயல்பா?இத்தனை இளகுவாக பேசுபவனா?இல்லை தன்னிடம் மட்டுமே இந்த இயல்பும் இளகுதலுமா? எனும் வியப்பான கேள்விகள் அவளிடம்.
அவன் முகத்தில் கண்கள் மட்டுமே தெரிய..”அட ஆமால்ல?!!”என அசடுவழிந்தாள்.கையிலே வைத்திருக்கும் பொருளை மூலை முடுக்கெல்லாம் தேடுபவர் போல் தான்.. அவன் முகத்தை பாதி மறைத்தபடி இருந்த மாஸ்கை மறந்திருந்தாள் அவள்.
மாஸ்கை சரியாகும் படி இழுத்து விட்டவன்,
“நீ பயப்படற அளவுக்கு நான் பிரபலமான ஆள் இல்ல ஷக்தி!சாதாரண கீபோர்ட் பிளேயர்!சோ,நீ பதட்டப்படாதே!”என்றான்.
“சும்மா பிரபலம் இல்லன்னெல்லாம் பொய் சொல்லாதீங்க கார்த்திக்! இன்னைக்கு மாஸ்க் போடவும் தப்பிச்சுட்டீங்க!அப்படி சொல்றவர் ஒரு தடவை மாஸ்கை கழட்டிட்டு நில்லுங்க பார்ப்போம்?!”என்றாள் கேலியாக.
“ரிஸ்க் வேண்டாம் பா.”என பயந்தவன்..யோசித்து விட்டு,”அப்போ எப்டி நான் தான் வந்து நிக்கிறேன்னு கரெக்டா சொன்ன நீ?”
‘அந்த கண்ணை மட்டுமே அதிகமா பார்க்கறதனாலயோ என்னவோ!’அவனுக்கு கேட்காதபடி முணுமுணுத்தவள்,
“ப்ச்ச்!!எங்கூட பேசுறவங்களை எப்டியும் எனக்கு அடையாளம் தெரிஞ்சிடும்!அவங்க மாறு வேசத்துல இருந்தாலும் கூட!”என மழுப்பினாள்.
அது சரி என்பது போல் ஒரு தலையசைப்பை கொடுத்தவன், “லேட் ஆயிடுச்சே ஷக்தி,பஸ் வந்துருமா?”எனக் கேட்க,
“வந்துரும் கார்த்திக்!நீங்க கிளம்புங்க”என்றாள்.
அவனும் அவளிடம் விடை பெற்று சாலையில் அந்தப் பக்கம் இருந்த தன் கார் நோக்கி சென்றான்.
போகும் அவனையே பார்த்தபடி இருந்தவளின் புறம்.. தன் நடையை நிறுத்தி,நான்கடி தூரத்தில் இருந்தவாறு அவளை திரும்பி பார்த்தான் அவன்.
தலையாட்டி சிரிக்கும் அவன் மேனரிசத்துடன், நெற்றிக்கும் மாஸ்கிற்க்கும் இடைவெளியில் தெரிந்த அவன் கண்களும் புன்னகைக்க, நெற்றியை தேய்த்துக் கொண்டவன் அவளிடம் எதையோ கூற விழைந்தான்.
மாஸ்க்கின் கீழ் நுனியில் இரு விரல்கள் கொண்டு அதை பிடித்திழுத்து,மற்றை கரத்தை பேண்ட் பாக்கெட்டினுள் நுழைத்து விட்டுக் கொண்டவன்,அவள் கண்களை நோக்கி விட்டு,
“அன்னைக்கு கேட்டல்ல ஷக்தி? ‘நீங்க என்கிட்ட மட்டும் தானா இப்படி அதிகமா பேசுவீங்கன்னு!’,அப்போ மட்டுமில்ல,அதோட சேர்த்து மூனு வாட்டி கேட்ட,ப்ச்ச்!தெரியலை ஷக்தி..உன்கிட்ட மட்டும் தான் இப்படி பேச வருது! ஏன்னு கேட்டுடாத என்கிட்ட அதுக்கு பதிலில்லை!” என்றவனை அவள் விழி விரிய பார்த்திருக்க,ஆழ்ந்த பார்வையுடன் அங்கிருந்து சென்றிருந்தான்.
அவனை அடுத்த இரண்டு நாட்களில் சந்திக்கும் வரை அவள் மண்டைக்குள் ஓடியது என்னவோ இந்த ஒரு கேள்வி தான்!!!