செம்பரபாக்கத்திலுள்ள இ.வி.பி பிலிம் சிட்டி வளாகத்திற்குள் நுழைந்தது அவர்களின் நீல நிற மாருதி அல்டோ கார்.தன் பக்கத்தில் அமர்ந்திருந்தவாறு கார் ஜன்னலின் வழியே.. வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தன் தாயின் பற்றிய கையை விடவில்லை அவள்.
“மா..!இந்த ஷோல செலக்ட் ஆகிருவேனா மா?”என்று கேட்டபடி பயத்தில் சில்லிட்டு போயிருந்த இடது கையாலும் தாயின் வலது கையை பற்றிக் கொண்டாள்.
ஆடிஷனுக்கு அப்ளை செய்ததிலிருந்து கேட்கும் அதே கேள்வி தான். இடைப்பட்ட நாட்களில் இந்த கேள்வியை மறந்திருந்தவள்,இந்த மூன்று நாட்களாக விடாமல் கேட்கிறாள்.
தாயை நச்சரிக்கிறாள். இருந்தும் கேட்காமல் இருக்க முடியவில்லை.
பொண்ணுங்கன்னா அப்பா செல்லம்! பசங்கன்னா அம்மா செல்லம்னு சொல்றதெல்லாம்.. அவங்கவங்களுக்குன்னு ஒரு பிரச்சனை வரும் போது தான் பொய்யாகுதோ..?!அந்த மாதிரி நேரத்துல பொண்ணுங்களுக்கோ, பசங்களுக்கோ அம்மா மட்டும் தான் கண்ணுக்கு தெரிவாங்க போல?! அப்பாவெல்லாம் டீல்ல விட்டுடுவாங்கல்ல?!
அப்பான்ற ஜீவன் என்ன தான் குடும்பத் தலைவர்னாலும், பசங்க பொலம்பல்னு வரும் போது அம்மாவ தான் அக்கக்கா பிரிச்சி மேஞ்சிடுவாங்க..!அவங்களுக்கு தீர்வு கிடைக்குதோ இல்லையோ.. தன்னை குடைஞ்ச மேட்டரை அம்மா கிட்ட கொட்டிட்டோம்ன ஒரு நிம்மதி! அந்த வகைல ஷக்தியும்,உங்களை போல என்னை போல ஒரு கேட்டகரில சேர்ந்த பொண்ணு தானோ..?
“ஷக்தி..!இதுல செலக்ட் ஆகலன்னா உனக்கு டேலண்ட் இல்லைன்னு ஆகிருமா என்ன??முதல்ல ரிலாக்ஸா இரு!”என்ற பார்வதி அவள் கைகளை தட்டிக் கொடுத்தார்.
இவர்கள் இருவரின் சம்பாசனையை கார் ஓட்டியபடி ரிவர் வியுவ் கண்ணாடி வழியாக புன் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் ஷக்தியின் தந்தை மனோகரன்.
கணவரைப் பார்த்து,”ஏங்க!நீங்க இவளுக்கு ஏதாவது ஆறுதலா சொல்லுங்களேன்!” என மெதுவாக கூறினார் பார்வதி.
எப்போதும் அவருக்கு மனோகரிடம் பயம் கலந்த மரியாதை தான். ஏனோ தெரியவில்லை திருமண முடித்த காலத்தில் இருந்தே அப்படி தான். பிள்ளைகளும் அப்படி தான்..
ஆனால் ஷக்தி தான் இடைக்கிடை வம்பிழுப்பாள். அதுவும் தந்தைக்கு தெரியாமல் தான். அவருக்கு தெரிந்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார் மனோகர்.சிறு சிரிப்புடன் கடந்து விடுவார்.
“ம்ம்..!நல்லா செய்துடுவே ஷக்தி!கவலைப்படாதே!” என்றவர் அங்கு இருந்த பாதையில் கவனத்தை செலுத்தினார்.
“இதை சொல்றதுக்கு சொல்லாமலே இருந்திருக்கலாம் உன் புருஷர்”அம்மாவிடம் நக்கலுடன் கிசுகிசுத்தாள் ஷக்தி.
பார்வதிக்கு,ஷக்தி சொன்னதே தோன்றினாலும் வழமை போல் கணவனுக்கு சப்போர்ட் செய்தார் அவர்.
“அவருக்கு அவ்வளவு தாண்டி வரும்! நீ சும்மா என் புருஷனை கிண்டல் செய்யாத”
“விட்டுக் கொடுக்கமாட்டியே நீ?”
“என்ன இருந்தாலும் என் புருஷன் இல்லையா..?” சிரித்தார் பார்வதி.
“கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் அப்படியாமா?”
“அப்படியே தான்!”
“மீ??! நீ நிஜமா அரேன்ஜ்டு மெரேஜா?”தாயை பார்த்து கேட்டாள் அவள்.
தந்தை மீது தாய் வைத்துள்ள நேசத்தை பார்த்து எப்போதும் எழும் கேள்வி தான். எப்போதுமே இவளும் கேட்பாள்..அவர் பதிலும் சிரிப்புடன் ஆமா என்பது தான்.
“கண்ணு வைக்காதே டி!”என்ற பார்வதிக்கு வெட்கம் கலந்த புன்னகை முகத்தில் ஒட்டிக் கொண்டது.
“ஐயையோ!!! நல்ல சான்ஸை நான் மிஸ் செய்துட்டேனே!அதுக்கு தான் என்னை சத்தமா கூப்பிட்டியா?கமல் சார்னு சொல்லிருக்க வேண்டியது தானே?”என அவர் பாட்டிற்கு சத்தமாக புலம்ப,
அப்போது தான் தன் கணவரும் அங்கிருப்பது நினைவிற்கு வர அசடு வழிந்தபடி மகளை நோக்கினார் பார்வதி.அவரைப் பார்த்து வாயை பொத்தியவாரு சிரித்துக் கொண்டிருந்த மகளை முடிந்த மட்டும் முறைத்தவருக்கு கமல் காசனைக் காணாததில் ஏக வருத்தம் தான்.
பார்வதி,கமல் காசனின் தீவிரவாத ரசிகை.சின்ன வயதிலிருந்தே அவர் மேல் கிரேஸ் இவருக்கு.அவர் படங்கள் என்றால் கொள்ளை பிரியம்.பார்வதியின் கமல் மேல் உள்ள கிரேஸ் பற்றி அவர்கள் குடும்பத்திற்கே தெரியும்.அதில் மனோகரும் உள்ளடக்கம்.
இ.வி.பிக்குள் நுழைந்து.. பிக் பாஸ் செட்டை கடந்து சென்று கொண்டிருக்கும் போது தான் காரில் இருந்து இறங்கி கேரவனை நோக்கி சென்று கொண்டிருந்த கமலை கண்டு கொண்டாள் ஷக்தி.இது வரையில் திரைப்படத்தில் அவரை பார்த்தவளுக்கு நேரில் பார்த்ததும் ஆச்சரியம் கலந்த ஒரு வித பரவச உணர்வு.. தன்னை விட தாயிற்கு தான் அவரை அதிகம் பிடிக்கும் என தெரிந்தவள் நடிகர் கமல் காசனை பார்த்ததை பார்த்து ஒரு ஆர்வத்தில் சத்தம் போட்டு கத்தியிருந்தாள். ஆனால் பார்வதி திரும்புவதற்குள் அவரை கடந்து சென்றிருந்தனர் இவர்கள்.
“ச்சே..!இப்படி மிஸ் செய்துட்டேனே..!எப்படி இருந்தார் டி ஷக்தி..?உங்கப்பாவும் பார்த்திருப்பார் அவரை.ஆனா எனக்கு பிடிக்கும்,நான் பார்த்திட கூடாதுன்னே என்கிட்ட சொல்லாம இருந்திருப்பார்..!ஐயோ…!மிஸ் செய்துட்டேனே! கமல் சாரை பார்த்திருந்தா, அந்த பக்கத்து வீட்டு பத்மா கிட்ட பந்தா காட்டிருப்பேனே!” புலம்பலை நிறுத்தவில்லை பார்வதி.
மெதுவாக தான் புலம்பினார் என்றாலும் அங்கிருந்த இருவருக்குமே அவர் புலம்பல் கேட்டது. தாயின் புலம்பலை கேட்டு ஷக்தி வாயை பொத்திக் கொண்டு வர பார்த்த சிரிப்பை அடக்கி,உடல் குலுங்க காரில் சாய்ந்தபடி சிரித்துக் கொண்டாலும்.. மனோகருக்குமே பார்வதியின் சேட்டையில் வர பார்த்த சிரிப்பை விழுங்கி,அவரை போலியாக கண்ணாடி வழியாக முறைத்துக் கொண்டிருந்தார். அதிலும் தான் வேண்டுமென்றே கமலை பற்றி சொல்லாமல் இருந்ததாக புலம்பியதில் இப்போது மெய்யாகவே அவரை முறைக்க தொடங்கினார்.
“நான் ஒன்னும் அப்படி சொல்லல!”என சிறு பிள்ளையாக முகம் தூக்கினார் பார்வதி.
அவர் செயலில் சிரித்துக் கொண்டனர் தந்தையும், மகவும்.
“நீ எப்போதிலருந்து உங்கப்பா கட்சிக்கு மாறுன..?”பட்டென ஷக்தியின் கையில் அடி போட்டபடி கேட்டார் பார்வதி.
“ம்மா..!நான் உன் கட்சி தான் மா!”அவர் தாடை பிடித்து கொஞ்சி கொண்டவளிடம்,
“உன்னை நம்ப முடியாது டி!”என முறுக்கிக் கொண்டார் அவர்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்க காரை நிறுத்தி இருந்தார் மனோகரன்.அதில் இடம் வந்து விட்டதை உணர்ந்து பெண்கள் இருவரும் மனோவை நோக்க,
“நீங்க பத்திரமா முன்னாடி போங்க!நான் காரை பார்க் செய்துட்டு வரேன்!”என்றார்.
“ம்ம்..சரிங்க!”என்ற பார்வதி மகளோடு இறங்கி கொள்ள அங்கு உயர்ந்து நின்ற செட்டை அண்ணாந்து நோக்கினாள் ஷக்தி.
சூப்பர் சிங்கர் ரியாலிட்டி ஷோ நடைபெறும் செட் அது. ஷக்தியின் கனவுகளில் ஒன்று தான் ஸ்டார் தொலைக்காட்சியில் நடைபெறும் இந்த பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுமென்பது.
அதை நிறைவேற்றும் முதல் படியாக தான் ஆடிசனுக்கு தேர்வாகி இருந்தாள் அவள்.
கடந்த இரண்டு வருடம் இதற்கு முயன்று இப்போது தான் அதற்கு வாய்ப்பு அமைந்திருக்க,அவளை போலவே இன்னும் பல பேர் நண்பர்கள் மற்றும் பெற்றோருடன் அங்கு வந்திருந்தனர்.
கண்களை மூடி ஆழ்ந்து மூச்சை இழுத்துக் விட்டு கடவுளை வேண்டிக் கொண்டவள்,கண்களை திறந்த படி பார்வதியைத் தேடினாள்.
கண்களை அலைய விட்டு அங்கு வந்திருந்தவர்களை பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.
“ம்மா..!என்ன பார்க்கற நீ..?வா உள்ள போகலாம்!”என பார்வதி கையை இழுத்து கொண்டு அவசரமாக அவள் நகர,
“அவங்க போயிட்டாங்க மா!தனியா போக பயமா வேற இருக்கே!அப்பா வரட்டும்..நம்ம அது வரை வெய்ட் செய்யலாம்”என சோகமாக நின்று கொண்டாள் ஷக்தி. முதல் நாள் என்பதாலோ பயமும், பதற்றமும் அதிகமாவே இருந்தது அவளிடம்.
“லேட் ஆகுதுன்னு சொன்னல்ல, யார் கிட்டையாவது கேட்டுப் போகலாம் ஷக்தி!”என்றவர் பின்னால் திரும்பி யாராவது வருகிறார்களா என பார்க்க, கருப்பு ஷர்ட் அணிந்து முழுக்கையை முட்டி வரை மடித்து விட்டபடி அவர்களை நோக்கி வேக நடையுடன் வந்து கொண்டிருந்தான் அவன்.