எடுத்துப் பார்த்தாள். அவன் தான் அழைத்திருந்தான். கார்த்திக்!
திரையில் அவன் பெயரைப் பார்த்தவளுக்கு தொண்டை அடைத்து மீண்டும் கண்கள் கலங்கியது.மனம் அவனிடம் கவலைகளை பகிரச்சொல்லியது.நேற்று அவன் கண்களிலும் அவளுக்காக வெளிப்பட்ட தவிப்பு நினைவில் எழுந்து அவனை நேரே சந்திக்க ஆவல் பிறந்தது.
போன் கட்டாகி மீண்டும் அழைப்பு வந்தது.ஒரு ஆழ்ந்த மூச்சுடன் ஷக்தி அட்டென்ட் செய்ய,உடனே அவனிடமிருந்து தவிப்புடன்,
“ஷக்தி!ஆர் யூ ஆல் ரைட்?”என மெல்லிய குரலில் கேள்வி வந்தது.அவளுக்காக தவிக்கின்றானா?!இன்னதென்று தெரியாத உணர்வுகள் அவளிடம்!
“நா..நான் நல்லாருக்கேன் கார்த்திக்.என்ன இந்த நேரத்துல?”
“…….…..”
அவளுக்காக தவித்த மனது அவளது பதிலில் அடங்கினாலும் ஏதோ சரி இல்லை என உணர்த்தியது அவள் குரல்!
“கார்த்திக்?”
“ஹா..!!என விழித்தவன் “உனக்கு ஏதும் பிராப்ளம் இல்லையே ஷக்தி?ஆர் யூ ஓகே?” என்றான் மீண்டும்.
“ஐ ஆம் ஓகே கார்த்திக்!”
“ஷக்தி”என தயக்கத்தோடு அழைத்தவனிடம்,
“சொல்லுங்க கார்த்திக்” என்றாள் அவள்.
“ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி சாரி ஷக்தி!நேத்து நீ எலிமினேட் ஆகப்போறது தெரிஞ்சும் என்னால தடுக்க முடியல”என்றவன் நேற்று அவர்களின் சேனலின் பெரிய தலைகள் பேசிக் கொண்டதை குற்ற உணர்வுடன் பகிர்ந்து கொண்டான்.
“உனக்கான ஃபேன் ஃபாலோவிங் அதிகம்ன்றது நம்ம ஷோ மேனேஜ்மென்ட்ல உள்ளவங்களுக்கு தெரியும் ஷக்தி!உன்னை எலிமினேட் செஞ்சா உன் ஃபேன்ஸ் எதிர்பாங்கன்னு அவங்களுக்கு தெரியும்! அதனாலேயே ஷோ சூடு பிடிக்கும்! ஷோக்கான வியூஸ் அதிகமாகும்! டீஆர்பி ரேட்டிங் அதிகமாகும்! எஸ் சிம்பிள் எஸ் தட்!ஆனாலும் இதுல உன் பிழையும் இருக்கு” என்றவன் பேச்சை நிறுத்தி, பெருமூச்சொன்றை விட்டபடி,
“சேனல்ல நடக்கற அரசியல் வேலைகள் தெரிஞ்சது தான் ஷக்தி!ஆனா சாதாரண கீபோர்ட் பிளேர்யர்னால அங்க ஒன்னுமே செய்ய முடியாது!இதுக்கு முன்னாடியும் அவங்க கிட்ட பேசி போராடிட்டேன்…என்னால தடுக்க முடியல!” என்றான் சோர்ந்த குரலில்.
ஆம்!கார்த்திக் இதற்கு முன்பும் டிஆர்பி ரேட்டிங்காக சேனலில் நடக்கும் அநியாயமான அரசியல் செயல்களை எதிர்த்திருக்கிறான்!தனக்கு இதில் உடன்பாடில்லை என வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறான்!இதனால் அவன் சம்பாதித்துக் கொண்டது என்னவோ சேனலிலுள்ள சிலரின் பகையைத் தான்!மிரட்டல்களுக்கும் பஞ்சமிருந்ததில்லை!
இப்படியாக ஒரு தடவை அவன் வேலையும் பறிபோயிருக்கிறது!அவனே வேலையை விட்டிருந்தான்!ஆனால், இதை வெளியே கசியவிடாது வேறு மீடியாவிற்கு தெரியாமல் மறைத்திருந்தனர்.அந்த சமயம் கார்த்திக் அவ்வளவாக பிரபலம் அடைந்திருக்கவில்லை என்பது வேறு கதை!
அவன் வேலையை விட்டு மூன்று மாதத்திற்கு பிறகு இதே சேனலில் இருந்து மீண்டும் அழைத்தனர். முதலில் மறுத்தவன் பின் ஏற்றுக் கொண்டான்!அதற்கு அவன் தந்தை ராமச்சந்திரனும் ஒரு காரணம்!
நேற்றைய அவனின் தவிப்பும்,தனக்கான ஆறுதலும் எதனால் என்று புரிந்து போனது ஷக்திக்கு. ஆனாலும் அவர்களின் அரசியல் வேலைகளை தெரிந்த கொண்டதன் பின் அவள் மனம் ஆறுதல் அடையவில்லை.ஏமாற்றம் தந்த வலியில் அவனிடம் தன் ஆதங்கங்களை கொட்டினாள்.
“டீஆர்பி ரேட்டிங்காக(TRP rating) ஒருத்தரோட பல நாள் முயற்சியை, அவங்க கனவை இப்படி தான் உடைப்பாங்களா?!அப்போ.. எல்லாம், இங்க டீஆர்பி ரேட்டிங் தானா கார்த்திக்?அவங்க திறமை இத்தனை நாள் உழைப்பு இதெல்லாம்?என்னை விடுங்க கார்த்திக்!ஆனா திறமை இருந்தும் இதனால பாதிக்கபட்டவங்க இங்க எத்தனை பேர்?நீங்க சொல்றதை என்னால டைஜஸ்ட் பண்ண முடியல கார்த்திக்!” என தன் ஆதங்கத்தை ஆற்றுவதற்காக கொஞ்சம் சத்தமாகவே பேசினாள்.
அவளின் ஏமாற்றங்கள் அவனுக்கும் புரியாமலில்லை. தன்னால் அவளுக்கு நியாயம் செய்ய முடியவில்லை என தன்னையே வெறுத்தான் அந்தக் கணம்!
“ஷ்!ஷ்ஸ்!ஷக்தி,கால்ம் டவுன் மா”என மென்மையாக அவளை அமைதிப்படுத்தியவனின் குரல் நேற்று அவளின் கைகளை ஆறுதலாக தட்டிக் கொடுத்த கார்த்திக்கை நினைவு படுத்தியது!நேற்று அவளாகவே தான் அவன் கைகளை பற்றிக் கொண்டாள்! இந்த நொடியும் அந்த கரங்களின் வெம்மை தேவைப்பட்டது அவளுக்கு!
சிறு சிரிப்புடன்,”ஷக்தி ஒரு ப்ரெண்டா உன்கிட்ட ஒன்னு சொல்லட்டுமா?” என அவன் கேட்க,
“இப்போ தான் என்னை ஃப்ரெண்டாவே பார்க்கறீங்களா?” என முறுக்கிக் கொண்டாள்.
அதில் புன்னகைத்தவன், “எனக்கு அழுதா பிடிக்காது ஷக்தி!அதுவும் நீ அழுதா பிடிக்கவே பிடிக்காது! எதையும் போல்டா ஃபேஸ் பண்ண பழகு ஷக்தி!”என்றான்.
“நான் என்ன செய்றது,அதுவா வருதே!”என்றாள்.
“இனி பழகிக்கோ ஷக்தி!இந்த அழுகை எதையுமே சரி படுத்திடாது! ஒருத்தரை அதிகமா பலவீன படுத்துமே தவிர அழுகை பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வாகாது!கவலையா இருந்தாலும் சரி, சந்தோசமா இருந்தாலும் சரி நீ விடுற ஒவ்வொரு கண்ணீரும் உன் பலவீனத்தை தான் பிரதிபலிக்கும்! மத்தவங்க உன்னை காயப்படுத்தி பார்க்கறதுக்கு நீயே தான் ஈஸியான வழியை காட்டற!என்னை கேட்டேன்னா இங்க சிரிப்பை விட அழுகைக்கு தான் வேல்யூவ் அதிகம்பேன்!”என்றவன்,
அவன் விளக்கத்தில் வழமை போல் வியந்தவள் அவன் கேட்டதில் இல்லை என மறுத்தாள்.
“முன்னாடி நான் சொன்ன உன் பிழை தான் உன்னோட அழுகை!நீ எதுக்கெடுத்தாலும் அழுவன்னு உன்னை சுத்தி இருக்கறவங்களுக்கு புரியும்! அதனாலேயே உன்னை ஈசியா உடைச்சிடுவாங்க!இப்போ எலிமினேஷனால உடைச்சிட்டாங்க! நீயும் அழுத.உன் கண்ணீர் தான் கண்ட்டென்ட்!வர்ற வாரம் முழுக்க நீதான் ப்ரோமோல இருக்கப் போற.. உன் அழுகையோட!”என்றவனுக்கு என்ன முயன்றும் சிரிப்பு வந்து விட்டது.
அவன் கூறியதில் உண்மை இருந்தும்,சிரித்ததில் கடுப்பானவள்,
“சிரிக்கல நானு!”என்றவனுக்கு சிரிப்பு மிச்சமிருக்க,மனது இலகுவாக அவளும் சிரித்துக் கொண்டாள்.
“தேங்க்ஸ் கார்த்திக்!நீங்க இன்னைக்கு பேசிருக்கலன்னா நிம்மதியா தூக்கம் போயிருக்காது”அவள் கூற
“ஏன் என்னாச்சு ஷக்தி?அப்பவும் கேட்டேனே ‘ஆர் யூ ஆல் ரைட்’ன்னு!வீட்ல எதுவும் சொல்லிட்டாங்களா?”என படபடத்தான்.
“நௌ ஐ ஆம் ஓகே கார்த்திக்!அது அண்ணா.. வந்து”என்றவளின் பேச்சு இடையில் நின்று போக,
“என்னாச்சு ஷக்தி?அண்ணா?” என்றான் அவன்.
“அ..அது..நீங்க என்கிட்ட மட்டும் தானா இப்படி அதிகமா பேசுவீங்க?”என்றாள் பேச்சை மாற்றிய குரலில்.
அதன் பின்னும் இந்த அமுக்குனி கார்த்திக் பேசிருப்பானா என்ன?ஆனால்,இருவருமே ஒருவரிடம் இருந்து ஒருவர் எதையோ எதிர்பார்த்தார்கள்.அது இன்னதென்று தெரிந்தும் அதை கேட்கும் முயற்சியில் இல்லை இருவருமே!?