“கார்த்திக் நில்லு!இன்னைக்கு நானும் உன்னோட வரேன்!”என்று கார்த்திக்கை அழைத்தபடி வீட்டை விட்டு வெளியேறியவனின் பின்னே வந்தான் அரவிந்த்.
“டேய் கார்த்தி!அவரே கூட கொண்டுபோகறது!”(அவரை கூட்டிட்டு போகாதே)என்று ஓட்டமும் நடையுமாக முன்னால் வந்து தடுத்தாள் சத்யா.
கார்த்திக்கிற்கு இருவரையும் பார்த்து சிரிப்பு வந்தது. காலையிலே கணவன் மனைவி இரண்டு பேருக்குமிடையில் மோதல் என்று புரிந்து விட்டது அவனுக்கு.சத்யா முறைத்தபடி அரவிந்தை பார்த்திருக்க, அவனோ சிரிப்புடன் சற்று மேடிடத் தொடங்கிய நான்கு மாத கருவை சுமந்து கொண்டுள்ள மனைவியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.
சரண்டர் என்பது இரண்டு கைகளையும் மேல தூக்கியவன், “அக்கா இனிமே ஐஸ்கிரீம் சாப்பிடும் போது மாமவையும் கூப்டு சாப்பிடு..அவருக்கு நீ கொடுக்காம சாப்பிடறன்னது தான் வருத்தம்!” கீழுதட்டை கடித்து..சிரிப்பை அடக்கியவாரு சொன்னவனை பார்த்து சத்யா”ஹா ஹா!”வென சிரிக்க,
“டேய்!”என பொங்கினான் அரவிந்த்.
“விஷமிக்கேன்டே மாமா!அவ அளவா சாப்பிடுவா”என அவனை சமாதானம் செய்தவன்,
“நீ கள்ளம் பரயுகயானென்னு எனிக்கரியாம் சத்யா!சாப்பிட ஆசையா இருந்தா கொஞ்சமா சாப்பிடு!” மென்மையாக கூற அவள் முகம் சுருங்கியது.
“இன்னைக்கு ராத்திரி பீட்சா என் ட்ரீட்டு!”முறுவலுடன் அவன் சொல்ல முகம் மின்ன தம்பியைப் பார்த்தாள் அவள்.
“ஆனா ரெண்டு பீஸ் தான் சாப்பிடனும்!” என மிரட்டிய கணவனுக்கு சரி என நல்ல பிள்ளையாய் தலையாட்டிவளிடம், சிரித்தபடி விடை பெற்றனர் இருவரும்.
மாறா புன்னகையுடன் கார்த்திக் காரோட்டிக் கொண்டு வர,யோசனை சூழ்ந்த முகத்தோடு பக்கத்தில் அமர்ந்திருந்தான் அரவிந்த்.
வழமைக்கு மாறாக அமைதியாக வரும் அரவிந்தை திரும்பி பார்த்தவன்,
“என்ன மாமா?என்னாச்சு?சத்யா பத்தி யோசிக்கரீங்களா!” என கேட்க,
அதற்கு இல்லை என்று தலையசைத்தவன்,தன்னிடம் எதுவோ சொல்ல தயங்கியவாரு இருப்பது புரிந்தது கார்த்திக்கிற்கு.
“சேனல்ல எதுவும் பிராப்ளமா மாமா?”என்றவனை, பார்த்தவன் ஆழ்ந்து மூச்சொன்றை வெளியிட்டு,
“சேனல் பிளஸ் பெர்சனல் பிராப்ளம்ஸ்னு கூட வெச்சுக்கலாம் கார்த்திக்!ஆனால் எங்க சேனல் ரூல்ஸ் படி நான் இதை உன்கிட்ட சொல்ல கூடாது..அதுவும் இப்போ நான் தான் ச,ரி,க,ம,பா மியூசிக் ஷோ-ஓட இக்ஸேகிடிவ் ப்ரோடியூசர்!” (executive producer) என பீடிகை போட,புரியாது நோக்கினான் அவன்.
இருவருமே ஒரே துறையில் இருப்பதால்.. இது வரையிலும் தங்களது தொழில் சம்பந்தமாக பொதுவாக பேசிக் கொண்டாலும், அவரவர் சேனலுக்கு நம்பிக்கையானவர்களாவே இருந்திருக்கின்றனர்.பிராஃபஷன் வேறு பெர்சனல் வேறு என்பதால் ஒன்றுக்கொன்று போட்டியான சேனலில் வேலை செய்தாலும்.. எதிரியாகவோ, சேனலில் நடைபெறும் அரசியல் சதிகள், வன்மங்களையோ வீடு வரை கொண்டு வந்ததில்லை.
“கொஞ்ச மாசத்துக்கு முன்ன, உன்னை பத்தி நியூஸ் வந்து யூடியூப் எல்லாம் வைரல் ஆனதே?நீ கமிட்டட் அப்டின்னு?”
“ம்ம்!”என்றவனின் கை கார் ஸ்டீயரிங்கை இறுக்கியது.
அதனைக் கவனித்தவன், “டேய்!இப்போ தானே சொன்னேன்.. கோபப்படாதேன்னு..!” என சலித்துக் கொள்ள,
ஓரளவு என்ன நடந்திருக்கும் என விடயத்தை யூகித்துக் கொண்டவன்,”உங்க சேனல் ஆளுங்களா இப்படி போடச் சொன்னது?”என சரியாக பாய்ண்டை பிடித்தவன் குரல் இறுகிக் கிடந்தது.
“ம்ம்!”
“இந்த விசயம் எப்போ உங்களுக்குத் தெரியும்!”
“டேய்!!டேய்!!ஏன்டா இவளோ கோபம்!வண்டியை மெதுவா ஓட்டுடா!கோபத்துல கண் மண் தெரியாம எங்காவது முட்டிக்கப் போற!” கார்த்திக்கின் கோபத்தில், வேகமெடுத்து காரை நிறுத்தும் முயற்சியில் அரவிந்த் கத்த,
வண்டியை நிதானித்தவன், “சொல்லுங்க மாமா எப்போ உங்களுக்கு இது பத்தி தெரியும்?”
“அந்த நியூஸ் அவுட்டான ரெண்டாவது நாளே!”
“அப்போ ஏன் சொல்லல மாமா?”என்று ஆதங்கம் அடைந்தவன்,பின் சலித்த படி,
“ப்ப்ச்ச்!இந்த கேள்வியே அபத்தம்ல?நீங்க கரெக்ட்டாத் தான் இருந்திருக்கீங்க உங்க சேனலுக்கு!”என்றான்.
“டேய்!!!”
“இத்தனை மாசம் கழிச்சு சொல்ல அவசியம் என்ன மாமா?”அவன் இறுகிய குரலையும்,முகத்தையும் கண்டு இவன் முகம் பீதியை காட்டியது.
“கார்த்திக்..ரிலேக்ஸ்!எனக்கு இந்த விசயம் தெரிஞ்சு கோபம் வந்தது தான்!அந்த கி.. நியூசை சேனல்லருந்து யூடியூபர்ட்ட கொடுத்தவனை அடி வெளுக்கனும்னு இருந்திச்சு டா!ஆனா நான் இதுல இன்வோல்வான..உன் மேல சந்தேகிச்சு போட்ட நியூஸ் உண்மையாகிடும்.அதனாலே தான் கண்டுக்காம விட்டேன்!இவங்க கட்டுக் கதை கட்டறாங்க! அப்படி யாரும் உன்னோட க்ளோஸ் ஆன பொண்ணில்லன்னு விட்டுட்டேன். ஆனா இப்போ விட முடியல..அதுவும் ஷக்!”என்றவன் தன் பேச்சை நிறுத்தியிருந்தான்.
“அவங்களுமே இந்த நியூஸை சும்மா ஒரு கெஸ்ஸிங்ல தான் போட்டுருக்காங்க!ஆனா அதுக்கப்பறம் உன்னை வாட்ச் பண்ணிருக்காங்கன்னு நினைக்கிறேன்!உனக்கும் ஷக்திக்கும்..,என அரவிந்த் சொல்லிக் கொண்டு போக அவன் பேச்சில் இடை வெட்டி,
“மாமா!!!”என கோபத்தில் இரைந்தவன் காரை ஒரு ஓரத்தில் நிறுத்தியிருந்தான்.
“டேய்!!டேய்!தண்ணிய குடிடா..இதான் நான் சொல்ல வேணாம்னு இருந்தேன்!” தண்ணீர் போத்தலை எடுத்துக் கொடுத்தவன் மேலும் தொடர்ந்தான்.
“அந்த பொண்ணு ஷக்தி,என்ன அவங்க சேட்டன் மாதிரி இருக்கேன்னு சொன்னா..சின்ன பொண்ணு!அவ எதிர்காலமும் இதுல பாதிக்கப்படும்! அதனால தான் என்னால சொல்லாம இருக்க முடியல!நேத்து தான்… கார்த்திக்,ஷக்தின்ற கேர்ள் கண்டஸ்டன்டோட ரொம்ப க்ளோஸா இருக்கான்ன மாதிரி பேசிக்கிட்டதை கேட்டேன்!”
பேச்சை மாற்றி,”கார்த்திக் நீ ஷக்தியை விரும்பறியா?” என்று வினவ,
கண்களை இறுக்கி மூடி, ஸ்டியரிங்கை மேலும் அழுந்த பற்றியவன்..இல்லை என்று தலையசைத்தான்.எதையோ கஷ்டப்பட்டு விழுங்குவது போல் அவன் தொண்டைகுழி ஏறி இறங்கியது.
“ஹ்ம்ம்!அப்போ இனி அந்த பொண்ணுகிட்ட இருந்து தள்ளியே இரு கார்த்திக்!”என்றவனுக்கு வெற்றுப் பார்வை வீசியவனின் கண்கள் இயலாமையையும் வெளிப்படுத்தியதோ?!
“எதையும் யோசிக்காதே கார்த்திக்!இதை பத்தி எதுவும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதே.!நீ ஓவர் ரியாக்ட் பண்ணன்னா தான்.. இது கண்டினியுவாகும்!என்ன நம்பு நான் பார்த்துக்கறேன்!”என்ற அரவிந்த்,கார்த்திக்கை தன் சீட்டில் உட்காரச் சொன்னவன்,காரை இயக்கினான்.
இவிபியை அடையும் வரை கண்கள் மூடி,தாடை இறுகி,இதழில் இருக்கும் குறுஞ்சிரிப்பு மறைய.. என்றுமில்லாத தோற்றத்துடன் இருந்தவனை ஆதூரமாக நோக்கினான் அரவிந்த்.
கோபத்தில் அவனிடமும் சொல்லாமல் காரில் இருந்து இறங்கியவன், விறுவிறுவென சூப்பர் சிங்கர் ஷோ ஆட்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த பகுதிக்குள் நுழைய,அவனுக்கான அறையின் வாயிலின் முன் நின்று கொண்டிருந்தாள் ஷக்தி.
கார்த்திக்கை அவள் கண்டு கொள்ள,புன்னகையுடன் “கார்த்திக்!” என அழைத்தாள்.
ஷக்தியை பார்க்காது,அவள் அழைப்பை அலட்சிய படுத்தியபடி அறையினுள் நுழைந்து கொண்டான்.
அவன் முக பாவனை புரியாது பின்னால் சென்றவள்,
“ஹாய் கார்த்திக்!எப்டி இருக்கீங்க…?இன்னைக்கு எனக்கு வயில்ட் கார்க் ரவுண்ட்!சோ விஷ் மீ..”
“இனாஃப் ஷக்தி!”என்றான் முகம் முழுக்க கோபத்துடன்.
“கா..கார்த்திக்?!”அவள் பெரிய விழிகள் திடுக்கிட்டு விரிய.. வெளிப்படையாக நடுங்கியவளை பார்த்து, தன் செயல் புரிய கோபத்தை கட்டுப்படுத்த முயற்சித்து அதில் தோற்று,
“இனிமே எங்கூட பேசாத ஷக்தி!என்னைத் தேடி வராதே!என் பின்னால அலையாதே! இட் இஸ் இரிட்டேட்டிங் மீ”என்றான்.
“…..”கலங்கத் தொடங்கிய அவள் கண்கள் மேலும் கோபத்தை அதிகப்படுத்த,
“நான் எதுக்கு உனக்கு விஷ் செய்யனும்?நீ என் க்ளோஸ் ஃப்ரெண்டா?இல்ல சொந்தமா?என்ன?ஒன்னுமே இல்ல?நீ எனக்கு ஒன்னுமே இல்ல?நத்திங்!”என்றான்.தனக்கே சொல்லிக் கொண்டான் போலும்!
அவன் பேச்சிலும்,அதனுடன் வெளிப்பட்ட கோபத்திலும்.. கலங்கத் தொடங்கிய கண்கள் முழுதாக கண்ணீரால் நிறைந்து.. அக் கண்ணீர் மெல்ல அவள் கன்னங்கள் நனைத்தது.
வலது கை பேண்ட் பாக்கட்டினுள் இருக்க இடது கையால் கண்களை மூடியபடி தலையை குனிந்திருந்தவன், அவள் அமைதியில் மெல்ல அவளை நிமிர்ந்து நோக்கினான்.
அதுக்காகவே காத்துக் கொண்டிருந்தவள் போல் ஒரு முறை அவன் கண்களை சந்தித்தவள், கண்ணீர் தடம் அழியும் படி வலது கன்னத்தை அழுந்து துடைத்து விட்டு,இடது பக்க கன்னத்தை நனைத்த கண்ணீரை பொருட்படுத்தாது,
குரல் நடுங்க.. “சாரி.. கா..கார்த்திக்!”என்றவள் அவ்வறையை விட்டு வெளியேறினாள்.
அவளால் அடித்த சாற்றப்பட்ட கதவையே வெறித்திருந்தான் கார்த்திக்.அரவிந்தன் பேசியது மட்டுமே மண்டைக்குள் ஓட தலையை பற்றிக் கொண்டு அமர்ந்து விட்டான்.
அவனை பற்றி சமூக வலைத்தளங்களில் கிசு கிசுக்கப்பட்ட அந்த ஒரு மாதமும் அவன் அடைந்த மன உளைச்சல்கள்,அவனிடம் தொடுக்கப்பட்ட கேள்விகள்…பெற்றோர்,உறவினர்கள் மட்டுமன்றி நிகழ்ச்சியில் கூட அவன் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசியது..அதனால் ஏற்பட்ட மன அழுத்தம்!
அது மட்டுமா?! ஷக்திக்காக பயந்தது..என்ன தான் அவளிடம் அன்று ஆறுதல் கூறினாலும் ஒரு வேளை அவளுடன் பேசியதை தான் யாராவது நேரில் பார்த்து இந்த செய்தி வெளிவந்ததோ என தவித்தது!தூக்கம் தொலைத்தது! வெறும் இரண்டே தடவைகள் பார்த்த பெண்ணிற்கு தன்னால் கெட்ட பெயர் வந்து விடக்கூடுமோ? அவன் மனம் அவனையே குற்ற சாட்டியது!அதிலிருந்து வெளிவரவே அவனுக்கு நாட்கள் எடுத்தன!
கண்களை மூடி அமர்ந்திருந்த கதிரையின் பின்னால் தலைசாய்த்திருந்தவனுக்கு, யோசித்ததில் வின்வின்னென தலை வலித்தது.
“கே.கே!”என அழைத்தபடி அங்கு வந்தான் ரமேஷ்.
கண்விழித்து பார்த்தவனிடம், “உடம்பு சரியில்லையா கே.கே? ஷோக்கு இன்னும் ஹாஃப் அண்ட் ஹவர் தான் இருக்கு!”என்றான்.
“ஷோ முடிஞ்சப்பறம் உன்ட்ட பேசனும் ரமேஷ்!ஃப்ரீயா நீ?” என கேட்க,
ஆம் என்று தலையசைத்தவன், கார்த்திக்கிற்கு காபி வாங்கி கொடுத்துவிட்டு கிளம்பினான்.
காபியை அருந்தி விட்டு தலைவலியை விரட்டிய பின்பு தான்.. ஷக்தியிடம் யார் மேலோ இருந்த கோபத்தை காட்டியது புரிந்தது!
‘ப்ச்ச்!கார்த்திக்..!என்ன செஞ்சு வெச்சிருக்க!சின்ன பையன் மாதிரி அவள ப்ளேம் பண்ணிருக்க?அவ மட்டும் காரணமில்லையே!நீயும் தானே?!நீயா தான் ஷக்தியை நெருங்கின!நீ அவளை நெருங்கிருக்காட்டி இவ்வளவு பெரிய சிக்கல் வந்திருக்காது!’என தன் மேலயே பழியை போட்டுக் கொண்டவன்,
“ச்சே!!”என தன் தலையில் தட்டிக் கொண்டான்.
‘அவகிட்ட மன்னிப்பு கேட்டுடு கார்த்திக்!’ என்ற குரலை ஒதுக்கி வைக்க முடியாமல் திண்டாடியவன் அறையோடு ஒட்டி இருந்த ரெஸ்ட்ரூம் சென்று முகத்தை அடித்து கழுவி விட்டு செட்டுக்குள் நுழைந்தான்.
நிகழ்ச்சி ஆரம்பமாக சரியாக பத்து நிமிடங்கள் இருந்தன.தன் இடத்தில் போய் அமர்ந்து கொண்ட கார்த்திக்கின் கண்கள் அவளைத் தேடி அலைந்து, பின் கண்டு கொண்டன.
மேக்கப்பில் அழுத முகம் மறைக்கப்பட்டிருந்தாலும்,மென் சோகத்தை ஏந்தி இருந்த அவள் கண்கள் கார்த்திக்கை உலுக்கியது.
“கொஞ்ச நேரத்துக்கு முன்ன அந்த கண் நெறைய புன்னகையை வெச்சிட்டு.. எவ்வளவு ஹேப்பியா விஷ் கேட்டு வந்தா!மூஞ்சில அடிச்ச மாதிரி பேசி நீயே அவளை வருத்தப்பட வெச்சுட்ட! வயில்ட் கார்ட் ரவுண்ட் அதுவுமா!! செல்ஃபிஸ் டா கார்த்திக் நீ!”மனசாட்சி மானாவாரியாக கேட்க, அவளை பார்ப்பதை தவிர்த்து கீபோர்டில் கவனத்தை பதித்தான்.
கார்த்திக் தன்னை சற்று நேரம் பார்த்ததை ஷக்தி அறிந்திருந்தாலும்.. அவன் திசையில் அலைபாயும் கண்களுக்கு தடை விதித்து ஸ்டேஜ் பக்கம் விழிகளை பதித்தவளுக்கு மனம் அவனோடான பேச்சுக்களையே நினைவு படுத்தியது.
அன்று இவிபியில் வயில்ட் கார்ட் சுற்றுக்கான பயிற்சி முடிந்து.. அவர்கள் செட்டை விட்டு சற்று தள்ளியிருந்த மரத்தில் கீழ் போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தாள் ஷக்தி.மூன்று நாட்களுக்கு முன் ஒளிபரப்பப்பட்ட டாப் டென் சுற்றுக்காக,அவளுக்கு குமியும் நேர்எதிர் மறை விமர்சனங்களை பார்த்திருந்தவள் சோர்ந்திருந்தாள்.இந்த நிகழ்ச்சியினால் கிடைக்கும் அனுபவங்களையும், அது தரும் பெயர் புகழை மட்டுமன்றி எதிர்மறை விமர்சனங்களை கையாளத் தெரியாமல் திண்டாடினாள்..
அவள் வீடும் சஞ்சயின் வரவால் கனத்துப் போயிருக்க அது ஒரு பக்கம் மனதை அழுத்தியது. இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் தந்தையுடன் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளாத தாயை நினைத்து பெருமூச்சுக் கிளம்பியது.
“சரியான பிடிவாதம் இந்த அம்மாவுக்கு!”என முனகிக் கொண்டவளின் முன் நின்றிருந்தான் கார்த்திக்.
நிழலாட நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் அவனை பார்த்து ஒளிர்ந்தது..
அவனை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தவளின் முகம் கவலையை காட்ட,
“என்னாச்சு ஷக்தி?உன் முகமே சரி இல்ல ஸ்ட்ரெஸ்டா இருக்கியா?”என வினவினான்.
தலையை குனிந்து,பின் மேல் கண்ணால் அவனை நோக்கி விட்டு ஆம் என்றவாறு தலையசைத்தவள், “ஒன்னு சொல்லட்டுமா கார்த்திக்!இதை எப்டி ஹேண்டில் செய்றதுன்னே எனக்கு தெரியல! ஒரு நேரம் கிடைக்கற நல்ல கமெண்ட்ஸ்,புகழை பார்த்து என்னை அறியாமலேயே ஒரு பெருமை மனசுல உண்டாகிடுது! என்னை விட இங்க யாரு பெஸ்டா பாடிருவாங்கன்னு கர்வம் வந்துடுது!”என்று மீண்டும் அவன் முகம் பார்த்தவள்,
“அரகண்ட் (arrogant) மாதிரி பேசறேன்ல?”என பாவமாக கேட்க,
மறுத்து தலையாட்டி புன்னகைத்தான் அவள் பாவனையில்.
“ஹ்ம்ம்!அதே மாதிரி ஒரு நெகடிவ் கமென்ட் வந்தா போதும்!அப்படியே உடைஞ்சிடுறேன் கார்த்திக்!ஒரு வேளை அவங்க சொல்ற மாதிரி திறமை இல்லாதவளோன்னு யோசிக்கிறேன்!என் கான்பிடன்ஸ் லெவல் மொத்தமா டவுன் ஆகிடுது!”என்றவளின் பக்கத்தில் நான்கடிகள் இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டான் கார்த்திக்.
“ஷக்தி!இங்கே எதுவுமே நிரந்தரம் இல்லாதப்போ எதார்த்தமா இருக்கிறது ஒன்றும் தப்பில்லை! அரகண்டோ, திமிர் பிடிச்சவளோ இல்ல,திறமை இல்லாதவளோ! உன்னைத் தவிர உன்னை பத்தி யாருக்கு அதிகம் தெரிஞ்சிருக்க போகுது ஷக்தி?!”
“…..”
“உனக்கொன்னு தெரியுமா ஷக்தி?இங்க ஆயிரம் பாஸிட்டிவ் கருத்தை விட ஒரு நெகடிவ்க்கு அதிக வலிமை இருக்கு! அதனாலேயே சில பேரை இலகுவாக உடைச்சிடுது!புகழும் போது ஏத்துக்கற மனசும்,மூளையும் அதே இகழும் போதோ இல்ல அவங்களுக்கு எதிரான விமர்சனங்களை வைக்கும் போதோ அதை ஏத்துக்கிட்டு கடந்து போக முயற்சிக்கிறதில்லை!அப்போ மனிசங்களான நம்ம அதுக்கு பக்குவப்படலையான்னு கேட்டா.. ஹ்ம்ம்! மூளை அதை கடந்து போக நினைச்சாலும் இந்த மனசு விடறதில்லை! ‘ஒரு வேளை அவங்க சொன்ன மாதிரி இருக்குமோ!நான் அப்படித் தானோன்னு’ இன்ஃப்ரீயாரிட்டியை உருவாக்கிடும்!கொஞ்ச பேர் இப்படியானதை கடந்தாலும் இங்க அதிகாமனவங்க அதை நினைச்சே மருகறவங்க தான் இருக்காங்க!ஏன் நானுமே அப்படி தான்!”என்று விட்டு சிரித்தவன்,
“உன் கிட்டயோ, உன் மேலயோ தப்பு இல்லாத பட்சத்துல நீ உன்னை வேற யார்க் கிட்டையும் ப்ரூஃப் பண்ண வேண்டிய அவசியம் இல்ல ஷக்தி! அதுமட்டுமில்ல ஷக்தி, வெற்றி,தோல்வியோ..இல்ல பாசிடிவான கருத்தோ, நெகடிவான கருத்தோ உன்னை விட்டு இதை ஒரே தூரத்துல வெச்சுக்கோ! ரெண்டையுமே ஒரே மாதிரி பாரு!பிராப்ளம் சால்வ்ட்!”
எவ்வளவு அழகாக சொல்லிவிட்டான்.அவன் சொன்னதெல்லாம் உண்மை தானே!இன்று புகழ்ந்து பேசுபவர்கள் இதே வேறொரு சந்தர்ப்பத்தில் இகழ்ந்து பேச வாய்ப்பிருக்கும் பட்சத்தில் நேர்,எதிர்மறை கருத்துக்களை மண்டைக்குள் ஏற்றி நாம் ஏன் மர்கயா ஆக வேண்டும்!
எப்போதும் போல இப்போதும் மாறாத வியப்பு அவன் மேல் அவளுக்கு!
“என்ன அப்படி பார்க்கற?”என கேட்டவனை பார்த்து பெரிதாக புன்னகைத்தவள்,
“என்கிட்ட மட்டும் தானா இப்படி அதிகமா பேசுவீங்க கார்த்திக்?”என வினவ..பின்ன என்ன?ஆஃப் ஆகி விட்டான் அவன்.(இங்க ஒரு சில வசனங்கள் வைக்கல!காரணம் போன அத்தியாத்திலே ஒரு இடத்தில் கார்த்திக் இவளுக்காவே சண்டையிட்டு பேசிய வார்த்தைகள் என்று சொல்லியிருப்பேன்!அது இதோடு வரும் உரையாடலே)
“ஒஹ்!”என மட்டும் சொல்லிக் கொண்டவள் பார்வை இப்போது அவனிடத்தில்!
“அன்னைக்கும் நல்லா தான் பேசினான்!ரெண்டு நாளைக்கு முன்னாடியும்..’உன்கிட்ட மட்டும் தான் இப்படி பேச வருது ஷக்தி. ஏன்னு கேட்டுடாதே.அதுக்கு என்கிட்ட பதில்லைன்னு’டயாலாக் எல்லாம் விட்டுட்டு.. இன்னைக்கு என்னடான்னா பல்லு வெளக்காதே பேய் மாதிரி பேசி வைக்கறான்!கடுவன் பூனை!”என்று சிடுசிடுத்தவள் பாடத் தயாரானாள்.