மணி பதினோன்றை கடந்திருக்க தூக்கம் வராது பால்கனியில் நின்று கொண்டிருந்தான் கார்த்திக்கேயன்.
மனது,மூளை என அத்தனையும் அவள் ஒருத்தி கொட்டி விட்டுச் சென்ற காதலையே மீண்டும் மீண்டும் ரீவைண்ட் செய்து கொண்டிருக்க எங்கிருந்து தூக்கம் வருவது?
பௌர்ணமி அலை கடலாய் அவன் மனம் தழும்பிக் கொண்டிருக்க அதை அமைதிப்படுத்த எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாயின.
தான் அதிகமாய் விரும்பும், அமைதியைக் கொடுக்கும் கீ போர்டுடன் கூட போராடி விட்டான். ராகம் எல்லாம் எங்கோ ஒளிந்து கொள்ள, எண்ணமெல்லாம் அவன் காதல் ராகம் தான்!
“ஷக்தி!ஷக்தி!ஷக்தி!”என சொல்லிக் கொண்டவன்,
“ப்ராந்தனாயிட்டடா கார்த்திக்”என பின்னங்கழுத்தை தேய்த்த படி புன்னகைத்தான்.
பால்கனியுடன் ஒட்டியிருந்த அவன் மியூசிக் அறைக்குள் நுழைந்து கொண்டவன் கீபோர்டின் முன் உட்கார்ந்து கொண்டான்.
அதை ஒட்டி இருந்த மேசையின் மேல் லாப்டாப்பின் பக்கத்தில் ஷக்தி கொடுத்த காதல் பரிசு அவனைப் பார்த்து பல்லிளித்தது.
அவள் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றிருந்த பாட்டில் இப்போது முழுதாக தண்ணீரால் நிரப்பப்பட்டிருந்தது.
தன் சிறு பிள்ளைத் தனமான செயலில் அசடுவழிய இதழ் பிரித்துக் கொண்டவன்,
“என்னை என்ன செஞ்சு வெச்சிருக்க ஷக்தி!!”என்றவன் ஒற்றைக் கரம் முகத்தை மூடி இருக்க, மற்றய கரத்தின் விரல்கள் கீபோர்டுடன் உறவாடி அவனுக்கு பிடித்தமான இசையை மீட்டியது.பாடலைத் தவிர்த்து எதையோ முணுமுணுத்துக் கொண்டது அவனதரங்கள்.
***********
சஞ்சய் தங்கயை ஈவிபி வளாகத்திக்குள் இறக்கி விட,
“ஏண்ணா இன்னைக்கே கிளம்பறே? இன்னும் ரெண்டு நாள் இருந்தா என்ன?”எனக் கேட்டு முகத்தை சுருக்கினாள் ஷக்தி.
“சரிண்ணா பை”என விடை பெற்றவள் செட்டை நோக்கி உள்ளே நடக்க அவள் எதிரில் கார்த்திக்.
அவனைக் கண்டதும் மறைந்திருந்த கோபம் முளைக்க ஒரு நொடி முறைத்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டு கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல,இங்கே இவன் உதடுகளில் குறுஞ்சிரிப்பு. என்னவோ முணு முணுத்துக் கொண்டான்.
இன்னும் மூன்று நாட்களில் கோவையில் சூப்பர் சிங்கரின் இந்த சீசன் ஆட்களின் பாடல் நிகழ்ச்சி (இவெண்ட்) இருக்க, அதை குறித்து தெரிவிக்கவே சீசன் 8 இன் ஆட்களை அழைத்திருந்தனர்.
இடைப்பட்ட நாட்களில் அதற்கான பயிற்சியும் நடைபெறும் என்றனர். கோவை செல்வதற்கான பிளைட் டிக்கெட் தொடக்கம், தங்கும் இடம் வரை அனைத்தும் சேனலின் செலவு.
ஒரு நாள் நிகழ்ச்சி, அடுத்த நாள் மீண்டும் சென்னை வந்தடைந்த பிறகு, மலேசியாவின் நடக்கப் போகும் ஏ.ஆர் ரஹ்மானின் கான்சர்ட். அதற்கு ஷக்தியையும் தெரிவு செய்திருந்தனர்.
கோவை நிகழ்ச்சிக்கான பயிற்சிகள் நடைபெற அவ்விடம் வந்தாள் ஆங்கர் பிரியங்கா.
ஷக்தியையும் அவளோடு இன்னும் இருவரையும் தனியே அழைத்தவள்,
“பிரியாணி என்ன பிரியாணி போடற பாயையே வாங்கித் தரேன்” பலாஜி சொல்ல,
“டேய் டேய்!”என்றாள் பதறியவளாய் ப்ரியா.இவர்கள் அலப்பறையில் மற்றவர்களுக்கு அப்படி ஒரு சிரிப்பு.
“தேங்க்ஸ் அக்கா!”ஷக்தி மனம் நிறைய அவள் கரம் பற்ற,
“கேட்டுக்கோங்க. நான் ஒன்னுமே செய்யல இதுல. உங்க திறமைக்கு கிடைச்சது. அதுவுமில்லாம இனி நீங்க போய் தான் அவங்களுக்கு ப்ரோபோசல் செய்யனும்” என்றாள் புன்னகையுடன். ஒப்புதலாய் தலையசைத்துக் கொண்டனர்.
“பை கைஸ்! பிராக்டீஸ் பாருங்க. பிரியாணி முக்கியம்”என்றபடி அவர்களிடம் விடைபெற்ற பிரியங்கா,அங்கிருந்த அனு, ஶ்ரீதரைப் பார்த்து அவர்களிடமும் எதுவோ கூறி விட்டுச் செல்ல அவர்களும் மகிழ்ச்சியில் குதித்துக் கொண்டிருந்தனர்.
வீட்டுக்கு வந்த ஷக்தி பெற்றவர்களிடம் விடயத்தை பகிர்ந்து கொண்டாள்.கோவை இவண்ட் முடித்து அடுத்த வாரத்தில் மலேசிய செல்லவிருப்பதை சொல்ல பார்வதிக்கு தாயாய் பயம் இருந்தாலும் மனோகர் ஆதரவாய் இருந்தார்.
மலேசியா செல்ல இருக்கும் இடைப்பட்ட ஒரு வாரத்தில் ஏ.ஆர் ஆரின் ஸ்டுடியோவில் அதற்கான பிராக்டீஸும் இருந்தது. மொத்தத்தில் தொடர் இருவாரங்கள் ஓய்வென்பதே இல்லை.
ஷக்தி கோயம்புத்தூர் செல்லும் நாளும் வந்து விட இடைப்பட்ட நாட்களில் கார்த்திக்கை பார்க்க நேரிட்டாலும் இவள் முறைத்துக் கொண்டே திரிய, அவன் இதழ்களில் கள்ளப் புன்னகை தான்.
மகள் கோவையில் இருந்து வந்த பிறகே நேரடியாக சந்திரனிடம் பேசலாம் என முடிவு செய்திருந்த மனோகரன், அதற்கு முன்பு அவர் எண்ணம் பற்றி அலைபேசியில் தெரிவித்தார். சந்திரனுக்கும் இதில் மகிழ்ச்சி தான். ஆனால் மகன் எண்ணம் தெரியாது இம்முறை மனைவியின் திட்டிலிருந்து தப்பிக்க கோகிலாவிடம் முன்பே சொல்லி விட்டார்.
“அப்டிலாம் இல்லைங்க. அழகான பொண்ணு. அன்னைக்கு அந்தப் பொண்ணு பேசலன்னாலும் அவங்க எல்லாம் நல்லா கவனிச்சாங்களே நம்மல. ஆனா இந்த கார்த்திக் தான் என்ன சொல்வானோன்னு இருக்கு! கல்யாணம் இப்ப வேண்டான்னு சொல்றானே..!” என்றவருக்கு மகனுக்கு வயது செல்வதை நினைத்து கவலையுமே.
“நம்ம சத்யா கிட்ட சொல்லலாம்-ங்க. அவ சொன்னா இவன் எதையும் கேட்டுக்குவான்”என்ற கோகி,
“ஒரே சம்பந்தம் இரண்டாவது முறை தேடி வருது.கடவுள் விருப்பமும் அங்க தானோ தெரியல. கார்த்திக்கு ஷக்தி தான்னு பிராதப்தம் இருந்தா, அது படி தான் நடக்கும்”என்றார் கணவனிடம்.
சந்திரனும் ஆமோதிப்பாய் தலையசைக்க உடனே மகளுக்கு அழைத்து பகிர்ந்து கொண்டார் கோகிலா.
“கோவை போறதா கிளம்பிட்டு இருக்கான் மா.மேல தான் இருக்கான். இப்பவே அவன் விருப்பம் என்னனு கேட்டுடவா மா?”சத்யா கேட்க,
புறப்படும் போது கேட்டு அவன் மனநிலையை கலைக்க வேண்டாம் என எண்ணியவர், பின் ஒருவேளை மகனுக்கு இதில் விருப்பம் இல்லாது இருந்து, தாங்கள் நேரத்தைக் கடத்தினால் ஷக்தி வீட்டிலும் எதிர் பார்ப்பு அதிகரிக்க கூடும் என நினைத்தவர்,
“அவன் வந்தா கேட்டு சொல்லு சத்யா!”என்றார் மகளிடம்,
“கேட்டுடவாமா? சம்மதிப்பான்னு நினைக்கிறீங்களா?”என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே தமக்கை பேசியதை கேட்டபடி கீழே வந்து விட்டான் கார்த்திக் .
“என்ன கேட்கணும் அக்கா?”என்றான் அமர்த்தலாய் சத்யா முன் நின்று.
மகன் பேச்சு கேட்டு லையினில் இருந்த கோகிலாவிற்கு பக்கென்றானது.
திகைத்து தன்னை சமாளித்துக் கொண்ட சத்யா, “உன்னை மாப்பிள்ளை பார்க்க வராங்களாம் ஷக்திக்கு.அதுக்கு தான் சம்மதமான்னு கேக்குறாங்க அம்மா”எனவும்,
இதை எதிர்பார்க்காது உள்ளுக்குள் சிறிதாக அதிர்ந்தாலும்,
“எனக்கு சம்மதம்”என்றான் கண்ணுக்குத் தெரியாத புன்னகையை இதழில் படரவிட்டு அலட்டிக் கொள்ளாமல்.
“என்ன??!!”அம்மாவும், மகளும் ஒரே நேரத்தில் கூவ,
அடக்கப்பட்ட சிரிப்புடன், “ம்ம் கேட்டிச்சில்ல அதே தான்!எனக்கு பிளைட்க்கு டைமாயிடிச்சு அக்கா!வரேன்”என்றவன்,
“வரேன் மா”என கோகிலாவிடமும் கூறி விட்டு கிளம்பி விட்டான்.